வில்லங்கம் 4
Vil4

4 வில்லங்கமாக ஒரு தொடக்கம்!!
திலோத்தம்மா எப்படியோ யாஷ் வேலை செய்யும் ஆபிஸிஸ் எடுபிடி வேலைக்கு சேர்ந்து விட்டாள்
"லூசாடி நீ, காலேஜூக்கு வராம அங்க போய் காப்பி டீ கொடுக்கிற வேலையில சேர்ற என்ற தோழிக்கு சிரிப்பை பரிசாக கொடுத்தவள்
"நான் செஞ்ச பாவத்துக்கு பாவமன்னிப்பு கேட்க போறேன்
"சரிதான் முழு லூசாவே ஆகிட்ட போல அப்போ உன்னோ ஆராய்ச்சி திசீஸ் எல்லாம் "சொல்ல அவளிடம் பதில் இல்லை ....
இங்கே யாஷ் நிலையோ கவலைக்கு ஏதுவாகி போனது.... சட்டையை இன் செய்தால் வயிறு எடுப்பது தெரிகிறது எப்போதும் நீட்டாக இன் பண்ணி படு ஜோராக ஹீரோ போல வரும் நண்பன் இப்போதெல்லாம் ஏனோ தானோவாக வர ... எல்லாரும் கேட்க ஆரம்பித்து விட்டனர்
உடம்பு சரியில்லை என்று முடித்து விட்டான் ..
"ஒரு பிள்ளை பெக்க இவ்வளவு கஷ்டம் இருக்கா மச்சான் என்று யாஷ் அன்புவோடு இயல்பாக கேட்க
"எனக்கு என்னடா தெரியும் நான் என்ன பத்து பிள்ளையா பெத்து இருக்கேன்" என்று அன்பு ஆபிஸ் வாசலில் தன் வருங்கால மாமனாருக்காக காத்து நின்றபடி கேட்க
"இல்லை நம்ம அட்டென்டர் கோகி மக உன் ஜாடையில இருக்கே ஒரு வேளை உன் பிள்ள தானோன்னு நினைச்சேன் ...
"ப்ச் சாக்ஷி பிள்ளையை வேணும்னா என் ஜாடைன்னு சொல்லு நம்பலாம் "
"ஆமால்ல அவ தான உன் பழைய ஆளு .. ஏகபட்ட நேரம் ஒன் நைட் ஸ்டண்ட் போயிருக்கீங்கல்ல... மச்சான் உன்ன யாரோ கூப்பிடுறாங்க பாரு ரொம்ப நேரமா நமக்கு பின்னாடியே அந்த மனுசன் நிக்கிறார்.. நீ பேசி முடிச்சிட்டு வா , நாம பிறகு இதை பத்தி விவாதிப்போம் என்று யாஷ் போக
யாரு அது என்று திரும்பி பார்த்த அன்பு திகைத்து போனான்
மாமாஆஆஆஆ
"நீதாண்டா மாமா பய உனக்கு என் பொண்ண கட்டி கொடுக்கணுமா , என் வீட்டு பக்கம் வந்த இலவச ஆப்ரேசன் பண்ணி விட்டிருவேன் ராஸ்கல் ஓடிரு என்று பெண்ணுக்கு தகப்பன் கழுவி ஊத்த ...
"தெரிஞ்சு என்ன கோர்த்து விடுறானா , தெரியாம கோர்த்து விடுறானா ஆக மொத்தத்தில என்ன கமிட் ஆக விட மாட்டான் போல" என்று அன்பு புலம்பி கொண்டு நின்றான் ...
யாஷ் , தன் முன் இருந்த சாப்பாட்டு பொருளை எரிச்சலாக பார்த்தான் ...சாப்பிட ஆசை சாப்பிட்டா வாந்தி வருது தூங்க முடிவதில்லை.. இது உலகம் அறிந்தால் அடுத்து அவன் நிலை அய்யோ தலையை சுற்றி பல பட்சி பறந்த நிலை ...இங்க வந்து மறுபடியும் எதுக்கு நிக்கிற ஊருக்கே நான் பிள்ளை உண்டாகி இருக்கேன்னு சொல்ல போறியா அவளை மறுபடியும் தன் ஆபிஸிஸ் பார்த்த யாஷ் கத்த ஆரம்பித்து விட்டான் ..
என்ன ஆச்சு யாஷ் இதுதான் ஆபிசுக்கு புதுசா வந்திருக்க ஆபிஸ் கேர்ள்... என்ற சக நண்பனை மெலிதாக பார்த்து சிரித்த யாஷ்
இங்கேயும் நான் நிம்மதியா இருக்க கூடாது அதான? பல்லிடுக்கில் திலோவை வார்த்தையில் கடிக்க
இல்லை சார் வேளா வேளைக்கு உங்களுக்கு பார்த்து செய்யணும்ல ... யாரும் இல்லேன்னு சொன்னீங்களா அதான் மனசு கேட்கல வந்துட்டேன் என்ன வேணும் சார் கொண்டு வர்றேன் "
"கொஞ்சம் விஷத்தை தந்துடு, நானும் என் பிள்ளையும் கையெடுத்து கும்பிட்ட திலோ
"ப்ளீஸ் சார் ஏற்கனவே கில்டியா இருக்கு, இப்படி எல்லாம் பேசி வருத்த படுத்தாதீங்க... நான் இங்க தான் இருப்பேன் என்ன வேணுமோ கேளுங்க ஒரு குரல் கொடுங்க ஓடி வர்றேன் ... பார்த்து போங்க
ச்சை புஸ் புஸ் மூச்சு விட்டவன் போய் சேரில் அக்கடா என்று உட்கார்ந்தான்...இவளை கண்டதுண்டமாக வெட்டத்தான் தோன்றுகிறது ஆனால் அவள் பார்க்கும் பார்வை ச்சை பிழைச்சு போ என்று விட வைக்கிறது..
என்னடா காலையிலேயே தலையில புடிச்சுட்டு உட்கார்ந்து இருக்க... லேப்டாப் முன்னாடி தலையை பிடித்து வைத்துக் கொண்டு யாஷ் அமர்ந்திருக்க அருகே வந்து தோளில் கை போட்டான் அன்பு
"உன் கிட்ட தாண்டா கேட்டுட்டு இருக்கேன், ஏதோ குடிமுழுகி போன மாதிரி அப்படியே உட்கார்ந்து இருக்க உடம்புக்கு ஏதாவது செய்தாடா?
"ம்ஹூம்
"நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன், ஒரு மாசமா உன் முகம் சரியாகவே இல்ல ... கல்யாணம் நின்ன விரக்தியா? அப்படி பார்த்தா நானெல்லாம் தினமும் முக்காடி போட்டு உட்கார்ந்து அழணும்டா.. ஆம்பள பிள்ளைங்களுக்கு இந்த காலத்துல பொண்ணு கிடைக்கிறது கஸ்டம் தான் ... நம்ம ஜோடிகளை எல்லாம் கள்ளி பால் ஊத்தி கிழவிக கொன்னு புட்டாளுகன்னு நினைக்கிறேன் காத்திருக்க தான் வேணும் பீனிக்ஸ் பறவை போல முயற்சி பண்ணிட்டே இருப்போம்டா மச்சான் ... டெல் , என்ன லவ் ப்ராளமா அதான் முகத்தை சுட்ட கருவாடு போல வச்சிருக்கியா.. "
"ப்ச் அப்படி எல்லாம் இல்ல, மார்னிங் சிக்னஸ்"
"மார்னிங் சிக்னஸா?? ஏன்டா அது மசக்கையா இருக்குறவங்களுக்குல்ல வரும் , உனக்கு ஏன்டா வருது "என்றதும் திருதருவென்று முழித்த யாஷ்
"ஆம்பளைக்கும் வருதாம் இப்போ, ஆய்வில கண்டுபிடிச்சிருக்காங்க
"ஆய்வா?? படிச்சவன் சொல்ற கேட்டுக்கிறேன் சரி வா காபி குடிச்சிட்டு வரலாம்
"வேண்டாம் இப்போ காபி எல்லாம் குடிக்கிறது இல்ல காபின்னு சொன்னாலே குமட்டிட்டு வருது என்று முகத்தை சுளித்த யாஷை மேலும் கீழும் பார்த்த அன்பு
அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை ஒரு காபி குடிச்சா தான் மூளை சுறுசுறுப்பா இருக்கு மச்சான்னு சொல்லுவ , என்ன திடீர்னு காபியை பார்த்த குமட்டுதுன்னு சொல்ற ...
அது அது அன்னைக்கு பிடிச்சது இன்னைக்கு பிடிக்கல என்று யாஷ் மாடிப்படி வழியாக இறங்க ஆரம்பிக்க
"டேய் லிப்ட் வேலை செய்யுதுடா அப்படியே போயிடலாம் ...
"மாடி ஏறி இறங்குனா நல்லதாம், நான் அப்படியே போறேன்....
"இவன் பேச்சு , செயல் எல்லாம் ஒரு தினுசா இருக்கு என்னவா இருக்கும் என்று நின்று நின்று இடையில் கை வைத்தபடி மாடி இறங்கி போகும் யாஷை யோசனையாக பார்த்துக் கொண்டிருந்தான் அன்பு...
"அய்யோ!! எத்தனை நாளைக்கு இந்த பிள்ளையை மறைக்க போறேன்னு தெரியலையே, வயிறு வேற கொஞ்ச கொஞ்சமா பெருசாக ஆரம்பிச்சிடுச்சு என்ன பண்ண போறேனோ, கடவுளே!! ஒழுங்கா என் பிள்ளையை உவாக் உவாக் என யாஷ் குமட்டி கொண்டு வர வாயை பொத்தி கொண்டு ஓட .. அவனை கவனித்து கொண்டே இருந்த திலோத்தம்மா குமுட்டி கொண்டு நின்ற அவன் தலையை பிடித்து
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் சார் , வாந்தி வந்தா எடுத்துடுங்க என்க ... பல்லை கடித்து கொண்டு அவளை திரும்பி பார்த்தான் திலோவோ பாவமாக அவனை பார்க்க .....
"பார்க்கிறது பச்சை பிள்ளை போல, பண்ணி வச்சிருக்க வேலைக்கு உன்ன" உவாக் உவாக் என்று மீண்டும் குமட்ட கண் முழி பிதுங்கி அவள் மீதே சாய்ந்தான்..
சார் இப்போ எப்படி இருக்கு? கண்ணை திறந்தவன் தன் வீட்டில் தன் படுக்கையில் படுத்து இருந்தான்
பரவால்ல என்றவன் திடுக்கிட்டு எழும்பி அமர்ந்தான்
"ஆமா நான் எப்படி இங்க வந்தேன், நீ எதுக்கு என் வீட்டுக்குள்ள வந்த , ஐயோ ஆபீஸ்ல எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சா ? போச்சு போச்சு என் மானம் போச்சு வேலை போச்சு வாழ்க்கை போச்சு எல்லாம் போச்சு என்று யாஷ் பதற
" இல்ல சார் நீங்க மயங்கி விழுந்தீங்க, யாருக்கும் தெரியாம ஆட்டோ புடிச்சுதான் கூட்டிட்டு வந்தேன்
அப்பாடா!! எத்தனை நாளைக்கு இப்படி செத்து செத்து பிழைக்க போறேன்னு தெரியலையே எதுவுமே செய்ய முடியாதாடி, வேற எதுவும் வழி இல்லையா ? இந்த குழந்தையை அப்படியே உன் வயித்துக்குள்ள வைக்கிறதுக்கு எதுவும் மருந்து கண்டுபிடிக்க முடியாதா? ரொம்ப கஷ்டமா இருக்கு மூணு மாசத்துக்கே இப்படி திணறுது... ஏதாவது வழி இருந்தா காப்பாத்தி விடேன்" என்றவனை பார்க்க பாவமாகத்தான் இருந்தது.. ஆனால் அவளுக்கு மண்டை வேலை செய்ய மாட்டேங்குறதே...
"வழி இருந்தாலும் நீ செய்ய மாட்டடி திருட்டு நாயே , உன்னோட ஆராய்ச்சிக்கு நீ தங்கமெடல் வாங்க, என் வயித்த பழிகடா ஆக்கிட்டியே ...
எதாவது செய்றேன் சார் ...
"ப்ச் அடிக்கடி பசிக்குதே , கடையில வாங்கி தின்னா குழந்தைக்கு ஆகாது ,நானே சமைச்சு நானே சாப்பிட்டு, ஐயோ நெனச்சு பாக்கவே குமட்டிக்கிட்டு வருதே.. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த அவஸ்தைன்னு தெரியல" என்று யாஷ் இடுப்பை பிடித்துக் கொண்டு கிச்சன் நோக்கி போக,
அங்கே ரசம் உருளைக்கிழங்கு வறுவல் குலைத்த சாதம் என்று அனைத்தும் ரெடியாக இருந்தது அங்கிருந்து திலோத்தம்மாவை அவன் ஒரு பார்வை பார்க்க ...
என்ன இது??
"சார் தப்பா நினைக்கலன்னா, குழந்தை பெத்து எடுக்கிற வரைக்கும் நான் உங்களுக்கு துணையா உங்க கூடவே இங்கேயே இருக்கேனே "
"எதுக்கு ஊரெல்லாம் என்ன இன்னும் கேவலமா பேசுறதுக்கா..ஏற்கனவே என் அப்பன் ரேசன் கார்ட்ல இருந்து என் பேரை எடுத்துட்டான் ... புவி என்கூட பேசுறதே இல்லை, இப்படியே போனா தனிமையிலயே நானே செத்துடுவேன்.. இதுல நீ வேற வேதனை படுத்த பார்க்கிறியா , கல்யாணம் முடியாத ஒரு பொண்ண யாஷ் வச்சுக்கிட்டு இருக்கான்னு அந்த பேரையும் சுமக்கிறதுக்கா... ஒன்னும் வேண்டாம், நீ இடத்தை காலி பண்ணு..
எத்தனை நாளைக்கு சார் அவஸ்தைப்பட போறீங்க நான் செஞ்ச தப்புக்கு நான்தானே பிராயச்சித்தம் பண்ணனும் .. மூணு மாசத்துக்கே இவ்வளவு கஷ்டப்படுறீங்க அதோட எந்த ஹாஸ்பிட்டல் போய் காட்டுவீங்க .. அதுவே நான் உங்க கூட இருந்தேன்னா எல்லாமே
"அப்படியே கிழிச்சு தள்ளிடுவ ஆராய்ச்சி மயிறு பண்றாளாம் ஆராய்ச்சி" என்று காலில் தட்டுப்பட்ட குப்பை கூடையை எட்டி உதைக்க குப்பை கூடை போய் திலோத்தம்மா மண்டையில் மாட்டிக்கொண்டது... குப்பையோடு குப்பையாக அவளும் பாவமாக அவனை உதட்டை பிதுக்கி பார்க்க
"எனக்கும் வேற வழி தெரியல, போய் தொலை கொஞ்சமா சாப்பாடு போட்டு மசித்து எடுத்துட்டு வா படபடன்னு வருது யாஷ் சலித்துக் கொண்டே போய் பெட்டில் படுக்க..
அப்பாடா!! உள்ளே அனுமதித்தானே என்று வாசலிலேயே வைத்திருந்த பெட்டியை தூக்கிக்கொண்டு ஹாலில் வைத்தவள் .. அவன் கேட்டது போல் சாப்பாட்டை மசித்து கொண்டு வந்து அவன் கையில் கொடுத்தாள் .. யாஷ் தடுமாறி எழும்ப அவன் உதட்டில் உணவை பிசைந்து திலோ வைக்க சத்தமில்லாது வாயை திறந்து வாங்கி கொண்டான் ..
பொருத்தமான இணைகள் இணைந்து வாழ்க்கை பயணம் செய்தால் சலசலப்பு இல்லாமல் அமைதியாக வாழ்ந்து விடலாம் தான்.. ஆனால், சுவாரசியமாக வாழ்வதற்கு பொருத்தமே இல்லாத இணைகள் சேர்ந்தால் தான் சுவாரஸ்யம் கூடும்