நினைத்தாலே இனிக்கும் அழகியே-25

நினைத்தாலே இனிக்கும் அழகியே-25

அத்தியாயம்-25

அடுத்தநாள் காலையில் மலையின் அடிவாரத்தில் ஜிபியின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதைக் கண்ட மலைவாழ் ஜனங்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து விசாரித்து கொண்டிருந்தனர்.

பின் உடலை துணியில் மூட்டையாக கட்டிக்கொண்டு வந்து விசாரித்துக்கொண்டிருந்தனர்.

ருத்ரனுக்கு விஷயம் தெரிந்தும் தெரியாத மாதிரி இருந்துவிட்டான்.

ஒருவழியாக உடையை வைத்துதான் கண்டுபிடித்தனர்.அது ஜிபி என்று தெரிந்து அங்குள்ளவர்களிடம் விசாரித்ததில் அவரோட பேக்ட்டரி எரிஞ்சதுல இருந்து நொடிந்துபோய்ட்டார், ஒருவேளை தற்கொலை செய்திருக்கலாம்" என்று கூறினார்.

மேலும் விசாரிக்க சிந்தியாதான் கே.என்தான் தங்களது சொத்துக்களை ஏமாத்தி பறித்துட்டான். என் கணவர் சொத்தையும் சேர்த்துதான் "என்று ருத்ரனையும் உள்ளே இழுத்துவிட்டுவிட்டாள்.

அவ்வளவுதான் போலீஸார் அவனிடம் விசாரிக்க, ருத்ரனோ" நாங்க பிசினஸ் பார்ட்னர்ஷிபில் இருந்து பிரிஞ்சி கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கு மேல ஆகுது சார், அதனால எனக்கு ஒன்றும் தெரியாது சார்"

போலிஸ்காரரோ மீண்டும் கேள்வி கேட்டார் "அப்படியா ஆனால் உங்க மனைவி சொல்ற தகவல் வேற மாதிரி இருக்குதே, எங்க கிட்ட ஏதாவது மறைக்கிறீங்களா"

இல்ல சார் தொழில் நஷ்டத்தை சரி பண்றதுக்கு எங்களோடு சொத்து பத்திரங்களை, எழுதிக் கொடுத்துதான் கடன் வாங்கினோம்.இவ்வளவுதான் எனக்கு தெரியும் அதுக்கு மேல் உள்ள எதுவும் எனக்குத் தெரியாது"என்று அழுத்தமாக சொல்லிவிட்டான்.

சிந்தியாவிற்கு கடும் கோபம் வந்தது போலீஸ்காரர்கள் சென்றதும் ருத்ரனிடம் சண்டையிட்டாள்"எங்க அண்ணனை அந்த கே.என்தான் கொன்றிருக்கணும்,

உங்க தங்கச்சி வாழ்க்கைகாக என்னோட அண்ணன் கொலையை மறைக்கறீங்க"என்ற சண்டையிட்டாள்.

அவளிடமும் நடந்த விஷயங்கள் எதுவும் கூறாது தனக்குள் மறைத்து கொண்டவன். அவளை சமாதானப்படுத்தி ஜிபியின் காரியங்களை அந்தவீட்டு மருமகனாக செய்தான்.அவனது அம்மாவை தங்களது வீட்டிற்கே அழைத்து வந்தான்.

செத்துப் போனவனின் பெயரை கெடுக்க விரும்பாமல். அவனைப் பற்றிய எந்த தகவலும் வெளியே விடாமல், தனக்குள்ளாகவே வைத்துக்கொண்டான். அது தெரிந்தால் சிந்தியாவும் அவளது அம்மாவும் கண்டிப்பாக வருத்தப்படுவார்கள் என்று தெரியும். இப்படி ஒரு மகனா தனக்கு என்று ஒரு தாயின் மன குமுறலை அவன் பெற விரும்பவில்லை.

அவனுக்குமே மனதுவருத்தமாக இருந்தது கூடா நட்பு கேடாக முடிந்தது

அங்கு வெண்பாவோ தூக்க மாத்திரையின் விளைவாக நல்லதூக்கத்தில் இருக்க, கிரீஷ் பேக்ட்டரிக்கு செல்லுவதற்காக ரெடியாகி இறங்கி வந்தவன்,வேலைக்காரியிடம் இனி நீ நான் வர்றவரைக்கும் இங்க இருக்குற மாதிரி பாரு,உனக்கு சம்பளம் அதுக்கு தக்க தந்திடுறேன் என்றவன் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தவன்,மீண்டுமாக உள்ளே வந்து வேலைக்காரியை அழைத்து "வெண்பா எழுந்ததும் சாப்பாடு கொடு,அவ சாப்பிடலைன்னா எனக்கு வீட்டுபோன்ல இருந்து தகவல் சொல்லு,சாப்பாடு சூடா செய்துக்கொடுக்கணும், ஹாட் பாக்ஸ்ல வச்சு கொடுக்காது புரியுதா" என்றவன் சென்றுவிட்டான்.

கிட்டதட்ட மதியம் போல எழுந்த வெண்பா கொஞ்சம் நேற்றைய விஷயத்திலிருந்து தெளிந்திருந்தாள்.

குளித்துமுடித்து வெளியே வந்தவளுக்கு அந்த வீடே பிரமாண்டமாகத் தெரிந்தது.

அப்படியே கீழே வர வேலைக்காரி அவளுக்காக காத்திருந்தாள்.

வெண்பா மெல்ல அவளிடம் பேச்சுக்கொடுத்தாள்: உங்க பெயரென்ன? எத்தனை வருஷமா வேலை செய்யுற" 

"நான் கவிதாங்கம்மா,இங்க ஏழு வருஷமா வேலை செய்கிறேன்மா"

"ஏழுவருஷமாவா எப்படி"

"இது என்ன கேள்விம்மா,எந்த சச்சரவும் இல்லாத இடம். சம்பளம் ஒன்னாந்தேதியான கையில வந்திடும் என்ன இங்க நடக்கறத வெளிய சொல்லக்கூடாது அவ்வளவுதான்,

அடுத்தவிஷயங்களை நம்ம எதுக்கு ஊருக்கு சொல்லணும்,நம்ம வாயை மூடிட்டு நம்ம வேலையை மட்டும் பார்த்தால் எங்கன்னாலும் பிரச்சனை இல்லை,அவ்வளவுதான்"

அவள் சொன்னதுதான் சரி அடுத்தவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது,என்ன செய்கிறார்கள் என்று அவர்களது விஷயத்தில் மூக்கு நுழைக்காமல் இருந்தாலே நம்ம வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்று யோசித்தவள்...இத்தனை வருடம் வேலைபார்க்கும் இவளுக்கு மாமாகிட்ட ஒரு குறையும் கண்டுபிடிக்கமுடியலைன்னா பரவாயில்லை"என்றுதான் யோசித்தாள்.

மெல்ல அவள் கொண்டுவந்து கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு எழுந்தவளுக்கு தனியாக இருக்க ஒருமாதிரி இருந்தது...கவிதாவிடம் வம்பளந்துக்கொண்டிருந்தாள்.

பின் மெல்ல வீட்டினை சுற்றி பார்த்தவளுக்கு மாமா பெரிய ரசனைக்காரன்தான்.பார்த்து பார்த்து கட்டியிருக்காரு.

கொஞ்சம் எட்டினால் மேகக்கூட்டம் அவளது தலையில் இடிக்கும்,அந்த பிரேதேசத்தில் எப்பவுமே மழைபொழிவு இருக்கும்.

அதனால் செடிகொடிகள் பூக்கள் அதுவும் டேலியா பூக்கள் பூத்து தலையாட்டி அவளைப்பார்த்து சிரித்தது.

அவள் பிறந்து வளர்ந்த ஊர்தான் எல்லாம் இன்று புதிதாகவே தெரிந்தது.

தனிமை அவளுக்கு கொடுமையாக இருந்தது,அவள் வீட்டில் என்றால் அம்மா அருகிலேயே அமர்ந்து எதாவது பேசிக்கொண்டிருப்பாள் வேலை செய்வாள்.இங்கயோ அவளுக்கு இருக்கும் முக்கியமான வேலை சாப்பிடுவது தூங்குவது இதுமட்டும்தான்.

அவ்வளவுதான் மீண்டும் சென்று படுத்துவிட்டாள்,மாலை கிரீஷ் வீட்டிற்கு வரும்போது கவிதா மட்டுமே இருக்க,வெண்பாவை எங்கே என்று கேட்டு மேல சென்றவன் பார்த்தது,ஒரு தலையணையை கட்டிப்பிடித்துக்கொண்டு ஒரு தலையணையை காலுக்கு முட்டுக்கொடுத்து தூங்கிக்கொண்டிருந்தவளைதான்.

தன் உடையை மாற்றிகொண்டு, அப்படியே கதவை அடைத்துவிட்டு வந்தவன் அவள் வைத்திருந்த இரு தலையணையையும் எடுத்தெறிந்து,அப்படியே அவளது கழுத்தைப் பிடித்து தலையை தூக்கியவன்,அவளது அந்த இளஞ்சிவப்பு நிற தேன்சிந்தும் உதடுகளை கடித்திழுக்கவும், பதறி கண்விழித்தவள் பார்த்தது தன் கண்ணைமூடி அவளது இதழ்முத்தத்தில் லயித்திருந்த கிரீஷைத்தான்.

அவளோ உடனே அவனது தோளைபிடித்து தள்ளிவிட தன் டாஸ்க்கை முடிக்கவிடாமல் இடைஞ்சல் வரவும் சலித்தவன்.அவளது இதழை விடுத்தவன் அவளைப் பார்க்க,முறைத்தவள் தன் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

அவளது தாடையை அழுத்திப்பிடித்து தன்பக்கமாக இழுத்தவன்"என்ன பிரச்சனை உனக்கு,நான்தான் வேணும்னு பிடிவாதம் பிடிச்சு கட்டிக்கிட்டவளுக்கு, இப்போ நான் பக்கத்துல வர்றதுல என்ன பிரச்சனையாம்"

அவளோ எதுவுமே பேசாது தலையை குனிந்துக்கொண்டாள்…

"எனக்கு பதில் வேணும்"என அவன் அடிக்குரலில் உறுமினான்.

மென்குரலில்"பிடிக்கலை" என்றவளிடம்,"அத நிமிர்ந்து பார்த்து சொல்லு எது பிடிக்கலைனு நான் தெரிஞ்சுக்கணும்தான... என்னைய பிடிக்கலையா இல்லை என்னோட இணக்கமா இருக்குற விஷயம் பிடிக்கலையானு"

அதற்குப்பின்னும் அவள் அமைதியாக இருக்க,அவளது முகத்தை நிமிர்த்தியவன் அப்படியே அவளது கண்களைப் பார்த்தான்.அவளோ தன் கண்களை இறுக மூடிக்கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் பார்த்திருந்தவன், அவள் கண்களை திறக்கவில்லை என்றதும் மீண்டும் அவளது இதழை அழுந்த கடித்து இழுத்து பற்களுக்கிடையில் வைத்து இறுக்கினான்.

வலிபொறுக்காத கண்ணீர் வரவும் கண்களை திறந்தாள்,உடனே இதழ்களை விடுவித்தவன்,தன் புருவம் உயர்த்தி என்ன என்று கேட்டுவிட்டு"என்ன அந்த ஜிபி என் வாழ்க்கை வரலாற்றை மொத்தமா உன்கிட்ட எழுதிட்டான் போல,அதனால்தான் நான் உனக்கு வேண்டாமா...ம்ம்ம்"

கண்களை பக்கவாட்டில் உருட்டி அவன் கண்களை பார்க்காது தவிர்த்தவளை, இங்கப்பாரு நம்ம இரண்டுபேரும் வாழ்க்கையை தொடங்கும்போதே நான் இப்படித்தான்னு உனக்கு நல்லாத் தெரியும்,அதனாலதான் நான் எப்படி இருந்தாலும் பரவாயில்லைனு என்கூட வாழ்ந்த,இப்போவும் அதே கே.என்தான் ஒருவித்தியாசமும் இல்லை,பின்ன என்ன?

 

அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது அமைதியா இருந்தவளை, அப்படியே பின்னாக கட்டிலில் சரித்து அவள் மேனியின் வாசம்பிடித்தான்.

மெல்ல முன்கழுத்தில் முத்தம் வைத்து அவளது,கழுத்தில் தன் கரத்தைபோட்டவன் அப்படியே அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்தான்.

அவளோ மீண்டும் அவனிடமிருந்து விலகுவதற்காக எத்தனிக்க,சட்டென்று அவனுக்கு கோபம் வந்தது.

அவளது செய்கை அவனின் தன்மானத்தை சீண்டுகிறது என்று தெரியாமலயே செய்தாள்.

அதற்குமேல் அவளிடம் இணக்கம் காண்பிக்காமல்,வெண்பாவின் மேலாடையை சட்டென்று பிடித்திழுத்தான்,அதுவோ அவனது வலிமைக்கு முன்னால் எம்மாத்திரம் என்று கிழிந்து கையோடு வந்துவிட்டது.

வெண்பா இதை எதிர்பார்க்கவில்லை என்ன மாமா பண்றீங்க என்று கேட்டுமுடிக்கும் முன்னே,

உள்ளாடையையும் இழுத்து எடுத்துவிட்டான்.

அவனது இந்த அதிரடி செய்கையை எதிர்பார்க்காதவள், அப்படியே தன் கைகளால் முன் அங்கங்களை மறைத்தும், தன் கால்முட்டுகளை மடக்கியும் குறுகி அமர்ந்தாள்.

அவனோ தன் ஆடைகளை முற்றும் களைந்து வீனஸ் சிலையென நிற்க, தன் கண்களை இறுகமுடியவளின் அருகில் அமர்ந்து,அவளது தோளோடு தோளாக கைப்போட்டான்.மெல்ல மெல்ல தன் வலிய கரத்தினால் அவளது தோள்களில் தடவிக்கொடுத்துக் கொண்டே, அவளது அடர்ந்த வனமாக காட்சியளிக்கும் மேககூந்தலுக்குள், தன் கைவிரல்களை நுழைத்து இழுத்துப்பிடித்து அவளது முகமெங்கும் முத்தம் வைத்தான்.

வெண்பாவிற்கு புரிந்துபோயிற்று நம் எதிர்ப்பை அவன் பொருட்படுத்தப்போவதில்லையென்று

எண்ணியவள், கண்மூடி தன் மனதினை கல்லாக்கி, அமைதியாக அவனுக்கு இடங்கொடுத்தாள்.

கிரீஷிற்கும் அவளது மனதின் எண்ணம் புரிந்துதான் இருந்தது,நான் இப்படித்தான்,என் வாழ்க்கையை நான் இப்படித்தான் வாழ்ந்தேன் அந்த உண்மையை ஏத்துக்கிட்டுத்தான் என்னோடு வாழணும்...அதற்காக நான் நல்லவன் வல்லவன்,அப்படி இப்படினு சொல்லி ஏமாற்ற விரும்பவில்லை…

நான் இப்படித்தான்னு தெரிஞ்சுதான ஏத்துக்கிட்ட, அதுக்காவெல்லாம் என்னை நான் மாற்றிகொள்ளமுடியாது என்று தன் முடிவில் தீர்மானமாக இருந்தான்,அவள் இப்படியே என்னை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றுதான் அவளோடு வாழ முற்படுகிறான்.

மெதுவாக பக்கவாட்டில் திரும்பி அவளது காது மடல்களில் தன் நுனி நாவால் தொட்டு எச்சில் செய்து,அப்படியே முத்தம் வைத்து,கீழிறங்கியவன் அவளது தோளில் தன் மீசைகுத்த முத்தம் வைத்து,கடித்திழுத்தான், ஏற்கனவே அவனது செய்கைக்கு பழக்கபட்ட உடல்தானே,இப்போதும் அவனது செய்கைக்கு அவளது அனுமதியின்றி இளகியது.

அவளது மூளை அவளை சாடியது மானங்கெட்ட மனசே மாமா...மாமானு உருகாத...என்று இடித்துரைக்க,எங்கே கட்டுபட்டது, வெண்பாவின் மனது அவன்பின்னே நூல்பிடித்துசென்றது.

மெல்ல தன் வலதுகையை பக்கவாட்டில் மடக்கி அவளின் முன்கனியை பிடித்ததும்.அவளையறியாமலேயே மாமா...ஸ்ஸ்ஸ் என்று சிணுங்கினாள்.தன் உதடுவிரித்து லேசாக சிரித்தவன் அப்படியே முன்னாக குனிந்து பலூன் வாய்வைத்து ஊதுவதைப்போல, அவளது மலர்காம்பினை வாயில் வைத்து இழுத்து,அவனது இரு உதட்டிற்கும் இடையில் வைத்து திருகினான்.

அவ்வளவுதான் தன்னையறியாது அவனது பின்னந்தலை முடியை, தன் கைவிரல்களால் கோர்த்து பிடித்து தன் மார்போடு அழுத்தினாள்,அந்த மேகப்பொதியினுள் அவனது முகமும் அழுந்தியது…

ஒருபக்கம் வாய்வைத்து குனிந்து மலர்காம்பில் தேனுறிந்து உண்டுக்கொண்டிருத்தவனின், வலது கையோ அவளது வலதுபக்க மலர்காம்பினை கையில் வைத்து திருகி திருகி அவளது உணர்வுகளை,அவனுக்கான அந்த பிரத்யேக உணர்வினை தட்டி தட்டி எழுப்பிக்கொண்டிருந்தான்.

அவளால் அந்த சுகவுணர்வுகளை தாளமுடியாமல் தன் தலையை பின்னாக சாயத்து அவனது தோளில் முட்டி நின்றாள்.

வெண்பாவின் கண்கள் இரண்டும் கிறங்கி அவனைப் பார்த்து அழைப்பு விடுத்ததுபோல இருந்தது.

பூவிற்கு வண்டின் மீதான மோக அழைப்பினை கண்கள் வழியாக தீரனுக்கு அனுப்பினாள்.

அவனது வலிய கரங்கள் கீழ் நோக்கி பயணித்து நடுவயிற்றில் ஊர்ந்து உந்திச்சுழி என்னும் தேன்கிண்ணத்தில் தன் விரல்விட்டு அழுத்தம் கொடுத்து,மொத்த உணர்வினையும் தூண்டினான்.

இடுப்பில் கைவைத்தவன் இடையில் இடைஞ்சலாக இருந்த ஆடையையும் கழற்றி கீழ்நோக்கி இழுத்து எடுத்துவிட்டான்.

செவ்வரளி மேனியாளின் மொத்தமும் பாலாடையில்லாத பால்கோவாவைப்போல இருக்க அள்ளித்தின்பதற்கு ஆசைகொண்டவன்,அவளை தன் கைகளில் ஏந்திக்கொண்டு தான் கட்டிலின் பின்னால் சாய்ந்திருந்து அவளை தன் மடியில் இருத்திக்கொண்டான்.

தன் விரல்களால் அவளது முகத்திலிருந்து கோடிழுத்துக்கொண்டே வந்தவன்,சட்டென்று முதுகினூடே கரங்கொடுத்து தன் நெஞ்சோடு ஆசையாக பிணைத்து கட்டிக்கொள்ள,பெண்ணவளின் உடலின் உஷ்ணம் மெல்ல மெல்ல அவனது முடி நிறைந்த நெஞ்சில் ஒட்டிக்கொண்டிருக்கும் இரு செவ்விளநிகளினூடே அவனுக்கு கடந்தது.

சூடு ஏற ஏற கால்களினுடே அவளை பின்னிக்கொண்டு தன் நாக்கினால் அவளது முழு உடலின் நீளத்தை இன்ஞ்ச் இன்ஞ்சாக அளந்தானவன், சிறுகொழுப்பு மேடுகளை அங்கங்கே இளைப்பாறி கடித்து தின்றான்.

அவனது ஒவ்வொரு கடிக்கும் துடித்து வெடித்தவள் அவனின் முடியை பற்றியிழுத்து முகத்தில் அவளையறியாது முத்தம் வைத்தவள்...மாமா

.மாமா என்று நொடிக்கொருமுறை அழைத்து அவனை இன்னும் சூடேற்றி வேகப்படுத்தினாள்.

மாயவன் அவனோ மனையாளின் மெல்லிய அங்கத்தினை கரங்கொண்டு அழுத்தி அவளது பெண்மை வெடிக்கச்செய்தான்.

இப்போது படுக்கையில் கிடத்தியவன் அவள் மேல் படர்ந்து பின்னிக்கொண்டு, காலோடு கால்கள் சேர்த்து பின்னி விளையாடியவன்,உணர்வுகளின் உச்சம் பெற்று மண்டியிட்டு தன் முழங்கால் ஊன்றி நின்றவன் குனிந்து பெண்பூவின் உயிர்பூவில் முத்தம் வைத்து சிலிர்க்க வைத்து தன் ஆண்மைக்கு வழிதேடி கண்டுபிடித்து அவளுக்குள் மெல்ல மெல்ல அசைந்து இறங்கினான்.

முழுவதும் இறங்கி அவளது தொடைகளை தன் தொடைகளோடு இறுக கட்டிக்கொண்டு,பூங்கனிகளை தன் இருகரத்தாலும் பிடிமானமாக பிடித்து அசைந்தாடினான்,ஒவ்வொரு அசைவிற்கும் முன் சென்றவன் அவளது இதழோடு இதழ் பொருத்தி அதன்பின் பின்னாக நகர்ந்தான்,அசைவு கூடகூட முத்தங்களின் எண்ணிக்கையும் கூடியது.

பின் தேரோட்டியின் வேகமெடுத்து அவளுடலில் அவன் இயங்கி,அவளையும் இயக்கி பூவில் தேனெடுத்து பருகி களைத்து விலகினான்.

அவளோடு இணைந்து படுத்துறங்கியவனுக்கு ஏதோ மனதின் ஓரத்தில் சந்தோஷமொட்டுக்கள் துளிர்விட்டது.

காலையில் எழுந்த வெண்பாவிற்கு இனி நமது வாழ்க்கை இப்படித்தான் செல்லும் என்று நினைத்துக்கொண்டே குளித்து முடித்து கீழே சென்றவள்,அங்கு பூஜையறையென்று ஒன்று இல்லவே இல்லை என்று கண்டு கொண்டாள்..அதைக் கண்டு வருத்தப்பட்டவள், அவனுக்கு பிடித்த டீபோட்டு எடுத்துக்கொண்டு சென்றாள்.

இவளது கொலுசின் சத்தம்கேட்டு மெல்ல கண்விழித்தவன்,குளித்து முடித்து தேவதையாக நிற்கும் மனைவியை ரசித்துப்பார்த்தவன் எழுந்து முகங்கழுவி வந்தான்.

அதற்குள் பால்கனியில் நின்று வேடிக்கைப் பார்த்த மனைவியின் அருகில் சென்றவன் டீயின் பாதியை சாசரில் ஊற்றி அவளின் முன் நீட்ட,அதைப்பார்த்தவள் அவனது முகத்தினை ஏறிட்டுப்பார்க்கவும் தன் கண்களால் குடியென்று சைகை செய்ய வாங்கி மௌனமாக குடித்தவளின் தோளில் ஒரு கையைப்போட்டு தன்னோடு அணைத்துக்கொண்டு வேடிக்கைப்பார்த்தான்.

வெண்பாவிற்கு இந்த வாழ்க்கை பிடித்திருக்கிறதா என்று கேட்டால் தெரியாது என்பாள்…

அப்போ பிடிக்கவில்லையா என்று கேட்டால் அதற்கும் தெரியவில்லை என்பாள்..

ஆம் அவள் மனதில் ஒரு சுணக்கம் இருக்கின்றது.தன் அப்பாவின் மரணம்,பின் வயிற்றிலேயே பிள்ளையின் இறப்பு இது இரண்டும் நெஞ்சுக்குள் குத்திக்கொண்டிருக்கிறது.

கிரீஷ் அதைப்பற்றி சிந்திக்கறதேயில்லை போல,அவளோடான இப்போதைய வாழ்க்கையை நன்றாக வாழ்கின்றான்.

கிட்டதட்ட ஒருமாதம் கடந்திருக்கும் அன்று புதியதாக ஒரு டீல் கிடைத்ததற்கு பேக்ட்டரியிலயே பார்ட்டி வைத்துவிட்டு அவனும் நன்றாக குடித்துவிட்டு ஜீப்பை ஓட்டிக்கொண்டு வந்தவனது வண்டி பாதியிலயே பெட்ரோல் இல்லாது நின்றுவிட்டது.

பெட்ரோல் எப்படி தீரும் ஃபுல் டேங்க் போட்டு வந்து தான விட்டதா சொன்னானுங்க என்று யோசனையோடே இறங்கியவன் கண்டது ராஜேஷ் தனது டூவீலரில் அவனது ஜீப்பிற்கு முன்பாக தோரனையாக நின்றிருந்தை தான்.

அவனைக் கண்டதும் ராஜேஷ் தான் பின்னாடி ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்தவன் சர்ரென்று கிரீஷ் எதிர்பாராத வகையில் வயிற்றில் சொருகி வெளியே எடுத்துவிட்டான்.

அவ்வளவுதான் கிரீஷின் கண்கள் சிவந்து கோவத்தில் கத்தியவன், அவன் கையிலிருந்த கத்தியை பிடுங்கினான். 

பின் சட்சட்டென்று ராஜேஷின் நெஞ்சிலயே இரண்டு கிறு கீறிவிட்டு"என்ன தைரியம் உனக்கு,என்னையவே கொல்றளவுக்கு உனக்கு தைரியம் இருந்ததா,நீதான் என் ஜீப்ல பெட்ரோல் காலி பண்ணி வச்சியா" என அந்த வலியிலும் கர்ஜித்தான்.

ராஜேஷ் நெஞ்சில் பட்ட காயத்துடனே"ஆமாண்டா பொறுக்கி என் ரேணு உன்னாலதான் தற்கொலை செய்தா,நீதானடா அவளை மயக்கி அவளோ உன்னோட உடம்பு விளையாட்டுக்கு பயன்படுத்திகிட்ட,நான் நேர்ல பார்த்தேன்டா,எந்த கணவனுக்கும் வரக்கூடாத நிலையது,உன் கிட்டயிருந்து தள்ளி அவளை எங்கயாவது கண்காணாத இடத்துக்கு அழைச்சிட்டு போயிடணும்னு நினைச்சேன்,ஆனா அதுக்குமுன்னாடி அவளே கண்காணாத இடத்துக்குபோயிட்டாள்,

உன்னாலதான்டா,அடுத்தவன் பொண்டாட்டினு தெரிஞ்சும் ஸ்கெட்ச்போட்டு தூக்கிடுறீங்களேடா,அடுத்தவன் குடும்பத்தை கெடுக்குறதுல உங்களுக்கு என்னடா லாபம்"என்றவன் வலியில் கத்தினான்.

அதற்குள் கிரீஷ் மெல்ல தன் உதவியளருக்கு போனில் அழைத்து தகவல் சொன்னான்...வலி தாங்காது ஜீப்பின் முன்னே சரிந்து அமர்ந்தவனின் கண்முன்னே வெண்பாவின் முகம்தான் வந்தது.

ஐயோ எனக்கு எதுவுமாகிட்டுனா என்ன செய்வாளோ என்று வருந்தி ஏங்கினான்.

அதற்குள் ராஜேஷ் எழுந்து மெல்ல மெல்ல நின்றவன்...இவ்வளவு நாள் ஏன்விட்டு வைச்சேன் தெரியுமா அந்த ஜிபி உன்னை கொல்ல திட்டம்போட்டிருந்தான் அது தெரிஞ்சுதான் அவன் உன்னை கொன்றுருவான்னு நினைச்சு சும்மா இருந்தேன்.அவனையே நீ போட்டுத்தள்ளிட்ட உனக்கு எமன் நான்தான்,உன்னால பிழைக்க முடியாது ஏன்னா குத்துன குத்து அப்படியென்று அவன் நடக்க முயற்சி செய்து மெல்ல மெல்ல நடந்தான்.

அதற்குள் இரத்தமும் அதிகமாக வெளியேறி கிரீஷ் மயக்கத்திற்கு சென்றிருந்தான்.