வில்லங்கமாக ஒரு தொடக்கம் 1
Vill1

1 வில்லங்கமாக ஒரு தொடக்கம்!!
திருமண மண்டபம் கோலாகலமாக காட்சி அளித்தது ...
வெளியே பெரிய பெரிய கட்அவுட் மணமகன் மணமகள் சிரித்த முகமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த பேனர் , மணமகன் மணமகள் தோழிகள் அரட்டை என்று இடமே களை கட்டி இருந்தது ...
தன் சிறுவயது தோழி, சிறிது வருடமாக காதலி இதோ இன்னும் சிறிது நேரத்தில் தன்னுடைய மனைவி மணமேடையில் மாலையை அணிந்து கொண்டு ஆசையாக தன் வருங்கால மனைவிக்கு காத்திருந்தான்...
யாஷ்வின்!!
தன் சிறு வயது தோழி , காதலி வருங்கால மனைவி புவனா அடி மேல் அடிவைத்து வந்து அவன் அருகாமையில் உட்கார உலகத்தையே வென்றுவிட்ட மகிழ்ச்சி இருவர் முகத்திலும் தெரிந்தது ...
அவளுக்கு விஸ்தாரமாக இருக்க இடம் கொடுத்து அமர்ந்தவன் புவனாவை பார்த்து கண்ணை சிமிட்டி சிரிக்க..
"டேய் பல்ல காட்டாத இப்ப கூட என் அப்பாவுக்கு உன்ன புடிக்கல, இழுத்துட்டு போயிடப் போறார் என்று அவன் தோளில் புவனா இடிக்க..
"இன்னும் பத்து நிமிஷம்தான்டி தாலிய கட்டி தூக்கிட்டு ஓடிருவேன்..." தன்னை அதிகம் புரிந்து வைத்திருக்கும் ஒருத்தியே மனைவியாக வரப்போகிறாள் என்ற மகிழ்ச்சி அவன் முகம் எங்கும்.. அவளுக்கும் அவன் சொன்ன காதலுக்கு தலையாட்ட ஒரே காரணம், எவனோ தெரியாத ஒருவனை கட்டிக்கிட்டு புரிஞ்சிக்கிறதுக்கு, புரிஞ்சிக்கிட்ட ஒருத்தனை கட்டிக்கிட்டா பெட்டர் அவ்வளவு தான் இருவரும் காதலிக்க காரணம் கல்யாணம் பண்ணிக்க காரணம் ....
"ஏன்டா நான் தான் வேணும்னு அடம் பிடிக்கிற "
"பின்ன என்ன பத்தி முழுசா தெரிஞ்ச ஒருத்தி நீ தான.. என்ன பத்திரமா பாத்துக்கவல்ல..
நீ என்ன அப்பளமா விட்டா காக்கா தூக்கிட்டு போக
ம்ம் தூக்கிட்டு போனாலும் சொல்றதுக்கு இல்லை என் மதிப்பு உனக்கு தெரில புவி...
ம்க்கும் அய்யோ பாவம்னு வாழ்க்கை தர்றேன் டா ஓவரா பேசினா ஓடிப்போயிருவேன்...
"மாப்பிள்ளை தம்பி தாலிய கட்டுங்க ,நேரம் ஆயிடுச்சு என்றதும் பேச்சை நிறுத்த, அவனுக்கு தாலி கொடுக்கப்பட ஆசையாக அந்த தாலியை வாங்கிய யாஷ்வின்... அவளை குனிந்து பார்த்து கட்டவா என்று கேட்க
"இனி என்னடா அனுமதி, அதான் மேடை வரை வந்தாச்சில்ல .. தாலியை கட்டி மூணு முடிச்சை போடு என்ற யாஷ் தாய் குரலுக்கு , சிறிய சிரிப்பை இருவரும் உதிர்த்து யாஷ் புவனாவின் கழுத்தில் கட்ட போக .. கண் இருண்டு கொண்டு நெஞ்சுக்குள் படபடவென அடித்து கொண்டு வர கண் எல்லாம் இருட்டியது உவட்டி கொண்டு வந்தது ... அவன் முகம் போன போக்கை கண்டு யோசனையான புவனா ...
"என்னாச்சு யாஷ் "
"நத்திங் ""
"தம்பி நல்ல நேரம் முடிய போகுது தாலியை கட்டுங்க "
"ம்ம்" ரெண்டு ரெண்டாக எதிரே இருந்த புவனா தெரிய கைகள் வியர்த்து கொட்ட.. உட்கார கூட வலு இல்லாது போக , யாஷ் திடீரென்று மயங்கி அவள் மீது சரிந்தான்..
"அய்யோ யாஷ் "
"யாஷ் இஇஇஇ என்று அத்தனை பேரும் படபடக்க..,
பூரியை திங்காத திங்காதன்னு சொன்னேன் கேட்டியா... எனக்கு கூட தராம தின்னியே , இப்ப பாரு மயங்கி விழுந்து, மானத்தை வாங்கிட்டியே என்று அவன் தாய் லெட்சுமி மகன் கன்னத்தை உலுக்க..
தன் தோளில் சாய்ந்து கிடந்த யாஷ்வினை எழுப்பி ஒழுங்காக அமர வைத்தாள் டாக்டர் புவனா..
யோசனையாக ஸ்டெதஸ்கோப்பை எடுத்துக்கொண்டு வர சொல்ல... அவனுடைய இதயத்துடிப்பை கருவியில் பார்த்தவள் கண்ணைச் சுருக்கி யோசித்து விட்டு ...
கிளினிக் வரைக்கும் கூட்டிட்டு போகணும், ஒரு செக்கப் பண்ண வேண்டியது இருக்கு என்று விட்டு வியர்த்த தன் முகத்தை துடைத்துக் கொண்டு புவனா தன்னுடைய கிளினிக் நோக்கி அவனையும் காரில் ஏற்றுக் கொண்டு போக ..
யாஷ் குடும்பமும் புவனா குடும்பமும் பரிதவிப்பாக அந்த அறையில் நின்று கொண்டிருக்க... சிறிது நேரத்துக்கு பிறகு வெளியே வந்தாள் புவனா.. அவளுக்கு பின்னே தலையை பிடித்து கொண்டே வந்து சேரில் யாஷ் அமர..
சூடா எதாவது குடிக்க கொடுங்க ஆன்டி
"வேண்டாம்மா குமட்டிட்டு வருது" என்ற யாஷை அனைவரும் யோசனையாக பார்க்க
"புவனா எனக்கு என்ன ஆச்சுடி , தலை கிறுகிறுக்கு என்று சோர்வாக இருந்த யாஷ்வின் முன்னே புவனா ரிப்போர்ட்டை தூக்கி வீசியவள் ..
"வாட் இஸ் திஸ் யாஷ்? என்று கேட்க .. ரிப்போர்ட்டை எடுத்து வாசித்த யாஷ் ரிப்போர்ட் மீதே மயங்கி சரிந்தான்..
"அய்யோ , என்னாச்சும்மா ? என் மகனுக்கு எதுவும் பெரிய நோயா இல்லை வரக்கூடாத நோய் எதாவது வந்துடுச்சா எதா இருந்தாலும் சொல்லும்மா என்று அவன் தாய் லட்சுமி படபடக்க..
எப்படி இதை இவர்களிடம் சொல்ல, அவளுக்கே ஆச்சரியமான ஒரு விஷயம்... ஆனால் பத்து தடவைக்கு மேல் செக் செய்து விட்டாள்.. அத்தனை முறையிலும் இதுதான் என்று மருத்து முடிவு கூற அவளால் அதிர்வது தவிர வேறு வழியில்லை
என்னவா இருந்தாலும் சொல்லும்மா புவனா, என்றதும் கையை பிசைந்து கொண்டே..
"உங்க மகன் பிள்ளை உண்டாகி இருக்கான் "என்று அலுங்காது குண்டை தூக்கி அனைவர் மீதும் போட்டாள் ..
ஹான்
என்னது ?!
ஏதே ?!
பிள்ளையா??
"ம்ம் , எஸ் அவர் கன்சிவா இருக்கார் "என்றதும் கூட்டம் மொத்தமும் மயங்கி பொத் பொத்து என்று கீழே விழுந்தது
சாத்தியமில்லாத ஒன்று!!
ஒரு ஆண் கர்ப்பம் தரிக்க முடியுமா??
முடியும் முடியும் முடியும் என்றாள் அவள் ....
சென்னை மருத்துவ ஆராய்ச்சி கூடம் ஹாலில் ஒரு பெண் நகத்தை கடித்து துப்பி கொண்டு நின்றாள்
"திலோத்தமா வாட் இஸ் திஸ் ? "
"சார் நான் சொல்றது எல்லாம் உண்மை
"நீங்க பேசுறது எல்லாம் சாத்தியமான ஒன்னா, ஒரு ஆம்பள எப்படி பிள்ளை உண்டாக முடியும்?
"முடியும் சார் "
"விளையாடுறியா ஆம்பள பிள்ளை பெக்க முடியும் , அதுவும் அதுக்கான மருந்து நான் கண்டுபிடிச்சிட்டேன் அப்படின்னு சொல்றீங்க.... நாளைக்கு உங்களோட ஃபைனல் திசீஸ் கொடுக்க வேண்டிய நாள்... ஆனா இன்னைக்கு இப்படி ஒரு கட்டுக்கதை ஒன்னு கட்டுறீங்க ... சரி அந்த மருந்து கண்டுபிடிச்சுட்டேன்னு சொல்றீங்கல்ல, அதை கொடுங்க பாக்கலாம் "என்ற தன் பேராசிரியர் முன்பு மருத்துவ மாணவி திலோத்தமா கையை பிசைந்து கொண்டு நின்றாள்...
திலோத்தம்மா மருத்துவ ஆராய்ச்சி மாணவி!! 22 வயது..
மண்டை பெருத்த கேஸ், படிச்சு படிச்சு மண்டை கழண்டு போனது.. உலகம் திரும்பி பார்க்கும் ஆராய்ச்சி ஒன்றை செய்தே தீர வேண்டும் என்று குதர்க்க மூளையில் உருவான மருந்து இந்த ஆண் கர்ப்பம் தரிக்கும் மருந்து ... ராத்திரி பகலாக உழைத்து அதை கண்டும் பிடித்து விட்டாள்..
"இப்ப எங்க அந்த மருந்து?
"மிஸ் ஆகிடுச்சு சார் "அழுது விடுவது போல நின்றாள் ...
"சார் ரெண்டு வருஷமா ஆராய்ச்சி பண்ணி அதுக்கான மருந்து கண்டுபிடிச்சிட்டேன் விலங்குகள் மேல அதை வச்சி, ஆராய்ச்சியும் பண்ணி பாத்துட்டேன்... மனுஷனுக்கு ஆராய்ச்சி பண்றதுக்கு யோசிச்சுக்கிட்டு இருந்த டைம்ல தான் அந்த மருந்து மிஸ் ஆகிடுச்சு "என்று கண்ணாடி போட்ட கண்கள் பரிதவித்தது...
"எங்க போச்சு ?
"தெரில
அவளுக்கே என்ன நடந்தது புரியவில்லை, ஒரு மாதங்களுக்கு முன்பு இரவு தோழிகளோடு இதை பத்தி பேசியது மட்டும் தான் நியாபகம் இருக்கிறது சிறிது நேரத்தில் மயங்கி சரிந்தாள்... ஒன்று மட்டும் தெரியும் .. அவள் அன்றைய இரவோடு கன்னித்தன்மை இழந்திருந்தாள் ....
தன்னோடு கட்டி அணைத்து காதல் இல்லாமலேயே முத்தமழை பொழிந்து, மோகத்தில் முத்தாடி சோர்ந்து போகாமல் , தன் இளமை மொத்தத்தையும் கொட்டிய அவனால், அவள் தன்னை இழந்துவிட்டாள்.. அவன் அவனை இழந்துவிட்டான் ஆனால் அந்த அவன் எவன் ?? என்றுதான் அவளுக்கு தெரியவில்லை.... அனைத்தும் முடிந்து விடியலில் சுயநினைவு வந்து முழித்த போது காலையில் ஏதோ ஒரு படுக்கை அறையில் அலங்கோலமாக கிடந்தாள்.. பதறியவளுக்கு புரிந்தது அவனும் போதையில் தான் கிடந்தான், விபத்தாக வில்லங்கம் நடந்தேறி விட்டது என்று அறிந்தவள் ..
அருகே முதுகு காட்டி ஒருவன் அலங்கோலமாக அவள் அருகே படுத்து கிடக்க.. அவன் முகத்தை பார்க்கலாம் என்று உற்று பார்க்க நினைத்த சமயம் அவன் அசைவு தெரிய , தான் இங்கே இருந்தால் விபரீதம் என்று அவன் முகத்தை கூட பார்க்காமல் படுக்கையில் கிடந்த தன் ஆடைகளை அணிந்து கொண்டு பையை தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வந்து விட்டாள்..
ஆனால் அவள் உயிரை கொடுத்து கண்டுபிடித்த அந்த மாய மருந்தை காணவில்லை ... இதோ தேடி தேடி அலைந்து அதை கண்டுபிடிக்க முடியாமல் தலையை குனிந்து நின்றாள்...
"எனக்கு தெரியாத திலோத்தம்மா உனக்கு இன்னும் 60 நாள்தான் டைம் ... அதுக்குள்ள அந்த மருந்த புதுசா உருவாக்கு இல்ல வேற ஏதாவது ஆராய்ச்சி பண்ணி புது மருந்து உண்டாக்கு.. அப்படி இல்லன்னா உனக்கு இந்த டாக்டர் பட்டம் கிடைக்காது அவ்வளவுதான் சொல்லுவேன்"...என்று விட்டு போய்விட
"ஷட்
"ப்ச் என்னடி உண்மையாவே அப்படி மருந்து இருக்கா என்ன ??"என்ற தோழியை பல்லை கடித்துப் பார்த்த திலோத்தமா
"இருக்குடி ,அந்த மருந்த யூஸ் பண்ணிக்கிட்டு ரெண்டு பேரும் சேர்ந்தாங்கன்னா பொண்ணுக்கு பதிலா ஆம்பளைக்கு பிள்ளை உண்டாகும்..
"ஹான்
"ம்ம் பொம்பளைங்களோட சுமை பாதியா குறையும் ஒரு குழந்தை இவங்கன்னா ஒரு குழந்தை அவருக்குன்னு ஒரு ஐடியாவுல கஷ்டப்பட்டு உருவாக்கின மருந்து...
"உண்மையாவா??
"ம்ம் எல்லாம் ஓகே ஆன சமயத்துல அது காணாம போயிடுச்சுன்னு நானே வருத்தத்துல இருக்கேன் அவளை லூசு போல் பார்த்துக் கொண்டு தோழி போக
"போங்க போங்க, யாருமே என்ன நம்ப வேண்டாம்.. ஆனா , எனக்கு தெரியும் அது 100% வெற்றியான மருந்துன்னு , மறுபடியும் அந்த மருந்த நான் உண்டாக்குவேன் ... இல்லன்னா காணாம போன என் மருந்தை கண்டுபிடிச்சு , இந்த உலகத்தையே நான் திரும்பி பார்க்க வைக்கல, என் பேரு திலோத்தமா இல்ல என்று கண்ணாடியை ஒரு விரலால் தூக்கி விட்டுக்கொண்டு வெளியே வந்தாள் விவகாரமாய் ஒரு தொடக்கத்தை உருவாக்கி வைத்த வித்தகி...
விவகாரமாய் ஒரு காதல் கதை!!
லாஜிக்கே இல்லாம ஒரு கதை.. சிரிச்சு வயிறு வலி வந்தா கம்பெனி பொறுப்பேற்காது ,