நினைத்தாலே இனிக்கும் அழகியே-24

நினைத்தாலே இனிக்கும் அழகியே-24

அத்தியாயம்-24

வெண்பாவோ இப்போது இருப்பது ஜிபியின் பிடியில்.

அவன் முன் பயந்து அமர்ந்திருந்தவளிடம்" என்ன அப்படி பாக்குற,உங்க அண்ணன் அறிமுகப்படுத்தி வைத்த ஜிபி சந்தோஷ் வேற...நீ இப்போ பார்க்குற ஜிபி வேற, இதுதான் ஒரிஜினல்.

உங்க அண்ணன் ஒரு ஒரிஜினல் பீஸ் தெரியுமா.நான் சொன்னேனு உன்னையவே அந்த கே.என் கிட்ட மாட்டிவிட்டான்பாரு சாட்சினு,அங்க நிக்குறான் உங்கண்ணன்.

ஏன் தெரியுமா உன்னைய அவனுக்கு எதிரா திருப்பினேன்.அவனுக்கு உன்மேல ஒரு இது வந்துச்சுனு கேள்விப்பட்டேன்.

அதை கட் பண்றதுக்கு இதுதான் பெஸ்ட் ஐடியாவா இருந்தது பயன்படுத்திட்டேன் அவ்வளவுதான் என்றதும்.

வெண்பாவிற்கோ ஒன்றுமே புரியவில்லை என்ன நடக்குது,இவன் என்ன சொல்றான் என கண்களை உருட்டி முழித்தவள்...அழுதாள் ஏற்கனவே எதுக்கு கடத்தி வச்சிருக்கான்னு தெரியாமல், அவனை எதிர்த்து பேசினதுக்கே அடிச்சிட்டான் கன்னம் வீங்கி,தலை சுவற்றில் மோதியதில் அடிபட்டு நெற்றியில் புடைத்திருந்து,லேசாக இரத்தம் வந்திருந்தது.

மிரண்டு பார்த்தவளை கண்டு கொடூரமாக சிரித்தவன்"என்ன ஒன்னும் புரியலையா இரு சொல்றேன் என்று தன் கையில் வைத்திருந்த கஞ்சாவை நன்றாக இழுத்து ஊதி தள்ள...அந்த வாடையே வெண்பாவிற்கு வாந்திவர்றமாதிரி இருந்தது.

என்னபத்தி உங்க அண்ணனுக்கு ஒன்னுமே தெரியாது. ஆனால் உன் புருஷன் அதுதான் அந்த கே.என்னுக்கு எல்லாம் அக்குவேறா ஆணிவேறாகத் தெரியும் எப்படின்னு பாக்குறீயா.

அவனும் நானும் ஒருகாலத்துல நகமும் சதையும்போல எங்களை யாருமே பிரிக்கமுடியாது தெரியுமா. எல்லாமே பங்குபோட்டுக்கிட்டோம், பொண்ணு முதல்கொண்டு நான் சாப்பிட்டதை அவன் சாப்பிடுவான்,அவன் சாப்பிட்டதை நான் சாப்பிடுவேன்.

அதைக்கேட்டு அதிர்ந்து தன் வாயில் கைவைத்தவளை, பார்த்து நக்கலாக சிரித்தவன் அதுதான் உன் விஷயத்துல நடக்கப்போகுது,உன்னையவும் அப்படி சாப்பிடத்தான் ஆசையாக தூக்கிட்டு வந்திருக்கேன் என்று அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்து வைத்தான்.

அவளோ கூனிகுறுகி அமர்ந்திருந்தாள் 

அது ஒரு கோல்டன் டேய்ஸ் தெரியுமா,முதன்முதலா இந்த எஸ்டேட்டை வாங்கி புதுப்பித்து வீடு கட்டி குடிவந்தான் கே.என்..வந்த ஒரே மாசத்துல இவனது பேக்ட்டரியில் வேலை பார்த்த என்னுடைய நண்பனான ரஞ்சன் மூலம்தான் பழக்கமானான்.

எப்படின்னா ரஞ்சனுக்கு ட்ரக்ஸ் விக்குற வாங்குற இடம் இங்கத் தெரியும்,இங்க புதுசாவந்த கே.என்க்கு அது தெரியாது அதனால் அவன் பேக்ட்டரில வேலை செய்த ரஞ்சன் மூலமாக வாங்கிட்டிருந்தான். எனக்கும் ரஞ்சன்தான் ட்ரக்ஸ் கொண்டு தருவான்.

அப்படித்தான் எங்க மூணுபேருக்கும் நல்ல பழக்கம் வந்தது.ஆனா எங்களை மாதிரி கே.என் எப்பவும் பயன்படுத்தமாட்டான்.பொண்ணுங்ககூட இருக்கும்போது அது அவனுக்கு தேவைப்படும் வாரத்துல ஒருநாள் எடுத்துப்பான்.

ரசனைக்காரன் பொண்ணுங்க மட்டும் செமயா வருவாளுங்க ஹைக்ளாஸ் பார்ட்டி அவனால எங்களுக்கும் கிடைக்கும்,எல்லாம் பொண்ணு,தண்ணி சாப்பாட்டுல இருந்து.

எங்கப்பா இறந்தபிறகு வீடு குடும்பம் தேயிலைத் தோட்டம்னு இருந்தவனுக்கு,சொர்க்கலோகத்தை காட்டினதே அவன்தான்.

அப்படித்தான் அவன் வாங்கியிருந்த அந்த எஸ்டேட் ஓனருக்கும் அவனுக்கும் நல்லபழக்கம் இருந்ததினால்,அவரோட பொண்ணு ரக்ஷிதாவுக்கு கிரீஷ்மேல ஒரு கிளுகிளுப்பு இருந்துச்சு.

புரியுதா கிளுகிளுப்புன்னா உடம்பு சும்மா இருக்காம ஆசையா உரசிக்கிட்டே இருப்பாங்கள்ல அப்படி,தினமும் வருவா கிரீஷை உரசிக்கிட்டே இருப்பா,என்னவோ அவனுக்கு அந்த பொண்ணை,வேவேற விதமா பயன்படுத்த பிடிக்கலை.

ஆனா அந்தப்பொண்ணு செமையா அழகா இருப்பா,அழகுன்னா அப்படியொரு அழகு.நாள்முழுதும் அவளை பார்த்திட்டே இருக்கலாம்.

அவக்கிட்ட என் காதலை சொன்னேன் அதுக்கு அவ என்ன சொன்னாள் தெரியுமா "என் வீட்ல வேலை செய்றவன்கிட்டகூட உன்னைவிட அதிக எஸ்டேட்டும் தோட்டமும் இருக்கு,போயும் போயும் உன்னை லவ் பண்றளவுக்கு உனக்கு என்ன இருக்கு, கே.என்கூட இருந்தா நீ பெரிய இவனா,அவன் அழகும்,பணமும் திறமையும் சோ, ஹாண்ட்சம் நீ வந்து என்கிட்ட லவ் சொல்ற போடா டேய்" என்று விரட்டிவிட்டாள்.

அதன்பின்தான் நானும் ரஞ்சனும் கே.என் பேக்ட்டரில இருந்து நிறைய திருட ஆரம்பித்தோம்.

அப்புறம் ட்ரக்ஸ் அவனுக்கு கொஞ்சநாள் கொடுக்காமல் இருந்து,கிடைக்கலைனு பொய் சொல்லி,ஒருமாசம் கழித்து அதிக பணத்துக்கு வாங்கினதா சொல்லி அவன்கிட்ட பணம் கறந்தோம்.

அதை எப்படியோ தெரிந்து இரண்டுபேரையும் கூப்பிட்டு,

விசாரித்து வார்ன் பண்ணி விட்டுட்டான்.அவனுக்கு ட்ரக்ஸ் தேவைபட்டதால் ரஞ்சனை வேற எதுவும் செய்யலை.

ஆனா கொஞ்சம் அவாய்ட் பண்ண ஆரம்பிச்சிட்டான்.

ரஞ்சன்தான் ப்ளான் பண்ணி ஒருநாள் கே.என் வீட்லயே ட்ரக்ஸ்,சாப்பாடு எல்லாம் ஏற்பாடு செய்தான்.

அப்போது அவன் வீட்டுக்கு, அன்னைக்கு ரக்ஷிதாவும் வந்திருந்தாள் அவளுக்கும் ட்ரக்ஸ் பழக்கிவிட்டிருந்தான் கே.என்.

அதனால் இதுதான் சான்ஸுன்னு ரஞச்ன் என்னிடம் கண்ணை காண்பித்து சைகை செய்தான்.

நான் என்னனு கேட்டதும்தான் தனியாக அழைத்து"டேய் மச்சான் வசமா மாட்டிருக்காடா அனுபவிச்சிருவோம்டா ட்ரக்ஸ்ல எதுவும் தெரியாது காலையில கேட்டால் தெரியாத மாதிரி இருந்திருவோம்"

"டேய் அவன் உன் முதலாளிடா தெரிஞ்சா வச்சி செய்திடுவான்டா என்ன தைரியம்டா உனக்கு"

ரஞ்சன்"போட வாய்ப்பு தானா கிடைக்குது உன்னைய எட்டி உதைச்சவதான,இப்படிபட்டவளுங்க என்ன நடந்தாலும் கண்டுக்காத மாதிரி வேற ஒருத்தனா கட்டிக் கொண்டு போய்விடுவாளுகாடா, கண்டுக்க மாட்டாளுகடா,நமக்கும் சுகத்துக்கு சுகம்,அதைவிட அவ போட்டிருக்க நகைய பாரு எல்லாமே டைமண்ட் பணத்துக்கு பணம்"

"அப்படிங்கற"

ரஞ்சன்"ஆமா வா,ட்ரக்ஸ் டோஸ் கொஞ்சம் அதிகமாக வை கே.என் மயங்கட்டும்"

"ஓகே...ஓகே...ரெடி"

இருவரும் சேர்ந்து போட்ட திட்டத்தில் ஒரு சொதப்பலாகிவிட்டது.

கே.என் ஏற்கனவே அதிக டோஸ் எடுத்து பழக்கம்போல எங்களுக்கு அது தெரியலை,அவன் மயங்கவேயில்லை…

முழு போதையில் கண்கள் கிறங்கி கிடந்தவன் முன் ரக்ஷிதாவை ரஞ்சன்தான் பர்ஸ்ட் தொட்டான்,

அவ்வளவு போதையிலும் அவளுக்கு நாங்க தொடுறது தெரிஞ்சு தள்ளிவிட்டு தடுத்தாள் பாரு வந்த கோபத்துல ரஞ்சன் ஒன்னுவிட்டான் அதுல மயங்கிட்டா.

அவளை அனுபவிக்க ஆரம்பிச்சுட்டான், பார்த்துட்டுகிருந்த எனக்கும் மூடாகிடுச்சு,அதுக்குள்ள ரஞ்சன் எல்லாம் முடிஞ்சு எழுந்து பார்த்தான்,ரக்ஷிதா செத்துப்போயிட்டா.ச்ச செம கட்டை ரஞ்சனுக்கு கொடுத்து வச்சது எனக்கு கொடுத்து வைக்கலை.

அவள் கத்துறதுல இரண்டுமூணு டைம் கே.என் எழுந்து முழித்து பார்த்தான் அவனால் ஒன்னும் பண்ணமுடியலை.

டேய் விடுங்கடா அவளைனு கத்திக்கிட்டே இருந்தான்.அப்புறம்தான் செத்துபோயிட்டாளே.

அவ கழுத்துல கிடந்ததையெல்லாம் கழட்டிட்டு ஓடி வந்து

நேரா சென்னைக்கு பஸ்ஸேறிட்டோம்.

விடிஞ்சும் ஆளைக்காணோம்னு வேலைகாரிதான் போய் பார்த்திட்டு, அப்புறம் வெளிய தகவல் தெரிஞ்சு கே.என் மேலதான் கேஸ் போட்டாங்க அவன் எதையும் சொல்லவில்லை.

ஆனால் அவங்கப்பாவை வைத்து வெளியே வந்துட்டான் இரண்டாவது நாளே.

நாங்க இந்த பிரச்சனையெல்லாம் முடிந்து அமைதியாகிட்டுனு நினைச்சு வந்தோம்,கே.என் மதிப்பு மரியாதை குணத்தையெல்லாம் தெரியாமல் அவன்கிட்ட விளையாடிட்டோம்னு தெரிந்தது.

ஒருமாதத்தில் மொத்தமாக அவனது பேக்ட்டரியில் இருந்து வீடுவரைக்கும் எல்லாத்தையும் மாத்தியிருந்தான் கிட்டவே நெருங்கமுடியாதபடி.

சென்னையில் இருந்து வந்த இரண்டாவது நாளே இங்க வச்சுதான் ரஞ்சனை கண்டதுண்டாமாக வெட்டி போட்டுட்டுபோயிட்டான்.

அவனை அதோ அங்கதான் புதைச்சுட்டு இன்னைக்கு வரைக்கும் வெளியூருக்கு போயிட்டானு சொல்லிட்டிருக்கேன் என்று ஜன்னல் வழியாக கைகாண்பித்தான்.

என்னையும் கொல்றதுக்கு முயற்சி செய்தான் முடியலை.

அப்புறம் அந்த வாட்ச்மேன் பொண்டாட்டி பிள்ளைங்களும் இங்கதான் தூங்குறாங்க…

ஐயோ என்று தன் வாயை பொத்தினாள்... கொலைகார பாதகன் என்று.

ரொம்ப அதிர்ச்சியாகத அது நான் செய்யலை செய்தது உன் "மாமா"...என்ன பாக்குற.

அவனை வேவு பார்க்கும் எனக்குத் தெரியும் அவனை நீ எப்படி கூப்பிடுவன்னு.

கே.என் பேக்டடரில் எக்ஸ்போர்ட் குவாலிட்டி தேயிலையை இராத்திரியோட ராத்திரியா கடத்துனது நான்தான்.பின்ன உங்கண்ணனுக்கு லாபத்துல பங்கு கொடுக்கவேண்டாமா கள்ளத்தனம் பண்ணினாதான் முடியும்.

சுந்தரம்தான் பணத்துக்கு ஆசைப்பட்டு எங்களுக்கு உதவி செய்தான்.அதையும் உன் மாமா கண்டுபிடிச்சிட்டான்.

பணந்தான்மா இங்க எல்லாம்,அது இல்லைன்னா ஒன்னும் முடியாது எதுவும் முடியாது கல்யாணம் முதல்கொண்டு.

பத்திரமா சுந்தரம் மனைவி பிள்ளைங்களை அழைச்சிட்டு வரச்சொன்னா உங்கண்ணன் நீதி,நியா யவாதி எல்லோருக்கும் தெரியறமாதிரி அழைச்சிட்டு வந்திருக்கான். உன் மாமான்காரன்தான் லாரிவிட்டு ஏத்திட்டான் அவங்கமேல.

பின்ன வெளிய தெரிஞ்சா என் திருட்டுவேலைதான் வெளியே வரும்,அதனால் வெளியே யாருக்கும் தெரியாம மூன்று பேரையும் கொண்டு இங்கு புதைத்து வைத்திருக்கிறேன் 

அதனால் தான் இப்போ எல்லோரும் தேடிட்டு இருக்காங்க சுந்தரத்தின் மனைவி பிள்ளைகளை கே.என் எதோ செய்துட்டான்னு தேடிட்டிருக்காங்க,

அவன் க்ரைம் ரேட் கூடியதுதான, அதுதான் எனக்குவேணும்.

அதைவிட முக்கியமான விஷயம் லேகா என் கையாளு, பணத்துக்காக கள்ளவேலை செய்யக்கூடியவள் அதைத்தெரிந்துதான் அவளை அழைத்து சென்ற கே.என் நல்லா உடம்புதேவைக்கு யூஸ் பண்ணிட்டு தன் அடியாட்களை வைத்து மலையிலிருந்து தள்ளிவிட்டுட்டான்.

எல்லாவற்றையும் கேட்டவளுக்கு தலையே சுத்தியது...எப்பா என்ன நடிப்புடா நடிச்சிருக்கான் இவன். அண்ணன் இது தெரியாமல் ஏமாந்து என்னையும் பிரச்சனையில் மாட்டிவிட்டுட்டானே என்று நொந்துப்போனாள்.

அப்படி நாங்க என்னடி செய்தோம் எல்லோருக்கும் வர்ற ஆசைதான்,இருக்கறவன்கிட்ட இருந்ததுதான் எடுத்தேன்.அதுல அவன் எங்க குறைஞ்சிட்டானாம் என்று கையில் கிடைத்த பொருளை கோபத்தில் தூக்கி எறிந்தவன்…

"அது என்னடி அவன் எவ்வளவு கேவலமானவனா இருந்தாலும் எல்லோரும் அவன்மேலயே போய் விழுறீங்க,பச்சைப் பொறுக்கிடி அவன்,அவனை பிடிக்குது இன்னும் பொண்ணுங்க வாடையே படாத என்னை பிடிக்கலையா உனக்கு.

கடத்திட்டுப்போனாலும் அவன்கூடவே குடும்பம் நடத்தி வயித்த நிறைச்சுட்டு வந்து நிக்குற.

அவனைவிட நான் பெட்டர்னு இன்னைக்கு டெமோ காண்பிக்குறேன்டி" என்றவன் தன் சட்டையைக் கழட்டிவிட்டு,

அவளிடம் நெருங்கவும் கதவு உடைபடும் சத்தம் கேட்டது...திரும்பி பார்க்க கிரீஷ் நின்றிருந்தான் அவ்வளவுதான் ஓடிச்சென்று வெண்பாவை பிடித்துவைத்துகொண்ட ஜிபி.

"கிட்ட வந்து இவ கழுத்தை திருகிப்போட்டிருவேன்" என்றவன் தப்பிக்க வழிதேடினான்.

அவனுக்குத் தெரியும் வெண்பா தன் கையிலிருக்கின்ற வரைக்கும்தான் பாதுகாப்பு இல்லையென்றால் கொன்று புதைத்துவிடுவான் என்று.

மெல்ல மெல்ல நகர்ந்தவனின் காலில் சுட்டான் கிரீஷ்,அவ்வளவுதான் வலியில் வெண்பாவினை விட்டுவிட்டு தன் காலைப் பிடிக்க, துப்பாக்கியிலிருந்து தோட்டாவாக விரைந்து ஓடிவந்து மாமா என்று அவனை கட்டிக்கொண்டாள்.

அவ்வளவுதான் அவளை ஒருகையில் பிடித்துக்கொண்டு ஜிபியின் அருகில் சென்றவன் அவனது காலிலீயே மிதித்தான்.

மண்டியிட்டு அமர்ந்தவனை மிதிமிதினு தன் ஷுவினை வைத்தே மிதித்து கழுத்தில் கால் வைத்து அழுத்தினான்.அவனோ உயிர் போகின்றவலியில் துடிக்கவும் "மாமா ப்ளீஸ் விட்றுங்க,இன்னும் பாவம் பண்ணவேண்டாம்" என்றவளை திரும்பி முறைத்தவன் தன் வாயில் விரலை வைத்து...ஷ்ஷ்ஷ் என்று மிரட்டியவனின் கண்களைப் பார்த்தவள், தன் வாயை தானாக கைகள் கொண்டுமூடிவிட்டாள்.

அதற்குள் அவனது ஆட்கள் எல்லாம் மேல வந்தார்கள்,கூட ருத்ரனும் வந்தான்.

ஜிபியை பார்த்து இரங்கினாலும் தன் தங்கையை எதுக்கு கடத்தினான் என்று தெரியாது, இந்த பிரச்சனை தெரியாது ஆனால் உரிமையோடு பழகின பழக்கத்திற்காக அவனை கண்டதும் பாவமாக இருந்தது.

ருத்ரன் கிரீஷிடம்" சார் ப்ளீஸ் விட்றுங்க போலீஸில பிடிச்சு கொடுத்துடுவோம், மற்றதையெல்லாம் கேஸ் போட்டு பார்த்துக் கொள்ளலாம்" என்றான்.

இதைக்கேட்ட கிரீஷ் இன்னும் கோபமாகி பக்கத்தில் நின்றிருந்த அவனது அடியாளை கைகாண்பித்து அழைத்தவன்... இவங்க ரெண்டு பேரையும் அழைச்சிட்டு போய் பத்திரமா என்னோட ஜீப்பிற்குள்ள உட்காரவை, பாதுகாப்பிற்கு இரண்டுபேர நிற்க வை" என்று கட்டளையிட்டதும் அவர்கள் வெண்பாவையும் ருத்ரனையும் வலுக்கட்டாயாமாக இழுத்துக்கொண்டு சென்றனர்.

அவர்கள் சென்றதும் பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு அடியாளை கண்காண்பித்து, அங்கிருந்த பெரிய இரும்பு உருளையை எடுத்து வரச்சொன்னவன், அதை அப்படியே ஜிபியின் தலையில் போட்டான்.

சிறிது நேரத்தில் ஜிபி தலைநசுங்கி துடிதுடித்து இறந்துவிட்டான்.அதைப் பார்த்து கிரீஷ்" எதிரியைகூட மன்னிக்கலாம் உன்னை மாதிரி துரோகியை மன்னிக்கவே முடியாது நீ செய்ததிற்கேற்ற பலன் இதுதான்.மேலோகத்தில் போய் நல்ல ரெஸ்ட் எடு" என்றவன்.

இவனைத் தூக்கி மலையில் இருந்து உருட்டிவிடுங்க என்றவன் கீழிறங்கி வந்தான்.

அவனைப்பார்த்ததும் ருத்ரனும் வெண்பாவும் அவனை என்ன செய்தீங்க என்று கேட்க,பதிலேதும் சொல்லாமல் வண்டியில் ஏறியவன், ருத்ரனை மட்டும் கீழிறங்க சொன்னவன் ராஜேஷிடம் கையை காண்பித்து இவரை அவங்க வீட்ல விட்றுங்க. அவங்க மனைவி ஆசையா தேடிட்டிருப்பாங்க என்றவன் வெண்பாவை அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு செல்ல.இப்போது எதுவும் அவனிடம் பேசமுடியாது என்று பார்த்தவள் அமைதியாக அவன்கூடவே சென்றாள்.

வீட்டினுள் சென்றவன் வெண்பாவை கையைபிடித்து தன்னுடய அறைக்குள் நுழைந்தான்.

கபோர்டில் இருந்த ட்ரஸ்ஸை எடுத்து அவளிடம் கொடுத்தவன் குளிச்சிட்டு வா என்று ஆணையிட்டான்.

அவனும் வேறொரு அறைக்குள் சென்று கோபம்போக தண்ணீரின் அடியில் நின்று அமைதியாகி வந்தான்.

அதற்குள் அவளும் குளித்து உடைமாற்றி வந்திருந்தாள்.பின் வேலைக்காரி சமைத்து வைத்துவிட்டுப்போன சாப்பாட்டை அவளுக்கும் தட்டில்போட்டு கொடுத்து தானும் எடுத்து சாப்பிட ஆரம்பிக்க…

அவளோ "என்னை அம்மா வீட்லக்கொண்டு விட்றுங்க" என்று சொல்லவும் கையிலிருந்த தட்டை அப்படியே தூக்கி விசிறியடித்தவன்…

"இனி எதாவது பேசின கொன்றுருவேன்" என்றதும்...கண்கள் மிரள அப்படியே அதிர்ந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் வெண்பா.

இனி நீ செத்து உன்னை இங்கிருந்து தூக்கிட்டுபோறவரைக்கும் இதுதான் உன்வீடு. நான் எங்கயிருக்கனோ அங்கதான் நீயும் இருக்கணும் புரியுதா.சாப்பிட்டு முடிச்சிட்டனா போய் படு போ என்று விரட்ட பயத்தில் எழுந்தவள், அறைக்குள் சென்று அந்த கட்டிலில் காதை நன்றாக மூடி படுத்துக்கொண்டாள்.

ஜிபி பேசியது இப்பவும் அவளது காதில் கேட்டுக்கொண்டே இருப்பதுபோல இருந்தது.அதிலும் கிரீஷை பத்தி சொன்ன விஷயங்கள் அவள் கேள்விபட்டதுக்கு அப்பால் உள்ளது...அதை அவளது மனம் ஏற்க முடியாமல் படபடத்துக் கொண்டிருந்தது.

அவளது இதயம் துடிப்பது உடலுக்கு வெளியே அவளது காதில் கேட்டது.

பதறி பதறி உடல் உதறல் எடுக்க படுத்திருந்தாள்.

மெல்ல அறையின் கதவு திறக்கப்படும் சத்தம்கேட்டதும் நத்தையாக தன் கைகால்களை சுருட்டிப்படுத்துக்கொண்டாள்.

அவளருகில் வந்தவன் அவளை எழுப்பவும்,வேண்டுமென்றே எழும்பாது படுத்திருந்தாள்,அவளது உடல் உதறல் வெளியே பெட்ஷீட் மீறி தெறிந்தது.

"நண்டு எழும்பு இந்த பாலை குடிச்சிட்டுபடு" என்று மென் குரலில் கூறவும்...மெல்ல போர்வையை விலக்கி பார்த்தவளை நோக்கி சிரித்தவன் அவளை ஒருகையால் அலேக்காக தூக்கி பாலை கையில் கொடுத்தான்.

வாங்கி மடமடவென குடித்தவள் கப்பை வைத்துக்கொண்டு பார்த்திருக்க,அதை வாங்கி கொண்டு வெளியே சென்றவன் திரும்பி வருவதற்குள் அரைத்தூக்கத்தில் இருந்தாள்.

அவளை பற்றிதான் அவனுக்கு நன்கு தெரியுமே சிறு இருட்டுக்கே பயப்படும் அவளை காலையிலிருந்து அந்த தேயிலை பதப்படுத்தும் கொடவுனில் அடைத்துவைத்திருக்கின்றான்.எப்படியும் என் கடந்தகாலத்தை அக்குவேணி ஆணிவேறாக பிரித்துமேய்ந்திருப்பான் அவளிடம்,அவள் என்னை வெறுப்பதற்காகவே சொல்லியிருப்பான் என்று சரியாக ஜிபியை கணித்தவன் பாலில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்திருந்தான்.

இப்போது நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு போய்விட்டாள்.அப்படியே அவளை கட்டிக்கொண்டு நிம்மதியாக தூங்க ஆரம்பித்தான்.