வேஷம் போடும் வேடா 6

Vedan6

வேஷம் போடும் வேடா 6

6 வேஷம் போடும் வேடா !! 

அதிரா ஆஆஆஆஆஆஆஆஆ என்று ரித்விக் கத்த தூக்கத்தில் இருந்த அதிரா தள்ளாடி கொண்டே வந்து ஹாலில் நின்றாள் அங்கே குடும்பமே அவளை முறைத்து கொண்டு நின்றது 

என்ன ரித்விக் அத்தான் ?

என் பாஸ்போர்ட் எடுத்தது நீயா? 

என்ன நானா நான் எதுவும் எடுக்கல அத்தான் எடுக்க சொன்னாங்க பட் நான் எடுக்கலேயே என்று உளறி விட்டு திருட்டு முழி முழித்தாள்

யார் எடுக்க சொன்னா ?

தத்த த அது அது இப்ப என்ன பிரச்சனை அத்தான் 

என் பாஸ்போர்ட் காணல , நாளைக்கு ஊருக்கு ரிட்டர்ன் ஆகலாம்னு டிக்கெட் போட தேடினா இட்ஸ் மிஸ்ஸிங்... நீதான் உள்ளே வந்தேன்னு அவங்க சொல்றாங்க என்று வைசுவை கை காட்டினான் .. 

ஒரே அறையில் இருவரும் சங்கட பட்டு வாழ்வதற்கு, ஆறுமுகத்திடம் எதாவது காரணம் சொல்லி விட்டு மறுபடியும் தனியாக ஆஸ்திரேலிய போய் விட நினைத்து பாஸ்போர்ட் தேட அது இல்லை ... இரவு அதிரா தான் அவன் அறைக்குள் வெகு நேரம் உட்கார்ந்து டிவி பார்த்தது என வைசு கூற இவளே பிடித்து விட்டான் 

"எதுக்கு என் பாஸ்போர்ட் எடுத்த அதிரா 

"அய்யோ அத்தான் , போன தீபாவளிக்கு எடுத்த சுடிதார் மேல சத்தியமா நான் எடுக்கல  

"ச்சை உன்கிட்ட இப்படி ஒரு திருட்டு புத்தி எதிர்பார்க்கல அதிரா

"நான் எடுக்கலைன்னு சொல்றேன் ..எடுத்தவரை விட்டுட்டு எல்லாரும் என்ன திருடி போல பார்க்கிறீங்க  

"அப்போ யார் எடுத்தா உனக்கு தெரியும் அதான ?

"அதோ அவர்தான் எடுத்தார்" என்று உள்ளே நுழைந்த அயோக்கியாவை அதிரா கை நீட்ட ..

யார் அயோக்கியா அண்ணாவா ??

"ஆமா அவர் தான் எடுக்க போறேன்னு சொன்னார் எடுத்துட்டார், அவர் நீங்க நெனைக்கிற மாதிரி நல்லவர் எலலாம் இல்லை ஏஆஆஆஆஆஆஆ ரித்விக் கை அவள் கன்னத்தை தீண்டும் முன் அயோக்கியா கைகள் ரித்விக் கையை அழுத்தி பிடித்து கொண்டது ...  

ஆத்தே அடி தப்பிச்சது என்று அதிரா அரண்டு முழிக்க அவன் கையை விட்ட அயோக்கியா 

"என்ன பழக்கம் டா இது அவளை கை நீட்டி அடிக்க போற "

"அண்ணா அவ பேசினது கேட்டியா உங்களை போய் தப்பா பேசுறா "

"அவ ஒரு குறை மண்டைன்னு தெரியாதா..

"ஆனாலும் 

"விடு விடு எதாவது கனவு கினவு கண்டிருப்பா... அவ என்னைக்கு ஒழுங்கா பேசி கிழிச்சு இருக்கா, மண்டை கழண்ட அவகிட்ட போய் பேசிட்டு இருக்க , என்ன ஆச்சு ?

"பாஸ்போர்ட் மிஸ்ஸிங் அண்ணா 

"வாட் ?நம்ம வீட்டுல வந்து உன் பாஸ்போர்ட்டை யார் எடுக்க முடியும் ? "

"தெரில அண்ணா  

"சரி விடு பார்த்துக்கலாம் ,இப்ப என்ன அவசரம்னு ஊருக்கு போற கல்யாணம் முடிஞ்சு நாலு நாள்தான ஆகி இருக்கு .... ஹனிமூன் போறது விட்டுட்டு அங்க போய் என்ன செய்ய போற ? 

"அண்ணா "

"உள்ள போன்னு சொன்னேன்" 

ம்ம் என்று ரித்விக் உள்ளே போய்விட.. காயத்திரி வந்து அதிரா தலையை தடவி

"அவன் ஏதோ கோபத்துல அப்படி பண்ணிட்டான் தப்பா நினைக்காதடா "

"நாளைக்கு ஊருக்கு போறேன் அத்தை

"என்ன ஆச்சு ?

"இது என் அத்தை வீடு என் வீடு மாதிரின்னு நினைச்சு தான் அதிக உரிமை எடுத்துக்கிட்டேன் எப்போ என்ன திருடி போல யோசிச்சு அடிக்க வந்தாரோ அப்பவே நான் வேற நீங்க வேறன்ன புரிஞ்சு போச்சு 

"அம்மாடி ..

"சாரி அத்தை அப்பாக்கிட்ட சொல்லிடுங்க முதல் பஸ்ல அங்க வந்திடுவேன்னு என்று அதிரா எப்போதாவது அத்திபூத்தார் போல வரும் கண்ணீரை துடைத்து கொண்டே எதிரே சுவிங்கத்தை மென்று கொண்டு நின்ற அயோக்கியாவை கண்ணீர் நிறைந்த கண்ணோடு பார்த்தபடி தன் அறை உள்ளே நுழைந்தாள்... 

படுக்கையில் படுத்து கிடந்த அதிராவுக்கு என்னவோ தனித்து விடப்பட்ட மனநிலை.. தாய் கிடையாது தந்தை மட்டும் தான் தாயின் ஸ்தானத்தில் காயத்ரியை தான் அவள் எப்போதும் பார்ப்பாள்.. அதனால் தான் இங்கே ஓடி ஓடி வந்து விடுவாள்..அந்நியப்பட்டு போன உணர்வு 

"இவங்களுக்கு எல்லாம் எதுவும் தப்பு நடந்திட கூடாதுன்னு நான் பரிதவிச்சா, அந்த பாசம் இவங்களுக்கு கொஞ்சம் கூட இல்லையே .. எவ்வளவு ஈசியா என் மேல பழியை போட்டுட்டு ஒரு சாரி கூட கேக்காம போறார்.. அவ்வளவுதான் எனக்கு இந்த வீட்டில் இருக்கிற மரியாதைல்ல.. அதான் சொல்லிட்டாங்களே மானங்கெட்டு போய் ஏன் இந்த வீட்டுக்கு வர்றேன்னு ... எனக்குத்தான் புத்தியில் உரைக்கல நாளைக்கு காலையில ஊருக்கு போய் சேர்ந்திடனும்.... அவள் அறை கதவு மெலிதாக தட்டப்பட ..

"ப்ச் , இந்த நேரத்தில் யாரு ? கவலை கூட நிம்மதியா பட முடியல "என்று புளுப்புளுத்தபடி அதிரா போய் கதவை திறக்க... எதிரே இருந்த சுவரில ஒரு காலை மடக்கி சாய்ந்து நின்று கொண்டிருந்தான் அயோக்கியா..

"என்ன? பதிலே இல்லாது அவளை தாண்டி அறை உள்ளே போன அயோக்கியா அவள் பெட்டியை எடுத்து படுக்கை மீது போட்டு அவள் ஆடைகளை கலைத்து போட 

"என்ன பண்றீங்க என் பெட்டியை ஏன்,கலைக்குறீங்க...ப்ச் அத்தான் உங்ககிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன் ...

"பாஸ்போர்ட் தேடிட்டு இருக்கேன் "

"நான் எடுக்கலன்னு சொன்னேனே 

"நான்தான் எடுத்தேன் ஹான் இதோ இங்க இருக்கு என்று அவள் உள்ளாடை குவியல் உள்ளே இருந்து ரித்விக் பாஸ்போர்ட் எடுக்க .. அதிரா அதிர்ந்து பார்க்க 

"இனிமே என்ன மாட்டி விடணும்னு நெனைக்காம வந்த வேலையை பார் இல்ல சேதாரம் உனக்கு தான், எனக்கு பாவ புண்ணியம் எல்லாம் பார்க்க வராது புரியுதா ? இன்னைக்கு திருடி பட்டம் சஸ்ட் மிஸ் தேவையில்லாத பேச்சு வந்துச்சு கொலை பழி கூட வரும் புரிஞ்சுதா 

"எனக்கு உங்க சங்காத்தமே வேணாம் நான் ஊருக்கு போக போறேன் ... 

"நல்ல முடிவு போறதுக்கு முன்ன அந்த ஆள் கார்ல ஒரு ஃபாம் வைக்க வேண்டியது இருக்கு அதையும் வச்சி தந்துட்டு போயிடு 

"ஏதே ??நானா ?

நீயே தான் என்று அயோக்கியா அவள் அறை விட்டு வெளியே போக 

என்ன கொலை கேஸ்ல உள்ள தள்ளாம விட மாட்டார் போலயே என்று கதவை அடைத்து விட்டு வந்து படுக்கையில் படுத்தவள் விட்ட புலம்பலை மறுபடியும் ஆரம்பித்து விட்டாள்... 

ரித்விக் மாடியில் ஒளிந்து விளையாடும் நிலாவை வெறுத்து பார்த்துக் கொண்டிருந்தார் அந்த கடிதத்தில் சொன்னது போல ஏற்காடு எல்லையில் போய் அந்த முகம் தெரியாத நபருக்காக காத்திருக்க... மீண்டும் ஒரு காகிதம் தான் அவன் கையில் கிடைத்தது

என் நண்பன் உன் பொண்டாட்டிய எந்த அளவுக்கு காதலிச்சான் தெரியுமா ? இன்னைக்கு அவன் பைத்தியமா தூங்க முடியாம செத்துகிட்டு இருக்கான.. ஆனா நீ சந்தோஷமா உன் பொண்டாட்டி கூட ஹனிமூன் கொண்டாட ஆஸ்திரேலியா கிளம்ப போறியா? நீ மட்டும் அவ கூட சந்தோஷமா வாழனும்னு நெனச்ச உன்னோட குடும்பம் மானத்தை வாங்கிடுவேன்... என் நண்பன் வாழாத வாழ்க்கையில் நீயும் வாழக்கூடாது அப்படி வாழனும்னு நினைச்ச நான் சொன்னது எல்லாத்தையும் செஞ்சுருவேன் என்னு முடிந்து இருந்தது 

எவனோ ஒருவனுக்கு பயமில்லை , ஆனால் இதில் குடும்பத்தின் மானம் மரியாதை கவுரவம் அடங்கி இருக்கிறது தலையைப் பிடித்தான் ரித்விக்...

அத்தோடு அறைக்குள் மெளன நாடகம் எத்தனை நாள் போட அவள் மனதில் யாரோ இருக்க அறையில் மட்டும் கணவனாக நான் இருப்பது சரியா அவனுக்கே ஒவ்வ வில்லை விவாகரத்து தான் இதற்கு முடிவு , அதுவரை ஆஸ்ட்ரேலியா போய்விட நினைக்க பாஸ்போர்ட் போன இடம் தெரியவில்லை.... 

ரித்விக். வைஷ்ணவி பின்னால் வந்து நின்றாள்.. 

"ஹான் சொல்லுங்க வைஷ்ணவி என்ன தூக்கம் வரலையா

"ம்ஹூம் , ஏன் அந்த பொண்ணுக்கிட்ட அப்படி நடந்துகிட்டீங்க... பாவம் அவ 

"ப்ச் என்னன்னு தெரியல இப்ப எல்லாம் ரொம்ப கோவம் வருது , 

"இப்ப எல்லாம்னா? நம்ம கல்யாணம் முடிஞ்ச பிறகா ரித்விக் , அவன் பெருமூச்சு விட .... என்கூட ஒரே ரூம்ல இருக்க சஙகடமா இருந்தா நான் வேணும்னா என் அப்பா வீட்டுக்கு எதாவது காரணம் சொல்லி போயிடவா...

"எ.ன்ன தீடீர்னு?  

"இல்லை உங்களை கஷ்டப்படுத்திறேனோன்னு தோணல் அதான் ..

"அப்படி எல்லாம் இல்லை ஆஸ்திரேலியாவுல கம்பெனி ரன் பண்ண ப்ளான் அதான் இஇஇஇ 

"நான் அவரை லவ் மட்டும் தான் பண்ணினேன், மத்தபடி எங்களுக்குள்ள எதுவும் தப்பு நடந்தது இல்லை 

"ச்சே ச்சே ஏன் இப்ப அதை எல்லாம் பேசுறீங்க 

"சொல்லணும்னு தோணுச்சு அதான் சொன்னேன்... 

"அது யார்னு சொன்னா ...

"என்ன பண்ணுவீங்க? 

"அவரோட உங்களை கண்டிப்பா சேர்த்து வைக்கிறேன்?என்ற ரித்விக் வித்யாசமாகத்தான் தெரிந்தான்...  

"தோணினா சொல்றேன், என்று வைஷ்ணவியும் இடைவெளி விட்டு அவன் அருகே நிற்க ....தன் அறை ஜன்னல் வழியாக புகையை விட்டபடி அயோக்கியா அவர்கள் இருவரையும் கண்கள் இடுங்க பார்த்து கொண்டு நின்றவன்..

இவ்வளவு நல்லவனா இருக்க கூடாதே.. என்ன பண்ணலாம் என்றவன் உதட்டில் ஊமை சிரிப்பு ... 

காலை பெட்டி படுக்கையோடு அதிரா ஊருக்கு கிளம்பி நிற்க ரித்விக் அவளை இடையிலேயே பிடித்து கொண்டான் 

"சாரி எதோ கோபத்துல அப்படி பேசிட்டேன் , 

"ஐயோ என்ன அத்தான் நீங்க சாரி எல்லாம் என்கிட்ட போய் கேட்டுகிட்டு 

"இதுதான் அதிரா வா 

"இல்லை அத்தான் நான் 

"ப்ச் இனிமே இப்படி நடக்காது வா ப்ளீஸ் எனக்காக" என்று ரித்விக் அவளை கெஞ்சுதலாக பார்க்க தூரத்தில் இருந்து அந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த வைஷ்ணவி பெருமூச்சு விட்டவள்...

"என்னால இவங்க காதலும் சேராம போயிடுச்சே இவங்களையாவது சேர்த்து வைக்கணும் என்று புருஷனும் பொண்டாட்டியும் வாழ்கையை விட்டு கொடுக்க நின்றனர் .. 

ஆறுமுகம் படுக்கையில் உட்கார்ந்து புத்தகத்தை புரட்டிக் கொண்டிருக்க , அவர் கால்களை அமுக்கிக் கொண்டிருந்தார் காயத்ரி தேவி,

"மாமா 

"என்ன ??சுள்ளென்று வந்தது வார்த்தை ... 

"கொஞ்சம் பேசணும்

"ம்ம்

"என்னதான் அந்த மகனை பிடிக்கலன்னாலும் அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்காம இளையவனுக்கு பண்ணி வச்சது தப்புதான மாமா என்று கணவனின் முகம் பார்க்காமல் காயத்ரி கூற..

"எது நல்லது எது கெட்டதுன்னு எனக்கு தெரியும் அவனுக்கு கல்யாணம் தான் ஒரு கேடு, 

"ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க, அவனும் உங்க பிள்ளை தானே சொல்ல போனா உங்களுக்கு தலைச்சம் புள்ள அவன் தான.. ஒரு கண்ணுல வெண்ண ஒரு கண்ணுல சுண்ணாம்பு வச்சா கூட பரவாயில்லை ஆனா, நீங்க ஒரு கண்ணுல விஷத்தை வைக்கிறீங்களே, அவன் வாழக்கூடாதுன்னு நினைக்கிற அளவுக்கு அந்த புள்ள உங்களை என்ன செஞ்சது? 

"அந்த சிறுக்கி _ண்ட வயித்துல பிறந்ததே அவன் செஞ்ச தப்புதான் இது எனக்கும் அவனுக்கானது, வாய மூடிக்கிட்டு நான் வான்னா வா, போன்னா போன தேவையில்லாம அவனுக்கு சிபாரிசு பண்றேன்னு எங்கிட்ட அடி வாங்கி செத்துடாத... காயத்ரி பெருமூச்சு விட்டு விட்டு படுக்கையில் போய் படுக்க போக... கதவு தட்டும் சத்தம் கேட்டது 

"அப்பா நான் ரித்விக் வரவா 

"உள்ள வாடா ஆறடி உயரத்தில் தன்னை போல் உருவத்தில் நடந்து வரும் தன் மகனை ரசித்து பார்த்த ஆறுமுகம் 

"என்னடா தூங்கல? தன் அருகே உட்கார்ந்த மகனின் தலையை கோதிக் கொடுத்தார்..

அது என்னவோ தன் உதிரம் தான் இரண்டும் ஆனால் அயோக்கியாவை கண்டாலே ஆகாது பெயர் வைக்கும் பொழுது வேண்டும் என்று அயோக்கியா என்று எதிர்மறையான பெயரை வைத்து அங்கேயே தன் வஞ்சத்தை ஆரம்பித்து விட்டார் ... அவர் வைத்த தொடக்க புள்ளி அவன் தொடர்புள்ளியாக முற்று வைக்காமல் தொடர ஆரம்பிக்க, வீட்டிற்குள்ளேயே எப்போதும் ஒரு உள்கட்சி பூசல் இருந்து கொண்டே இருக்கிறது... 

"அது பிசினஸ் பண்றதுக்காக காசு கேட்டிருந்தேனே,

"நீ எதுக்குடா கஷ்டப்பட்டு சம்பாதிக்கணும் நீ உன் இஷ்டம் போல இரு , அப்பா சம்பாதிச்ச காசு எல்லாம் யாருக்கு உனக்கு தானே, பெயருக்கு பின்னாடி அவன விட ஒரு டிகிரி கூட போடணும்னுதான் உன்னை ஃபாரின் போய் படிக்க வச்சது... மத்தபடி நீ கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி வேலை பார்க்கணும்னு எந்த அவசியம் கிடையாது ... உன் பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு ஊரு ஊரா ஜாலியா சுத்துடா ..

"இல்லப்பா வயசு 27 ஆவது இன்னும் இப்படியே சுத்துனா சரியா இருக்காது, ஏதாவது பிசினஸ் பண்ணினா தானே எனக்கு என் பொண்டாட்டி வீட்ல மதிப்பு இருக்கும்..

"ப்ச் சரி இப்போ அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்ற

"ஒரு ரெண்டு கோடி கடனா தர முடியுமா ... அதை வச்சு நான் ஏதாவது பிசினஸ் பண்ணிக்கிறேன் 

"ரெண்டு கோடியா ஏற்கனவே பிசினஸ் கொஞ்சம் இறக்கத்துல போய்கிட்டு இருக்கு, அந்த நாய் எங்க ஏறினாலும் ஏற விட மாட்டேங்குறான் குறுக்க மறுக்க விழுந்து நட்டத்தை கொண்டு வரான் ... நீ வேற இப்போ பிசினஸ் ஆரம்பிக்கிறேன்னு சொல்ற ரெண்டு கோடி முடியாது ... 

"அபபா 

"முடியாதுன்னு சொன்னேன் உன்ன நம்பி இருக்கிற காசை கொடுத்துட்டு நாக்கு வழிக்க சொல்றியா எழும்பி போடா என்ற தகப்பனை பாவமாக பார்த்து கொண்டே ரித்விக் தன் அறை நோக்கி நடக்க 

"ரித்விக்" அவனை அயோக்கியா குரல் தடுத்தது 

அண்ணா "

"என்ன முகம் டல்லா இருக்கு" மாடி சோபாவில் உட்கார்நது பைலை பார்த்து கொண்டிருந்த அயோக்கியா அவனை அழைக்க 

"அது அப்பாக்கிட்ட பிசினஸ் பண்ண ரெண்டு கோடி கேட்டேன் "

"தந்திருக்க மாட்டாரே 

"ம்ம் தரல இல்லைன்னு சொல்றார் 

"எது இல்லையா நேத்து ஏதோ லீஸ் விட்டதுல ஹாட் கேஸ் ரெண்டு கோடி வந்ததே நானும் தான் அந்த லீஸ்க்கு போனேன் "என்று நீலக்கண் சிரிக்க தம்பியை அயோக்கியா பார்க்க 

ஓஓஓஓ சுதி இறங்கி ரித்விக் குரல் வந்தது

கொஞ்சிறீங்களோ உன் கையை வச்சே உன் கண்ணை குடையுறேன்யா என்று உதட்டை வளைத்தவன் 

"சரி விடு அவருக்கு உன் மேல நம்பிக்கை அவ்வளவு தான் ... எவ்வளவு வேணும் ??

"அதெல்லாம் வேண்டாம் அண்ணா 

"அவர்கிட்ட கேட்ப என்கிட்ட கேட்க மாட்டியா ஹான் அவ்வளவு தான் இல்ல ...

"ரெண்டு கோடி வேணும் அண்ணா .... 

"அவ்வளவு தான வெயிட் பண்ணு "என்று அறை உள்ளே போன அயோக்கியா பணத்தை சூட்கேஸில் போட்டு கொண்டு வந்து தம்பி கையில் கொடுக்க 

"தேங்க்ஸ் அண்ணா" என்று அண்ணனை தாவி அணைத்து கொண்டான்... 

"பரவாயில்லை பணத்தை பத்திரமா வச்சிக்கோ என்று அழுத்தி கூற 

"ம்ம் சரி அண்ணா " திருமண வாழ்க்கை தான் தோற்று போனது தொழிலில் தன் கவனத்தை செலுத்துவோம் என்று புதிய தொடக்கம் நோக்கி ரித்விக் துள்ளலாக போக

தொடக்கமா இவன் அருகே இருக்கும் வரை புதிய தொடப்பகட்டை கூட கிடைக்க வாய்ப்பு இல்லையே ... 

ஒருவனை கெடுக்க வேண்டும் என்றால் சூனியம் வைக்க வேண்டாம் அவன் அமைதியான மனநிலையை குழப்பி விட்டாலே போதும் நிம்மதி தானாக போய்விடும் என்ன சூட்சுமம் தெரிந்தவன் ஆயிற்றே இந்த அயோக்கியா !!