வேரலை மேய்ந்த வேழம் நேரடி அமேசான் புக்

Ver

வேரலை மேய்ந்த வேழம் நேரடி அமேசான் புக்

வேரலை மேய்ந்த வேழம் !! 

நேரடி அமேசான் வெளியீடு

https://www.amazon.in/dp/B0FCDQ7NH6

டீசர் 

படிப்பின் வாசனை இன்னும் படாத குக்கிராமம் அது, மலைகளுக்கு இடையே மரங்களுக்கு நடுவே நாகரீகத்தின் சுவடுபடாத ஒரு கிராமம் இன்னும் இந்தியாவில் உண்டோ?? என்பதை பறைசாற்ற உருவான கிராமம் அது..

17 வயது பெண்களுக்கு ஆனதும், திருமணம் என்னும் நரகத்தில் தள்ளி அவர்களை குழந்தை பெக்கும் இயந்திரமாக மாற்றிவிடும் கிராமம் அது, அங்கே பிறந்த பெண்களுக்கு சாப விமோசனம் கிடைப்பதே இல்லை ...

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் செத்தாலும் அவன் கையில் சாவதே சொர்க்கம் போய் சேர்வதற்கான வழி என்று கால காலமாக கணவனை தெய்வமாக வழிபடும் பெண்கள் இருக்கும் வரை, அங்கே பெண்களுக்கு சாப விமோசனம் ஏது

17 வயது பெண் மாலை நடுவே தரதரவென்று இழுத்து வரப்பட்டாள் 

இதுவரை திருமணம் என்ற நரகத்தில் தள்ளி விடப்பட்ட பெண்களின் நிலையைக் கண்டு பயந்து பயந்து செத்தவளுக்கு அவளுக்கும் இன்றைக்கு அந்த நிலை வந்து விட்டதே என்று கதறி அழுது ஓய்ந்து இனி தப்பிக்க வழியில்லை என்று ஆன பின்பு அத்தனை பேரும் இழுவைக்கும் இடம் கொடுத்து வந்து மணமகன் அருகே உட்கார, இதோ அவள் கழுத்தில் விஷ நாகம் போல மஞ்சள் கயிறு கட்டப்பட்டது....

ஐந்து வருடங்கள் கழித்து இன்று 

கூவம் ஆற்றின் கரையோரம் குடிசை வீடுகளில் இரவு நேர கசகச சத்தம் , காற்று கூட ஏழைகளுக்கு வஞ்சம் செய்ததுதோ? அது கூட துர்நாற்றம் எடுக்கதான் அவர்களுக்கு வந்து சேர்ந்தது...

ஒரு குடிசை வீட்டின் கதவு டமடமவென தட்டப்பட இரண்டு ஜீவன் இருதயத்தை பிடித்து கொண்டு பதறி போய் வீட்டு மூலையில் உட்கார்ந்து இருந்தது 

அம்மா கதவை திறக்காதம்மா...அந்தாள் வந்தா அடிச்சு கொல்லுவான் மழலை பயந்து தாாய்முகம் பார்க்க திருமணம் எத்தனையோ வேதனை கொடுத்தாலும் அது கொடுத்த ஒற்றை பரிசு இக் குழந்தை.... 17 வயதில் திருமணம் முடித்து திருமணம் என்றால் என்ன தாம்பத்தியம் என்றால் என்ன என அறிய முற்படும் முன்னே கையில் ஒரு குழந்தையோடு அடிப்பட்டு மிதிப்பட்டு வாழ்க்கை போதும்டா சாமி, எனக்கு எதாவது நல்லது செய்யணும்னா என்ன எடுத்துக்க , சாவை கொடு கடவுளே அப்படி சாவை கொடுத்தா கூட எனக்கும் என் பிள்ளைக்கும் சேர்த்தே கொடுத்துடு என்று வேண்ட வைத்த பெருமை அவள் கணவன் கேசவனையே சாரும்...

ஏய் ___யா __ண்ட கதவை திறடி ஈன பு___ என்ற கேசவன் பச்சை வார்த்தை கேட்டு இருவரும் நடுங்க 

இவளை என்று அவன் கதவை உடைக்க வேறு வழி இல்லாது கால்கள் தள்ளாட போய் கதவை திறக்க ... 

என்னடி செஞ்சுட்டு இருந்த ?

பின்னாடி துணி இஇஇஇ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ வலிக்குது கையில் அவன் வைத்திருந்த சிகரெட்டால் சூடு போட அவள் கதறி துடித்தாள் உடலில் காயம் இல்லாத இடம் வெகு சொற்பமே... 

அம்மாவை விடு என்று குழந்தை ஓடி வந்து அவன் காலை கடிக்க அவ்வளவு தான் கஞ்சா போதையில் நின்ற கேசவன் குழந்தை உச்சி முடியை தூக்கி வீச சுவரில் தலை மோதி குழந்தை விழுந்தது 

அய்யோ என் பிள்ளை என்று அப்பெண் கதறி ஓட அவள் சேலையை இழுத்து பிடித்த கேசவன் 

என்ன முடிவு எடுத்து இருக்க ஹான் 

என்னையும் என் பிள்ளையையும் விட்டுருங்க 

விடணுமா அழகான பொண்டாட்டி அமைவது எல்லாம் வரம்டி , பாரு ஒரு பிள்ளை பெத்தும் எப்படி தளதளன்னு இருக்க, நீ மட்டும் ம்ம் சொல்லு இந்த அழகு இருக்க வேண்டிய இடமா இது, உன்ன எங்கேயோ கொண்டு போறேன்... தாலி கட்டிய மனைவி அழகை புகழ உரிமை உண்டு ஆனால் அவள் கணவனோ விற்க அல்லவா புகழுகிறான்

அதுக்கு என்ன விபச்சாரம் பண்ண சொல்லுதியலா 

பண்ணு எத்தனை நாளைக்கு தான் ஐஞ்சுக்கும் பத்துக்கும் பிச்சை எடுக்க..நீ எவன் கூடையாவது போ எனக்கு காசை கொண்டு வா 

முடியாது என்றவள் இரவு எல்லாம் பட்ட வேதனை எழுத்தில் வடிக்க இயலாதது 

காலை அவள் ஒரு பக்கம் ரத்தம் சிந்தி தலை பெயர்ந்து கிடக்க, குழந்தை ஒரு பக்கம் மண்டை வீங்கி கிடக்க 

இந்த வாழ்க்கை தேவையா என ஓட பார்த்தாலும் பிள்ளையை கொன்னுடுவேன் என்று ரெண்டு முறை பிள்ளையை கொல்ல பார்த்த அரக்கனிடம் இருந்து அவளையும் பிள்ளையையும் யார் காப்பாத்த..

இந்தா இட்லி தின்னு என்று காலை கேசவன் இட்லி பார்சலை அவள் முன்னே போட 

பயந்து கொண்டே அதை எடுத்து மகளுக்கு ஊட்டி விட்டாள்

ஹாஹா என்று சிரித்த கேசவனை அப்பெண் பயந்து பார்க்க 

விஷம் வச்சிருக்கேன் இது இருக்கிறதால தான் நீ என் சொல்லுக்கு அடி பணிய மாட்டைக்கிற என்று மகளை காலால் தட்டினான் 

அய்யோ என் ஆண்டவா என் பிள்ளை என்று அவள் பிள்ளை வாயில் வைத்த இட்லியை பிடுங்க போக அதுவோ தாய் கையை பிடித்து கொண்டு 

பசிக்குதும்மா என்ற குழந்தை பார்வையில் என்ன கண்டாளோ 

இனி பசியே இல்லாத இடத்துக்கு போயிடலாம் சரியா என்று அவளும் அந்த இட்லியை பிய்த்து வாயில் வைக்க கேசவன் தன் முன்னே வயது வனப்பில் வாடி போனாலும் அழகான தேகம், அழகிய கண்கள் நாவல் பழ உதடு என்று செழித்து இருந்த மனைவி அழகை எப்படி காசாக்கலாம் என்ற யோசனையில் இருக்க 

அப்பா செத்துட்டா இவன் கிட்ட இருந்து தப்பிச்சிடலாம் என்று நினைக்க... அவள் எண்ணற்ற அறிந்தவன் அவளை காலால் தட்டி அழைத்து

தங்க முட்டை போடுற வாத்தை வயித்தை அறுப்பேனா நீ வாத்துடி, தஙக முட்டை போட போற வாத்து உன்ன போய் கொல்வேனா ?  

என்னால எவன் கூடையும் படுக்க முடியாது, என்ன விடுங்க ... 

மலை கிராமத்தில் இருந்து வந்தவளுக்கு இங்கே யாரும் உதவிக்கு இல்லை எங்கே போகணும் எதுவும் புரியவில்லை .. ஒன்றும் தெரியாத வயதில் பிள்ளையையும் வைத்து கொண்டு அவள் படும் பாடு கடவுளுக்கே அய்யோ என்று பாவப்பட வைக்கும் 

ஒன்னு நீ தான் சொல்றதை கேளு இல்லை உன் மகளை யாருக்காவது வித்து பணத்தை வாங்கிக்கிறேன் 

என்ன அதிர 

ம்ம் இன்னைக்கு ராவு உன் பிள்ளையை வாங்க ஆளு வர்றாங்க 

முடியாது என் பிள்ளையை நான் தர மாட்டேன் 

அப்போ நான் சொல்றதை கேட்டிறியா 

பெண்ணாக தன்னை காக்க இத்தனை வருடம் போராடி தாயாக அதிலும் தோற்று தான் போனாள் 

என்னால வேற யார்கூடையும் போக முடியாது என்று அழ 

போக வேண்டாம் நீ பத்தினி உத்தமி.... அப்படியே இரு ஆனா ஒன்னு மட்டும் செய் 

எ....ன்...ன உதடு நடுங்க அவள் கேட்க அவள் கையில் போனை கொடுத்த கேசவன் 

இந்தா இதுல ராத்திரி ஆனா ஒரு ஆம்பள பேசுவான் அவன் கூட இனி உல்லாசமா பேசு அவ்வளவுதான்

ஹான் அவள் போனையும் புருசனையும் புரியாது மாறி மாறி பார்க்க 

இது ஆன்லைன் விபச்சாரம் , கட்டிலுக்கே போக வேண்டாம் ஆம்பள தனிமையை போக்க பொம்பள அவன் வக்கிரத்துக்கு தீனி போட பேசணும் விரும்பினா அடுத்த கட்டம் என்ற கணவன் பேச்சில் இவள் எச்சில் விழுங்க ...

இன்னையில இருந்து உன் அழகு எனக்கு காசை கொட்ட போகுது ... தேன் ஒழுக அவன் கூட பேசு அதுக்காக பாரு என்று சட்டையை தடவி கட்டு கட்டாக பணத்தை காட்டினான் 

நீ பேச போறதுக்கே காசை பார்த்தியா...

மா...ட்..டேன் 

பேசலைன்னா உன் பிள்ளையை வித்திட்டு போறேன் 

வேண்டாம் வேண்டாம் ...

என் கண்ணை மீறி ஓடி போனா என்ன ஆகும் உனக்கு தனியா சொல்ல வேண்டாமே என்று ஒற்றை காலை நோண்டி நோண்டி வந்த மகளை வேதனையாக பார்த்தாள்... இவனை விட்டு தப்பிக்க நினைத்த பாவத்துகு மழலை காலை அடித்தே உடைத்த தகப்பன் இவன்தானே .... 

அப்போ ராத்திரி அவன் கூட பேசு முதல்ல ஒருத்தன் கூட பேசி சம்பாரி அதுக்கு பிறகு பழகிடும் , நாலு ஐஞ்சு கஸ்டமர் பிடிச்சுக்கலாம் என்ற புருசன் பேச்சில் அழுகையை துடைக்க கூட மறந்து நின்றாள் அப்பெண் 

இரவு நெருங்கியது மணி 12 ... அவள் அருகே வைததிருநந போன் கீர் கீர் என்று அதிர போதையிலும் ஓடி வந்த கேசவன் போனை ஆன் செய்து காதில் வைத்தவன் 

சார் ஆள் ரெடியாத்தான் இருக்கு பேசுங்க என்று போனை அவள் கையில் திணிக்க... தூங்கும் மகளை எச்சில் விழுங்க பார்த்தாள், அதன் உயிரை கூட எடுக்க துணிந்த கணவனையும் திரும்பி பார்க்க 

பேசு இல்லை என்றவன் கண்கள் சொன்ன செய்தியில் பயந்து போன பாவை அவன் தந்த போனை வாங்கி காதில் வைக்க 

ஹலோ ஆர் யூ தேர் கனீர் குரல் நாகரிகமாக வந்தது 

ஹான் 

இருக்கியான்னு கேட்டேன் எஃகு குரல் இதுதானோ பல பேரை கட்டளை போட்டே பழகிய குரல் அஃது ஆளுமை நிறைந்த குரல் அது 

ம்ம் 

ஐயம் என்று தன் பேரை சொல்ல வாய் எடுத்த அந்த இளம் சிவப்பு இதழ்கள் தலையை தடவி கொண்டே 

ஐயம் டிகே நீ ? ப்ச் நான் டிகே நீ, உன் பேர் என்ன... தன் அடையாளம் தேவையில்லை என்று மறைத்து விட்டான்

பட்டு படுக்கையில் படுத்து கிடந்த அந்த ஆறடி ஆண் உருவம் ஆர்வமாக காதில் போனை வைத்திருந்தது ...

வீடா ஊரா என்ற அளவு ஒரு ஊரை வளைத்து கட்டிய மாடமாளிகை அது ... வீடெங்கும் அமைதி!! ஆறடி உருவம் அது தன் பஞ்சு படுக்கையில் பல லட்ச ரூபாய் போனில் அவள் குரலுக்காக காத்திருந்தது... 

உன் பேர் என்னன்னு கேட்டேன் ..... 

வேரல் தட்டு தடுமாறி தன் பெயர் சொன்னாள் 

ஓஓஓஓ ஸ்வீட் நேம் 

வயசு ??

22ங்க 

ம்ம் ... எனக்கு ஸ்வீட் 32  

ம்ம் 

இனி டெய்லி இந்த டைமுக்கு பேசுவேன்.... ப்ரோக்கர் எல்லாம் சொன்னாரா...

ஹான் 

புரோக்கர் கிட்ட பேமெண்ட் கொடுத்து இருக்கேன் பேசி பழகலாம் தேவைப்பட்டா அடுத்தது போகலாம் ... ஹலோ ஹலோ இருக்கியா கம்பீரமான குரலோன் குரலில் இவளோ நடுங்கி கிடந்தாள் 

ம்ம் ....

தொழிலுக்கு புதுசா ???

ம்ம் ..

ப்ச் பேச்சு துணைக்கு ஆளுக்கு தான் உன்ன காசு கொடுத்து வாங்கினது, நீ ம்ம் ம்ம் போட்டா வாட் த கெல் இது சரி வராது வை ... நான் புரோக்கர் நாய்கிட்ட பேசிக்கிறேன் என்று சுள்ளென்று கோவம் வந்து அவன் கத்தினான் ...

பின்ன அவன் யார் ?? இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலிதிபர் தீத்தன் ஆயிற்றே .. 

தீத்தன் கேஸ்வர்!! வயது 32

குவிந்து கிடக்கும் பணங்களுக்கு அதிபதி அவன் கொட்டி கிடக்கும் வசதியை கட்டி ஆளும் சாம்ராஜ்யத்தின் தலைவன் அவன் ...ஓடி ஓய்ந்த உடல் தனிமை தந்த தாக்கத்தை தணிக்க இடம் தேடிட ...

இதோ இவ் வேழம் தேடி பிடித்தது இந்த வேரலை 

ப்ச் வே போனை வேற ஆள் பார்த்துக்கிறேன் என்று அவன் போனை வைக்க போக... 

சார் சார் இருக்கேன் நீங்க பேசுங்களேன்... என்ற மழலை குரல் மாறாத பெண்ணின் குரலில் மயங்கியது ஒரு வேழம்!!

அவன் தனிமைக்கு மருந்து அவள் 

அவள் காயத்துக்கு மருந்து அவன் ஆவானா??