வேஷம் போடும் வேடா 9
Veda9

9 வேஷம் போடும் வேடா!!
தோட்டத்து ஊஞ்சலில் வைஷ்ணவி கண்ணீரை அடக்க முடியாமல் வடித்துக் கொண்டு அமர்ந்திருக்க திடீரென்று ஊஞ்சல் ஆடவும் பயந்து மிரண்டு பின்னால் பார்க்க ..அதிர்தான் மெலிதாக ஊஞ்சலை ஆட்டிக் கொண்டு நின்றாள்
நீயா ?
ம்ம் வைசு கடினப்பட்டு தன் கண்ணீரை சேலையில் அவள் துடைக்க போக அவள் கண்ணீரை துடைத்து விட்ட அதிரா..
என்னக்கா அத்தான் குடிச்சிட்டு வந்திருக்கிறார்னு அழுதுகிட்டு இருக்கீங்களா?
"இந்த நிலைமைக்கு நான்தான் காரணம்னு நினைச்சு அழுதுக்கிட்டு இருக்கேன்.... அவரை மாதிரி ஒரு மனுஷனை பார்க்க முடியாது, ஜெம் ஆனா குடிச்சிட்டு அவர் பேசின பேச்சுக்கள் உண்மையா என்ன கஷ்டப்படுத்திடுச்சு அவரும் என்ன பண்ணுவார்? வாழணும்னு ஆசைப்பட்டுதானே எனக்கு தாலி கட்டியிருப்பார்.. ஆனா என்னால அவ்வளவு சீக்கிரமாக அவரை அக்செப்ட் பண்ணிக்க முடியல அதிரா என்று அண்ணாந்து தன் பின்னால் நின்று அதிராவை பார்த்தாள்....
"பெரிய அத்தான் ஏதாவது சொன்னாரா?
" அவர் சொல்லனும்னே அவசியமில்லை ,அந்த நீல கண்கள் பார்க்கிற பார்வையிலே அத்தனை அருவறுப்பு இருக்கு ... நீ எல்லாம் ஒரு பொண்ணா அப்படிங்குற மாதிரி பார்த்து வைக்கிறார், எனக்கே என்னை கேவலமா நினைக்க வைக்கிறார்... நான் என்ன தப்பு செஞ்சேன் சொல்லு, அவருக்கு தெரியாம இந்த கல்யாணத்தை மறைச்சு செஞ்சு இவர் கூட வாழ்ந்து இருந்தா தப்பு, அவர்கிட்ட தான் நான் முதல் நாளே போய் சொன்னேனே ... இப்படி சிக்கல்ல மாட்டிக்கிட்டேன் ஏதாவது பண்ணுங்கன்னு அப்போ , என் மேல தப்பு இல்ல...
" உங்க மேல தப்பு இல்லன்னு சொல்ல முடியாது அக்கா..
"என்ன சொல்ற?
" காதல் என்பது நம்பிக்கையில உண்டாகிறது, ஒருத்தருக்கோ ஒருத்திக்கோ நான் உன்னை காதலிக்கிறேன்னு நம்பிக்கை கொடுத்துட்டு அப்பா சொன்னாங்க , அம்மா சொன்னாங்கன்னு இன்னொருத்தரை கல்யாணம் கட்டிக்கிட்டா அந்த நம்பிக்கை தோத்துப்போகுது இல்ல அக்கா...
"அது
"நாம காதலிக்கும் போதே பல தடவை இது செட் ஆகுமான்னு யோசிக்க வேண்டாமா? கல்யாணம் வரை ஒரு காதலை கொண்டு போக தைரியம் இல்லைன்னா ஏன் காதலிக்கணும்? " வைசு தலையை குனிய
"ஒரு உண்மையை சொல்லவா காதலை பொறுத்தவரை ஆண்கள் தான் தைரியசாலி உண்மையா காதலிச்சிட்டான்னா ,உயிரே போனாலும் அவளை விட கூடாதுன்னு துணிஞ்சு நிற்பான் அதுல பெண்கள் கொஞ்சம் சுயநலம் தான் ஒத்துக்கத்தான் வேணும்" ...
"இதையே ஒரு ஆம்பள செஞ்சிருந்தா இந்த சமுதாயம் எப்படி எல்லாம் குமுறி இருக்கும் ... ஆனா பொண்ணு செஞ்சா அப்படியே மறைச்சு குடும்பத்துக்காக தான் வாழ்க்கையை தியாகம் பண்ணிட்டோம்னு பட்டம் கொடுப்பாங்க...
ஆனா, நான் அயோக்கியாகிட்ட கல்யாணத்துக்கு முன்னாடியே போய் அவர்கிட்ட நிலைமையை எடுத்து சொன்னேனே... அவர் நினைச்சிருந்தா இந்த கல்யாணத்தை நிறுத்தி இருக்கலாம், இந்த இக்கட்டு ஏற்படாம மாத்தி இருக்கலாமே"
"எப்படி மாற்ற முடியும் ,நீங்களே ஊஞ்சல்ல ஆடுன மனநிலையில் நிக்கிறீங்க, ஒருவேளை நீங்க போய் நீங்க என்ன கல்யாணம் கட்டிதான் ஆகணும், நான் உங்களை நம்பி தானே காதலிச்சேன்னு அவர்கிட்ட விடாப்படியா நின்னு இருந்தா, எங்க அத்தான் கண்டிப்பா இந்த கல்யாணத்தை நடத்த விட்டிருக்க மாட்டார் ... "
"நீங்க இன்னொரு தப்பும் பண்ணியிருக்கீங்க... ரித்விக் அத்தான் கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடியே சோ அன்ட் சோன்னு உங்க பழைய காதல பத்தி சொல்லி இருக்கணும், உங்க வாழ்க்கையில என்ன முடிவு எடுக்கணும்னு நீங்க டிசைட் பண்ணலாம் ... ஆனா அவர் வாழ்க்கைக்குள்ள போயிட்டு நாம என்ன டிசைட் பண்ணலாம்னு முடிவு எடுக்கிறது தப்பு இல்ல... அவருக்கும் தனிப்பட்ட விருப்பம், ஏக்கம் , ஆசை எல்லாம் இருக்கும்ல ...
"எனனவோ நான் மட்டும் ஏமாத்தின மாதிரி சொல்ற அவரும் தான் என்னை ஏமாத்திட்டார்
"அவரா??
"ம்ம் உன்னை காதலிச்சிட்டு என்ன கல்யாணம் பண்ணினது தப்பில்லையா ? அதை மறைச்சது தப்பு இல்லையா?
"எது என்ன காதலிச்சாரா ??
"ஆமா
"அட போங்காக்கா நான் யாரையுமே காதலிக்கலையே...
"அப்போ அன்னைக்கு ராத்திரி அவர் கிட்ட நீங்க என்னை ஏமாத்திட்டீங்கன்னு சொன்னது
"நான் இந்த ஊர்ல உள்ள ஆயிரம் பேரை சைட் அடிச்சிருக்கேன் அதுல ஒருத்தர் உங்க ஆத்துக்காரர் அப்படி நான் கல்யாணம் பண்ணனும்னா ஆயிரம் பேரையும் கல்யாணம் பண்ணனும், நான்தான் சும்மா அவரை தொல்லை பண்ணிக்கிட்டு திரிவேனே தவிர அவர் என்னை சட்டை கூட பண்ண மாட்டார்... எனக்குன்னு ஒருத்தி வருவா அவள மட்டும் தான் காதலிப்பேன்னு சொன்ன ஆளுக்கு இது எல்லாம் கொஞ்சம் இல்ல ரொம்பவே மனச பாதித்திருக்கும் இல்ல... அப்போ அவர் இப்படித்தான் பண்ணுவார்" வைஷ்ணவிக்கு கையை பிசைவது தவிர வேறு வழியில்லை
"அப்போ நீங்க ரெண்டு பேரும் லவ்வர் இல்லையா
"அய்ய நமக்கும் காதலுக்கும் காத தூரம் , நானே பேசாம லில்விங்ல வாழலாமான்னு ஆளை தேடிட்டு இருக்கேன்
"ஏது ??
"ம்ம் காதல்னு சொல்லி கல்யாணம்னு சங்கிலி உள்ள மாட்டி கஷ்டப்படுறதுக்கு; பேசாம பிடிச்ச வரை வாழ்ந்தோமா பிடிக்லைன்னா விட்டுடுட்டு போனோமான்னு போகலாம்னு ஒரு குட்டி யோசனை இருக்கு "
"என்ன அதிரா இப்படி பேசுற "
"யாரையும் ஏமாத்த வேண்டாம் யாராலும் ஏமாத்தபடவும் வேணடாம்ல காதல் எல்லாம் எங்க இருக்கு சொல்லுங்க, யாராவது ஒருத்தர் பத்தி முழுசா புரிஞ்சுக்க முடியுமா? முதல்ல ஒருத்தரை பற்றி நூறு சதவீதம் புரிஞ்சுகிட்டா தான் அவங்களுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுன்னு அதுக்கேத்த மாதிரி சுமூகமாக வாழ முடியும் .. காதல் கல்யாணம்ன்னு சொல்லி இவங்களோட விருப்பத்தை அவங்க மேல திணிக்கிறது, அவங்க தன்னுடைய ஆற்றாமை கோபத்தை இவங்க மேல திணிக்கிறதுன்னு வாழ்றதுக்கு பேரு வாழ்க்கையா சலிச்சு போகாது... வாழ்க்கைன்னா என்ஜாய் பண்ணி வாழணும் ஒவ்வொரு நிமிஷமும் இதுதாண்டா வாழ்க்கைன்னு புல்லரிக்கணும் வேற வழியே இல்லன்னு வாழறதுக்கு எதுக்கு இந்த தாலி காதல் எல்லாம் என்ன பொறுத்தவரை அவரவர் தேவைக்கு ஏத்தபடி வாழ ஒரு பெயர் காதல்னு சொல்லி ஏமாத்திக்கிறாங்க , எனக்கு இந்த காதல்ல உடன்பாடில்லை, அதான் இந்த முடிவு எதாவது இளிச்சவாயன் சிக்கினா கமிட் ஆகணும் "
"கிறுக்கு மாதிரி பேசுற ,உன் அப்பா தோலை உறிச்சிருவார்..
"அவரே நாலு சின்ன வீடு வச்சிருக்கார் என்ன கேள்வி கேட்க அவருக்கு தகுதியே இல்ல, கேட்டாலும் நான் கண்டுக்க மாட்டேன்
"நீ பைத்தியமா இல்ல மேதாவியா அதிரா"
"என்ன கருமமோ ஆனா எனக்கு யாரு கூடையும் செட் ஆகாது என்ன யாரும் புரிஞ்சிக்கவும் முடியாது என்ன வச்சி யாரும் கட்டி மேய்க்கவும் முடியாது அப்படி ஒரு மேக் நான் "என்று அதிரா தோளை உலுக்கிட
"ஹாஹா ... உன்கிட்ட பேசினா நேரம் போறதே தெரில "
"என்கிட்ட பிறகு பேசுங்க உங்க புருசன் சாரை என்ன பண்ண போறீங்க அத்து விட போறீங்களா இல்ல வாழ போறீங்களா?
"ப்ச் தெரில டைவர்ஸ் பண்ணலாம்னு யோசிக்கிறேன்
"பண்ணிட்டு பெரிய அத்தானை மறுபடியும் கல்யாணம் பண்ண போறீங்களா??
"சீசீசீ அசிங்கமா பேசாத இவரும் வேண்டாம் அவரும் வேண்டாம் தனியா வாழ போறேன்
"ம்ம் கிரேட் ஐடியா ஆனா ரித்விக் அத்தான் என்ன பாவம் செஞ்சாரு எதுக்கு அவருக்கு இந்த தண்டனை ..
அது அவள் தடுமாற
"வெட்டிக்க ஆயிரம் தடவை யோசிக்கிற நீங்க, ஏன் அவர கூட வாழ ஒரு தடவை கூட யோசிக்கல ..இந்த தாலி ஏறும் முன்ன ஆயிரம் தடவை யோசிக்கணும் ஏறின பிறகு யோசிக்க கூடாது "
"அது எப்படி அவரோட ?
"அவர் கட்டின தாலியை போட்டுக்க முடியுது ,அவர் ரூம்ல இருக்க முடியுது அவன் மனைவியா இந்த வீட்டுல சுத்த முடியுது அவர் மனைவி அந்தஸ்த்துல அவருக்கானது செய்ய முடியுது, வாழ மட்டும் ஏன் அக்கா முடியாது ... வைசு யோசனையாக தலையை தடவ ....
டிரை பண்ணுங்க முடியலைன்னா டைவர்ஸ் பண்ணுங்க..
ம்ம்
ஓகே அக்கா குட் நைட் ,
ஓகேங்க மேடம் என்று வைசு சிரித்து விட்டு தன் அறை நோக்கி போக
இருட்டில் சிகரெட்டை இழுத்தபடி மாடி திண்டில் உட்கார்ந்து இருவரும் நகர்ந்து போவதை அயோக்கியா பார்த்து கொண்டு நின்றான் ...
அப்பாடா! எப்படியோ ஒருத்தரை குழப்பி விட்டாச்சு நாரதி கழகம் நன்மையில முடியணும்....என்று அதிரா குதித்து குதித்து தன் அறை நோக்கி வர
அப்படியே எனக்கும் ரெண்டு அட்வைஸ் பண்ணிட்டு போங்க மேடம் என்ற அயோக்கியா குரல் இருட்டில் கேட்டு அவள் திரும்பி பார்த்து
"அட்வைஸ் ஸ்டாக் இல்லை ... இருந்தாலும் உங்களுக்கு பண்ண மாட்டேன் அத்தான்...
"நீ அவளுக்கு கொடுத்த அட்வைஸ்ல நான் திருந்திட்டேன் தெரியுமா??" ஆழ புகையை ஊதி அவள் முகத்தில் முட்டை விட அதிரா மூக்கை சுருக்கிபடி
"தேங்க்ஸ் , என் அட்வைஸ் கேட்டு திருந்தினதுக்கு...
"ம்ம் லவ்வுன்னு சொல்லி உன்ன கரெக்ட் ப்ணணி மேட்டர் பண்ணலாம்னு நினைச்சேன் .. பட் அவ்வளவு ரிஸ்க் தேவையில்லை போல , ஓபன் டாக் தான உனக்கு பிடிக்கும்
ஹான் ஆஆஆ அவள் பகீர் பார்வை அவனை பார்த்து வைக்க , அயோக்கியா சட்டென்று அவள் இடையை வளைத்து தூக்கி தன் மார்போடு முட்ட விட்டவன்
உன் மேல ரொம்ப நாளா லஸ்ட் இருக்கு , எப்போடா இன்னட்டை கடிச்சு திங்கன்னு தான் இந்த பழுப்பு பார்வை , மேட்டர் பண்ணலாமா....
"என்னது?
"ஐ லஸ்ட் யூ??" என்றவன் அவள் கண்ணை ஆழ பார்க்க பழுப்பு நிறம் தகதகவென மின்ன ..
"நாசமா போறவனே!!!அப்போ இது காம பார்வையா?? என்று அதிரா பதறி அவனை தள்ளிவிட்டுவிட்டு ஓட போக அவள் முந்தானை பிடித்து இழுத்த அயோக்கியா
"அந்த இளிச்சவாயன் ஆப்சர்சூனிட்டி எனக்கு தந்தா சிறப்பா மேட்டர் பண்ணுவேன் கன்சிடர் பண்ணு...
"அத்தான் என்ன பேசுறீங்க , உங்க கிட்ட நான் இதை எதிர்பார்க்கல..
" எதிர்பார்க்கலைன்னா இனி எதிர்பார்.. நீதான சொன்ன எதையும் ஓபனா பேசணும்னு அதான் ரொம்ப ஓபனா பேசுறேன்... உன் மேல எனக்கு செம போதை, இந்த கருப்பு உதட்டை பாக்கும்போது எப்படா அதை கடிச்சு தின்போம்னு மூட் ஆகும் ,. பல நாளா நோட்டம் விட்டுகிட்டு இருக்கேன்.... நீ சொன்ன ட்ரெண்டி கருத்து எல்லாம் என் நெஞ்சில் அப்படியே பச்சக்குன்னு ஒட்டிக்கிச்சு, அதான் ஓபனா கேட்டுட்டேன்....இனிமே நாம ரெண்டு பேரும் க்ரைம் பார்ட்னர் மட்டும் இல்ல, லஸ்ட் பார்ட்னரும் கூட.இன்னையிலிருந்து ஆரம்பிப்போமா, இல்ல நாளைல இருந்து ஆரம்பிப்போமா?
அதற்கு மேலும் அவள் அங்கே நிற்பாளா காற்று போல பறந்து போய் தன் அறைக்குள் ஒளிந்து கொண்டாள் ...
"ஐ லஸ்ட் யூ .. உன் மனசு வேண்டாம், உன் அன்பு வேண்டாம்.. உன் அக்கறை வேண்டாம், உன் கரிசனை வேண்டாம், நோ கமிட்மெண்ட், நோ லவ் ஓர்லி லஸ்ட் ல்ஸ்ட் மட்டும் போதும்டி, நீ தர்ற சுகம் போதும், நீ தர்ற காமம் மட்டும் போதும், அதுதான் எனக்கு தேவை சீக்கிரம் ஓகே சொல்லு உன்கூட படுக்க போற நாளுக்காக காத்திருக்கேன் என்றவன் கரகரப்பான காமக்குரல் கதவு வழியாக அவள் காதை அடைய காதை பொத்தி கொண்டாள்...
அது என்னவோ இந்த காதல் மட்டும் காதலிக்கத் தெரியாதவர்கள் கையில் மாட்டிக் கொண்டுதான் தினந்தினம் செத்து தொலைகிறது...