வேஷம் போடும் வேடா 5

Vedan5

வேஷம் போடும் வேடா 5

5 வேஷம் போடும் வேடா !! 

என்னாச்சு ரித்விக் என்று உள்ளே கேட்ட சத்தத்தில் வைஷ்ணவி காபி கப்போடு உள்ளே வர சட்டென்று ரித்விக் தன் கையில் இருந்த காகிதத்தை எடுத்து டிராயர் உள்ளே மறைத்துப் போட்டான் 

யாரோ விளையாடுகிறார்கள் தன் குடும்ப மானத்தை காற்றில் பறக்க வைக்க இவளுடைய காதல் விவகாரத்தை வைத்து சதி செய்கிறார்கள்... தன்னை நம்பி இந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைத்து விட்டாள்.. அவள் இந்த வீட்டை விட்டு போகும் வரை அவள் நிம்மதிக்கும் அவளுடைய பெயருக்கும் களங்கம் வர விட்டுவிடக்கூடாது அண்ணனிடம் சொன்னால் ஒரு நிமிடத்தில் இது யார் என்று கண்டுபிடித்து உயிரை எடுத்து விடுவான் தெரியும் ஆனால் தன் மனைவிக்காக அண்ணனிடம் போய் நிற்க அவன் தன்மானம் இடம் கொடுக்கவில்லை...

அந்த நொண்ணன்தான் இதையெல்லாம் செய்வது என்று தெரிந்தால் என்ன நடக்குமோ?

"ரித்விக் ஆர் யூ ஆல் ரைட் ?

"ம்ம் , ஒன்னும் இல்ல கைத்தவறி ஜாடி கீழே விழுந்துடுச்சு அவள் முகம் பார்க்காது சட்டையை எடுத்து மாட்ட

"காப்பி அத்தை கொடுத்து விட்டாங்க 

"எதுக்கு இதெல்லாம் செய்றீங்க? எனக்கு வேணும்னா நான் போய் குடிச்சிக்க போறேன் 

"இல்ல 

"கட்டாயத்தின் பெயரில் எனக்கு எதுவும் செய்ய வேண்டாம்ங்க அதான் நேத்தே சொல்லிட்டேனே, இங்க இருக்கும் வரை நீங்க நீங்களா இருங்க எவ்வளவு சீக்கரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக உங்களுக்கு விடுதலை கொடுக்க முயற்சி செய்றேன் ... 

"இவருக்கும் என்ன பிடிக்கலயோ அதான் அனுப்பி விட யோசிக்கிறாரோ? எப்படியோ என்ன ஆகுமோ எப்படி பொய்யாய் ஒரு வாழ்க்கை இவனோடு வாழ என யோசித்த வைசுவுக்கு அப்பாடா மனநிலை ..தான் காதலித்த அயோக்கியா பார்வையை எதிர்த்து அவளால் இவன் பக்கம் மனநிலையை மாற்றி வாழ்ந்து கிழிப்பது எல்லாம் கஷ்டம்.. அதற்கு புரிந்து கொண்ட இவனுக்கு வாழ வழியே விட்டு விலகி நிற்பது நலம் என்று முடிவு எடுத்து விட்டாள் 

"அது அப்பா தான் 

:இப்ப முடிவு எடுக்க கூடிய உரிமை நம்ம ரெண்டு பேருக்கும் உண்டுங்க சோ மத்தது நான் பார்த்துக்கிறேன் 

"ம்ம் காப்பி ஆறுதே.... 

"நீங்க குடிச்சீங்களா?? கணவனாக ஏற்று கொள்ள முடியாது எனினும் ரித்விக் பேச்சு நடத்தை வாவ் போட வைத்தது .. 

"குடிச்சேன் ரித்விக்... நான் அப்படி கூப்பிடலாம்தான மெலிதாக தலையசைத்து விட்டு காப்பியை உறிஞ்ச ஆரம்பித்தான் ...

"இப்போ எப்படி இருக்கு கண்ணா? வலி குறைஞ்சு இருக்கா?? தன் தங்கை நெற்றியில் இருந்த காயத்தை அயோக்கியா விரல்கள் தடவி விட படுக்கையில் கிடந்த ரிதன்யா தன் அண்ணனின் கையை திடமாக பிடித்துக் கொண்டாள்

எப்போதும் தகப்பனின் கையில் பாதுகாப்பு இருக்கும் என்று சொல்வார்கள் ஆனால் இவளுக்கு எப்போதும் தன் அண்ணனின் கையில் தான் தைரியம் வரும்.. அண்ணன் பாத்துக்குவான் அண்ணன் எனக்கு எல்லாம் செய்வான் அண்ணன் தான் எனக்கு முக்கியம் என்று தன் தந்தையிடமே சண்டைக்குப் போகும் அளவு அயோக்கியாவை பிடிக்கும்...  

"நான் என்னவோ பெருசா அடி படும்னு நினைச்சேன், பரவாயில்லை மண்டை மட்டும்தான் போயிருக்கு அதுவும் சின்ன காயம் தான் ஆந்தக்கண்ணன் நான் நினைச்ச அளவு மோசமா சம்பவம் பண்ணல என்று உள்ளே வந்த அதிராவை பார்த்து முறைத்த ரிதன்யா..

"எல்லாம் உன்னால தாண்டி , நீ வாய் வச்ச வாய் முகூர்த்தம் பழிச்சிடுச்சு

 "எது நான் வாய் வச்சதால உனக்கு ஆக்சிடென்ட் ஆச்சா... அவர் ப்ரீ ப்ளானோட கொலை பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கார்.. இத சொன்னா நம்மள குற்றவாளி மாதிரி பார்க்கிறது பேசுறது என்று அதிரா முனங்கியது பக்கத்தில் உட்கார்ந்து தன் தங்கைக்கு சாத்துக்குடி ஜூஸ் பிணிந்து கொண்டிருந்த அயோக்கியாவிற்கு கேட்டு புருவத்தை மட்டும் உயர்த்தி நீலக்கண்ணால் அவளை பார்க்க ..

"பார்க்கிற பார்வையை பாரு, பண்றது எல்லாம் பண்ணிட்டு இந்த பூனையும் பால் குடிக்குமா மாதிரி ஒரு பார்வை பார்த்து வைச்சு ஏமாத்துறார்... 

பேசாம இவரப் பத்தி இவர் அப்பா கிட்ட சொல்லிட்டா என்ன இனிமே யாருக்கும் சேதம் வரக்கூடாது இதுதான் கரெக்ட், ஆறுமுகம் மாமா கிட்ட சொல்லிட்டா தேவல என்று நினைத்து கொண்ட அதிரா 

"சரிடி நீ பிளாஸ்திரி எல்லாம் போட்டுட்டு வீடு வந்து சேர் , எனக்கு முக்கியமான வேலை இருக்கு போறேன்...என்று வந்த வேகத்தில் புயல் கிளம்ப ரெடியாக.. 

நானும் அந்தப் பக்கமா தான் போறேன் கொண்டு "போய் விட்டுட்டு போறேன்" என்று கையை கழுவ அயோக்கியா போக

"எது நீங்களா??"

"யா ", அத்தான் அவசரமா ஹாஸ்பிட்டல் போகணும் கூட்டிட்டு போங்க என்று ஒரு நாள் கீழே விழுந்து காலில் ரத்தம் வர அயோக்கியா முன் நிற்க 

அப்படியே லேட்ப் திரும்பினா ஹாஸ்பிட்டல் வரும் நடந்து போ ,"

"அத்தான் அந்த வழியா தான போறீங்க கூட்டிட்டு போக கூடாதா ?"

"அதிமதுரான்னு பேர் வச்ச எவளையும் என் வண்டியில ஏத்த மாட்டேன் நடந்தே போ" என்று மனசாட்சி பார்க்காது போக 

"இதுக்காக எல்லாம் பேரையா மாத்த முடியும் , அன்னைக்கு அப்படி சொன்னார் இப்ப என்ன தீடீர் கரிசனை என புலம்பியவள் 

"ஆமா நான் எங்க போறேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்...

"அந்த ஆள் ஆபீசுக்கு தானே போற "என்று அவளுக்கு மட்டும் கேட்க வாயை அசைக்க 

"ஆமா அது எப்படி உங்களுக்கு தெரியும்

"உன் கண்ண பார்த்தாலே நீ அடுத்து என்ன பண்ணுவன்னு தெரியும்டி, அதுகூட தெரியாம இருக்க நான் என்ன உன்ன மாதிரி லூசுன்னு நினைச்சியா போய் வண்டியில் ஏறு, வர்றேன்..

"இவரை போட்டு கொடுக்க தான் போறேன் அதுக்கு இவரே கார்ல கொண்டு விடுறேங்குறாரு. நமக்கு ரெட்டை லாபம் , நமக்கு என்ன வந்தது" என்று அதிரா ஓடிப்போய் அவன் காரில் ஏறி அமர்ந்தாள்... 

ஸ்டியரிங்கில் அவன் விரல்கள் நாட்டியம் ஆட அந்த மலை வளைவுகளில் அவன் கார் வேகம் குறைக்காதே சரசம் ஆடியது .... 

மாமா கிட்ட எப்படி ஆரம்பிக்க இப்படி பேசலாமா அப்படி பேசலாமா என்று அவள் யோசனையாக இருக்க...

"நேரா போய் அந்த ஆள் கிட்ட உன் மூத்த மகன் உன்ன போட்டு தள்ள ரெடியா இருக்கான் , கவனமா இருன்னு சொல்லு" என்றவன் காரை ஓட்டி கொண்டே கூற 

"ஓஓஓ ஓகே ஹான் என்ன சொன்னீங்க ?

"அந்த ஆளை போட்டு தள்ள ரெடி பண்ணிட்டேன்னு போய் சொல்லு "

"நான் ஏன் சொல்லணும் ? 

"நீதான எதாவது சொல்லியே திருவேன்னு ஒத்த கால்ல நிக்கிற... 

"என்ன வச்சி இவர் காமெடி எதுவும் ட்ரை பண்றாரா என்று அதிரா அவன் முகத்தை உத்து பார்க்க சட்டென்று நீல கண்ணை அவள் சாக்லெட் நிற கண்ணோடு அயோக்கியா கலக்க விட, பே என்று அவன் கண்ணை பார்த்து கொண்டிருந்த அதிரா 

"ச்சை வர வர யார பாத்தாலும் சைட் அடிக்கிறேன் நோய் முத்தி போச்சு சீக்கரம் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் கட்டி வைக்க சொல்லணும் 

"கட்டி வச்சா மட்டும் அப்படியே கிழிச்சிடுவ" என்று பேண்ட் பாக்கெட் உள்ளே வைத்திருந்த போனை அயோக்கியா இடை தூக்கி எடுக்க 

"ஆமா இவர் எப்படி நான் வாயை திறந்து பேசாமலே சரியா பதில் மட்டும் சொல்றார்.... 

"உன் மைண்ட் வாய்ஸ் அவ்வளவு மட்டமா இருக்குன்னு அர்த்தம் ...என்று போனை எடுத்து டேஸ் போர்டில் வைத்தவன் லவுட் ஸீபிக்கரில் போட்டான் 

"அப்டேட் என்ன ?

"உங்க அப்பா 

"வாட் ?

"இல்லை ஆறுமுகம் சார் உங்க தம்பி தம்பி பொண்டாட்டியை ஆஸ்திரேலியா தனிக்குடித்தனம் அனுப்ப ட்ரை பண்ண பார்க்கிறார் போல இருக்கு ..

"ஓஓஓ அவர் பிள்ளையை வாழ வச்சிடலாம்னு கனவு கோட்டை கட்டுறாரோ பாஸ்போர்ட் இருந்தாதான வெளிநாடு போக முடியும் சண்முகம்  

"ஆமா சார்

"ஓகே நாளைக்கே என் தம்பி பாஸ்போர்ட் காணாம போயிடும் 

"எப்படி சார் உங்க வீட்ல அத்தனை காவல் தாண்டி அவர் பாஸ்போஸ்ட்டை யாரால எடுக்க முடியும் 

"அதுக்கு ஒரு மேதாவி இருக்காங்க அவங்க எடுப்பாங்க..

"யாரா இருக்கும் ? என்று அதிரா யோசிக்க 

"வேற யாரு நீதான் ,நைட் எல்லாரும் தூங்குனதுக்கு பிறகு அவன் ரூம்ல போய் பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு வந்து என்கிட்ட கொடுத்துடு என்று அவளை திரும்பி அயோக்கியா பார்க்க ..

"என்னது நானா??

"ம்ம் நீயேதான்

"என்னால முடியாது அத்தான், உங்க அயோக்கியத்தனத்துல என்னையும் பங்கு சேர்க்காதீங்க .... நீங்க ஏன் இப்படி எல்லாம் உங்க குடும்பத்துக்கு விரோதமா பண்றீங்கன்னு எனக்கு தெரியாது... ஆனா நீங்க பண்றது எல்லாம் முள்ளமாரித்தனம், இது எதுக்கும் நான் துணை போக மாட்டேன் சாமி .. இன்னையோட இது எல்லாத்துக்கும் முடிவு கட்டுறேன் இறக்கி விடுங்க என்று கத்திய அதிரா ... வண்டி ப்ரேக் அடித்து நிற்கவும் , ஆறுமுகம் கம்பெனி உள்ளே விறுவிறுவென்று நடந்தாள் 

மாமா மாமா என்று ஆறுமுகம் அறை கதவை மெலிதாகத் திறக்க ...

"எனக்கு தெரியாது அந்த அயோக்கியா நாய ஒன்னும் இல்லாம ஆக்க இன்னும் உங்களுக்கு எவ்வளவு பணம் தான் கொடுக்கணும்... நாம ஒண்ணு நினைச்சா அவன் வேற நினைக்கிறான் என்னோட பிசினஸ் எல்லாத்தையும் அவன் டேக் ஓவர் பண்ணிட்டான், அவன கொல்லலாம்னு பார்த்தா, தப்பிச்சுக்கிட்டே இருக்கான் ... அவன் காதலிச்ச பொண்ண தம்பி கல்யாணம் கட்டி அவன் முன்னாடி வாழ்றதை பார்த்து வயித்திரெச்சல்ல நொந்து சாவான்னு பார்த்தா, அவன் எதையுமே கண்டுக்காத மாதிரி ஜாலியா சுத்திட்டு இருக்கான் அவன் முகத்தில் இருக்கிற அந்த சந்தோஷம் சிரிப்ப பார்க்கும்போது எனக்கு அப்படியே பத்திக்கிட்டு வருது.... என்னைக்கு அவன் மொத்தமா மண்ணோட மண்ணா போறானோ அன்னைக்கு தான் எனக்கு சந்தோஷம் "என்று ஆறுமுகம் மேஜையில் அடிக்க...

"யாத்தே !!இந்த பேயிக்கு அந்த நீலக்கண்ணு பேய் தேவையில்ல போலையே என்று அதிர்ந்து போய் அதிரா நிற்க .... 

யாரு?? என்று ஆறுமுகம் திரும்பும் முன் அவள் அடித்து புரண்டு வெளியே ஓடி வந்தாள் 

"கொல்ல ஆள் இல்லேன்னு நம்மள போட்டு தள்ளிட கூடாது சாமி, மனுசங்களா இவங்க , குடும்பமாடா இது மகன கொல்ல துடிக்கிற தகப்பன், தகப்பனை கொல்ல துடிக்கிற மகன் , அட கருமத்தை!! இவர்கிட்ட நியாயத்தை கேட்கலாம்னு வந்தா இவர் நியாயத்தை தீர்க்கதற்கே நாலு பேர் வேணும் போல இருக்கு .. என்ன தான் நடக்குது இங்க? ஆனா, இதுக பண்ற தில்லு முள்ளு எல்லாம் என் கண்ணில மட்டும் தானே படுது ... இவங்களால எனக்கு எதுவும் பிரச்சனை வருமோ என்று தலையை சொரிந்து கொண்டே மீண்டும் போன வேகத்தில் வந்த அவளை விசில் அடித்துக் கொண்டு அயோக்கியா பார்க்க ...

"என்ன நீ கேட்ட நியாயம் அங்க கிடைச்சதா ?

"ம்ம் கெடச்சது கிடைச்சது அரை கிலோ நியாயத்தை வாங்கிட்டு தான் வந்துட்டு இருக்கேன், அப்படியே கொண்டு போய் வீட்டில் விட்டுருங்க அத்தான் தலைவலியா இருக்கு ....

"இங்க இருந்து நடந்தே வீட்டுக்கு போ அப்பதான் தேவையில்லாத விஷயத்துல மூக்க நுழைக்க கூடாதுன்னு புத்தி வரும்" என்று அயோக்கியா அவளை வண்டியில் ஏத்தாமலேயே போய் விட... அதிரா கால் வலிக்க நடந்து வந்து வீட்டில் சேர்த்தாள்.... 

தெரியாமல் தவறு செய்தால் பயம் வரும்,  தெரிந்தே தவறு செய்யும் இவனுக்கு பாவ புண்ணியம் பார்க்க தோணுமா..