ஓ...காதல் நெஞ்சே 7-12

ஓ...காதல் நெஞ்சே 7-12

அத்தியாயம்-7

அஜயின்  சத்தம் கேட்டு  இருவரும்  அவனருகில்  வந்தனர்

அஜய் "இதுதான்  உங்க டக்கா. காலையில் பஸ்ல வரும்போதுக்கூட  அவள  முறைச்சிக்கிட்டதானடா  வந்த.

சண்டைக்காரங்கனு இரண்டுபேரும்  ஊரை ஏமாத்திட்டிருந்தீங்களா" என்று  கேட்டுக்கொண்டே போக.

ஹரிதாவின்  முகம் அழுகைக்கு  மாறியது அதைக் கண்டவன் பேச்சை  நிறுத்தினான்.

ஷ்ரவன் அஜயின்  முதுகில்  ஒரு அடி போட்டவன்... “அவளே இப்போதான் சம்மதம் சொல்லிருக்கானு  சந்தோசத்துல இருக்கேன் அதைக் கெடுத்துறாத...நீ  போ  நாங்க  வர்றோம்” என்று அஜயை  அனுப்பிவிட்டவன், திரும்பி  ஹரிதாவைப் பார்த்தவன் "அவனுக்கு  நம்ம  விசயம்  எல்லாம் தெரியும். சும்மா விளையாட்டுக்கு பேசினான், அதுக்கு  ஏன் வருத்தப்படுற" என்று  அவளது  கைகளைப்  பிடித்து  தன்னிடமாக   இழுக்கவும் நெஞ்சிலே  மோதி நின்றாள்...

அந்த மாலைநேரக்  குளிர்ந்தக் காற்றும், அங்கே  சுற்றியுள்ள  நீச்சல் குளத்தின்  குளுமையும்  அவளது  உடலைத்தாக்க, லேசாக  நடுங்கியவளைத்  அணைத்துப்பிடித்துக் கொண்டான்.

அவளது  நெஞ்சுக்கூடு ஏறியிறங்க ஷ்ரவனின்  உடலில்  அது  பல ரசாயன மாற்றங்களையும், ஹார்மோன்களை எகிறச்செய்தது.

ஹரிதாவோ... காலையிலிருந்து  அவளது  மூளை ஷ்ரவனுக்கு  எதிராகவும்   மனது  அவனுக்கு சாதகமாகவும்  எண்ணங்களைத் தூவ, மூளையின் வேலையைவிட  மனதின் வேலை  பயங்கற உத்வேகமாக இருந்ததினால்இப்போது  ஷ்ரவனின்  கைக்குள் பாந்தமாக நிற்கிறாள்

யாருமற்ற  தனிமை  அவர்களது... இதயம் துடிப்பது  அவர்களுக்கே  கேட்கின்ற  நிசப்தம்...ஒருவரது  மூச்சுக்காற்று இன்னெருவருக்கு சூடேற்ற..ஷ்ரவனின்  கைகள்  இன்னும்  அதிகமாக  ஹரிதாவை இறுக்கி  தனக்குள்ளாக  கொண்டுவர முயற்சிக்க, அவனை  ஏறிட்டுப்பார்த்தாள்...

ஷ்ரவனோ கண்மூடி அவளது நெருக்கத்தை சுகித்திருந்தான்.

அவள்  அசைவதை உணர்ந்து, இப்போது  கண்திறந்துப் பார்த்தான் ஹரிதாவும் பார்த்துக்கொண்டிருக்க...அப்படியே  குனிந்து  அவளது தோளில்  முகம் வைத்து தேய்க்க, அவளோ  கூச்சம்  தாளாது  சிரித்து  அவனது  முகத்தைப்பிடித்து  தள்ளினாள்.

அவனோ  சிரித்துக்கொண்டே  அவளது  இடையினில்  கையிட்டுத் தன்னோடு  இழுத்தவன், அவளது  இதழ்களையே பார்த்துக் கொண்டிருந்தான்...

அவனது பார்வையைத் தாங்க முடியாமல் முகத்தை திருப்பிக்கொள்ள,தனது ஒற்றைக்கையால் அவளது முகத்தை திருப்பினான்.அவளது  கண்கள்  இப்போது நிலையில்லாமல் அலைப்புற.

ஷ்ரவனுக்கு  இப்போதுதான்  அவளிடம்  அதிக சுவாரஸ்யம் பிறந்தது...பெண்ணின் வெட்கமும், அவனது கண்களைப்  பார்க்க முடியாமல்  அவள் திணறுவதும், ஷ்ரவனுக்கு அவளிடம்  மூழ்கத்தோன்ற, அப்படியே மெதுவாகக் குனிந்து சூடான அவனது உதட்டினால்  குளிரில்  துடிக்கும்  அவளது  இதழ்களை மெதுவாகப் பற்ற, நெருப்பில்லாமல்  பற்றிக்கொண்டது.

இரு இதழ்கள் முட்டிக்கொள்ள...

உடலிரண்டும் வெப்பம் கொள்ள...

யுத்தம் தொடங்கியது...

காதலின் மோக யுத்தம்.

ஷ்ரவன் பிடிமானத்திற்காக  அவளது பின்னங்கழுத்தோடு மெதுவாக தனது இடது கரத்தினைக்கொடுத்து அழுத்திப்பிடித்திருந்தான்.

வலது கரமோ அவளது இடுப்பிலிருந்து அப்படியே அவளது  சட்டையினுள்ள நுழைந்து  நாபியைத்தொட, உணர்வின் பூங்குவியலானாள் ஹரிதா.

தனது கைகளால் அவனின் பின்னந்தலையின் முடியை இழுத்து வைத்திருந்தாள்...ஹா.. என்று வாயைத்திறக்க, இதழினூடே தனது நாவினை அவளின் வாய்க்குள்விட்டு அவளது நாவினோடு வாள் சாண்டையிட்டுக் கொண்டிருந்தான்...இனிதான விருந்து  அது இருவரின் எச்சில் பரிமாற்றம்.

வலது கரத்தினை மெதுவாக அசைத்து இன்னும்  சட்டைக்குள் ஊர்வலம்போனவனுக்கு  உற்சவ சிலையே  கைக்குள் சிக்க அழுத்திப்பிடித்தான்...

அவனது கைக்குள்ளயே துடித்து வெடிக்க, அவனது பிடி நண்டுபிடியாக இருந்ததால், ஹரிதாவால் அவனிடமிருந்து விலக முயற்சித்தும் முடியவில்லை...

ஹரிதாவின் வாயிலிருந்த தன் வாயை எடுத்தவன், கைகலால் மட்டும் இளவம் பஞ்சு மொட்டுக்களை விடாது பிடித்திருக்க, அவளது கண்கள் அவனிடம் கெஞ்ச, புருவம் தூக்கி முடியாது என்க.

இன்னும் அழுத்திபிசைய அவளோ கண்கள் விரித்து மாயவனின் சேட்டையை தடுக்கவும் முடியாமல், விலக்கவும் பிடிக்காமல் உளன்றவளின் காதில் மெதுவாக  "கல்யாணம் பண்ணிப்போமா உடனே" என்று வினவ, அவளும் சரியெனத் தலையசைக்க... “முடியலடி இப்பவே உன்னைக் கடிச்சி திங்கணும் போல இருக்கு” என்று, அவளது கன்னங்களில் தனது பல் பட கடித்து  இழுக்க...

“ஸ்ஸ்...வலிக்குது ஷ்ரவன்...”என்று ஹரிதா  சொல்லவும்  மற்றொரு கன்னத்தையும் பல்தடம் பதிய  கடித்து இழுத்தான்...

"ஸ்ஸ்...வலிக்குதுனு சொன்னா மறுபடியும்  கடிச்சுவைக்கீங்க...நீங்க மோசம்.

“அப்படியா? மோசமா?...” என்று அவள் சொன்னதை திரும்பவும் கேட்டுக்கொள்ள.

ஹரிதா முறைத்தாள்

அதற்குள்ளாக ஷ்ரவனின் மொபைலில்  அழைப்பு ஒலி கேட்க, அஜய்தான்  கரடி  வேலைசெய்திருந்தான்...

“அடேய்  ரொமான்ட்டிக்  மூடுலயிருந்து  வீட்டிற்குப் போகற மூடுக்கு  வாங்கடா...நீயாவது ஹரிதாக்கூட இருக்கடா..நான் இங்க தனியா புலம்பிட்டிருக்கேன்...இப்போ வரலைனா விட்டுட்டுப் போயிடுவோம்  பார்த்துக்கோ” என்றான்..

“ஓகேடா..வர்றோம்  இரு” என்று அழைப்பை துண்டித்துவிட்டு  நிமிர்ந்தவன்  பார்த்தது...

சட்டையின்  பட்டன்கள்  சரியாக  மேல்பக்கம் பாதி  கீழ்பக்கம் பாதி கழன்றிருக்க மயக்கும் சிலையென ஹரிதா நின்றிருந்தாள்...இவன் செய்த சேட்டையின் விளைவாக  அதை அவள் கவனிக்காமல்  இவனது முகம் பார்த்து நின்றாள்.

அவனது பார்வை சென்றயிடம் நேக்கியவளுக்கு  வெட்கம் மேலிட திரும்பி நின்று  பட்டன்களைப் போட...சட்டென்று அவளைத்திருப்பி வெள்ளை வெளேறென்று தெரிந்த வயிறும் தொப்புளிலும் குனிந்து  முத்தம் வைத்து  முகத்தை  தேய்த்தான்...அவளோ மூச்சுக்களை வேகமாகயெடுத்து அவனை விலக்க...அவனோ இப்போதிருக்கும் மனநிலையில் ஹரிதாவை உடனே தன்னவளாக மாற்றும் எண்ணமோ என்னவோ...அவளை பிரிய மனதில்லாமல் நின்றிருந்தான்.அவள்மேல் உள்ள மையல் தீராமல்..

இதற்குமேல்  இங்கயிருந்தால் இவன் எல்லாத்தையும் முடிச்சுட்டுத்தான் போவான் என்று வானமே லேசாகத் தூறல் போடவும் அவளை அழைத்துக்கொண்டு ஓடிவந்தான்.

இருவரும்  அவ்வளவு  சிரிப்புடன்  பஸ்ஸில்  ஏற  பாதிபேரின் கண்களில் பொறாமைதான்  தெரிந்தது...

நல்ல  ஆணழகன், பணம் காய்க்கும்  மரம்...இதில்லாமல்  பரம்பரை  பணக்காரன்...வளைத்துபோடக்கூட  அவனிடம் நெருங்கமுடியவில்லை.அதனால் வந்த பொறாமை.

ஒருவரை ஒருவர் கண்களாலே  சீண்டிக்கொண்டும், பேசிக்கொண்டும் வந்து சேர்ந்தனர்.

அங்கு மகளுக்காக  வந்து  காத்திருந்தார்...ஷ்ரவனிடம்  அருகில் சென்று  பேசவும் முடியவில்லை...

தலையைமட்டும் அசைத்து விடைப்பெற்றவள்  அமைதியாக வர...கிருஷ்ணாவோ பேசிக்கொண்டே வந்தார்.

வீடுசென்றும் ஹரிதாவினால் தனது மனதினை ஒருநிலைப்படுத்த முடியவில்லை... ஷ்ரவனின்  நினைவுதான்.

சுமித்ரா  சாப்பிட  அழைத்ததும் சென்றவள், சாப்பாட்டை  அலைந்து கொண்டிருந்தாள்.

சுமித்ரா  இரண்டு மூன்றுமுறை அழைத்தும்  அவளது நினைவுகள் இங்கில்லையென்று  புரிந்து...அவளது தோளினில் தட்டி என்னவென்று கேட்க ஒன்றுமில்லை என்று தலையாட்டி விரைவாக சாப்பிட்டுத் தன் அறைக்குள் சென்று  முடங்கிக் கொண்டாள்.

ஷ்ரவனின் நிலை  அதற்குமேல்...

ஹரிதாவின் நினைவுதான்.

ஹோட்டலில்  சாப்பிட்டுவிட்டுத்தான் வந்திருந்தான்.

தனது படுக்கையில்  படுத்தவன்  இன்று முழுவதும்  நடந்த நிகழ்வுகளை நினைத்து நினைத்து தனது இளமைக்குத் தீனிப் போட்டுக்கொண்டிருந்தான்.

தனது இளமையுணர்வுகளை தட்டி எழுப்பியவளை, இப்போது  தன்னிடம்  கொண்டு வந்தாள்  எப்படியிருக்கும்  என்று  கனவுக் கண்டவன்...தனது மொபைலை எடுத்து  ஹரிதாவிற்கு அழைத்தான்...

ஷ்ரவனின்  அழைப்பு  என்றதும் மெதுவாக  எடுத்து  பேசாமல்  இருக்க...

“ஹேய் சண்டைக்கோழி தூங்கிட்டியா?...”

"இல்லை"

“என்ன பண்ணிட்டிருக்க?...”

"பெட்ல படுத்திருக்கேன்

"நானும்"

"ம்ம்"

"இங்க வர்றியா...சேர்ந்து  தூங்கலாம்"

ஹரிதாவிடமிருந்து  பதில்  எதுவும்  வரவில்லை  என்றதும் "தூங்கிட்டியா"

"இல்லை...முழிச்சுதான் இருக்கேன்"

“நான் கேட்டதுக்கு  பதில் வரலையே...வரபிடிக்கலையா? இல்லை பதில் சொல்லப் பிடிக்கலையா?..” என்று  ஷ்ரவன் கேட்டான்.

"நமக்கு  இன்னும் கல்யாணமாகல...ஞாபமகருக்குதான...”

என்று அவள் திருப்பிக்கேட்க, “தாலியை கட்டிட்டு கூட்டிட்டு போங்க சேர்ந்து  தூங்கலாம்...ம்ம்.

“அதுதானக் கட்டிட்டாப்போச்சு...”என்று  அவர்கள்  உரையாடல் நீண்டுக்கொண்டுப்போக...அவனுக்கு நிருபாமா அழைத்துக்கொண்டிருந்தார்...

ஹரிதாவிடம்  “அம்மா  லைன்ல வர்றாங்க...நாளைக்கு  காலையில சென்னைக்குப் போயிடுவேன்...

திங்கள்தான்  இங்க வருவேன்...சரியா 

என்னைத் தேடாத” என்று  சில பல  இச்சுக்கள்  போனிலே பரிமாறிக்கொண்டு  அழைப்பை  துண்டித்தனர்.

இப்போது  ஷ்ரவன்  நிருபமாவிடம் பேச போய்விட...ஹரிதாவின் கண்முன்னே காலையில்  நடந்த நிகழ்வுகள்தான் வந்தன.

காலையில்  பஸ்ஸில்  ஏறி  அமர்ந்ததும்...

அங்கே  பாட்டும்  கூத்துமாக இருக்க...

ஷ்ரவனின் பார்வை முன்னாடி அமர்ந்திருந்த  ஹரிதாவின் மேல்தான். ஒரு வழியாக  ரிசார்ட்  வந்து  சேர்ந்தனர். காலை  சாப்பாடு பரிமாறப்பட்டது.

சாப்பிடும்போது ஹரிதாவின்  அருகில்  அவளுடன்  இன்னொரு  டீம் லீடரான நிகிதா  இருந்தாள்...

இப்போது  இவர்கள்  இரண்டுபேரும் தோழிகளாக பழக ஆரம்பித்திருந்தனர்...

இருவரும்  பேசிக்கொண்டே  சாப்பிட...அருகில்  யாரோ அமர்வதை  உணர்ந்தவள் திரும்பி  பார்க்க  ஷ்ரவனும்  அஜயும்..

‘அதான  எங்கடா  ஆளக் காணும்னு பார்த்தா,கரெக்ட்டா  வந்திட்டாங்க’ என்று  மனதில்  நினைத்தாள்...

நிகிதாவும் இப்போது  ஷ்ரவனிடம் பேச பக்கத்தில் இருந்தவளுக்கு காதில்  புகை வராத குறைதான்...அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்க...அவளது  தட்டில்   இருந்த  இட்லியை தன்னுடைய கரண்டி வைத்து எடுத்து  சாப்பிட்டான்.

ஹரிதா  "அதான்  உங்க தட்டுல சாப்பாடு இருக்கே, அப்புறம் எதுக்கு என்கிட்டயிருந்து  எடுத்து சாப்பிடுறீங்க...உங்க தட்டுல இருக்க  பிரட் ஆம்லெட்டொ  சாப்பிடவேண்டியதுதான” என்று கையை நீட்டிக் கேள்விக்கேட்க.

“அதுவா கல்யாணம் பண்ணிக்கப்போறவ எச்சில்  சாப்பிடனும்னு வேண்டுதல்...பூஜா சாமியார்  சொல்லிருக்காங்க  உனக்குத் தெரியாதா? நம்பர் தர்றேன் வேணூம்னா கேட்டுக்குறியா?...

பொய்...என்று முகத்தை  சுளித்து  அழகுகாட்டிவிட்டு  எழும்பி செல்ல.

வாய்விட்டே  சிரித்தான்.

காலை உணவு முடிந்து  அந்த ரிசார்டின்  புல் வெளிப்பகுதியில்  எல்லோருக்கும் பொதுவான  விளையாட்டு போட்டிகள் வைத்தனர்...அஜயும் ஹரிதாவும்  பங்குகொண்டனர்.

ஷ்ரவன்  அங்கு ஒரு பார்வையாளன் மட்டுமே...அமைதியாக எல்லாவற்றையும்  பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்  அவ்வளவே...

மதிய உணவிற்குப்பின் டிரிங்கஸ் பார்டி, ஆண்களும் சில பெண்களும் எடுத்துக்கொண்டனர்...

அந்த இடத்தில்  தன்னுடைய கெத்து குறையக்கூடது என்பதற்காகவே... பீர் கூட குடிக்கவில்லை ஷ்ரவன்...

குடிப்பதும் குளிப்பதுமாக  ஒரே நித்தியானந்தமாக  எல்லாம்  நீச்சல் குளத்தில்  மிதக்க, ஹரிதவோ  பக்கத்திலிருந்த திண்டில்  அமர்ந்து  கால்களை  உள்ளேவிட்டு  விளையாடிக் கொண்டிருந்தாள்...

ஷ்ரவனுக்குமே  நீச்சல்  ரெம்ப பிடிக்கும்  என்பதால்  உள்ளே இறங்கியிருந்தான்...

அவளது  அருகில் வந்து  காலைப்பிடித்துக்கொண்டான்...ஹரிதாவோதன்  காலை வெளியே இழுக்க...அவன் விட்டானில்லை... “உள்ள இறங்கு வா. சேர்ந்து  நீச்சலடிக்கலாம் மஜவா இருக்கும்.

“ஐயோ! எனக்கு  நீச்சல் தெரியாது” என்று ஹரிதா பதற...

“அட வெத்துவேட்டு... வாய்மட்டுந்தானாஉலகத்துக்கே சேர்த்து வாய்ப் பேசறதான...

நீச்சலடிக்ககூடத் தெரியலை” என்று அவளை சீண்டவும்...எழும்பியவள்.

“போடா டேய்...” என்று சொல்லி நகர்ந்துவிட்டாள்... “உனக்கு  வாய்  ஜாஸ்திடி...இரு  உன்  வாயை அடைக்கிறேன்” என்று  கத்த...மறுபடியும் அவனைப் பார்த்து “போடா” என்று  வாயசைத்தவள் திரும்பி நடந்தாள்...அவனும் சிரித்துக்கொண்டே மூழ்கி எழும்பியவன்...எட்டிப் பார்க்க அவளைக் காணாது  முழித்தான்...

அந்தப்பக்கமிருந்து  ஹரிதாவின்கீழ் வேலை செய்யும் ஒரு பெண் நடந்து வந்துக்கொண்டிருந்தாள்..

ஷ்ரவன் திரும்பி  திரும்பி தேட இவ்வளவு நேரத்துக்குள்ள எங்கயும் போக வாய்பில்லையே என்று கண்களை சுழற்றினான்...

பெரிய நீச்சல் குளம்  நிறையபேர் இருக்க... திடீரென்று  ஒரு கைமட்டும் மேல தெரியவும் உள்ளே போகவுமாக இருக்க, பதறி நீந்திச்சென்று கையைபபிடித்து  மேல இழுத்தவனுக்கு  ஒரு நிமிடம் உயிரே நின்றுப்போனது...

தன்னோடு இழுத்துக்கொண்டு  சட்டென்று படிவழியாக தூக்கியவன்...அருகிலிருந்த சேரில்  இருத்தி, அவளது  முதுகைத்தட்ட...குடித்த தண்ணியை  வெளியே வாந்திப் பண்ணினாள். இன்னும் தெளியாதிருந்தாள்... 

அவளை தூக்கிக்கொண்டு தனது ரிசார்ட்  அறைக்கு வந்தவன்... அது அவனுக்கான தனி அறை.

அவளை கன்னத்தில் தட்டி எழுப்பினான்

சிறிது தெளிந்ததும்...

"அறிவிருக்காடி... அக்கம் பக்கம் கவனிச்சு போகமாட்டியா... இப்படித்தான் விழுந்துவைப்பியா, கொஞ்சம் தள்ளித்தான் நடந்துப்போனா என்ன குறைஞ்சிபோயிடுவியா”  என்று  திட்டிக்கொண்டே  டவலால் அவளுக்கு தலையை துவட்டியவன்...உடம்பையும்  சேர்த்து துடைத்துவிட்டான்....அவளுக்கு கொஞ்சம்  கூச்சமாக இருக்க சிறிது குறுகி அமர்ந்தவளை, “ஒழங்கா  உட்காருடி  துடைக்க” என்று  அதற்கும்  அதட்டிக்கொண்டு  துடைத்தான்...

“வேற ட்ரஸ் வச்சிருக்கியா என்ன” என்று பேசிக்கொண்டே  அவனது  பேக்கில்  இருந்து  தனது சட்டையை எடுத்து “மாத்து” என்று குடுத்தவன்... “இரு” என்று  வெளியே சென்றான்...

ஹரிதா இப்போது என்ன நடந்தது என்று  யோசிக்க  நல்லா நியாபகம் வந்தது... ஷ்ரவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே திரும்பியவளை  பின்னாடி இருந்து  இரு கைகொண்டு  யாரோ தள்ளிவிட்டிருந்தனர்...

மெதுவாக டீ சர்ட்டைக் கழற்றி அவளது சட்டைய மாற்றினாள்...அவனது சட்டை  பெருசாக  இருந்தது...

உள்ளே வந்தவன் சூடாக  டீ எடுத்துக்கொண்டு வந்து  அவளுக்கு  குடுத்துவிட்டு  தானும் குடிக்க ஆரம்பித்தான்...

அவனது  முகத்தையே ஏறிட்டுப்பார்த்து நிற்க “என்ன சைட்டடிக்கறீயா” என்று கண்ணடித்துக்கேட்க... “இல்லை” என்று தலையாட்டியவள்  உண்மையைச் சொன்னாள்...

அவனுக்கோ இது அதிர்ச்சி... “நான் மூழ்கி எழும்பவும், நீ நின்றிருந்த இடத்தில்  உன்  டீம் மெம்பர் பொண்ணுதான் நின்றிருந்தாள்...அவ மேலத்தான் எனக்கு சந்தேகம் பார்த்துக்கலாம்” என்று கோபத்தில்  பொறுமினான்.

சட்டென்று அவளை இழுத்துக்கட்டிக் கொண்டவன்... “நான் மட்டும் பார்க்கலைன்னா என்னாகிருக்கும்” பதறினான்.

“என்னாகிருக்கும்  ஹரிதாவிற்கு  பால்  ஊத்திருப்பாங்க..” என்று சிரிக்க...அவளது தலையில் நறுக்கென்று கொட்டியவன்... “வாய் குறையுதாப்பாரு” என்றான்.

இருவருக்குமே மனதினில் நல்ல நெருக்கம் தானாக வந்திருந்தது... 

அவளது கன்னத்தை தடவியவன்... “வேற யாரோனு நினைத்து கையப்பிடித்து  தூக்கினேன்...  நீ என்றதும்  ஒரு நிமிஷம் உயிர்போயிடுச்சுடி...” என்றவன் அவளது  இதுழ்களில் முத்தம் வைத்தான்.அவள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை...அவனோடு ஒட்டிக்கொண்டு கட்டிக்கொண்டாள்

" ஐ லவ் யூ  டி"

" நானும்"

"என்னது நானும்" என்று  ஷ்ரவன் கேட்க..

"நானும் உங்களை லவ் பண்றேன்னு சொன்னேன்" என்று அவனது நெஞ்சினில் தட்டிக்கொண்டே சொல்லவும்...

அவளது கையைப்பிடித்து முத்தம் வைத்தான். அதன் பின் ஷ்ரவன் ஹரிதாவை ஒட்டிக்கொண்டேதான் நடந்தான் திரும்பி வரும் வரை

அதன் பிறகு தங்களது அறைக்குள் வந்தவள் தான் கொண்டுவந்திருந்த ஷர்ட் மற்றும் லாங்க ஸ்கர்ட் அணிந்துக்கொண்டாள்.

நினைவுகளிலயே முழ்கிப்போய் ...

அப்படியே தூங்கிப்போனாள்...

அடுத்தநாள் காலை விடுமுறை என்பதால்  தாமதாமாக எழும்பியவள் காவ்யாவிற்கு அழைத்து “வெளியே போகலாமா?..” என்று கேட்டு...இருவரும்  வழக்கம்போல  அந்த வணிக வளாகத்திற்கே  சென்றார்கள்.

அங்கே  எல்லாம் வாங்கிவிட்டு, சாப்பிடவென்று  அதே ரெஷ்ட்டாரண்டிற்கு செல்லவும்...  தன்னையறியாமலயே  உதட்டில்  புன்னைகையை ஒட்டிக்கொண்டாள்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே “ஹரிதா” என்று அழைக்க திரும்பி  பார்த்தாள் அஜய்  நின்றிருந்தான்...

“ப்ரோ வாங்க” என்று அழைத்து  தங்களுடன் இருக்க சொன்னவள்  அவனுக்கும்  சாப்பாடு  ஆர்டர்  செய்தாள்...

காவ்யாவோ “என்னடா  நடக்குது” என்ற  கண்களை உருட்டிக்கொண்டு இருக்க... அதைப்பார்த்து இருவரும் ஹைபை கொடுத்துக்கொண்டு  சிரித்தனர்...

"அஜய் ப்ரோ என்னோட  டீம்லதான் இருக்காங்க... ஷ்ரவன் தான் ஐடி டைரக்டர்...”என்றதும் வாயைப் பிளந்தவள்.

“ஏன்டி சொல்லலை” என்று  காவ்யா ஹரிதாவிடம் சாடினாள்...

இப்போதும் மூவரும் சாப்பிட்டு வெளியே வந்தனர்...அஜய் விடைப்பெற்று செல்லவும் காவ்யாவிடம் தனது காதல் கதையை சொன்னாள்.

“அடிப்பாவி என்கிட்ட  செல்லவேயில்லை” என்று சண்டையிட்டவள் “கல்யாணத்துக்காவது சொல்லுவியா? என தோழிகள் இருவருக்கும் அன்றைய தினம் ஒருவரை ஒருவர்  கலகலப்பாகப் பேச அப்படியே அந்த நாள் சென்றது...

அடுத்தநாள் ஆபிஸிற்கு சென்றவளுக்கு  ஷ்ரவனிடம்  சண்டையிடாமல் பொழுதே போகவேயில்லை... பார்க்கணும்போல தோன்றியதும்  அவனுக்கு  அழைக்க  அது  ஸ்விட்ச்டு ஆஃப் என்று  வந்தது...மாலை வீட்டுக்குச் சென்றவளுக்கு அதிர்ச்சி.

வீடு முழுவதும்  ஆட்கள் நிறைந்து இருக்க  சுமித்ரா அவளை உள்ளே அழைத்து சென்று, புடவை உடுத்தி வரச்சொன்னார்.

என்னம்மா என்று கேட்க... “உன்னை  பொண்ணுப்பார்க்க வந்திருக்காங்க,சென்னையிலயே பெரிய இடமாம்,அவங்களே  உன்னை பிடிச்சுப் பொண்ணுப் பார்க்க  காலையிலயே போன் செய்து கேட்டாங்க...சரினு சொன்னோம்...இப்போ என்னனா சாயங்காலமே  எல்லோரும்  திடீர்னு வந்து நிக்குறாங்க, நீ சீக்கிரம் தயாராகி வா” என்றார்.

ஹரிதா " ம்மா ...எனக்கு  உங்ககிட்ட  ஒரு விசயம் சொல்லணும்..ப்ளீஸ்என்றாள்.

“எதுனாலும்  அவங்கப் போனதுக்கு  அப்புறம்  பேசிக்கலாம்” என்று சொன்னவர் வெளியே சென்றுவிட்டார்.

ஹரிதாவிற்கே  உடல் பதறியது. ‘என்னடாயிது காதல் சொல்லி மூன்று நாள்கூட ஆகலை,என் காதலுக்கு  வில்லன் வந்துட்டானா? என யோசித்தவள்.

ஷ்ரவனுக்கு  அழைக்க  அழைப்பு போய்கொண்டிருந்ததே தவிர... எடுக்கப்படவில்லை. மற்ற நேரம் பின்னாடியே  ஒட்டிக்கொண்டே  அலைந்தான்... இப்போ எங்கப் போனான்? என்று  ஷ்ரவனுக்கு  மனதிற்குள்  அர்ச்சனை செய்துக்கொண்டிருந்தாள்.

என்ன செய்ய என்று யேசித்தவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.

அத்தியாயம்-8

ஹரிதா மிகவும் யோசித்து,இப்போது எதுவுமே பேச முடியாது.அப்படி செய்தால் அது தன் தாய்தந்தையின் மரியாதையை கெடுக்கற மாதிரி இருக்கும், எல்லோரும் கிளம்பியதும்உடனே  தனது காதல் விசயத்தை  சொல்லிட வேண்டும் என்று

முடிவு எடுத்தாள்... அதனால் ஹரிதா தன்னை தயாராக்கி கொண்டு வெளியே வந்தாள்.. சாதரணமாகவே  அவள்  அழகித்தான் இப்போது  இன்னும் கூடுதல் ஒப்பனையில் தங்கச்சிலை போல  அழகாக இருந்தாள்.

“எனக்கு போன் செய்து சொல்லிருக்கலாமே.ஏன் எனக்குத் தகவல் சொல்லலை” என்று தன் தாயிடம் கேட்டாள். “அக்காவும் இன்னும் வரலையா? ஏன்?..” என்று கேட்டவுடன், சுமித்ரா "எங்க நமக்கு டைம் கொடுத்தாங்க.காலையில் வரட்டுமானுக் கேட்டாங்க...இப்படி  உடனே வந்து நிற்பாங்கனு கனவாக்கண்டேன்.அதுவும்  உனக்கு எந்த தகவலும் சொல்லவேண்டாம்

நீ எப்போ வந்தாலும்  பரவாயில்லை, இருந்து  பார்த்திட்டுப் போறோம் அப்படினு  மாப்பிள்ளை பையனும் அவங்கம்மாவும்  சொன்னாங்க" என்றார் .

ஹரிதாவிற்கு ஆச்சர்யம்...அவ்வளவா அந்தக் கேனையனுக்கு  என்னைப் பிடிச்சிருக்கு.அவனுக்கு சென்னையில் பொண்ணு எதுவும் கிடைக்கலையா?அங்கயிருந்து  பெங்களூருக்கு  வந்திருக்கான் என மனசுக்குள் பல நல்ல வார்த்தையில்  திட்டிக்கொண்டிருந்தாள்.

“சஹானாவிற்கு தகவல் சொல்லிட்டேன் எப்படியும் வந்திருவா.நீ வா உனக்காகதான் காத்திருக்காங்க... என்று மகளை அழைத்து கொண்டு வெளியே வந்த சுமித்ரா.

முன்னறைக்கு  அழைத்து வந்து, எல்லோரிடமும் அறிமுகப்படுத்தினார்.

“இதுதான் எங்க இரண்டாவது பொண்ணு ஹரிதா... என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.

ஹரிதாவிற்கோ அவஸ்தையாக இருந்தது... மரியாதையின் நிமித்தமாக எல்லோருக்கும்,நிமிர்ந்து வணக்கம் சொன்னவள் மறுபடியும் குனிந்து கொண்டாள். யாரையும் பார்க்ககூட பிடிக்கவில்லை

அதில் ஒருத்தர்  "ஹரிதாவை உட்கார வைங்க எவ்வளவு நேரம் நின்றிருப்பாள்" என்று சொல்லவும்.

ஹரிதாவோ தனது அம்மாவின் முகத்தை திரும்பி பார்க்க... சுமித்ராவும் சரியென்று தலையசைத்து சொன்னார்.

அதற்குள்ளாக  பக்கவாட்டில் இருந்து  "பொண்ணுக்கு பாடத் தெரியுமாகொஞ்சம் நடந்து காண்பிக்கச் சொல்லுங்க...எப்படி நடக்குதுனு நாங்க பார்க்கணும்ல” என்று நக்கலாக யாரோ கேட்கவும்... அந்த குரலுக்கு சொந்தமானவன் ஷ்ரவன்தானே என்று திரும்பிபார்க்க... சாட்சாத் ஷ்ரவனே அங்கு கால்மேல் கால்போட்டு  அமர்ந்திருந்தான்.

அவனைப் பார்த்தவுடனே  அவளுக்கு ஆனந்த அதிர்ச்சி... பின் கோபம் என்று அவளது முகபாவனைகள் மாறியதை பார்த்து எல்லோரும் புன்னகைத்தனர்.

அங்கு நிருபமா, தேவானந்த் அக்க்ஷரா அவளது கணவன் மற்றும் பிள்ளைகள் என்று மொத்த  குடும்பமும் வந்திருந்தனர்.

எப்படி என்று தனது புருவம் உயர்த்தி ஷ்ரவன் கேட்க, அவளுக்கு இப்போது வெட்கம் கலந்த சிரிப்பு வந்தது...

அக்க்ஷரா ஹரிதாவின் அருகில் சென்று அவளது கையை பிடித்து அழைத்து தன்னருகில் இருத்திக்கொண்டாள்.

இதற்கிடையில் ஹரிதாவின் அக்கா சஹானாவும் வந்துவிட்டாள்.

கிருஷ்ணாவிடம் இப்போது தேவானந்த் பேசினார்... “ஷ்ரவனின் ஆபிஸ்லதான் ஹரிதா வேலைப் பார்க்குறா, எங்க பையனுக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்குனு சொன்னான். அதுதான் பொண்ணைப் பார்த்திட்டுப் போகலாம்னு  வந்தோம்.இப்போ எங்களுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு” என்று அவர்களது  முழு சம்மதத்தை சொன்னார்.

“ஏற்கனவே எங்களை பற்றின எல்லா விபரமும் காலையிலயே உங்ககிட்ட சொல்லிட்டோம்... விசாரிச்சிக்கோங்க...

என்றதும்...

கிருஷ்ணா "எங்களுக்கு சம்மதம் அதனால்தான் பொண்ணு பார்க்க வர்றீங்க என்றதும் சரினு சொன்னேன்.

ஏன்னா சும்மா சும்மா பெண் பிள்ளைகளை அலங்காரம் பண்ணி எல்லார் முன்னாடியும் நிற்க வைக்கிறதுல எனக்கு உடன்பாடு கிடையாது...நீங்க கேட்டதுமே  காலையில் எல்லாம்  விசாரித்து என் மனைவியுடன் கலந்துப்பேசி எங்களுக்கு  விருப்பம் அதனாலத்தான் நீங்க வர்றதுக்கு சம்மதித்தோம்"

எல்லாருக்கும் அவரோட பதில் பிடித்திருக்க, எல்லா விசயங்களையும் பேசி முடித்தனர். எவ்வளவு சீக்கிரம் திருமணத்தை வைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வைக்கணும் என பேசி ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்.

நிருபமா "நாங்க  வீடுக்குப்போயிட்டு  எல்லாருக்கும தோதான ஒரு நாள்  பார்த்து சொல்றோம்...நீங்களும் பாருங்க"

அதற்குள்ளாக அவர்களுக்கு சாப்பாடு எல்லாம் தயார் செய்து வைத்திருந்தனர்...

தேவானந்த் கிருஷ்ணா இருவரும் தங்கள் கொண்டுவந்த தாம்பூலத்தட்டுக்களை கைமாற்றினர் ஒப்புக்காக..ஆதலால் கை நனைத்தவிட்டு செல்வது முறை என்பதால்,சாப்பாடு முடித்துவிட்டு கிளம்புவதற்கு வெளியே வரவும், ஷ்ரவன் மெதுவாக  திரும்பி ஹரிதாவைப் பார்த்தான்.

எல்லாரும்  முன்பக்கத்தில் உள்ள  தோட்டத்தில்  நின்றுக்கொண்டிருக்க, யாரையும்  கவனிக்கவில்லை...

திரும்பிப் பார்த்த ஷ்ரவன், ஹரிதா தனியாக நிற்பதை கண்டு, யாருமறியாது மெதுவாக அவளிடத்தில் வந்தவன், அவளை கதவிற்கு இடையே இழுத்துக் கொண்டு சென்று,அவளின்  கண்களை பார்த்து “ஐயாவோட சர்ப்ரைஸ்  எப்படி இருந்தது?...” என்று தன் புருவம்உயர்த்தி பரவசத்துடன் கேட்டான்.

தனது கையை  அவன் பக்கம் நீட்டியவள் “போடா டேய்!கொஞ்ச நேரத்தில் என் இதயம் எப்படி  பயத்துல  துடிச்சதுனு  தெரியுமா? எத்தனக் கால் பண்ணேன்... நீங்க எடுக்கவேயில்லை பயந்துட்டேன்...” என்று  கண்கள் லேசாக நிறைந்தது... “சர்ப்ரைஸாம்  சர்ப்ரைஸ்” என்று பேசியவளின் பேச்சு  பாதியிலயே  தடைப்பட்டது.

தனது கண்களை விரித்து  மூச்சை உள்ளிழுத்தாள், அவனோ கண்களைமூடி  அவளது  வாய்க்குள் முத்தெடுக்கலாமா? இல்லை  தேனெடுக்கலாமா? என்று துலாவியவன் இறுதியில் எதுவென்றாலும் சரிதான் என்று லயித்து, அவளது சேலை மறைக்காத வெற்றிடையில் கைக்கொடுத்து  தன்னோட உயரத்திற்கு வசதியாக வைத்தான்.

அவளுக்குமே இது  தேவையாக இருந்தது.வேறு யாரோ பொண்ணு பார்க்க வந்திருக்கின்றனர் என்று  மனதிற்குள் நடுங்கியிருந்தாள்.அவளும்  அவனுக்கு  இசைந்துக் கொடுக்க... இதழின் மேல் எழுதிய கவிதையை நிறுத்தி மெதுவா அவளை விடுவித்தவன்.

ஹரிதாவின்  அக்காஹரிதாவிடம்  பேச வந்தவள் கதவிற்கிடையே நடந்ததை கேட்டவள்...தனது  தங்கைக்காகவும், அவர்கள் இருவரின்  காதலுக்காக வந்திருக்கின்றனர் ஷ்ரவனின் மொத்தக்குடும்பமும் என்றதும், மிகவும் சந்தோசப்பட்டாள்.தனது தங்கைக்கு  நல்லதொரு குடும்பம் கிடைத்திருக்கு என்று,இந்தப் பக்கம்  வேறு  யாரும் வந்துவிடாதபடி  சிறிது தள்ளி வாசலின் முன்னே நின்றுக்கொண்டாள்.

“அன்றைக்கே சொன்னேன்தான திங்கள் தான் வருவேன்... என்னைத்தேடாத” என்று அதுக்கு  இதுதான் அர்த்தம்.

ஹரிதா “ஆமா நல்ல  அர்த்தத்தோட சொன்னீங்க போங்க” என்றவள்,அவன் சட்டை பட்டனைப்பிடித்து இழுத்துக்கொண்டே அவனிடம் கொஞ்சிப்பேசி...சிணுங்கினாள். “ஆனாலும் இந்த சர்ப்ரைஸ் பிடிச்சிதான் இருக்கு,அதவுமில்லாமல் நம்ம வீட்ல உள்ள எல்லோரையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று மெதுவாக  வார்த்தைகளை  இழுக்க...

“அப்படியா? என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்னு  சொல்லு... சொல்லு” என்றவன். “இந்த காதலனுக்கு எந்த பரிசும் கிடையாதா... எதாவது தரலாமே?..” என்று அவளது உதட்டினைப்  பார்த்துக்கொண்டிருக்க...  

அதற்குள்ளாக  வெளிய இயிருந்து  ஷ்ரவனை எங்கே? என்று  யாரோ தேடும் சத்தம்  கேட்டது

“சரி என்னைத் தேடுறாங்க  நான் வர்றேன்...” என்று  போகப் போனவனின்  டையை பிடித்து இழுத்ததும்,அவன் இவளருகில் குனிய சட்டென்று அவனது முகம் பற்றி  தனது இதழ்களால் முகமெங்கும் மத்தாப்புச் சிதறலாக முத்தங்களை வாரி வாழங்கினாள்...

அவனும் அவளுக்கு வாகாக  இசைந்து  கொடுத்தான்...அவளாக முன்வந்து கொடுக்கும்  முதல் முத்தமல்லவா.ஆயிரம் பூக்கள் இதயத்தில்  மலர.

முகங்கொள்ளாப் புன்னகையுடன் அதை வாங்கிக்கொண்டான்.

அவனை விடுத்தவள் வெட்கத்தில் தனது முகத்தினை மூடி நின்றாள்...அவளது கைகளில் லேசாக உதட்டினை ஒற்றிவிட்டு... “போயிட்டு வர்றேன்டி  சண்டைக்கோழி” என  வெளியே வந்து தனது தந்தையுடன் நின்றுக்கொண்டான்.

அவளது அக்கா கணவன் ஸ்ரீராம் இவனை ஒரு மார்க்கமாகப் பார்த்து வைக்க, கையைக் காண்பித்து என்னை விட்ருங்க தெய்வமே என்று  சொல்ல,அவனும் சிரித்து  பொழைச்சுப்போ என்று  ஷ்ரவனை வம்பிழுத்தான்.

இப்படியாக இருவீட்டாரின் சம்மதத்தோடு அவர்களின் காதல் கைகூடியது.அதற்கு முதற்காரணம் ஷ்ரவன்தான்.தனது தாயிடம் சென்னைக்கு சென்றவுடனே  தனது காதல் விவகாரத்தை சொல்லிவிட்டான்...

அவரும் குடும்பத்தார்  அனைவரிடமும் அன்றிரவே கலந்துப்பேசினார்...

ஹரிதாவின் குடும்பத்தைப் பற்றி உடனே  விசாரித்துவிட்டார்  தேவானந்த்.. விசாரித்ததில் பொண்ணுவீட்லயும்  எந்தவிதத்துலயும் குறைகள் இல்லாதிருக்கவும்  தேவானந்த் சரியென்று சம்மதித்துவிட.

எதற்கு நாட்களைக் கடத்தணும்  அதுவும்  நம்முடைய ஒரே மகன் என்று அடுத்த நாளே கிளம்பி பொண்ணுப் பார்க்க வந்து...இப்போது  பேசி  முடித்துவிட்டனர்... நாள்குறிப்பது மட்டுந்தான் பாக்கி.

ஷ்ரவன் வீட்டில் எல்லோரும் மனநிறைவுடன் கிளம்பி சென்றதும்...கிருஷ்ணாவும் சுமித்ராவும்  உள்ளே வந்தனர்.

சஹானா தங்கையின் அருகில்  இருந்தாள்...திடீரென்று  சொல்லவும் அவளது கணவனால் வேலையிலிருந்து வர முடியவில்லை தனது மகனை மட்டும் தூக்கிக்கொண்டு வந்திருந்தாள்.

இப்போது  ஹரிதாவுடன் எல்லோரும்  சாப்பிட  அமர்ந்தனர்.பசியில்  அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.கிருஷ்ணா  மெதுவாக சுமித்ராவிடம் “நம்ம சேர்த்து வச்சிருக்கறது எல்லாம்  இரண்டு பிள்ளைங்களுக்குத்தான்.நமக்கும்  சொத்து, ஹாஸ்பிட்டல் எல்லாம் இருக்கு... ஆனா நான் விசாரித்தவரையில் அவங்க லெவல் நம்மளைவிடக் கொஞ்சம்  மேலதான்... அதுதான் அவங்களுக்குத்தக்க நம்மளும் எல்லாம் செய்யனும்னு யோசிக்குறேன்” என்றார்.

இந்தப்பேச்சை  ஹரிதா எதிர்பார்க்கவில்லை... வந்தவங்களும் பொண்ணு பிடிச்சிருக்கு என் சொன்னாங்கதான்.வேறு எந்தப்பேச்சும் பேசவில்லை.

ஹரிதா "அவங்க சீர் பத்தி எதுவுமே கேட்கலையே டாடி"

கிருஷ்ணா "அவங்க கேட்கலைன்னா நாங்க  உனக்குத் தர்றது தந்துதான ஆகனும்...அதுதான்” யோசிக்குறேன்.

சுமித்ராவும் "பார்த்துக்கலாம் நல்ல குடும்பம்...நம்ம பொண்ணுக்குத்தான் குடுக்கப்போறோம்" என்று அந்தப்பேச்சுக்கு  முற்றுப்புள்ளி வைத்தார்.

எல்லோரும்  சாப்பிட்டு முடித்து  தூங்குவதற்கு செல்ல...சஹானா தங்கையிடம் வந்தவள்  மெதுவாக " நீயும் ஷ்ரவனும்  விரும்புறீங்கதான" என்றுக்கேட்கவும்  அக்காவிடம்  எல்லாவற்றையும் கூறிவிட்டாள்.

சஹானா "ரொம்ப சந்தோசம்...ஷ்ரவன் உனக்காகத்தான்  இவ்வளவையும்  செய்திருக்கான்,நம்ம அப்பா அம்மாவுக்கு  தெரியாமலயே, இது பெரியவங்க நடத்துற கல்யாணம் மாதிரி, ஆனாலும் கொழுந்தன் கொஞ்சம் வேகமாக போறாரு  எல்லா விசயத்திலயும் கொஞ்சம்  தடை போட்டு வைமா.. கல்யாணம்  முடியுற வரைக்கும்...” என்று  தங்கையிடம் விளையாட்டாகப் பேசியபடியே  தூங்கச்சென்றாள்.

ஹரிதாவோ “போ க்கா...” என்று  வெட்கப்பட்டாள்.

இப்போது நேரத்தைப் பார்க்க  மணி  பனிரெண்டைத் தாண்டியிருந்தது...

ஷ்ரவன் மூழிச்சிருப்பாங்களா என்று சந்தேகத்துடனே அவனுக்கு அழைக்க முதல் அழைப்பிலயே எடுத்தவன்... “சண்டைக்கோழி  இன்னும் தூங்கலையா? முழிச்சிட்டிருக்கியா?..” என்று கிறங்கியக்குரலில் கேட்க.

ஹரிதாவின் குரலும் அப்படியே இருக்க  புரிந்துக்கொண்டான்... சரிதான் சண்டைக்கோழியும் இப்போது இந்த சேவலைத் தேடுது என்று புரிந்தவன்...ரகசிகயமாக அவளிடம் பேசினான்.

போனிலயே மொத்தக் காதலையும்  வழியவிட்டிருந்தனர்..

இருவரின்  உரையாடல்களும்  அதிகாலைவரை நீண்டுக்கொண்டுப்போனது... எப்போது தூங்கினார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.

அவனது ஃபிளாட்டிலயே அன்றிரவு எல்லோரும் தங்கியிருந்தனர்... அதிகாலையில் ஷ்ரவனின் குடும்பத்தார் எல்லோரும் சென்னைக்கு கிளம்பி சென்றுவிட்டனர்.

ஷ்ரவன் காலையில் ஆபீஸிற்கு  சென்றதும், அங்கே அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆன்சைட் காலுக்காக சில பேரை...அங்கு தேற்வு செய்து, இன்னும் இரண்டே நாளில் கிளம்ப வேண்டியதிருந்தது.

திருமணம் அடுத்த மாதத்தில் வைப்பதாக நேற்றிரவே  அவர்கள் குடும்பத்தில் எல்லாருடனும் அமர்ந்து பேசி முடித்திருந்தனர். இப்பொழுது மூன்று மாதம் ஆன்சைட் காலுக்காக செல்ல வேண்டிய நிர்பந்தம் இருந்தது...

முக்கியமான விசயம் என்னவென்றால்  ஆன்சைட் செல்வதற்கான லிஸ்டில் ஷ்ரவனின் பெயரும்  ஹரிதாவின் பெயரும் இருந்தது.

அதைப் பார்த்ததும் அவனுக்கு சிறிது வருத்தம்... இப்போதைக்கு திருமண காரியங்கள் எதுவும் செய்ய இயலாத நிலை.

மூன்று மாதம் கழித்து, இவர்கள் திரும்பி வந்ததும் தான் திருமணம் செய்ய முடியும் வேறு வழியே இல்லை.

அவர்களுக்கு ஒவ்வொரு டீமிலிருந்தும் இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

அனைவரையும்  அழைத்து எல்லாவற்றையும்  அறிவித்திருந்தான்...அஜய்க்கோ சந்தோசம்... இதிலயும் சில  அரசியல் நடக்கும்...ஷ்ரவன் அவனது நண்பன் என்பதால்  அது நடக்கவில்லை...

ஹரிதாவும் அதைக்கேட்டு  வருத்தப்பட்டாள்... அவளிடம்  அது சொல்லப்பட்டதுமே அழாதக்குறையாக  ஷ்ரவனை நோக்கிப்பார்க்க,அவனால் என்ன செய்யமுடியும்.

இப்போதாவது  இருவரும்  சேர்ந்து  போகலாம் என்றதொரு வாய்ப்பிருக்கு...அவள் வேண்டாம்  என்றால்  ஷ்ரவன் மட்டும்தனியாக செல்லவேண்டும்... அதுவும் மூன்று மாதம் பிரிந்திருக்கவேண்டும்.

அதனால்  ஹரிதாவை தனியாக அழைத்து,என்ன செய்யலாம் சொல்லு இப்ப இரண்டு பேரும் போய்தான் ஆகனும்டா...என்று அவளது  கையைப்பிடித்து  தடவியவாறே சொல்ல... வெடுக்கென்று தனது கையை கோபமாக இழுத்துக்கொண்டாள்.

“நீங்கதான என்னோட  பெயரை எழுதிக்கொடுத்தது...” என்க.

“ஆமாடா, அப்போ நம்ம  இப்படியா  ஒட்டிக்கிட்டிருந்தோம், இல்லை தான...அதான்  சேர்த்தேன்.இப்படி வரும்னு கனவாக்கண்டேன் என்மேல எதுக்கு  கோபப்படுற...” என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.

அவனை முறைத்துக்கொண்டு நின்றவளை பிடித்து தனது மடியினில் இருத்தி... “மூணு மாசம் அமெரிக்காவில் காதலர்களா என்ஜாய் பண்ணுவோம்...வந்த உடனே கல்யாணத்த வைக்கச்சொல்லி பெரியவங்க கிட்ட பேசிக்கலாம்” என்று சொன்னான்.

அவள்  அமைதியாக இருக்க "என்னடி  யோசிக்குற...வேணும்னா நாளைக்கே  ரிஜிஷ்டர் மேரேஜ்  பண்ணிக்கலாம்...

இப்பவே  அப்பா அம்மாகிட்ட  பேசுறேன்  ஓகேவா.

"அதுக்காக  இல்லை ஷ்ரவன்.என்னவோ மனசுக்கு  கஷ்டமா  இருக்கு என்று...திரும்பி  அவனது முகத்தை  பாவம்போல  பார்த்தாள்.நீங்க இல்லாமல் நான் எப்படி... ஏதோ பேட் வைப்ரேஷன்.நம்ம கல்யாணம் பேசி ஒருநாள்கூட ஆகலை அதுக்குள்ள தடை வந்திட்டுப் பாருங்க” என்றவளது  கண்ணீர் அவன் கைகளில் விழவும்...அதை துடைத்துவிட்டவன்.

அவளது முகத்தை  தனது இருகைகளில் தாங்கி "என் மேல் அவ்வளவு காதலா"

ஹரிதா தனது தலையை மெதுவாக மேலும் கீழும் அசைக்க...

"தேங்க்ஸ் டி"

“எந்தப்பயமும் உனக்கு வேண்டாம்.நீயே வேண்டாம்னு சொன்னாலும்.

உன்னைத் தூக்கிட்டுப் போயிடுவேண்டி...

என் செல்ல சண்டைக்கோழி...” என்று அவளது நெற்றியில் முட்டியவன்.

“நானும்  உன்கூடத்தான் வர்றேன்  சரியா...எந்தப்பயமும் வேண்டாம்.

போ” என்று  அவளை விடுவித்தவன்.

இப்படியாக மனதேயில்லாமல்  இருவரும்  ஆன்சைட்டிற்கு  செல்ல அரைகுறை மனதுடன்  தயாராகினர்.

மாலையில் ஹரிதா வீட்டிலும் சரி ஷ்ரவனின் வீட்டிலும் சரி பிரளயம்தான்.இருவரும்  அமெரிக்கா போகவேண்டாம். அங்கப்போய்தான் சம்பாதிக்கணும்னு இல்லை என்று...

ஷ்ரவன்  போனில் அழைத்துதான் தகவலை கூறியிருந்தான்...அதற்குள்ளாக  இருவீட்டுப் பெரியவர்களும்  ஒருவரை ஒருவர் அழைத்து  என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தனர்...

ஒருவழியாக எல்லோருக்கும்  பதில் சொல்லி, சமாதானப்படுத்தி இருவீட்டிலும் சம்மதம் வாங்குவதற்குள்  ஷ்ரவன் ஒருவழியாகிவிட்டான்...

இருவரின் பெற்றோர்களும்  சில முக்கியாமன சொந்தங்களை அழைத்து நிச்சயதார்த்தம் நடத்திவிட்டனர்.

இரண்டே நாளில்  எல்லாவற்றையும் தயாரக்கிக்கொண்டு  இப்போது பெங்களூரு ஏர்போர்டில்  நிருபமா, சுமித்ரா, கிருஷ்ணா மூன்று பேரும்  அவர்களை  வழியனுப்ப  வந்திருந்தனர்.

ஹரிதாவிற்கு  இது  முதல் ஆன்சைட்... ஆனாலும் ஷ்ரவன் இருப்பதால்  பயமின்றி பிரயாணத்திற்கு தயாராகயிருந்தாள்.

அவர்கள் இருவருக்குமே தெரியவில்லை  அவர்களின் வாழ்க்கையே இந்தப் பயணத்தில்  தலைகீழாக மாறப்போவதை...

சந்தோஷமாக  ஆரம்பிக்கபட வேண்டிய திருமண வாழ்க்கை முற்றிலும் வேறாக ஆரம்பிக்குமென்று

அத்தியாயம்-9

விமானத்தில்  ஏறியதும் ஷ்ரவனின்  அருகில்  அமர்ந்த  ஹரிதாவிடம் “சீட் பெல்ட் போட்டுவிடட்டுமா” என்று  கேட்டு  மாட்டிவிடப்போக... “எனக்கே தெரியும் நானே  மாட்டிக்குறேன்...

ஆன்சைட்டுக்குத்தான்  போனதில்லையே தவிர .ஃபிளைட்ல  ட்ராவல்  செய்திருக்கேன்... அப்பா முன்னாடிலாம்  வருஷத்துக்கு  ஒரு தடவை எங்கயாவது  கூட்டிட்டுபோவாங்க  அந்தமான், மாலத்தீவிற்கு போயிருக்கோம்  உங்க  உதவிக்கு நன்றி” என்று பெல்ட் போட்டாள்.

“ஷ்ரவன் பெல்ட் போடுற சாக்காக வைத்து ஒரு  ரொமான்ஸ் பண்ணலாம்னா விடமாட்டுக்காப்பாரு” என்று அழுத்துக்கொண்டான்.

“யாரு நீங்க...எப்படா  கேப் கிடைக்கும்னு  காத்திட்டிருக்கீங்க.சான்ஸ் கிடைச்சா விடுவீங்களாக்கும்” என்று அவள் நொடிக்க...

ஷ்ரவனோ “ரிஜிஷ்டர் மேரேஜ் செய்திருந்தா  இது நமக்கு  ஹனிமூன் ட்ரிப்பா இருந்திருக்கும்.உன் மாமியாரும்  என் மாமியாரும் விட்டாங்களா... இன்னும்  மூணு மாசம் காத்திருக்கணும்டி” என்று  சலித்துக்கொண்டான்.

“பேருக்கு  ஒரு  நிச்சயதார்த்தம் மட்டும்  வச்சிட்டு விட்டுட்டாங்க.அத்தனைப்பேரை அழைச்சு  நிச்சயதார்த்தம் மட்டும்  வச்சதுக்கு பதிலா  பேசாம கல்யாணமே செய்து வச்சிருக்கலாம்.இப்போ  பாரு  எனக்குத்தான்  அவஸ்த்தை.

பக்கத்துலயே விருந்தை வச்சுக்கிட்டு  சாப்பிடக்கூடாதுனு  கையைக் கட்டிப்போட்டா  எப்படி டி...” என்று  அவளை ஏக்கமாக பார்த்து வைத்தான்.

ஹரிதாவோ நன்கு சிரித்தவள் "இதுக்குத்தான் அக்கா  உங்ககிட்ட இருந்து  கொஞ்சம் தள்ளியே இருக்க சொன்னாள்"

ஷ்ரவன் "ஏன்டி  உங்கக்காவுக்கு  இந்த  கொலைவெறி"

“பொண்ணுப் பார்க்க வந்தன்னைக்கே கதவிடுக்குல  ரொமன்ஸ் பண்ணின ஆளுதான நீங்க...பின்ன  இப்போ  தனியா வேறப் போறோம்... பிள்ளைக்குட்டியோட  திரும்பி வந்திறாதனு எச்சரிக்கை செஞ்சா...” என்று இப்போது  வெட்கம் கலந்து புன்னகையோடு  வேறுபகக்மாக  திரும்பி  சிரித்தாள்.

"ஆமாடி  அப்படித்தான் ரொமான்ஸ் பண்ணுவேன்...என் ஆளுக்கிட்ட  நான் பண்றேன்...வேறயாருக்கிட்டயுமா  ஒரு முத்தங்குடுனு கேட்கமுடியும்...”என்று அவளது முகத்தை திருப்பி  கன்னத்தில் முத்தம்  வைக்க...அவள் கண்களை விரித்து  ஆ...என்று அதிர்ந்துப் பார்க்க...அவனோ எப்படி என்று  கண்ணை சிமிட்டினான்...

ஹரிதாவோ இப்போது சுற்றும்முற்றும் பார்க்க...

“யாரும் பார்க்கலை பார்க்குறமாதிரியா குடுப்போம்.. நாங்களாம்  விவரமாக்கும்” என  ஷ்ரவன் பேச...ஹரிதா  அவனது  கையில் கிள்ளி வைத்தாள்...

அஜயோ...இவன்  அடங்கமாட்டான் என்று நினைத்தவன்..."அடேய் நீ வேலை விசயமா  அமெரிக்கா போறடா...ஆனா உன்னைப் பார்த்தா  ஹனிமூனுக்குப் போற  எஃபக்ட்ல  இருக்கடா.எப்பா  ஷ்ரவன்  எங்களை திருப்பிக்கொண்டுவிட்டுட்டு  நீ என்னவேணாலும் பண்ணுடா...நாங்க பாவம்டா" என்றான்.

ஷ்ரவன் அஜயைப் பார்த்து “கரடி” என்று சொல்லி முறைத்தான்...

அஜய் அங்கிருந்த ஏர்ஹோஸ்டஸ்ஸை விட்டானில்லை...சும்மா பார்க்கிறேன் என்று அவர்களை ரசித்துக்கொண்டிருந்தான்.

ஹரிதாவோ சிலமணி நேரத்திற்குள்ளாகவே  சாய்ந்து  தூங்கியிருந்தாள்...ஷ்ரவன்தான்  அவள் பக்கமாக  திரும்பி சாய்ந்துப் படுத்துக்கொண்டு...அவளது  இதழ்களை வருடி “இந்த சின்ன வாய்தான் எப்படிலாம் பேசுது... யோசிக்கமா பேச எங்கதான் கத்துக்கிட்டியோ.

மாமியார்  ரொம்ப அறிவோடப்பேசி தான் ஒரு காலேஜ்  புரபசர்னு  கண்பிச்சுருவாங்க...உங்கப்பா  அமைதி, பேசுற ஒவ்வொரு வார்த்தையும்  அர்த்தமுள்ளது...உனக்கு மட்டும் எங்கயிருந்து  இப்படி பேசுற வாய் வந்துச்சு...நாளைக்கு  நம்ம பிள்ளைங்க  எப்படி  பேசவாங்களோ? தெரியலையே...உன்னைய மாதிரினா கஷ்டம்டி...இந்த மாமனுக்கு  உன்னைய சமாளிக்கவே சரியாயிருக்கும்”  என்று  தூக்கத்தில் இருப்பவளிடம்  பேசிக்கொண்டு வந்தான்...

ஆனாலும்  இந்த வாயாடியைத்தான் உயிர்வரை பிடிச்சுருக்கு...என்று நெற்றியில்  முத்தம் வைத்து  அவளது முகத்தை தன் நெஞ்சோடு சேர்த்துவைத்தான்.

இப்படியாக கலாட்டாவுடனே  பதினைந்து மணி நேரப் பயணத்தையும்  கடந்திருந்தனர்...

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம்.

அங்கிருக்கும் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனத்திற்குத்தான்  இவர்கள் செல்லவேண்டும்...அவர்களே இங்கிருந்து சென்றவர்களுக்கு  தங்குவதற்கு  எல்லா ஏற்பாடுகளும்  செய்திருந்தனர்...

வேலையில்தான்  சிறிது தடுமாறினார்கள் ஹரிதாவும் மேலும் சிலரும்...ஏற்கனவே அனுபவம் உள்ளவர்களுக்கு  எந்தவித பிரச்சனையும் இல்லை  புதிதாக வந்திருப்பவர்களுக்கு அந்த தடுமாற்றம் இருக்கத்தான் செய்தது...ஷ்ரவன் எல்லோருக்கும் உதவினான்.

இப்படியாக  ஒருவாரம் கடந்திருந்த நிலையில்  சனி ஞாயிறு விடுமுறை என்றதும்...

ஹரிதா சோர்ந்துப்போய்  இருந்தாள், அவளைப் பார்த்த ஷ்ரவன் "என்னடி  ஒரு வாரத்துக்குள்ள  இப்படி இருக்க...இன்னும் நாள் இருக்கே  ஊருக்குப் போறதுக்கு...எப்படி  சமாளிப்பியோ போ" என்று அலுத்துக்கொண்டவன்...

"என்னாச்சி"...

ஹரிதா "தெரியல சாப்பாடு பிடிக்கலை.அதப் பார்த்தாலே வாந்தி வருது"

"ஐயோ நா ஒன்னுமே பண்ணலயேடி  அதுக்குள்ள வாந்திங்கற மயக்கங்கற” என்று  அவளிடம்  வம்பு வளர்த்தவனை  விரட்டி விரட்டி சண்டைப்போட்டு  அடிக்க.

அவளது  இரு கைகளையும் பிடித்துக்கொண்டவன், “எப்பவும்  வேறமாதிரி  அர்த்தம் வர்றமாதிரியே பேசறது உங்கவாய அடைக்கணும் முதல்ல...”என்று முறைத்தவளிடம்.

தனது முகத்தை நீட்டி "வாயைத்திறந்து  தாராளமா அடைச்சுக்கோ” என்று  அவளது வாயருகே கொண்டு சென்றதும்  புரிந்தவள் “...ச்ச்  போங்க” என்று போய்  பக்கத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்தாள்.

அருகில் வந்தவன் அவளது தோளில் கைப்போட்டு  தன்னோடு இழுத்து அமர்த்தியவன்..."என்னடா  பிரச்சனை?...ஏன்  ஒரு மாதிரி  இருக்க?...வீட்டு நியபகமா"

“அம்மாவ பார்க்கணும்போல இருக்கு...அதுவுமில்லாமல்  மனசுக்குள்ள  ஒருமாதிரி இருக்கு பயமா நடுக்கமாகவே இருக்கு என்னனு புரியலை” என்று பாவம்போல பார்த்து வைத்தாள்.

“அது வீட்டைவிட்டு  தனியா இருக்கியா  ஹோம் சிக்னஸ்...நானும் முதல ரொம்ப கஷ்டப் பட்டேன்  கொஞ்சநாள் அப்படித்தான் இருக்கும்டா...வா வெளியே போயிட்டு வரலாம்” என்று  அழைத்துக்கொண்டு சென்றான்.

அவளது  சிறு சிறு அசைவும்  அவனுக்கு  அத்துப்படியானது...இதைப்புரிந்துக்கொள்ள தவறியதுதான் ஹரிதாவின் மிகப்பெரிய தவறாகப் போனது.

அவளுடன் வெளியே சென்று வந்தான்...அவனுக்கு இங்கு  எல்லாயிடமும் தெரியுமாதலால் தைரியமாக சென்றாள்.

ஒருமாதம் கழித்து நிருபமா அவனுக்கு அழைத்திருந்தார் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவர்... “மேகா வீட்டுக்கு நீ இன்னும் போகலையாடா? அவ எனக்கு கால் பண்ணி கம்ப்ளைன்ட் பண்றா, ஒரு தடவைப் போய் பார்த்துட்டு வாயேன். யாரோ பண்ணின தப்புக்கு அவ என்ன பண்ணுவா... அவளை போய் பார்த்துட்டு வா...அவா உன்  அக்காடா.

“அம்மா நான் இங்க இருந்து அங்க போக  கிட்டத்தட்ட 3 மணி நேரம் டிராவல் பண்ணி போகணும், அதுவும் பிளைட்ல இப்ப எப்படி வேலைக்கிடையில் போயிட்டு வர முடியும்"

நிருபமா "வீகெண்ட் லீவுல போயிட்டு வாடா. ஹரிதாவையும் உன்கூட கூட்டிட்டு போ.ஹரிதாவை  மேகா பார்த்ததில்லைதான அவளையும்  அழைச்சுட்டுப் போயிட்டுவா

மேகாவிற்காகவும் மருமகனுக்காகவும் பாருடா...அவர் எல்லா விசயத்துலயும் உனக்குத்தான சப்போர்ட் பண்றாரு  விட்டுக்கொடுத்துப்போ..அவரோட நல்ல குணத்துக்காக சில விஷயங்களை மறந்திரு...நீ அம்மா  பையன்தான, அம்மா சொல்றேன் போயிட்டுவாடா” என்றார்.

“இப்படி  பேசி பேசியே எப்பவும் என்னை  சமாதானப்படுத்திடுங்க...யாருக்காகவும்  இல்லை,என் நிரு பேபிக்காக போறேன்”  சரியா என்று... சம்மதித்தவன். “இப்போதைக்கு  எங்கயும் நகரமுடியாது, வீக்கெண்டும் வேலையிருக்கு அதுதான்மா... ஊருக்கு வர்றதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி அப்படியே அங்கபோய்  அக்காவைப் பார்த்திட்டு ஊருக்கு கிளம்புறோம் சரியா... இப்போதெல்லாம் என்னை கம்பெல் பண்ணாதீங்க அங்கப்போறதுக்கு” என்று முறுக்கிகொண்டான்.

“எப்படியோ செய்...இல்லைனா  உன்  கல்யாணத்துக்கு  வரமாட்டேனு  அவ எதாவது சொல்லி பிரச்சனைப் பண்ணுவா...எதுனாலும்  நீதான் சமாளிக்கணும்...சரியா  நான்  வைக்கிறேன்” என்று அழைப்பை துண்டித்த நிருபமா "மூன்றுபிள்ளைங்களைப் பெத்துட்டு  முப்பது பிள்ளைங்களை பெத்தமாதிரியே  பிரச்சனைகள் வருதே...”என்று புலம்பிக்கொண்டே  தன் வேலையை செய்துக்கொண்டிருந்தார்.

இங்க  ஷ்ரவனோ எரிச்சலில்  இருந்தான்...நான் அங்கபோறதில்லாமல்,ஹரிதாவை வேற அங்க கூட்டிட்டுப்போகணுமா என்று...பின் தன் வேலையில் கவனம் செலுத்தினான்.

ஷ்ரவன்-ஹரிதாவின் திருமணத் தியதியை குறித்திருந்தனர்...ஊருக்கு வந்து சேர்ந்த ஒரே வாரத்தில் வைப்பதாக, எல்லா ஏற்பாடுகளும்  செய்தனர்.

பத்திரிக்கை  அடித்தும் கொடுத்தாகிவிட்டது பொண்ணும் மாப்பிள்ளையும்  ஊருக்குச்சென்று சேர்வதுதான் பாக்கி.

இப்படியாக  அவர்களது வேலை முடித்து ஊருக்கு  கிளம்புவதற்கு தயாராக  எல்லோரும்  வெளியே  சென்றிருந்தனர். இன்னும்  பத்து நாளில்  கிளம்ப வேண்டியிருக்கும்...கூட இருந்தவர்கள் எல்லோரும்  உடனே ஊருக்கு  கிளம்புவதாக இருக்க...இவர்கள்  இருவரும் மட்டும்  அப்படியே  நியூயார்க்கில் உள்ள  ஷ்ரவனின் இரண்டாவது அக்கா  மேகாவின் வீட்டில்  ஒருவாரம்  இருந்துவிட்டு  ஊருக்கு  செல்வதாக எல்லாம் பிளான் செய்து  டிக்கட்டும்  ரெடி பண்ணியிருந்தனர்...

திருமணத்திற்கான சிலப்பொருட்கள் அங்கயே வாங்கலாம் என்று  இருவரும் சந்தோசமாக சுற்றினர்...நிறைய வாங்கிக் குவித்தனர்.

இப்படியாக அன்று ஷ்ரவன் வந்தவன் "வா  கொஞ்சநேரம்  ஊரை சுத்திப் பார்த்திட்டு வருவோம்... ரூமுற்குள்ளயே  அடைஞ்சிருந்தன  மைண்ட்  பலதையும்  யோசிக்கும்” என்று அவளை அழைத்துக்கொண்டு... அவன் ஹரிதாவின் தோள்மேல் கைப்போட்டுக்கொண்டு  ஜோடியாக நடந்தான்.

ரெஷ்டாரண்ட்க்கு  அழைத்து சென்றவன்  அங்கே கிடைக்கும்,அவனுக்குப் பிடித்த சில உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு...ஒரு இயற்கைப் பார்கில் வந்து அமர்ந்தனர்...அதை  சுற்றிப் பார்த்தவளுக்குத்தான்  லட்ஜையாகியது.

ஏற்கனவே திருமணம் நெருங்க நெருங்க  அவர்களுக்குள்ளும்  எல்லா கனவுகளும் வந்துப்போயின...அது  இயற்கைதானே...அதனால்  இப்போது பார்த்தவளுக்கு தன்னையறியாமலயே வெட்கம் வந்திருந்தது

ஜோடிகள் நிறையபேர் என்ன செய்கின்றார்கள்  என்று பிரித்தறிய முடியாத நிலையில்  இருக்க, பார்த்தும்  பார்க்காத  மாதிரி  தன்தலையைத் திருப்பிக்கொண்டாள்.

அவளது  முகத்தின்  சிவப்பும், அவளது  தலை திருப்புதலும்  ஷ்ரவனை அவளிடம் நெருங்கத்தூண்ட...

“ஓய்...ரிது பேபி என்ன  அமைதியா இருக்க?...”

ஹரிதா  ஒன்னுமில்லையே என்று தலையாட்டி விட்டு திரும்பிக்கொண்டாள்...

அவளையும் அறியாமலயே  அவளது  மூச்சுக்காற்று வேகமாக வெளியேறியது...தன்னை நிதானப்படுத்திக்கொண்டாள்.

அவளது இந்த நாணம்  புதுசு அவனுக்கு...அந்த வெட்கம்...ஒரு ரசனைக் கலந்த  பார்வையா  இல்லை...காதலின்  அடுத்த நிலைக்கான பார்வையா? என்று பார்த்தான்.

கிளம்புவோமா என்று  எழும்பியவள் இப்போது ஷ்ரவனின்  மடியில்  இருந்தாள்...

"ரிது பேபி கன்னமெல்லாம்  ஏன்  இப்படி  சிவந்திருக்கு...” என்று  தன்புறங்கையால்  அவளது கன்னங்களைத் தேய்த்துவிட்டான்...கூச்சமாகயிருந்தது..

அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே என்று தானும் தனது கன்னங்களைத் தேய்த்துவிட...அது இன்னும் சிவந்து  அழகாகியது ரூஜ் தடவியதுபோன்றிருந்தது.

குளிர் அதிகமாக இருக்கவும் அவளது உடல் கிடுகிடுவென நடுங்கியது...

ஷ்ரவனுக்கு  அவளைப்பார்த்து சிரிப்புதான் வந்தது... “வாய்லயே ஊதாருவிடுற ஆளு...தனியா மாட்டுனதும்  மழையில நனைஞ்சக் கோழிமாதிரி  நடுங்குறதப்பாரு” என்று...

"குளிருதா"

"ம்ம்..கொஞ்சமா"

அவனோடு சேர்த்து  இறுக்கமாக அணைத்தவன்... “இப்போ குளிருதா” என்று கேட்டான்...

" ம்ம் லேசா"என்றதும்  ஷ்ரவன் ஹரிதாவின்  கையைப்பிடித்து  தூக்கியவன், “வா லேட்டாகுது  உன்னைக்கொண்டு விட்டுட்டு  என்னோட ரூமிற்குப் போகணும்” என்று...மெதுவாக நடந்தனர்...அவர்களுக்குள்  அவ்வளவு  அமைதி  ஷ்ரவன்  ஹரிதாவின்  தோளின் மேல் கைப்போட்டு  தன்னோட அணைத்துக்கொண்டேதான் நடந்துவந்தான்... ஹரிதாவின்  அறைக்கு வந்து  அவளை விட்டவன்...கிளம்ப  எத்தனிக்க.

ஹரிதா அவனது சட்டையைப் பிடித்திருந்தாள்...ஷ்ரவன் நின்றவன்... “என்னடா” என்றுக்கேட்கும் போதே அவனது குரலும் உள்ளேப்போயிருந்தது...

ஹரிதாவோ ஷ்ரவனின் நெஞ்சினில் முகம்பதித்திருந்தாள்.

எதுவும் பேசாமாலயே அவளோடே அவனும் அறைக்குள்  நுழைந்திருக்க அறையில்  ஹீட்டரின் உதவியால் கதகதப்பு இருக்க...ஹரிதாவோ ஷ்ரவனோடுதான் இன்னும் ஒன்றினாள்...

ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்தாகிற்று...திருமணத்திற்காக ஊருக்கு செல்கின்றனர் என்று மனதில்  ஆழமாக பதிந்துவிட்டதினாலோ என்னவோ.

ஹரிதாவின் மனதில்  இப்போதைக்கு  ஷ்ரவன் மட்டுமே...அந்த மாலைப்பொழுதின் மயக்கத்தில் இருந்தவள் ஷ்ரவனிடம்  ஒட்டிக்கொண்டு நிற்கவும்,அவளது  முகத்தினை தனது கைகளில் தாங்கியவன் மெதுவாக அவளது நெற்றியில் முத்தமிட்டு நகர, அவனால் எங்கே  முடிந்தது...

நெற்றி முத்தத்திற்கே கண்களை மூடி அப்படியே நின்றிருந்தாள்... இன்னும் வேண்டும் என்று செய்தி அதிலிருக்க...கன்னத்தில் கடித்து  எச்சில்  முத்தம் வைத்தான்...

அதற்கும் இன்னும் கிறங்கியவள் தன் தலையை பின்பக்கம் சரித்து தாடையை உயர்த்தி நின்றாள்...

இந்த ஒற்றல் போதாது  இன்னும் இன்னும் வேண்டுமென்று... ஆணவனுக்கோ ஆச்சர்யம்... ‘கிட்ட போனாலே தள்ளிவிடுவாள்... இன்றென்னாகிவிட்டது இவளுக்கு’ என்று நினைத்தவன்.

மறுபடியுமாக  அவளது இதழ்களை தனது நாவில் தட்ட, அவளோ அப்படியே அவனுக்கு  வாகாக  பின்பக்கமாக சரிந்தவளின்,தலையை தன் இடது கரத்தால் தாங்கியவன் , தனது நாவின் ஈரத்தால் அவளது காய்ந்த இதழ்களுக்கு ஊட்டம் கொடுத்தான்...

தனது இணையைத்தேடி அவளது வாய்க்குள் பயணித்து,அவளது நாவினோடு இணைத்து  ஒன்றோடு ஒன்று பிணைந்துக்கொண்டது...

தன் உயிர் மூச்சை உள்ளிழுத்தவள் அவனது கைகளிலயே தோய்ந்து மடிய... அவளது  இடையோடு  வலது கரத்தினைக்கொடுத்துப் பிடித்துக்கொண்டான்...

அதுவோ அவனுக்கு  அபயகரமான கொண்டை ஊசி வளைவாக இருந்தது... நடந்த  முத்த யுத்தத்தில் அவளது டீஷார்ட் மேலே  ஏறியிருக்க...

ஷ்ரவன் அதில் கைவைக்கவும்  இடுப்பின் வளவளப்பும்  உந்திச்சுழியும்  அவனை  தலைகீழாக அதில் வீழ்த்தியது...

இன்னும்  இன்னும்  அவனுக்கு  வேண்டும் போலத் தோன்றியது... அவளது இதழ்களை இப்போது தனது உதட்டின் ஆளுமைக்குள் கொண்டுவந்திருந்தான்...

அவளிடமிருந்து  எதிர்ப்பைவிட  ஒத்துழைப்பே  அதிகமாக இருந்தது...

ஷ்ரவன் விலக நினைத்தாலும் முடியவில்லை, அதைவிட  ஹரிதாவோ  இப்போது கண்களைத் திறக்க...அது மயக்கம் கலந்தப் பார்வையாக மற்றும் ஷ்ரவனை முற்றிலும் மயக்கும் போதைகலந்தப் பார்வையாக இருந்தது...  ஷ்ரவனை தனக்குள்  இழுக்கும்  ப்ளாக் ஹோல் போல  அப்படியே  அவனை  தனக்குள் சுருட்டி ஆழியென உள்ளிழுத்தது...

அப்படியே அவளது வயிற்றனூடேய தனது கையை விட்டவன்... அந்த டீ ஷர்ட்டை கழற்றியிருந்தான்...

இப்போது  ஹரிதா தன் உள்ளாடையுடன்,தனது சட்டைப் பட்டனை விரைவாக கழற்றி அதை விட்டெறிந்தான். அது எங்கு விழுந்தது என்றுக்கூடத் தெரியாது.

இடுப்பினுள் கைக்கொடுத்து,தன்னோடு அவளை சேர்க்க இரண்டு இளவம்பஞ்சுப் பொதிகளும் அவன் நெஞ்சில் அழுந்த.

அவளது காதில் குனிந்து  “வாய் அதிகமா பேசினா  அது பெருசாகுமா... உன் வாய்க்குத்தக்க  உன்னோடது ரொம்ப பெருசா இருக்கு...” என்று உதட்டினை உரசிக்கொண்டே பேசினான்

சட்டென்று அவனது  வாயில் ஒரு அடிப்போட்டாள்... அவளது கையைப்பிடித்து வைத்துக் கொண்டவன்...

“ரிது பேபி... நீ கண்ணாடியில் பார்த்ததேயில்லையா... செம” என்று கண்ணடித்து, கடிக்குற மாதிரி வாயை வைத்துக் செய்கை செய்தான்... அவன் சொல்லும்போதே... “ச்சீ  போடா” என்று வெட்கத்தில்  தனது கண்களை மூடிக்கொண்டாள்...அவ்வளவுதான்.

ஹரிதாவின் வெட்கம் ஷ்ரவனை  இன்னும் தன்னிலை இழக்கச்செய்ய...

அப்படியே மெதுவாக  அவளைத் தனது கரங்களில் ஏந்தி படுக்கையில் விட்டவன், அப்படியே  அவள் மேல் சரிந்தான்...

“ரிது பேபி...” என ஷ்ரவன் அழைக்கவும்

கண்களை மூடிக்கொண்டே "ம்ம்" என்றவளை கண்களாலே தின்றுக்கொண்டிருந்தான்...

மேலே உள்ளாடையுடனும்...போட்டிருந்த  ஜீன்ஸ் இடையினில்  இருக்கவா விழவா என்ன நிலையில் இருந்தது...

“ரிது பேபி” என்று மறுபடியும்  அழைக்கவும் திரும்பி அவனைப்பார்த்து படுக்கவும்...

பெண்ணிடம் காணிதா சொர்கம் இன்று முதன்முறை  காண்கின்றானல்லவா...அந்த பித்தில் உளறுகின்றான் அவளது பெயரை...

மெதுவாக நகர்ந்து  கழுத்தினில் முத்தம் பதிக்க, அவனது தோள்களைப் பற்றியிருந்தாள். மெது மெதுவாக தனது உதடுகளால் கீழிறங்க...

உணர்வு தாங்காது பக்கவாட்டில் சரிந்துப்படுக்க..அவளது பெண்மைக் கோளங்கள்  கணம் தாளது இப்போது சரிந்தநிலையில்...

மெதுவாக  தனது ஆள்காட்டிவிரலால்  அவளது  கூக்கினின்று  அப்படியே கோடாக இழுத்து கீழ் வந்தவன்...அதற்கு விடுதலைக் கொடுத்திருந்தான்...

சட்டென்று கண்களைத் திறந்தவள் தனது கரங்கொண்டு மறைக்க... முடியவில்லை...

இருவரும் உடலும் மனமும்  மூளையின்  கட்டுப்பாட்டில் இல்லை...உணர்வுகளின்  கீழ்...

இளமையின் வேகம் ஷ்ரவனிடம்  எழ...ஹரிதாவிற்கோ  ஷ்ரவனை தனக்குள் கொண்டுவரும் ஏக்கம்...

மூச்சுக்களை வேகமாக விட... அவளை அள்ளியெடுத்தவன்... பெண்மைக்கோளங்களை கடிக்க... ஸ்ஸ்...அவனது கேசங்களைப் பற்றியிருந்தாள்...

அவனுக்கு  இன்னும் அது வேகம் கொடுக்க...அழுத்தி பிசைந்து எச்சில் கொண்டு...இன்னும் சிவக்க வைத்திருந்தான்...

அவள்  கையை தட்டிவிட தட்டிவிட என்ன ருசியென்று அறிய மூற்பட்டு  தோற்றுப்போய்...தனக்கு பிடித்த உணவாக இளமைக்கு திணீப்போட்டான்...

மெதுவாக முட்டிப்போட்டு அவளையும் தனக்கேதுவாக நிறுத்தி, அவளது கண்களை நேக்கி " லவ் யூ ரிது பேபி" என்றவனின் கண்களில் என்னவொரு  மயக்கம்  அவன் கண்களில்...

அவளும்"மீ டு ஷ்ரவன்" மையல் கொண்டக் கண்களினால் அவனைப் பார்த்து சொல்ல...இருவம் எத்தனை முறை இதைக் சொல்லிக் கொண்டார்கள் என்று  அவர்களுக்கே தெரியாது...

சிறிது நேரத்தில் இருவரது  உடலிலும்  ஆடைகள் விடைப்பெற்றிருந்தது...

மூன்றவது பாலின் 

இலக்கணம் நான் கூறவா...

விளக்கவுரை உன்னுடலில்

நான் எழுதவா...

முத்தங்ளின் எண்ணிக்கை கூட கூட... ஆடையற்ற அவளது மேனியில் நாவினால் கோலம்போட... அது அழிய மறுபடியும் கேலம்போட்டான்  இளங்காளையவன்....

இன்பம் இங்கயோ? அங்கயோ? என்று  அவளது உடலில் தேடித்தேடி  எல்லவற்றிலும் இன்பத்தின் ஊற்றைக்கண்டான்.

ஒரு நிலையில் ஹரிதா தன்னையறியாது அவனிடம் உணர்வுகள் மேலொங்கி நிற்க, மயக்கத்தின்  உச்சத்தில் இருவரும்...

தன் உயிரானவளின் உணர்வுகளைப் படித்தவன்...

அவளது மேலேறி  அமர்ந்துக்கொண்டு... “ரிது பேபி”...என்று முன்பக்கமாக  குனிந்து  அவளது நெஞ்சோடு நொஞ்சுரச காதினில் "உனக்குள்...என் உயிருக்குள்  நான் போக...சம்மதமா” என்று அவனின்  இளகிய, கிறங்கி குரலில் கேட்க...

அரைக்கண்களைத் திறந்து அவனுக்கு  தலயசைத்து  கண்களை மூடி  சம்மதம் சொன்னதும்தான்....

அவளது பெண்மைக்குள் தேடி தன்னை இறக்கினான் ஷ்ரவன்...

ஒரு நொடியில் உயிரின் வலியில்  துடித்தவளை தனது உதட்டினால் அவள் இதழ்களை மூடியும், இரும்புக்கரம் கொண்டு அவளது இருகைகளையும்  அழுத்தி...அவளது துடிப்பை அடக்கி...மெது மெதுவாக...அவளது பெண்மைக்குள் தன்னையிறக்கி... சுகம் கொடுத்து  இதம் பெற்றுக்கொண்டிருந்தான்...

தன்னை மேலும் கீழும் அசைக்க, அதற்குதக்க  ஹரிதாவின் உடலும் அசைய உணர்வின் உச்சத்தில்...தனது உயிரினை அவளுக்குள் செலுத்தினான்...

எல்லாம் முடித்து வேர்த்து தன்னவளைப் பார்க்க.... உணர்வின் உச்சத்தில் மயக்கம்  அவளிடம்....

எல்லாம் முடித்து  விலகிப்படுத்து அவளை தனது நெஞ்சினில்  போட்டவன்...அவளது முதுகினை தடவி அவளை நார்மலுக்கு கொண்டுவந்தான்...

ஹரிதாவின் முகம் நிமிர்த்தியவன்... அவளது நெற்றியில் முத்தம் வைத்து, அவளது கண்களைப்பார்த்தவன்... அவளும் அவனது கண்களைப் பார்க்க... உலகமே ஒரு நிமிடம்  இப்படியே உறைந்து, தங்களது உலகம் அழகாக மாறிட்டதோ என்று தோன்றியது...

சிறிது நேரங்கழித்து ஹீட்டர் போட்டு வைத்து அவளை எழுப்பி குளிக்கவைத்து தானும் குளித்து...உடை மாற்றி தூங்கவும்.

அவனுக்கு நெஞ்சின் மேலேறி படுத்துக்கொண்டாள்...தனது கரத்தினால் அவளை அணைத்துப் படுத்துக்கொண்டான்...

பாதிதூக்கத்தில் திரும்பி படுக்க  அவள் போட்டிருந்த உடையைப் பார்த்து... அவளை எழுப்பி  “ஏன்டி  இந்த ட்ரஸ்ஸ  இப்போம் போட்டிருக்க..இது  நம்ம பர்ஸ்ட் நைட்டிற்கு போடதுக்குதான நேத்து எடுத்தோம்” என்றவனை  கண்விழித்துப் பார்த்தவளின்  பார்வை லூசாடா நீ...என்று அர்த்தம்  பொதிந்திருந்தது...

“என்னடி அப்படி பாக்குற” என்று ஷ்ரவன் கேட்டதும்

"பர்ஸ்ட் நைட்லதான்டா போட்டிருக்கேன்...” என்றவளது வார்த்தையைக் கேட்டவன்...பாய்ந்து  

அவளை உருட்டி கட்டிக்கொண்டான்...

“என் வாழ்க்கையே அழகாக்கிட்டடி...என் சண்டைக்கோழி” என்று  அவளது வயிற்றில்  தலைவைத்துப் படுத்துக்கொண்டான்...

ஹரிதா அவனது தலைமுடியை அப்படியே  அலைந்துக்கொடுத்தாள்...அவனுக்கு  அது சுகமாக இருக்க  அப்படியே படுத்திருந்தான்,  எவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தனர் என்றுத்தெரியாது...

அப்படியே மெதுவாகத் திரும்பியவன்  அவளது வயிற்றில்  கடித்து இழுக்க...

ஹா...என்று தனது வாயைத் திறந்து மூடியவள்...அவனது முடியை இழுத்து பிடித்து வலியைப் பொறுத்துக்கொண்டாள்....

மறுபடியும் ஷ்ரவனின் இளமைப்பசிக்கு  தன்னை உணவாக கொடுத்து தனக்குள்  அவனை ஏற்றுக்கொண்டிருந்தாள்....

அத்தியாயம்-10

 

விடிந்ததும் அலாரம் அடித்தவுடனே ஹரிதா திரும்பி படுத்தாள்... அருகில் படுத்திருந்தவனைப் பார்த்தாள்...அவ்வளவு நிர்மலமான முகத்துடன் தூங்கிக்கொண்டிருந்தான்...

இரவு செய்யாத சேட்டையெல்லாம் தன்னில் செய்தவனா இவன் என்ற ரீதியில் படுத்திருந்தான்...அவன் முகத்தைப் பார்த்துப் படுத்துக்கொண்டே, ‘எதோ ஒன்னுக்குறையுதே’ என்று நினைத்தவள்...

இறங்கி தனது பேக்கில் இருந்த கருப்புக்கலர் மார்க்கரை எடுத்து வந்து அவனது முகத்தில் வரையவும் முழித்துக்கொண்டவன்... “ரிது பேபி தூங்காம என்ன பண்றா” என்றுக்கேட்டுக்கொண்டே... அவளை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டே கேட்க...

“அதுவா உங்க முகத்துல ஒன்னுக் குறைஞ்சது ...அதுதான் வரைஞ்சு பார்த்தேன் நல்லாயிருக்கு” என்றாள்.

இப்போ நன்றாக கண்ணைத்திறந்துப் பார்த்தவன் “என்ன மீசை வரஞ்சிப் பார்த்தியா...எனக்கு நல்லாயிருக்காதுடா.”

"இல்ல நல்லாயிருக்குப்பா...”என்று கண்ணாடி எடுத்துவந்து காண்பித்தாள்.

லேசாக சிரித்தவன்... “உனக்கு மீசை வைக்குறதுப் பிடிக்குமானா வச்சுக்குறேன்...அவ்வளவுதான், விடு...”என்றான்.

அவனது கன்னத்தில் முத்தமிட்டு “தேங்க்ஸ்” என்றுவிட்டு குளிப்பதற்கு சென்றுவிட்டாள்.

இப்போது எழுந்தவன் தனது கழட்டிப்போட்ட உடைகளைத்தேடி எடுத்துப் போட்டுக்கொண்டு... அவள் வெளிவருவதற்கு காத்து நின்றான்.

வெளியே வந்தவள் “எங்க போறீங்க ஆபிஸ் போகவேண்டாமா?...”

“என்னோட ரூமுக்குப்போயிட்டு கிளம்பி வர்றேன்...சரியா நீ ரெடியா இரு நான் வந்திர்றேன்” என்று சென்றுவிட்டான்.

தயாரனவளின் முகமே வித்தியாசமாக இன்னும் அழகாக இருந்தமாதிரி தோன்றியது அவளுக்கு...

நேற்றிரவின் நியாபகம்... அப்படியே கட்டிலில் சரிந்து கண்மூடி லயித்திருந்தவளின் மொபைலில் அழைப்பு ...எடுக்க ஷ்ரவன்தான் வெளியே இறங்கி வரச்சொன்னான்.

ஷ்ரவனிடம் செல்ல அங்கு அவனோடு அஜயும் இருந்தான். மூவருமாக உணவருந்திவிட்டு ஆபிஸிற்கு சென்றனர்.

வேலை நேரத்திலும் ஹரிதாவிற்கும் ஷ்ரவனுக்கும், அவர்களது இணையின் நியாபகமே...இருவரும் தங்களது துணையின் அருகாமைக்காக ஆசையுடன் காத்திருந்தனர்...

மாலை வேலையில் வேலை முடிந்து வெளியே வரும்போது ஷ்ரவனும் ஹரிதாவும் அமைதியாகவே வந்தனர். என்ன பேசவென்று எண்ணமோ? இல்லை பேச்சற்ற மோனநிலையா? ஏதோவொன்று...

இருவருக்கும் மனதினில் வேறு வேறு எண்ணவோட்டங்கள்...நேற்றைய நிகழ்வு தொடரவேண்டும் என்று இருவரின் உள்ளமும் ஏங்கியது...ஆனால் வெளியே சொல்லவில்லை.

அப்படியே தலையசைத்து விடைபெற்று தங்களது அறைக்கு வந்தும்...ஒன்றுமே தோன்றாமல் படுத்திருந்தனர்...அப்படியே இரவுணவை முடித்துக்கொண்டு படுக்க...

இரண்டுபேரும் போனை அருகில் வைத்துக்கொண்டு அழைக்கவா? வேண்டாமா? என்று பார்த்துக்கொண்டே இருந்தனர்...

ஒரு கட்டத்திற்குமேல் ஷ்ரவன் எழுந்து என்ன ஆனாலும் பரவாயில்லை...அவளைப் பார்க்கணும் என்று உணர்வு உந்தித்தள்ள அறையைப் பூட்டிக்கொண்டு வெளியே நடந்தான்...அவளது இருப்பிடத்தின் வாயிலை அடைந்தவனுக்கு யரோ வெளியே வருவதுப்போல இருக்க...நிதனாமாக அருகே செல்ல...வந்தது ஹரிதா.

அதைப்பார்த்து அப்படியே கைகளைக்கட்டிக் கொண்டு பார்த்திருக்க...அருகில் வந்ததும்தான் பார்த்தாள் ஷ்ரவனை...அவனும் சிரித்துக்கொண்டே கைகளை நீட்டியதும் ஓடிவந்துக் அவனது கைகளுக்குள் அடைக்கலமானாள்.

அவ்வளவுதான் அவளது முகமெங்கும் முத்தம் வைத்தவன்... “ஏனோ தெரியலை மிஸ் பண்றேன்டி.அதுதான் உன்னைப் பார்த்திட்டுப் போகலாம்னு வந்தேன்.”

“நானும் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்,அதுதான் உங்களைப் பார்க்க வெளியே வந்தேன்” என்றவளின் குரலே உள்ளப்போனது...

“வா நம்ம என்னோட ரூமிற்கு போகலாம்” என்று அழைத்து செல்ல... “என்ன சாப்பிட்ட” என்று ஷ்ரவன் கேட்க...

ஹரிதாவோ "என்னவோ தந்தாங்க,சாப்பிட பிடிக்கலை வச்சுட்டு வந்துட்டேன்"

ஓ... எதாவது சாப்பிட்டுப்போகலாம் என்று பக்கத்திலிருந்த சிறு ஹோட்டலுக்கு அழைத்து சென்றவன். அவளுக்கு பிடித்த சிக்கன் டிஷ் வாங்கி தானும் சாப்பிட்டு முடித்து பேசியபடியே வந்தனர்.

என்னோட ரூமிற்குப் போகட்டுமா என்று அவனது முகத்தைப் பார்த்து நின்றவளை,தலையை சாய்த்துப் பார்த்தவன்...பதிலே சொல்லாது ஹரிதாவின் கையை இறுகப்பிடித்திருந்தவன், அப்படியே நடந்தான்...தனது அறைக்குள் அழைத்து சென்றான்.

உள்ளே வந்ததும் ஷ்ரவன் எதுவுமே பேசாமல்... அவளை இழுத்து அவளது கீழுதட்டை தனது பற்களால் கவ்வி இழுத்து தனது உதடுகளுக்குள் வைத்துக்கொண்டான். அவளும் அவனுக்கு இசைந்து நின்றாள்.

சிறிது நேரங்கழித்து மெதுவாக அவளது உதட்டினை விடுத்தவன்... “ரிது பேபி முடியலைடி உன்னைத் தேடித்தான் அங்க வந்தேன்...” என்றவன் அவளது கண்களைப் பார்க்க, அவளும் அமைதியாக அவனது கண்களைத்தான் பார்த்திருந்தாள்...

பிடிக்கலையோ என்று தன் பிடியைத் தளர்த்த...அவளோ தனது கண்களை மெதுவாக இப்போது சம்மதம் என்று மூடியிருந்தாள்...அவ்வளவுதான் தெரியும்...

அவளது முகத்தினைத் தாங்கியவன் அவளது கண்களை ஊடுருவிப் பார்த்தவன்

"இந்த ஜென்மத்தில் நீ தான் எனக்கு எல்லாமே...என் காதலி...என் மனைவி...என் உயிர். நீயில்லாம சத்தியமா நான் இல்லைடி...இதுக்குமேல எனக்கு என்ன சொல்லனுத்தெரியலை பேபி...என் மனதிற்குள் வந்து முதல் பெண் நீதான்...

ஐ லவ் யூ பேபி...யூ மீன் டு மை வேர்ல்டு"

இதைக்கேட்டதும் அவளுக்கு ஜிவ்வென்ற ஒரு உணர்வு உயிருக்குள் எழுந்தது...அதை அவளின் முட்டாள் மூளைதான் உணரவில்லை...இப்போதே அவன் வார்த்தைகளைக் கவனமாக மனதில் பதித்தாலில்லை..( கொஞ்சம் அவசரம் பேசறதுலயும், செயலிலயும், அவசரக்குடுக்கை)

இப்போது கட்டிலில் ஹரிதாவின் அருகில் ஷ்ரவன் படுத்திருக்க...அவனது கைகள் அவளது சட்டையின் பட்டன்களை கழட்டிக்கொண்டிருந்தது...

அவளோ வெட்கத்தில் திரும்ப...எங்கேவிட்டான் கள்ளனவன்...

அவளது சந்தனமேனியின் அங்கங்கள் தங்கங்களாக ஜொலிக்க...

"இன்னர்ஸ் போடலையாடி...மாமனுக்கு வேலை சுலபமா இருக்கணும்னு போடலை அப்படித்தான...”என்று கண்ணடிக்க..

அதைக் கேட்டதும் சிரித்தவள்,கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்..

ஒற்றைக்கையில் அவளைத்தூக்கி மேலாடையில்லா அவளது மேனியை தன் நெஞ்சோடு அழுத்த...அங்கங்கள் நசுங்கி நானும் இங்கிருக்கின்றேன் என்று ஷ்ரவனுக்கு உணர்த்தியது...

தன்னிலிருந்து மீண்டும் அவளை பிய்த்தெடுத்து தக்காளி நிறமென இருந்த பெண்மையை தன் நாவினால் எச்சில் படுத்த...அந்த அறையின் வெளிச்சத்தில் மினுமினுப்பில் தங்கமென மிளிற...

தங்கக்கிண்ணத்தை தனது கைகளில் ஏந்தி சுவைக்க...அவனுக்கு இன்னும் இருகைகள் இருந்தாலும் போதாது என்று தோன்றியது...கிள்ளையென முட்டி மோதி...

உறிந்தெடுத்துவிட்டு...மெதுவாக சிற்றிடையில் சிறு ஊற்றென்றிருக்கும் நாபியில் உதடுவைத்து தேய்த்து அவளது உயிரினை கரைக்க...

மங்கையவளுக்கு மன்மதனவனின் செயல்கள் உயிருக்குள் பூக்களை வாரியிரைக்க...அவனது தோள்களை அழுத்தி திரும்பி படுத்துக்கொள்ள...

இப்போது அவளது மேனியின் வாசம் நுகர்ந்து பின்பக்கமாக அவளது மேல் படுத்துக்கொள்ள... “ஷ்ரவன் மூச்சு முட்டுது இறங்குங்க” என்று அவள் ஈன ஸ்வரத்தில் முனங்கினாள்...

இப்போது நகர்ந்து படுத்தான்...இருவரும் நிமிர்ந்து படுத்திருக்க...

மேலாடையில்லததால் பெண்ணவளின் அங்கமோ குன்றென்று நிமிர்ந்து நிற்பதைக்கண்டவன்...மீண்டும் சரிந்துப் படுத்து...கண்கள் கொண்டு கொய்தெடுத்தான் அவளது உயிரினை...அவனது பார்வையின் வீச்சைத் தாளாது தன் கைக்கொண்டு அவனது கண்களை மூட...அவனோ மாயவனாக இருந்தான்...

இருகரம் கொண்டு அவளது இரு இளவம்பஞ்சுக் குன்றுகளையும் பிடித்திருந்தான்...அவ்வளவுதான்...

பெண்ணவள் தன்னவனுக்கு விட்டுக்கொடுத்தவிட்டு உச்ச உணர்வில் அவனோடு சாரையாகப் பின்னிக்கொண்டாள்...

மெதுவாக அவளது ஸ்கர்ட்டையும் உருவியெடுத்துவிட்டான்...

தங்கமேனியால் சந்தனக்குடத்தோடு,அவனுக்கு தேன் சிந்தும் கலசங்களோடு படுக்கையில், கொள்ளைக்கொள்ளும் வெள்ளைநிலா அவள்...அவனை கொள்ளைக்கொண்டாள்...

அவளது காலோடு தன் கால்களை பின்னி...அவள் பெண்மையில் நேற்று தேடிய தேடலின் அனுபவம் சரியாக வழிநடத்த தன் ஆண்மைக்கு வழிதேடி கண்டுக்கொண்டு அவளுள் மறுபடியும் நுழைந்தான்...நேற்றின் வலியில்லை என்றாலும்...

அவன் தன்னுள் இறங்கவும்...ஏங்கி அவனுக்கு இடங்கொடுக்க...சுகம் தாளாது அவனது நெஞ்சில் தனது...கைகளை அழுத்தினாள்...

ஷ்ரவனுக்கோ புதுவித சுகம் உடலெங்கும்...பெண்மை தரும் பேரின்பம்...அதுவும் தனது உயிரானவளிடம் வாழும் இந்த நிமிடம் இப்படியே நீளாதா என்றதொரு மாயலோகம் அவனை உள்ளே இழுத்தது...

இதற்கு மேல் தாங்காது...இருவரது உடலும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைய...

உயிர்ரெண்டும் கூடுவிட்டு கூடுபாய...உணர்வுகள் வெடிக்க அவனது ஆண்மையின் அசைவு வேகமெடுக்க....பெண்ணவளோ சுகம் தாளாது கைகளால் பிடிமானம் தேடி அலைய... மொத்தமாக ஹரிதாவிடம் ஷ்ரவன் தன்னைக் கொட்டித் தீர்த்தான்...

இது என்ன இன்பம் சொல்லில் வடிக்கவியளாத, தாளமுடியாத சுகம் தன் தூணையிடம்...

இன்னும் வேண்டுமென்ற இன்பம்...

இணையில்லா என் இணையிடம்

கூடிக்களித்து உருமாறி..

களாபக்காதலாக பேரின்பத்தின் உச்சம்.

அவளின் மேல் இருந்து கொண்டு புரவியை செலுத்தும் குதிரை வீரனாக செயலில் இறங்க...

அவளோ அடங்கா குதிரையாக திமிற ...

தன் வேகத்தினால் அடக்கி பெண்மையை வென்றான்...

இருவரும் ஆடையற்ற சிற்பமாக பின்னிப்பிணைந்து ஒருவரின் சூட்டை மற்றொருவருக்கு பகிர்ந்து அப்படியே படுத்தும் தூங்கிவிடனர்...

எதிர்வந்த பத்து நாட்களும் அவர்களுக்கு இப்படித்தான் கழிந்தது...ஷ்ரவன் அவளது ஒவ்வொரு பார்வைக்கும் அர்த்தம் புரிந்து...அவளது உடலசைவைக்கூட புரிந்துக்கொள்வான்...

அவர்களுடன் வந்தவர்கள் கிளம்பிச்செல்ல...அஜயும் அவர்களுடன் கிளம்பவும் ..ஷ்ரவனின் அருகில் வந்தவன்.

ஷ்ரவன் மேல் சிறிது வருத்தத்தில் இருந்தான். அவனருகில் வந்தவன் “அவதான் சின்னப்பொண்ணு நீ உலகத்தை பார்த்தவன்...உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கவில்லை...ஆனாலும் கவனமாக வந்து சேருங்க.

கல்யாணம் பேசி வச்சுருந்தாலும்...நீ இப்போ பண்ணது தப்பு சீக்கிரம் ஊருக்கு வந்து தாலிக்கட்டு...அதுதான் என்றைக்கும் நிலைக்கும்...நான் கிளம்புறேன்...கவனமாக அக்காவீட்டுக்கு போங்க” என்றவன் கிளம்பிவிட்டான். ஹரிதா ஷ்ரவன் அறையில் தங்குவது அஜய்க்கு தெரிந்திருந்தது...அதனால்தான்...சரிடா என்று அவனிடம் தலையாட்டியிருந்தான்.

இவர்களும் அன்று மதியமே நியூயார்க்கிற்கு செல்ல விமானத்தில் இருந்தனர்...

என்றைக்கு ஹரிதாவை தன்னவளாக எடுத்துக்கொண்டானோ...அன்றிலிருந்து ரொம்ப கவனமாக அவளைப் பாதுகாப்பாக பார்த்துக்கொண்டான். இயற்கையாக தன்னவள் தனது பாதி என்று எண்ணம் வந்திருந்தது...

பக்கத்தில் இருந்தவள்...ரொம்பவும் சோர்ந்து தூக்கத்தில் இருந்தாள். கையிலிருந்த சாக்லெட்ஸை பாதி சாப்பிட்டு மீதியை வைத்திருந்தாள்...அதை எடுத்து தான் சாப்பிட ஆரம்பித்தான்,மெதுவாக சிரித்தான் அவனுக்கு சாக்லெட்ஸ் சாப்பிடறதுப் பிடிக்காது... இந்த மூன்று மாதத்தில் அவளது பழக்கம் அவனுக்கும் ஒட்டிக்கொண்டது...அவளது எச்சிலை ரசித்து சாப்பிட்டான்...

கிட்டதட்ட மூன்று மணி நேரத்திற்கு மேலான பயணம் முடிந்து நீயூயார்க் வந்திறங்கியதும்...சிறிது பயந்தாள்... அவளது கண்களைப் படித்தவன் “ஏன்” என்று கேட்க...” மேகா அண்ணி எப்படி...அவங்க என்னைப் பார்த்தா எப்படி நினைப்பாங்க..அதுதான் டென்சன்.”

“அட..பாருடா இந்த சண்டைக்கோழிக்கு...பயமா...என்னடா இது உலக அதிசயமாக இருக்கு...” என்று நாடியில் கைவைத்தை அவளை சீண்ட...

“போடா...” என்று திரும்பிகொண்டாள்...

“வாய் ஜாஸ்திடி உனக்கு...புருஷனை போடா சொல்ற...அக்கா வீட்ல இப்படி சொல்லிடாத...” என்று அவளது கவனத்தை திசை திருப்பியிருந்தான்...

மேகா வீட்டிற்குள் நுழையவும் மேகாவின் நாத்தனார் சௌமியா என்ற மியா "ஷ்ரவன் அத்தான் வாங்க என்க,”அவளது வரவேற்பை பெயரளவுக்கு கூட அவன் மதித்தானில்லை...மேகாவும் அவளது குழந்தைகளும் ஷ்ரவனைக் கண்டதும் ஓடி வந்துக் அவனது இருகைகளையும் பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்துச் செல்லவும் ஹரிதா அப்படியே நிற்க...

மியா "ஹாய் நான் ஆத்விக்கோட தங்கை மியா...வெல்கம் டு அவர் ஹோம்” என்று கைக்குலுக்கியவளை பார்த்தவள், கைகுலுக்கி நட்பாகிக்கொண்டாள் நான் ஹரிதா என்றதும்....

“தெரியும் ஷ்ரவன் அத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறவங்க தெரியும்...எங்களுக்கு இன்விடேஷன் வந்திட்டு” என்று உள்ளே அழைத்து சென்றாள்...

அதைப்பார்த்த ஷ்ரவன் " சாரிம்மா, குட்டீஸ் கையைப்பிடிச்சிக்கூட்டிட்டு வந்துட்டாங்க...”என வருத்தப்பட்டான்,

“ஹரிதாவோ பரவயில்லை” என்றவள் அவனது அருகில் அமர்ந்தாள்...

ஒருவாரம் அங்கிருந்தவளுடன் மேகா அவ்வளவு ஒட்டவில்லை... ஆனால் அதற்கு நேர்மாறாக மியா அவளுடன் பசைப்போல ஒட்டிக்கொண்டாள்... அதுவும் ஷ்ரவன் இல்லாத நேரத்தில் மட்டுமே. ஆத்விக்கும் ஷ்ரவனும் நல்ல தோழர்கள் போல பழகுவார்கள். அவன் வந்ததும் பேசிக்கொண்டிருந்துவிட்டு படுக்கைக்குச் செல்ல...

ஷ்ரவனுக்கு போனில் அழைத்தாள்... “தனியா இருக்கற மாதிரி ஃபீல் உங்கக்கா என்கிட்ட சரியாகவே பேசமாட்டுக்காங்க...” என்று வந்தன்றே புகார் வாசிக்க...

அவனோ “வேற வழியில்லடி அம்மாவுக்காக வந்திருக்கோம் அவ்வளவுதான்...”

ஹரிதா "அம்மா தாயே...இங்க பார்த்துக்க மட்டுந்தான் முடியும்...எல்லா இடத்துலயும் கேமரா இருக்கு...பெட் ரூம் தவிர்த்து...புரியுதா நல்ல பிள்ளையில்ல...அப்படியே படுத்து தூங்கிடு...”

அங்கிருந்ததொரு நாளில் பகலில் தூங்கி எழுந்து வந்தவன் ஹரிதாவைத் தேட பிள்ளைகள் இருவரும்தான் “மியா அத்தை அவங்க வீட்டுக்கு நம்ம அத்தையக் கூட்டிட்டுப் போனாங்க...”என்றனர்.

ஷ்ரவன் "மேகாவிடம் கோபப்பட்டான் இதுக்குத்தான் நான் இங்க வராம இருந்தேன்.. கடைசியில என்னைவிட உன் புருஷன் வீட்டுக்காரங்கதான் முக்கியம்னு மறுபடியும் காட்டிட்ட... அவளுக்கு போன் போட்டு உடனே ஹரிதாவ இங்க வரச்சொல்லு...” என்று கத்திவிட்டு தனியாக சென்று அமர்ந்தவன்...உடனே தனது தாய்க்கு அழைத்து எல்லாவற்றையும் சொல்லிவிட்டான்... “மேகா என் கல்யாணத்திற்குகூட வரவேண்டாம்னு சொல்லிடுங்க” என்று பேசவும்...மேகாவும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவளுக்குமே கோபம் வந்தது...

அவளிடம் வந்தவன் “நீ எப்படி என் மனைவிய அவகூட அனுப்புவ...உன்னோட சம்மதம் இல்லாம எப்படி மியா கூட்டிட்டுப்போயிருப்பா...சொல்லு.”

“அவ முன்னாடி மாதிரி இல்லைடா...வெளியசுத்திட்டு வருவாங்க..நீ டென்சன் ஆகாத...”

அந்த நேரம் சரியாக மியா ஹரிதாவை வாசலில் விட்டுவிட்டுச் சென்றிருந்தாள்...ஹரிதாவின் முகமே சரியில்லை...

“என்கிட்ட கேட்காமலயே வெளியே போயிட்டு வர்ற...அட்லீஸ்ட் சொல்லிட்டாவது போயிருக்கலாம்தானே” என்றவன் வேறு எதுவும் சொல்லவில்லை. அதற்கு அவளிடமிருந்து எந்த பதிலுமில்லை...

அவனிடமிருந்து ஒதுங்கியே இருந்தாள்...சாப்பிடும்போதும் சாப்பிடாமல் தட்டை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்...ஷ்ரவன் அவளது தோளைத் தட்டி “என்னம்மா” என்று கேட்க... “ஓன்றுமில்லை” என்று சும்மா தலையாட்டி வைத்தாள்...

அடுத்த நாள் மரியாதையின் நிமித்தமாக ஆத்விக்கின் தாய் தந்தையரைப் பார்க்க சென்று வந்தான்...அங்கு சென்றதும் அவர்கள் கொடுத்த பரிசுகளை எல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டு வந்துவிட்டான்.

ஆத்விக்கின் அம்மாவும் ஹரிதாவை பார்த்தவுடன் ...முகம்சுழித்தவர் பின் கடமைக்கு நன்றாகப் பேசுவதுபோல பேசினார் அவ்வளவே...

இந்தியா திரும்புவதற்கு ஏர்போர்ட்டில் காத்திருக்க...ஷ்ரவன் சொன்னான்... “நான் பெங்களூருலிருந்து அப்படியே சென்னைப் போயிடுவேன்...உன்னை ஒருவாரம் பார்க்க முடியாது ரிது பேபி” என்று அவளது கையைப்பிடிக்க அவள் கையை அவனிடமிருந்து விடுவித்து அமைதியாக இருந்தாள்...

மியாக்கூட போயிட்டு வந்ததிலிருந்து இப்படித்தான் இருக்காள்...கல்யாணம் முடியட்டும் பார்த்துக்கலாம் என்று விட்டுவிட்டான்...அப்போது கேட்டிருந்தாள் பிரச்சனை பெருசாகிருக்காது...

பிளைட்டிலும் எதையோ பறிக்கொடுத்தவள் போல அமர்ந்திருந்தாள்.

தூங்கியவளைத்தான் பார்த்திருந்தான்...

இன்னும் பத்து நாளில் என் மனைவியாக என் வீட்டிலிருப்பாள் என்று அவ்வளவு சந்தோசப்பட்டான்.

அவர்களை அழைக்க கிருஷ்ணா சுமித்ரவும் வந்திருந்தார்கள்... ஷ்ரவன் ஹரிதாவை பார்த்ததும் சந்தோசத்தோடு கையசைத்து வரவற்றனர்...

கிருஷ்ணா வீட்டுக்கு வந்திட்டுப்போங்க என்று சம்பிரதாயத்தோடு அழைக்க...அதற்குள் அவனை அழைத்துப்போக அக்க்ஷராவின் கணவன் சென்னையிலிருந்து வந்திருந்தான்...

கிளம்பும்போது ஹரிதாவைப் பார்க்க...அவளும் ஷ்ரவனைத்தான் பார்த்தள்...ஆனால் பார்வையின் அர்த்தம் வேறு வேறாக இருந்தது...

திருமண நாளிற்கு முந்தின நாள் இரவு திருமண மண்டபத்தின் மணப்பெண் அறையில் ஹரிதாவின் சத்தம் ஓங்கி ஓலித்தது...

" இந்த பொம்பளைப் பொறுக்கி எனக்கு வேண்டாம்...இன்னொரு பெண்ணோட வாழ்க்கையை கெடுத்திட்டு...என்னையவும் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறவன் எனக்கு வேண்டாம்...இந்தக் கல்யாணமும் வேண்டாம்" என்று தன் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

இதைக்கேட்டு அப்படியே உறைந்து நின்றான் ஷ்ரவன்....

 

அத்தியாயம்-11

 

ஏர்ப்போர்ட்டிலிருந்து வீட்டிற்கு வந்ததும் தனதறைக்குள் சென்று முடங்கியவளுக்கு ஏன் என்று தெரியாமலயே கண்ணீர் கன்னங்களில் தானாக வழிந்தோட அப்படியே படுத்திருந்தாள்...

அவளுக்கு பைத்தியம் பிடிக்காத நிலைதான்...தன்னுடைய மொபைலில் உள்ள அந்த போட்டோவையே பார்த்திருந்தாள்...அதிலிருந்த இன்னொரு போட்டோவை எடுத்து அதில் உள்ளவைகளை வாசித்துப் பார்த்து பார்த்து அழுகை முட்டிக்கொண்டு வந்தது...

திருமணத்திற்குரிய எந்த கலகலப்பும் அவளிடம் இல்லை. அவளது அக்கா மூன்று நாளைக்கு முன்பே வந்துவிட்டாள்...ஹரிதாவுடன் பேச அவளோ விட்டேற்றியாக இருந்தாள்...சரிதான் அம்மா அப்பாவை பிரியப்போறோம்னு கவலையில் இருக்கின்றாள் என நினைத்தனர்.

திருமணத்தை பெங்களூருவிலும், ரிசப்சன் அன்று மாலையே சென்னையிலும் வைத்திருந்தார்கள்.

அதற்காகான எல்லா ஏற்பாட்டையும் செய்திருந்தனர்...இரு குடும்பத்தாரும்.

ஷ்ரவன் இரண்டு நாள் தொடர்ந்து அவளுக்கு அழைக்க,அழைப்பு எடுக்கப்படவேயில்லை.

மறுபடியும் அழைத்துப் பார்த்தான் சவிட்சுடு ஆஃப்...இப்போ இருக்கின்ற சூழலில் அங்கப்போகவும் முடியாது...

கல்யாணவேலைகள் தலைக்குமேல் இருக்க, விட்டுவிட்டான்...இன்னும் நாலஞ்சு நாள்தான இருக்கு பார்த்துக்கலாம் என்றிருந்தான் ...

ஷ்ரவனின் அத்தைக் குடும்பமும் ஊரிலிருந்து வந்திருந்தனர். மொத்தக்குடும்பமும் ஷ்ரவனின் வீட்டிலயே.

அதுவுமில்லாமல் மேகா தன்னுடைய குடும்பத்துடன் வந்திருந்தாள்...அவளுடன் மியாவும்.

திருமணத்தின் முந்தின நாள் இரவு மாப்பிள்ளை வீட்டினர் எல்லோரும் மண்டபத்திற்கு வந்திருந்தனர்..

அவர்களை வரவேற்று எல்லா உபசரிப்பும் முடிந்து அமர்ந்திருந்தனர்...மணமளுக்கான அறையில் ஹரிதா சோர்ந்து அமர்ந்திருந்தாள். அவளது கண்கள் எதையோ வெறிக்கொண்டிருந்தது.

வந்திருந்த மாப்பிள்ளை வீட்டினருக்கு கிருஷ்ணாவின் நகரத்தில் இருக்கும் தன்னுடைய இன்னொரு பங்களாவில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்...மற்ற எல்லோரும் போய்விட...ஷ்ரவனுக்கு ஹரிதாவை பார்க்கணும்போல இருந்தது...அதுவும் நிருபமா தேவ்ஆனந்த் எல்லோரும் வந்திருக்க...ஹரிதா வெளியே வந்து பார்க்ககூட இல்லை.

ஷ்ரவன் கிருஷ்ணாவிடம் அனுமதிக் கேட்டு...ஹரிதாவின் அறைக்குள் சென்று நிற்க...திரும்பிக்கூட பார்க்கவில்லை...

"ரிது பேபி" என்று அவளது அருகில் சென்றவன் அவளைத்தன் பக்கமாக திருப்ப...எங்கிருந்து அவளுக்கு அவ்வளவு அவேசம் கோபமும் வந்ததோ...

"தயவு செய்து அப்படி என்னைக் கூப்பிடாத,இங்கயிருந்து வெளியப்போ ...உன்னை பார்க்கவே எனக்குப்பிடிக்கலை...நீ என்னை நம்பவச்சு கழுத்தறுத்திட்ட...

நீ ஒரு ஏமாற்றுக்காரன்"என்று அவனைத் தள்ளிவிட..

அவள் இப்படி சத்தமா பேசவும் ஷ்ரவனுக்கு ஒன்னுமே புரியவில்லை...அதற்குள் மகளின் சத்தம் கேட்டு சுமித்ராவும், கிருஷ்ணாவும் ஓடிவந்தனர்...என்னவோ என்று...

ஷ்ரவன் அவளிடம் நெருங்கி “என்னடிப்போசுற நீ,பைத்தியம் மாதிரி கத்துற எல்லாரும் வெளிய இருக்காங்க, மெதுவா பேசு... உனக்கு என்ன பிரச்சனை எதுவானாலும் என்கிட்ட சொல்லு,என்ன பிரச்சனைனு தெரிஞ்சாதான பேசமுடியும், எதவென்றாலும் பேசி தீர்க்கலாம்.

உனக்கு எத்தனை முறை போன் செய்திருப்பேன்...எடுக்கவேயில்லை...என்னடா ஆச்சு உனக்கு” என்று ... அவளது கையைப்பிடிக்க வந்தவனைத் மீண்டுமாக தடுத்தவள்.

“என்கிட்ட வராதா.. என்னைத் தொடாத...உன்னை பார்க்கவும் பிடிக்லை

உன் கிட்ட பேசவும் எனக்கு பிடிக்கல. உன்னை நான் எவ்வளவு நம்பினேன் நீ என்னை ஏமாத்திட்ட.

இந்த பொம்பள பொறுக்கி எனக்கு வேண்டாம் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்று அழுது மடிந்து உட்கார்ந்தாள்...கைகளால் தனது முகத்தை மூடி அழுதாள்.

அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் அப்படியே உறைந்து நின்றான்...

அந்த சத்தத்தில் நிருபமாவுடன் எல்லோரும் அறைக்குள் வந்திருந்தனர்,சுமித்ரா மெதுவாக அவளருகில் அமர்ந்து அவள் தோளை தட்டிக் கொடுத்து “என்னடா பிரச்சனை, கல்யாணம் நாளைக்கு காலையிலே என்ன நீ இன்னைக்கு வந்து இவ்ளோ பிரச்சனை சொல்ற...கல்யாணம் வேண்டாம் என்கிற... என்ன விஷயம் சொல்லுமா” என்று கேட்டார்.

ஹரிதா "அம்மா அவன் ஒரு பொம்பள பொறுக்கிமா ஏற்கனவே ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுத்து.. அவ வயித்துல பிள்ளையும் கொடுத்து,அதை அழிக்க வச்சிருக்கான்மா,

அந்தப்பொண்ணு என்கிட்ட வந்து எல்லாத்தையும் சொல்லிட்டாமா...”

சுமித்ரா "அடுத்தவங்க சொல்றதையெல்லாமா நம்புவாங்க ஷ்ரவன் பத்தி உனக்குத்தெரியாதா?

அவங்க அப்படிபடட்வங்க இல்லைடா..நீ எதோ தப்பா புரிஞ்சிருப்ப” என்றதும்.

ஹரிதாவோ “என்கிட்ட எவிடன்ஸ் இருக்குமா...போட்டோஸ் இருக்கு” என்றதும்..

ஷ்ரவனுக்கு கோபம் தலைக்கேறியது அவள் அருகில் வந்து அவளை தூக்கி நிறுத்தியவன் "பைத்தியக்காரி மாதிரி பேசாத... உனக்கு இப்படி பொய்யா சொல்லித் தந்தது யாருடி... என்னைப் பார்த்தா உனக்கு அப்படிபட்டவன் மாதிரி தெரியுதா? அவ்வளவு மோசமானவனா நான்.... நீ என் மேல வச்சிருந்த நம்பிக்கை அவ்வளவுதானா ம்ம் ...சொல்லுடி...” என்று சரமாரியாக அவளிடம் கேள்விகள் கேட்க..

“சம்பந்தப்பட்டவங்களும் இங்க வந்திருக்காங்க...என்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டாங்க.. எவிடன்ஸ் என்கிட்ட தான் இருக்கு.. இனியும் நீங்க என்னை ஏமாத்த முடியாது” என்று அழுதாள்.

அதைக் கேட்ட நிருபமா கோபம் வந்து "என்ன பேசுற நீ? இப்படி பஜாரி மாதிரி கத்துற என்ன பிரச்சினை என்று சொல்லாமல் என் பையன் மேல குற்றம் சுமத்த நீ யாரு? என் பிள்ளைகளை எப்படி வளர்த்திருக்கேனு எனக்கு தெரியும்... என் பிள்ளைங்க மேல கை நீட்டி பேசுறதுக்கு ஒருத்தனுக்கு கூட தகுதி கிடையாது. நீ எப்படி என் பிள்ளைய இப்படி எல்லார் முன்னாடியும் வச்சு கேவலப்படுத்துற... போதும்...இதுக்குமேல பேசினா மரியாதையா இருக்காது...

என் குடும்பத்தை பத்தி... உனக்கு என்ன தெரியும் நாலு மாசம் பழக்கத்திலே என் பையன் குணங்களை அவ்வளவு தெரிஞ்சுகிட்டியா நீ... அவ்வளவு பொய் குற்றம் சுமத்திற நீ...”

ஹரிதா "ஹலோ மேடம் கொஞ்சம் வாயை குறைச்சு பேசுங்க.. உங்க புள்ளையை பற்றி எல்லாம் எங்களுக்கு தெரியும்.. என்கிட்டேயும் அப்படி நடந்தவந்தான் உங்கபிள்ளை ...

இப்படி ஒரு பையனுக்கு அம்மவா, அதுக்கு நீங்கதான் வெட்கப்படனும். என்கிட்ட கேக்குறதுக்கு பதில் உங்க பையன் கிட்ட கேளுங்க....”

சுமித்ரா இப்பொழுது ஹரிதாவை அடித்திருந்தார் “பெரியவங்ககிட்ட எப்படி மரியாதை பேசணும் தெரியாதா? அவங்க மாப்பிள்ளையோட அம்மா நியபகமிருக்கட்டும்” என்று திட்டவும் "என்னமா நீங்க கல்யாணமே வேண்டாம் நிறுத்துங்கனு, சொல்லிக்கிட்டு இருக்கேன் நீங்க என்னன்னா மாமியாராக போறவங்க வருங்காலம் பேசிகிட்டு இருக்கீங்க" என்றவள் மீண்டும் அழுதாள்

தனது அம்மாவை மரியாதை இல்லாமல் பேசவும் ஷ்ரவன்... அவளை அடிக்க கை ஓங்கி இருந்தான் அதற்குள் நிருபமா அவனது கையை பிடித்து நிறுத்தி “இது என்ன பழக்கம்” என்று அவனைக் கடிந்துக்கொண்டார்.

ஷ்ரவன் இப்பொழுது நேராக கிருஷ்ணாவிடம் வந்து "உங்க பொண்ணு எதற்காக இவ்வளவு பேயாட்டம் ஆடுறானு எனக்கு தெரியாது. ஆனால் அவ எதனால இப்படி சொல்லுறா?என்ன பிரச்சனைனு எனக்கு இப்போ, இந்த நிமிஷம்,தெரியணும் இல்ல ஒருத்தரையும் சும்மா விடமாட்டேன்.

என் மேல பழி போடுற அளவுக்கு அவளுக்கு அவ்வளவு தான் நம்பிக்கையா என் மேல? எனக்கு அவ வேண்டாம்... நானும் உங்கப்பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போறது இல்ல...ஆனா எனக்கு இப்பவே உண்மைத் தெரிஞ்சாகணும்..

உங்க பொண்ண உண்மைய சொல்ல சொல்லுங்க எதனால்... எதனாலா அவ இவ்ளோ பிரச்சனை செய்கிறாள்” எனக் கேட்டான்.

ஹரிதா தனது பேக்கில் இருந்த அவளது மொபைலை எடுத்து அதிலிருந்த இரு போட்டோக்களை அவனுக்கு காண்பித்தாள்...அதை நிருபமாவும் பார்த்தார்.

ஷ்ரவன் "இதைப் பார்த்தவுடனே... நம்பிட்ட..நான் அப்படிபட்டவன்தானு...நீ படிச்சிருக்கத்தான...உன் மூளைய பயண்படுத்தவே மாட்டியா...அறிவு கெட்டவளே...யானை தனக்குத்தானே மண்ணைவாரிப் போட்டுக்குமாம்...நீ இப்போ செய்ததும் அப்படித்தான். நியூயார்க்கல வச்சித்தான இந்த பிரச்சனை தொடங்கியிருக்கு...அங்கயே என்கிட்ட கேட்டிருக்கலாமேடி” என்றவன் தனது நெத்தியில் அடித்துக்கொண்டான்.

“இது உண்மையில்ல இல்லைனுத் தெரிஞ்சா என்னடி பண்ணுவ...இப்பவே இதைப் பொய்யினு நிருபிச்சுட்டுப் பேசறேன்...”என்று கண்கள் சிவக்க “அந்தப் பைத்தியத்தை இப்பவே இங்கவரச்சொல்லுங்க” என்று உறமினான்.

மெதுவாக நிருபமா தனது இரண்டாவது மகளுக்கு அழைத்து “மியாவை இங்கு கூட்டி கொண்டு வருமாறும்.. ஆத்விக்கையும் கூட அழைத்துக் கொண்டு வா” என்று கூறியிருந்தார்.

அவர்கள் உள்ளே நுழைந்ததும் ஷ்ரவன் பளார் என்று மியாவை அடித்திருந்தான்...அவள் கீழே விழவும்...ஹரிதாதான் அவளைத்தூக்கி விட்டாள்.

ஹரிதாவைப் பார்த்து “விடுடி அவளை...நம்ம இரண்டுபேரோட வாழ்க்கையில விளையாடிட்டிருக்கா...அவ மேல பாசம் பொங்குதா உனக்கு.. இவ்வளவு பிரச்சனைகளுக்கு காரணமே இவதான்” என்றவன் ஹரிதாவை விலக்கிவிட்டான்.

ஆத்விக்கிற்கு தனது தங்கையைப் பற்றிய சில விசயங்கள் தெரியும் ஆதனால் அமைதியாக நின்றிருந்தான்.

ஷ்ரவன் ஹரிதாவின் மொபைலில் உள்ள போட்டோக்களை மியாவிடம் காண்பித்து “என்ன இது? ஹரிதாகிட்ட ஏன் இதைக் காண்பித்த எனக்கு காரணத்தைச் சொல்லு” என்றான்.

மியா "தெரியாது அத்தான்... யாரோ உங்க போட்டாவையும் என் போட்டவையும் ஒட்ட வச்சிருக்கிங்கத்தான்...ஐயோ இது என்ன கேவலமான புத்தி...யாரு இப்படி செய்தது. ஹரிதா நான் உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை” என ஆரம்பித்திருந்தாள்.

ஹரிதா இப்போது வாயில் கைவைத்து கண்களில் அதிர்ச்சியோடு மியாவைத்தான் பார்த்திருந்தாள்.

"உங்களுக்கு அத்தானைப் பிடிக்காம, கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்தீங்கனா...வேற எதாவது பண்ணிருக்கலாமே...எதுக்கு ஹரிதா என் மேல இப்படி அநியாயமா பழிப்போடுறீங்க அதுவும் உங்களால் எப்படி எங்க இரண்டு பேரு போட்டோவ அசிங்கமா பண்ண முடிஞ்சது ...நீங்களும் ஒரு பெண்தானே” என்று மியா பேசிக்கொண்டே போனாள்.

ஷ்ரவன் இப்பொழுது மியாவை கையை காட்டி “நிறுத்து போதும்” என்று சொன்னவன்...

ஹரிதாவிடம் திரும்பி “என்ன நடந்தது என்று முதலில் இருந்து சொல்லு” என்று கேட்டான்...

ஹரிதா அன்று நியூயார்க்கில் நடந்ததை சொன்னாள். தனது அறைக்குள் இருந்த ஹரிதாவிடம் மியா வந்து " உங்களுக்கு வீட்டுக்குள்ளவே இருக்குறது ஒருமாதிரியா இல்லையா...என்று க்ஷபேச்சை வளர்த்தவள்.எங்க வீட்டை நீங்க பார்த்ததில்லைல.. நான் எங்க வீட்டுக்கு உங்களை கூட்டிட்டு போறேன்” என்று மெதுவாக அழைக்க... ஹரிதா “இல்லை இப்போ வேண்டாம் ஷ்ரவன்கிட்ட கேட்டுட்டு வர்றேன்” என்றாள்.

“இவ்வளவு நல்ல ப்ரண்ட் ஆகிட்டோம் நாங்க என்ன வேற ஆட்களா...உங்க சொந்தம்தான” என ஹரிதாவை தனது பேச்சின் மூலமாகவே சம்மதிக்க வைத்து, அழைத்துக்கொண்டு போனாள் மியா.

மியாவின் வீட்டிற்கு வந்ததும் தனதறைக்கு அழைத்து, நேரடியாக அழைத்து உட்காரவைத்திருந்தாள். இருவரும் பேசியபடியே அமர்ந்திருக்க... “இருங்க உங்களுக்கு சாப்பிட எதாவது எடுத்துட்டு வர்றேன்” என்று சொன்னவள், படிச்சிட்டிருங்க என்று ஒரு புத்தகத்தைக் கொடுத்துவிட்டு சென்றாள்...

சும்மா அந்த புத்தகத்தை திறந்தவளுக்கு அதிர்ச்சி...அதில் ஷ்ரவனும் மியாவும் அரைகுறை ஆடைகளுடன் இருப்பது போன்ற போட்டவும்,அதனுடன் மியா கர்பாபமாக இருந்ததிற்கான மெடிக்கல் சர்டிபிகேட்டும் இருந்தது...அதை பார்த்த ஹரிதா அது உண்மையா? பொய்யா? என்று பிரித்தறிய முடியாது குழப்பத்தில் கண்கள் கலங்க அப்படியே அமர்ந்திருக்க, மியா உள்ளே வந்தவள் "ஐயயோ இது எப்படி உங்ககிட்ட வந்துச்சு என்று அறியாதுபோல கேட்க...”

ஹரிதா சிறிது தன்னை நிதானப்படுத்தி “இதுல இருக்கதெல்லாம் உண்மையா” என்று கேட்டாள் “உண்மைதான் நானும் ஷ்ரவன் அத்தானும் ரொம்ப வருஷமா காதலித்தோம்...அத்தான் இங்கு படிக்க வந்ததிலிருந்தே எங்களுக்குள்ளாக பழக்கம்...ரொம்ப டீப்பா பழகிட்டோம்.

அதுல நான் கர்ப்பம் ஆகிவிட்டேன் அதைக் கேட்கும்போது... அத்தான் இப்போதைக்கு அபார்ட் பண்ணிடு பிறகு பார்த்துக்கலாம்னு சொல்லிட்டாங்க...அவங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்கபோறோம்னு, அத்தான் சொன்னதையெல்லாம் கேட்டேன் தெரியுமா?

ஆனா கடைசியில என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க... ஏன் எனக் காரணமெல்லாம் தெரியாது, என்னை ஏமாத்திட்டாங்க,நான் அவங்களை உண்மையா காதலிச்சேன்...ஷ்ரவன் அத்தான் அப்படியில்லை...அதனால அத்தனாவது கல்யாணம் செய்திட்டு நல்லா வாழணும்னு...நான் இப்படியே அவங்களை நினைச்சுட்டே வாழந்திருவேன்...தயவு செய்து இதை யாருக்கிட்டயும் சொல்லிடாதிங்க...

உங்க கல்யாணம் நல்லபடியா நடந்து, நீங்க சந்தோசமா வாழணும்....” என்று கண்ணீர் விட்டு அழுதாள்.

அதைக்கேட்ட ஹரிதாவிற்கோ இதயம் சுக்கு நூறாக வெடித்து சிதறியது.. என்னோட ஷ்ரவனா இப்படி பண்ணினது! அவங்களா ஒரு ஏமாற்றுக்காரர்? என்று கண்ணீர் வரவும்... “உங்ககிட்ட இப்போது சொல்லலனா பின்னாடி உங்கள் வாழ்க்கையே ரொம்ப கஷ்டமா இருக்கு அதனாலதான் உங்க நல்லதுக்கு சொல்லுறேன்...

எனக்காக ஒரு ஹெல்ப் பண்ணுங்க ஷ்ரவன் அத்தனை கல்யாணம் செய்திட்டு அவங்ககூட சந்தோசமா, நிம்மதியா நீங்க வாழணும் அதுதான் என் ஆசை என்றுவிட்டு.

தயவு செய்து இந்த விசயத்தை யாருக்கிட்டயும் சொல்லமாட்டேனு சத்தியம் பண்ணுங்க” என்று கேட்டதும் ஹரிதாவும் சத்தியம் பண்ணிக்கொடுத்தாள்.

ஹரிதா “எனக்கு குடிக்க தண்ணித் தாங்க” என்றதும் மியா கிட்சனுக்குள் சென்று வருவதற்குள் அதை போட்டோ எடுத்துக்கொண்டாள்...

ஹரிதா உண்மையை சொல்லி முடித்ததும் எல்லோரும் மியாவைக் கோபத்தில் பார்க்க. "ஐயோ நம்பாதீங்க... ஹரிதா பொய் சொல்றாங்க.. அவங்களுக்கு ஷ்ரவன் அத்தானைப் பிடிக்கல.. ஏதோ பிரச்சனை பண்றாங்க ...நான் இதுல எதுவுமே பண்ணல எனக்கு எதுவுமே தெரியாது” என்று மியா அழுதவள்..

“இந்த போட்டோஸ் எல்லாம் எப்படி அவங்களுக்கு வந்தது என்று கேளுங்க அத்தான்” என்று ஹரிதாவின் மீது பழியைப் போட்டாள்...

ஆத்விக்கைப் பார்த்த ஷ்ரவன் “என்ன மன்னிச்சிடுங்க அத்தான்” என்று சொல்லி வாய் மூடுவற்குள் மியாவின் கழுத்தை பிடித்து நெறித்து ... “உண்மையை சொல் எதற்காக இப்படி பண்ணின, இது உன்னோட மாஸ்டர் பிளான்தான்” என்று எனக்குத்தெரியும்.

“ரிதுவைப் பற்றி எனக்குத் தெரியும். சண்டைப்போடுவாளே தவிர, இப்படி அசிங்கமா செய்ய மாட்டா. நேருக்குநேர் பேசிட்டு போயிட்டே இருப்பாள்...அவமேல பழியைத்தூக்கிப் போடாத, உண்மைய சொல்லு” என்றான்.

இதைக்கேட்ட ஹரிதவிற்கு நெஞ்சில் சுருக்கென்று குத்தியது...என் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காங்க...நம்ம தான் நம்பிக்கை வைக்கலையோ? என யோசிக்க...காலங்கடந்த சிந்தனை பயனற்றது.

மியா மெதுவாக சொன்னாள் “உங்களை பழிவாங்கத்தான் இப்படிச் செய்தேன்.

என்னுடைய எல்லா காரியங்களையும் எங்க அண்ணனுக்கு சொல்லி... என்னை பிரிச்சு வச்சுட்டீங்க... அதனாலதான் இப்படி பழிபோட்டேன். நான் யார் கூட பழகுன உங்களுக்கு என்ன நீங்க உங்க வேலைய பாத்துட்டு போக வேண்டியது தான.

என்னோட பர்சனல் காரியத்துல தலையிட்டு எல்லாவற்றையும் கெடுத்துட்டீங்க. அதுக்குத்தான், பழிவாங்கினேன்...நான் என்ன சொன்னாலும் அவங்க ஏன் நம்பறாங்க” என்றவளை...

அவளை பார்த்து “நீ எல்லாம் ஒரு பொண்ணா. ஆத்விக் அத்தானுக்கு மட்டும்தான்,உன்னை சும்மா விடறேன் இல்ல இப்பவே போலீசில் பிடிச்சுக்கொடுத்திடுவேன்...” அவளைப்பிடித்து தளள்விட்டவன், இப்போது ஹரிதாவைப் பார்க்க...

அவளோ இதைக் கேட்டுக் அப்படியே சரிந்து அமர்ந்தாள்...மியா விரித்த வலையில் ஹரிதாதான் நன்றாக மாட்டிக் கொண்டாள்.

கிருஷ்ணா அவளது அருகில் வந்தவர் சத்தம் போட்டார்... “எதுவுமே யோசிக்காமல் எடுத்துச்சாடி பேசாதனு எத்தனை நாள் நாங்க சொல்லிருப்போம்.. இப்படி எல்லா காரியத்தையும் குழப்பம் பண்ணி கெடுத்து வச்சிருக்கியே” என்று வருத்தப்பட்டார்.

ஹரிதா தலையை குனிந்து கொண்டு அமர்ந்திருந்தாள் ...அவளது உலகமே இருண்டது போல ஒரு தோற்றம்.. பேசிய வார்த்தைகள் பேசினதுதானே திரும்பி அள்ளவா முடியும்...

கிருஷ்ணா நிருபமாவிடம் பேச வரவும் அவரை கையால் சைகை செய்து தடுத்தவர் “இப்படிப்பட்ட உங்க பொண்ணு இனி எங்க வீட்டுக்கு மருமகளா வரமுடியாது. என்னுடைய குடும்பத்தில் அமைதியும் அன்பும் பாசமும் இருக்கணும்.. இப்படி பஜாரி மாதிரி சண்டை போட்டு என் பையனோட நிம்மதியை கெடுக்கற இவள் என் பையனுக்கு வேண்டாம். இந்த கல்யாணத்தை இத்தோடு நிறுத்தி விடுவோம், அதுதான் எல்லோருக்கும் நல்லது” என்று சொல்லி முடித்துவிட்டார்.

 

அத்தியாயம்-12

 

நிருபமா பேசி முடித்ததும் அப்படியே எல்லோரும் அறையில் இருந்து வெளியே வந்தனர். ஷ்ரவனோ ஒரு நிமிடம் ஹரிதாவினை திரும்பி பார்த்தான் ஹரிதாவும் நிமிர்ந்து அவனைப் பரிதாபமாக பார்க்க... அவளது பார்வையோ விட்டுட்டு போயிடுவியா என்று கேட்டதுபோல தோன்றியது ஷ்ரவனுக்கு...இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று அவனும் மெதுவாக வெளியே நடந்தான்.

கிருஷ்ணா தன் மகளின் வாழ்க்கையை நினைத்து அப்படியே அருகில் அமர,

இப்போது ஹரிதா கிருஷ்ணாவிடம் அப்பா என சத்தமாக அழைத்து "தப்பு பண்ணிட்டேன்பா, மியா சொன்ன பொய் எல்லாம் நம்புனது, என்னோட தப்புதான்பா... ஒரு பொண்ணு இதுல எல்லாமா பொய் சொல்லுவா என நினைத்து நம்பிட்டேன்பா"என்று கதறி அழுதாள்.

அவளின் அழுகை ஷ்ரவனின் காதுகளில் விழ...அவனது உள்ளமோ உயிருக்குத் துடிக்கும் பறவைப்போல படபடவென துடித்தது...

அவன் நடையில் உயிர்ப்பில்லை...

அப்படியே சுவரில் சாய்ந்து கண்மூடி நின்றுவிட்டான். திரும்பிப் பார்த்த தேவானந்த் அவனருகில் வந்தவர் அவனது தோளில் கைவைக்க,

கண்திறந்தவனின் கண்கள் சிவந்திருந்தது .

“ஷ்ரவன் என்னடா?” என்று தகப்பனாக அவனின் தோளில் கைப்போட்டு கேட்க... “அவளை விட்டுட்டு வரமுடியலைப்பா” என்று பரிதாபமாக நின்றான்.

அவர்கள் இருவரையும் கண்ட நிருபமா அருகில் வந்து என்ன என்று தேவ்விடம் கண்களால் ஜாடையாக கேட்க, அவர் ஷ்ரவனைப் பாரு என்று கண்ணை காண்பித்தார்...

அவன் அமைதியாக கண்களைமூடி அப்படியே சாய்ந்திருக்க...ஷ்ரவனின் கையை பிடித்தவர் “வா வீட்டுக்குப் போகலாம்” என்று அழைத்தார்... அவன் அசையாது அப்படியே நின்றிருந்தான்.

“ஷ்ரவன்” என்று மறுபடியும் அழைக்க கண்களைத்திறந்து அவரைப் பார்த்தான்...

அவனது கண்களை கூர்ந்து நோக்கினார் நிருபமா. அவன் தனது தலையை குனிந்துகொண்டு "மன்னிச்சிடுங்க ம்மா இந்த நிலைமையில் அவளை விட்டுட்டு வந்தேன்னா, நான்தான் நம்பிக்கை துரோகி ஆகிடுவேன்... அவள் சொன்னதுப்போல நம்ப வைத்து கழுத்தறுத்தவனாகிடுவேன்...

நான்...அது நாங்க...” என்று வார்த்தைகளை கோர்க்க முடியாது திணறியவன்... “அவ என் மனைவிமா எப்படி விட்டுட்டு வருவேன்” என்றான்.

நிருபமா சிறிது நேரம் அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டார்... மகனிடம் "உன்கிட்டயிருந்து இந்த மாதிரியான செயலை நான் எதிர்பார்க்கவில்லை... நான் என் பிள்ளைகளை அப்படி வளர்க்கவில்லை என்று இப்போதினே பெருமையாக சொன்னேன்... அந்த நம்பிக்கையை பொய்யாக்கிட்டயே.. இனி நீ என்கிட்ட பேசாத” என்றவர்.

“இப்போ நான் என்ன செய்யணும்னு நீ எதிர்பார்க்கிற...” அவன் அமைதியாக தலைகுனிந்து நின்றான். மகனின் எண்ணம் புரிந்தது “உனக்காக நான் என்னுடைய தன்மானத்தை விட்டுக் கீழே இறங்கிவரணும் அவ்வளவுதான...என் பிள்ளைங்க சந்தோசம் எனக்கு முக்கியம்” என்றவர். “ஆனா பிற்காலத்துல எது வந்தாலும் நான் தலையிடமாட்டேன் புரிஞ்சுதா...எதுவாக இருந்தாலும், கேட்டுதா எதுவாக இருந்தாலும் நீயேதான் சமாளிக்கணும் புரியுதா” என்று அழுத்தி சொன்னார்.

ம்ம்.. என்று தலையசைத்தான்.

மறுபடியும் ஹரிதாவின் அறைக்குள் நுழைந்தார் நிருபமா... அங்கு தந்தையின் மடியில் படுத்து அழுது கொண்டிருந்தாள் ஹரிதா. அதை பார்த்ததும் ஒரு நிமிடம் மனதில் இரக்கம் தோன்றியதுதான், ‘மியா செய்த செயலுக்கு இவள் பலிகடா ஆகிவிட்டாள் , ஆனாலும் அவள் பேசிய வார்த்தைகள் அதிகம்’ என்று நினைத்துக்கொண்டார்.

போனவர்கள் திரும்பி வந்ததும்...கிருஷ்ணா ஏறிட்டுப் பார்த்தார்.

“உங்ககிட்ட எனக்கு கொஞ்சம் பேசணும்...

எங்க பையன் சொன்ன உடனே அதிரடியா நாங்க எதுவும் முடிவு பண்ணலை. உங்க குடும்பத்தை நாங்க விசாரித்துதான் பொண்ணு கேட்கலாம்னு வந்தோம். உங்க குடும்பம் எங்களுக்கு நல்ல குடும்பம்னு தெரிஞ்சுது அதனாலதான் இவ்வளவு தூரம் இறங்கி வந்தோம் அண்ணா...

உங்க பொண்ணு பேசிய பேச்சு ரொம்ப அதிகம். எந்த விஷயத்தையும் விசாரிக்காமல ஆராயாமல் பேசுறா...ஹரிதாகிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை. மியாவே தப்பு தப்பா ஷ்ரவனை பற்றி சொன்னாலும்.இவ எப்படி நம்பலாம்...என் பையனை வேண்டாம்னு தூக்கிப்போட அவன் என்ன உயிரில்லா பொருளா..நினைச்சா வேணும்னு சொல்றதுக்கும், வேண்டாம்னு சொல்றதுக்கு. நடந்தது போகட்டும் எங்க பக்கத்திலிருந்துதான் இந்த பிரச்சனை தொடங்கியிருக்கு...எங்களையும் மன்னிச்சுருங்க” என்றவர்.

“நான் இப்போது அதை பேசி மனசை புன்படுத்துவதற்காக வரவில்லை.. கல்யாணம் என்பது இரண்டு மனசு சம்பந்தப்பட்டது. நம்ம அடிச்சு பிடிச்சு சண்டை போட்டு என்னதான் பிரிச்சு வைத்தாலும். அவங்க மனசுல என்ன இருக்குன்னு அவங்க ரெண்டு பேருக்கு மட்டுந்தான் தெரியும்.

என்னோட மகனுக்காக நான் உங்ககிட்ட கேட்கிறேன். இந்த கல்யாணத்த அவனுக்காக நான் நடத்த முடிவு பண்ணியிருக்கேன். உங்க முடிவு என்ன...அதைவிட உங்க மகளிடம் முடிவக் கேட்டு சொல்லுங்க. வேணுமா? வேண்டாமா? என்று. இப்போது தலையாட்டிட்டு காலைல மறுபடியும் பிரச்சினை பண்ணக் கூடாது. எதுவாக இருந்தாலும் இப்பவே உங்க பொண்ணு கிட்ட கேட்டு பதில் சொல்லுங்க” என்றார்.

ஹரிதா இப்பொழுது ஷ்ரவனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்... அவனது கண்கள் சிவந்து முகமே மாறி இருந்தது. அவனும் அவளைத்தான் பார்த்து இருந்தான் என்ன பதில் சொல்லுவாளோ என்று.

தந்தையின் மடியிலிருந்து மெதுவாக தலையைத் தூக்கி கிருஷ்ணாவிடம் “எனக்கு சம்மதம் அப்பா சொல்லுங்க” என்று, அழுதுகொண்டே சம்மதம் கூறினாள்.

நிருபமா "இங்க நடந்த விஷயம் நம்ம ரெண்டு குடும்பத்துக்குள்ள தான் இருக்கணும். வெளியே எங்கேயும் தெரியக் கூடாது. உங்க பொண்ணுக்கும் அது கேவலம்,என் பையனுக்கும் அது அவமானம். நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் இனி அதை பற்றி யாரும் யார்கிட்டயும் பேசி பிரச்சினைகளை பெருசாக்க கூடாது.

காலையில் கல்யாணம் நடக்கும், அதுக்காக தயாராகுங்க...

உங்களுக்கு ஏதாவது இதில் வேறு அபிப்பிராயம் இருந்தாலும் சொல்லுங்க, நாங்க அத மதிக்கிறோம்” என்று நிருபமா தனது முடிவை கூறி முடித்தார்.

“அதைவிட ஒரு முக்கியமான விஷயம் கல்யாணம் முடிந்து என் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் சண்டை சச்சரவு பிரச்சினைகள் இப்படி எதுவும் இருக்கக் கூடாது. என் குடும்பத்துக்குள்ள எப்பவுமே அன்பும் சந்தோஷமும் நிறைந்த சூழ்நிலைதான் இருக்கணும்னு நினைக்கிறேன். அதனால உங்க பொண்ணுக்கிட்ட சொல்லுங்க பிரச்சனைகள் பண்ணாம வாழ முடியுமா” என்று கேட்டு சொல்லுங்கள்.

ஹரிதா இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் நிருபமா என்ன சொன்னாலும் தலையாட்டி பொம்மை போல தலையை ஆட்டிக் கொண்டே இருந்தாள் அவளை பார்த்த ஷ்ரவனுக்குத்தான் அடிநெஞ்சில் ஓரத்தில் வலி...

ஷ்ரவன் இப்பொழுது ஹரிதாவிடம் அந்த செல்போனை கேட்டு வாங்கி,அதில் உள்ளவைகள் எல்லாம் அழித்து விட்டு மறுபடியும் போனை அவளிடம் கொடுத்தான்.

சுமித்ராவும் கிருஷ்ணாவும்.... “எங்க பொண்ணு செய்த தப்புக்கு நாங்க உங்க கிட்ட மன்னிப்பு கேட்கிறோம்.. ஆராயாமல் எதையும் யோசிக்காமல் அவள் அதிகமாக பேசிட்டா என எங்களுக்கு தெரியும்.

சிறுபிள்ளைத்தனமாக செய்த இந்த செயலுக்காக நாங்க உங்க கிட்ட மன்னிப்பு கேட்கிறோம். அவ உங்க வீட்ல வாழ போறவ எதையும் மனசுல வெச்சுக்காதீங்க தயவுசெய்து எங்களுக்காக மன்னிசாசுடுங்க...”

நிருபமா “நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கிறீங்க. அவ செய்தது தப்பு, அதற்காக பெரியவங்க நீங்க மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. குடும்பத்துல ஒருத்தர் ஒருத்தர் இப்படி மன்னிப்பு கேட்டுக் கொள்ள தேவையுமில்லை, மறந்துருவோம் இனி வாழப் போற வாழ்க்கை அவங்க நல்லபடியாக வாழணும்.அதுக்காக சொல்லி வைங்க அறிவுரை கூறுங்க அது மட்டும் போதும்.

கடைசியா ஒன்னு சொல்லிடுறேன் என் வீட்டுக்குள்ள வந்து சண்டை சச்சரவுகள் பிரச்சினைகள் திரும்பவும் பண்ணினா நான் வேறு மாதிரி முடிவுகள், என் பிள்ளைகளுக்காக எடுக்க தயங்க மாட்டேன் அது மட்டும் ஞாபகத்துல வச்சிக்கோ” என்று நேரடியாகவே ஹரிதாவிடம் கூறினார்...

இப்போது தனது கைகளையெடுத்து வணங்கியவள்... “மரியாதையில்லாம பேசுனதுக்கு மன்னிச்சிடுங்க...நான் செய்தது ரொம்ப பெரிய தப்புத்தான்...” என்று குலுங்கி அழுதாள்.

நிருபமாவிற்கே கண்ணீர் வந்துவிட்டது...

இவ்வளவு தூரம் இரண்டுபேரும் காதலிச்சு வாழ்ந்தும்...ஷ்ரவனனை ஹரிதா புரிந்துக்கொள்ளவில்லையே என்று ஆதங்கபட்டவர்...

அவளது கையை இறக்கிவிட்டவர் முதுகில் லேசாகத்தட்டிவிட்டு வெளியே கிளம்பிவிட்டார்...அவள் மன்னிப்புக்கேட்கும் போதே அதைப் பார்க்க பிடிக்காத ஷ்ரவன் வெளியே சென்றுவிட்டான்...

ஹரிதாவிற்கு காலம் முழுவதும் இந்த ஒரு வேதனையை போதுமானதாக இருந்தது இதுவே அவளுக்கு ஒரு பாடமாக இருக்கும்...இதற்கு மேல் அவள் எதுவாக இருந்தாலும் யோசித்துதான் முடிவெடுப்பாள்... மனதில் பெரிய அடி வாங்கி விட்டாள்.

ஹரிதாவிற்கு இப்போது குற்றவுணர்வு தலைதூக்கியது...அவனது ஒவ்வொரு செயலும் தன்னை நேசிப்பதை உணர்த்தியதை இப்போது நினைத்து நினைத்து ஏங்கினாள்...என்னோட வார்த்தைகள் எவ்வளவு ஷ்ரவனைக் காயப்படுத்தியிருக்கும் என வேதனைப்பட்டாள்.

அன்றிரவு இருக்குடும்பத்தாருக்குமே சஞ்சலத்தோடு கடந்தது... ஆதவன் தன் இருப்பைக் காண்பிக்க அதற்குள்ளாக அனைவரும் தயாராகிருந்தனர்...

சம்பிராதயங்கள் முடித்து அவளது கையில் புடவையைக் கொடுத்துக் கட்டிக்கொண்டுவரச் சொல்ல...சென்றவள் புடவையைப் பார்த்ததும் கண்ணீர் இருவரது பெயர்களும் பொறிக்கப்பட்டு அவர்களது இரண்டுபேரின் போட்டவும் இருந்தது...அது அமெரிக்காவில் இருக்கும்போதே இருண்டுபேரும் ஒருத்தருக்கொருத்தர் கேட்டுக்கொண்டு டிசைன் கொடுத்த புடவை அது...ஷ்ரவனின் பெயரை புடவையிலயே தடவிக்கொடுத்தாள்.

புடவைக்கட்டிக்கொண்டு மணவறைக்கு வர அக்க்ஷரா வந்து அவளை கைப்பிடித்து அழைத்துச் சென்றாள்.

மணவறையில் உட்காரும்போது கால்கள் தள்ளாடியது...ஷ்ரவன் அவளது கைகளை பிடித்திருந்தான் மெதுவாக அமர்ந்தாள்...

ஐயர் மந்திரம் ஓதி ஷ்ரவனின் கையில் தாலியைக்கொடுக்க...ஒரு நிமிடம் தன் தாயை நிமிர்ந்துப் பார்த்தான் அவர் தலையசைக்க, தாலியை ஹரிதாவின் கழுத்தில் கட்டினான்...

ஹரிதா குனிந்திருந்தாள், தாலிக்கட்டி முடிந்து குங்கும் வைக்க தனது கைகளைசுற்றி கொண்டுவந்து நெற்றியில் பொட்டு வைக்கவும்...ஹரிதா நிமிர்ந்துப் பார்க்க இருவரின் பார்வைகளும் அப்படியே முட்டிக்கொண்டு நின்றது...

பின்னாடியிருந்து நிருபமா “ஷ்ரவன்... சீக்கிரம்,நேரமாகுதுப் பாரு” என்று சொல்லவும்தான் மெதுவாக தனது கையை எடுத்தவன், அக்னியை சுற்றிவரச் சொல்ல எழுந்து அவளது கையைப்பிடித்தான்...

அவளது கைகளின் நடுக்கம் அவன் உணர்ந்தே இருந்தான்.

தனது கையால் அவளது கையை கொஞ்சம் அழுத்தினான்...அதுவே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. சிறிது தெளிந்தாள் இனி எதுவாகயிருந்தாலும் சமாளித்துத்தான் ஆகணும் என்று.

எல்லாம் முடித்து மணமக்கள் இரு பெற்றவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

எல்லாவற்றிலும் மேகா ஒதுங்கியே இருந்தாள்...மியாவை நேற்றிரவே டிக்கெட் எடுத்து திருப்பி அனுப்பிவிட்டிருந்தான் ஆத்விக்.

அவனது இவ்வளவு வளர்ச்சிக்கு முக்கியகாரணம் மாமனார் வீட்டிலிருந்து வந்த உதவிகள்தான்...அதுவுமில்லாமல் அவனது பெற்றோர்கள் அங்கேவுள்ள வாழ்வியல் முறைகளை தொடர்வதால் அதைத்தான் மியாவும் தொடர்ந்தாள்...நல்லவேளை நிருபமாவின் வளர்ப்பு, மேகாவின் திருமணவாழ்வை சரியாகக்கொண்டு செல்கிறது...

மணமக்களுக்கான எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து சாப்பிட அமர்ந்தனர் மணமக்கள்...போட்டோ எடுப்பதற்காக ஒருவரை ஒருவார் உணவை ஊட்டிக்கொள்ள சொல்ல ஷ்ரவன் “அதெல்லாம் வேண்டாம்” என்று முகத்தில் அடித்தார் போல சொல்ல ஹரிதா விக்கித்துப்போனாள்...

ஒரு வழியாக எல்லாம் முடிந்து சென்னைக்கு கிளம்பினர் காரிலயே...இப்போது கிளம்பினால்தான் மாலை ரிசப்ஷனுக்கு சரியாக இருக்கும் என்று இரு குடும்பத்தாரும் சென்னைக்கு பயனப்பட்டனர்...

மற்றெல்லோரும் மண்டபத்திற்கு செல்ல அங்கு எல்லாமே தயாராக இருந்தது...மணமக்கள் மட்டும் வீட்டிற்கு செல்ல. முதன்முறையாக ஷ்ரவனின் வீட்டைப் பார்த்தவளுக்கு ஆச்சர்யம்...அவளது பெங்களூர் பங்களாவைவிட பெருசாக பிரமாண்டமாக இருந்தது.

ஆர்த்தி எடுத்ததும் மணமக்களை உள்ளே அழைத்தவர் பால்பழம் எல்லாம் கொடுத்து ரிசப்சனுக்கான உடையை மாற்றி வரச்சொல்ல...அது ஷ்ரவனின் அறையில்தான் இருந்தது...இருவரும் சேர்ந்து தங்களுக்கு பிடித்தமான கலரில் பார்த்து பார்த்து எடுத்துக்கொண்ட உடைகள் அது...அவளுக்கு ஃப்ராக், அவனுக்கு கோர்ட்...

இப்போது அதைப்பார்த்ததும் ஹரிதாவிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது...உடைகள் மாற்றி வெளியே வரவும் அரைமணிநேரத்தில் அவளுக்கு அலங்காரம் செய்து முடித்து வெளியே வர. ஹப்பா ஷ்ரவன் ஒரு நிமிடம் மனையாளை வைத்தக்கண் வாங்காமல் பார்த்திருந்தான். பின் சுதாரித்தவன் பார்வையைத் திருப்பினான்...

மணமக்கள் மண்டபத்திற்கு வந்தாகிற்று...தங்களது உடைக்குதக்கதாக மண்டபத்தை தீம்பேசில் அலங்காரம் செய்திருந்தனர்...அந்த இரவு பொழுது அப்படியொரு தாக்கத்தைக்கொடுத்தது ஷ்ரவனுக்கு...

வரவேற்பிற்கு நிறைய அரசியல் நபர்கள், தொழிலதிபர்கள்...முக்கியமாக தொழில்துறை அமைச்சர் என்று வர...ஹரிதாவிற்கு இவ்வளவு பெரிய ஆட்களா ஷ்ரவன் குடும்பம் என்று அதிர்ந்தாள்...நிருபமாவை சாதரனமான ஒரு ஆளாக நினைத்து மரியாதை இல்லாமல் வார்த்தைகளை விட்டுவிட்டோமே என்று மருக...அவரோ அதைக் கண்டுக்கொள்ளவில்லை தன் மகனின் திருமணம் அது எப்படி நடத்தனுமோ அதை சரியாக நடத்திக்கொண்டிருந்தார்...

எங்களோட திருமணம் நின்றிருந்தாள் என்று நினைக்கும்போதே அவளது தொண்டைக்குழி அடைக்க திரு திருவென முழித்துக்கொண்டு நின்றவளை பார்த்த ஷ்ரவன்...தனது தமக்கையை அழைத்து ஏதோ சொல்ல...குடிக்க தண்ணியும் ஜூஸும் வந்தது அதை எடுத்துக் குடித்தவள் கணவனுக்கு கண்களிலே நன்றி சொன்னாள், அவனோ அதை கண்டுக்கவேயில்லை.

கிருஷ்ணா-சுமித்ரா... இவர்களுக்கமே ஷ்ரவன் தரப்பு ஆட்களைக் கண்டு சிறிது மிரட்சியே...பெரிய குடும்பம் என்று தெரியும்...ஆனால் நேரில் பார்க்கும்போதுதான் புரிந்தது.நிருபமாவின் கோபம் எதனால் என்று...தங்களது மகளின்மேல் தப்பு வைத்துக்கொண்டு யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை அவர்கள். சீர் எல்லாவற்றையும் மொத்தமாக கொண்டுவந்து இறக்கிவிட்டனர்...

மாப்பிள்ளை வீட்டில் என்னவும் செய்துக்கொள்ளுங்கள் என்று.

எல்லாவிருந்தும் முடிந்து அனைவரும் வீடு வந்து சேரவே நள்ளிரவாகிவிட்டது.

அந்த இரவிலும் ஹரிதாவை வேறு உடைமாற்றி...ஷ்ரவனின் அறைக்குள் அவளை விட...உள்ளே வந்தவள் பார்த்தது கட்டிலில் நன்கு தூங்கிக்கொண்டிருந்த ஷ்ரவனைத்தான்.

மெதுவாக வந்து அவனது தோள்களைத் தட்ட... “நிரு பேபி ப்ளீஸ்மா எழுப்பாதிங்க...நேத்துல இருந்து நான் தூங்கவே இல்லை... என்னைத் தூங்கவிடுங்க தலைவலிக்குது”,என அவனது அம்மா வந்திருப்பதாக நினைத்து பேசினான்.

அதைக் கேட்டவளுக்குத்தான் இதயத்தில் வலி...என்ன மாதிரியான வேதனையை எல்லாருக்கும் கொடுத்திருக்கேன் என தன்னைத்தானே நொந்துக்கொண்டவள், மெதுவாக அவனருகில் படுத்து அவன் மீது கையைப்போட்டுப் படுக்க...அவளது ஸ்பரிசத்துலயே உணர்ந்துக் கொண்டவனின் உடல்விறைத்து, விலகிப் படுத்தான்....