வில்லங்கமாக ஒரு தொடக்கம் 2

Vil2

வில்லங்கமாக ஒரு தொடக்கம் 2

2 வில்லங்கமாக ஒரு தொடக்கம்!! 

இங்கே மருத்துவமனை வாசலில் புவனா பெற்றோர் அவனை ஒரு மாதிரி பார்த்து வைக்க.. 

சம்மந்தி ஆனது ஆகி போச்சி போத்திட்டு தூங்கினா என்ன , தூங்கிட்டு போத்தினா என்ன அவன் பெத்தா என்ன உங்க பொண்ணு பெத்தா என்ன வயசு கோளாறுல எதையோ பண்ணிட்டாங்க போல ரெண்டு பேரையும் மன்னிச்சு கல்யாணத்தை பண்ணி வச்சிடுவோம் லெட்சுமி மகனுக்கு வக்காலத்து வாங்க

"ஆன்டி எங்களுக்கு இடையில எதுவுமே நடக்கல... இதுக்கு காரணம் நான் இல்ல என்று புவனா கூற 

 "டேய் யாஷூ அப்போ யார்டா உன் வயித்துல வளர்ற பிள்ளைக்கு அம்மா 

"ப்ச் அதான் தெரில "

"ச்சை என்ன கேவலமான குடும்பம் ... என்னடி இது , இவனை போய் கல்யாணம் பண்ண போறியா ஹான் நடக்கவே நடக்காது கிளம்பு என்று புவனா பெற்றோர் மகளை இழுத்து கொண்டு போக யாஷ் திருமணம் நின்று போனது ...அது கூட பரவாயில்லை தன் தகப்பன் குறுகுறுவென பார்த்து வைக்க என்ன பேச என்று தெரியாது முழித்தான். 

அவன் தாயோ வீட்டுக்கு வந்த நேரத்தில் இருந்து ஒரே கேள்வி கேட்டு டார்ச்சர் 

இந்த குழந்தைக்கு அம்மா யாருடா? சொல்லு... என்று ஆரம்பிக்க 

"ம்மா தெரியாது "

"உன்ன உன்ன இவ்வளவு கஷ்டப்பட்டு ஆளாக்கினது இதுக்குத்தானாடா, எவகிட்டையோ போய் ஏமாந்து வந்து நிற்கிற.. வாயை திறந்து சொல்லுடா அப்பாவுக்கு கோவம் வந்திடும் இந்த குழந்தைக்கு அம்மா யாரு?உன்ன லவ் பண்ணி ஏமாத்தி குழந்தை தந்தது யாரு யாரு யாரு ??

"அம்மா நீ வேற படுத்தாத, தயவுசெய்து அமைதியா இரு "

"இதுக்குதாண்டா சொன்னேன் ஆம்பள பையன் அடக்க ஒடக்கமா வீட்டுக்குள்ள உட்காருன்னு பிரெண்ட் , பார்ட்டி பப்புனு சுத்துனியே இப்ப வயித்துல உண்டான குழந்தைக்கு யாரு அம்மான்னு தெரியாம போச்சே... எப்படிடா இனி உலகத்துல தலை காட்ட போறேன்... உன்ன எவ கல்யாணம் பண்ணுவா , உன் பிள்ளைக்கு அம்மா பேர் என்ன போடுவ ... அய்யோ மானம் போச்சே என்று தாய் லட்சுமி உட்கார்ந்து அழ ..

"இங்க பாரு லட்சுமி இந்த நாய் இன்னும் ஒரு நிமிஷம் கூட இந்த வீட்ல இருக்க கூடாது வெளியே போக சொல்லு "என்ற தகப்பன் குணசீலனை நொந்து போய் பார்த்தான்.. 

பொண்ணுங்க பின்னாடி சுத்தி வரும்போதே எனக்கு தெரியும்டி இப்படித்தான் ஏதாவது கேவலமாக இழுத்துட்டு வருவான்னு நினைச்சேன்.. நெனச்சது நினைச்ச மாதிரியே நடந்துடுச்சா ... இனிமே என் மானமும், உன் மானமும் சேர்ந்து சந்தி சிரிக்க போகுது.. அதுக்கு தேவையானது எல்லாத்தையும் துரை செஞ்சுட்டு வந்துட்டார்,இனிமே இவனுக்கு நான் எங்க போய் பொண்ண பாப்பேன் இப்படி வயித்துல வாங்கிட்டு வந்து நிற்கிறானே என்ற தகப்பனுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாது யாஷ் பார்த்து வைக்க 

இன்னும் ஒரு நிமிஷம் அவன் இந்த வீட்டில நின்னா நான் உத்திரத்துல தொங்கிடுவேன் சொல்லிட்டேன் போக சொல்லிடு அவனை...

"டேய் யாஷ் நம்ம வீடு பழைய அப்பார்ட்மெண்ட் வீடு அப்பா உத்திரத்தில தொங்கி, சீலிங் உடைஞ்சி விழுந்துட்டா ரிப்பேர் பார்க்க ஏகபட்ட காசு செலவு செய்யணும்டா, " எப்போதும் போல தகப்பன் மகனுக்கு இடையே ஜாலியாக பஞ்சாயத்து பண்ணும் மனைவி செயலில் வெகுண்டு எழுந்த குணசீலன் 

லெட்சுமி இஇஇஇஇஇ என்று சீலிங் அதிர போட்ட குரலில் 

தொங்காமலே உடைச்சிடுவார் போலவே , இருடா சோககீதம் வாசிச்சிட்டு வர்றேன் .. அப்பறம் ஒரு முடிவுக்கு வருவோம் என்று புருசன் நோக்கி ஓடி வந்தவர் 

"என்னங்க என்ன இருந்தாலும் அவன் நம்ம பையன் இல்லையா... நடந்தது நடந்து போச்சு 

"அப்போ நீயும் வெளியே போடி" என்ற கணவனை எதிர்த்து பேச முடியாமல் லட்சுமி கையை பிசைந்து கொண்டு நிற்க..

ம்மா என்னால உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனை வேண்டாம் .. நான் வெளியே போறேன்...

"என்னடா பண்ணுவ .. வாயும் வயிருமா இருக்குற பிள்ளை வெளியே போய் எப்படிடா சமாளிக்க போற...பொம்பள பிள்ளையா இருந்தா பரவாயில்லை பொழச்சிக்கும் நீ ஆம்பள பையன் இந்த உலகம் உன்னை சும்மா விடாதே கண்ணா "

"சும்மா கடுப்பு கிளப்பாதம்மா, இந்த ஆள் முகரையை பார்த்துகிட்டு திட்டு வாங்குறதுக்கு எங்கேயாவது போய் நிம்மதியா இருந்துட்டு போறேன்.. எனக்கு என்ன கவலை? கை நிறைய சம்பாதிக்கிறேன், வேலை இருக்கு , ப்ரெண்ட் ரூம் இருக்கு , என் பிரெண்ட்ஸ் இருக்காங்க.. நான் எப்படியாவது என்ன பாத்துக்கிறேன்.. விடு ..

"அவனுக்கு கடைசியா ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன் லெட்சுமி இந்த குழந்தையை அழிச்சிட்டு வந்தா வீட்டுக்குள்ள வரலாம்" என்ற தகப்பனை முறைத்து பார்த்த யாஷ்

"யோவ் பிள்ளையை முறை தவறி உண்டாகி இருக்கலாம்.. ஆனா இந்த குழந்தை என்னோடது என்னோட ரத்தத்துல உருவானது, யாருக்காகவும் இதை அழிக்க தயாரா இல்லை .... இந்த உலகமே என்ன கேவலமா , அசிங்கமா பார்த்தாலும் இந்த குழந்தையை என்னோட குழந்தை பெத்து எடுக்கிறது என்னோட கடமை... நான் பெத்து எடுப்பேன் "என்று தகப்பன் தூக்கி எறிந்த பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியே வந்தான் யாஷ்

அப்படியே நடுவீதியில் தலையில் கை வைத்து உட்கார்ந்தான்.. ஒரே ஒரு கேள்விதான் மண்டையை போட்டு குடைந்தது... 

"இந்த குழந்தைக்கு அம்மா யாரு?

"நான் எப்படி குழந்தை உண்டானேன்??

அய்யய்யோ!! இந்த உலகத்தை நான் எப்படி சமாளிக்க போறேன் என்று தெரியாமல் விழி பிதுங்கி பார்த்தான் நாயகன் ..

யாஷ், மனம் முழுக்க குழம்பிப் போய் இருந்தது... யாரிடம் போய் தெளிவு பெற என்று அவனுக்கு தெரியவில்லை... தன் தோழி புவனாவின் ஞாபகம் வந்து வேகமாக பைக்கை எடுத்து உதைக்க போனவன்... வயிற்றை ஒரு நிமிடம் பிடித்துக் கொண்டு

"இந்த மாதிரி நேரத்துல பைக் எல்லாம் ஓட்டக்கூடாதுன்னு சொல்லுவாங்க இல்ல, வேண்டாம் ஆட்டோ புடிச்சு போயிடலாம் அதுதான் குழந்தைக்கு நல்லது "என்று ஆட்டோவை பிடித்து புவனா வேலை செய்யும் மருத்துவமனைக்கு யாஷ் போக ஆரம்பித்தான் ..

"என்ன வச்சி எதுவும் காமெடி எதுவும் ட்ரை பண்றாங்களா அது எப்படி நான் பிள்ளை உண்டாக முடியும் ... ஆகிட்டேன்னு சொல்லி ரிப்போர்ட் காட்டுறாளே , அதுக்கு மேட்டர் ஆகணுமே அப்போ சம்பவம் எங்க எப்போ எப்படி நடந்தது ? இது என்னடா ஆம்பளைக்கு வந்த சோதனை .. இந்த வில்லங்கமான விவரம் மட்டும் வெளிய போச்சு அய்யய்யோ என் நிலமை , தொப்பையை மறைக்கலாம் இதை எப்படி மறக்க முடியும் காட்டி கொடுத்துடுமே, அன்புக்கு போன் போட்டு அவன்கிட்ட ஐடியா கேட்போமா என்று ஆட்டோவில் சென்று கொண்டிருந்த யாஷ் தன் பால்வாடி நண்பன் அன்புக்கு போன் போட.... 

அலைந்து திரிந்து ஒரு பெண்ணை பார்த்து இப்போது தான் ஒரு பெண் செட் ஆகி பூ வைக்கும் படலம் என்று பெண் வீட்டில் இருந்த அன்பு போன் அதிர ... போனை எடுத்து காதில் வைத்தான் ..

"யாஷ்மச்சான் சொல்லுடா 

"எங்கடா இருக்க 

"இங்கதான் பூ வைக்கிற பங்கசன்ல...

"ஓஓஓஓ மச்சான் ஒரு டவுட்"  

இப்பமா 

ம்ம் 

"டேய் பூ வைக்கணும்டா 

"ப்ச் நீயா வைக்க போற அவங்க வைப்பாங்க டா நீ எனக்கு க்ளியர் பண்ணு நம்ம கூட்டத்துலேயே அறிவாளி நீதான மச்சான் ".. 

" கொடுத்த காசுக்கு மேல புகழந்துட்ட, சரி போனா போகுது சொல்லி தொலை"கூட்டமே அன்பு பேசுவதை கவனிப்பது அறியாது நண்பனோடு பேசி கொண்டிருந்தான் 

"டேய் மேட்டர் பண்ணாம பேபி வருமா என்ன ? 

"மேட்டர் பண்ணாம எப்படி மச்சான் பேபி வரும் ஏகபட்ட டைம் மேட்டர் பண்ணினா தான் பேபி வரும் என்ன மச்சான் அன்னைக்கு சோப்னாவை தள்ளிட்டு மகாபலிபுரம் போனோமே அப்படி இப்படி ஆகி போச்சா லவுட் ஸ்பீக்கரில் கிடப்பது கூட தெரியாத அறிவாளி தனக்கு தானே குழியை சோலோவாக தோண்டி கொண்டிருந்தான்..

"அந்த சோப்னாவா?  

ப்ச் அவளையா , சீசீ நீதான் அவள கண்டு வழிவ நான் இல்லே "

"ஓஓஓஓ அப்போ அந்த மீனு ரேணு யார்கூட தான் சம்பவம் ஆச்சு ?? 

"உன்ன மாதிரி நாளைக்கு ஒருத்தி கூட ரூம் போடுறவன்னு நினைச்சியா.. நான் ராமன்டா சும்மா ஜெனரல் நாலேஜூக்கு கேட்டேன் 

அன்பு அன்பு அன்புவோ தன்னை அத்தனை பேரும் காறி துப்பாத குறையாக பார்க்கவும் தான் தலையில் அடித்து கொண்டு வழிய.. அவனை தூக்கி வீட்டுக்கு வெளியே வீசினர்.... 

"மச்சான் அன்பு இருக்கியா 

இருக்கேன் இருக்கேன் நடுரோட்டுல, இப்ப நிம்மதியா ?

"சாரி மச்சான் பூ வச்சாச்சா ??

"நீ பண்ணின வேலைக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில என் ஆத்தாளும் அப்பனும் என்னை உயிரோ வச்சி கல்லறை கட்ட போறாங்க வந்து நீயே உன் கையால பூ வச்சிடு

"சாரி மச்சான் இப்ப நான் கொஞ்சம் பிசியா இருக்கேன்... 16 நாள் காரியம் வைக்கும் போது முடிஞ்சா வந்து பூ வைக்கிறேன் பாய்டா  

என்று யாஷ் வைத்துவிட ...

"ஒத்த டவுட்ல , மொத்த சோலியையும் முடிச்சி விட்டுட்டானேய்யா .. என்று தலையில கை வைத்தான் ...

நல்லவேளை அன்புக்கிட்ட எதுவும் சொல்லலை சொன்னேன் ஆபிஸ் முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டிருப்பான்.. புவனா அறைக்குள் யாஷ் நுழைந்தான் 

"ஹாய் மச்சான் எப்படி இருக்க? என்று புவனா அவனை வரவேற்க கண்ணை சுருக்கினான் 

அவன் நண்பனாக இருக்கும்பொழுது மச்சான் என்றுதான் புவனா அழைப்பாள்... அதே அழைப்பை மறுபடியும் அவள் வாயிலிருந்து கேட்க சிந்தனை முடிச்சோடு அவளை பார்த்தான்... 

உலகமே அவனை காறி துப்பினாலும் அவள் ஏற்றுக்கொள்வாள் என்ற ஒரு துளி நம்பிக்கையில் வந்தவனுக்கு , அவளின் மச்சான் அழைப்பு யோசனையை உண்டாக்கத்தான் செய்தது.. அதை புறம் தள்ளிவிட்டு 

"நல்லா இருக்கேன் பூவு "

உடம்பெல்லாம் எப்படி இருக்கு , நல்லா சாப்பிடுறியா சிக்கனஸ் எதுவும் இல்லேயே 

என்று அவன் அருகில் கேஷுவலாக வந்து அமர்ந்தாள் .... 

"ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கேன், அதைவிட மனசு உடைஞ்சு போய் இருக்கு புவனா.. உங்க வீட்ல நம்ம கல்யாணத்தை பத்தி பேசினியா? நீ என்கூட இருந்தா ஐ வில் பி பெட்டர்" ஆதரவுக்கு ஆள் தேடினான் மூட் ஸ்வீங் , மனநிலை மாறிக்கொண்டே இருந்தது.. பதட்டம், பயம் என்று அவன் அவனாகவே இல்லை... யாராவது தன்னோடு இருந்தால் பரவாயில்லை என்று நினைக்க வைத்து விட்டது மசக்கை 

"சாரி யாஷ், இந்த மாதிரி நேரத்துல ஒரு தோழியா உன் கூட கடைசி வரைக்கும் இருக்க நான் தயார் 

"தோழியான்னா புரியல, "

"தோழியா மட்டும் உன் கூட இந்த சிட்டுவேஷன்ல என்ன நடந்தாலும் உன்கூட இருக்க நான் தயார்... உன்ன கல்யாணம் கட்டிக்கிறதுக்காக அப்பா அம்மா கிட்ட எவ்வளவு ஃபைட் பண்ணேன்னு எனக்கு தான் தெரியும்... ஆனா இப்போ அவங்க கேக்கற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியல யாஷ், 

வங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியலையா.. இல்ல, என்ன கல்யாணம் கட்டிக்க உனக்கு விருப்பம் இல்லையா

அது என்ற புவனா தலையை குனிந்து கொண்டு ரெண்டும் தான் ஒரு காதலியா, வருங்கால மனைவியா என்னால இதை ஏத்துக்க முடியல.. எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் சொல்லு .. வேற யாரோ ஒருத்தியோட குழந்தை உனக்குள்ள வளருது அதுவும் நீ ஒரு ஆண்... ஒரு குழந்தையை சுமக்கிறது இதெல்லாம் உலகத்துக்கு தெரிஞ்சா?? நீ ஒழுக்கமானவன் சரியா இருப்ப அப்படின்னு உன்ன பத்தின பிம்பம் இந்த விஷயம் தெரிஞ்ச பிறகு உடைஞ்சிடுச்சுங்ககறதை விட , நிறைய கேள்விகள் இந்த கேள்விகளோட உன்ன கல்யாணம் கட்டிக்கிட்டா ?? என்றவள் முன்னால் கையை நீட்டி தடுத்த யாஷ் 

"போதும் இந்த அளவுக்கு எனக்கு சப்போர்ட் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ், நான் பாத்துக்குறேன் 

"டேய் கோபப்படாத யாஷ் .. நான் சொல்றத கேளு முதல்ல இந்த சிச்சுவேஷன் எதனால வந்தது யார் இதுக்கு காரணம் என்னன்னு 

"என் நிலைமையை நானே பார்த்துக்கிறேன்... உன் உதவி தேவை இல்லை" என்று விறு விறுவென யாஷ் வெளியே வந்து விட்டான்

இந்த நிலைமைக்கு மட்டும் காரணமான நாய் கையில கிடைச்சான் அப்படியே கையால குடலை உருவி போட்டிருவேன் என்று காலை வேகமாக உதைக்க போனவன் பதறி தன் வயிற்றை பிடித்துக் கொண்டு 

"ரிலாக்ஸ் யாஷ் நீ பொறுமையா இருக்கக்கூடிய காலங்கள் இது , பொறுமையாதான் இருந்தாகணும் என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு வேலைக்கு கிளம்பினான்..

பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் லகரத்தில் வேலை செய்யும் ஒருவன்... பார்ட்டி நண்பர்கள், துள்ளல் ஜாலி என்று அலைந்தவன் மொத்தமாக சுனாமியில் சுருட்டி அடித்தது போல் வாழ்க்கை மாறிப் போனது யாருமே இல்லாமல் தனித்து விடப்பட்டான்.. 

ஆண்களுக்கு பாதுக்காப்பே இல்லை என நாயகன் உணர்ந்த தருணம் !!