வேஷம் போடும் வேடா 1

Vesam1

வேஷம் போடும் வேடா 1

1 வேஷம் போடும் வேடா!! 

ஏற்காட்டு மலை  அதன் அழகை அந்த காலை நேரத்தில் கண்ணுக்கு விருந்தாக  காட்டிக் கொண்டிருந்தது..  மேகங்கள் மலையிடையே தததிதாவி ஓடிக்கொண்டிருந்தது ,சிறிய மலைதூரல் அந்த மலை மீது விழுந்து பசும்புல்ல இன்னும் செழுமையாக காட்டிக்கொண்டிருந்தது... 

சூரியன் மறைந்தும் ஒளிந்தும் விளையாடிக் கொண்டிருந்த அதிகாலை நேரம்..  அந்த கருஞ்சாலை மீது டக் டக் என்று யாரோ ஓடும் சத்தம்...

புஸ் புஸ் என மூச்சோடு  வேக எட்டு வைத்து பள்ளை நிற காலணிகள் மான் போல தாவி குதித்து அந்த மலை சாலை மீது காலை நேர ஓட்டத்தில் தீவிரமாக இருக்க ...  அந்த குளிர்ந்த காற்றில் கூட நெற்றியில் வியர்வை ஓடி கன்னம் வழியாக அந்த ஆடவன் அழகை இன்னும் அழகாக்கியது....  கையில்லா கரும்பு ஹார்ம் பனியன் தொடை தெரிய ஷாட்ஸ ராஜ களை ,  ராஜா வீட்டு கன்னுக்குட்டி போல் உடல் வனப்பு...  இதையெல்லாம் தாண்டி சூரியனுக்கு நிகராக சுட்டெரிக்கும் பார்வையோடு தன்னை வந்து மோதும் சூரிய கதிர்களை முறைத்து பார்த்தது அந்த நீள அழகிய திராட்சை விழிகள்...

பெண்ணுக்கு அழகு கண் என்பார்கள் 

ஆனால் இவனுக்கு அழகே அவ் அழகிய திராட்சை நிற கண்கள் தான் ... நீள உருவம் வெளிறிய நிறம் மீசை தாடி ட்ரீம் செய்து இக்கால அழகனாக குனிந்து நின்று மூச்சு வாங்கி நிமிர்ந்து நின்றான் அவன் .. 

"சார்இஇ என்று அவன் பணியாள் ஓரம்  நின்றிருந்த ஆடி காரின் மீது இருந்த டவளை  எடுத்து அவன் புறம் நீட்ட .. தன் தங்க நிற விரல்கள் அதை வாங்கி  தன் முகத்தில் உள்ள வியர்வை துளியை   ஒத்தி எடுத்தது..   அதற்குள் அவன் போன் அதிர அதை எடுத்து காதில் வைத்தவன் 

"ஒரு கொலை பண்ண முடியல ,நீங்க எல்லாம் ரவுடியா இடியட் ,எனக்கு தெரியாது ,அந்த நாய் இந்தியா வர கூடாது..  ஏர்போர்டுல இருந்து வீட்டுக்கு வர்ற வழியில  நாய் சங்கை அறுத்து போடல "என்று பல்லை அரைத்தான் அத்தனை அழகான ஆடவன் உள்ளே ஒளிந்து கிடந்த வஞ்சம் கண்டு பணியாள் நடுங்கி போனான்..

பின்னே அவன் கொல்ல ஆளை ஏவி விட்டது வேறு யாரையும் இல்லை , அவன்  தம்பி ரித்விக்கை தான்... 

"என்ன???" போனை பார்த்தபடி தன்னை உற்று பார்க்கும் வேலையாளை தலை தூக்கி பார்க்க.... 

"இல்லை சார் அது  அது வந்து " என்று அவர் தயக்கமாக பேச்சை இழுக்க,  எதிரே  ஒரு கார் வந்து நின்றது  அதிலிருந்து சேலை கட்டிய அழகிய பதுமை ஒருத்தி இறங்க நீல கண்களை சுருக்கி பார்த்தான்  அவன்...

பத்து மணி வரை தூங்கும் தன் காதலியை இந்நேரம் இங்கே எதிர்பார்க்க வில்லை என்று அவன் கண் சொல்ல... அவள் முகத்தில் பதட்டம் அவனே கண் சுருக்க வைக்க பணியாள் நோக்கி அவன் திரும்ப அது சொன்ன கட்டளை அறிந்து அவர் தனிமை கொடுத்து  விடைபெற்று நகர 

"வா வைசு, என்ன காலையிலேயே இந்த பக்கம்??" என்று கழட்டி போட்டிருந்த சட்டையை எடுத்து அவன் மாட்ட போக 

"அப்பா மாப்பிள்ளை பார்த்து இருக்கார் ... சட்டையை மாட்ட போனவன் கை நின்றது... 

ஓஓஓஓ என்ன திடீர்னு ??

"தெரில , நாளைக்கு கல்யாணம்... 

"நான் என்ன பண்ணணும் ???அவனிடம் பதட்டம் எதிர்பார்க்க அவனோ கேஷுவலாக கேள்வி கேட்டான்.. 

"அப்பா அழுறார்,   அப்பாவை மீறி எதாவது பண்ணினா சூசைட் பண்ணிப்பேன்னு வைஷ்ணவி இழுக்க 

"நான் என்ன பண்ணணும்னு கேட்டேன் 

"எனக்கு புரியல... பயமா இருக்கு ...

"நான் என்ன ....ப...ண்ணணும் அவன் அழுத்தி கேட்க ...

"அது அப்பா சொல்ற மாதிரி ... என்று அவள் திக்கி திணற  சட்டையை முழுதாக மாட்டி கொண்டவன் அவளை திரும்பி பார்த்த பார்வையில் சர்வமும்  நடுங்கியது ...

"இதுக்கு தான் ஐஞ்ச் வருடம் லவ் பண்ணுனியா?? என அவன நீல விழி குற்றம் சாட்டியதோ?...

எப்போ கல்யாணம் ??

நாளைக்கு  ...

"கங்குராஜூலேசன்  "என்று கைநீட்டிட,  தன் நடுங்கிய கையை அவன் முன் வைஷ்ணவி நீட்ட .... அவனோ நீட்டிய கையால் தன் சிகையை கோதி கொண்டே அவளை தாண்டி போய் காரில் ஏறி போயே விட்டான்..  வைஷ்ணவி  அழுது கொண்டே போகும் அவனை மறக்கவும் முடியாது புதிய வாழ்க்கையை ஏற்று கொள்ளவும் தெரியாது நின்றாள்... உனக்கு நான் இருக்கேன் பார்த்துக்கலாம் என்று நம்பிக்கை எதாவது கொடுப்பான் என நம்பி வந்தவளுக்கு பெரிய ஏமாற்றம் தான் ... 

தேயிலை தோட்டம் நடுவே மின்னியது அந்த மாட மாளிகை வீடு   , அவன் கார் ஹாரனை பறக்க விட்டபடி வீட்டுக்குள் வந்து நின்றது... 

லவ் பெயிலியர் ஆகி போச்சுடா அதுக்கு மதிப்பு கொடு ரெண்டு சோக பாட்டு கேட்டாதான லவ பெயிலியருக்கு அழகு அவனோ காதல் சொட்டும் பாடல்களை ரசித்து கொண்டு வந்தவன் அதையே விசில் அடித்து ஹம் பண்ணி கொண்டே  இறங்கி வேகமாக வீட்டின்  உள்ளே நுழைய போக .... 

அண்ணாஅஆஆஆஆஆ என்று ஓடி வந்து தன்னை ஆர தழுவி அணைத்த தம்பியை  சிரித்த முகமாக கட்டி தழுவி தூக்கி கொண்டான் நாயகன் ,நடிப்பின் அரசன்...வில்லங்கத்தின் எஜமான் ,  பலமுகத்தை நீல விழியில் மறைக்கும் வித்தகன் ...

டேய் ரித்து எப்ப வந்த?... இறுக்கி அணைத்தான்

"இப்பதான் அண்ணா 

"ஜர்னி எப்படி இருந்தது ..

"பைன் அண்ணா  நீ ஏர்போர்ட் வருவேன்னு நினைச்சேன்...

இங்க காப்பி  லோட் ஏத்துற வேலை வந்திடுச்சு,பட் வண்டி அனுப்பி விட்டிருந்தேனே?  

கவனிக்கலயே ஆட்டோ பிடிச்சு வந்துட்டேன் 

ப்ச் என்று காலை உதைத்தான் காரில்  பிரேக்கை புடுங்கி அனுப்பி விட்டிருந்தான்... தப்பிச்சிட்டானே என்று புழுங்கியது...

ஓஓஓ குட்  தம்பி சற்று நெளிய 

"என்ன பிரச்சனை ?தம்பி கலைந்த சிகையை  கோதி சரி செய்து விட எப்போதும் போல இப்போதும் அண்ணன்  பாசத்தில் மெய்மறந்து தமையன் நின்றான் ...

"என்னடா? 

"அது வந்து அண்ணன் "

"சும்மா சொல்லு என்றவன் மனம் கொழுந்து விட்டு எரிந்தது..

இடியட் இந்த வாட்டியும் கோட்டை விட்டுட்டானுக இனி எவனையும் நம்ப கூடாது,  நாமளே இவனை முடிச்சிட வேண்டியதுதான் என்று அண்ணனை ஆசையாக பார்த்து கொண்டு நின்ற ரித்விக்கை எப்போது உலகை விட்டு அனுப்ப என்று அவன் நீல விழி சொன்ன செய்தி தமையன் அறிவானா..

"அண்ணன் 

ம்ம் சொல்லு 

அப்பா தீடீரென எனக்கு கல்யாணம் ரெடி பண்ணி இருக்கார்,   டிவியை ஆன் பண்ணி சோபாவில் அமர்ந்த அவன் கண்கள் தம்பியை அண்ணாந்து பார்க்க 

"நாளைக்கேவாம்..

ஓஓஓ 

இது பொண்ணு போட்டோ என்று ரித்விக் போட்டோவை அவன் கையில் கொடுக்க கேலியாக உதட்டை பிதுக்கி போட்டோவை பார்த்து கொண்டே அதை டேபிளில் வீசினான் , பின்னே, அதில் இருந்தது அவன் காதலி வைஷ்ணவி ஆயிற்றே...

நாளைக்கே கல்யாணமாம்,  ஏன் தீடீர்னு ஒன்னும் புரியல ...

"உனக்கு ஓகேவா? 

"நீ இருக்கும் போது என்று இழுத்தான்

"உனக்கு ஓகேவான்னு கேட்டேன் 

"அது ம்ம் என்று ரித்விக் தலையசைக்க...

"பின்ன என்ன விடு கல்யாண வேலையை பாரு என்று அறைக்குள் நுழைந்தவன் , வைஷ்ணவியும் அவனும் ஜோடியாக இருந்த போட்டோவை தூக்கி டிவி மீது எறிந்தான் ..

"இதுக்கும் இருக்குடா,  எப்படி வாழ்ந்துடுறேன்னு பார்கிறேன் என்ன விட்டுட்டு உன்ன கல்யாணம் பண்ணிக்க போறாளா, என்ன வேண்டாம்னு சொன்ன பாவத்துக்கு சீக்கிரமே விதவை ஆகி நிக்க போறா , அதை இந்த நீல கண் ஆசை தீர பார்க்க போகுது ஐயம் வெயிட்ங் என்றவன் மல்லாக்க கட்டலில் விழ அவன் முகம் முழுக்க குரோதம் வெறி,  நல்லவன் வேஷம் போடும் கெட்டவன் இவன்...

கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று ஐயம்  சத்தம் அந்த திருமண மண்டபத்தை நிறைக்க .. தன் எதிரே கையை கட்டி கொண்டு நின்ற அவனை கண் கொண்டு பாக்க பயந்து வைஷ்ணவி தலையை குனிந்து அமர்ந்திருக்க...  ரித்விக் கைகள் நடுங்க தாலியை எடுத்து அண்ணனை பார்க்க அவன் உதடு  அன்பாக சிரிக்க,  உள்ளமோ உன்னை சந்தோசமா வாழ விட்டா பாருடா என்று வஞ்சமாக சிரித்தது 

அவன் காதலி அவன் தம்பி மனைவி ஆகி ஐந்து நிமிடம் ஆகியது,  உள்ளே திருமண சம்பிரதாயங்கள் நடக்க இவன் வெளியே நின்றான்  வானம் உயர  மணமக்களை வாழ்த்தி அவன் வைத்த கட்டவுட் பளிச்சென்று நின்றது .. 

மணமக்கள் நூறாண்டு வாழ வாழ்த்தும் அண்ணன் என்று அவன் அழகிய புகைப்படம் தன் எதிரே கிடந்த அவன் ஆளுயர போட்டோவை வெறித்து பார்த்தான் ... அவன் புகைப்படம் கீழே அவன் நாமம் மின்னியது 

அயோக்கியா அனவர்தன் !! 

29  வயது ...

அனவர்தன் எக்ஸபோர்ட் எம்டி!! 

அண்ணன் அண்ணன் என்ற குரலில் தலையை திருப்பினான் அவன் சுட்டித் தங்கை ஓடி வந்து நின்றாள் 

உன்ன அப்பா கூப்பிடுது என்று தாவணி பாவாடையில் ஓடி வந்து அயோக்கியா கையை பிடித்த தங்கையின் ஸ்பரிசம்  இன்னும் அவனை எரிச்சலில் உச்சிக்கே கொண்டு போனது...  முகத்தை அன்பு ஒழுக வைத்தபடி  , கள்ளம் இல்லாது சிரித்த தங்கை ரிதன்யா தலையை தடவி கொடுத்தவன் 

நீ எப்போ கண்ணா வந்த?

"நேத்து அப்பா கூட்டிட்டு வந்துச்சு அண்ணா .. 

"ஓஓஓ எப்படி இருக்க ??

"நீயே சொல்லு எப்படி இருக்கேன் என்று முன்னும் பின்னும் சுற்றி காட்ட 

"உனக்கு என்ன கண்ணா அழகோ அழகு 

"ஹிஹி தேங்ஸ் வா அண்ணா, அப்பா உன்ன அவசரமா கூட்டிட்டு வர சொல்லுச்சு "என்று தாவி தாவி ஏறி ஓடும் ரிதன்யாவை எரிச்சலாக பார்த்து கொண்டே அயோக்கியா உள்ளே போக  நடுநாயகமாக அவன் தந்தை ஆறுமுகம் நின்றார் அவர் அருகே தீர்க்க சுமங்கலியாக பட்டு சேலை  தங்க ஆபரணங்கள் மின்ன அவர் இரண்டாவது மனைவி காயத்ரி தேவி நின்றார் 

ஆம் அயோக்கியா இவர்கள் கூட பிறந்தவன் இல்லை முதல் சம்சாரம் பெற்ற மகன் ..

வாடா அயோக்கியா,  இதுதான் என் மூத்த மகன் , மூத்த சம்சாரத்து பையன் அயோக்யா அனவர்தன்,  என் வீட்டோட தலைவாரிசு என்று  அவன் தந்தை ஆறுமுகம் அவன் தோளில் கை போட,  தன் தகப்பன் கையை நாசுக்காக அயோக்கியா தட்டிவிட்டான்.. அதற்கும் காயத்திரி ஒரு போட்டோவோடு ஓடி வந்தார் 

எய்யா , அம்மா போட்டோவை கையில வச்சிக்கிட்டு தம்பதிகளை ஆசீர்வாதம் பண்ணுய்யா,   அக்கா வாழ்த்து உன் தம்பிக்கு வேணும் என்று தீர்க்க சுமங்கலியாக போட்டோவில் சிரித்த முகமாக இருந்த அயோக்கியா தாய் அதிஸ்டலெட்சுமி போட்டோவை  கொண்டு வந்து அவன் சிறிய அன்னையும் ரித்விக் ரிதன்யாவின் தாயும் ஆறுமுகத்தின் இரண்டாம் மனைவியான காயத்திரிதேவி ஓடி வந்து கொடுத்தார்.... 

"எதுக்கு சித்தி இதெல்லாம்,  நீங்க வாழ்த்துங்க போதும் "

"எய்யா இந்த வீட்டோட குலாசாமி நீயும் அக்காவும் தான், அவுகளுக்கு வாழ கொடுத்து வைக்கலன்னாலும் எனக்கு வாழ்க்கை கொடுத்த சாமியை நான் மறக்கலாமா வாழ்த்துய்யா,  என் முதல்  புள்ளை  அயோக்கியாதான் என்று  வாய் நிறைய சொல்லும் காயத்திரிதேவியை  கேலியாக பார்த்தவன்.... தன் காலில் வந்து விழுந்த தம்பதிகள் மீது அரச்சதை தூவி 

எல்லா இன்பமும் பெற்று பல்லாண்டு வாழ்க!! என்று உதடு சொல்ல மனமோ 

"உங்களை வாழ விட்டா பாருங்கடா , ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நரகம் தான்...  உன்ன கொன்னா ஒரு நிமிசத்துல செத்து போவ எங்க அடிச்சா எப்படி வலிக்கும் இப்போ ரூட் கண்டு பிடிச்சிட்டேன் வெயிட் அன்ட் சீ "என்று வியர்த்து வடிந்த வைஷ்ணவியை உதட்டை பிதுக்கி பார்த்தவன் மீதி அர்ச்சதையை அவள் யமுகத்தில் வீசிவிட்டு ஊமையாக சிரித்தான்... 

பெயரில் மட்டும் அயோக்கியன் இல்லை செயலிலும் அயோக்கித்தனம் மட்டுமே செய்யும் ஒருவன் ...

வேடனாக காத்திருக்கும் வேஷம் தரித்த மன்னவன் அவன் 

அவன் கையில் அகப்பட போவது அத்தனையும் அன்பு கொண்ட நெஞ்சங்கள்!!