வில்லங்கமாக ஒரு தொடக்கம்-12

வில்லங்கமாக ஒரு தொடக்கம்-12

12 வில்லங்கமாக ஒரு தொடக்கம் !!

சில கூடல் நிறைய பேச்சு அனுசரணை என்று அவன் மனநிலை மாற்றம் எல்லாம் புரிந்து வைத்து செயல்பட ஆரம்பித்தாள்.. 

எப்போ கோவம் வரும் எப்ப எரிச்சலில் கத்துவான் என்று அவனுக்கே தெரியாது.. ஆனால் அவள் அறிவாள் .. இன்று என்ன நடந்ததோ ஆபிஸில் இருந்து வந்ததும் அவளை பிடித்து கத்த ஆரம்பித்து விட்டான்

"வெளியே போ உன்னாலதான் எல்லாம் என்று திட்டி தீர்க்க் திலோ சில மணிநேரம் அவன் கண்ணை விட்டு காணாது போனால் அமைதியாகி விடுவான் தெரியும் ... இது எப்போதும் நடக்கும் கூத்துதான் ஆனால் கொஞச நேரத்தில், அவளை தேடி பூனைக்குட்டி போல வருவான் ... அப்பார்ட்மெண்ட் பார்க்கில் அமைதியாக உக்காந்து இருப்பாள் இவனுக்கு உருகி போகும் ..இன்றும் சிறுது நேரத்தில் வந்து விட்டான் 

"ப்ச் சாரி வா

"என்னாச்சு யாஷ்

"வேலையை விட்டுட்டேனா அந்த டென்சன் வேற சேர்ந்துடுச்சு அதான் கோபத்தை உன் மேல காட்டிட்டேன் என்று அவள் மடியில் படுக்க 

:ஏன் என்னாச்சு "

"எல்லாரும் கிண்டல் பண்றாங்க ஒரு மாதிரி பார்க்கிறாங்க அதோட எட்டாவது மாசம் ஆகிடுச்சா முடியலடி சிக் லீவ் கேட்டேன்.. தர மாட்டேன்னுட்டான் .. போடா நீயும் உன் வேலையும்னு எழுதி கொடுத்துட்டு வந்துட்டேன் கையில செலவுக்கு காசு இருக்கு... ஆனா நாள் நெருங்க நெருங்க டென்சனாகுதுடி ..

"இப்படிதான் இருக்கும் ஒன்னும் இல்லை என்று அவன் தலையை மசாஜ் பண்ணி விட ஆரம்பிக்க 

"ஆமா நீ ஏன் அமைதியா டல்லா இருக்க 

"ஒன்னும் இல்லையே 

"இல்லயே நான் திட்டினாலும் இப்படி வாட்டமா இருக்க மாட்டியே என்னாச்சு 

"நிஜமா ஒன்னும் இல்லை ... வாங்க குளிர் அடிக்குது குழந்தைக்கு ஆகாது என்று அவனை அழைத்து வந்து படுக்க வைத்தாள் ..

"ரொம்ப டென்சனாக இருக்கு 

ஓஹோ என்று மெலிதாக சிரித்தாள் 

"ம்ம் ரொம்ப டென்சனா இருக்கு என்று அவள் கை பிடித்து அழுத்தம் குறைக்க சொல்ல .. செல்லமாக அடித்த திலோ 

"வேணும்னு கேட்டா தர போறேன் அதுக்கு டென்சன் ஆகணுமா யாஷ் 

"தீடீர் தீடீர்னு ஆசை வருது என்ன செய்ய பதமாக இதழில் வைத்து கவ்வி வரையும் ஓவியபாவை கண்டு கண் சொக்கியவனுக்கு உண்டான தலைவலி டென்சன் அப்படியே காற்றில் பறந்து போவதை உணர்ந்தான்.. 

உனக்கும் டென்சனா இருக்குல்ல வா நான் டென்சன் குறைக்கிறேன்..

ம்ஹூம் வேண்டாம் என்று அவள் பதறி ஓட போக இழுத்து தன் அருகே போட்ட யாஷ் முகம் அவள் குட்டி இடை தாண்டி போய்விட 

"வேணுமா வேண்டாமா என்று பேரம் பேசிய அவனிடம் வேண்டும் என்று எப்படி கூற

"வேண்டாம்னா போ" என்றவன் தலையை அவள் வேண்டும் என்பது போல தடவி சிரித்து கொண்டே அவள் அழகில் சிறை போனான் 

ஸ்ஆஆஆஆஆஆஆ காமம் இருவருக்கும் இடையே உணர்வு பிரதிபலிப்பாக மட்டுமே இருக்கும் .... ஆர்ப்பாட்டம் அவசரம் இல்லாது தான் இதுவரை கூடல்கள் நடந்திருக்கிறது.. அவனுக்கும் ஆவேசமாக ஒரு ஆசை கூடல் பண்ண ஆசை, அவளுக்கும் அவன் மொத்த வேகம் பார்க்க ஆசை 

அறுபது நாள்தான்டி அது முடிஞ்ச பிறகு நீ தாங்க மாட்ட மாமா அதிரடியை" என்று வியர்த்த மனைவியை கட்டி கொண்ட யாஷ் கூற 

நானும் காத்திருக்கேன் என்று கண்ணை சிமிட்டினாள் .... 

காலையிலேயே எங்க கிளம்புற திலோ 

"சின்ன வேலை இருக்கு முடிச்சிட்டு வர்றேன் யாஷ் , சாப்பாடு இருக்கு சாப்பிடுங்க நடக்கும் போது பார்த்து நடங்க , சரிஞ்சு படுங்க மல்லாக்க படுககாதீங்க ஆயிரம் சொல்லிவிட்டு அவள் கிளம்ப கதவில் சாய்ந்து நின்று போகும் அவளை ரசித்து கொண்டிருந்த யாஷ் பெருமூச்சு விட்டு சிரித்தான்... 

"என்னடி சொல்ற தீசிஸ் சமிட் பண்ணலையா இன்னைக்கு லாஸ்ட் டேட் தெரியும் தான எதுவும் கொண்டு வரலன்னு சொல்ற ... திலோவின் தோழி அவளை யோசனையாக பார்க்க 

"சமிட் பண்ண போறது இல்லை 

:ஏன் , இவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சு உன்னால அதுக்கான அங்கீகாரத்தை வாங்க முடியலயா... இன்று பைனல் தீசிஸ் யாஷூக்கு தெரியாது காலேஜ் வந்து உட்கார்ந்திருந்தாள்..

"யாஷ்கிட்ட சொன்னா கண்டிப்பா இங்க வருவாரு தானே ...

"ப்ச் அதைவிட என் காதலுக்கு நான் செய்ற துரோகம் வேற எதுவும் இல்லடி ... அவரை காட்சி பொருள் ஆக்கிதான், நான் டாக்டர் ன்னு முன்னாடி போட்டுக்கணும்னா , அப்படி ஒரு பட்டமே எனக்கு தேவையில்லை...

"சாரை லவ் பண்றியா

"ம்ம் ... கல்யாணமே பண்ணிட்டேன்

ஏதே 

ம்ம் தாலியை தூக்கி காட்ட 

"அம்மாடி ஆனாலும் உன்ன போல எவளாலும் இருக்க முடியாது எப்படியோ நல்லா இருந்தா சரிதான் .. பின்ன என்ன சார்கிட்ட உன் நிலமை சொல்லலாம்ல, ஒருவேளை சார் இதுக்கு ஓகே சொன்னா நல்லது தான் .. 

" நிச்சயமா அவர் எனக்காக உடனே ஓகே சொல்வார், யாருன்னே தெரியாத எனக்காக நான் செஞ்ச தப்புக்காக குழந்தையை பெற்றெடுக்கிற அவர்... இப்போ நான் அவர் காதலி , மனைவி நான் ஒரு வார்த்தை சொன்னா மாட்டேன்னு மறுக்க மாட்டார் .. எனக்காக அத்தனை பேர் முன்னாலையும் கல்லடி வாங்கவும் சொல்லடி வாங்கவும் அவர் தயாரா இருப்பார் ... ஆனா, அவரை அசிங்கப்படுத்தி கான்ட்ரவசியாக்கி, நான் இந்த ப்ராஜெக்ட்டை முடிக்க விரும்பல ... எனக்கு அதுல துளியும் விருப்பமில்லை

என்னடி இப்படி சொல்ற இது உன்னோட வாழ்க்கையோட மிகப்பெரிய சாதனை.... நீ தப்பான முடிவு எடுக்கிறியோன்னு யோசிக்கிறேன் திலோ 

"தப்பான முடிவு எடுத்ததாலதான் ஒரு நல்ல கணவர் காதலர் எனக்கு கிடைச்சிருக்கார்.. ஆனா இனிமே அந்த வாழ்க்கையை என்னால இழக்க முடியாது... அவர கஷ்டப்படுத்தி நான் சந்தோஷப்படுறது மிகப்பெரிய தப்புன்னு எனக்கு தோணுது.. சோ நான் அந்த மருந்து கண்டுபிடிக்கல , என்னால கரெக்டான நேரத்துக்கு ப்ராஜெக்ட் சப்மிட் பண்ண முடியலன்னு சொல்லிட்டு போகிறதுக்காக தான் நான் இங்க வந்து இருக்கேன் "

"என்னவோடி நீ லூசுத்தனமா பண்ணும் போதெல்லாம் எனக்கு உன் மேல கோபம் வரல ஆனா இப்ப நீ பேசுறதை பார்த்தா, எனக்கு கோபம் தான் வருது.. இவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு கண்டுபிடிச்சுட்டு அதை குப்பையில தூக்கி போட்டுட்டு போற மாதிரி எனக்கு பீல் ஆகுது..

"சில சமயம் வைரமே கிடைச்சாலும் அதை குப்பையில போட்டுட்டு போனா தான் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்டி.. எனக்கு அவரோட நிம்மதி சந்தோஷம்தான் முக்கியம்... வேற எதுவும் எனக்கு தேவையில்லை,  

திலோத்தம்மா உன்ன சார் கூப்பிட்டு விட்டார் சீக்கிரம் வா என்ற அழைப்புக்கு பெருமூச்சு விட்டவள் ... பைனல் தீசிஸ் கலந்துரையாடல் நடக்கும் அரங்கத்திற்கு உள்ளே செல்ல ...

மேடையில் முதுகு காட்டி இருந்த உருவத்தை பார்த்து அப்படியே திகைத்துப் போய் வாசலில் நெஞ்சை பிடித்துக் கொண்டு நின்று விட்டாள்..

ஆம் யாஷ் மேடை மீது இருக்கையில் உட்கார்ந்திருந்தான் 

அய்யோ இவரா?? என்று அவள் சர்வமும் அடங்கி போய் நின்றாள் 

அனைவரும் கரகோஷம் செலுத்தி அவளை வரவேற்க.. அவளுக்கு அது எல்லாம் மரண ஓலம் போல கேட்டது .. போச்சே போச்சே இனி என்ன நடக்கும் என்ற கேள்வி மட்டுமே மண்டைக்குள் ஓடியது .. 

"எங்க காலேஜ்ல இருந்து இப்படி ஒரு சாதனையாளர் மருத்துவ ஆராய்ச்சியாளர் வருவாங்கன்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை திலோத்தம்மா.. நீங்க சொல்லும்போது விளையாட்டா இருந்தது போல இருந்தது ... ஆனா இதோ இவரை சாட்சியோட நீங்க கொண்டு வந்து நிறுத்திட்டீங்க... உங்கள நாங்க எப்படி புகழன்னே தெரியல திலோத்தம்மா என்ற பேராசிரியரை விரத்தியாக பார்த்தவள் பார்வை காட்சி பொருளாக மேடையில் உட்கார்ந்திருந்த யாஷை வெறித்துப் பார்த்தது...

வா என்று யாஷ் அவளை அழைக்க .. அடுத்த நிமிடம் ஓடிப்போய் அவன் தலையை தன் வயிற்றில் புதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தவள்

"ஏன் இதையெல்லாம் பண்றீங்க, நானே தப்பு பண்ணிட்டேன்னு நிமிஷத்துக்கு நிமிஷம் குற்ற உணர்ச்சியில செத்துட்டு இருக்கேன் மொத்தமா சாகடிக்கிறதுக்காகவே இப்படி எல்லாம் பண்றீங்களா.... 

"ப்ச் என்னடி இது 

"ப்ளீஸ் போயிடுங்க " என்று அவனுக்கு மட்டும் கேட்க அவள் அழ ..

"போனா உன் கனவு நிறைவேறாதே திலோ 

"என் கனவு நிறைவேற உங்க பலி கொடுக்க நான் தயார் இல்லை 

"என் குழந்தைக்காக இந்த உலகத்தை எதிர்க்க தயாராகி தான் குழந்தையை சுமந்தேன்.. என் காதலுக்காக உன்னோட கனவுகளை நினைவாக்கி, நான் உன்னுடைய நல்ல கணவன்னு காட்ட வேண்டாமா ?

அதுக்காக பாருங்க எல்லாரும் உங்களை வேடிக்கையாக கேலியா பாக்குறாங்க .. வேண்டாம் போயிடலாம்... நான் ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன்"

"ப்ச் பரவால்லடி, எத்தனை நாளைக்கு இதை மறைச்சு வைக்க போறேன், 

"ஆயுசு முழுக்க நான் இதை மறைச்சு வைக்க தயார் தயவு செய்து வாங்க சார் போயிடலாம்" என்று அவனை எழுப்ப முயற்சி செய்ய .. அவனோ மாட்டேன் என்று மறுப்பாக தலையாட்டி விட்டு

"அவங்களோட ஆராய்ச்சியின் விடை இதோ நானும் என் வயித்துல வளர்ற குழந்தையும் ... ஒரு ஆராய்ச்சியோட முடிவு அதனுடைய விடையில தான் இருக்கு.. இதோ அவ செஞ்ச ஆராய்ச்சி என்னோட வயித்துல குழந்தையா இருக்கு, இத விட அவ செஞ்ச ஆராய்ச்சிக்கு ஏதாவது உங்களுக்கு ப்ரூப் வேணுமா இது என்னோட ஸ்கேன் ரிப்போர்ட் , இப்போ எட்டு மாசம்.. மத்த டீடெயில்ஸ் உங்க டாக்டர் மேடம் கிட்டேயே கேட்டுக்கோங்க என்று அத்தனை அறிக்கையையும் மேலே வைத்தவன் .. தடுமாறி எழும்ப .. அவனை கை பிடித்து தூக்கிக் கொண்டவள் கண்ணீர் அவன் கையில் சொட்டு சொட்டாக விழுந்தது 

நம்ம காதலுக்காக மானம் மரியாதை கூட இழக்க தயார்... ஆனா நீ எனக்கு ஒன்னே ஒன்னு தான் செய்யணும்.. கடைசி வரைக்கும் என் காதலியா என் மனைவியா என் குழந்தைக்கு தாயாக என் கூட இருக்கணும் அவ்வளவுதான்... வீட்டுக்கு போறேன் சீக்கிரம் வா என்று விட்டு போகும் அவனை மனிதன் என்று சொல்லவா தெய்வம் என்று சொல்லவா இல்லை தெய்வத்தை விட உயர்ந்தவன் என்று சொல்லவா தெரியவில்லை ஆனால் அவன் உயர்ந்தவன் தான் உலகில் படைக்கப்பட்ட அத்தனை பேரிலும் அவன் ஒரு படி மேல்தான் என்று நிரூபித்து விட்டு போனான்..

"சிறிது நேரத்தில் எல்லாம் இந்த செய்தி காட்டுத்தீ போல இந்திய தொலைக்காட்சிகள் அத்தனையிலும் , இந்த விஷயத்தை அவன் படத்தோடு போட்டு விவாத பொருளாக்கிவிட...

இதற்கு தானே அவள் வேண்டாம் என்ற தலைதலையாக அடித்தாள்... வீட்டிற்கு வந்து சேரும் முன்பு அவனை பற்றி , அவள் கேட்ட பேச்சுகளை அவளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.. எப்படி அவன் இதை தாங்கிக் கொள்ளப் போகிறான் என்று கதவை திறந்து கொண்டு உள்ளே போக 

சோபாவில் தொலைக்காட்சியில் ஓடும் காட்சிகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் யாஷ்..

நாக்கு தரம் பிரித்து பேசத் தெரியாதது, கண்டபடி பேசுமே.. நாலு பேர் நல்லவிதமாக பேசினால், நாலு பேர் அருவருப்பாக தான் பேசினார்கள்...

இதுக்குத்தான் சொன்னேன் யாஷ் வேண்டான்னு ஏன் இப்படி பண்ணிட்டீங்க ..

"அடடே வாங்க டாக்டர் அம்மா எப்ப வந்தீங்க என்று டிவியை ஆஃப் பண்ணிவிட்டு அவன் நார்மலாக எழும்பி அமர்ந்தான் 

"யாஷ் 

"ப்ச் அதை விடு , ஏதாவது சாப்பாடு செஞ்சு தரியா பசிக்குது உடம்பு என்னவோ மாதிரி பண்ணுது நெஞ்சுக்குள்ள முட்டிக்கிட்டு நின்ன மாதிரி இருக்கு அவளைப் பேச விடாது கிச்சன் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான்..

அவளும் வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு அவன் பசியை பார்க்க சாப்பாட்டை தயார் செய்ய ஆரம்பிக்க..

"ரசம் போதுமா வேற ஏதாவது பண்ணித்தரவா

"போதும்னு நினைக்கிறேன் ஏதோ ஒரு மாதிரி தலை சுத்துற மாதிரி இருக்குது, 

"ஹாஸ்பிட்டல் வரைக்கும் போயிட்டு வந்துருவோமா யாஷ் 

"இல்ல அம்மாவ பாக்கணும் போல இருக்கு கூட்டிட்டு வர்றியா சரி என்று அடுத்த நிமிடம் அவனை சாப்பிட சொல்லிவிட்டு தன் மாமியாரை தேடி ஓடினாள்

"நல்ல வேளையாக லெட்சுமி காய்கறியை பேதம் பேசிக்கொண்டு அப்பார்ட்மெண்ட் வாசலில் நின்று கொண்டிருக்க... 

"அத்தை அவர் உங்களை பாக்கணும்னு சொல்றார்

இன்னைக்கு ஃபுல்லா என் மகன் மூஞ்சி தான் "

அத்தனை டிவிலேயும் எனக்கு எப்படி பெருமையா இருக்கு தெரியுமா.. 

"உங்களுக்கு வருத்தமா இல்லையா அத்தை 

"எனக்கு ஏன் வருத்தமா இருக்க போகுது அவன் கொலை செஞ்சானா, கற்பழிச்சானா இல்ல அடுத்தவன் பொருளை ஆட்டைய போட்டானா .. நல்ல விஷயம் தான பண்ணியிருக்கான். மருத்துவ உலகத்துல அவன் பெயர் கடைசி வரைக்கும் நிலைத்திருக்கும் இல்ல... அவனும் ஒரு சாதனையாளர்தானே .. இதுல என்ன வெட்கப்பட இருக்குது... மாமா தான் முகத்தை தூக்கி வச்சுக்கிட்டே இருக்கார்.. மகன் மேல கோபம் இல்லை.. ஆனா, உன் மேல செம கோபம் அவர் முன்னாடி மட்டும் வந்துடாத சரியா..

"ம்ம் 

"நான் ஏதாவது மாமா கிட்ட சொல்லி சமாளிச்சுட்டு வரேன் அதற்குள் யாஷியிடமிருந்து ஃபோன் வந்துவிட்டது..

"எனக்கு என்னவோ செய்யுது திலோ சீக்கிரம் வாயேன் என்று அவன் பரிதவிப்பான குரலில் அடுத்த நிமிடம் அவன் அருகே நின்றாள் ..வியர்த்து நின்ற அவனை அதற்கு மேல் இங்கே வைத்திருப்பது ஆபத்து என்று உடனே மருத்துவமனையில் சேர்த்து விட்டாள் 

இப்படி அரிய காட்சிகள் எல்லாம் கிடைக்கும் ஒரே இடம் சுஜாவின் கதைகள் மட்டுமே ...