வேஷம் போடும் வேடா 4
Vedan4

4 வேஷம் போடும் வேடா !!
ரித்து நான் சொன்னா கேளுடி இன்னைக்கு பைக்ல போகாத உனக்கு ஆக்சிடென்ட் ஆயிடும் என்று பைக் சாவியை தூக்கிக்கொண்டு போன ரிதன்யா பின்னால் வால் போல அதிரா ஓடிக்கொண்டிருந்தாள்...
"உன் வாய்ல கொல்லி வைக்க, ஏன்டி உனக்கு நல்லவிதமாவே பேச தெரியாதா? ...
"ப்ச் அய்யோ என் மேல சத்தியமா சொல்றேன் நீ இன்னைக்கு பைக்ல போகாத,
"அப்போ எப்படி போக ??
"பேசாம உன் மூத்த அண்ணன் அந்த ஆக்டோபஸ் மண்டையன்கூட போயிடு என்ற மதுரா விரலை பிடித்து வளைத்த ரிதன்யா
"பாரு உனக்கு இவ்வளவு தான் லிமிட் , அயோக்கியா அண்ணனை பத்தி ஏதாவது மரியாதை இல்லாம பேசின முதல் ஆக்சிடென்ட் உனக்கு தாண்டி ஆகும்
"போடி இவளே பேரு மட்டும் அயோக்கியா இல்ல செய்யறது எல்லாம் அயோக்கியத்தனம், இத நான் சொன்னா இதுக எல்லாம் நம்பவா போகுதுக..இவன் விக்ரமன் பட ஹீரோ இல்லை வில்லங்கம் பிடிச்ச ஹீரோன்னு சொன்னா நம்புதுகளா, ஐயோ பாவம் காப்பாற்றலாமேன்னு நினைச்சு வந்து சொன்னதுக்கு என்னை கைய புடிச்சு வளைக்கிற, எப்படியோ நாசமா போ" என்று முணுமுணுத்து விட்டு அதிரா, எதிரே கார் சாவியை சுழட்டி கொண்டு வந்த அயோக்கியவை பார்த்து உதட்டை சுழித்து விட்டு ,
"நீங்க பண்ற பாவத்துக்கு உங்களுக்கு சொர்க்கத்து வாசல்ல கூட இடம் கிடைக்காது பாத்துக்கோங்க...
"உண்மையை போய் சொல்லேன்டி, உன்ன எவன் மறைக்க சொன்னா... என்று அயோக்கியா தெனாவெட்டு பார்வை பார்த்தான் ...
உண்மையை சொல்ல ரெண்டு செகண்ட் ஆகாது அத்தான், என்னால ஒரு குடும்பம் உடைய கூடாது அதான் பொறுமை காக்கிறேன் ... உங்களை அவங்க அண்ணனாவாவா பாக்கறாங்க இந்த வீட்டோட சாமியா பாக்குறாங்க..
யார் பார்க்க சொன்னா ? "
"ப்ச் நீங்க அவங்களையெல்லாம் வேதனைப்படுத்த பார்க்கிறீங்க தப்பு இல்லையா அத்தான் என்றவள் அவனுக்கே நல் ஆலோசனை கூற ..
"லவ் பண்ணி இருக்கியா?... என்று நீல விழி விரிய அவளை குனிந்து பார்த்தான் அயோக்கியா.... இந்த டம்மி பட்டாசை எப்போதும் கொழுத்தி போட்டு வேடிக்கை பார்ப்பது அவனுக்கு பிடிக்கும்....
"ம்ம் அது ஒரு மூணு நாலு பண்ணி இருக்கேன் அத்தான் ,, 12 படிக்கும் போது எங்க வீட்டு பக்கத்துல மிலிட்டரி ஒருத்தர் இருந்தார்.. மீசை செம அழகா இருக்கும் அதுல மயங்கி லவ் பண்ணுனேன் அப்புறம் காலேஜ் படிக்கும் போது மேக்ஸ் வாத்தியார் , அப்புறம் இப்போ
போதும் நிறுத்து உனக்கெல்லாம் லவ் ஃபெயிலியர் வலி புரியாது ... "
அச்சோ பாவம் வைசு அக்காவை ரொம்ப லவ் பண்ணிட்டார் போல , அதான் தப்பு தப்பா முடிவு எடுக்கிறார்.. நாமதான் நல்லது சொல்லி இனி அவரை திருத்தணும் ...
லவ் பெயிலியர் ஆனவன் கிளீன் சேவ் பண்ணி டிப்டாப்பாக சென்ட் அடித்து உல்லாசமாக விசில் அடிப்பானா?? அவன் முகத்தில் காதல் தோல்வி பிஞ்ச் கூட இல்லை என்பதை யோசிக்கவே இல்லை ... அவனை பொறுத்தவரை உலகில் அதிக மகிழ்ச்சி தருவது ஒன்றே இந்த குடும்பம் கதறுவது மட்டும்தான் ... மற்றது எல்லாம் அவனுக்கு வந்தா லாபம் வரலையா போ என்று டேக் இட் ஈசியாக விட்டு விடுவான்.. சஸ்ட் ஒரு காதல் தோல்விக்காக உட்கார்ந்து ஒப்பாரி வைக்க அவனுக்கு நேரம் இல்லை, அத்தோடு அந்த காதலை அவன் பண்ணும் போதே சிலாகித்து பண்ணியது இல்லை .... வைசு வந்து காதலிக்கிறேன் என்றாள் ஓகே ரைட் லவ் பண்ணுவோம் என்று கமிட் ஆன மெத்த படித்த மேதாவி அவன் ...
ப்ச் , சரி நடந்தது நடந்து போச்சு.. வைசு அக்கா இப்போ உங்க தம்பி பொண்டாட்டி ஆயாச்சு அதையே மனசுல வச்சு வஞ்சம் தீர்க்கிறது எவ்வகையில் நியாயம் ...
"அங்க என்னடி பேசிகிட்டு நிக்கிற அவன் வேலைக்கு போக வேண்டாமா? ஆப்பம் சூடா இருக்கு வந்து தின்னுட்டு போ" என்று காயத்ரி சத்தம் கொடுக்க..
"இதோ வர்றேன் அத்தை .. ஆப்பம் சூடு ஆறிடும் , நான் போயி அதை தின்னுட்டு வந்து உங்க கிட்ட பேசுறேன் "என்று அதிரா சோத்தை பார்த்தவுடன் சோகத்தை இடையில் போட்டு விட்டு போய்விட்டாள்... அயோக்கியாவோ போகும் அவளை நாடியை சொரிந்து கொண்டே நீல கண்கள் சிவக்க பார்த்துக் கொண்டிருந்தான்
இந்த உலகம் புரியாத பைத்தியக்காரியை வைத்து தான் இனி அவன் சதுரங்கம் ஆட போகிறான் அவளை தாயக்கட்டையாக உருட்டி விளையாட போகிறான் ... தான் நினைத்ததை எல்லாம் இவளை வைத்து தான் சாதிக்கப் போகிறான்,
"அத்தனை பேர் உயிரை எடுக்கிறத விட இங்க உள்ளவங்க அத்தனை பேர் நிம்மதியையும் கெடுக்கணும் என் கண்ணு முன்னாடி அத்தனை பேரும் நிம்மதி இல்லாம வாழவும் முடியாம சாகவும் முடியாமல் தவிக்கிறதை நான் அணு அணுவா ரசிச்சு பாக்கணும் அதுக்கு என்னோட பகடை நீதாண்டி "என நினைத்தவன்.... அவள் சாப்பிட்டு வரும்வரை சோபாவில் அமர்ந்து செல்போனை நோண்டிக் கொண்டிருந்தான்
"ஆப்பத்துக்கு தேங்காய்ப்பால் வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் கடலை கறி வச்சு கெடுத்து வெச்சி இருக்கு அத்தக்காரி ...
"ஆமா இதுக்கே ஏழு ஆப்பத்தை உள்ள விழுங்கி இருக்க ஏண்டி உனக்கெல்லாம் மானம் சூடு சொரணை வராதா ... ரிதன்யா மலை முழுங்கி போல அடுத்த வீட்டில் தின்னு ஏப்பம் விடும் அவளை எரிச்சலாக பார்க்க ...
"அடுத்த வீட்டில் போய் வாழ போற பொண்ணுக்கு மானம் சூடு சொரணை எதுக்கு? எப்படியும் மாமியார் நம்மள மதிக்க போறது இல்ல , நாத்தியா நம்மள தூக்கி போட்டு மிதிக்க போறா.. புருஷன்காரன் நம்மள புல்லா கூட பார்க்க மாட்டான்.. அதுக்கு இப்பவே நாம அப்படி பழகிட்டோம்னா அங்க போயி செட் ஆயிடலாம் பாரு என்ற அதிரா பேச்சில் ரிதன்யா தலையில் அடித்துக் கொண்டாள்
"ஏய் இங்க வா என்ற சொடுக்கு சத்தத்தில் அதிரா தலையை திருப்பி பார்க்க ..அயோக்கியா சோபாவில் கால் மேல் கால் போட்டு அவளைத்தான் ஒற்றை விரலில் தன் அருகே அழைத்தான்
"என்ன அத்தான் என்றதும் அவள் கையில் ஒரு பரிசு கொடுக்க
"அடுத்தவங்க கிட்ட பரிசு வாங்குற கெட்ட பழக்கம் ..ஆனா , உங்க கிட்ட வாங்கிக்கலாம்... என்ன திடீர்னு பரிசெல்லாம் கொடுக்குறீங்க , ஓஓஓ உங்க லவ் மேட்டர் நான் யாருகிட்டயும் சொல்லிக் கொடுத்திட கூடாதுன்னு லஞ்சமா ... நீங்க லஞ்சமே கொடுக்கலேன்னாலும் , நான் இதெல்லாம் வெளியே சொல்ல மாட்டேன்... இது ரெண்டு பேரோட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் இந்த விஷயம் வெளியே போச்சுன்னா உங்க தம்பி வாழ்க்கை என்ன ஆகிறது? அதனால நான் உயிர் உள்ள வரைக்கும் வாயைத் திறக்கவே மாட்டேன்...
"நீ வாயை திறக்க வேண்டாம் இந்த கிப்ட் உனக்கு இல்ல இத அப்படியே கொண்டு போய் உன் சின்ன அத்தான் கிட்ட கொடு ...
"அவருக்கு வந்த கிஃப்ட்டா..
"யாரோ ஒருத்தர் கொண்டு வந்து கொடுத்துட்டு போறாங்கன்னு சொல்லு ..
யாரோ ஒருத்தரா ஏன் அப்படி சொல்லணும்?
யாரோ ஒருத்தர் தான் என்கிட்ட வந்து கொடுத்துட்டு போனாங்க.. அப்போ யாரோ ஒருத்தர்னுதான சொல்ல முடியும்
ஆமால்ல அப்படித்தான் சொல்ல முடியும் , நீங்க சொன்ன மாதிரியே சொல்லி ரித்விக் அத்தான்கிட்ட கொடுத்துட்டு வந்துடறேன் என்று ரித்விக் அறை நோக்கி போகும் அதிராவை பார்த்து கேலியாக சிரித்துக் கொண்டு அயோக்கியா சாப்பிட அமர்ந்தான்...
இரவு முழுவதும் சிந்தித்து சிந்தித்து தலைவலி எடுத்து இப்போதுதான் குளித்துவிட்டு ரித்விக் வெளியே வந்தான் .. அறையில் வைஷ்ணவியை காணவில்லை கீழே எட்டிப் பார்த்தான்.. சமையல் அறையில் தன் தாயோடு நின்று கொண்டிருந்தாள் பெருமூச்சு விட்டவன் கண்ணாடி முன்னால் நின்று யோசித்துக் கொண்டிருக்க...
உள்ள வரவா என்ற அதிரா குரலில் தலையை திருப்பி பார்த்த ரித்விக் வா என்பது போல் தலையாட்ட
நீங்க என்னை ஏமாத்திட்டீங்க அத்தான்"...
நானா என்ன பண்ணினேன் "
"போனவாட்டி வரும்போது என்ன சொன்னீங்க?
"என்ன சொன்னேன் "
"உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன் எனக்காக காத்திருன்னு சொன்னீங்கல்ல
"ப்ச் இவ வேற என்று தலையை வேதனையில் தடவியவன்..
"நீ வேற வேதனை படுத்தாத இப்ப எதுக்கு உள்ள வந்த
"ஓஹோ ராத்திரி முழுக்க வேலை பார்த்ததுல தலை வலிக்குதா
"ஆமா ஓவர் டியூட்டி பார்த்ததுல தலைவலியில உட்கார்ந்து இருக்கேன் , எதுக்கு வந்தேன்னு சொல்லி தொலைத் தாயே
"அது ஒன்னும் இல்ல யாரோ ஒருத்தர் இதை உங்ககிட்ட தர சொன்னாங்க "என்று கிப்ட் பாக்ஸை அவன் கையில் திணித்துவிட்டு ..
"காலேஜுக்கு லேட் ஆயிடுச்சு பாய் என்று அதிரா காலேஜ் பேக்கை எடுத்துக் கொண்டு குடுகுடுவென அயோக்கியவை கடந்து ஓட ஆரம்பித்தாள் ... கணவனுக்கு காப்பியோடு வந்த வைசு இருவர் பேச்சையும் கேட்டு வி்ட்டு
"ஓஓஓ இவரும் இந்த பொண்ண லவ் பண்ணி இருக்காரோ, அவரும் இக்கட்டுல தான் எனக்கு தாலி கட்டி இருப்பாரோ என்று குழப்ப ரேகையோடு நிற்க...
ரித்விக்கோ தன் கையில் இருந்த பரிசை திறந்து பார்க்க ஏதோ கடிதம்..
உன் மனைவி காதனோடு கை கோர்த்து சுற்றிய புகைப்படம் வேணுமா ?? வேணும்னா இரவு ஏற்காடு எல்லைக்கு வா இல்ல அந்த போட்டோக்கள் எல்லாம் நாளை ஊர் முழுக்க பார்க்கும் , உன் குடும்ப மரியாதை காத்தில் பறக்கும் இப்படிக்கு உன் நலம் விரும்பி என்று இருக்க ...
ஷட் இஇஇஇஇஇஇஇஇஇஇஇ என்று கோபத்தில் ரித்விக் அதை தூக்கிப்போட்டு உடைக்க ...
கீழிருந்து சாப்பாட்டை அள்ளி சாப்பிட்டுக் கொண்டிருந்த அயோக்கியாவின் முகத்தில் பூரிப்பான புன்னகை..
அதிரா , உன் அத்தை பொண்ணு காலேஜ் முடிஞ்சு போகும்போது ஆக்சிடென்ட் ஆயிடுச்சு போல
அய்யயோ ?!
ம்ம் ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போறாங்க என்று காலேஜ் முடிச்சு பேருந்துக்காக காத்திருந்த அதிராவை ஒரு பெண் வந்து அழைக்க
இதுக்கு தான் தலைபாடா அடிச்சுக்கிட்டு சொன்னேன்... அண்ணே , அன்பானவன் அடங்காதவன், அசுரன்னு டயலாக் எல்லாம் பேசி இப்போ மட்டமல்லாக்க விழுந்து கிடக்காளே, உயிரோட இருக்காளோ செத்து தொலைஞ்சாளோ தெரியலையே... எதுக்கு அத்தான் இப்படி எல்லாம் உயிரோட விளையாடுறார் லவ் பெயிலியர் மட்டும் காரணம் போல தெரிலையே ஏதோ காத்திருந்து பழி தீர்க்கிற மாதிரியே தோணுதே ஏன் ?
இந்த ஆந்தைக் கண்ணன் பண்ற அயோக்கியத்தனத்தை எல்லாம் இனி மறைக்கக் கூடாது. அப்படியே சொல்லி இவங்களை அலர்ட் பண்ணனும் என்று அதிரா புலம்பிக் கொண்டே மருத்துவமனைக்குள் அவள் கால் எடுத்து வைக்க
ஏய் எரும மாடு போல எதிரில் நிக்கிற தள்ளி நில்லு" என்று அவளை தள்ளி விட்டு விட்டு ஒரு கரம் பாய்ந்து உள்ளே போனது ...
எவன் அது என்று எட்டி பார்க்க
அயோக்கியா நெற்றியில் ரத்தம் வழிய கிடந்த தன் தங்கையை கையில் ஏந்திக்கொண்டு உள்ளே ஓடிக் கொண்டிருந்தான்
ப்ச் சின்ன அடிதான் இதுக்கு பஸ்பாஸ் பஸ்ஸை மிஸ் பண்ணிட்டு வேற ஓடி வந்திருக்கேன்...
எனக்கு ஒன்னும் இல்ல அண்ணன் சின்ன காயம் தாண்டி பயப்படாதே "என்று அவன் கையில் கிடந்த ரிதன்யா தன் அண்ணன் நெற்றியில் வடிந்த வியர்வையை துடைத்து விட்டுக் கொண்டிருக்க பார்த்துக் கொண்டிருந்த அதிராவிற்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றியது..
செய்யும் தவறை திருந்தச் செய்யும் இவனை அவ்வளவு சீக்கிரமாக யாரும் கெட்டவன் என்று நம்பி விட மாட்டார்கள் இவனிடமிருந்து இந்த குடும்பத்தை எப்படி காப்பாற்ற என்று யோசனையாக அவர்கள் பின்னால் நடக்க ஆரம்பித்தாள்
நினைத்தது போல வேஷம் போட்டு வேடன் இக்குடும்பத்தை கெடுக்க ஆரம்பித்து விட்டானே...
இந்த குடும்பம் கெட்டு சீரழிந்தால் முதலில் மகிழ போவது அவனே ..
கெடுவான் கேடு நினைப்பான் என்ற பழமொழி மறந்தான் போலும்!!