வில்லங்கம் 9
Vill9

9 வில்லங்கமாக ஒரு தொடக்கம் !!
யோசிச்சு பார்த்தேன் யாஷ், நடந்த இந்த விஷயத்துல எல்லார விட அதிகமா பாதிக்கப்பட்டிருக்கிறது நீதான் ... ஒரு ஆம்பளையா எப்படி இதையெல்லாம் நீ பொறுத்து போறன்னு எனக்கு சத்தியமா தெரியல... உன்ன பார்த்தா பாவமா இருக்கு அதே சமயம் வியப்பா இருக்கு யூ ஆர் கிரேட் ... ஆனா உனக்கு அவ தகுதி இல்லை
"வாட்ஊஊ??
"ம்ம அவளுக்கு உன் மேல இருக்கிறது, லவ் இல்ல தப்பு பண்ணிட்டோங்கிற பீல்..அது எப்ப வேணாலும் போக வாய்ப்பு இருக்கு ... அதோட உனக்கு அவ மேல இருக்கிறது காதல் இல்லை, எனக்கு இந்த நிலைமையில் துணையா இருக்காளேங்குற ஒரு பரிவு இது ரெண்டுமே காதல் கிடையாது...
"என்ன நேரம் பார்த்து விளையாடுறியா புவி
"விளையாடல உன் வாழ்க்கை விளையாட்டா ஆகிட கூடாது என்பதற்காக சொல்றேன், சாதாரண விஷயத்தில் கூட அவளால உனக்கு உண்மையா இருக்க முடியல எப்படி லைப் லாங் உண்மையா இருப்பான்னு நீ நினைக்கிற , உன்ன என்கிட்ட விட்டு கொடுத்துட்டு போறா, இதுல எங்க காதல் இருக்கு சொல்லு ..
"இப்போ எதுக்கு மாத்தி பேசிக்கிட்டு இருக்க
மாத்தி பேசல, இப்பதான் சரியா பேசுறேன்
ம்ம் , இந்த மாதிரி சூழ்நிலையில் உன்னை விட்டு இருக்க கூடாதுன்னு எனக்கு இப்போ கில்டியா இருக்கு யாஷ்.. உன் கூடவே அவ இருந்த இடத்துல நான் இருந்திருக்கணும்.. அப்பா அம்மான்னு எல்லாரும் சொல்றத கேட்டு, நான் உன்ன இக்கட்டான நிலையில விட்டுட்டு போயிட்டேனோன்னு எனக்கே ஒரு மாதிரி ஷைய்யா பீல் ஆகுது ... அத சரி பண்ணிக்கணும்னு நினைக்கிறேன்"
சோ வாட்
இந்த குழந்தை பெத்து முடிச்சதும் நம்ம ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது.. அதுவரைக்கும் நான் உன்னை பார்த்துக்கிறேன் யாஷ்.. இதுவரைக்கும் ஊருக்கு தெரியாத விஷயம் எப்போதுமே ஊருக்கு தெரியாமலேயே மாத்திடலாம் ... எட்டாவது மாசம் சிசேரியன் நானே பண்ணிடறேன்... குழந்தை பிறந்ததும் அதை என்கிட்ட கொடுத்துடுங்க, கொண்டு போயிடுறேன்னு அவளே சொன்ன பிறகு உனக்கு எந்த பிராப்ளமும் இல்லை .. அந்த குழந்தை பிறந்ததும் அவளே அதை தூக்கிட்டு போறது எல்லாம் நமக்கு நல்லதுதான்.. உனக்கு அதுக்கு பிறகு பிரச்சனையே இல்ல நம்ம லைஃப்க்கும் எந்த பிரச்னையும் இருக்காது... அவ அப்படியே போயிடுவா தேவைப்பட்டா, குழந்தையை நீ அப்பப்போ போய் பாத்துட்டு வரலாம் அதுக்கு நான் உனக்கு முழு அனுமதி தரேன் ...
என்ன திடீர்னு இப்படி ஒரு முடிவு
யோசித்து பார்த்தேன் , உன்னை மாதிரி ஒரு பெட்டர் பார்ட்னர் எனக்கு கிடைக்கவே மாட்டான்... சின்ன சின்ன குறைகளுக்காக உன்னை நான் விட்டுக் கொடுக்கணுமா?? என்ன சொல்ற யாஷ் என்ற புவனாவை விரக்தியாக பார்த்து சிரித்த யாஷ்
"நீ ரொம்ப கஷ்டப்பட்டு எனக்கு வாழ்க்கை எல்லாம் தர வேண்டாம் .. அதோட என் குழந்தையை போய் பார்க்கிறதுக்கு அனுமதி தர நீ யாருடி .. அதோட என் குழந்தையை தூக்கிட்டு போக அவ யாரு ? உங்க ரெண்டு பேருக்கும் என்ன பாத்தா என்ன கேனக்கூவ மாதிரி இருக்கா... ஆளாளுக்கு ஒவ்வொரு தினுசா முடிவெடுக்குறீங்க .. குழந்தையை தூக்கி கொடுக்கிறதுக்காகவா நான் இவ்வளவு கஷ்டப்பட்டு குழந்தையை சுமந்துகிட்டு இருக்கேன்... நான் இவங்க ரெண்டு பேரும் சொல்றதுக்கு தலையாட்டி கிட்டு ஆமா சாமி ஆமா சாமின்னு போடணுமா நல்லாருக்கே கதை...
யாஷ் "
அப்பறம் என்ன சொன்ன என்ன மாதிரி பெட்டர் பார்ட்னர் உனக்கு கிடைக்காதா? எங்க ரெண்டு பேருக்குள்ளேயும் இருக்கிற இந்த உணர்வு, நேசம் இது எல்லாம் உன் கூட உன்கிட்ட சத்தியமா எனக்கு கிடைக்காது.. ஒரு தோழியா கடைசி வரைக்கும் நீ என் கூட இருக்கலாமே தவிர... ஒரு மனைவியா காதலியா அவள தவிர வேற யாரையும் இந்த இடத்தில் இனிமே என்னால வைக்க முடியாது .. காரணம் அவ கூட பிசிக்கலி நான் இணைஞ்சதுக்காக இல்ல... மென்டலி நான் அவ கூட இணைஞ்சுட்டேன் என்னோட ஆத்மா முழுக்க அவ நெறைஞ்சு போயிட்டா , என்ன செஞ்சு மயக்கினாளோ தெரியாது ஆனா மயங்கிட்டேன்.. அது உண்மை அதுக்காக உன்னை நான் குறையும் சொல்ல போறது இல்ல... நீயும் எனக்கு நிறைய உதவி செய்ற, இன்னமும் செய்வ உன் இடம் இங்க அவ இடம் இங்க....என்று நெஞ்சை தொட்டு காட்டினான்..
யாஷ் நீ யோசிச்சு முடிவு எடு, அவள நம்பாத எனக்கு என்னவோ அவ ப்ளே பண்றாளோன்னு தோணுது
"அவ நல்லவளா கெட்டவளா அன்பானவளா என்னை நல்லா பாத்துப்பாளா, இல்ல ஆதாயத்துக்காக என் கூட பழகுறளான்னு தெரியாது .. ஆனா இதையெல்லாம் தாண்டி அவ எப்படி இருந்தாலும் எனக்கானவன்னு நான் முடிவெடுத்துட்டேன், முடிவு எடுத்துட்டு தான் உன்கிட்ட சொல்றேன் யோசிக்க வேண்டிய தேவையில்லை ... குழந்தை எப்படி இருக்கு என்று யாஷ் பைலை பிரட்டி பார்த்தான்..
"நல்லா இருக்கு எட்டு மாசம் ஆனதும் சிசேரியன் பண்ணிடலாம்..
"நீ போட்டு வாங்கினேன்னு தெரியும்... அந்த லூசு அதையும் உண்மைன்னு விட்டுட்டு போறா,,அவ பல்லை தட்டி கூடவே வச்சிப்பேன்"
"ஹாஹா கண்டுபிடிச்சிட்ட போல வாழ்க்கையையே தூக்கி கொடுத்துட்டு போறா அந்த அளவு உன் மேல லவ் போல ..
"மே பி
"என்ன பண்ண போற ?
ம்ம் அவ எங்கேயாவது நின்னு கண்ணை கசக்கிக்கிட்டு இருப்பா போய் பிக்கப் பண்ணிக்கிறேன் ....
ம்ம் என்றவள் உதட்டில் நிம்மதி சிரிப்பு
"என்ன விட அவதான் உனக்கு பெஸ்ட் சாய்ஸ்
அவளுக்காக நீ உருகுறதும் .. உனக்காக அவ மருகுறதும் நல்லாதான் இருக்கு...
"அது அவளுக்கு தெரியணுமே
"நீ சொல்லணும்ல , சொன்னா தான்டா தெரியும் போய் முதல்ல லவ்வை சொல்லு
ம்க்கும் சொல்லிட்டாலும், என்று சலித்து கொண்டு யாஷ் வெளியே வந்தான்
"அண்ணா என் மிஸஸ் இங்க பக்கத்துல ஏதாவது பஸ் ஸ்டாப்ல இருப்பா கொஞ்சம் அங்க வண்டியை நிறுத்துங்க என்று ஆட்டோவில் ஏறி கொண்டான்
சார் அதான உங்க வொய்ப் என்று ஆட்டோ டிரைவர் கைகாட்ட சீட்டில் சாய்ந்து இருந்த யாஷ் ஆசையாக கண்களை திறந்து கூட்டம் நடுவே அவளை தேட.. இருக்கையில் அமர்ந்து கண்ணீரை துடைத்து துடைத்து அழுது கொண்டிருந்தாள் திலோத்தம்மா..
அண்ணா கொஞ்சம் அவளை கூட்டிட்டு வர்றீங்களா?
சரி தம்பி என்று இறங்கி போனவர்
"பாப்பா உங்க புருசன் ஆட்டோவுல இருக்கார் கூப்பிடுறார் என்றதும் அவள் யோசனையாக ஆட்டோவை பார்க்க யாஷ் அங்கிருந்து அவளை பார்த்து கொண்டிருந்தான்... ஓட்டமும் நடையுமாக திலோத்தம்மா ஓடி வந்து
"சார் கூப்பிட்டீங்களா?
ம்ம் வந்து ஆட்டோவுல ஏறு
""சார் அது
"நம்ம குடும்ப சண்டையை கடை பரப்ப போறியா, இல்லை வீட்டுல போய் பேசிக்கலாமா... என்றதும் திலோ வேகமாக ஆட்டோவில் போய் ஏறி அமர அவள் தோளில் சாய்ந்து கொண்ட யாஷ்.....
"அண்ணா எங்க வீட்டுக்கு போங்க ...
"சரி தம்பி அவள் வாயை திறக்காது அமைதியா உட்கார்ந்திருக்க... அவள் தோளிலேயே சாய்ந்து உறங்கி விட்டான்
"சார் சார் வீடு வந்துடுச்சு என்று அவனை மெலிதாக திலோ எழுப்ப
"ம்ம் ஆட்டோவுக்கு காசு கொடுத்துட்டு வா என்று அமைதியாக போகும் யாஷ் என்ன சொல்வானோ என பயந்து கொண்டே அவன் பின்னே போனாள் ....
கதவை திறந்து உள்ளே போனவள் அவனை தேட படுக்கையில் படுத்து கிடந்தான்
"சார் எதுவும் பண்ணுதா ஒரு மாதிரி இருக்கீங்களே தப்பு எல்லாம் என் பேர்ல தான் .. என்ன எது வேணாலும் பண்ணுங்க இப்படி அமைதியா இருக்காதீங்க எனக்கு பயமா இருக்கு" என்று அவன் அருகே போய் குத்த வைத்து திலோ உட்கார
"உண்மையாவே அன்னைக்கு உனக்கும் எனக்கும் நடந்தது உனக்கு நியாபகம் இல்லையா
"எது
"அதான் மேக்கிங்...
"ம்ஹூம்
"சத்தியமா
"லைட் லைட்டா தான் நியாபகம் இருக்கு வேற எதுவும் நியாபகம் இல்லை
"ம்ம் எனக்கும் என்று ஒற்றை கையை தலைக்கு கொடுத்து அவளை நோக்கி திரும்பி படுத்த யாஷ்
"நாம ஏன் அதை மறுபடி டிரை பண்ணி பார்க்க கூடாது
"ஏதை சார்
"ப்ச் அதான்டி அது ப்ச் இங்க வா என்று அவள் காதில்
"அன்னைக்கு சுயநினைவு இல்லாம நடந்ததை ஏன் இப்ப சுயநினைவோட ட்ரை பண்ண கூடாது
"சார் என்று அவள் அதிர்ந்து பார்க்க
"நான் முடிவு பண்ணிட்டேன் ஐ நீட் யூ...
"சார் நோ
"நேத்து ஒரு ஆர்டிக்கல் படிச்சேன், நம்மோட ஃபேர்க்கு ஓகேன்னா எத்தனை மாசம் வரைன்னாலும் பண்ணாலாமே எனக்கு டபுள் ஓகே உனக்கு என்று குறும்பாக கண்ணை சிமிட்ட அவளோ எச்சில் விழுங்கி யாஷை பார்க்க
நீ செஞ்ச தப்பை மன்னிக்கிறேன் ..அதுக்கு நீ லைப் லாங்க் என் குழந்தைக்கு மம்மியா மாறிடு தட்ஸ் இட் ... குழந்தையை நான் சுமக்கிறது போல தாலியை எனக்கு நீ கட்டுறியா , இல்லை உனக்கு நான் கட்டணுமான்னு மட்டும் யோசி இப்ப நைட்டுக்கு எனக்கு கடலை கறி இடியாப்பம் வேணும்.. வாயை பிளந்துட்டு இருக்காம போய் செய் என்று அவள் பிளந்த உதட்டில் பச்சக் முத்தம் வைத்து விட அவள்தான் அதிர்ந்த சிலையாக அல்லவா இருக்கிறாள்....
ஓஓஓ அது என்ன நைட் வரை இப்பவே ட்ரை பண்ணுவோம்ங்கிறியா அப்போ ஓகே என்று யாஷ் எழும்ப போக திலோ அடித்து புரண்டு கிச்சன் உள்ளே ஓடி போய் பெருமூச்சு விட்டாள் ...
அவளை அவன் கேலி சிரிப்பு இனி உன்ன விட மாட்டேன் என்று துரத்தியது..