வில்லங்கம் 8
Vil8

8 வில்லங்கமாக ஒரு தொடக்கம் !!
சார் எத்தனை நாள் செக்கப் போகாம வீட்டிலேயே நான் பார்க்கறது, குழந்தை சரியா வளருதா, ஆர்கன் எல்லாம் சரியா இருக்கான்னு ஆறு மாசம் எடுக்கிற ஸ்கென்ல தான் தெரியும்
"அய்யோ ஆமால்ல இப்ப என்ன பண்றது ... எதாவது ஹாஸ்பிட்டல் போனா என்ன மல்லாக்க போட்டு ஆராய்ச்சி பண்ணிடுவாங்களே..
"எனக்கு தெரிஞ்சவங்க ஹாஸ்பிட்டல் போகலாம் அல்ரெடி எல்லாம் பேசிட்டேன் அங்க போவோமா ?
"வலிக்குமோ
"ச்சே சே ஸ்கென் எடுத்தா வலிக்காது
"ம்ம்
"நிறைய தண்ணீ குடிங்க அப்பதான் குழந்தை மூமெண்ட் நல்லா தெரியும்
"என்ன பார்த்தா வித்யாசமா இருக்கா பைஜாமா போட்டிருந்தான் அதுவும் லூசாக எடுத்த வயிறு ஆடைக்குள் மறைந்து இருந்தது..
"நடக்க முடியல மூச்சு திணறுது எல்லாருக்கும் இப்படிதான் இருக்குமா .. வயிறு முட்டை போல இருக்கு அப்போ பையனா ஏகப்பட்ட கேள்விகள் .... அதற்கு பதில் சொல்ல முடியாது இவள்தான் தடுமாறினாள்..
ப்ச் இவ வேலை பார்க்கிற ஹாஸ்பிட்டலுக்கா நோ நான் வரல புவனா வேலை செய்யும் மருத்துவமனையில் வந்து ஆட்டோ நிற்க யாஷ் முரண்டு பிடித்தான்..
"ப்ளீஸ் சார் அக்கான்னா ரகசியமாவே இருக்கும் அதான்
"உலகத்தில் வேற டாக்டரே இல்லன்னு, இவ கிட்ட கூட்டிட்டு வந்தியா என்று யாஷ் திரும்பி திலோத்தம்மாவை முறைக்க
"இல்ல சார் யாருகிட்ட கூட்டிட்டு போனாலும் உங்களை வச்சி ஆராய்ச்சி தான் பண்ணுவாங்க உங்கள ஹெல்த் பத்தி யோசிக்க மாட்டாங்க, அதுவே புவனா அக்கான்னா,
"நான் எதுவும் வாயை திறக்கலை உங்க இஷ்டம் போல பண்ணுங்க என்ன செய்யணும், எங்க போய் படுக்கணும் புவனா உள்ளறையை கை காட்ட
யாஷ் உள்ளே போனான் புவனா உள்ளே சென்று அவனை செக் செய்துவிட்டு ..
"டேய் உண்மையாவே பேபிதானா என்னால நம்பவே முடியலடா உண்மையிலேயே ஆச்சரியத்தின் உச்சிக்கு போய்விட்டாள்....
"எங்க எங்க? ஆளாக பறந்தான் தன் பிள்ளை பார்க்க
"பார்க்கிறியா
"அவளையும் வர சொல்லு சேர்ந்து பார்க்கிறோம் என்றதும் திலோவை உள்ளே அழைத்து வர இருவரும் புழுக்குஞ்சு போல நெளியும் குழந்தையை ஒருவர் கையை ஒருவர் பிடித்து கொண்டு பார்த்தனர்
"அழகா இருக்குல்ல என்றவன் காய்ந்த உதட்டில் இப்போதே முத்தம் கொடுக்க வேண்டும் போல இருந்தது...
"ம்ம் தூங்குது போல
"ஆமா அசைவே இல்லாம கிடக்கு கை எல்லாம் என்ன மாதிரி நீள நீளமா இருக்குல்ல திலோ...
ம்ம் இருவரும் பேசுவதை புவனா மெலிதாக சிரித்தபடி பார்த்தாள்...
"பேபி எப்படி இருக்கு புவனா அக்கா
"சூப்பரா இருக்கு , யாஷ் ஏதாவது காபி குடிச்சிட்டு வா .. நான் இவ கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு
"ம்ம் என்று யாஷ் வெளியே போய்விட்டா. ன்
"உண்மையாவே என்னால இத இப்ப வர நம்ப முடியல திலோத்தம்மா அவனோட வயித்துக்குள்ள ஒரு செயற்கை கர்ப்பப்பை மாதிரி ஒரு அமைப்பு அதுக்குள்ள குழந்தை சமத்தா கெடக்குது.. எனக்கு இது பத்தி எதுவுமே புரிஞ்சுக்க முடியல... இதெல்லாம் தெரிஞ்சாதான் அவனோட டெலிவரிய நாம ரிஸ்க் இல்லாம பண்ண முடியும் .. சோ ஐ நீட் த எக்ஸ்ப்ளநேஷன் ..
திலோவோ நகத்தைக் கடித்துக் கொண்டே வாசலை எட்டிப் பார்க்க
"அவன் கேண்டின் போயிட்டான் சொல்லு
"அந்த மாத்திரையை போட்டுக்கிட்டு ரெண்டு பேரும் சேர்ந்தா கருவை தாங்குறதுக்குரிய ஒரு செயற்கையான பலூன் போன்ற அமைப்பு கர்ப்பப்பைக்கு பதிலா செயற்கையா உண்டாகும்
"வாவ்
"ம்ம் அது தொப்புள் கொடியோட கனெக்ட் ஆகி செயற்கையா குழந்தையை சுமக்கிறதுக்கான எல்லா சூழ்நிலையையும் வயித்துக்குள்ள உருவாக்கும்..
"ஓஓஓஓ
"குழந்தை பிறந்த அடுத்த நிமிஷம் அந்த செயற்கை பலூன் அமைப்பும் உடைஞ்சு போகும்.. அதுக்கு மேல அதுக்கு அங்க இருக்கக்கூடிய சக்தி இருக்காது..
"இதெல்லாம் எப்படி திலோ ?
"இயற்கையா கருத்தரிக்க முடியாத ஒரு முட்டை இயற்கையா உடைய முடியாத குஞ்சு பொரிக்க முடியாத முட்டையை ஒரு வெளிச்சமான அறைக்குள்ள வச்சு பொறிக்க வைப்போம்ல அந்த மாதிரி ஒரு அமைப்பு தான் இது."
சோ பிசிக்கலா சேர்ந்ததுனால தான்
இந்த குழந்தை அப்படித்தானே திலோ ?? தலையை குனிந்து கொண்டு ஆமாம் என்றாள்
"அவனுக்கு இது தெரியுமா தெரியாதா??
"மாத்திரை மாத்தி கொடுத்ததினாலதான் குழந்தை உண்டாகிடுச்சுன்னு நினைச்சுகிட்டு இருக்காரு
ஏன் இந்த உண்மை அவன்கிட்ட சொல்லல"
"எப்படி சொல்றது எனக்கே அசிங்கமா தோணுது அவர் என்ன நினைப்பாருன்னு பயமா இருக்கு.. ஏற்கனவே என்னால் அவர் வாழ்க்கை கெட்டுப் போச்சு
" ஏன் கெட்டுப் போச்சு இனிமே அவன் வாழ்க்கையை சரி பண்ண வேண்டியது என்னோட வேலை என்ற புவனாவை திலோ யோசனையாக பார்க்க..
"எஸ் நான் யாஷை கல்யாணம் கட்டிக்கலாம்னு இருக்கேன்... அவள் கண்களில் பதட்டமும் பரிதவிப்பும் கூடி போய் புவனாவை பார்க்க..
"நேத்து வரைக்கும் அவனுக்கும் இந்த தப்புல பங்கு இருக்குமோன்னு நினைச்சேன்.. அவன் பக்கம் கிறிஸ்டல் கிளியர் .. சோ நீ செஞ்ச தப்புக்கு அவன் ஏன் கஷ்டப்படணும் .. அதனால அவனை கல்யாணம் கட்டிக்கலாம்னு நான் யோசிக்கிறேன் நீ என்ன நினைக்கிற திலோ... சிறிய தடுமாற்றத்திற்கு பிறகு
"ரொம்ப சந்தோஷம் அக்கா, தாராளமா சார் கிட்ட இத பத்தி பேசுங்க ..
"அப்போ உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையா கூர்ந்து புவனா அவளை பார்க்க
"எனக்கு என்ன பிரச்சனை சார் நிம்மதியா இருந்தா முதல்ல சந்தோஷப்படுறது நானா தான் இருக்கும்
"ஓஓ அப்போ அவன் மேல உனக்கு எதுவும் இன்ட்ரெஸ்ட் இல்லையா
" அப்படி எல்லாம் இல்லக்கா, அவருக்கு செய்யுறது என் கடமையாதான் நான் செஞ்சுகிட்டு இருக்கேன் மத்தபடி அதுல வேற எதுவும் இல்லை என்றவள் முழு பூசணிக்காவை சோற்றில் மறைத்து தலையை குனிந்து கொண்டாள்...
குழந்தையை என்ன பண்ண போற , நீயே கொண்டு போயிடணும் சரியா ?
"அவர்
"அவனை நான் சமாளிச்சிக்கிறேன் பட் குழந்தையை நீ கொண்டு போயிடணும்.. என் வாழ்க்கையை மட்டும்தான் நான் வாழ விரும்புவேன், உங்க குழந்தைக்கு எல்லாம் என்னால எடுப்பு வேலை செய்ய முடியாது.. தப்பா நினைக்காத பட் பிராக்டிகல் இதுதான் ..
ம்ம்
"அப்போ நான் இந்த கல்யாணத்தை பத்தி அவன் கிட்ட பேசவா
"தாராளமா பேசுங்க ,ஆனா , தயவு செஞ்சு அவர்கிட்ட நானும் அவரும் சேர்ந்து தான் குழந்தை வந்ததுன்னு சொல்லிடாதீங்க அக்கா, அவர் உங்கள கல்யாணம் பண்ணிக்க மாட்டார் "
"நான் சொல்ல வேண்டிய தேவையில்லை அவனே எல்லாத்தையும் கேட்டுட்டான். யாஷ் இஇ"என்றதும் திலோ திரும்ப வாசலை நின்று கொண்டிருந்த யாஷ் எரிமலை குழம்பு போல அவளை முறைத்து பார்த்துக் கொண்டு நின்றான்..
உள்ளே செக்கப் செய்யும் போது இருவருமே வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் அமைப்பை பார்த்து உண்மையாக அதிர்ந்து தான் போயினர்
உண்மையாவே பிரமிப்பா இருக்கு இல்ல
ஆமாம் புவனா, மூளைக்காரிதான் எப்படி கண்டுபிடிச்சுருக்கா பாரு .. நீயும் டாக்டர்னு இருக்கியே அவ உன்னையே அடிச்சு சாப்பிட்டிருவா போல "
"என்ன தீடீர் பாசமழை அவ மேல பெய்யுது
"இல்லேயே எப்பவும் அவ மேல ஒரு அன்பு உண்டே , கோவம் இருந்துச்சுதான் ஆனா இப்ப இல்லை என்ன அவளை போல உன்னால கூட பார்த்துக்க முடியாது... ""
ஓஓஓ லவ் பண்றியா ??
"தெரில பட் அவதான் என் லைப்
"அதுக்கு பேர்தான் காதல் சார்
"அப்போ யா லவ் பண்றேன் , என் இக்கட்டுல கூடவே இருந்த அவளை லவ் பண்ணுறதுல என்ன தப்பு ..
"யாஷ் அது
"உன்ன தப்புன்னு சொல்லலை புவி பட் அவ ஸ்பெஷல் தான்
"ஆனா அவளுக்கு நீ ஸ்பெஷலா தெரியணுமே
"அது
நீ மட்டும் யோசிச்சா போதுமா அவ என்ன யோசிக்கிறான்னு தெரிய வேண்டாமா
"எப்படி கேட்கிறது அதுவும் இந்த நிலையில
"அதையும் அவக்கிட்ட கேட்டு பார்ததுட்டா போச்சு
"ம்ம் , எப்படியோ புவி மேஜிக் மாதிரி இதல்லாம் இருக்கு , முதல் நாளிலிருந்து எனக்கு ஒவ்வொன்னும் அதிசயமா தான் இருக்கு..
"ஆனா அங்க ஒருத்தி இருக்காளே, அவ கிட்ட கேட்டா மாத்திரை போட்டு பிள்ளை வந்ததுன்னு சொல்றா. கேட்கிறவன் என்ன கேனையா.. அது எப்படி மாத்திரை போட்டு குழந்தை வரும்.. ஏதாவது கேட்டா வாயவே தொறக்க மாட்டேங்குறா... என்ன நடந்துச்சு ஏது நடந்துச்சுன்னு தெரியாமலேயே சில நேரம் மண்டை குழம்புது தெளிவா கேட்டு வச்சிக்க அப்பதான் கிரிட்டிக்கல் இருக்காது
உண்மைதான் சரியான மண்டைக்காரி ஆனா பிசிக்கலா சேராம குழந்தை எப்படி ? இன்னைக்கு அவகிட்ட கேட்டு தெளிவாகிடுறேன் .. இப்பவே உன் கண் முன்னாடி கேட்கிறேன் நீ வெளியே வெயிட் பண்ணு என்று பேசி வைத்தது போல திலோ உண்மையை உளறிவிட்டு பிடிபட்டு போய் திருதிருவென விழியோடு நின்றாள்..
வாசலில் நின்ற யாஷை பார்த்து அவளுக்கு திகிலாகி போட்டுவிட்டது ...நெஞ்சை பிடித்துக் கொண்டு அவள் யாஷை பயந்து போய் பார்க்க அவனும் அவளை மேலிருந்து கீழ் வரை பல்லை கடித்துக் கொண்டு விழியால் எரித்தவன்
"புவனா கிட்ட சொன்னதெல்லாம் உண்மையா பொய்யாடி "
"சார்
"சே எஸ் ஆர் நோ
"உண்மைதான் சார், நானும் அந்த சமயத்துல சுயநினைவோட
"மூச் மூச் இன்னும் எத்தனை பொய்தான்டி சொல்ல போற..
"இல்ல சார்
"நீ பிளான் பண்ணி என்னோட வாழ்க்கையைக் கெடுத்து இருக்க.. இப்போ என் கூடவே நல்லவ போல நடிச்சு , உன்னோட ஆதாயத்துக்கு என்ன பயன்படுத்திட்டு இருக்க ரைட் ... வேண்டாம் தாயே , என்ன ஆனாலும் பரவாயில்லை நான் என் புள்ளையும் தனியாவே பாத்துக்குறேன், இன்னும் ஒரு நிமிஷம் கூட நீ என் கண்ணு முன்னாடி நிக்காத கெட் அவுட்
"சார்
"வெளியே போடி
"சார் சார் டெனசன் ஆகாதீங்க போறேன் என்றுவிட்டு திலோ கண்ணீரை துடைத்து கொண்டே வெளியே போக
சேரில் வேதனை தாங்க முடியாமல் யாஷ் அமர்ந்திருக்க .. அவன் தோளில் கை போட்ட புவனா
யாஷ்
ம்ம் அவ போயிட்டாளா புவனா
ம்ம் போயிட்டா பெருமூச்சு விட்டவன் எழும்ப போக அவன் தோளை அழுத்தி அமர வைத்த புவனா
உண்மையாவேதான் கேட்கறேன் நாம ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது யாஷ்?? என்ற அவள் கேள்வியில் இது என்னடா புது பிரச்சனை என்று யாஷ் தான் அதிர்ந்து அவளை பார்த்தான்..