வேஷம் போடும் வேடா 8

Veda8

வேஷம் போடும் வேடா 8

8 வேஷம் போடும் வேடா !!

கடவுளே!! என் புள்ள மேல யார் கண்ணு பட்டிச்சோ தெரிலயே, இந்த கல்யாணம் ஆனதுல இருந்து அடுக்கடுக்கா பிரச்சனை வருது "என்று காயத்திரி மூக்கை சிந்தி , நிற்க முடியாது தடுமாறும் மகனை வேதனையாக பார்க்க ... எல்லா மனிதருக்கு உள்ளும் நல்லவனும் கெட்டவனும் உண்டு... சந்தர்ப்பம் அமையும் போது அவை வெளியேறும் கடவுள் பாதி மிருகம் பாதி என்பது போலதான் , நல்லவன் பாதி கெட்டவன் பாதிதான் மனிதன் என்பவன்..

அவசரமா கல்யாணம் பண்ணும் போதே யோசிச்சேன், நல்ல நாள் கிழமை பார்க்காம ஜாதகம் பார்க்காம பண்ணி , இப்போ அவ ராசி பலன் இவனை பிடிச்சு ஆட்டுது போலையே ... என்றதும் ரித்விக்கை தாங்கி பிடித்து கொண்டு நின்ற வைஷ்ணவி தங்கமே பொன்னே நேத்து வரை போட்ட மாமியார் பேச்சை வெறித்து பார்க்க 

"ராசிக்கெட்டவ, வந்த ஒரு வாரத்துல என் மகளுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு , இவன் பாஸ்போர்ட் காணாம போய் இதோ இப்ப மொடா குடிகாரன் போல தண்ணியை போட்டுட்டு வந்து நிக்கிறானே என்று கண்ணீரை சேலையில் துடைக்க 

"ஏய் கிழவி வாயை மூடு "என்ற ரித்விக் கத்தலில் காயத்திரி திடுக்கிட்டு மகனை பார்க்க 

"என் பொண்டாட்டியை நான் திட்டுவேன் கொஞ்சுவேன் வேற யாராவது எதாவது பேசினீங்க இங்க கொலை விழும் "என்றான் ரித்விக் 

"என்னடா இது அம்மாவை மரியாதை இல்லாம பேசுற என்ன பழக்கம் இது "என்று ஆறுமுகம் மீசையை திருகி அவனை கண்டிக்க 

"என் பொண்டாட்டியை பத்தி தப்பா பேசினா நீயா இருந்தாலும் கிழிப்பேன்யா... நீயும் பணம் தர மாட்ட அண்ணன் பணம் தந்தாலும் அதை ஆட்டையே போடுவியா 

"எது நானா அவன் பணம் தந்தது எனக்கு எப்படி டா தெரியும் .... "

"வேற யார் எடுத்தா ,நான் பணம் கேட்டதுக்கு இல்லைன்னு சொல்லிட்டு ரெண்டு கோடி ரூபாய் புதுக் காரை வீட்டு முன்னாடி இறக்கி விட்டிருக்க போய்யா போர்ஜரி ,"

"டேய்,மரியாதை குறைஞ்சது சாட்டை எடுத்து விளாசிடுவேன் "

"விளாசுவ விளாசுவ எட்டி உதைக்க எனக்கும் ரெண்டு நிமிசம் ஆகாது, வாடி தங்கம் அவங்க எல்லாம் அப்படி தான் நீ அழாத செல்லம் மாமா நான் இருக்கேன்; கண்ணை தொடை" என்று வைஷ்ணவி கண்ணை துடைத்து விட்ட ரித்விக் 

"இத்தனை நாள் அடங்கி போன ரித்விக்கை தான் பார்த்து இருக்கீங்க இனி தெரியும் நான் யாருன்னு என் பொண்டாட்டி மேல தூசி பட்டிச்சு வீடு ரெண்டாகி போகும் ஜாக்கிரதை "

"அங்க என்னடா சத்தம் "என்று அயோக்கியா அறையில் இருந்து அவன் குரல் வர 

"ஒன்னும் இல்லை அண்ணன் என்று பம்மி கொண்டவன் 

"இந்த வீட்டுல அவன் ஒருத்தன் தான் மனுசன் , என்ன நம்பி காசையும் தந்துட்டு, ஒரு வார்த்தை பேசல பாரு அவன் எங்கே? இந்தாளு எங்க என்று தகப்பனை முறைத்து கொண்டே மனைவி தோளில் படுத்தபடி அறைக்குள் போனான் .... தகப்பன் பேச்சுக்கு அடுத்த பேச்சு பேசாம மகனா இப்படி பேசுவது என்று ஆறுமுகம் கூட அதிர்ந்து நின்றார்.. 

"மொத்தத்தில ரெண்டு கோடியை வச்ச ஒரு குடும்பத்தையே தெரு கோடிக்கு கொண்டு வந்துட்டாரய்யா" என்று இங்கே நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி நின்ற அதிரா முதுகு பக்கம் மூச்சு சத்தம் கேட்டு, அவள் பதறி திரும்ப.. திராட்சை நிற கண்களில் வெளுறிய நிறம் ஒன்று திரையிட ... அவள் கண்ணையே அவ் விழி இமை மூடாது பார்க்க இவளும் அந்த பார்வையை அகண்ட விழியோடு நோக்க...

என்ன ?என்றான் புருவம் ஏற்றி இறக்கி

"ம்ஹூம் .... 

"அப்போ கிளம்பு 

"ம்ம் இது என்ன பார்வை சாமி!! அடிச்சு கண்ணுக்குள்ள இழுக்கிற பார்வை "அதிரா தலையை உதறிட 

"உன் குடும்பத்துக்கும் எதாவது நல்லது செய்யணுமா?

"வேண்டாம் வேண்டாம் நீங்க இருக்கிற திசை பக்கமே திரும்பி பார்க்க மாட்டேன் நல்லா இருந்த ரித்விக் அத்தானை கெடுத்துட்டீங்க 

"யார் நானா?

"பின்ன 

"நானா நீயா , குழம்பி இருந்த அவனுக்கு குடிக்க ஐடியா கொடுத்து குடிகாரன் ஆக்கியது யார் ??

அது ஊஊஊஊ நான்தான் வாயை வச்சிக்கிட்டு சும்மா இல்லாம கெடுத்து விட்டுட்டேனோ...

"அப்ஸலூட்டிலிலி..

"அச்சோ , இப்ப என்ன பண்ண அத்தான் ? 

"அடுத்த அட்வைஸ் பண்ணு ...

"உங்க சொல் பேச்சு கேட்க மாட்டேன் நீங்க தான் என்ன குழப்பி விடுறீங்க , நானே இனி இந்த பிரச்சனையே தனியா ஹேண்டில் பண்ணலாம்னு இருக்கேன் .."

"ஓஓஓ மறுபடியும் அவன் கிட்ட போய் பேச போறியா? இவர் சொல்றதுக்கு ஆப்போசிட்டா பண்ணுவோம் அப்பதான் சரியா இருக்கும் என மனதில் அவள நினைக்க அவன் நீல கண்ணுக்கு அவள் மனம் கூட அத்துபடியே

"ம்ஹூம் இந்த வாட்டி வைசு அக்காக்கிட்ட பேச போறேன் .. என்றவள் தீடீரென வாயை பொத்தி கெண்டு 

"ம் ம்ஹூம் பவ் பூவ் என்று கைக்குள் பேச ...  

"சோ இனிமே என்கிட்ட வாயை திறக்க மாட்ட 

ம்ம்ம் என்று அதிரா தலையாட்ட 

"நல்லது ... இந்த பழக்கூடையை மட்டும் கிச்சன்ல வச்சிடு வாயில் இருந்த கையை எடுத்த அதிரா 

"ஏன் இதுல ஃபாம் வச்சிருக்கீங்களா? 

"பரவாயில்லையே என் க்ரைம் பாட்னர் செம ஷார்ப்பா இருக்காளே 

"தேங்க்ஸ் , எதே க்ரைம் பாட்னரா? 

"ஆமா நான் செய்ற அத்தனை அயோக்கியதனத்துக்கும் கூட இருக்கிறது யார் நீதான , அப்போ நீயும் பாட்னர் தான ... மறக்காம உன் அத்தான் பொண்டாட்டிக்கிட்ட பேசிடு குட் நைட்" என்று அவள் ஜிமிக்கி கம்மலை வாயில் காற்று நிரப்பி அயோக்கியா ஊதி ஆட வைத்து விட்டு போக அவன் உதட்டில் இருந்து வந்த சுவிங்க வாசத்தில் அதிரா மெய்மறந்து நிற்க ... அவளை நீல விழி பழுப்பாக திரும்பி பார்த்து கொண்டே அறைக்குள் போய் மறைய ... எங்கோ பொருட்கள் உடையும் சத்தத்தில் தான் பெண் சிலை உயிர் வர மலங்க முழித்தபடி நின்றாள்... 

"ரித்விக் என்ன பண்றீங்க அறைக்குள் போய் கதவை மூடிய அடுத்த நிமிடம் ரித்விக் அறையில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைக்க வைஷ்ணவி பயந்து போய் அவன் கையைப் பிடித்து இழுக்க 

"முதல்ல கையை எடுடி என்றதும் அவள் பயந்து கையை எடுக்க 

"உனக்கு என்னடி அவ்வளவு அவசரம்னு காதல் மயிறு பண்ணி இருக்க , உன்னால என் நிம்மதி போச்சு , நிம்மதி தான் போச்சுன்னு வேற எதுலையாவது மனச செலுத்தலாம்னு பார்த்தா பணமும் போச்சு... எல்லாம் உன்னால வந்தது

"ரித்விக் 

"ஏன் காதலிக்காம இருக்க முடியலையோ, எவ்வளவு ஆசைப்பட்டு உன்னை கல்யாணம் கட்டினேன்னு தெரியுமா? உன் மூக்குத்தி மூக்கை பார்த்து அடுத்த செகண்ட் விழுந்துட்டேன் .... அடக்க ஒடுக்கமா என் குடும்பத்துக்கு ஏற்ப என்ன அனுசரிச்சு போவான்னு உன் வெளித்தோற்றம் பார்த்து ஏமாந்து போயிட்டேன், அண்ணன் இருக்காங்கிறது கூட ஞாபகம் இல்லாத அளவுக்கு ஆசைப்பட்டு உன்ன கல்யாணம் பண்ணினதுக்கு, உன்னால என் வாழ்க்கையில என்ன பண்ண முடியுமோ சிறப்பா பண்ணிட்டல்லடி ...

"ரித்விக் இஇஇ 

"என்னடி உன் அப்பன் பேர் வச்சானா, ரித்விக்னு சொல்ற ஒழுங்கா மாமா சொல்லுடி... சொல்லுடி அவள் கழுத்தை நெறிக்க போக பதறி விலகி கண்ண வைசு 

"மா....மா என்று அழைக்க 

"ஹான் அது ,நாக்கை தொங்க போட்டுட்டு ஒருத்தன் காத்து இருப்பானாம், இவ லவ் பண்றேன்னு வந்து சொல்லிட்டு நிம்மதியா படுத்து குறட்டை விடுவாளாம் ... இன்னைக்கு ராத்திரி முழுக்க தூங்க கூடாது புரியுதா ? எங்க இங்க இருந்த கட்டிலை காணல... என்று ரித்விக் போதையில் தரையை தடவ

"ப்ச் கட்டில் மேல இருக்கு "

"அதை கொண்டு ஏன் மேல வச்ச, என் மேல பயம் இல்லாம போச்சு உன்ன" என்று அவளை அடிக்க பாய அவன் கையை பிடித்து நிறுத்தின வைஷ்ணவி 

"உங்ககிட்ட இப்படி ஒரு பேச்சு , நடத்தையை நான் எதிர்பார்க்கல ரித்விக் நீங்க ஜெண்டில்மேன்னு நினைச்சேன் "

"ஓஓஓஓ உன்ன உன்,காதலன் கூட டாட்டா போட்டு அனுப்பி வைப்பேன்னு நினைச்சியோ?

"நீங்க மட்டும் என்ன அதிராவை லவ் பண்ணல 

"நான் ஆம்பளடி எத்தனை பேரைன்னாலும் லவ் பண்ணுவேன் நீ பொம்பள 

"ச்சை வாட் எ மெண்டாலிட்டி .... இது ஒத்து வராது எனக்கு டைவர்ஸ் தாங்க 

"அரைகிலோ ஆப்பிள் வேணும்னா வாங்கி தர்றேன் டைவர்ஸ் எல்லாம் தர முடியாதுடி, ஒழுங்கா என் கூட வாழ வா என்று அவள் சேலையை பிடித்து ரித்விக் உருவ போக 

ஆஆஆஆ என்று பதறி போன வைஷ்ணவி தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவனை தள்ளி விட்டுட்டு வெளியே ஓடி வர ...

இதுதானா இதுதானா எதிர்பார்த்த நன்நாளும் இதுதானா என்று போனில் ஓடிய பாடலை இன்னும் சத்தம் கூட்டி வைத்து கொண்டே வியர்த்து வடிந்து நின்ற வைஷ்ணவியை சோபாவில் உட்கார்நது வேலை பார்த்து கொண்டிருந்த அயோக்கியா உதட்டை பிதுக்கி பார்க்க ... நேரே அவன் முன் போய் நின்ற வைசு 

"ஏன் என்ன பாடா படுத்துறீங்க, அவர் ஒரு பக்கம் நீங்க ஒரு பக்கம் , இப்படி எல்லாம் பண்ணினா அவரை விட்டுட்டு உங்க கூட வருவேன்னு நினைச்சிங்களா? காதல் வேற கல்யாணம் வேற காதலுக்கு புனிதம் இருக்கோ இல்லையோ தெரியாது.. பட் கல்யாணத்துக்கு இருக்கு ... அவர் தொட்டு கட்டின தாலி என் கழுத்துல இருக்கிற வரை நான் அவர் மனைவிதான்.. கெட்ட எண்ணத்தோட எங்கிட்ட வராதீங்க , நீங்க என்ன ப்ளான் பண்ணினாலும் உங்க எண்ணம் நடக்காது" என்று டங்கு டங்கென்று குதித்து விட்டு வைஷ்ணவி போக 

"அப்படி போடுக்கா ஆந்தைக் கண்ணணுக்கு புத்தி வரட்டும் நல்லா வாங்குனீங்களா.. என்று எப்போதும் பிரச்சனை என்றால் டான் என ஆஜர் ஆகும் அதிரா வந்து அயோக்கியா முன்னே குதித்தாள் ..

"நான்,கேட்க நினைச்ச எல்லாம் அக்கா கேட்டிருச்சு அதிரா ஹேப்பி அண்ணாச்சி "

"ஆன்டி பின்னாடி எல்லாம் அலையுற ஆளுன்னு நினைச்சியா? அவளை போல மொக்கை பிகருக்காக எல்லாம் இவ்வளவு ப்ளான் போட தேவையில்லை ... என்று லேப்டாப்பை மூடி வைத்தான் ...

"அந்த அக்காவுக்கு என்ன குறைச்சல், நல்லா ரசகுல்லா போலதான இருக்காங்க... 

"எனக்கு டார்க் சாக்லேட் தான் பிடிக்கும்" என்றவன் பார்வை அவள் கருத்த இதழை பழுப்பு நிற பார்வையோடு பார்த்து வைக்க 

ஓஓஓஓ ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிடித்தம் எனக்கு கூட வெண்ணிலா ஐஸ் தான் பிடிக்கும் அதை சப்பி சப்பி தின்ன செம டேஸ்ட்டா இருக்கும் ... அவன் உதட்டில் மர்ம புன்னகை வந்து மறைய ...கண்கள் சட்டென அடர் பழுப்பு நிறம் மாறியது 

எல்லா பார்வைக்கும் அர்த்தம் தெரியுது, இந்த பழுப்பு பார்வை எதுக்குன்னு தெரியலையே .. வைசு அக்கா வைசு அக்கா, உங்களுக்கு அட்வைஸ் பண்ண வந்துட்டு இருக்கேன், எங்கேயும் போயிடாதீங்க" என்று அயோக்கியாவை தாண்டி ஓடிய அதிரா தாவணி நுனி அவன் முகத்தில் பறந்து வந்து பட 

ஊப்ஸ் என்று அவள் மஞ்சள் நறுமணத்தை என்ன முயன்றும் அவனால் இதயம் உள்ளே நிரப்ப முடியாது நகர முடியவில்லை... 

ஒருவரை ரசிக்க காதல் மட்டும் தான் காரணமாக இருக்க வேண்டுமா என்ன 

காமம் கூட காரணமாக இருக்கலாமே 

எல்லா அயோக்கியத்தனத்தமும் செய்ய துணியும் அவனுக்கு பல நாளாக இவள் மீது ஒரு கண் ..  

கொழுத்து சுற்றும் கிராமத்து இன்னட்டு அழகியை கடித்து தின்ன நேரம் பார்த்து காத்திருக்கிறான் வேடன் கையில் குழிமுயல் சிக்கினால் அவன் இரவுகளுக்கு இரை ஆக்கி தின்று விடும் காமப்பார்வைதான் அந்த பழுப்பு நிற பார்வை என அவள் அறிவாளா??