வேஷம் போடும் வேடா 2

Vesam2

வேஷம் போடும் வேடா 2

2 வேஷம் போடும் வேடா!!

"கல்யாணம் முடிச்சு மூணு மணி நேரம் ஆகுது மாப்பிள்ளையும் பொண்ணும் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ரெடி ஆகிகிட்டு இருக்காங்க.. ஊருக்கு போகணும்னு ஐடியாவுல இருக்கியா இல்லையா? என்று ரிதன்யா இடையில் கை வைத்துக் கொண்டு தன் எதிரே நின்ற மாமன் மகளை முறைக்க, அவளோ நகத்தைக் கடித்துக் கொண்டே , அந்த மாளிகை வீட்டை சுற்றி சுற்றி முட்டை கண்ணை விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள் ... வெண்மை நிறம் தான் பொண்ணுக்கு அழகு என்று நம்ப வைக்கப்பட்டிருக்கும் இக்காலத்திலே அக் கூற்று முற்றிலும் தவறு என்று இவள் இன்னட்டு(சாக்லேட்) நிற கன்னம் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம் ...

அம்சமான களை அவள் சிவந்த அதரமும் ஜதி பாடும் கண்ணும் அப்பாடா!! எங்க உள்ளவ நீ இப்படி கண்ணால சாகடிக்கிற என்று பிரமித்து பார்க்க வைக்கும்... ஆரம்பத்துல ஆஹா ஓஹோ சொல்றதும் கடைசியில அய்யோ அம்மான்னு கதற வைப்பதும் நம்ம சங்கத்து பழக்கம் தானே , தந்த காசுக்கு மேல கூவியாச்சு 

யார் அவள் ?   

அதுமதுரா ( அதிரா) வயது 20 , அக்ரிகல்சர் மாணவி  

"ப்ச் உன்கிட்ட தாண்டி கேட்டுட்டு இருக்கேன் , எல்லா வண்டியும் புறப்பட ஆரம்பிச்சுடுச்சு , கடைசி வண்டிலையாவது ஏறி வீட்டுக்கு போய் சேரு... 

"நான் போறது இருக்கட்டும், இந்த வீட்ல என்னடி நடந்துகிட்டு இருக்கு 

"என்ன நடந்துட்டு இருக்கு?? ..

"ப்ச் இதெல்லாம் சின்ன பிள்ளை விவகாரம் கிடையாது , பெரிய ஆட்கள் கூடையே பேசிக்கிறேன், நீ தள்ளு "என்று அதிரா தாவணியை சுழற்றிக் கொண்டே ரிதன்யா தாண்டி போக பார்க்க அவள் நீண்ட பின்னலை இழுத்து தன் முன்னே விட்டு ரிதன்யா கோழி குண்டு கண்ணால் அத்தனை பேரையும் சர்வ நாசம் செய்து விடும் அழகில் நின்ற அழகியை முறைத்துப் பார்த்தாள்

"எது நான் சின்ன புள்ளையா? நீ என்ன 60 வயசு கிழவியா? நீயும் நானும் ஒரே வயசுதான் அதை மனசுல நினைச்சுக்கோ... இப்ப என்ன உன் பிரச்சனை??

அது, நானே மண்ட காஞ்சி போய் இருக்கேன், ஏன் இப்படி நடந்துச்சுன்னு ஒரே மண்டை காய்ச்சலா இருக்கு "நாடி தட்டி யோசித்து கொண்டே கூறினாள் 

"எது எப்படி நடந்தது ? 

"அதாண்டி அது எப்படி நடந்தது , இவர் லவ் பண்ணினார், அவர் கல்யாணம் கட்டிகிட்டார் அப்போ இவருக்கு லவ் ஃபெயிலியர் ஆயிடுச்சு, அவருக்கு கல்யாணமே பெயிலியர் ஆயிடுச்சு என்று அதிரா கையை காலை ஆட்டி விவரம் சொல்ல.. ரிதன்யாவோ தலையை சொரிந்து கொண்டு 

 யாருக்கு லவ் ஃபெயிலியர், யாருக்கு கல்யாணம் ஃபெயிலியர்?

அதாண்டி அவருக்கு லவ் பெயிலியர், இவருக்கு கல்யாணம் ஃபெயிலியர் .."

"சத்தியமா ஒன்னும் புரியல நீ அம்மாகிட்டயே போய் பேசிக்கோ ஆனா தயவு செஞ்சு காலையில நான் கண்ணு முழிக்கும்போது இங்கு இருக்காத... உன் கூட மனுஷன் குப்பை கொட்ட முடியாது" , 

"அச்சச்சோ, ரித்து பாப்பா உனக்கு விஷயமே தெரியாதா... நான் உங்க வீட்ல இருந்துதான் இனி காலேஜ் போக போறேன் ..

ஏதே ?!!"

"ம்ம் வேணும்னா காயத்திரி அத்தை கிட்ட கேட்டு பாரு.."

"என்னது எங்க வீட்ல இருந்து காலேஜ் போக போறியா? அய்யய்யோ!! அரை மணி நேரம் உன் கூட பேசினாலே மெண்டல் ஆகிடுவேனே, இனி ரெண்டு வருஷம் உன் கூடவா குப்பை கொட்டனும் உன்னை எவண்டி எங்க வீட்டுக்கு வர சொன்னா... மானங்கெட்ட தனமா திட்டுனாலும் மறுபடி மறுபடி ஏன்டி எங்க வீட்டுக்கு வந்து உயிரை எடுக்கிற... 

"ஹே, இங்க பாரு இத நீ சொல்லக்கூடாது.. இது ஏன் அயித்த வீடு நான் வருவேன் போவேன், அது என் இஷ்டம் உனக்கு கஷ்டமா இருந்தா நீ போய் ஹாஸ்டல்ல படி .. நான் இங்க இருந்து தான் இனிமே காலேஜ் போக போறேன் "என்று அதிரா எதிரே நின்ற ரிதன்யாவை தள்ளிவிட்டுவிட்டு கடகடவென மாடி படியில் ஏறி ஓடியவள் ,நேராக போய் நின்றது அயோக்கியா அறை முன்பு தான்....

"அத்தான் அத்தான்" என்று கதவை தட்ட போனவள் தலையை உதறி கொண்டாள் , போன முறை வந்த போது அவனிடம் வாங்கி கட்டியது இன்னும் நியாபகம் இருக்கிறது 

"உன்ன யார் என் ரூம் உள்ள வர சொன்னது? கெட் அவுட்" தன் அறையில் அனுமதி இல்லாத அவளை கடித்து தின்னும் சிங்கம் போல ரத்தம் ஏறிய கண்ணோடு முறைத்தான் .. 

இல்லை அத்தான் அத்தை தான் ஆஆஆஆஆஆஆ பேசிக்கிட்டு இருக்கும் போதே பிடிச்சு தள்ளுறது என்ன பழக்கம் யப்பா, என்னா வலி வலிக்கு என்று அவன் அறை வாசல்ல கரப்பான் பூச்சி போல கவுந்து கிடந்தாள் அந்த அழகிய மான்விழிக்கு சொந்தக்காரி ...  

அத்தான் என்று கதவை மீண்டும் தட்ட போக போனை பேசியபடி கதவை திறந்த அயோக்கியா தன் எதிரே நின்ற அவளை கண்டது போல இல்லை அவளை தாண்டி பால்கனி போய் போனை காதில் இடுக்கி கொண்டவன் .. 

"இன்னைக்கு ப்ஸ்ட் நைட் நடக்க கூடாது, எதாவது செய் செஞ்சே தீரணும் , அப்பறம் ரித்து காலேஜ் போகும் போது சின்னதா ஒரு ஆக்கிஸிடென்ட் பண்ணி விடு, அப்பதான் வந்தவ ராசி சரி இல்லேன்னு அவ மேல ராசிக்கெட்டவ பேர் வரும் யாரும் நிம்மதியா இருக்க கூடாது புரியுதா ?? அடுத்து என்ன செய்யணும்னு, நான் பிறகு சொல்றேன்" என்று அயோக்கியா போனை வைக்க அவனுக்கு எதிரே தீ மூச்சோடு அதிரா குற்றம் சாட்டும் பார்வையோடு நின்றாள் ... அவளை ஏற இறங்க பார்த்த அயோக்கியா 

என்ன ?? எரிச்சலாக வார்த்தை வந்தது..

வேண்டா விருந்தாளி போல மாசத்துல பத்து நாள் அத்தை வீட்டில் ஓசி சோறு தின்ன வந்து விடுவாள்.. ஊர் கும்பகோணம் தகப்பன் விவசாயி இவளுக்கும் அதில் நாட்டம் அதிகம் பி.எஸ்சி அக்ரி முடிச்சு விட்டு இப்போது மேற்படிப்பு ஏற்காடு காலேஜில் சேர்ந்து, இங்கேயே டேரா போட்டாச்சு.. வயதுக்கு ஏத்த துள்ளல் ,வயதுக்கு மீறிய பேச்சு நடத்தை இதுதான் மதுரா..ஆனால், மதுரம் போன்றவள்.. 

அத்தான் நீங்க பேசினது அத்தனையும் நான் மறைச்சு இருந்து கேட்டேன் "என்றவளுக்கு அழுகை வர பார்த்தது... இவனா இப்படி என்று குமுறி கொண்டு வந்தது .... தம்பி தங்கை என்றால் உயிரை கொடுக்கும் அவனா இப்படி பேசுவது ஒரே பீலிங் ஆகி போச்சு... 

என் பின்னாடி இவ்வளவு பெரிய உருவம் நிக்கிறது தெரியாத அளவு நான் ஒன்னும் குருடன் இல்ல ... நீ இருக்கிறது தெரிஞ்சு தான் பேசினேன்" ... 

"நீங்க பேசினது எல்லாம் கேட்டுட்டேன்" 

"என் பின்னாடி நின்னா , நான் பேசுனது எல்லாம் கேட்கத்தான் செய்யும் உன் பிரச்சனை என்ன ?" சலித்தான்... ஞான சூனியன் என்று ஒரு வகையறா இருக்கும் ,தேவையில்லாத இடத்தில் மூக்கை விட்டுட்டு குத்துது குடையுது என கத்தும் ரகம் அதுதான் இவள் என அவன் அறிவான் ... வீணா போய் தலையை விட்டுட்டு முட்டி மோதி அலறுவது அவள் ஹாபி .... 

"நீங்க தப்பு பண்றீங்க அத்தான், "

காதை குடைந்தவன் தன் மார்பளவு கிடந்த அவளை குனிந்து பார்க்க அந்த நீல விழி கண்டு அவள் வாயை மூட முயன்றாலும் லொடலொட என்று ஓவர் ட்யூட்டி பார்த்தே பழகிய வாய் சொல் பேச்சு கேட்கவில்லை ...அயோக்கியாவோ ஒரு சிகரெட்டை இழுத்தபடி திண்டில் ஏறி அமர்ந்தான் 

"உங்க கவலை புரியுது அத்தான் .. 

"என் கவலையா என்ன அது ?

ம்ம் வைசு அக்காவை தான நீங்க ஐஞ்சு வருஷமா லவ் பண்ணுனீங்க? என்றதும் புகை விட்டு கொண்டிருந்த அயோக்கியா அவளை ஆழ்ந்து பார்க்க 

ஐ நோ, ஐநோ ஐநோ ,, "

"சரி அதுக்கு என்ன இப்ப ? ..

"நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணினது எனக்கு தெரியும்...

ஓஓஓ"

"போனவாட்டி உங்க ரூமுக்கு வந்திருக்கும் போது நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த போட்டோவை நான் பாத்துட்டேன்...

அதுக்கு இப்ப என்ன செய்ய சொல்ற? அவனுக்கு இருக்கும் ஏகப்பட்ட வேலையில் இந்த தேவையில்லாத அருகம்புல் வேறு காலுக்கு இடையில் முளைத்து அங்கும் இங்கும் எரிச்சல் மூட்டியது 

நம்மள லவ் பண்ணினவங்க நம்மள விட்டுட்டு போயிட்டா அவங்களை பின்னாடியே டார்கெட் பண்ணி பழி வாங்கணும்னு துடிக்கிறது நல்ல மனுஷனுக்கு அழகா சொல்லுங்க...

எனக்கு அழகுதான்"...

தப்பு அத்தான் தப்பு , எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்துறது தான் நம்ம தமிழ் பண்பாடு அத மறந்துடாதீங்க"

"நான் ஆந்திராவில பிறந்தவன் எனக்கு உங்க தமிழ் பண்பாடு தெரியாது..

ப்ச் தெரியலன்னா தெரிஞ்சுக்கோங்க , அதுக்காக இப்படி அவங்க வாழ்க்கையை கெடுக்கணும்னு நினைக்கிற அளவுக்கு போறது தப்புதான் ..

இப்ப என்ன செய்யணும்னு சொல்ற,,

"அவங்க வாழ்றத நீங்க தள்ளி இருந்து ரசிக்கணுமே தவிர அவங்க வாழ்க்கையை கெடுக்க கூடாது" என்றதும் நாடியை தடவிக் கொண்டே தன் எதிரே நின்று அவளை பார்த்தான், ஊமையாக ஒரு நமட்டு சிரிப்பை சிரித்தவன்

"இத போய் உன் அக்கா அதான் உன் சின்ன அத்தானுக்கு பொண்டாட்டியா வந்திருக்காளே அவ கிட்ட போய் சொல்லு... என்ன நினைச்சுகிட்டு அவன் கூட வாழாம இருக்க கூடாதுன்னு ,அவங்க சந்தோஷமா வாழனும் என்னை மறந்துடனும்னு எனக்கு பண்ணுன அத்தனை அட்வைஸையும் அங்க பண்ணு"... 

ஹான்

ம்ம் , நீதான் நல்ல காரியம் பண்றதுக்கு துடியா துடிக்கிறியே ,இந்த காரியத்தை பண்ணு அவங்க வாழ்க்கை ஆகா ஓகோன்னு போகும் ... அவள் தலையை சரித்து கொண்டு அயோக்கியாவை பார்க்க ... 

 

காதலியை வாழ விடக்கூடாதுன்னு நினைக்கிற நான் தப்பா இல்ல.. என்ன மனசுல வச்சுக்கிட்டு என் தம்பி கூட வாழ போற அவ தப்பா ? நீயே யார் கூட பேச்சு வார்த்தை நடத்தணும்னு யோசிச்சு பார்த்து பேச்சு வார்த்தை நடத்திடு .... அப்படியே இந்த சிகரட்டை அணைச்சு போட்டுடு, புகையுது" என்று புகைந்து கொண்டு இருந்த சிகரட்டை அவள் கையில் திணித்துவிட்டு அயோக்கியன் அறைக்குள் போய்விட..

அட ஆமால்ல, அத்தான் சரி பாயிண்ட் பாயிண்டா பேசுறாரே , வைஷ்ணவி அக்கா மேலதான் தப்பு இருக்கு, இவரை லவ் பண்ணிட்டு அவர கல்யாணம் கட்டி இருக்காங்க.. அது எப்படி ஒரே நாள்ல இவரை மறந்துட்டு அவங்க கூட வாழ முடியும் :என்று சிகரட்டை தன் கன்னத்தில் வைக்க ... அது அவனைப் போலவே சுட்டு வைத்தது

ஐயோஒஒஒ என்று அலறிக்கொண்டு சிகரெட்டை கீழே போட்டுவிட்டு அதிரா வைஷ்ணவியை தேடி போனாள்.... 

கண்ணாடி முன்னாடி இனி என்ன நடக்கப் போகிறது அண்ணனை காதலித்து விட்டு தம்பியை கரம் பிடித்து ஒரே வீட்டில் இனி வாழ வேண்டும் அயோக்கியா அவளை பார்க்கும் பார்வை தனக்கே பயத்தை கொடுத்தது ஏமாத்திட்டல்ல என்ற அவன் பார்வை கூசி குறுக வைத்தது...

ஒன்றுமே அறியாமல் தன் கழுத்தில் தாலி கட்டிய ரித்விக்கை ஏமாத்த மனமில்லை மண்டை வலி வேறு ஒரு பக்கம், கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்துக்கொண்டு வைசு நிற்க அவள் உருவத்தின் பின்னே ஒரு குட்டி உருவம் வந்து தயங்கி நின்றது வைஷ்ணவி பயந்து திரும்பி பார்க்க ..

யார் நீங்க ? "

நான் அதிமதுரா ஊரு கும்பகோணம் ,காயத்திரி அத்தையோட அண்ணன் பொண்ணு இங்க இருந்து தான் இனிமே காலேஜ் போக போறேன், வைஷ்ணவி சினேகமாக சிரிக்க..

என்ன விஷயம் "

எனக்கு எல்லாம் தெரியும் அக்கா 

எ...ன்...னது??

 நீங்க ஏன் பெரிய அத்தானை லவ் பண்ணினது 

ஹான் அவள் அதிர 

ம்ம் அவரை லவ் பண்ணிட்டு , இப்போ சின்ன அத்தானை கல்யாணம் பண்ணி இருக்கீங்க அப்படித்தானே?? என்றதும் வைஷ்ணவிக்கு வியர்த்து கொட்டியது கெஞ்சல் ,பயம் கலந்த பார்வையோடு வைஷ்ணவி எதிரே நின்ற அதிராவை பார்க்க 

பயப்படாதீங்க அக்கா நான் யாருகிட்டேயும் சொல்ல மாட்டேன்.... "

"தேங்க்ஸ் 

"நீங்க இன்னொருத்தர் லவ் பண்ணிட்டு, ரித்விக் அத்தான கல்யாணம் கட்டி இருக்கீங்கன்னு உண்மைய நான் சாகுற வரை யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன் நீங்க பயப்படாதீங்க சரியா??

ம்ம் பெரிய மனிதி போல வைஷ்ணவி தோளில் தட்டிக் கொடுத்த அதிரா...

பாருங்க இதெல்லாம் சகஜம்தான்... ஆனா, அவர நினைச்சுக்கிட்டு இவர்கூட வாழ்வதுதான் தப்பு அதனால டோட்டலா அவரை முழுக்க மறந்துட்டு இவர் கூட வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணுங்க... 

ஏதோ சொல்லணும்னு தோணுச்சு சொன்னேன் வரவா "என்று விட்டு மதுரா வெளியே போய் விட... அயோக்கியா, அதிராவை அனுப்பி விட்ட இந்த இடைப்பட்ட நேரத்தில் 

அயோக்கியா ரித்விக் போனுக்கு போன் போட்டு 

வைஷ்ணவிக்கு வாழத்து சொல்லணும் போனை கொடு "

"அவ ரூம்ல ரெடி ஆகிட்டு இருக்கா அண்ணா என்று சற்று வெட்க குரலில் ரித்விக் கூற அங்கே அயோக்கியா ஓங்கி கண்ணாடி மீது குத்தினான்.... 

அண்ணா 

ம்க்கும் இருக்கேன் கொண்டு போய் கொடேன் ரித்விக் 

இதோ போறேன் அண்ணா என்று போனை கொடுப்பதற்காக வந்த ரித்விக் உள்ளே வைஷ்ணவி யாரிடமோ பேசிக்கொண்டு இருக்கவும் அப்படியே வெளியே நின்று கொள்ள.. அதே நேரம் நான் சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன் என்று அதிரா கத்தி கத்தி சொன்ன சிதம்பர ரகசியம் ரித்விக் காதில் அச்சு பிசுராது கேட்டே விட்டது .. 

இன்னொருவனை காதலித்தவள் தன் மனைவி என்ற உண்மை அறிந்து அப்படியே உடைந்து போய் நின்றான்

அது அவனுடைய அண்ணன் அயோக்கியா என்ற உண்மை தெரிந்தால் என்ன ஆகும்??

உண்மையை சொல்ல மாட்டேன் என்று சொல்லி உண்மையை உரக்கச் சொல்லி ஒரு குடும்பத்தை வேரிலேயே கிள்ளி எறிந்து விட்டு நிம்மதியாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தாள் அதிமதுரா..

இவள் இப்படித்தான் செய்வாள் என அவளைப் பற்றி நன்கு அறிந்த அயோக்கியனுக்கு தெரியுமே 

ஹாஹா இந்த குடும்பத்தை கெடுக்கிறதுக்கு வேற யாருமே தேவையில்லை .. இந்த ஒருத்தி போதும் நாம நினைச்சதை எல்லாம் சாதிச்சிடலாம் என்று மனைவியின் பழைய காதல் வாழ்க்கை உண்மை தெரிந்து முகம் கருக்க தன் அறைக்குள் தட்டு தடுமாறி நடக்கும் தம்பியை உதட்டை குவித்து விசிலடித்தபடி பார்த்துக் கொண்டு நின்றான் அயோக்கியத்தனங்களின் ஒட்டுமொத்த சதிகாரன்...