வேஷம் போடும் வேடா 7
Veda7

7 வேஷம் போடும் வேடா !!
போகும் ரித்விக் முதுகை கேலி புன்னகையோடு அயோக்கியா நீல கண் சிவப்பு நிறமாக மாற ரசித்து பார்த்து கொண்டிருக்க
ஆஹா! இந்த நீலக்கண்ணன் கண்ணு சிவக்குதே ஏதோ வில்லங்கம் பண்ண போறான்னு நினைக்கிறேன் என்னவா இருக்கும்? என்று பாதி ராத்திரியில் குடிக்க தண்ணீர் இல்லாது எழும்பி வந்த அதிரா கண்கள் நிறம் மாற நின்ற அவனை யோசனையாக பார்த்து கொண்டே அயோக்கியா அருகே போக .... முதுகு காட்டி நின்றவன் அவள் வந்ததை எப்படி அறிந்தானோ?
"என்ன வேணும் ? என்று திரும்பினான்..
"நீங்க ஏதோ அயோக்கியத்தனம் பண்ண போறீங்கன்னு உங்க கண்ணு சொல்லுது அத்தான்
"அப்படியா ,சொல்லுதோ"
"ம்ம் ஆமா ஆனா நீங்க என்ன செய்யப் போறீங்கன்னு தான் தெரியல
"ஒன்னும் இல்ல இப்போ அவன் கையில ரெண்டு கோடி ரூபா கொடுத்துவிட்டு இருக்கேன்
"நல்ல விஷயம் தானே
"ராத்திரியோட ராத்திரியா அது காணாம போனா அது கெட்ட விஷயம் தானே
"அது எப்படி காணாம போகும்?
"கொடுத்தவனே எடுத்தா காணாம போகத்தானே செய்யும்" என்று கால் மேல் கால் போட்டு அயோக்கியா உட்கார்ந்து மீறி பைலை பார்க்க ஆரம்பிக்க
"அய்யய்யோ!! இது தப்பு, பாவம் உங்களை நம்பி பணத்தை வாங்கிட்டு போயிருக்காரு, அது காணாம போச்சுன்னா விரக்தி மனநிலைக்கு போயிடுவார்
"ஓஓஓ விரக்தி மனநிலை வந்துடுச்சுன்னா சோகத்தை மறக்க குடிகாரனாயிடுவானோ?
குடிகாரன் ஆகிட்டா தினமும் பொண்டாட்டிய போட்டு குத்தி குத்தி பேசுவானோ ,
"குடிச்சா இதெல்லாம் நடக்குமா என்ன?
"எனக்கென்ன தெரியும், நீ தான் சகலமும் அறிஞ்சவ பேசாம நீயே போய் அவனுக்கு அட்வைஸ் பண்ணிடு . முதல்லயே இதெல்லாம் நடக்க கூடாதுன்னு அவனுக்கு அலர்ட் கொடுத்துடு
"ம்ஹூம் நான் ஏதாவது சொல்லப்போய் கடைசில நான் தான் பணத்தை திருடனேன்னு, என்மேல மறுபடியும் பழி வந்துடுச்சுன்னா
"அப்போ பொத்திக்கிட்டு போய் ரூம்ல படு
"ம்ம், ப்ச் அய்யய்யோ அநியாயத்தை பார்த்தா எனக்கு வேற நாடி நரம்பெல்லாம் பொடச்சிகிட்டு வருமே இப்ப நான் என்ன பண்றது"...
"அது உன் பாடு ஏதோ பண்ணு, என்ன டிஸ்டர்ப் பண்ணாத கெட் அவுட்
"இவர் என்ன எல்லா உண்மையையும் என்கிட்டயே சொல்றாரு, இப்போ இத எனக்கு மறைச்சு வைக்கவும் முடியாதே, ரித்விக் அத்தான்கிட்ட சொல்லவும் முடியாது... என்ன பண்றது.. அதிரா குறுக்கம் நெடுக்குமாக அலைந்தவள்
"பேசாம அந்த பணத்தை பத்திரமா வச்சிக்கோங்கன்னு ரித்விக் அத்தான்கிட்ட போய் சொல்லிட்டு வந்துட்டா என்ன? ம்ம் அதான் கரெக்ட் என்று குடுகுடுவென இடையில் உட்கார்ந்திருந்த அயோக்கியாவை தாண்டி ரித்திக் அறைக்குள் அதிரா ஓட...
"நமக்கு வேலையை வைக்க மாட்டா போலவே , நாம ரூட் போட்டா, அதுல இவ பூ வச்சி பொங்கல் வைக்கிறாளே என்று ரித்விக் அறை கதவை நோண்டி கொண்டு நின்ற அதிராவை அயோக்கியா தோளை உலுக்கி பார்த்தான்...
"அத்தான் அத்தான்" மெத்தை மீது நல்ல தூக்கத்தில் இருந்த வைஷ்ணவி புரண்டு படுக்க தரையில் படுப்பதற்கு பாயை விரித்து கொண்டு இருந்தவன் கதவு தட்டப்படும் சத்தத்தில் மனைவியை எட்டிப் பார்த்தான் வைசு நல்ல நித்திரையில் இருந்தாள்
உண்மையை சொல்லி விட்டதால் அவளுக்கு தூக்கம் வருகிறது இவனுக்கு தூக்கம் பறிபோகிவிட்டது..
"இந்த நேரத்துல யார்?" என்று வந்து கதவை திறக்க வாசலில் இந்த வான்கோழி கண்ணை கண்ணை உருட்டிக் கொண்டு நின்றது
என்ன அதிரா இந்த டைம்ல இங்க என்ன பண்ற?
"அது பெரிய அத்தான்கிட்ட நின்னு பேசிகிட்டு இருந்தீங்களா அதான் எதுவும் பிரச்சனையான்னு கேட்க வந்தேன்"
"பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லை பிசினஸ்க்காக அண்ணன் கிட்ட காசு கேட்டு இருந்தேன்,.. அதான் காசு கொடுத்தார்
"ஓஓஓ அப்படியா பணத்தை பத்திரமா வச்சுக்கோங்க அத்தான்,
"ப்ச் இந்த வீட்ல யாரு பணத்தை எடுத்துட்டு போக போறா..
"அப்படி சொல்லல எப்படியும் பெரிய தொகையா இருக்கும் பத்திரமா வச்சிக்கிறது நல்லதுல்ல.. பிறகு பாஸ்போர்ட் காணாம போன மாதிரி பணமும் காணாம போயிடுச்சுன்னா...
"ச்சை உன் வாயில நல்ல வார்த்தையே வராதா"
நானும் நல்ல விதமா தான் பேசணும்னு நினைக்கிறேன் ஆனா ஆந்தைக்கண்ணன் பேச விட மாட்டைக்கிறானே என்று முனங்கி விட்டு
"இல்ல முன்னெச்சரிக்கையா இருக்கிறது நல்லதுதானேன்னு நினைச்சு சொன்னேன் சாரி அத்தான்... எதுக்கும் அந்த பணத்தை பத்திரமா வச்சுக்கோங்க... ஏன்னா அது காணாம போனா கடைசியா அந்த பழியும் என் மேல விழுந்திடுமோன்னு பயம்தான்
"நடுராத்திரி வந்து எரிச்சல் பண்ணிக்கிட்டு இருக்காத போய் தூங்கு "என்ற ரித்விக் அடித்து விரட்டாத குறையாக அவளை திட்டி அனுப்ப..
"அப்பாடா!! உண்மையை சொல்லியாச்சு, எப்படியோ அந்த பணத்தை காப்பாத்திடலாம் நான் தூங்கினா தானே இவர் அந்த பணத்தை போய் எடுப்பார்... அவர் கால் மாட்டிலேயே முழிச்சு உட்கார்ந்துக்க வேண்டியது தான் எப்படி அந்த பணம் காணாம போகுதுன்னு பார்க்கிறேன்" என்று அதிரா அயோக்கியா காலடியில் போய் தன் பாட புத்தகத்தை எடுத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டாள்
எப்படியும் கொஞ்ச நேரத்தில் தூக்கம் வந்து தூங்கிடுவார் அதுக்கு பிறகு விடிஞ்சிடும் பணத்த காப்பாத்திடலாம் ..
"வலது பக்க கால்ல கொசு கடிக்குது அதை சொறிஞ்சு விட்டுட்டு உட்கார்ந்து புலம்பு "என்று அயோக்கியா தன் வலது காலை அவள் முகம் முன்னாடி நீட்டினான்...அதை பரபரவென சொறிந்து விட அயோக்கியா எழும்ப போக
"எங்க போறீங்க ??
"ரெஸ்ட் ரூம் வர்றியா "
"ச்சீ அங்க வந்து என்னத்த பார்க்க ?
"அது உன் செளகரியம் , என்றபடி ரெஸ்ட் ரூம் உளளே அயோக்கியா நுழைய ... ரெஸ்ட் ரூம் வாசலிலேயே அதிரா நின்று கொண்டாள்... அவனை எந்த பக்கமும் நகர விடாது எஸ்கார்ட் வேலை பார்த்து கண் எல்லாம் கரிக்க ஆரம்பித்தது...
இரவு முழுவதும் லேப்டாப்பில் வேலை செய்த அவன் அருகேயே உட்கார்ந்து ஈ ஓட்டி கொண்டிருந்தாள் ...
ஆவ்ஊஊஊஊ என்று கொட்டாவி விட்டு கொண்டு அயோக்கியா எழும்ப மணி காலை ஆறு
அப்பாடா !!பணத்தை காப்பாத்தியாச்சு... என்று சந்தோஷமாக அதிரா எழும்பி தன் அறைக்குள் நுழைய போக
அய்யோ!! இங்க வச்சிருந்த சூட்கேஸையும் காணல, பணத்தையும் காணல என்று ரித்விக் அலறும் சத்தம் அவ்விடத்தை நிரப்ப
என்னது பணத்தை காணலையா? என்று அதிரா நெஞ்சே பிடித்து கொண்டே அயோக்கியாவை பார்க்க உடலை நெட்டி முறித்தபடி அவளை பார்த்து கண்ணடித்தவன்
"சூச்சா போன கேப்புல சுட்டுட்டேன்டி போ போய் இதையும் சொல்லி கொடுத்து உன் சேவையை சிறப்பா செஞ்சு வச்சிட்டு வா "என்றுவிட்டு போக ... அவன் அயோக்கியதனம் கண்டு இவள் தான் மிரண்டு முழித்தாள்...
ரித்விக் ஒவ்வொரு அறையாக பணத்தை தேட ஆரம்பித்தான்....
"அத்தான் நான்,எடுக்கல" அதிரா அறையையும் விட்டு வைக்க வில்லை
"நீ எடுத்தேன்னு சொல்லல இருக்கான்னு பார்க்கறேன் அவ்வளவு தான் கை நடுங்கியது தன்னை நம்பி பணத்தை தந்த அண்ணன் முகம் பார்க்க கூசியது
"ப்ச் எங்க போச்சு நான்தான கபோர்ட் உள்ள வச்சேன் என்று தலையை தடவ ...
"என்னடா கிடைச்சதா?? என்று அயோக்கியா வேலைக்கு கிளம்பி வர
"இல்லை அண்ணன் எல்லா ரூமையும் பார்த்துட்டேன் காணல
"அவர் ரூம் பார்க்கவே இல்லையே அத்தான் அங்கேயும் பாருங்க "என்று அதிரா வாயை விட
"உனக்கு என்ன பைத்தியம் முத்திடுச்சா அதிரா , தந்தவரே ஏன் அதை எடுக்க போறார்
"அய்யோ அதுதான்டா உண்மை, கருமம் ஒருத்தனுக்கும் மூளை இல்லை மலைமுழுங்கி பய இரண்டு கோடியை அபேஸ் பண்ணிட்டு நிக்கிறானே உண்மையை சொன்னா என்ன கொலைகாரி போல பார்பானுவலே தலையை முட்டி கொண்டாள்"
ரித்விக் அத்தான் எல்லாரையும் அப்படியே நம்பாதீங்க அத்தனை பேர் ரூமையும் பார்த்தீங்க தான அவர் ரூமையும் பார்கிறதுல என்ன தப்பு??
"அவ சொல்றது சரிதான ரித்விக் இந்தா என் ரூம் சாவி செக் பண்ணிடு என்று அயோக்கியா தன் அறை சாவியை அவன் கையில் கொடுக்க
அண்ணா அவதான் லூசு போல உளறிட்டு இருக்கான்னா நீங்க வேற இப்படி பேசாதீங்க ... அந்த பணத்தை எப்படியாவது கண்டு பிடிச்சுடுவேன் அண்ணன் ...
நியாயம்னா நியாயம் தான் ரித்விக் போ என் ரூமை செக் பண்ணிட்டு வா
எல்லா இவ வாயால என்று ரித்விக் சாவியை வாங்கி கொண்டு அயோக்கியா அறை கதவை திறக்க அவனை முண்டிகொண்டு அதிரா உள்ளே ஓடி போய் அயோக்கியா அறை எங்கும் தேடுதல் வேட்டை நடத்த
ப்ச் எங்கேயும் இல்லை என்று அதிரா சோர்ந்து போய் வெளியே வர ..
"இந்தா அண்ணன் சாவி ... "
"ம்ம் பணம் போனதை பத்தி பீல் பண்ணாத விடு ரெண்டு மாசம் கண் முழிச்சு உட்கார்ந்து வேலை பார்த்தா சம்பாதிச்சிட போறேன் , பணமா முக்கியம் எனக்கு நீதான் முக்கியம் , என்ன யாருக்கும் உபயோகம் இல்லாம போயிடுச்சேன்னு பீலா இருக்கு அதை விடு பார்த்துக்கலாம், நீ நிம்மதியா இரு என்ற அயோக்கியாவை நேர்கொண்டு பார்க்க முடியாத அவமானம்...
இவர்தான் எடுத்தார்னு சொன்னா கூட நம்ப மாட்டைக்குதுகளே என்று நகத்தை கடித்து துப்பிய அதிரா அருகே வந்து குனிந்து ஷூவை அயோக்கியா போட்டபடி நிற்க
ஆமா அந்த பணம் எங்க அத்தான் ?
"ஊன் ரூம்ல
"ஏதே என் ரூம்லயா ??
"ம்ம் உன் அழுக்கு துணி கூடை உள்ள தான் கிடக்கு போகும் போது எடுத்துட்டு போறேன் கதவை மூடிராத... அவள் கண்ணை விரித்து அவனை பார்த்தபடி நிற்க
"எதையும் ப்ளான் பண்ணி பண்ணணும் ,உன்ன மாதிரி அவசரத்துல அண்டாக்குள்ள கை விட கூடாது ஓகேஏஏஏ என்று நீலக்கண்ணால் அவளை நக்கல் செய்தவன்
"அடுத்து என்ன பண்ண போற ?
"நான் ஏன் பண்ணணும் நான்,சும்மா இருக்க போறேன் ...
"ப்ச் , அப்படி சொல்லலாமா, பணத்தை தொலைச்ச அவன் முகத்தை பாரு
"பாவமத்தான் இருக்கு நம்புற அவங்களுக்கு பச்சை துரோகம் பண்றீங்க தின்கிற சோறு செமிக்காது
"அதனால தான் நான் சோறு திங்கிறது இல்லை சப்பாத்தி ஓட்ஸ் எக்ஸட்ரா... சின்ன அத்தானுக்கு நல்ல விதமா நாலு அட்வைஸ் பண்ணி சம்பவத்தை முடிச்சு வை வரட்டா என்று கண்ணை சிமிட்டி விட்டு அயோக்கியா போக
"ம்ஹூம் நான் வாயை பொத்திட்டு சும்மா இருந்தாலே பாதி பிரச்சனை குறையும்" என்று அவளும் முடிந்த மட்டும் வாயை கட்ட .. ரித்விக் விரக்தி முகம் அவளை இருக்க மாட்டாது உந்தி தள்ள ...
"அத்தான்
"என்ன
"வாழ்க்கை எல்லோருக்கும் நினைச்சது போல அமையாது இப்படி எதாவது வந்துட்டே தான் இருக்கும் ஆனா நீங்க மனசு விட்டிர கூடாது... பணம் திரும்ப கிடைச்சிடும் அந்த விரக்தியில தப்பான முடிவு எடுக்க கூடாது சரியா ?
"ப்ச்....
"இதையே நினைச்சு கவலையை மறக்க குடிக்கிறது சண்டை போடுறதுன்னு தப்பான வழிக்கு போயிடாதீங்க... குடிச்சா கவலை மறக்கலாம்தான் ஆனா அது உண்டாக்குற பின்விளைவை சரி பண்ண முடியாது, அத்தான் அத்தான் நான் கஷ்டபட்டு அட்வைஸ் பண்ணிட்டு இருக்கேன் எங்க போயிட்டு இருக்கீங்க அத்தான் இஇஇஇ ரித்விக் பைக் பறந்து விட்டது ....
"நாம சரியாத்தான பேசினோம் சரியாதான் பேசி இருக்கேன் குழம்பி போறவர் வரும் போது தெளிவா வருவார் நம்புவோம் நம்பிக்கை தான் வாழ்க்கை" என்று அதிரா நிம்மதியாக போய் தோட்டத்தில் அமர ...
அயோக்கியா கார் சீறி வந்து உள்ளே நின்றது
"ஆந்தக்கண்ணன் வந்துட்டான் இனிமே அவர் பக்கம் தலை வச்சி படுக்க கூடாது என்று முகத்தை திருப்பி கொள்ள
"டேய் பார்த்து பார்த்து" என்ற அயோக்கியா குரலில் அதிரா தன்னிச்சையாக திரும்ப கண்மண் தெரியாத போதையில் அயோக்கியா தோளில் ரித்விக் சாய்ந்து கிடக்க
அய்யய்யோ !!அத்தானுக்கு என்ன ஆச்சு? படிச்சு படிச்சு குடிக்காதீங்கன்னு அட்வைஸ் பண்ணினேனே
"எப்படியோ அட்வைஸ் பண்ணியே ஒரு குடும்பத்தை கெடுத்துட்ட
"ஏதே நானா ??
"வேற யார் தள்ளு என்று அயோக்கியா அவனை தூக்கி கொண்டு உள்ளே போனவன் எதிரே நின்ற வைஷ்ணவி அருகே கொண்டு ரித்விக்கை விட்டவன்...
"என்ன விட அவன் பெட்டர்னு பிடிச்சல்ல, இனி ராத்திரி உனக்கு தூக்கமே இருக்காது இன்னைக்கு உனக்கு பிறந்தநாள்ல இந்தா உன் பெர்த்டே கிப்ட் என்று போதையில் தடுமாறிய ரித்விக்கை அவள் மீது சாய்த்து விட்டவன்
"ஹேப்பி ம்ஹூம் சேட் பர்த்டே மை எக்ஸ்" என்று சிரித்தபடி பேயறைந்து நின்ற அத்தனை பேரையும் திருப்தியாக பார்த்து கொண்டு நின்றான்..