வில்லங்கம் 3
Vil3

3 வில்லங்கமாக ஒரு தொடக்கம் !!
ஏய் அரை கிறுக்கி இப்போ எதுக்குடி என்னையும் கூட்டிட்டு வந்து, இந்த ஹோட்டல் முன்னாடி நிக்கிற என்று திலோத்தம்மாவின் தோழி அவளை திட்டிக்கொண்டு அவள் பின்னால் வர ...வில்லங்க சம்பவம் நடந்த ஹோட்டல் முன்னே திலோ தன் தோழியையும் அழைத்து கொண்டு வந்து நின்றாள்..
அது ஒரு மேட்டர் ஆகிப்போச்சுடி... அந்த மேட்டர் இங்கதான் ஆனது, அதான் அந்த மேட்டர பண்ணுனது யாருன்னு கண்டுபிடிக்கிறதுக்கு நாம ரெண்டு பேரும் இப்போ இங்க வந்து இருக்கோம் என்று திலோ கண்ணாடியை ஒரு விரலால் தூக்கி விட்டுக் கொள்ள..
"மேட்டரா மேட்டர்னா ? அப்பெண் புரியாது பார்க்க
"அதான்டி மேட்டர் கசமுசா
"ஏதே ????
"ம்ம் , எனக்கும் யாரோ ஒருத்தனுக்கும் ஆகிப்போச்சு அதான் அந்த ஒருத்தன் யாருன்னு கண்டுபிடிச்சா அந்த மருந்து எங்க போச்சுன்னு தெரிஞ்சுரும் என்றவள் முதுகு பிய்ய பிய்ய அடி போட்ட அவள் தோழி
"அறிவு கெட்டவளே , மேட்டரை ஒரு மேட்டரே இல்லாம எப்படி உன்னால சொல்ல முடியுதுடி.. அப்போ கற்பும் போச்சா?
ப்ச் மருந்து போச்சுன்னு நானே பீலிங்ல இருக்கேன்
அடியேய் அது போனா பரவாயில்லை உனக்கு கற்பு போச்சுடி ... அரை மெண்டல் கூட எல்லாம் சேர்ந்தேன் பார்த்தியா என்ன சொல்லணும் தப்பு நடந்து எத்தனை நாளாகுதுடி ?
இருக்கும் நாற்பது நாளுக்கு மேல
"கடவுளே !! அடியேய் பிள்ளை எதுவும் உண்டாகி இருக்கியா
"இருக்கலாம்
என்ன
"ம்ம் என் கூட இருந்தவர் உண்டாகி இருக்கலாம் ..
"வாட் ??
"என்னடி அசால்டா சொல்ற
அதுக்கு என்னடி செய்ய முடியும், ஆகிப்போச்சு போனதை நினைச்சிக்கிட்ட அழ முடியுமா ? 40 நாள் ஆகிப்போச்சு இன்னும் வயித்துல எதுவும் வரல அப்போ அவனுக்கு சம்திங் ஏதோ ஆயிடுச்சுன்னு தானே அர்த்தம் ... மருந்து வேற காணும் மிஸ்ஸிங் கூட்டி கழிச்சு பார்த்தா அதானே ?? திலோ கேள்வியாக முதுகை தேய்த்து கொண்டே கேட்க
"ஐயோ ஐயோ பைத்தியக்காரி கூட இவ்வளவு நாளா பழகி இருக்கேனே, யம்மாடி எனக்கு உன் சங்காத்தமே வேண்டாம் , தயவு செஞ்சு என்னை விட்டுடு .. இல்ல எனக்கு ஏதாவது மேட்டர் ஆகி போகும்" என்று தோழி அவள் அருகிலேயே நிற்க பயந்து ஓடிவிட
"அட போங்கடி இளம் சாதனையாளர் விருது வாங்காம நான் ஓயமாட்டேன்" என்று அந்த ஹோட்டலுக்குள் போனவள் அந்த நாளில் யார் யாரெல்லாம் வந்தார்கள் , குறிப்பிட்ட அந்த அறையில் யார் அன்று இரவு தங்கினார்கள் என்பதையெல்லாம் குறித்து வாங்கிக் கொண்டு யார் வேலை செய்யும் ஐடி கம்பெனி முன்னால் வந்து திலோத்தமா நின்றாள் ....
மிஸ்டர் யாஷ் உங்கள பாக்குறதுக்கு ஒரு பொண்ணு வெயிட் பண்ணிட்டு இருக்கு என்னன்னு போய் பாத்துட்டு வந்துருங்க.. என்று கூற ..
"யாரா இருக்கும் புவனாவா இருக்குமோ ? என்ன சொன்னாலும் பரவாயில்லை இனிமேல் யார் கூடேயும் இந்த பத்து மாசம் பேச்சு வார்த்தை வச்சுக்க கூடாது என்று முனங்கி கொண்டு யாஷ் வரவேற்பு அறைக்குப் போனான் ...
நகத்தைக் கடித்துக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த பெண்ணைத் தாண்டி அவன் புவனாவை தேட..
"அவ இல்லேயே பின்ன யார் என்னை தேடுனா யோசனையாக யாஷ் திரும்ப போக ...
"சார் நான் தான் உங்களை தேடி வந்து இருக்கேன் என்ற குரலில் யார் என்று அவன் திரும்ப அதே சமயத்தில் அவளும் திரும்ப இருவரும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக் கொண்டனர் ... தவறை மறைக்கும் அளவு அவள் கெட்டவள் இல்லை .... நடந்த தவறை கூறி அவனிடம் மன்னிப்பு கேட்கத்தான் வந்தாள் ..
"நீங்கதான மிஸ்டர் யாஷ் ?
"ஆமா நீங்க, இந்த முகத்தை எங்கேயோ பார்த்து இருக்கேனே "என்று அவன் யோசனையாக தலையை தடவினான்...
"ப்ச் என்னடி இப்படி சிக்குது" அபார கள் ஏறிய பனை ஒன்று சிக்கி சீராய அவள் இடை இறுக்கிட அவன் முனங்கினான்...
"தெரிலையே இது பத்தி எனக்கு ஐடியா இல்லை என்ன செய்யணும் என்று கேட்டு கேட்டு அவனுக்கு கம்பெனி கொடுத்தவளுக்கு அவனை கண்டதும் சற்று மூளை நினைவுகளை புரட்டி போட ...
தன் மீது அவன் மோதிய நேரம் அவன் மீசை முடி கன்னத்தில் வந்து உரசிய ஞாபகம் மூளைக்குள் மணி அடிக்க , தலையை உதறிக் கொண்டவள் அவனை முகம் கொண்டு பார்க்க முடியாது தலையை குனிந்து கொண்டாள்...
"உங்க கிட்ட தான் கேட்டு இருக்கேன், யார் நீங்க எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே அவன் நெருங்கி வரும் போது உண்டான நறுமணம் அடுத்த நாள் அறை போய் குளிக்கும் வரை அவள் மீது அடித்தது அதே நறுமணம் இதோ இவன் மீதும் அடித்தது
"டவுட்டே இல்ல இவர்தான்" என்று நினைத்துக் கொண்டு... எப்படி பேச்சை தொடங்க புரியவில்லை
"யார் நீங்க என்ன வேணும் " யாஷ் , சற்று கம்மிய குரலில் பக்கத்தில் கிடந்த சேரில் அமர்ந்தான்.. அதிக நேரம் நிற்க முடிவதில்லை , பாதம் எல்லாம் வலிக்கிறது சோர்வு வேறு அவனை பாடாய்படுத்துகிறது...
சார் உங்களுக்கு உடம்புக்கு நல்லா இருக்கா என்று சம்மந்தமில்லாமல் ஆரம்பித்த அவளை மேலும் கீழும் பார்த்த யாஷ்
"ப்ச் உனக்கு என்ன வேணும் ? ஏற்கனவே ஆயிரம் தலை செரையோட சுத்துறேன் புதுசா நீ வேற எங்க இருந்தும்மா வர்ற
"இல்ல சார் ஹெல்த் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டா இருக்கேன் ஏதாவது இன்சூரன்ஸ் வேணாமான்னு அவள் இழுக்க
"போம்மா அங்கிட்டு, சேரை தூக்கி அடிச்சிட போறேன்.. இருக்குற கடுப்புல நீ வேற கூப்பிட்டு வச்சு வேடிக்கை காட்டிக்கிட்டு இருக்கியா, வெளிய போம்மா என்று கத்தியவன் திடீரென்று தலையைப் பிடித்துக் கொண்டு அமர
சார்இஇஇஇஇ என்னாச்சு ?? அவன் அருகில் பதறி ஓடி வந்த திலோத்தமா, சட்டென்று அவன் கையைப் பிடித்து நாடி துடிப்பை பார்த்தவளுக்கு மகிழவா துக்கம் கொள்ளவா என்று தெரியவில்லை...எச்சில் விழுங்கி அவனை எப்படி ஃபேஸ் பண்ண என புரியாது நின்றாள் ...
இந்த விஷயம் இவருக்கு தெரியுமா தெரியாதான்னு தெரியலையே என்று நகத்தைக் கடித்தவள்
சாமியே சரணம் !! என்று அவன் காலிலேயே விழுந்து அழ ஆரம்பித்து விட்டாள்
தனக்கும் அவனுக்கும் உடல் அளவில் இணைப்பு ஏற்பட்டதை சொல்லாமல் ..
சார் மருந்து மாத்தி யாரோ உங்களுக்கு தந்துட்டாங்க, அதுல தான் உங்களுக்கு குழந்தை உண்டாகிடுச்சு சத்தியமா இதுக்கும் எனக்கும் சம்மந்தமும் இல்லை சார் , மன்னிச்சிடுங்க என்று அவன் காலை பிடித்துக் கொண்டு திலோத்தமா கதற ... அவ்வளவு தான் அவனுக்கு வந்ததே கோவம்...
அவள் உச்சி முடியை பிடித்து இழுத்து சுவற்றில் சாய்த்தவன் பளார் பளார் என்று அவள் கன்னத்தில் விட்டான்
"ஆஆஆஆஆஆ சார் வலிக்குது..
"நல்லா வலிக்கட்டும் உன்ன உன்ன உன்ன தான்டி தேடிட்டு இருக்கேன் .. ஆஆஆஆஆஆஆ தலையை பிடித்து கொண்டு அங்கும் இங்கும் அலைந்தான்
இத்தனை நாள் அவன் பட்ட பாட்டுக்கு இவள் காரணம் என்றால் அவளைக் கொல்லும் வெறி கூட வந்தது
"சத்தியமா இது தவறுதலா நடந்த ஒன்னுதான் நான் பிளான் பண்ணி இதையெல்லாம் பண்ணல சார் ... நம்புங்க
உன் முகத்தை பார்த்தாலே தெரியுதடி நீ ஆளு கிடைக்காம என்ன வச்சு சோதனை பண்ணி இருக்கேன்னு உன்ன கொன்னு போட்டா கூட என் ஆத்திரம் தீராது..
சார்
இந்த குழந்தையை வயித்துல சுமந்துகிட்டு நான் படுற பாடு எனக்கு தான் தெரியும்... கேஸூவலா வந்து சாரி கேட்கிற ...
வேணும்னா இந்த குழந்தையை என்ற திலோ கையை பிசைய மீண்டும் ஒரு அறை விழுந்தது..
"அதை எனக்கு செய்ய தெரியாதா? ஹான் என்ன என்ன கல்நெஞ்சக்காரேன்னு நினைச்சியா ... பொம்பள சுமந்தாலும், ஆம்பள சுமந்தாலும் பிள்ளை பிள்ளை தாண்டி , எனக்குள்ளையும் இருதயம் இருக்கு அதுக்குள்ளயும் தாய்ப்பாசம் இருக்கு ... உன்ன சட்டப்படி
"சார் சார் எதுவும் பண்ணிடாதீங்க, என் வாழ்க்கையே இந்த படிப்புலதான் இருக்கு ஏதாவது நீங்க சட்டப்படி நடவடிக்கை எடுத்தா என் வாழ்க்கை போயிடும் சார் எதாவது பண்றேன் சார், ப்ளீஸ் நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க கெஞ்சுதலாக யாஷ் முகத்தை பார்க்க ...
"என்ன பண்ணனும் பத்து மாசம் வயித்த தள்ளிகிட்டு பிள்ளை பெக்கணுமா, ஊரெல்லாம் என்னை பார்த்து வேடிக்கையா சிரிக்கணும், நான் எல்லாருக்கும் காட்சி பொருள் ஆகணும் அதான உன் ஆசை ... எங்கிருந்து நீ வந்து தொலைஞ்ச ?? என் வாழ்க்கை, என் சந்தோஷம் எல்லாத்தையும் கெடுத்துட்டு உன்னால எப்படி இப்படி ஒன்னுமே தெரியாத புள்ளை மாதிரி முழிக்க முடியுது.. உள்ள விக்கி விக்கி அழ ... அவன் அடித்த அடியில் கன்னம் வீங்கி போய் நின்ற திலோவை பல்லை நரநரத்து பார்த்தான்
பெண்ணை மதிக்கும் அவனை போய் கை நீட்ட வைத்து விட்டாளே... தப்பு சரியா நடந்து போச்சு இனி எதையும் மாற்ற முடியாது இவளை சொல்லி என்ன செய்ய ?
"போய் தொல, இன்னொரு தடவை உன்னை கண்ணால பார்த்தேன் , கடிச்சு கொதறிடுவேன் போ
ம்ம் திலோவுக்கு அவன் கொடுத்த மன்னிப்பில தான் தான் செய்த தவறான கண்டுபிடிப்பின் வீரியம் புரிந்தது ...
அய்யோ தப்பு பண்ணிட்டேனோ என்று உதறியது
என்ன கிளம்பு "
ம்ம் அவனை பார்த்துக்கொண்டே நகர ஆரம்பித்தாள் ..
அவன் சொடுக்கு சத்தத்தில் பாவமாக திரும்பிப் பார்க்க
"உன் பேர் என்ன?
"திலோத்தம்மா சார்
"ஓஓஓ, உண்மையாவே உனக்கும் எனக்கும் எதுவும் நடக்காம தான் இந்த குழந்தை உண்டாகிட்டா
இல்ல அதுலேயும் ஏதாவது தகடுதித்தம் பண்றியா அவள் நாலா பக்கமும் தலையாட்டி இல்லை என்க
" நிஜமா உனக்கும் எனக்கும் பிசிக்கலி எதுவும் நடக்கலதானே"
"ம்ஹூம்
" நான் தப்பு பண்ணி இருக்க மாட்டேங்கிற ஒரு சந்தோஷம் மட்டும்தான் எனக்குள்ள இருக்கிற ஒரே ஒரு நிம்மதி ,. சொல்லு உனக்கும் எனக்கும் எதுவும் நடக்கல தானே.. மருந்து தான மாத்தி தந்துட்ட??
" இதற்கு மேல் அவனை வேதனைப்படுத்த விரும்பாதவள்
"என் மேல சத்தியமா உங்களுக்கும் எனக்கும் எதுவும் நடக்கல சார்.. சொல்லப்போனா உங்க நிழல் கூட என் மேல படல சார் மருந்து மாத்தி தந்ததினாலதான் உங்களுக்கு இப்படி ஆயிடுச்சு...
"ப்ச் இந்த நிலைமையில யாராவது என்கூட இருக்கணும் போல இருக்கு ... ஆனா எனக்குன்னு ஒருத்தரும் இல்லாம ஆக்கிட்ட, அம்மா அப்பா பிரண்ட்ஸ் யாருகிட்டேயும் இதை பத்தி வாய் திறக்க முடியாம எனக்குள்ள வச்சு நெஞ்ச வெடிச்சு செத்துருவேன் போல இருக்கு... ஆனா நீ கேஷுவலா சாரின்னு ஒரு வார்த்தைல முடிச்சுட்ட என்று யாஷ் தலையை பிடித்துக் கொண்டு சுவற்றில் சாய...
"சார் இந்த பத்து மாசம் உங்களுக்கு எல்லாமாவும் நான் இருக்கேன் சார், உங்க கூடவே நான் இருக்க தயார் .. நீங்க இந்த மாதிரி நேரத்துல ரொம்ப டென்ஷன் ஆக கூடாது , அது உடம்புக்கு நல்லது இல்ல என்றவளை தீயாக முறைத்தவன்,
"வெளியே போயிடு ஆத்திரத்தில் ஏதாவது பண்ணிட போறேன்" என்று வார்த்தையை கடித்து குதறி விட்டு போனவனை கையை பிசைந்து கொண்டு பார்த்தபடி நின்றாள் திலோத்தமா....
அவள் செய்த ஆராய்ச்சி வெற்றி பெற்றது என்று சந்தோஷத்தை விட ..ஐயோ!! என்னால் ஒருவன் பாதிக்கப்பட்டு அவமானப்பட்டு நிற்க போகிறானே என்ற வருத்தம் தான் மிஞ்சி நின்றது...