வேஷம் போடும் வேடா 10

வேடா 10

வேஷம் போடும் வேடா 10

10 வேஷம் போடும் வேடா!!

உண்மையாவே என்கிட்ட அப்ரோச் பண்றாரா என்ன, இல்லையே அவர் அந்த மாதிரி இல்லையே, ஒரு நாளும் என்னை அப்படி தப்பா பார்த்தது மாதிரி எனக்கு தோணலையே...அதிரா படுக்கையில் காலை ஆட்டி கொண்டு ரீவைண்ட் பண்ணி பின்னால் போனாள்... 

சில நாட்களுக்கு முன்பு அயோக்கியா அவள் பின்னழகை மெலிதாக தடவி விட்டுவிட்டு

"சீட் கொஞ்சம் பெருசுதான் "என்று தன் கார் சீட்டை ஒரு தட்டு தட்டி விட்டு போன ஞாபகம்...

"தெரியாம கைபட்டிருக்குன்னு நினைச்சேன் தெரிஞ்சே தான் பட்டு இருக்குமோ ... இரண்டு நாள் முன்னால் பாஸ்போர்ட்டை உள்ளாடை குவியலில் இருந்து எடுக்கும்போது ஒற்றை துணியை முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்துவிட்டு

"எப்படி பத்துது" என்று அடங்கா அவள் அழகை பார்த்தபடி உதட்டை அசைத்தது இப்போது கண் முன்னால் வந்தது...

நேற்று இரவு அவன் கால் மாட்டில் உட்கார்ந்து இருக்கும் போது அடிக்கடி அவன் கால் அவள் இடையை வருடி வருடி போனது ... தெரியாம படுது போல என அவள் நகர்ந்து அமர்ந்தது நியாபகம் வந்தது ... 

"அய்யய்யோ!! அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ற ஞாபகத்துல, என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு கவனிக்காம விட்டுட்டனோ? ச்சை இவரா இப்படி ...அதிரா, கொஞ்ச நேரம் கன்னத்தில் கை வைத்து பீலிங் மோடில் இருந்தவள் கண் நித்திரைக்கு சொக்க

"ப்ச், பாத்துக்கலாம் அட்வைஸ் பண்ணி அட்வைஸ் பண்ணியே ஊரையே சரி பண்ற எனக்கு , இந்த ஒத்த மனுசன சரி பண்ண முடியாதா என்ன? உட்கார வச்சு ஒரு மணி நேரம் கிளாஸ் எடுத்தா மனுஷன் உன் சங்காத்தமே வேண்டாம்னு ஓட போறான் ... அதுக்காக உட்கார்ந்து தூக்கத்தை கெடுப்பானா என்ன ? தூங்கிடுவோம் நமக்கு தூக்கம் தான் முக்கியம் , எதா இருந்தாலும் நாளைக்கு பாத்துக்கலாம் என்று அதிரா இழுத்து மூடி தூங்கியாச்சு... 

கவலையை வாழ்க்கை பாரத்தை தலையில் தூக்கி சுமக்கும் பெண் அவள் இல்லை , என்ன முன் ஜாக்கிரதையாக இருந்தாலும் நமக்கு நடக்கிறது நடந்தே தீரும் கூலா வாழ் ... வந்தா மலை , போனா கூந்தல் என்று வாழும் அவளை எதுவும் எளிதில் அசைத்து விட முடியாது.... 

இரவு முழுவதும் ரித்விக் அறையில் புலம்பிக் கொண்டு போதையில் கிடக்க அந்த அறை பக்கமே போக பயந்து வைஷ்ணவி தோட்டத்து பெஞ்சிலையே சுருண்டு படுத்து கொண்டாள் ..

ஐந்து வருடம் காதலித்த அயோக்கியா பற்றியே அவளுக்கு ஒன்றும் தெரியாது ரித்விக் பற்றி அறிந்து கொண்டு தான் அடுத்து என்ன என்று முடிவுக்கு போக வேண்டும் .. 

"என்னால பாதிக்கப்பட்டது அவர்தான்,அத்தனை வருத்தம் கோபம் இருந்தாலும் என்ன யாரையும் பேச விடாம கூட்டிட்டு போனாரே, அந்த குணம் யாருக்கு வரும் பட் ரூமுக்குள்ள நடந்துக்கிட்டது டூ மச்.. ம்ம் அவரும் என்ன தான் செய்வார் ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிட்டு ஏமாந்த கதையாகி போச்சு.. கடைசி வரை அயோக்கியா தான் அதுதான் சொல்ல கூடாது , பாவம் சுக்குநூறா உடைஞ்சு போவார்" என யோசனையில் இருந்தாள் அப்படியே தூங்கியும் போனாள்

காலையில் சுள் என வெயில் அடிக்க அவள் கையை யாரோ சுரண்டுவது போல இருக்கவும் , பதறி எழும்பி பார்க்க.. அவள் முன்னால் தலை முடி பறந்த சட்டை கசங்கி கண்கள் சிவந்த நிலையில் ரித்விக் தான் நின்று கொண்டிருந்தான் ..

"என்ன வேணும்??" என்று அவள் பயந்து அவனை பார்க்க ...

"சாரிங்க ,ராத்திரி தண்ணியை போட்டுட்டு வந்து சத்தம் இல்லாம படுத்தலாம்னுதான் நினைச்சேன் ஆனா மொத மொதல்ல தண்ணி அடிச்சேனா என்ன பண்றேன்னு தெரியாம உங்கள கண்டபடி பேசிட்டேன் சத்தியமா சாரிங்க "வருந்தி கூறினான் ... 

"பரவால்ல இருக்கட்டும், இனிமே குடிக்காதீங்க

"சத்தியமா இனிமே குடிக்க மாட்டேன் , நேத்து பணம் காணல அதோட கொஞ்சம் டென்ஷன் எல்லாம் சேர்ந்து என்ன பண்ணன்னு தெரியாம குடிச்சிட்டேன்.... இனி அந்த தப்பு நடக்காதுங்க என் மேல வருத்தம் எதுவும் இல்லையே

"வருத்தம் தான் தண்ணி போட்டா மனசுல உள்ளதெல்லாம் வரும்னு சொல்லுவாங்க அப்ப நேத்து பேசுனது எல்லாம் உண்மைதானோன்னு தோண வச்சுட்டீங்க, அது உண்மையா இல்ல இப்போ பாவமா நிக்கிறீங்களே இது உண்மையான்னு குழம்ப வச்சுட்டீங்க...

"இல்லைங்க இதுதான் உண்மை ஏதோ கோபத்துல அப்படி என்று தலையை சொரிய ...

"சரி விடுங்க.... 

"கொஞ்சம் பேசுவோமா ??என்று ரித்விக் அவள் அருகே தள்ளி அமர 

"என்ன? 

"சும்மா ரித்விக்குன்னே சொல்லுங்க 

"எதுக்குங்க வம்பு இப்ப அப்படி சொல்வீங்க உள்ள குவாட்டர் போன பிறகு மாமா சொல்லுன்னு அடிப்பீங்க தேவையா ??"

"அய்யோ அடிச்சிட்டேனாங்க 

"இல்லை அடிச்சிட கூடாதுல்ல என்ன விஷயம்...

"உங்க லவ்வர் கிட்ட ஏன் பேசி பார்க்க கூடாது 

"வாட் 

"ம்ம் பேசாம அவருக்கு ஓகேன்னா நான் உங்களுக்கு டைவர்ஸ் தந்து அனுப்பிடுறேங்க

"ப்ச் இப்போதைக்கு அந்த ஐடியா இல்லைங்க வேற எதாவது பேசுங்க... அவன் குனிந்து உட்கார்ந்து இருக்க ... 

"பிசினஸ் பண்ணணணும் பேசிட்டு இருந்தீங்களே  

 ம்ம் அதான் காசை தொலைச்சுட்டேனே  

"ஏன் கோடி இன்வெஸ் பண்ணி தான் பிசினஸ்" பண்ணணுமா ? லட்சத்துல பண்ணினா ஆகாதா அவளை ரித்விக் திரும்பி பார்க்க 

"சொந்தமா செருப்பு தைக்கிறது கூட கெளரவம் தான் ரித்விக் ,அண்ணன் போல அப்பா போலன்னு யோசிக்காம உங்களுக்குன்னு தனி அடையாளம் உருவாக்க டிரை பண்ணலாமே ரித்விக் 

"புரியல 

"எடுத்ததும் பறக்க நினைக்காம மெது மெதுவாக உயர பறக்கலாமே... முதல்ல எதாவது வேலை தேடுங்க சொந்த கால்ல நின்ன அப்பறம் தானா தைரியம் வரும்னு நினைக்கிறேன் .... 

"சரிங்க மறுபடியும் சாரிங்க நேத்து நடந்ததுக்கு 

"ம்ம் சாரி அக்சப்ட்டட் திரும்ப குடிக்க கூடாது ப்ராமிஸ் "என்று வைசு உள்ளங்கையை நீட்ட , அதில் தயங்கி ரித்விக் கையை வைக்க ... காலை நேர ஓட்டத்தை முடித்து விட்டு உள்ளே வந்த அயோக்கியா வியர்வையை துடைத்து கொண்டே தூரத்தில் இருந்து புருஷனும் மனைவியும் உட்கார்ந்து பேசுவதை கண்கள் சிவக்க நெற்றி சுருக்கி பார்த்து கொண்டே உள்ளே போனான் ... 

"என்னடி அதிரா சூடா பூரி இருந்தா பத்து பூரி கூட தின்ப இன்னிக்கி ரெண்டு பூரியிலையே முக்கிக்கிட்டு இருக்க .... சாப்பாட்டு மேஜை மீது ஒரு பக்க இருக்கையில் ஓடி வந்து அதிரா அமர்ந்த பிறகு தான் பார்த்தாள் எதிரே அயோக்கியா லேப்டாப்பை தட்டி கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தான் 

"அச்சச்சோ!! ஆந்த கண்ணன், இவருக்கு பயந்து சாப்பிடாம போகணுமா?.. சோறு தூக்கம் இது ரெண்டையும் யாருக்காகவும் இழக்க கூடாது அவனை கண்டுக்காம உட்கார்ந்து சாப்பிட்டுட்டு ஓடிரலாம்

"அவளுக்கு எதிர் இருக்கையில் உட்கார்ந்து பூரியை ஒரு கண்ணும் லேப்டாப்பை ஒரு கண்ணுமாக பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அயோக்கியா "

"நான்,வந்ததை கவனிக்கலையோ , இல்லையே நான் பொடறிக்கு பின்னாடி வந்து நின்னா கூட கரெக்டா கண்டுபிடிச்சுடுவாரே "

"அது எப்படி அத்தான் என்னை கண்டுபிடிக்கிறீங்க என்று சில நாள் முன் அவனிடம் கேட்க

" தவளை இருக்கு பார் தவளை, 

"ம்ம் ஆர்வமாக அவன் வாயை பார்த்தாள்... 

"அது எங்க இருந்தாலும் தானா தன்னை காட்டி கொடுத்துடும் அப்படிதான் நீ என்றான் ... 

ஏன் கண்டுக்க மாட்டைக்கிறார், நேத்து ராத்திரி லஸ்ட் அது இதுன்னு சொன்னார் இப்போ கண்டுக்காம பூரியே கதின்னு இருக்கார் 

"ம்க்கும் ம்க்கும் என்று அதிரா தொண்டையை செரும அவன் கவனம் லேப்டாப்பில் தான் .. உதட்டை பிதுக்கி கொண்டவளுக்குதான் பூரி உள்ளே போக மறுத்தது 

"என்னவா இருக்கும் திருந்திட்டாரா? வாய்ப்பு இல்லையே  

"அயோக்கியா காயத்திரி குரல் வந்தது 

"சொல்லுங்க சித்தி, கிச்சன் உள்ளே தடபுடல் வேலையில் நின்ற காயத்திரி கால்மூட்டை தேய்த்து கொண்டே அவன் அருகே வந்தார் 

"நீங்க ஏன் சித்தி இந்த வயசுலயும் மாஞ்சு மாஞ்சு வேலையை செஞ்சுட்டு இருக்கீங்க 

"என்ன செய்ய , ஒரே முட்டு வலியாதான் இருக்குய்யா  

"வேலைக்கு ஆட்கள் போடவா 

"ப்ச் நாம பக்குவமா செய்ற மாதிரி வேற ஆள் செய்யுமா சொல் .. 

"அதுவும் சரிதான்.. 

"இந்த ஆந்தக்கண்ணன் அக்கறை ரொம்ப சக்கரையா இருக்கே , பழம் போல பேசுறானய்யா, ஏதோ உள் குத்து இருக்கே அதே பழிவாங்கும் சிவக்கும் கண்கள் என்னவா இருக்கும்...". என்று அதிரா யோசித்து முடிக்க வில்லை அயோக்கியா பார்வை மாடியை தீண்டியது 

இரவு சரியாக தூங்காது தூக்கம் கண்ணை சொக்க வைஷ்ணவி அறையில் குட்டி தூக்கம் தூங்கி அப்போது தான் நைட்டியில் கொட்டாவி வி்ட்டு கொண்டே இறங்கி வந்தாள் அயோக்கியா ஓரக்கண்ணால் வைசுவை ஒரு பார்வை பார்த்து கொண்டே காயத்திரியிடம் கொழுத்தி போட 

"ஆஹா , இன்னைக்கு கோட்டா ஆரம்பிச்சிட்டான்யா, சீரியல் ஏகப்பட்டது பார்ப்பாரோ குடும்பத்தை எப்படி பிரிச்சு விடலாம்னு இவர் கிட்டத்தான் கத்துக்கணும்" வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அதிரா இவன் செயலை ஆ என வாயை பிளந்து பார்த்தாள் ..

"அத்தை அவருக்கு பூரி இருக்கா? என்று வைசு தட்டில் பூரியை எடுக்க 

"இங்க ஒன்னும் பொருட்காட்சி நடக்கல வைசு, வாறதும் போறதும் என்ன நினைச்சிட்டு இருக்க, உன் புருசனுக்கு பூரி வேணும்னா நீ போட்டு கொடு கால் கடுக்க அத்தனை பேருக்கும் செய்ய நான் என்ன வேலைக்காரியா, வெட்டி பயலுக்கு பூரி ஒரு கேடு" என்று காயத்திரி பொறிந்து தள்ள கையில் எடுத்த தட்டை அப்படியே வைசு வைத்து விட்டு கண்ணீரை துடைத்து கொண்டு போய்விட.... அயோக்கியா விசில் அடித்தபடி நாலு பூரியை தின்று ஏப்பம் விட 

அயோக்கியா உனக்கு இன்னும் ரெண்டு பூரி வைக்கவா?

"பூரி வேண்டாம் சித்தி போதும் , டார்க் சாக்லேட் பிரிட்ஜ் உள்ள வாங்கி வச்சேன் அது இருந்தா எடுத்துட்டு வாங்க என்றதும் காயத்ரி டார்க் சாக்லேட்டை எடுத்துக் கொண்டு வந்து அவன் தட்டில் வைக்க ..இத்தனை நேரம் அதிராவை சட்டை செய்யாத அயோக்கியா சாக்லேட்டை கையில் வைத்தபடி எதிரே இருந்த அவளை ஒரு பார்வை தான் பார்த்தான் 

"ஆஹா இது அதுல்ல , பழுப்பு நிறம் அடித்த அவன், கண்கள் அவளை ஊடுருவி பார்க்க, தன் கையில் இருந்த இன்னட்டை அவன் நாவு கோலம் போட்டு ருசிக்க அவன் பார்வை போன கொண்டை ஊசி வளைவு அறிந்து சட்டென தன் தாவணியை அதிரா சரியாக போட்டு கொண்டாள், அவனோ ரசித்து ரசித்து அதை ஒன்று விடாது தின்று விட்டு எழும்பி போக ..

"ம்ஹூம் இவர் கிட்ட தனியா மாட்டினேன் இந்த சாக்லேட் நிலைமை தான் எனக்கு , முடிவா தெளிவா தில்லா அதெல்லாம் முடியாது அத்தான் இப்படி நினைப்போட என்கிட்ட பேசுனீங்க , நடக்கிறதே வேறன்னு ரெண்டு மிரட்டு மிரட்டிற வேண்டியதுதான் என்று நினைத்தவள்  

"அத்தான் உங்ககிட்ட பேசணும் என்றதும் அயோக்கியா தலையை மட்டும் திருப்பி என்ன என்று கண்ணை ஏற்றி இறக்கிட

"இல்லை நேத்து சொன்னீங்கல்ல அது உண்மையா ? "சண்டாள சிறுக்கி அவன் சும்மா இருந்தாலும் இவ சும்மா இருக்க மாட்டா போல, அவன் குறுக்க மறுக்க ஓடி அவ கற்பை அவளே கூவி கூவி அவன்கிட்ட பாதி விலைக்கு வித்திடுவா போல ... 

எது ? 

"அதான் ஐ லஸ்ட் யூ 

 "ம்ம் உண்மைதான் 

"அதை பத்தி கொஞ்சம் பேசணும்... 

"நீ கூப்பிடுற நேரம் எல்லாம் பேச முடியாது பேசணும்னா தேயிலை எஸ்டேட் வா 

"அங்கேயா ? "

"முடியாதுன்னா இடத்தைவிட்டு தள்ளி நில்லு இதை குப்பையில போட்டிரு என்று சாக்லேட் கவரை அவள் கையில் திணித்து விட்டு...

எப்படியும் வந்து அட்வைஸ் தான பண்ண போற, ஒரு நாலு பக்க எஸ்எ ரெடி பண்ணிட்டு வா இப்ப வழியை மறைக்காத என்று அவள் இடையில் கை கொடுத்து நகட்டி விட்டவன் ... 

சைஸ் மாத்தி மாத்தி போட்டுடுட்டு அலையாத பாதி வெளிய கிடக்கு என்று சைடாக தெரிந்த திமிர் அழகை வருடி விட்டுவிட்டு பழுப்பு கண்ணன் போக .. அவன் தொட்ட இடம் சிலிர்த்து அடங்க நார்மல் ஆக பல நிமிடம் எடுத்தது .... 

வேறு யாராவது இதை பண்ணி இருந்தா உசுருக்கு சேதாரம் ஆக்கி இருப்பேன் பண்ணினது இவரா போயிட்டார் பாவம் தாய் இல்லா பிள்ளைன்னு பாவம் பார்த்தா ஓவரா போறானே ஆந்தைக்கண்ணன்.... 

இதுக்கு ஒரு முடிவு கட்டியே தீரணும் ? என்ன பாயிண்ட் எல்லாம் பேசி அவர் பண்றது பேசுறது தப்புன்னு புரிய வைக்க ..நமக்கா பேச்சுக்கு பஞ்சம் 

எதையாவது பேசி அவருக்கு நல்லது சொல்லி திருத்துவோம் என்று பேப்பர் பேனாவை எடுத்து கொண்டு உட்கார்ந்து அட்வைஸுக்கு நோட்ஸ் எடுக்க ஆரம்பித்து விட்டாள் ... 

அயோக்கியா திறமையே அவரவர் விரலை வைத்தே கண்ணை நோண்டி சூப் போடுவது தான் என தெரிந்தும் போய் கிட்னியை கீரைக்கட்டு போல கொடுக்கும் இவள் மூளையை மியூசியத்தில் வைத்தே தீர வேண்டும்..