வேஷம் போடும் வேடா

Vesam

வேஷம் போடும் வேடா

இத்தனை நாள் காக்க வச்சதுக்கு செம தீனியா இவன் இருப்பான் மச்சீஸ் 

நாளைஇரவு முதல் இவனை இறக்குவோம் நல்லா கும்மு கும்முன்னு கும்மலாம் 

வேஷம் போடும் வேடா!! 

டீசர் 

ஏற்காட்டு மலை அதன் அழகை அந்த காலை நேரத்தில் கண்ணுக்கு விருந்தாக காட்டிக் கொண்டிருந்தது.. மேகங்கள் மலையிடையே தததிதாவி ஓடிக்கொண்டிருந்தது ,சிறிய மலைதூரல் அந்த மலை மீது விழுந்து பசும்புல்ல இன்னும் செழுமையாக காட்டிக்கொண்டிருந்தது... 

சூரியன் மறைந்தும் ஒளிந்தும் விளையாடிக் கொண்டிருந்த அதிகாலை நேரம்.. அந்த கருஞ்சாலை மீது டக் டக் என்று யாரோ ஓடும் சத்தம்...

புஸ் புஸ் என மூச்சோடு வேக எட்டு வைத்து பள்ளை நிற காலணிகள் மான் போல தாவி குதித்து அந்த மலை சாலை மீது காலை நேர ஓட்டத்தில் தீவிரமாக இருக்க ... அந்த குளிர்ந்த காற்றில் கூட நெற்றியில் வியர்வை ஓடி கன்னம் வழியாக அந்த ஆடவன் அழகை இன்னும் அழகாக்கியது.... கையில்லா கரும்பு ஹார்ம் பனியன் தொடை தெரிய ஷாட்ஸ ராஜ களை , ராஜா வீட்டு கன்னுக்குட்டி போல் உடல் வனப்பு... இதையெல்லாம் தாண்டி சூரியனுக்கு நிகராக சுட்டெரிக்கும் பார்வையோடு தன்னை வந்து மோதும் சூரிய கதிர்களை முறைத்து பார்த்தது அந்த நீள அழகிய திராட்சை விழிகள்...

பெண்ணுக்கு அழகு கண் என்பார்கள் 

ஆனால் இவனுக்கு அழகே அவ் அழகிய திராட்சை நிற கண்கள் தான் ... நீள உருவம் வெளிறிய நிறம் மீசை தாடி ட்ரீம் செய்து இக்கால அழகனாக குனிந்து நின்று மூச்சு வாங்கி நிமிர்ந்து நின்றான் அவன் .. 

சார்இஇ என்று அவன் பணியாள் ஓரம் நின்றிருந்த ஆடி காரின் மீது இருந்த டவளை எடுத்து அவன் புறம் நீட்ட .. தன் தங்க நிற விரல்கள் அதை வாங்கி தன் முகத்தில் உள்ள வியர்வை துளியை ஒத்தி எடுத்தது.. அதற்குள் அவன் போன் அதிர அதை எடுத்து காதில் வைத்தவன் 

ஒரு கொலை பண்ண முடியல நீங்க எல்லாம் ரவுடியா இடியட் எனக்கு தெரியாது அந்த நாய் இந்தியா வர கூடாது ஏர்போர்டுல இருந்து வீட்டுக்கு வர்ற வழியில நாய் சங்கை அறுத்து போடல என்று பல்லை அரைத்தான் அத்தனை அழகான ஆடவன் உள்ளே ஒளிந்து கிடந்த வஞ்சம் கண்டு பணியாள் நடுங்கி போனான்..

பின்னே அவன் கொல்ல ஆளை ஏவி விட்டது வேறு யாரையும் இல்லை , அவன் தம்பி ரித்விக்கை தான்... 

என்ன போனை பார்த்தபடி தன்னை உற்று பார்க்கும் வேலையாளை தலை தூக்கி பார்க்க.... 

இல்லை சார் அது அது வந்து என்று அவர் தயக்கமாக பேச்சை இழுக்க, எதிரே ஒரு கார் வந்து நின்றது அதிலிருந்து சேலை கட்டிய அழகிய பதுமை ஒருத்தி இறங்க நீல கண்களை சுருக்கி பார்த்தான் அவன்...

பத்து மணி வரை தூங்கும் தன் காதலியை இந்நேரம் இங்கே எதிர்பார்க்க வில்லை என்று அவன் கண் சொல்ல... அவள் முகத்தில் பதட்டம் அவனே கண் சுருக்க வைக்க பணியாள் நோக்கி அவன் திரும்ப அவர் விடைபெற்று நகர 

வா வைசு என்ன காலையிலேயே இந்த பக்கம் என்று கழட்டி போட்டிருந்த சட்டையை எடுத்து அவன் மாட்ட போக 

அப்பா மாப்பிள்ளை பார்த்து இருக்கார் ... சட்டையை மாட்ட போனவன் கை நின்றது... 

ஓஓஓஓ என்ன திடீர்னு 

தெரில , நாளைக்கு கல்யாணம்... 

நான் என்ன பண்ணணும் 

அப்பா அழுறார் அப்பாவை மீறி எதாவது பண்ணினா சூசைட் பண்ணிப்பேன்னு வைஷ்ணவி இழுக்க 

நான் என்ன பண்ணணும்னு கேட்டேன் 

எனக்கு புரியல... பயமா இருக்கு ...

நான் என்ன ....ப...ண்ணணும் அவன் அழுத்தி கேட்க ...

அது அப்பா சொல்ற மாதிரி ... என்று அவள் திக்கி திணற சட்டையை முழுதாக மாட்டி கொண்டவன் அவளை திரும்பி பார்த்த பார்வையில் சர்வமும் நடுங்கியது 

இதுக்கு தான் ஐஞ்ச் வருடம் லவ் பண்ணுனியா என அவன நீல விழி குற்றம் சாட்டியதோ?...

எப்போ கல்யாணம் 

நாளைக்கு ...

கங்குராஜூலேசன் என்று கைநீட்டிட, தன் நடுங்கிய கையை அவன் முன் வைஷ்ணவி நீட்ட .... அவனோ நீட்டிய கையால் தன் சிகையை கோதி கொண்டே அவளை தாண்டி போய் காரில் ஏறி போயே விட்டான் வைஷ்ணவி அழுது கொண்டே போகும் அவனை மறக்கவும் முடியாது புதிய வாழ்க்கையை ஏற்று கொள்ளவும் தெரியாது நின்றாள்...

தேயிலை தோட்டம் நடுவே மின்னியது அந்த மாட மாளிகை வீடு அவன் கார் ஹாரனை பறக்க விட்டபடி வீட்டுக்குள் வந்து நின்றது அவன் இறங்கி வேகமாக உள்ளே நுழைய போக 

அண்ணாஅஆஆஆஆஆ என்று ஓடி வந்து தன்னை அணைத்த தம்பியை சிரித்த முகமாக கட்டி தழுவி தூக்கி கொண்டான் நாயகன் ,நடிப்பின் அரசன்...வில்லங்கத்தின் எஜமான் , பலமுகத்தை நீல விழியில் மறைக்கும் வித்தகன் ...

டேய் ரித்து எப்ப வந்த...

இப்பதான் அண்ணா 

ஜர்னி எப்படி இருந்தது ..

பைன் அண்ணா அது வந்து 

சும்மா சொல்லு என்று தம்பியை இறக்கி விட்டவன் மனம் கொழுந்து விட்டு எரிந்தது..

இடியட் இந்த வாட்டியுய் கோட்டை விட்டுட்டானுக இனி எவனையும் நம்ப கூடாது நாமளே இவனை முடிச்சிட வேண்டியதுதான் என்று அண்ணனை ஆசையாக பார்த்து கொண்டு நின்ற ரித்விக்கை எப்போது உலகை விட்டு அனுப்ப என்று அவன் நீல விழி சொன்ன செய்தி தமையன் அறிவானா..

அண்ணன் 

ம்ம் சொல்லு 

அப்பா தீடீரென கல்யாணம் ரெடி பண்ணி இருக்கார் டிவியை ஆன் பண்ணி சோபாவில் அமர்ந்த அவன் கண்கள் தம்பியை அண்ணாந்து பார்க்க 

நாளைக்கேவாம்..

ஓஓஓ 

இது பொண்ணு போட்டோ என்று ரித்விக் போட்டோவை அவன் கையில் கொடுக்க கேலியாக உதட்டை பிதுக்கி போட்டோவை டேபிளில் வீசினான் , அதில் இருந்தது அவன் காதலி வைஷ்ணவி ஆயிற்றே...

நாளைக்கே கல்யாணமாம் ஏன் தீடீர்னு ஒன்னும் புரியல ...

உனக்கு ஓகேவா? 

நீ இருக்கும் போது என்று இழுத்தான்

உனக்கு ஓகேவான்னு கேட்டேன் 

அது ம்ம் என்று ரித்விக் தலையசைக்க...

பின்ன என்ன விடு கல்யாண வேலையை பாரு என்று அறைக்குள் நுழைந்தவன் , வைஷ்ணவியும் அவனும் ஜோடியாக இருந்த போட்டோவை தூக்கி டிவி மீது எறிந்தான் 

இதுக்கும் இருக்குடா, எப்படி வாழ்ந்துடுறேன்னு பார்கிறேன் என்ன விட்டுட்டு உன்ன கல்யாணம் பண்ணிக்க போறாளா, என்ன வேண்டாம்னு சொன்ன பாவத்துக்கு சீக்கரமே விதவை ஆகி நிக்க போறா , அதை இந்த நீல கண் ஆசை தீர பார்க்க போகுது ஐயம் வெயிட்ங் என்றவன் மல்லாக்க கட்டலில் விழ அவன் முகம் முழுக்க குரோதம் வெறி, நல்லவன் வேஷம் போடும் கெட்டவன் இவன்...

கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று ஐயம் சத்தம் அந்த திருமண மண்டபத்தை நிறைக்க தன் எதிரே கையை கட்டி கொண்டு நின்ற அவனை கண் கொண்டு பாக்க பயந்து வைஷ்ணவி தலையை குனிந்து அமர்ந்திருக்க ரித்விக் கைகள் நடுங்க தாலியை எடுத்து அண்ணனை பார்க்க அவன் உதடு அன்பாக சிரிக்க உள்ளமோ உன்னை சந்தோசமா வாழ விட்டா பாருடா என்று வஞ்சமாக சிரித்தது 

அவன் காதலி அவன் தம்பி மனைவி ஆகி ஐந்து நிமிடம் ஆகியது, உள்ளே திருமண சம்பிரதாயங்கள் நடக்க இவன் வெளியே நின்றான் வானம் உயர கட்டவுட்

மணமக்கள் நூறாண்டு வாழ வாழ்த்தும் அண்ணன் என்று அவன் அழகிய புகைப்படம் தன் எதிரே கிடந்த அவன் ஆளுயர போட்டோவை வெறித்து பார்த்தான் ... அவன் புகைப்படம் கீழே அவன் நாமம் மின்னியது 

அயோக்கியா அனவர்தன் !! 

29 வயது 

பெயரில் மட்டும் அயோக்கியன் இல்லை செயலிலும் அயோக்கித்தனம் மட்டுமே செய்யும் ஒருவன் ...

வேடனாக காத்திருக்கும் வேஷம் தரித்த மன்னவன் அவன் 

அவன் கையில் அகப்பட போவது அத்தனையும் அன்பு கொண்ட நெஞ்சங்கள்!!