வேஷம் போடும் வேடா 11

Veda

வேஷம் போடும் வேடா 11

11  வேஷம் போடும் வேடா !!

வைஷு சொல்ற மாதிரி முதல்ல சொந்த கால்ல நிக்கணும் பத்து ரூபாய் ஆனாலும் ஏதாவது சம்பாத்தியம் வர மாதிரி ஒரு வேலையில் சேரணும்... காலையில் அழுது கொண்டே அறை உள்ளே நுழைந்த மனைவியிடம் என்ன கேட்டும் வாயை திறக்க வில்லை 

இங்க ஒருத்தி அடுத்தவங்க விஷயத்துல எல்லாம் வாலியண்டரா  மூக்கை நுழைப்பாளே  அவளை எங்க?? என்று அதிராவை தேடி வந்தவன்  காலேஜ் கிளம்பி வந்த அதிராவை பிடித்து கொண்டு 

என்ன நடந்துச்சு வைசு அழுதுட்டு வந்தாங்க" 

"அது அது எனக்கு தெரியாது 

"உனக்கு தெரியாம எந்த வீட்டு கதையும் நடக்காது.. ஒழுங்கா சொல்லு 

"அது உங்க அண்ணன் தான் 

"ப்ச் அவரை  ஏன் இதுல  இழுக்குற? 

"எனக்கு என்ன வேண்டுதலா  , எல்லா குதர்க்கத்துக்கும் அவர்தான் காரணம்  

"ப்ச் நீ சொல்லவே வேண்டாம் ...

:உங்க வீட்டுல என்னால பிரச்னை வர கூடாது அத்தான் அதனால நான் சொல்ல மாட்டேன் 

"அப்போ ஏதோ இருக்கு ஏதோ நடந்து இருக்கு அப்படிதான?  

"அது அது பெருசா இல்லை, ஆனா சிறுசா நடந்துச்சு எவவளவு முயன்றும் அவள் வாய் சும்மா இருக்காது நடந்ததை கூறி முடிக்க...நேரே தாய் முன் போய் நின்றான் 

"இத்தனை நாள் நீங்க தான செஞ்சீங்க, இன்னைக்கு என்ன புதுசா வைசுவை திட்டி அனுப்பி இருக்கீங்க"

"இனி செய்ய முடியாதுடா உனக்கு வேணும்னா அவள செஞ்சு தர  சொல்லு,  ஓசி சோறு திங்கிறவனுக்கு  மாலை மரியாதை போடணுமோ

"ம்மா 

 "அயோக்கியா பார்த்தியா மாசம் ஆனா வீட்டு செலவுக்கு லட்ச ரூபாய் தருவான் , அவனுக்கு செஞ்சு கொடுத்தா புண்ணியம் உனக்கு செஞ்சு தந்து இடுப்பு வலி வந்தது தான் மிச்சம்,  இனிமே இந்த வீட்டுல சோறு வேணும்னா பணத்தை வை என்ற தாயை அதிர்ந்து போய் ரித்விக் பார்த்தான்... 

"அம்மா நீயா இப்படி பேசுறது 

ப்ச் என்று காயத்திரி முகத்தை சுளித்து கொண்டு உள்ளே போய்விட்டார்..  வைஷ்ணவி பசியிலேயே சுருண்டு கொண்டாள்..   இவனுக்கே இந்த வீடு புதிதாக தெரிந்தது.... 

சம்பாதித்து இவர்கள் வாயை அடைத்தே  தீர வேண்டும் என்ற கோவம் வர பைக்கை தூக்கி கொண்டு வெளியே வந்தான்... 

பணக்கார வீட்டு பிள்ளை போயி வேலைக்கு  ஒவ்வொரு இடமா நின்னா நல்லாவா இருக்கும் யோசனையாக ரித்விக் பைக்கை ஓட்டிக்கொண்டு இருந்தான்..

வறுமை இதுவரை அவன் வாசலில் கூட வந்தது கிடையாது .. பசி தெரியாத பணக்கார வீட்டு பிள்ளை  தீடீரென அவனை சுற்றி இருந்த பாதுகாப்பு அறுப்படடு தனித்து நின்ற நிலை,  இதுவரை வாயில் இரை கொடுத்த பறவைகள் தனியே பற என்க பேக்க பேக்க முழித்தான்... 

திடீரென்று கார் இடையில் வந்து நிற்க.. ரித்விக்,  தடுமாறி பைக்கை நிறுத்திவிட்டு யார் என்று பார்க்க அயோக்கியா கார்

"அண்ணே

"வா வந்து வண்டியில ஏறு,  பைக்க ஓரமா விட்டுட்டு வா

"சரி அண்ணன்  ரித்விக் பைக்கை ஓரமாக விட்டுவிட்டு வந்து முன் இருக்கையில் அமர்ந்தான்...

"போனதையே நெனச்சு பீல் பண்ணிக்கிட்டு இருக்காத  ஏதாவது வேலைக்கு சேர பார் "அவன் மனநிலையை படித்தது போலவே அப்படியே அயோக்கிய கூற அவன் பக்கமாக திரும்பி உட்கார்ந்த ரித்விக்.. 

"அதான்  யோசனையா இருக்கு,  நான் போய் ஒவ்வொரு இடமா வேலை கேட்டா சரியா வருமா 

"ஏன்  மானமா போயிட போகுது,  நான் பத்து வயசுல தேயிலை தோட்டத்துல தேயிலை பறிக்கப் போனேன்..  இப்போ அந்த தேயிலை தோட்டத்தோட ஓனர்..  நான் அப்பவே  அந்த ஆள் பணத்தில ஒருவாய் சோறு நான் தின்னது கிடையாது,  நான் போடுறது நான் வச்சிருக்க கார் எல்லாம் என்னோட உழைப்பு மனுஷனுக்கு கெளரவம் முக்கியம்டா அந்த கெளரவம் இல்லன்னா பெத்த தகப்பன் கூட நம்மள மதிக்க மாட்டான் .. பார்த்த தானே "

ம்ம் 

"சரி சரி பீல் பண்ணாத,  என் தேயிலை  தோட்டத்துல ஏதாவது வேலை தரேன்..

"சரி அண்ணன் , அப்பாடா அண்ணன் கீழே கெளரவமா வேலை பார்க்கலாம் என ரித்விக் உடனே தலையாட்ட 

"ஆனா அண்ணன் தம்பின்னு எல்லாம்  அங்க யாருக்கும் பாரபட்சம் கிடையாது...  நீ படிச்சிருக்க படிப்பு எல்லாம் எனக்கு  தேவையில்லை , சாதாரண தேயிலை பறிக்கிறவனா  வா ... உன் வேல புடிச்சி இருந்தா அடுத்த அடுத்த போஸ்டிங் தரேன் "என்று அயோக்கியா  நாக்கை உதட்டுக்குள் மறைத்து சிரித்தான்

"தேயிலை பறிக்கிற வேலையா?

"சரி அப்போ வேற எங்காவது வேலை தேடிக்க...  ஒன்னும் பிரச்சனை இல்ல,  என்னுடைய எஸ்டேட் வந்தா நான் சொல்ற வேலையைதான் செய்யணும் கஷ்டத்தை எல்லாம் பார்த்தாதான் என்ன போல மேல வர முடியும்"

ம்ம் சரி அண்ணே நீ என்ன சொல்றியோ அதுபடியே செய்றேன்,  சரி இறங்கி ஆட்டோவுல தேயிலை தோட்டம் வந்து சேர் "என்று நடுவழியில் தம்பியை இறக்கி விட்டவன்....  கண்ணாடியில் யோசனையாக நடு ரோட்டில் நின்று தலையை சொரிந்து கொண்டு இருந்த தம்பியை பார்த்து நக்கல்   புன்னகையை விரியவிட்டான்.... அவன் கண்கள் ரத்த களறி ஆனது ...

உலகில் முகங்கள் ரசிக்கபடுவது இல்லை

முகமூடிகள் தான் ரசிக்கபடுகின்றன 

என்ற உண்மை அறிந்த அயோக்கியா தன் முகமூடியை தகுந்தார் போல மாற்றி கொள்ளும் வல்லமை படைத்தவன்.. 

"மாலை காலேஜ் முடித்தவுடன் தேயிலைத் தோட்டத்துக்கு போகலாமா வேண்டாமா போய் தான் பார்ப்போமே அப்படி என்னதான் பேசுறாருன்னு கேட்போம்  என்று  அதிரா துணிந்து அவன் தேயிலை எஸ்டேட்  போய்விட்டாள்..  

உடலில் பொட்டு பயம் அவளுக்கு கிடையாது ,  அவளை வழி நடத்த வேண்டிய தந்தையே வழிதவறி போகிறவர் எனவே என்ன குறை சொல்ல எவனுக்கும் உரிமை இல்லை என்று  எப்போதும் அவள் நினைத்தது பேசுவாள் செய்வாள் ... 

அயோக்கியா  பார்ம்ஸ் என்ற கோட்டை எழுத்தில் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தேயிலை தோட்டம் அதை அரைத்து பாக்கெட் போடும் கம்பெனி, அதில்  வரும் கழவில் உரம் செய்யும் ஃபேக்டரி என்று அவன் வியர்வை சிந்தியதின் பலன் தெரிந்தது மெலிதாக அதிராவுக்கு புன்னகை  வந்தது ....

கடின உழைப்பால் உயர்ந்தவன் என்று அறிந்தவள் தானே..  ஆனால் ஒரு நாளும் இங்கே வந்தது இல்லை இன்று தான் முதல் முறை வருகிறாள்...  அங்கே நிறைய ஆட்கள் தேயிலைகளை தரம் வாரியாக   பிரித்து  போட்டு கொண்டு நிற்க ..

"தம்பி எஸ்டேட் முதலாளி அயோக்கியவா பார்க்கணும் கொஞ்சம் கூட்டிட்டு வர முடியுமா குனிந்து நின்று ஏதோ செய்து கொண்டு இருந்த நபர் முதுகில் அவள் தட்ட ...

"எவ அவ??" என்று திரும்பினான் அயோக்கியா...   சாதாரண ஆடை கழுத்தை சுற்றி டவலை போட்டிருந்தான்  வியர்வை வடிந்து கழுத்து வழியாக ஓடியது ,  வேலையாட்களோடு சேர்ந்து அவனும் ஒரு வேலையாளாக  நின்று வேலை செய்து கொண்டு இருந்தான் 

"சார் மதியம் இன்னும் சாப்பிடல சாப்பாடு எடுத்து வைக்கவா ? என்று பணியாள் வர 

"நைட் இதை முடிச்சு லோட் ஏத்த வேண்டி இருக்கு அதை முதல்ல என்னன்னு பாரு  .. என்று முகத்தை துடைத்துக்  கொண்டே நடக்க அவன் பின்னே நடந்த அதிரா 

"அத்தான்"

"ம்ம் என்ன திரும்பி அவளை பார்த்த அந்த நீல கண்கள் சாயம் போய் பசியில் கிடந்ததை அறிந்தாள் போலும் "

"முதல்ல சாப்பிடுங்க பிறகு பேசுவோம்  

"ஆர் யூ ஷூயர் ?

"ம்ம் வேக வேகமாக உணவை வாயில் அள்ளி திணித்தவன் அந்த இடப்பட்ட நேரத்தில் கூட காதில் போனை இடுக்கி கொண்டே 

"அதை அங்க போட சொல்லு,  இது ஏன் இன்னும் பிரிக்காம கிடக்கு "என்று ஏவியபடியே தின்று முடிக்க  ஏதேதோ யோசனையில் வந்த அதிரா அவன் பரபரப்பான வாழ்கையை கன்னத்தில் கை வைத்து பார்த்தபடி உட்கார்ந்து இருந்தாள் ...  

ம்ம் சொல்லு என்று  அயோக்கியா வந்து சோபாவில் அவள் தோள் உரசும் இடத்தில் வந்து,அமர்ந்தான் 

இன்னைக்கு நான் நாக்கை புடுங்கிய மாதிரி கேட்கிற  கேள்வியில நீயும் வேண்டாம் லஸ்டும் வேண்டாம் போம்மான்னு அனுப்பி விடணும்  இப்ப தும்முனா சரியா இருக்கும் ஆரம்பிப்போம் 

அத்தான் அது 

நானே உன்கூட பேசணும்னு தான் நினைச்சேன் நீயே வந்துட்ட அவனே ஆரம்பித்து விட்டான் 

என்ன அத்தான் ?

"லவ்வுக்குதான் கண்ணு மூக்கு மூளை இது எதுவும் கிடையாது ஆனா  லஸ்டுக்கு எல்லாம் உண்டு ... 

"என்ன சொல்ல வர்றீங்க? 

"மூளைக்கெட்ட தனமா உன்ன தொட்டுட்டு , அதுக்கு பிறகு நீ வயித்த தள்ளிக்கிட்டு வந்து நின்னேன்னு  வை  உன்னைய வச்சு காலம்  முழுக்க உருட்ட வேண்டியது ஆகிப் போகும் .. சோ ஓஓஓ

 "அதனால ? என்று அதிரா அவனை கூர்ந்து பார்க்க..  கேலி செய்யும் கண்ணை மறைக்க அயோக்கியா மேஜையில் இருந்து கூலிங் கிளாஸ் எடுத்து தன் கண்ணில் போட்டு மறைத்துக் கொண்டான்..

"அதனால இந்த  லஸ்ட் எல்லாம் நமக்கு செட்டாகாது,  சோ நீ கிளம்பலாம்  என்றுவிட்டு லேப்டாப்பை தூக்கி தன் மடியில் வைக்க ... 

என்ன பொசுக்குன்னு  போக சொல்லிட்டார் ... 

"என்ன கிளம்பல "

"இல்லை அத்தான் பிள்ளை உண்டாகாம இருக்க தான் பல வழி இருக்கே அது கூட தெரியாம இருக்கீங்களேன்னு யோசிச்சுட்டு இருக்கேன் .. அவள் வந்த வேலை என்ன என்றே மறந்து அவனுக்கு ஐடியா கொடுக்க இவன்  உதட்டு மறைவில் சிரிப்பை அடக்கினான்...

"குழந்தை வேண்டாம்னு சொல்வ ,கொஞ்ச நாள் கழிச்சு உங்க மேல லவ்வு வந்துடுச்சு என்ன கல்யாணம் பண்ணிக்கங்க அத்தான்னு அழுவ ,, என்ன பொறுத்தவரை லவ்வுங்கிறது வேஸ்ட் ஆப் டைம் ஒருத்தரை நூறு சதவிகிதம் புரிஞ்சு வச்சிக்கிறது தான் லவ்  !!! நம்மாள அப்படி  இருக்க முடியாது , வேற வழி இல்லாம வாழ்ந்தே தீரணும்னு வாழ்ற வாழ்க்கை எல்லாம் எனக்கு ஆகாது 

இதை எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கே எங்க கேட்டேன் என்று அதிரா நாடியை சொரிந்தாள்... 

"சோ எப்படி பாத்தாலும் சரி வராது கிளப்பு வேலை இருக்கு 

"அய்ய அந்த சென்டிமெண்டல்  பார்ட்டி எல்லாம் நான் இல்லை அத்தான் நோ கமிட்மெண்ட் , கல்யாணம் குழந்தைன்னு நான்,கேட்க மாட்டேன் ... 

"அப்போ உனக்கு ஓகேவா  ?

"அது அவள்தான் குழம்பி போய் பார்த்து கொண்டிருந்தாள்... 

"ஆயிர ரூபாய் கொடுத்தா ஒரு நைட் ஸ்டண்டுக்கு ஆளு வரும் 

"எதுக்கு ? 

"அதுக்கு தான் 

"ச்சே சே அதெல்லாம் தப்பு அத்தான் , நான் வேணும்னா இன்னைக்கு நைட் மறுபடி யோசிச்சுட்டு  சொல்லவா?  

"அப்போ உன் இஷ்டம் நான் உன்ன கம்பெல் பண்ணல ,கையை பிடிச்சு இழுக்கல,  நீயேதான் ரிஸ்க் எடுக்குற இதுல என்ன பிரச்சனை வந்தாலும் உன் பொறுப்பு தான் எனக்கு தெரியாது ... 

"ம்ம் நாலா பக்கமும் தலையாட்டியவள்,  

"ஆனா ஒன்னே ஒன்னு குழுப்புதே அத்தான் 

"என்ன 

:இல்லை எப்போ இருந்து என் மேல ல்ஸ்ட் "

"நீ தாவணி போட தொடங்கி லோட் வண்டியா சுத்துனது இருந்து "கொஞ்சம்  எடுப்பாக இருக்கும்  தாவணி மேட்டை அவன் பழுப்பு விழி தீண்ட 

"பட் அப்போ நீங்க வைசு அக்கா கூட கமிட்டட்ல...

"அவ இருக்கும் போது உன்ன லஸ்ட்டா பார்த்தா தான் தப்பு அவ இல்லாதப்பா உன்ன பார்த்தா தப்பா? 

தப்புதானே இல்லையோ??

"அதான் சொல்லிட்டேன்ல  லஸ்ட் வேற லவ் வேறன்னு ஏன் உனக்கு அந்த வித்யாசம் தெரியாதா... நான் தெளிவாதான் இருக்கேன்.... அவளை லவ் பண்ணினேன், உன்ன லஸ்ட் பண்ணினேன் வித்யாசம் புரிஞ்சுதா??

ம்ம் ம்ஹூம் என்று குழம்பி போய் அதிரா தலையை சொரிய 

"ப்ச் இப்ப நீ என்ன முடிவுக்கு வந்திருக்க அதை சொல்லு எனக்கு ஏகப்பட்ட வேலை கிடக்கு ...

"முதல்ல ரெண்டு பேரும் நெருக்கமா பழகி பார்ப்போம் அத்தான் 

"புரியல 

"நீங்க சொன்ன மாதிரி தான் லவ்வுக்கு வேணும்னா கண்ணு காது மூக்கு தேவையில்ல ஆனா லஸ்ட்டுக்கு தேவல்ல.... 

ஓஓஓ 

ம்ம் எப்படி உடனே மூட் வரும் நாலு இடம் சேர்ந்து சுத்தி அப்படி இப்படி கிளுகிளுப்பா இருந்தா தான மூட் வரும்  மூட் வந்தா தான பாண்டிங் நல்லா இருக்கும்... 

உன் இஷ்டம் உன்ன நான் கம்பெல் பண்ணல பிறகு அய்யோ அம்மா என்ன கெடுத்துட்டான்னு சொல்ல கூடாது 

மாட்டேன் மாட்டேன் ... 

அப்போ வெளியே வெயிட் பண்ணு வேலையை முடிச்சுட்டு வர்றேன் 

சீக்கரம் வாங்க என்று போகும் அவள் பின்னழகை பழுப்பு நிறம் கூடி போன கண்ணோடு அயோக்கியா பார்த்து கொண்டு நின்றான் உதட்டில்  இகழ்ச்சி சிரிப்பு..

தானாகவே போய் இந்தா தலை வெட்டிக்க என்று கொடுத்து விட்டாள்... இனி அவன் வைத்ததே சட்டம் !!