வில்லங்கம் 6

Vill6

வில்லங்கம் 6

6 வில்லங்கமாக ஒரு தொடக்கம் !!

யாஷூக்கு நாலாவது மாதம்....ஆபிசில் வயிற்றில் கட்டி என்று கப்சா அடித்து வைத்திருக்கிறான் அதையும் அனைவரும் நம்பி விட்டனர்... அவன் மனதை திறந்து பேச ஒருத்தி உண்டு என்றால் இப்போதைக்கு அது திலோ மட்டும் தான்.. அவன் கொந்தளிக்கும் அத்தனை உணர்வுகளையும் அவளிடம் தான் காட்டுவான், அத்தனைக்கும் பொறுமையாய் பதில் வரும் .. அவன் நல்ல மனநிலையில் இருந்தால்

திலோ வா நாம ரெண்டு பேரும் ஏதாவது படம் பாப்போம் என்று அழைத்து அருகே வைத்துக் கொள்வான்.. மனநிலை மாற்றத்தில் உடல் அவஸ்தையும் ஒன்று ... அதுவும் அவனுக்கு வராது இல்லை .. வரும்பொழுது அமைதியாக தன் அருகே அமர்ந்திருக்கும் திலோவின் விரலை மெல்ல நீவி விட்டு கொண்டு இருப்பான்... திலோ , முதலில் நெளிய...

"நீ பண்ணுன தப்புக்கு உன்னை எல்லாம் திகார் சிறையில போட்டு , உடம்பு முழுக்க குண்டூசி குத்தணும்.. ஐயோ பாவம்னு உன்ன வீட்டுல வச்சிருக்கேன்.. தொட்டா என்னமோ கற்பு போற மாதிரி நெளியுற ..

"இல்லை சார் கூச்சமா இருக்கு வேற ஒன்னும் இல்ல நீங்க பிடிச்சுக்கோங்க என்று அவன் கையை பிடித்து தன் கையோடு கொடுத்து விட , 

குட்டி குட்டி தொடுகை , அணைப்பு அவள் தோளில் சாய்ந்து கிடப்பது மடியில் படுத்துக் கொள்வது என அந்நியோனியம் இன்னும் ஒரு படி கூடித்தான் போனது.. 

ஆபீஸ் கிளம்புறேன் காலையிலேயே சோர்வாக ஆபிஸ் பையை எடுத்துக் கொண்டு யாஷ் வெளியே போக பார்க்க 

ஒரு நிமிஷம் சார் என்று வியர்வை துடைத்துக் கொண்டே திலோ ஓடி வந்து அவன் கையில் ஜூஸ், நீர் பாட்டல் சாப்பாடு கூடையில் சத்தான தானியங்கள் பழங்கள் எல்லாம் கட்டி நீட்டினாள்..

"எப்பவும் நீதான ஆபிஸூக்கு கொண்டு வருவ என்ன இன்னைக்கு என்ன கொண்டு போக சொல்ற

"இல்ல எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை என்று அவள் வெளிய 

"அப்படி பார்த்தா நான் தான் நெளியணும் என்னத்தான் கோமாளியாக்கி வச்சிருக்கியே, என்ன உடம்பு சரியில்ல, நல்லா தானே இருக்க 

"இல்ல மூணு நாள் என்று விரலை மூன்றாக காட்ட

"ஓ என்றவன் யோசனை வந்தவனாக 

"ஆமாம் எனக்கு எப்படித்தான் பிள்ளை உண்டாச்சு அந்த மேட்டர் நீ சொல்லவே மாட்டேங்குற... மாத்திரை போட்டா எப்படி குழந்தை வரும்??" ரொம்ப தாமதமாக கேள்வி வர 

"டேய் மச்சான் லேட்டாயிடுச்சு, வர்றியா இல்லையா என்று கீழே இருந்து அன்புவின் குரலும் பைக் ஹாரனும் அடிக்க

"ப்ச் எல்லாத்தையும் சமாளிச்சுடலாம் போல இருக்கு ஆனா இந்தப் பன்னி பயக்கிட்ட மட்டும் சமாளிக்கவே முடியல ... ஆயிரம் கேள்வி கேட்கிறான் , பேசாம உண்மையை சொல்லிடலாம்னு கூட யோசிக்க வைக்கிறான்.. ஆனா இவன்கிட்ட சொன்னா உலகத்துக்கே சொல்ற மாதிரி , அதனால பல்லை கடிச்சுக்கிட்டு இருக்கேன் .. என்னைக்கு என் பொறுமை போகப்போகுதோ.... திலோ எப்போதும் போல அவன் புலம்பல் பாவமாக பார்த்து கொண்டு நின்றாள் 

நீ ஏன் திருட்டு முழி முழிக்கிற , எனக்கு எப்படி குழந்தை வந்ததுன்னு முழு டீடெயில் நீ சொல்ற... ஈவினிங் வந்து இந்த கேள்விக்கு பதில் வாங்கிக்கிறேன் இப்போ போயிட்டு வரேன்..

ம்ம்"

"மாதுளை பழ ஜூஸ் வச்சுட்டியா

"வச்சிட்டேன் சார்

"என்னன்னே தெரியல ஒரு வாரமா மாங்கா புளியங்கான்னு ஏதாவது புளிப்பா திங்கணும் போல இருக்கு , அப்படியே சாம்பலை பார்த்தா நாக்கு நம நமன்னு வருது, என்ன அறியாமலேயே அதெல்லாம் எடுத்து தின்னுடுவேன்னு கொஞ்சம் பயமா இருக்கு... இது எதுக்கா இருக்கும்?

"இல்ல சார் குழந்தை வளர ஆரம்பிக்குதுல்ல சோ இதெல்லாம் காமனா, பெண்களுக்கு வர்ற சிம்டம்ஸ் தான். பயப்பட ஒன்னும் இல்ல.. 

"நீ ஏம்மா பேச மாட்ட , பிள்ளை பெத்து பாரு அப்போ தெரியும் என்னோட வலியும் வேதனையும்.. நான் பாட்டுக்கு சிவனேன்னு சுத்தினேன்.. உனக்கு பொறுக்கல பொங்க வச்சிட்ட.. இப்ப என் பொழப்பு சிரிப்பா சிரிக்குது .. இன்னும் மீதி மாசத்துக்கு என்ன ஆக போறேனோ , அந்த ஷூவை எடுத்து மாட்டி விட்டு தொலை.. அப்படியே நின்னுட்டு இருக்க எனக்கு குனிய முடியாதுன்னு தெரியாதா என்று கத்தினான்... அவனுக்கு கோவம் , வெறுமை , உவகை எது வந்தாலும் அவளிடம் காட்ட பழகி விட்டான் என்ன செய்தாலும் தாங்கும் சுமை தாங்கி ஆகி போனாள்.... 

மாத்திரை எல்லாம் சரியா போடுறீங்கீளா சார்""

"ம்ம் உன் கண்ணு முன்ன தான போடுறேன் , இன்னும் எதையெல்லாம் பார்க்க போறேனோ என்று முனங்கிக் கொண்டே யாஷ் இறங்கி போக  

"ஸ்ப்பா வெளிய வெயில்ல வெளிய வரணும்னு நினைச்சாவே உதறுதே "என்று பைக்கை நோக்கி நடந்து வந்த நண்பனை மேலிருந்து கீழ் வரை அன்பு பார்க்க... அவனோ மேலிருந்து எட்டி பார்க்கும் திலோவுக்கு கை ஆட்ட , அவளும் தலை அசைத்தாள் ... 

அவனை நேசிக்க எதுவும் தேவையில்லை அவனோடு கடைசி வரை வாழ எதுவும் வேண்டாம் என் குழந்தை பெத்துக்கிறேன் என்றானே அந்த ஒற்றை தகுதியில கன்னி மனது முழுதாக அவன் காலில் சரணாகதி அடைந்து போனது ... சிறுது காலமே என்றாலும் அவளுக்குள் உண்டான காதல் இறுதி வரை அடிமையாக அவன் காலடியில் கிடந்து விட வேண்டும் என்ற நிலைக்கு அவன் குணங்கள் மாற்றி விட்டது 

தவறு செய்த அவளை தண்டிக்க கூட இல்லை பிள்ளைக்காக ஒருவன் இத்தனை இன்னல் தாங்க முடியும் என்றால் காதலுக்கு அவனை விட உலகில் ஒரு உயரியவன் கிடைத்து விடுவானா? காதல் காமம் என்று எதிலும் நாட்டம் இல்லாத பெண் சாமியாருக்கே காதல் வர வைத்து விட்டான்...

என்னடா அப்படி பார்த்துட்டு இருக்க , தன்னை சுற்றி சுற்றி பார்க்கும் அன்புவை சலிப்பாக யாஷ் ஏறிட்டான்..

"மச்சான் வரவர ஆளு அழகா கிட்டே போற கன்னம் எல்லாம் மினுமினு இருக்குடா .. எல்லாருக்கும் கல்யாணம் நின்னா துக்கத்துல உடம்பு குறையும் சொல்லுவாங்க , உனக்கு உடம்பும் போட்டு இருக்கு அழகும் கூடிப்போய் அம்சமா இருக்கடா என்ன மேட்டர் ?? என்று அன்பு பைக்கை கிக் செய்ய .... அவன் பின்னால் பாந்தமாக ஏறி அமர்ந்த யாஷ் 

அப்போ பொம்பள புள்ளையா இருக்கும் என்றதும் அதிர்ந்து அன்பு பின்னால் திரும்பிப் பார்த்து

என்னடா பொம்பள புள்ள?

"ஒன்னும் இல்ல நீ வேகமா போகாத குண்டு குழியில வண்டியை போடாத, ஹாரனை பறக்கவிடாத சத்தம்னா எனக்கு அலர்ஜி... அப்புறம் டிராபிக்ல வேகமா போகாத, மெதுவா போ... எவ்வளவு மெதுவா போனாலும் பரவாயில்லை, அங்க ஆபீஸ்ல நம்ம ரெண்டு பேருக்கும் வெட்டி முறிக்கிற வேல இல்ல .. ஹெச் ஆர் ரெண்டு திட்டு திட்டுவான் வாங்கிக்கலாம்... ஆனா , அவசரம் ஆபத்து மச்சான் .. அதுவரைக்கும் கொஞ்சம் கண்ணை அசந்துக்குறேன் "என்று அன்புவின் முதுகில் யாஷ் படுத்துக்கொள்ள

"என்னடா இப்பல்லாம் இப்படி சோம்பி சோம்பி விழுற வயித்துல கட்டி வந்ததுன்னு சொன்னியே ஒருவேளை அதோட சிம்டம்ஸா இருக்குமோ வேணும்னா பெரிய டாக்டர் யார் கிட்டேயாவது போய் பார்ப்போமாடா.... உன் கூட ஒரு பூ அலையுமே அதை எல்லாம் நம்பாத, அதெல்லாம் கொரோனா பேட்ஜ்ல படிச்சு டாக்டர் ஆனதாக இருக்கும் ,வேற ஏதாவது பெருசா இழுத்து வெச்சிட போகுதுடா

"அதெல்லாம் எதுவும் இல்ல, சாதாரண கட்டி தான் பத்து மாசம் கழிச்சு எடுத்துடலாம்

"இது என்ன பிள்ளையாடா சரியா பத்து மாசம் கழிச்சு வெளியே எடுக்கிறதுக்கு .. கட்டி வந்தா தூக்கி வெளியே போட்டுட்டு போறத விட்டுட்டு , நல்ல நாள் பாத்துக்கிட்டு இருக்க.. டேய் உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன் , என் முதுகுல லேண்டானா என்னடா அர்த்தம்... அவன் முதுகை கட்டிக்கொண்டு தூங்குவதற்கு தயாராகும் யாஷை உலுக்கி அவன் எழுப்ப ,  

"ப்ச் நைட் முழுக்க தூங்கலடா.. தூங்க விடேன் நீ பேசுறது காதுக்குள்ள வண்டு கிர் கிர்ங்கிற மாதிரி இருக்குது

"ஏதே , ராத்திரி முழுக்க தூங்கலையா என்று அன்பு வானத்தை பார்த்துக் கொண்டே

" ஓ அப்போ அதான

"எதானே 

"வீட்டுல அழகான பொண்ணு, பஞ்சும் நெருப்பு பத்திக்கிச்சு ரைட்டா 

"செருப்பு பிஞ்சிடும் , அப்படி எல்லாம் எதுவும் இல்லை..நானே தின்ன சோறு செமிக்கணும் நைட் வாந்தி வந்திட கூடாது, பிள்ளை துடிப்பு இருக்கான்னு பார்த்து பார்த்து ஒவ்வொரு நொடியும் கத்தி மேல நடந்துட்டு இருக்கேன் , இதுல கிளுகிளு சீன் வேற கிழிஞ்ச மாதிரி தான் இருக்கும் 

"என்னடா புலம்புற? 

"ஒன்னும் இல்லை நாக்குல ஜன்னி தானா உளறுது

ப்ச் நீ எதுக்கு ராத்திரி தூங்கல கசமுசா இல்லைன்னா ஏன் தூங்கல, டெல் டெல்

எனக்கு உண்மை தெரிஞ்சாகணும், சொன்னாதான் வண்டியை எடுப்பேன்"

"தெரியலடா தூக்கமே வரல.. பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை யூரின் போய்க்கிட்டே இருக்கு பாத்ரூமுக்கு போக வரன்னு நைட் முழுக்க முடிஞ்சு போச்சு...

"ஏண்டா ஒருவேளை சுகரும் சேர்ந்து வந்திருக்குமோ இருக்குமா... இருக்கும், மச்சான் மட்டமான சரக்கை அடிக்காத தொப்பை வந்திடும் சுகர் வந்திடும்னு சொன்னானுக அப்ப நம்பல .. பட் இப்ப உன்ன பார்த்த பிறகு கன்பார்ம் .. கழுதை பத்து ரூபாய் கூட செலவு ஆனாலும் பரவாயில்லை சரக்குல மட்டும் நோ கலப்படம்... 

" நீ இப்படி தனியா புலம்பிட்டே வண்டியை ஓட்டு, நான் கொஞ்சம் தலைய சாய்ச்சுக்கிறேன்..

"ஏதோ பெரிய வியாதியை இழுத்துட்டானா பழைய துள்ளல் இல்லை ஓட்டம் இல்ல, டேய் வண்டியை எடுத்தா பிரேக்கே பிடிக்க கூடாதுடா, மேடு பள்ளம்னு போட்டு எடுத்து ஜாலியா என்ஜாய் பண்ணனும்னு சொல்றவன்.. வண்டிய ஆமை மாதிரி ஓட்ட வைக்குறான் ..என்னவா இருக்கும்

"டேய் டேய் 

"ஊப்ஸ் என்னடா 

"எதாவது வேணுமா 

"ம்ம் அப்படியே அண்ணாச்சி கடை பக்கமா போயிடு குங்குமப்பூ ஆர்டர் போட்டு இருந்தேன் வாங்க வேண்டியது இருக்கு

"குங்கும பூவா ?அது எதுக்கு?

"அது குடிச்சா குழந்தை வெள்ளையா பிறக்கும் என்று விட்டு நாக்கை கடித்த யாஷ் 

"அதை போட்டு முகத்தை கழுவினா , இப்படி அழகாயிடலாம் உனக்கு பொண்ணு செட் ஆகிடுமு

"ஓ குங்குமப்பூவின் மகிமைதானா நீ அழகா இருக்க காரணம் ... நானும் ஒரு பத்து பாக்கெட் வாங்கி முகத்துக்கு போட போறேன்.... பொண்ண பிடிக்கிறேன் கல்யாண கடல்ல குதிக்கிறேன்... 

போடு போடு எப்படியோ வந்து ஆபிஸிஸ் சேர்ந்தனர் 

ஒரு நாள் ஆபிஸூக்கு திலோ வராதது கை உடைந்தது போல ஆகி போக மதியமே லீவ் எடுத்து கொண்டு வந்து வாசலில் நின்ற அவனை கண்டு திலோ பதறி 

சார் என்னாச்சு எதுவும் ஆகிடுச்சா? அவள் பதட்டம் தன்னை மீறி ரசித்தான்.. 

நத்திங் நீ இல்லாம லோன்லியா பீலா இருக்கு உன்,கூடவே இருக்கணும் போல இருக்கு அதான் வந்துட்டேன் ....

ஓஓஓ யாஷூக்கு அவள் பின்னாலேயே சுற்றி கால் வலி எடுத்திருக்கும்.. இரவு தயங்கி வந்து அவள் மடியில் படுக்க அவள் கைகள் தானாக அவன் முடி வருடிவிட

"என்ன ஆச்சு சார் 

"அம்மாவை பார்க்கணும் போல இருக்குடி, ஆனா அம்மா என்கிட்ட பேச மாட்டேன்னு வெளிய அனுப்பிட்டாங்க ம்ம் சரி விடு எனக்கு வாச்சது அவ்வளவு தான் .. நானே தான் பேசுறேன் நீ ஏன் பேசவே மாட்டைக்குற? 

"உங்கள பார்க்கும் போதெல்லாம் ஒருமாதிரி குற்றவுணர்வா இருக்கு சார் அதான் "

"ப்ச் நடந்ததை மாத்த முடியாதுல்ல, இதுல உன் தப்பு மட்டும் இல்லையே மருந்து மாத்தி யாரோ தந்துட்டாங்க விடு"

அவனுக்கு வேண்டுமானால் நடந்த கூடல் நியாபகம் இல்லாது இருக்கலாம் திலோவுக்கு அவனை அடையாளம் கண்ட பிறகு ஒவ்வொரு நிமிட கூடலும் நியாபகம் வந்து உதட்டை கடிக்க வைக்கிறது கள்ளம் புகுந்த கண்கள் அவனை நிமிர்ந்து பார்க்க தடுமாறியது... கள்ளம் குடியேறிய இதயம் ஒரு பக்கம் குத்தி கிழித்தது.. 

உனக்கு காதல் ஒரு கேடா?? என்று அவளை கேள்வி கேட்க வெட்கி தலைகுனிந்து கொள்கிறாள்... அவள் இதழை கவ்வி கொண்டே யாஷ் மோதிய மோதல் கற்கண்டு சுகம் அன்று தந்ததை என்ன நினைத்தும் மறக்க முடியவில்லை... அவள் வருடலில் அப்படியே அவன் தூங்கி போக, 

திலோ அவனை அசப்பு இல்லாது படுக்கையில் படுக்க வைத்து விட்டு வந்து ஹாலில் படுத்தாள்... 

திலோ திலோ நடுராத்திரி அவன் குரல் கேட்டு ஹாலில் படுத்திருந்த திலோ அடித்து பிடித்து ஓடி வந்து 

"சார் என்னாச்சு ?

"குழந்தை உருண்ட மாதிரி இருக்குல்ல வா தொட்டு பாரு என்று அவள் கையை பிடித்து தன் வயிற்றில் வைக்க 

டொபக் என்று வயிறு ஏறி இறங்க இருவரும் புல்லரித்து போய் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்...

ம்ம் 

நான் உன் அப்பாடா செல்லம் என்று குழந்தைக்கு அவன் கற்று கொடுக்க 

அவள் தொண்டை ஏறி இறங்க ஆசையாக அவனை பார்க்க 

இது உன் அம்மா என்று யாஷ் அவள் கையை பிடித்து துடித்த இடத்தில் கொடுக்க ...

இருவருக்கும் உலகை வென்ற மகிழ்ச்சி!!