வில்லங்கமாக ஒரு தொடக்கம்-10

வில்லங்கமாக ஒரு தொடக்கம்-10

10 வில்லங்கமாக ஒரு தொடக்கம்!!

யாஷ் தீடீரென அவளிடம் நடந்து கொள்ளும் முறையில் திணறி போய் திலோ நின்றாள்.. 

அய்யய்யோ!! இப்போ என்ன பதில் சொல்றது... 

ஏன் உனக்கு அவர் வேண்டாமா? என்ற மனசாட்சி கேட்ட கேள்விக்கு

அவர் மட்டும்தான் வேணும்.. ஆனா இது காதலா இல்ல பரிதாபமான்னு தெரியலையே, 

நம்மளால தான் இவர் இப்படி ஆயிட்டாருன்னு நினைச்சு கூட அவர் மேல ஒரு சாஃப்ட் கார்னர் வந்திருக்கலாம்தானே.... 

"ஏன் இந்த அதிமேதாவி யோசனை 

"ஏன்னா காதலிக்கிறவங்க எல்லாரையும் நான் பார்த்து இருக்கேன் ,ஒரு மாதிரி கோணக்கண்ணு போட்டு பாப்பாங்க, கண்ணாலயே பேசிப்பாங்க உதட்டை உதட்டை கடிப்பாங்க... ஆனா எனக்கு அந்த மாதிரி உணர்வெல்லாம் அவரை பார்த்தா வரவே இல்ல... "

"ஒரு உணர்வும் வரலையா 

"அது , அவர பார்த்தா மனசுக்குள்ள ஒரு மாதிரி பட்டாம்பூச்சி பறக்குது ... ஆனா அதுக்கு பிறகு நார்மல் ஆயிடுறேனே , இதுக்கு பேரு உண்மையாவே காதலாகதான் இருக்குமா இல்ல வேற எதுவுமா.. இதை நம்பி அவர்கிட்ட எதுவும் சொல்ல முடியாது..

"தூதூ முழுசா நனைஞ்ச பிறகு முக்காடி எதுக்கு உனக்கும் அவருக்கும் மேட்டரே ஆகிப்போச்சு..

"அட மேட்டர் எல்லாம் ஒரு மேட்டரே கிடையாது...மனசு முழுக்க அவர சுமக்கணும் உடம்பு கெட்டுப் போச்சுன்னா கூட ஒன்னும் கிடையாது ... ஆனா மனசு சுத்தமா இருக்கணும் அது காலத்துக்கும் மாற கூடாது அதான் முக்கியம் 

"அப்போ இப்ப என்ன பண்ண போற, குறை கண்ணு போட்டு பார்க்கிற பீல் வர்ற வரை காத்திருக்க போறியா ???

ம்ம் ஹக் என்றவள் கண்ணை உருட்டி அடுப்பு திண்டை பிடிக்க அவளை பின்னிருந்து அணைத்து கொண்டு நின்றான் யாஷ் 

"என்னடி எஸ் சொல்வோமா நோ சொல்வோமான்னு யோசனையா??? என்றான் திலோ கழுத்தில் சின்ன கடி கடித்து கொண்டே அவள் நெளிந்தபடி 

ம்ஹூம் 

"மேட்டரே ஆன பிறகு இனி நோ சொன்னா என்ன எஸ் சொன்னா என்னடி ??"அவன் சூடான மூச்சு அவள் பிடிறி உள்ளே அடிக்க  

"சார் உங்களுக்கு காய்ச்சல் போல இருக்கு அவன் சூடான மூச்சில் பயந்து போக 

"அடியேய் லூசு நீ கமிட் ஆகிக்கவே மாட்ட போலடி இதுக்கு பேர் காய்ச்சல் இல்ல லவ் பீவர்.. எனக்கு ஸ்டார்ட் ஆகிடுச்சு உனக்கு எப்போ ஸ்டார்ட் ஆகும்டி அவள் மொட்டை கழுத்து காது பார்த்து கொண்டே கேட்டான் .. 

ஒருவன் ரசிக்க வேண்டும் என்று நம்மை நாம் தயார் செய்வது தான் காதல் வந்த முதல் அறிகுறி இதுவரை அவளை நீட்டான சுடிதார் ஒப்பனையோடு பார்த்ததே இல்லை ஏனோதானோவாக ஒரு சுடிதார் , கண்ணில் கண்ணாடி, கழுத்தில் காதில் எதுவும் இருக்காது தலைமுடியை கூட சுருட்டி ஒரு கேட்ச் கிளிப் ... இன்றுதான் அவனே அவளை ஆற அமர பார்கிறான் .. அவனுக்கு பிடிச்சிருக்கு போதும் ... 

உனக்கு காதல் வருதா??அவள் பதில் சொல்லாது அவனை பார்க்க முடியாது திண்டாடினாள்.. 

"ஏன் முகத்தில சிவப்பா இருக்குடி

அது அது 

இதுதான் வெட்கமா ?? என்றான் அவள் இடையை இன்னும் அழுத்தி பிடித்து, மொத்தமாக சாய்ந்து விட்டது பெண்மை.. கண்கள் படபடக்க அவனை மேனி நடுங்க அவள் பார்க்க.. முடியவில்லை வெட்கம் தின்றது

ஐயோ!! எனக்கும் காதல் வந்துடுச்சோ, அவர் தொட்டா எனக்கு வெக்க வெக்கமா வருது, உதட்டை கடிக்கணும் போல வருதே , கண்ணெல்லாம் குறைக்கண் போட்டு அவரை பாக்கணும் போல இருக்கு.. அப்போ இதுக்கு பேரு காதல்தானே?? 

இல்ல மயக்கம் வர்றதுக்கு கூட இப்படி சிம்டம்ஸ் இருக்கலாம் என்று மருத்துவ மாணவியாக இதுவா அதுவா என்று யோசித்து கொண்டு இருந்த வேளை அவன் கை விரல்கள் அவள் அணிந்திருந்த டாப்ஸ் உள்ளே மெல்லே புகுந்து , அவள் வெற்றிடையை தடவ .... அவன் தொடுகையில் கூச்சத்தில் நடுங்கிய திலோ 

என்ன சார் வேணும்?

"அதான் கேட்டேன் நாம ரெண்டு பேரும் அன்னைக்கு தெரியாம பண்ணினதை இன்னைக்கு தெரிஞ்சே பண்ணலாம

 "ஐயோ சார் என்ன விளையாடுறீங்களா? ஆறு மாசம் கேரிங் இப்போ போய் ஏதாவது செஞ்சு ஆபத்தா முடிஞ்சிடுச்சுன்னா"

"ஓஓஓ அப்போ அதுக்கு ஓகேதான் உடல்நிலை தான் பிரச்சனை அப்படிதான ஹான் 

"அது ஊஊஊ

நானும் அதனாலதான் அமைதியா இருக்கேன் இல்லன்னா அப்பவே முதல் ரவுண்டு முடிச்சிருப்பேன்.. அவன் பேச்சில் அல்லு விட்டு போய் பார்த்தாள் 

"நான் ஷாப்டா இருக்கிறதை பார்த்து தப்பா நினைக்காதடி.. நான் அந்த விஷயத்துல ரொம்ப மோசமான ஆளு , ஞாபகம் இருக்கா ?? என்றான். அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து உரசிபடி கைகள் பூப்பந்தை மெலிதாக வருடியது இருவருக்கும் உடல் இறுகியது ... அவனுக்கு இப்பவே வேணும் போல ஆசையும் , அவளை அனுபவிக்க முடியாத ஏக்கமும் சேர்ந்தே துடிக்க வைத்தது .. 

"எனக்குத்தான் எதுவும் ஞாபகம் இல்ல , உனக்கு தான் எல்லாம் ஞாபகம் வந்துட்டே , என்ன பண்ணுனேன் கொஞ்சம் சொல்லேன்" இன்னும் அவன் கை கிள்ளி விளையாடியது.. 

"சார் நைட்டுக்கு சாப்பாடு என்ன செய்யறது 

ஜடம் ஜடம் எவ்வளவு ஃபீல் பண்ணி ரொமான்டிக் மூட்ல பேசிகிட்டு இருக்கேன்.. சாப்பாடு ஆராய்ச்சின்னு ரம்பம் போடுற, கொஞ்சம் ரொமான்டிக்கா மாறுடி ... லவ் பண்றேன்னு சொல்றேன்ல, எனக்கு ஏத்தது மாதிரி நீயும் என்னை லவ் பண்ண ட்ரையாவது பண்ணுடி செத்த எலி... இப்படி மரக்கட்ட போல இருந்தா , எப்படி எனக்கு மூட் வரும் என்ற அவனை எச்சில் விழுங்கி பார்த்த திலோ 

சார் கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்கு மூட் வர்றதுக்கு ட்ரை பண்றேன் இப்போ நகர்ந்து போங்களேன் ஒரு மாதிரி இருக்கு வியர்த்து வடிந்தாள்..

அப்படியெல்லாம் போக முடியாது கிட்டையே ஒட்டிக்கிட்டு தான் இருப்பேன்.. அப்பதான் உனக்கு ஏதாவது லைட் ஏறிய வாய்ப்பு இருக்கு.. சொல்லு அன்னைக்கு நான் என்ன எல்லாம் பண்ணுனேன் ஒன்னும் விடாம எனக்கு இப்போ தெரிஞ்சாகணும்.. அடம் பிடித்தான் அவள் வெட்கம் அழகாக இருந்தது ரசனையாக அவளை ரசித்தான்.. 

"எப்படி இருந்துச்சு சூப்பரா இருந்துச்சா, சுமாரா இருந்துச்சா , எவ்வளவு மார்க் போடுவ என்றவன் ஆசை வேறு துடித்து அவள் அடியில் உரச .. பரவால்ல ஹார்மோன் எல்லாம் சேஞ்ச் ஆகி இருந்தாலும் ... அதுக்கு உயிர் இருக்கத்தான் செய்யுது ஒரு ட்ரையல் பாத்துடலாமோ? என்ற யாஷ் இன்னும் அழுத்தமாக அவளிடம் தன் தேவையை உணர்த்த இவளுக்கு பயத்தில் உடல் எல்லாம் ஆடிக்கொண்டு பயமாக இருந்தது ..

"சொன்னா விடுவேன், இல்லை டிரையல் செக்ஷன் தான் 

"நல்லா இருந்துச்சு 

"ப்ச் டிடெயிலா சொல்லுடி இல்லை இங்கேயே என்று அவன் அவள் கீழ் ஆடையை இழுக்க 

"வேண்டாம் வேண்டாம் சொல்றேன் ..

"அப்படி வா வழிக்கு சொல்லு ...அன்னைக்கு என்ன நடந்தது 

"ஃபைனல் திசீஸ் பத்தி எல்லாரும் அவங்கவங்க டாபிக்க எக்ஸ்ப்ளைன் பண்ணினோம்... என்னோட சீனியர்ஸ் எல்லாரும் உன்னோட ப்ராஜெக்ட் ரொம்ப சூப்பரா இருக்கு நாம கேண்டின்ல போயி ஒரு ஜூஸ் குடிச்சுக்கிட்டு இதை பத்தி பேசலாம் வான்னு கூப்பிட்டாங்க நானும் நம்பி அவங்க பின்னாடி போனேனா 

ம்ம் வழக்கம் போல கிரேப் ஜூஸ்னு சொல்லி உனக்கு எதையோ தள்ளிட்டாங்க ...அப்படித்தானே என்றான் அவளை தூக்கி திண்டில் வைக்க முயற்சி செய்தபடி 

"அய்யோ சார் வெயிட் தூக்கக்கூடாது நானே உட்கார்ந்துக்குறேன் என்று அவனை தடுத்து அவளே ஏறி திண்டில் உட்கார்ந்து கொள்ள 

யாஷ் அவள் காலுக்கு இடையில் போய் நின்று கொண்டவன் திலோத்தம்மாவின் முடியை கோதி கேட்ச் கிளிப்பில் மாட்டி விட்டு ..அவள் பேசும் அழகை திலோ மார்பில் படுத்துக்கொண்டே ரசிக்க ஆரம்பித்தான் ...

ஆண் பெண் நட்பு எல்லாம் அவனுக்கு அத்துபடி புவனாவோடு அவன் பேசாத பேச்சில்லை ... ஒளிவு மறைவு இல்லாமல் இருவரும் அரட்டை அடித்துக் கொள்வார்கள்.. அதனால் தானே தன்னை பற்றி தெரிந்த ஒரு பெண் அவள் தன்னுடைய வாழ்க்கையில் வந்தால் நலமாக இருக்கும் என்று சரியான இணையை தேர்ந்தெடுத்த வெற்றிக் களிப்பில் இருந்தான். ஆனால் சரியான இணை என்பது ஒத்த சிந்தனை உள்ள இருவர் சேர்வது இல்லை, ஒத்து வராத சிந்தனை உள்ள இருவர் சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் பிடித்தமாக மாறிக் கொள்வது தான் என்று இவளோடு உண்டாகும் இந்த உணர்வு பிரளயத்தில் உணர்ந்து கொண்டான்..

எத்தனையோ நாள் புவனாவோடு இப்படி நெருங்கி அமர்ந்து கதை பேசும் போதெல்லாம், அவளை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கத் தோன்றாத கண்கள், இவளிடம் வெள்ளோட்டம் பார்க்கிறது என்றால் காதல் வேறுவிதமானதுதானோ?? நாம் நினைப்பது போல் காதல் இல்லையோ, அதன் விருப்பத்திற்கு தான் காதல் நம்மை இழுத்துச் செல்லுமோ என்று தெளிவாய் காதல் எதுவென இவளிடம் உணர ஆரம்பித்து கொண்டு இருந்தான்...

"ம்ம் மேல சொல்லு 

"நானும் அது என்னதுன்னு தெரியாம குடிச்சிட்டேன் குடிச்சு கொஞ்ச நேரத்துல மயங்கிட்டேன் ..நாலு பேரும் என்ன எங்கேயோ கூட்டிட்டு போனாங்க அப்பவே இந்த மருந்து உண்மையா பொய்யான்னு பார்க்க ஒருத்தனுக்கு இந்த மாத்திரையை கொடுத்து ட்ரையல் பார்த்திடலாம்னு அவங்க பேசுனது கேட்டுச்சு...

"அந்த ஒருத்தன் இளிச்சவாய் நான்தான் கரெக்டா அவள் ஆம் என்று தலையாட்டினாள்

ஆபீஸ் , பார்டியில் எல்லோரும் மது அருந்த இவன் மட்டும் எப்போதும் அதற்குடா விதித்து விடுவான் தகப்பன் பெல்ட் எடுத்து விலாசி விடுவார் என்ற பயம் எப்போதும் அவனுக்கு உண்டு. எனவே அவனுடைய சுதந்திரம் எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கும் ..

அன்றைய இரவும் அப்படித்தான் நண்பர்களோடு பார்ட்டி பண்ணிக் கொண்டிருந்தவன் விக்கல் எடுத்து நீருக்காக பக்கத்து மேஜை பெண்கள் உட்கார்ந்து இருந்த இடத்தில் போய் தண்ணி இருக்கா என்று கேட்க ..

அவர்கள் ஒரு தாராளமாக ஜூஸை நீட்ட இவனும் நம்பி குடித்து விட்டான் .. அதில் மொத்தமும் வில்லங்கம் இருப்பது தெரியாமல் குடித்தவனுக்கு சிறிது நேரத்தில் தலை கிறுகிறுவென்று வர, யாரோ நால்வர் அவனை மறைத்து மறைத்து அழைத்து சென்று கொண்டு போய் ஒரு அறையில் விட்டு பூட்டி விட்டனர் .. 

அவளுக்கு போதை மாத்திரை, இவனுக்கு போதை மாத்திரையோடு சேர்ந்து கரு பிடிப்பதற்கான மாத்திரையும் சொல்லவா வேண்டும்? சூறாவளியாக இருவரும் கட்டிலை சேதப்படுத்தி விட்டனர்..

அவ்வளவுதான் சார் நடந்தது "சென்சாரோடு பேசும் கள்ளி உதட்டை கவ்விட தோன்றியது 

"என்னடி அவ்வளவுதானா?

"ம்ம் 

"மெயின் பிக்சருக்கு வரவே இல்ல" என்றான் அவள் கொழுத்த அழகில் உதட்டை வைத்து புரட்டிக் கொண்டே

"இதுக்கு மேல எப்படி சொல்றது

"நீ சொன்னா உன்ன விடுறேன், இல்ல இன்னைக்கு அட்டம்ட் பண்றது உறுதி ... நான் பெட்ல போய் படுக்கிறேன் ..நீ வந்து எப்படி பண்ணுனேன் சம்பவம் எப்படி ஆச்சு.. நான் நல்லா பண்ணுனேனா?? அதுல உனக்கு என்ன பிடிச்சது எனக்கு என்ன பிடிச்சதுன்னு எல்லாத்தையும் விலாவாரியா சொல்ற..

"ஹான் நானா?

"எஸ் நீதான் சொல்லணும் , பெட் ரூமுக்கு வரும்போது புளிப்பா மாங்கா வெட்டி கொண்டு வா எனக்கு திங்கனும் போல இருக்கு என்றவன் அவள் திமிறெடுத்த அழகை மெல்ல கடித்து வைத்து விட்டுப் போக .. 

அவன் கடித்துவிட்டு போன உணர்வில் உதட்டை கடித்துக் கொண்டு இருந்தவள் முகத்தை கண்ணாடியில் பார்க்க செக்கச் செவேல் என்று சிவந்து போயிருந்தது... 

வெட்கம் நாணம் எல்லாம் பெண்ணுக்கே உரியது போல , பெண்மை எது ஆண்மை எது என்று காதல் வந்த பின்னே பிரித்து உணர முடிந்தது .. இது இரண்டும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் அழகு, மதிப்பு !!