வேஷம் போடும் வேடா 3

Veda3

வேஷம் போடும் வேடா 3

3 வேஷம் போடும் வேடா !!

ரித்விக் வெட வெடத்துப் போய் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தன் முதல் இரவு படுக்கை மீது பொத்தென்று இயலாமையில் அமர்ந்தான்..

பெற்றது தாயாக இருக்கலாம் வளர்த்தது, இன்றுவரை பாசத்தை கொட்டிக் கொடுத்து தோளில் கை போட்டு தன்னை ஆதரவாக அணைத்து தடுமாறும் இடங்களில் எல்லாம் தூக்கி விட்ட தன் அண்ணன் மடியில் படுத்து விம்மி வெடிக்க வேண்டும் போல் இருந்தது ..தனக்கு மனைவியாக வந்திருக்கும் பெண் இன்னொருவனை காதலித்திருக்கிறாள் என்ற உண்மை கொஞ்சம் அவனை அசைக்கத்தான் செய்து விட்டது 

"தப்பு பண்ணிட்டேனோ, தாலி கட்டுறதுக்கு முன்னாடியே அவங்க கிட்ட நான் விசாரிச்சு இருக்கணுமோ, நான் தான் புத்தி கெட்ட தனமா எதையும் யோசிக்கல அவங்களாவது என்கிட்ட சோ அன்ட் சோன்னு சொல்லி இருந்தா , இந்த கல்யாணத்தை நிப்பாட்டி இருப்பனே, அப்படி என்ன அவங்களுக்கு கட்டாயமான சூழ்நிலையா இருக்கும், ப்ச் எதுவும் தெரியாம தாலிய கட்டி தொலைச்சுட்டேனே, இந்த உண்மை அண்ணனுக்கு தெரிஞ்சா கட்டிக்க போற பொண்ண பத்தி எதுவுமே தெரியாம எப்படிடா தாலி கட்டினேன்னு சட்டையை புடிச்சு கேள்வி கேட்பாரே, நான் தாலி கட்டுனது சரியா தப்பா ஒன்னும் புரியலையே..

வெளிநாட்டில் போய் எம்பிஏ படித்துவிட்டு வந்திருந்தாலும் அண்ணன் நிழல் பார்த்தே நடக்கும் நல்லவன்... அவன் வளர்ப்பு , அண்ணனுக்கு இது பிடிக்கும் இது பிடிக்காது என்று பார்த்து பார்த்து செய்வதே இவனைப் போல ஒரு தம்பி யாருக்கும் கிடைத்து விடாது ... மாற்றான் வயிற்றுப் பிள்ளை தான், ஒரு தகப்பன் இரண்டு தாய் என்ற பேதம் இவனுக்கும் இருந்ததில்லை, இவன் தங்கை ரிதன்யாவுக்கும் இருந்ததில்லை மூத்த அண்ணன் அயோக்கியாதான் என்று அவன் சொல்பேச்சு கேட்டு தான் இருவரும் நடப்பார்கள். அப்படி ஒரு பிரியம் என்பதை விட அயோக்கியா மீது அப்படி ஒரு மரியாதை கலந்த அன்பு இருவருக்கும் உண்டு..

பேசாம அண்ணன் கிட்ட போய் இதை பத்தி பேசுவோமா, என்ன பேசறது தாலி கட்டுன பிறகு அவங்க தனி பட்ட விஷயத்தை பற்றி அண்ணன்கிட்ட பேசுறது சரியா இருக்குமா என்று யோசனை மத்தியில் படுக்கையில் அப்படியே விழுந்தான் 

உண்மைகள் தெரியாமல் இருந்திருந்தால் ஒரு வேளை இந்த மலர்மெத்தை அவனுக்கு பஞ்சணையாக இருந்திருக்குமோ என்னவோ? ஆனால், இப்போது குத்தும் மலர்கள் அவன் இருதயத்தையும் குத்தி போனது .. 

வெளிநாட்டு படிப்பு , பணக்கார வளர்ப்பு என்றாலும் அவன் தமிழ் கலாச்சாரத்தில் ஊறிப் போனவன் வரும் மனைவியை நேசிக்க வேண்டும் என்று காதலெனும் தேசத்திற்குள் காலடி கூட எடுத்து வைக்காத ஒருவனுக்கு உண்மையாக இது கொஞ்சம் வலியை கொடுக்கத்தான் செய்தது ...

"பாரும்மா வைஷ்ணவி, இது உன் வீடு மாதிரி இல்ல இது உன் வீடு தான் , இனிமே இந்த வீட்டோட மகாலட்சுமி நீ, என்னை நீ அத்தையா பார்த்தாலும் சரிதான் அம்மாவ பாத்தாலும் சரிதான் சண்டை போட்டுக்கலாம் அடிச்சுக்கலாம் புடிச்சுக்கலாம் ஆனா இந்த வீட்டோட மரியாதை, ஒரு நாளும் கெட்டுப் போகாத மாதிரி நடந்துக்கணும் சரியா? என்று காயத்ரி தன் மருமகள் கன்னத்தை வழித்து முத்தமிட்டார்

வைஷ்ணவி சரி என்ற தலை ஆட்ட ,

"இந்த வீட்டோட ஆணிவேர், சாமி எல்லாம் என் மூத்த மகன் அயோக்கியாதான் , உன் புருஷன் சொல் பேச்சு கேட்டு நடக்கிறியோ இல்லையோ, அவன் மனசு கோணாம இருக்கியோ இல்லையோ , ஆனா என் மூத்த மகன் அயோக்கியா மனசு வருத்தப்படுற மாதிரி பேசுறதோ செய்யுறதோ கூடாது அவன் வருத்தப்பட்டுடுட்டா, அப்புறம் நான் உயிரோட இருக்கிறதுல அர்த்தமே இல்ல புரியுதாம்மா "என்ற காயத்ரி பேச்சில் மட்டும் அன்பு இல்லை மனதில் இருந்து மூத்தவன் மீது வைத்திருந்த அன்பின் பிரதிபலிப்பாக அந்த வார்த்தைகள் வந்தது...

இந்த வீட்டிற்குள் ஆறுமுகத்தில் இரண்டாவது மனைவியாக வரும்போது அயோக்கியாவிற்கு இரண்டு வயது .. சின்ன பிள்ளையை பார்த்துக்க ஆள் இல்ல அதனால அவருக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணணும் என்று சொல்லி முதல் மனைவி அதிஸ்டலெட்சுமி சித்தப்பா மகள் காயத்திரியை கட்டி வைத்தார்கள்...  

ஆறுமுகன் ரெண்டாம் மனைவியாக உள்ளே வந்ததும் மிரண்டு முழித்த அயோக்கியாவைத்தான் முதல் சொந்தமாக காயத்ரி தூக்கிக்கொண்டது..என் அக்கா பையன் இனி என் பையன் என்று அரவணைக்க ஆசை கொள்ள

அம்மானு சொல்லுடா என்று எத்தனையோ முறை சொல்லிக் கொடுத்தாலும் இது தான் என் அம்மா நீங்க என்னோட சித்தி என்று தன் தாய் அதிர்ஷ்ட லட்சுமி ஃபோட்டோவைத்தான் மார்போடு அணைத்துக் கொண்டு அந்த பெரிய வீட்டின் ஒரு ஓரத்தில் குறுகி படுத்து கிடப்பான் அயோக்கியா..

அதை பார்க்கும் பொழுதெல்லாம் ஐயோ என்று அவனை பெறாத மனம் துடிக்கும், எவ்வளவோ அவனோடு அன்பை கொடுத்து ஒட்ட நினைத்தாலும் சற்று வெட்டித்தான் நிற்பான் ...ஆனால் , தன் பிள்ளைகளிடம் அப்படி இல்லை.. என் தம்பி , என் தங்கை என்று அன்பை கொட்டுவதில் அவனுக்கு நிகர் அவனே... 

பாவம் இதுகளுக்கு தெரியாது அல்லவா?? அவன் பச்சோந்தி மனிதன் என்று பகலில் ஒரு நிறமாகவும் இரவில் பல நிறமாகவும் நேரத்திற்கு நேரம் முகமூடி மாற்றுவதில் அவன் வல்லவன் என்பது இவர்கள் அறியாது போனார்களே, கூடவே இருந்து கருவறுக்கும் நல்லவன் வேஷத்தில் அலையும் கெட்டவன் அவன் ஆயிற்றே ..

"சரிங்க அத்தை , நீங்க சொல்ற மாதிரி அவருக்கு மரியாதை குறையாம பார்த்துக்கிறேன் 

"என்ன நீ அவருன்னு சொல்ற, உன் புருஷனுக்கு அண்ணன் , உனக்கு அத்தான் முறையாக்கும் அத்தான்னு சொல்லு

 "ம்ம் சரி அத்தை அத்தானுக்கு எந்த மனஸ்தாபமும் வராம பாத்துக்குறேன் என்றவளுக்கு வார்த்தைகள் திக்கி முக்கி வந்தது ..

"இந்தா வைசு, பால் சொம்பு நல்ல நேரம் முடிய போகுது சீக்கிரமா அறைக்குள்ள போயிடு..

"ம்ம 

"காலையில 6:00 மணிக்கே எழும்பி கோலம் எல்லாம் போடணும்னு சொல்ற நார்மல் அத்தை நான் கிடையாது உன் இஷ்டத்துக்கு இந்த வீட்ல நீ சுத்தலாம் எப்ப வேணாலும் எழும்பு என்ன வேணும்னாலும் சாப்பிடு சரியா... சரி என்ற தலை ஆட்டிவிட்டு பால் சொம்போடு தங்க கொலுசு ஜில் ஜில் என்ற சத்தம் கொடுக்க வைஷ்ணவி அந்த நிசப்தமான நடு இரவில் தன் கணவன் அறை நோக்கி நடக்க... அவள் நாசியில் ஏதோ பழகிய மணம் ... சட்டென்று பின்னால் திரும்ப , சிகரட்டை இழுத்துக் கொண்டு அங்கே அயோக்கியா சுவரில் கால் வைத்து சாய்ந்து நின்றபடி அவளை நக்கலாக பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்

அவன் திராட்சை நிற கண்கள் அவள் கையில் இருந்த பால் சொம்பை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்க்க அய்யோ சிறுகுடலும் பெருங்குடலும் சுருங்கி அதன் வேதனை நெஞ்சு வரை தாக்கியது போல் ஒரு வலி அவளுக்கு.. பால் சொம்போடு அவளுடைய கரங்களும் விரல்களும் கிடு கிடுவென்று ஆடியது..

"வெல், ஃபர்ஸ்ட் நைட்டுக்கு கிளம்பியாச்சு போல இருக்கு?? என்று அவன் பார்வை அவள் நெஞ்சில் ஊசலாடிய தன் தம்பி கட்டிய தாலியில் தஞ்சமாக .. வாயில் போட்டிருந்த சுவிங்கத்தை முட்டையிட்டபடி அவளை ஆயிரம் குற்றம் சாட்டியது அவன் பார்வையும் நக்கல் சிரிப்பும் ...அது தாங்காது வைஷ்ணவி தலையை குனிந்து கொள்ள ...

"சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ் தம்பி பொண்டாட்டி, உங்க பஸ்ட் நைட்டை தடுக்கறதுக்காக நான் வரல, என் தம்பியோட பொண்டாட்டி இந்த வீட்டோட மூத்த மருமக வாழ்க்கைச் செழிக்கட்டும்னு வாழ்த்துறதுக்காக வந்தேன்... ஆல் தி வெரி பெஸ்ட் ... உன்னோட முதலிரவுக்கு நல்ல வாழனும் சரியா?? என்று சிரித்துக் கொண்டே மீதி புகையை இழுத்து அவள் முகத்தில் விட்டபடி அயோக்கியா அவளைத் தாண்டி போக ....வைஷ்ணவி எச்சில் விழுங்கி போகும் அவனை பார்த்தாள்.. 

ஒன்று மட்டும் அவளுக்கு புரிந்தது கண்டிப்பாக இவன் கண்முன்னால் அவள் வாழ்க்கை செழிக்க போவது இல்லை என்று .... 

நடுங்கிய காலோடு தன் கணவன் இருக்கும் அறை கதவை தட்ட உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை தைரியத்தை வர வைத்துக்கொண்டு வைஷ்ணவி அறை கதவை திறக்க .. படுக்கையில் மல்லாக்க படுத்து கிடந்து ஏதோ யோசனையிவ் இருந்த கணவனை பார்த்து தொண்டையை செருமிட அமைதியே மிஞ்சியது ..

ரித்விக் என்ற அவள் குரலில் சட்டென்று கண்களை திறந்த ரித்விக் அவளை பார்த்ததும் பதறி எழும்பி படுக்கையின் ஓரத்தில் அமர்ந்தான்...

"என்ன வேணும் ??", யாரோ போல் அவனுடைய பேச்சு இருந்தது காலையில் எல்லாம் கைய புடிச்சுக்கோங்க விட்டுடாதீங்க என்ற ஐயர் சொன்னதற்கு இணங்க, அவள் கையை தன் கையோடு பிடித்து வைத்துக் கொண்டே இருந்த ரித்விக் இப்போது அவளை ஒரு மூன்றாம் மனுசி போலவே பார்த்துக் கொண்டிருந்தான்..

"இல்ல அத்தை தான் பால் சொம்பு கொடுத்து அனுப்புனாங்க 

"ஓஹோ வச்சிட்டு தூங்குங்க என்று அவன் பேச்சும் செய்கையும் அவளுக்கு நிம்மதியாகவும் இருந்தது அதே சமயம் அவனுடைய ஒட்டுதல் இல்லாத நடத்தை பயத்தையும் கொடுக்க..

ம்ம் கட்டில் ஓரத்தில் அவள் போய் படுக்க போக சட்டென்று ரித்விக் கட்டிலில் இருந்து எழும்பி கீழே பாயை விரித்து படுத்துக் கொண்டான்.. இவளுக்கு எப்படி அவனை நேருக்கு நேராக பார்த்து பழக என்று புரியவில்லை ஆனாலும் நெஞ்சை தடவிக் கொண்டவள் , அவன் புறமாக திரும்பி படுத்து கொண்டு...

"ரித்விக் 

ம்ம் 

"நான் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்" என்றதும் கண்ணை மூடி கிடந்தவன் தலையை மட்டும் திருப்பி வைஷ்ணவியை பார்த்தான் .... 

அவள் மீது காலை வரை இருந்த நல்லெண்ணம் இப்போது இல்லை எப்படி ஒருவனை காதலித்து விட்டு அவ்வளவு துணிந்து இன்னொருவனின் தாலியை வாங்கிக் கொண்டு பயமே இல்லாமல் முதலிரவு அறைக்குள் வந்து ஜம்பமாக இருப்பாள் இது ஏமாற்று வேலை இல்லையா? என்னையும் ஏமாற்றி ,காதலித்தவனையும் ஏமாற்றி இவ என்ன பெண் என்று நினைத்தவன் நினைப்பு தவறு என்று அவள் திறந்த இதழ்கள் சாட்சி கூறியது ..கண்ணை மூடிக்கொண்ட வைஷ்ணவி, கடகடவென்று தன் மனதில் கொட்டிக் கிடந்த பாரத்தை அவனிடம் இறக்கி வைத்து விட்டாள் 

"சாரி ரித்விக் அப்பா என்ன மிரட்டி தான் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சார் , அஞ்சு வருஷமா நான் ஒருத்தரை காதலிக்கிறேன் ம்ஹும் காதலிச்சேன் , என்னால அப்பாவோட பேச்ச தாண்ட முடியல பயம் இயலாமை தைரியம் இல்லாம, வேற வழி இல்லாம இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டேன் சாரி , சத்தியமா உங்களை ஏமாத்தணும்கிற எண்ணம் கிடையாது ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட் மை சிட்டுவேஷன், என்ன தப்பா நினைக்காதீங்க என்றவள் குரல் அழுகையோடு உடைந்து வந்தது 

பரவாயில்லை மறைத்து வாழ வேண்டும் என்று நினைக்காமல் மனதில் உள்ளதை மறைக்காமல் சொன்ன அவள் பேச்சு பிடிக்கத்தான் செய்தது.. 

யாரது?? என்றவன் குரலும் உடைந்து போய் தான் இருந்தது... எப்படி இந்த சிக்கலில் இருந்து இருவரும் வெளியே வந்து வாழ்க்கையை தொடங்க என்று புரியவில்லை... ஆனால் வெளிப்படையாக அவள் பேசியதும் பிடித்திருந்தது, அவனிடம் வெளிப்படையாக சொல்லிவிட்டோம் என்று அவளுக்கும் நிம்மதியாக இருந்தது ... அவன் யார் என்ற உண்மையை சொன்னால் கண்டிப்பாக இந்த வீட்டில் ஒரு பிரளயம் நடக்க வாய்ப்பு உண்டு.. என்பதைவிட அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் ஒரு பிளவு வந்து விடும் என்று அறிந்தவள்

"அது வேண்டாமே ரித்விக் ,கடந்து போன காலங்களை மறக்க ட்ரை பண்றேன், அதுவரை என்று அவள் இழுக்க ...

"கடந்து போனத மறக்க முடியுமான்னு பாருங்க, முடியலன்னா இந்த வாழ்க்கையை விட்டு எப்ப வேணாலும் வெளியே போக எனக்கு சம்மதம் என்ற அவனின் பேச்சு கேட்டு இவளுக்கு பிரமிப்பு தான் வந்தது....

" தாலி கட்டிட்டேன் அதனால் கூட வாழ்ந்தே ஆகணும் என்கிற கட்டாயம் எல்லாம் கிடையாது.. நானும் அப்படிப்பட்ட ஆள் கிடையாது, என் அண்ணன் என்ன அப்படி வளர்க்கவும் செய்யல, இந்த தாலிக்காக பல்ல கடிச்சுகிட்டு என் கூட வாழனுங்கற அவசியம் எல்லாம் இல்லை உங்களுடைய விருப்பம் என்னவோ அதுபடி செய்யுங்க , அதுக்கான சுதந்திரத்தை நான் கொடுக்கிறேன் குட் நைட் .. 

"ம்ம் குட் நைட் என்றவளுக்கு சற்று மன நிம்மதியாக இருந்தது.... 

இருவருக்கும் மனதில் ஏகப்பட்ட கேள்விகள் ஆனால் எதற்கும் விடை தான் இல்லை .... 

விடை எழுத வேண்டியவன் இன்னும் பல கேள்விகளை தான் தயாரித்து கொண்டு இருந்தான் .. இவர்கள் வாழ வேண்டும் என்று நினைத்தாலும் அவன் வாழ விட மாட்டான் என்ற சேதி தெரியாதோர் யோசனையில் கிடந்தனர்..