தீ தித்திக்கும் தீ 15 -21

தீ தித்திக்கும் தீ 15 -21

அத்தியாயம்-15

விஷ்ணு அதிர்ச்சியில் பார்த்திருந்தான், அவளோ இதெல்லாம் பெரிய விசயமேயில்லை என் வாழ்க்கையில் என்ற ரீதியில் நின்றிருக்க...

"சார்" என்று ஸ்ரீஜா அழைக்கவும் அதிர்ச்சி விலகி நிதானமானவன்...

“நீ எங்களை விட மூணு வயசு சின்னப் பொண்ணுதான இருபது இருபத்தியோரு வயசு இருக்கும் உனக்கு...அதுக்குள்ளவா?” விழிவிரித்துக் கேட்டவனுக்கு அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை அவன் இன்னும் தெரிந்திருக்கவில்லை என்பதைக் காட்டியது...

“என்ன கேட்கறீங்க நீங்க?, இருபது வயசுல கல்யாணம் ஆகி இருக்கக் கூடாதா என்ன?” என்றவள் தனது வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

விஷ்ணுவோ ‘நம்ம காதலை ஏத்துக்க வேண்டாம்ன்னு , என்னென்னமோ பொய் சொல்லுறா பாரு’ என்றே நினைத்தான்...

அப்படியே யோசனையோடு சென்று ஷன்மதியின் அருகில் அமர்ந்தவனைப் பார்த்தவள்...

“டேய் என்னடா அமைதியா வந்து உட்கார்ற...சீனியர் கூடப் போகலை இன்னைக்கு, எதோ முக்கியமான ஹியரிங்க் இருக்குனு சொன்ன...?”

“ம்ம் போகணும்... அதுக்கு முன்னாடி ஒன்னு சொல்லு... இந்தத் திருநெல்வேலிகாரி இருக்கால்ல...”

"யாருடா அது"

"நம்ம ஆபிஸ்ல இருக்க ஸ்ரீஜா"

" ஓஓ..ஆமாடா அதுக்கென்ன "

"அவ ஒரு விதவையாம், இப்போதான் சொன்னா அதான், சும்மா விளையாட்டுக்கு சொல்றாளோனு டவுட், ஆனா இதிலெல்லாமா ஒருத்தி விளையாடுவானும் தோணுது"

ஷன்மதி "என்ன உளறுர லூசு சின்னப்பிள்ளைடா..உன்கிட்ட எதாவது விளையிடிருப்பா" என்று அவனைச் சமாதானப்படுத்த.

“இல்லை அவ உண்மையைச் சொன்னமாதிரி தான் இருந்தது, நான் அவகிட்ட என்னோட லவ்வ சொன்னேன் அதுக்கு இப்படிப் பதில் சொல்றா...பிடிக்கலைனா பிடிக்கலைனு சொல்லலாம்ல, அதுக்கு இப்படியா சொல்லுவாங்க, கஷ்டமா இருக்கு...” 

“விஷ்ணுப்பையா என்ன சொல்ற?...உனக்கு அவளைப் பிடிச்சிருக்கா? ப்ரோபோஸே பண்ணிட்டியா...வாவ் உனக்கும் கடைசியில லவ் வந்திட்டு” என்றவள் அவனது கையைப்பிடித்து வாழ்த்துகள் சொல்லிக்கொண்டிருக்கும் சீனியர் வரவும் விஷ்ணு அவசரமாகக் கிளம்பி சென்றுவிட்டான்.

ஷன்மதிக்கும் மதியம் வரை நிறைய வேலைகள் இருந்ததால் அதைக் கவனித்துக்கொண்டிருந்தாள், ஆபிஸ் முழுவதும் அவளது கட்டுப்பாட்டில் இருப்பதால் கேஸ் விசயங்கள் எல்லாம் பார்த்துக்கொள்வாள்...

மதியம் சாப்பிட அமரும் போதுதான் அவளுக்கு ஸ்ரீஜாவின் நியாபகம் வந்தது...அவளை அழைத்து  

“விஷ்ணுவிடம் இப்படி எல்லாம் சொல்லாத, அவன் பாவம், உன்கிட்ட காதலைச் சொன்னா பிடிச்சிருக்கு, பிடிக்கலைனுச் சொல்லு, இப்படி அது இதுனு சொல்லிச் சுத்தல்ல விடாத, சில விஷயங்களை அவன் தாங்கிக்க மாட்டான்”

ஸ்ரீஜா " இதுல என்ன விளையாட்டுத்தனமிருக்கு...அது உண்மைதான், எனக்குக் கல்யாணமாகி கணவனும் இறந்துட்டாங்க” என்றதும்...சாப்பாட்டை வாயில் வைக்கமுடியாமல் கை அப்படியே அந்தரத்தில் இருந்தது ஷன்மதிக்கு...

‘என்ன சொல்றா இவ...??’என்று அதிர்ச்சி.

“அக்கா...என்ன அப்படியே சாப்பாட்டைக் கையில வச்சிட்டுருக்கீங்க... சாப்பிடுங்க” என்று எதார்த்தமாகச் சொன்ன ஸ்ரீ, தனது சாப்பாட்டைச் சாப்பிட ஆரம்பித்தாள்...

"ஸ்ரீ" என்று ஷன்மதி அழைக்கவும், 

"என்னக்கா" ஸ்ரீ அவளது முகத்தைப் பார்க்கவும்.

"சாரி எங்களுக்குத் தெரியாதும்மா...நீ விஷ்ணுக் கிட்ட விளையாட்டா சொன்னியோனு நினைச்சிட்டேன்"

“இதுல என்னக்கா இருக்கு உங்ககிட்ட இல்லை யாருக்கிட்டயும் சார் சொல்லிருக்கமாட்டாங்க...அவருக்கு எங்கமேல கொஞ்சம் பாசம் அதிகம்.. சீனியர் சாருக்கும் எங்களுக்கும் ஒரே ஊரு தான் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அப்பாவும் சீனியரும் பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படிச்சவங்க... அப்புறம் அவருடைய சொத்துக்கள் வயலெல்லாம் அப்பா தான் ஏற்பாடு பண்ணி வாங்கிக் கொடுத்தாங்க... ஊர்ல அப்பா மேல மட்டும் தான் சாருக்கு நம்பிக்கையுண்டு... அதனால தான் என்னோட விஷயம் கேள்விபட்டு என்னை இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க...”

" ஓ"

ஷன்மதிக்கு இதற்கு மேல் அவளின் வாழ்க்கையைக் கேட்கும் மனோதிடம் இல்லாததால்...வேறு ஒன்றும் பேசாமல் சாப்பிட்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

கணவனுடன் சண்டைப்போட்டு பிரிந்து இருப்பதே ஷன்மதிக்கு அவ்வளவு வருத்தம் சக்தியைப் பார்க்கணும் போல இருக்கின்றது...தினமும் ஏங்கித் தவிக்கிறாள்.

ஸ்ரீ எப்படிக் கணவனை இழந்து...எவ்வளவு கொடுமையான வாழ்க்கை என்று மனதிற்குள்ளாகவே மருகிக்கொண்டிருந்தாள்.

வீட்டிற்குச் செல்லும் பொழுது காரில் ஷன்மதி அமைதியாக வரவும் விஷ்ணு தான் கேட்டான்.. 

“என்ன ஷானு அத்தான் ஞாபகமா இருக்கியா, ஒண்ணு பண்ணுவோம் பேசாமல் டெல்லி போயிடுவோமா?”

ஷன்மதிக்கும் இது நல்ல ஐடியாகவாகத் தோணவும்... “சூப்பர் ஐடியா போவோமா இரண்டு பேரும் டெல்லிக்கு... உங்க அத்தானை ஒரு மிரட்டு மிரட்டுட்டிட்டு வருவோம்” என்று லேசாகச் சிரித்தவள்.

“அதில்லைடா ஸ்ரீஜாவின் விசயமா யோசிச்சுட்டு வந்தேன்... அவகிட்ட பேசினேன், அவ சொன்னது உண்மைதான்... பாவம்டா இந்தச் சின்ன வயசுலயே இப்படியான நிலை யாருக்கும் வரக்கூடாது” என்று பேசிக்கொணடிருக்க...கார் ஓரிடத்தில் நின்றிருந்தது...

இருவருக்குமே ஸ்ரீஜாவை நினைத்து மனதிற்குள் ஒரு இனம்புரியாத வேதனை...எந்தவிதமான பணக்கஷ்டமோ மனக்கஷ்டமோ இல்லாமல்...இப்போதுதான் கல்லூரி முடித்து வேலைக்குச் சேர்ந்திருக்கும் அவர்களுக்கு வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து வருபவர்களின் வலி வேதனைகள், வாழ்க்கையின் இழப்புகள் பற்றி எதுவும் தெரியாது, அதனால் தான் ஸ்ரீஜாவின் விசயம் கேள்விப்பட்டதும் இருவருக்கும் தாங்கிக்க முடியவில்லை... விஷ்ணு இப்போது சிறிது தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு காரை எடுத்தவன் ஷன்மதியை வீட்டில் விட்டு விட்டு சென்றவனின் மனம் முழுவதும் ஸ்ரீஜாவின் முகம் மட்டுமே...

வீட்டிற்குச் சென்ற விஷ்ணுவோ தனது அம்மாவின் மடியில் தலை சாய்த்துப் படுத்துக் கொண்டான்.

காவ்யா விஷ்ணுவின் தலையை வருடிக்கொடுத்தாள்...அவளுக்குத் தெரியும் எதாவது மனதின் பாரம் தாங்காது வந்து இப்படிப் படுத்துக்கொள்வான்.

ஷன்மதி சக்தி பிரிவின் போதும் இப்படித்தான் வந்து படுத்துக்கொண்டான்...

“ஏன்மா இப்படி ஷ்ரவன் அங்கிள் செய்தாங்க...

எனக்கும் தான் சக்தி அத்தானை முதல்ல பிடிக்கலை... ஆனா ஷானுக்கு அவருன்னா உயிரும்மா. அவளுக்குப் பிடிச்சுதுனால எனக்கும் இப்போ சக்தி அத்தானை பிடிக்குது...அதே மாதிரி நமக்குப் பிடிச்சவங்களுக்குப் பிடிச்சது நமக்குப் பிடிக்கணும் தான? அங்கிளுக்கு மட்டும் சக்தி அத்தனை ஏன் பிடிக்கலை...?”

காவ்யா "அன்புங்கறது சுயநலமில்லாதது...அதுல சுயநலம் வரும்போது மட்டும் பிரச்சனைகள் வருது...அத புரிந்தவங்க வாழ்க்கைய எளிமையா கொண்டுப்போவாங்க...

புரியாதவங்க இப்படிச் சிக்கலாக்கிக் கொண்டடிருப்பாங்க அவ்வளவுதான்"

இன்றும் அதுபோல வந்துப்படுத்தவன்"ம்மா"

“என்னடா இன்னைக்கும் ஷன்மதி எதுவும் மனசு வருத்தப்பட்டாளா?”

"அதில்லைம்மா...அந்த ஸ்ரீஜா பொண்ணு இருக்குல"

காவ்யா சிரித்துக்கொண்டே “அவளுக்கென்னடா...மறுபடியும் உன்கிட்ட சண்டைப்போட்டாளா?”

“ம்மா..என்னை டேமேஜ் பண்ணாதம்மா” என்று அவள் சொன்னதைச் சொல்லவும்...காவ்யாவுமே இதை எதிர்பார்க்கவில்லை.

அப்படியே அமைதியாக இருக்கவும்...

விஷ்ணுவின் அப்பா அஜய் அவர்களின் அருகில் வந்து...

“உங்களுக்கெல்லாம் எல்லாம் கிடைச்சதுனால வெளி உலகத்தின் கஷ்டம் தெரியலைடா...நான் ஏழு வயசு வரைக்கும் அனாதை ஆசிரமத்துல சாப்பாட்டுக்காகக் கையேந்தி நின்னவன்...கீதாம்மா வந்ததுனால என்னோட வாழ்க்கையும் நல்லாயிருக்கு...உங்கம்மாவும் என்னைப் புரிஞ்சிகிட்டதனால நல்லாயிருக்கோம்...”

அவர்களின் குடும்ப கதைகள் பல பேசிக்கொண்டிருக்க, விஷ்ணுவின் எண்ணமெல்லாம் ஸ்ரீஜாவிடமே...

அங்கு ஷன்மதியோ போனை எடுத்து சக்திக்கு தொடர்ந்து அழைத்துக்கொண்டிருக்க அவனோ அழைப்பை துண்டித்துக் கொண்டிருந்தான்;

மீண்டும் மீண்டும் அழைக்க, இறுதியாகத் தனது மொபைலை அணைத்து வைத்துவிட்டான்...

"ரொம்ப மிஸ் பண்றேன் சக்தி...ப்ளிஸ் ஒரு முறையாவது இங்க வாங்களேன். உங்களைப் பார்க்கணும்போல இருக்கு இப்பவே" என வீடியோ எடுத்து அவனுக்கு அனுப்பி வைத்திருந்தாள்...இரவு வெகு நேரம் விழித்திருந்து அவனிடமிருந்த அழைப்பு வரும், குறுந்தகவல் வரும் என்று பார்த்திருக்க வரவில்லை என்றதும் மனசை தேற்றிக் கொண்டு அப்படியே படுத்து தூங்கி விட்டாள்...

அடுத்த நாள் ஆபீஸ் அறைக்குள் விஷ்ணுவும், ஷன்மதியும் நுழையவும், அவனது கண்கள் ஸ்ரீஜாவை தேட அவளோ எப்போதும் போல் தனது வேலையைச் செய்துக்கொண்டிருந்தாள்.

விஷ்ணுவின் பார்வை ஸ்ரீஜாவையே தொட்டு தொட்டு மீள..

ஸ்ரீஜா கொஞ்ச நேரத்தில் ஷன்மதிக்கு டீ எடுத்து வந்து கொடுக்க... 

விஷ்ணுவோ “ஏன் எங்களுக்கெல்லாம் டீ கொடுக்க மாட்டீங்களா? நாங்கலாம் டீ குடிக்க மாட்டோம்னு உங்ககிட்ட சொன்னமா?” என ஸ்ரீஜாவிடம் சண்டைக்குப் போகின்றது போலப் பேசினான்.

அவனை ஏற இறங்க பார்த்தவள்...

“இதுவரைக்கும் நீங்க கேட்டதில்லை சார் அதான் குடுக்கலை...இருங்க” என்று அவளுக்கு வைத்திருந்த டீயை எடுத்து அவனுக்குக் கொடுக்க..வாங்கி குடித்துக் கொண்டிருந்தவனைத்தான் அதிசயமாகப் பார்த்தாள் ஷன்மதி, "விஷ்ணு பையா என்னையிலிருந்து டீ குடிக்குற பழக்கம்"

"இன்னையிலிருந்து தான் ஷானு பேபி"

எனச் சந்தோஷ மனநிலையில் சொல்ல.

ஷன்மதி " ஓ நீ நடத்து, கவனம் ஏற்கனவே காயப்பட்டிருக்கா, நீ வேற அதிகபடுத்திடாத"

விஷ்ணு "டீ நல்லாயிருக்கு ஷானு, இவ்வளவு நாள் நான் ஏன் குடிக்காம இருந்தேன்” என்று இருபொருள்பட கேட்க.

"முன்னாடி குடிக்காம இருந்ததுக்கு நாக்கு கோளாறு...இப்போ குடிக்காம இருந்ததுக்குக் காரணம் கண்ணு கோளாறு" என்றவள் சத்தமாகச் சிரிக்க, ஸ்ரீஜா எட்டிப்பார்த்தாள். ஷன்மதியோ விஷ்ணுவிடம் கண்ணைக் காண்பித்தாள், அவனும் ஸ்ரீஜாவைத்தான் ஏறிட்டுப்பார்த்து, அவளை கடித்து விழுங்கிவிடுவதைப்போலப் பார்த்து வைக்க...

அவன் பார்வை மாறுபட்டதைக் கண்டவள் குனிந்து அமைதியாகத் தனதிடத்திற்குச் சென்றுவிட்டாள்.

அன்றைய தினம் அவர்களுக்கு வேலையிலயே சென்றது. வேலை முடிந்து எப்போதும் போல விஷ்ணுவே ஷன்மதியை அழைத்துக்கொண்டு வீட்டில் விட்டு விட்டுச் சென்றான்.

மணி நள்ளிரவு பன்னிரெண்டிருக்கும் போன் அழைக்க எடுத்துப் பார்த்தவள் விஷ்ணு என்றதும் பயந்து " என்னடா இந்த நேரத்துல கால் பண்ணிருக்க" என்று கேட்கவும்.

"ஹாப்பிப் பெர்த் டே ஷானு பேபி" எழுந்து கீழ வா என்றதும், இருந்த மனவுளச்சலில் அவளே மறந்துவிட்டாள்...

எழும்பி கீழே செல்ல...ஷன்மதியின் தம்பி, விஷ்ணுவின் தம்பி தங்கைகள், அவளது அத்தை பசங்க என்று எல்லா இளைஞர்கள் பட்டாளம் வந்திருந்தனர்...

பெரிய கேக் எல்லாம் டேபிளில் வைத்து, அலங்காரம் செய்திருந்தனர்...

“இது எப்போ நடந்தது...?” என விஷ்ணுவைக் கேட்க...அவனோ நிலாவினைக் கைகாட்டினான்.

நிலாவும் கதிரும் அவளின் இருபக்கமும் நிற்க கேக்கை வெட்டியவள் கேக்கு எடுத்துக் கதிருக்கு கொடுக்கப்போக ஷ்ரவனை நினைத்து கண்கலங்க புரிந்துக்கொண்டனர் அனைவரும்...தனது தந்தையில்லாமல் கொண்டாடும் முதல் பிறந்தநாள் ...கணவனும் அருகிலில்லை.

எல்லோரும் ஆளாளுக்குப் பரிசுகொடுக்க வாங்கியவளுக்குக் கணவனின் நியாபகமே...தன் பிறந்தநாளை எப்படிக்கொண்டாடவேண்டும் என்று அவனிடம் ஆசை ஆசையாக விவரித்திருந்தாள் எல்லாம் பொய்யாகிப் போனதே.

வந்திருந்த எல்லோரும் கிளம்பிச் சென்றதும் தனதறைக்குள் நுழைந்தவள் பார்த்தது கட்டிலில் பெரிய பாக்ஸ் இருந்ததைத்தான்...

எடுத்து அவசரவசரமாகப் பிரித்துப் பார்த்தவளுக்கு அழுகையாக வந்தது...

சக்தியின் பிறந்தநாளன்று அவனது நெஞ்சினில் படுத்திருந்ததவளின் கன்னத்தைப்பிடித்தவன் " தேங்க் யூ டி நான் எதிர்பார்க்கவேயில்லை நீ கேக் பண்ணுவ,இப்படி சர்ப்ரைஸ் பண்ணைவனு ரொம்பச் சந்தோஷம்...ஆமா உன்னோட பிறந்த நாள் எப்போ"

"அதுக்கு இன்னும் ஐஞ்சு மாசமிருக்கு"

"ஓ"

" ஆனா சூப்பரா கொண்டாடுவேன் ...நிறைய கிப்ட்ஸ் கிடைக்கும், அப்பாதான் முதல் கிப்ட்ஸ் தருவாங்க...இந்த வருசம் உங்ககூட இருக்கபாபோறேன். என்ன வாங்கித் தருவீங்க"

சக்தி"உன் பிறந்தநாளுக்கு நீயே கிப்ட்ஸ் எங்ககிட்ட கேட்பியா...அது வாங்கிதர்றவங்க மூட பொறுத்திருக்கு"

மதி "அப்படி எல்லாம் ஒன்னுமில்லை...நான் கேட்பேன் எனக்கு இஷ்டமானதைத்தான் வாங்கித் தரணும்"

"அது சரி இதுக்குப்பேரு கிப்ட் இல்லாம கணவன் கிட்ட வழிப்பறிப் பண்றது" எனச் சிரித்தவனின் வாயை அடைத்தவள்...

“அதெல்லாம் எனக்குத் தெரியாது வாங்கித்தாங்கன்னா வாங்கித்தரணும் முடியுமா முடியாதா...?”

"சரிடி கத்தாத...சொல்லு என்ன வேணும்னு"

அவள் சொல்லத்தொடங்கவும்....

" இதெல்லாம் வாங்கிக் கடை எதுவும் வைக்கப்போறியா"

" சக்தி...ரொம்பப் பேசுறீங்க...லிஸ்ட்ல இருக்கதெல்லாம் வாங்கித்தரணும்..சரியா"

சக்தி "மதி உண்மையச் சொல்லு உங்க கம்பனி கடனுலதான ஓடுது"

"என்ன"

“பிறந்துநாளுக்கே வருசந்தோறும் உங்கப்பா இவ்வளவு வாங்கித்தந்தா...எப்படிக் கம்பனி நடத்துவாறு அதான் கேட்டேன்...” என்றவனைச் சும்மாவா விட்டிருப்பாள் மதி...அவள் சொன்ன அத்தனை பொருட்களும் அதிலிருந்தது.

‘சக்தி நான் சொன்னதை இன்னும் நியாபகம் வைத்து அனுப்பியிருக்காங்க’ என்பதே மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்தது அவளுக்கு.

அதிலிருந்த அவளுக்குப்பிடித்த அந்தப் பிங்க் நிற ஆடையைப் போட்டுப் பார்த்தவள்...நிழற்படமாக எடுத்து கணவனுக்கும் அனுப்பியிருந்தாள்...அவன் பார்க்கின்றனோ இல்லையோ அவள் சக்திக்கு குறுந்தகவல் அனுப்பிக்கொணடுதான் இருக்கின்றாள்.

காலையில் எழுந்து கிளம்பி வெளியே வர நிருபமாவும்,ஹரிதாவும் வந்து வாழ்த்திவிட்டு அவளுக்கான பரிசையும் கொடுத்துவிட்டு சென்றனர்...ஷ்ரவன் வரவில்லை. ஷன்மதிக்கு மனதை பிசையத்தான் செய்தது அப்பாவைப் பார்க்கணும்போலதான் இருக்கு, ஆனாலும் வேண்டாம் என்று தன் மனதை மாற்றியவள்...ஆபிஸிற்குச் சென்றாள்..

ஸ்ரீஜா வேலை செய்து கொண்டிருக்கும்போது சீனியர் வந்து " நான் இரவு ஊருக்குப்போறேன்மா அப்பாகிட்ட எதுவும் சொல்லணூமா?” என்று கேட்க

"இல்லை" என்று தலையை மட்டும் ஆட்டினாள்.

அவளது தலையைப்பிடித்து ஆட்டியவர் 

“அப்பா மேல இன்னும் கோபம் போகலையா?” என்று கேட்க, அவள் லேசாகப் புன்னகை செய்ய...

ஸ்ரீஜாவின் இடத்திற்கு வந்தவன் "எனக்கு என்ன பதில் சொல்லப்போற?"என்று நேரடியாகவே கேட்டான்.

அவளோ அவனது கேள்விக்குப் பதில் சொல்லாமல் அமர்ந்திருக்க, கோபம் வந்தவன் அவளது கையைப் பிடித்து தூக்கி நிறுத்தியவன் “நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டேன் அதுக்கான பதில் இப்பவே வேணும் சொல்லு"

அவனது முகத்தைப் பார்த்து " என்ன சொல்லனும் சார், நீங்க கேட்டதுக்குப் பதில் சொல்லிட்டனே"

“என்ன பதில் சொன்ன? உன்னோட இப்போதைய நிலைய சொன்ன அவ்வளவுதான்...என்னை பிடிச்சிருக்கா இல்லை, என்ன கல்யாணம் பண்ணிக்கச் சம்மதமா இதெல்லாம் சொல்லலையே...”

தலையைக் குனிந்துக்கொண்டு தனது கை விரலை பிடித்துக்கொண்டு அப்படியே நின்றிருந்தாள் அசையாமல்...

தனது ஒற்றை விரலை வைத்து அவளது நாடியில் வைத்து அவளது முகத்தை உயர்த்தியவன்...கண்களையே உற்றுப்பார்க்க, அவளோ அவனது கண்களைப் பார்க்காமல் மறுபடியும் குனிந்துக்கொள்ள...

“என்னடி உன் பிரச்சனை, உனக்கு பிடிக்கற மாதிரி நான் இல்லையா? ஏன் விதவை எல்லாம் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கூடாதுனு எதாவது இருக்கா...எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு.நீ எப்படி இருந்தாலும் பிடிக்கும் இன்னும் அதிகமாகப் பிடிக்கும்...புரியுதா?”

என்றவன் வெளியே சென்றுவிட...

என்ன செய்யவென்று சிறிது யோசித்தவள் ஷன்மதியைத் தேடிச்சென்றாள்

அத்தியாயம்-16

ஸ்ரீஜா நேரடியாக ஷன்மதியிடம் சென்றவள், “அக்கா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று நிற்க...அவளது முகத்தைப் பார்த்த ஷன்மதி பிரச்சனை பெருசுபோல என்று செய்துக்கொண்டிருந்த வேலையைவிட்டு எழுந்தவள், தனியாகச் சென்று அமர்ந்து “சொல்லும்மா” என்றதும்...

“அக்கா விஷ்ணு சார் என்கிட்ட வந்து என்னென்னமோ பேசுறாரு...என் நிலைமையை உங்க கிட்ட அன்றைக்கே சொல்லிட்டேன்... உங்களுக்கு நம்பிக்கை வந்துச்சோ என்னவோ எனக்குத் தெரியவில்லை ஆனாலும் என்னைய பத்திய உண்மையை உங்ககிட்ட சொல்றேன்...விஷ்ணு சார்கிட்ட எடுத்துச் சொல்லுங்க ப்ளீஸ்”

ஷன்மதி " நீ சொல்றது நாங்க நம்புறோம்பா...இது அதில்லை பிரச்சனை, நீ யாரு என்ன உன்னோட பின்னணி என்ன எதுவுமே அவன் பார்க்கலை, உன்னை அவனுக்கு அவ்வளவு பிடிச்சிருக்கு, அவன் வாழ்க்கைத் துணையா நீ இருக்கணும்னு ஆசைப்படுறான்"

ஸ்ரீஜா " புரியுதுக்கா, ஆனா அது சரியா வராது, என்னைய மாதிரி பொண்ணு வேண்டாம்கா...ஏற்கனவே நொந்துப்போயிட்டேன், இன்னொரு கல்யாணம்னா என்னால நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை பயமாக இருக்கு...அவ்வளவு ரணப்பட்டுட்டேன்கா” என்றவள் தன் கடந்தகால வாழ்க்கையைச் சொல்லாரம்பித்தாள்...

ஸ்ரீஜாவின் அப்பா பெயர் மாகாதேவன், அவளது தாய் ஜானகி, இவர்களுக்கு நான்கு பிள்ளைங்க, மூத்தது ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்குடுத்து...அது பிரசவத்துல இறந்துப்போயிட்டு.

இரண்டாவதுதான் ஸ்ரீஜா நல்லபெண். பன்னிரெண்டாங்கிளாஸ் படிச்சு முடிச்சு அவங்க சீனியர் மாதிரி வக்கீலாகணும்னு ஆசை...அவரும் படிக்க வைக்கிறேன்னுதான் சொல்லிருந்தார்...ஆனால் விதி வேற மாதிரி கொண்டுபோயிட்டு.

ஸ்ரீஜா உட்பட மூன்று பிள்ளைங்களும் தாய்தந்தைக்கு அடங்கி நடக்குற பிள்ளைங்க அதுதான் இங்க பிர்ச்சனையே...

ஸ்ரீஜா குடும்பச் சூழ்நிலையால் பள்ளிப்படிப்பை முடித்து விட்டுத் தொலைத்தூரக்கல்வியில் இளங்கலை ஆங்கிலம் படிக்கின்றாள்... 

மாகாதேவனின் மொத்தக்குடும்பமும் ஒரு நாள் சேரண்மகாதவியில் இருக்குற சொந்தக்காரங்க வீட்டுக் திருமணத்திற்குச் சென்றிருந்தனர்

மகாதேவன் கஷ்டப்பட்டாலும் பிள்ளைங்களை நல்லாதான் வளர்த்திருந்தார்...ஸ்ரீஜாவுக்கு நீள முடி தொடைவரை உண்டு...அவ சாப்பிடுற சாப்பாடெல்லாம் முடிக்குப்போயிடும்போல ஒல்லியாக இருப்பாள்...கிராமத்து அழகி.

கண்டிப்பா முடியை பின்னல் தான் போட்டிருப்பா...அவ முடிக்காகவே அவ பின்னாடி சுத்துனவனுங்க அதிகம்...தைரியமும் அதிகம் உண்டு...தான் படித்து முன்னுக்கு வரணும் என்ற எண்ணத்தோடு இருந்தவள்...

கல்யாண விசேஷத்தில் கலந்துக்கொண்டு சாப்பிட்டு அமர்ந்திருக்க...மாகாதேவனின் அருகில் வந்தமர்ந்த ஒரு பெண்மணி “எப்படி இருக்கீங்க?” என்று கேட்கவும்....அவரது மனைவி ஜானகிக்கு யாரென்று தெரியவில்லை...

மகாதேவன் தான் பதில் சொன்னார்.  

“பார்வதி அக்கா நல்லாயிருக்கோம்கா...நீங்க மச்சான் பிள்ளைங்க எல்லாரும் நல்லாயிருக்காங்களா?” என்று விசாரிக்கவும் சொந்தாக்காரங்க என்றதும் எல்லாரும் நன்றாகப் பேசிக்கொண்டிருக்க...ஸ்ரீஜாவைப் பார்த்து “உன் பிள்ளையா தம்பி அழகா இருக்கா...மாப்பிள்ளை எதுவும் பாக்குறீயா?” என்று கேட்டார்...

“இல்லைக்கா...சின்னபிள்ள மேல படிக்கணும்னு சொல்றா ஆனாலும் நல்லவரனா வந்தாப்பார்க்கலாம்” எனப்பேசிக்கொண்டிருந்தனர்...

ஸ்ரீஜாவிற்கோ ஏனோ அந்தப் பெண்மணியைப் பிடிக்கவில்லை...அவரது பார்வையே வேறுமாதிரியாக இருந்தது, அவளை மேலும்கீழும் பார்த்து வைத்தார்.

அடுத்த நாளே அந்தப் பார்வதி தன் குடும்பத்தை அழைத்துக்கொண்டு ஸ்ரீஜாவைப் பெண் கேட்டு வந்துவிட்டார்.

சேரண்மகாதேவியிலயே பெரிய இடம்...நல்ல வசதி வாய்ப்புகள் உண்டு. அவருக்கு மூன்று பிள்ளைகள் மூத்த பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டது இரண்டாவது ஒரு பையன், மூன்றாவது ஒரு பையன். மூன்றாவது பையன் காதலித்துச் சீக்கிரமாகத் திருமணம் செய்து கொண்டான். இரண்டாவது பையன் மனோஜ்க்கு தான் இப்பொழுது பெண் கேட்டு வந்திருக்கிறார்...

மாகாதேவனுக்குச் சந்தோஷமே எவ்வளவு பெரிய இடத்துல இருந்து பெண்கேட்டு வந்திருக்காங்க..அதுவும் அவரோட சொந்தக்காரங்களே எனும்போது...அவளின் படிப்பு அவருக்கு இரண்டாம்பட்சமாகியது...

ஒருவாரத்தில் நிச்சயதார்த்தம் முடித்துவிட்டனர்...பையனுக்கு முப்பது வயது ஸ்ரீஜாவிற்கோ பத்தொன்பது வயது... பணமும் வசதியும் வயது வித்தியாசத்தைப் பார்க்கவிடவில்லை. ஸ்ரீஜாவோ படிக்கமுடியவில்லையே என்று ஆதங்கத்தில் தன் தந்தையிடம் கேட்க... “படிப்பைவிட வாழ்க்கை ரொம்ப முக்கியம்டா...நாங்கதான் கஷ்டப்படுறோம் நீங்களாவது நல்லயிருக்கணும்மா” என்று இருவரும் அவளின் மனதை பேசிப்பேசியே திருமணத்திற்குத் தயார்படுத்திவிட்டனர்.

திருமணத்திற்கான செலவு முழுவதும் மாப்பிள்ளை வீட்டினரது....

முந்தின நாளே பெண்ணழைத்துக்கொண்டு சென்றனர்.

அடுத்தநாள் காலையில் ஸ்ரீஜாவின் கழுத்தில் தாலிகட்டினான் மனோஜ்...

மாகதேவனுக்குச் சந்தோஷம் தன் பெண் நல்லயிடத்தில் வாழப்போகின்றாள் என்று.

ஆனால் அவருக்குத் தெரியவில்லை பணமும் வசதியும் தன் பெண்ணை நன்றாக வாழ வைக்குமா என்ன, அதையும் தாண்டிய விசயங்கள் நிறைய இருக்கு என்று.

எல்லாச் சாஸ்திர சம்பிரதாயங்களும் முடிந்து மகளைத் தனியாக அழைத்துப் பார்த்து சூதானமா நடந்துகொள் என்று அழுதுகொண்டிருந்த ஸ்ரீஜாவை பார்த்து சொல்லிவிட்டு கிளம்பி வந்து விட்டனர் அவளது பெற்றோர்.

வாழ்க்கையில் எதுவும் அறியாத இளம்பெண்ணிற்கு என்ன தெரியும் .. திருமண வாழ்க்கையின் அரிச்சுவடியே தெரியாத பெண்ணை விட்டுச் செல்லும்போது அவளது மனதினைப் பற்றி யாருக்குமே கவலையில்லை...

இரவு பத்துமணியிருக்கும் தனியாக அறையில் உட்கார்ந்திருக்க, மனோஜை காணவில்லை...

ஸ்ரீஜாவோ காத்திருந்து காத்திருந்து பயத்தில் அப்படியே தூங்கி விட்டாள்...

நள்ளிரவில் விழித்துப் பார்த்தாள் அவளருகில் கணவன் படுத்திருந்தான்.

அவசரமாக எழுவதற்கு முயற்சிக்க, “எதுக்கு இப்போ உருண்டுட்டு வர்ற தூங்கு” என்று அவளை அதட்டியவன் திரும்பி படுத்துவிட்டான்...

ஸ்ரீஜாவோ “இப்படித் தூங்குறாங்க?” என்று எண்ணியவள்...மறுபடியும் படுத்துத் தூங்குவதற்கு முயற்சிக்கத் தூக்கம்தான் அவளுக்கு வரவில்லை...

மனோஜ் டிகிரி முடித்துவிட்டு அந்த வீட்டின் சொத்துக்களை எல்லாம் நிர்வாகிக்குறான்...காலையில் செல்பவன் சாப்பாட்டிற்கு வருவான், மீண்டும் இரவுதான் வீட்டடைவான்.

இப்போதும் அதையேதான் செய்கின்றான் என்ன ஒரு மாறுதல் அவனுக்குச் சாப்பாடு போடுவது மட்டும் ஸ்ரீஜா...வேறு ஒன்றும் மாறவில்லை...

ஒருவாரம் கடந்திருந்த நிலையில் மகாதேவன் மகளைப் பார்க்க வந்திருந்தார்...அப்பாவை பார்த்ததும் ஓடிப்போய் அவரது கையைப் பிடித்து அழுதாள்...

“என்னை இங்கயிருந்து கூட்டிட்டுப் போறீங்களாப்பா?” என்று.

அவரோ “என்னம்மா பேசுற நீ...உன்னை கல்யாணம் பண்ணிக்கொடுத்து ஒருவாரம்தான் ஆகுது என்கூட வர்றேங்குற...ஒழுங்கா இங்கயிருந்து பொழைக்கப்பாரு. தாய் தகப்பான் நியாபகம் வரத்தான் செய்யும், அதுக்காக என்கூட வருவேன்னு சொல்லுவியாம்மா” என்று அவளது உண்மை நிலவரம் தெரியாமல் பேசினார்....

அன்று இரவு குடித்துவிட்டு வந்தவன் ஸ்ரீஜாவை தூக்கத்திலயே கையைப்பிடித்துத் தூக்கியவன்...

“உங்கப்பாக்கூடப் போறேன்னு சொன்னியா...ஏன்டி உங்கப்பன் வீட்டை விட இங்க நல்லாதான இருக்க...விதமா விதமா சாப்பாடு, துணி, நகையினு சொகுசாதானடி இருக்க... என்னயிருந்தாலும் வயசுக்குண்டான உணர்வுக் கேட்குதோ...ம்ம்.

நமக்குள்ள எதுவும் நடக்கலைனு வெளிய யாருக்கிட்டயாவது சொன்ன, கொன்று புதைத்து விட்டு...நீ எவங்கூடயோ ஓடிப்போயிட்டனு சொல்லிடுவேன்” என்று மிரட்டியவன் படுத்து தூங்கிவிட்டான்...

ஸ்ரீஜாவிற்கோ யாரிடம் இதைச் சொல்ல முடியும்...மாமியாரைப் பார்த்தாளே பயப்படுவா...கணவன் அவன் இவளை மனுஷியாக்கூட மதிக்கமாட்டான்....

ஒரு பதினைந்து நாள் மட்டும் கொஞ்சம் அன்பாக நடந்த மாமியார் தன் பணத்திமிரைக் காண்பிக்க ஆரம்பித்துவிட்டார்...

ஸ்ரீஜாவிடம் எப்பவும் ஏதாவது ஒரு வேலையை ஏவிக்கொண்டிருப்பார், கொஞ்சம் அசந்து தூங்கி விட்டால் அல்லது உட்கார்ந்து விட்டாலும் ஏதோ மகாராணி வீட்டில் இருந்து வந்த மாதிரிதான் நினைப்பு ...

சாப்பிடுற சாப்பாட்டுக்காவாது வேலை செய்யணும், எப்படிச் சும்மாவே உட்கார்ந்திருந்தா சோறு எங்க இருந்து வரும்... என்று குத்தல் பேச்சு பேசும்பொழுது...

சிறு பெண்ணல்லவா குடும்ப அரசியல் எதுவும் தெரியாததால் திரும்பிப் போய் மறுபடியும் வேலை செய்ய ஆரம்பிப்பாள்...

தினமும் அவளுக்கு நரகவேதனை தான்,

சாப்பாடுக்கூட ஒழுங்கா சாப்பிடமாட்டாள், அதற்கும் இரவில் வந்து “என்ன நல்ல சாப்பாட்டை வெட்டுற...உங்கப்பன வீட்ல கிடைக்காலைனு இங்க சாப்பிடுறீயாக்கும் பார்த்து பார்த்து அப்புறம் உடம்பு வேறெல்லாம் கேட்கும்...என்கிட்ட இல்லைனு வேற எவனையாவது தேடும்” என்று அசிங்க அசிங்கமாகப் பேசுவான்....அதனாலயே சாப்பாட்டைக் குறைத்திருந்தாள்...

அம்பாசமுத்திரம் இருவரும் ஒன்றாகச் சென்றுவிட்டு அவனுடனே கிளம்ப வேண்டும் ...அதனால் ஸ்ரீஜா அம்மாவிடம் எதுவும் சொல்லமுடியாத நிலை...இல்லை என்றால் உன் தங்கையும் நல்லாதான் இருக்கா என்று அவளை அசிங்கமாகத் திட்டுவான்....தன் குடும்பத்திற்காகச் சகித்தாள்.

ஆறு மாதம் கடந்திருக்கும் மனோஜ் வெளியூருக்கு சென்று இருப்பதால் இதுதான் சமயமென்று மாமியாரிடம் மெதுவாகச் சென்று " நான் எங்க அம்மா வீட்டுக்கு இரண்டு நாள் போயிட்டு வரட்டுமா” என்று கேட்க சிறிது யோசனை செய்தவர் ‘மகனும் இங்கு இல்லை தானே போயிட்டு வரட்டும்’ என்று “சரி ரெண்டு நாள் வேண்டாம் ஒரு நாள் இருந்துட்டு வா” என்று அவளை அனுப்பி வைத்தார்...

எப்படிச் சேரண்மகாதேவியில் இருந்து பஸ்ஸில் ஏறி, எப்படி அம்பாசமுத்திரம் வந்து சேர்ந்தாள் என்று தெரியாது... அவ்வளவு அவசரமாக வந்தாள் எவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு செல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்து சேர பிரயத்தனப்பட்டு வந்துசேர்ந்தாள்....

வந்த அடுத்த நிமிடமே தாயைக் கட்டிக்கொண்டு அழுதவளை சமாதானப்படுத்தி என்னவென்று கேட்டதும்தான்...

தனது சேலையைக் கழட்டிக் காட்ட ஸ்ரீஜாவின் அம்மா "என்னடி இது சூட்டுத்தழும்பாக இருக்கு"

நடந்ததைச் சொன்னாள்... “அப்பா வந்துட்டு போன அன்றையிலிருந்து இதுதான்மா நடக்குது.... வீட்ல மாமானரகிட்ட பேசினாலும் அன்றைக்கு இராத்திரியே என்னை அடிப்பாரும்மா...சிகரெட் வச்சு வெளியத் தெரியாத இடமா பார்த்து சூடு வச்சுருவாரும்மா...” எனத் தொடை, மார்பு என்று காண்பிக்க.

தாயவளோ பதறி தன் மகள் நல்லா வாழ்ந்திட்டிருக்காளே என்று நினைத்திருக்க...இப்படியா வேதனைப்பட்டிருக்கா என அழுதவர்.

“ஏன்டி அவரு உன்னை சந்தேகப்பட்டு அடிக்குறாரு...உன்கூட நல்லபடியாவது வாழ்றாரா?” என்றுக்கேட்க...

“ம்மா அவர் கல்யாணம் நடந்ததிலிருந்து அடிக்கறதத்விர வேற எதுக்கும் என் பக்கத்துல வரலைம்மா, அவருக்கு முடியாது போலம்மா...ஏமாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கம்மா” என்று அழுதவள்...

“இரண்டு மாசத்துல வீட்டுக்கு குழிச்சிட்டேன்மா...மாமியார் கேட்டு அதுக்கும் சண்டைப் போட்டாங்கம்மா....கர்ப்பமாகலைனு.

வாழமா எப்படிம்மா. அதுக்கும் எங்கம்மாகிட்ட எதுவும் சொல்லக்கூடாதுனு சூடு வச்சாங்கம்மா” என அழுதாள்... “அங்க என்ன போகச்சொல்லாதம்மா என்னைக் கொன்றுவாங்கம்மா” என்று மடியில் படுத்து அழுதாள்....

மாகதேவன் வந்ததும் எல்லா விஷயத்தையும் கூறி “வாங்க நியாயம் கேட்போம்” என்றதும் பாலசந்தரை அழைத்து விபரம் கேட்டு...போலிஸ் ஸ்டேசன்ல வழக்குப் பதிவு செய்தனர்.

அம்பாசமுத்திரம் போலிஸ் ஸ்டேஷன் வந்த பார்வதியும் மனோஜும்... அங்கு வைத்தும் சண்டை போட்டனர், “அன்னக்காவடியாக இருந்தவளை கல்யாணம் பண்ணி சொகுசாக வாழ வச்சா என் பிள்ளை மேலே கம்ப்ளைன்ட் பண்ணுவியா?” என...

வழக்கு விசாரணையில் இருக்கும்போது ஒருநாள் ரோட்டில் நடந்து சென்ற ஸ்ரீஜாவை வண்டியில் வந்து மனோஜ் கையைப் பிடித்து இழுத்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல எத்தனித்த போது...

தன் காலில் இருந்த செருப்பைக் கழட்டி மனோஜ்ஜை அடி பின்னி விட்டாள் ஸ்ரீஜா...

அவனுக்கு அது ஒரு பெரிய அவமானமாகப் போய் விட்டது.

பார்வதி இப்பொழுதும் மகனுக்கே சப்போர்ட் செய்தார், “என் மகன் ஆம்பிளை சிங்கம், இவளுக்கு வேற எதோ பிரச்சனையிருக்கு என் மகன்கூட வாழமாட்டுக்கா” எனப் பழியை ஸ்ரீஜாமேல் தூக்கிப்போட்டார்...

விவகாரத்து வழக்குப் பதிவு செய்தாகிவிட்டது...ஸ்ரீஜாவிற்கு மருத்துவ பரிசோதனை செய்து ரிப்போர்ட் கொடுத்தனர்...ஆனால் மனேஜ் பரிசோதனைக்கு வரவில்லை...என்னவென்று விசாரிக்கும்போதுதான் தெரிந்தது.

ஊரில் எல்லோருக்கும் மனோஜ் ஒரு ஆண்மையற்றவன் என்றும், அம்மாவும் மகனும் ஒரு பெண்பிள்ளையின் வாழ்க்கைய நாசமாக்கிவிட்டனர் என்று தெரிந்ததும்...கேவலப்பட்டு வெளியே வராமல் அறைக்குள்ளே அடைந்துக்கிடைந்தவன்...ஆண்மை பரிசோதனைக்குச் செல்லவேண்டும் என்றதும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டான்.

ஸ்ரீஜாவிற்குத்தான் பெரும்நிம்மதியாக இருந்தது...தன் குடும்பத்தை வாழவிடமாட்டேன் என்று மிரட்டி மிரட்டி அங்கு இருக்க வைத்தான்...இப்போது அவன் உயிருடன் இல்லை என்பதே அவளுக்கு நிம்மதி...

பொம்மைக் கல்யாணம் மாதிரித்தான் அது...

அந்த நிகழ்வை மறக்கத்தான் பக்கத்தில் இருந்த கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்த்துக்கொண்டே ஒரு வருட டிப்ளமோ படிப்பையும் முடித்து இருந்தாள்

கணவன் இறந்துவிட்டதால் விவகாரத்து வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது, அது தேவையில்லையென்றாகிவிட்டது.

வருடம் கடந்த நிலையில் மறுபடியும் ஸ்ரீஜாவுக்குக் கல்யாண ஏற்பாடுகள் அவளுக்குத் தெரியாமலே மெதுவாக மகாதேவன் செய்துகொண்டிருந்தார்...

அவளுக்கு ஏற்ற மாதிரி ஒரு வரன் வரவும் வீட்டிற்குப் பொண்ணு பார்க்க அழைத்து வந்திருந்தார்...

ஸ்ரீஜா மகாதேவன் இடம் கேட்டாள் “நான் இருக்கறது உங்களுக்குக் கஷ்டமா இருந்துச்சுன்னா, நான் எங்கேயாவது போறேன் மறுபடியும் எனக்குக் கல்யாணம் வேண்டாம்,ஆறுமாசம் வாழ்ந்ததே ஆயுளுக்குப் போதும்பா...எப்போ அடிப்பான், சூடு வைப்பானு பயந்து பயந்து, வேலைக்காரன்கிட்ட பேசினாக்கூட என்னை அடிச்சு சூடு வைச்சான், நடுங்கி நடுங்கி அவன் ரூமுக்குள்ளவே பயந்து பயந்து வாழ்ற வாழ்க்கையே எனக்கு நிறைய வலி தந்துட்டு, கல்யாணமெல்லாம் வேண்டாம்பா. அதுக்கு நான் இப்படியே இருந்துடுவேன்" என்றாள்.

“இதுக்குமேலே என்ன கல்யாணம் அது இதுன்னு வற்புறுத்தினீங்க, கிணற்றில் விழுந்து செத்து போயிடுவேன் பார்த்துக்கோங்க” என்று மிரட்டி வைத்திருந்தாள்...

இதனால் மகாதேவன் திருமண ஏற்பாட்டையே நிறுத்திவிட்டார்.

ஒருவாரம் கழித்துக் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற ஸ்ரீஜாவைக் காணவில்லை...

மகாதேவன் பதறி போலிஸில் கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டு சீனியர் லாயருக்கு அழைத்துச் சொல்ல அவர் தனது ஆள் பலத்தால் போலிஸிற்கு நெருக்கடிக்கொடுக்க இரவிற்குள் கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டனர்....

மனோஜின் தம்பி தான் அவளது மாமனார் இறந்து ஆறுமாதமாகிவிட்டது...சொத்து பங்கு வைக்கும்போது மனோஜின் சொத்துப் பங்கு ஸ்ரீஜாவிற்கு கொடுக்க வேண்டும்...விவாகரத்தாகவில்லையே அதனால்.

அதற்காகத்தான் கடத்தி கையெழுத்து வாங்கிவிட்டு, கொன்றுவிடக் கடத்தியிருந்தனர்...அதற்குள் போலிஸார் அவளைக் கண்டுபிடித்து மீட்டிருந்தனர்...

அவர்களின் மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்திருந்தனர் அதனால்தான் ஸ்ரீஜாவை சென்னைக்கு அழைத்து வந்திருந்தார் சீனியர்.

தன் விசயத்தைச் சொல்லிமுடித்தவள் ஷன்மதியிடம் “அக்கா கல்யாணம் செய்துக்கிட்டுப் பட்டதெல்லாம் போதும் , இனி அப்படியொரு வாழ்க்கை வேண்டாம்னுதான் என் மனதை கல்லாக்கிட்டு இருக்கேன்... என்னைத் தொந்தரவு செய்யவேண்டாம்னு சார்கிட்ட சொல்லுங்க” என அழுதாள்...

அவளைத்தேற்றிய ஷன்மதி “இந்த விசயத்தை எப்படிச் சமாளிக்கப்போறனோ...ஒரு பக்கம் விஷ்ணு இவதான் வேணும்னு நிக்கிறான், இவ என்னனா எதுவமே வேண்டாம்னு நிக்குறா... ஆண்டவா கடைசியில என்ன இப்படியாக்கிட்டீங்களே” என்று ஷன்மதி புலம்பும்படியாகிவிட்டது... 

அத்தியாயம்-17

மாலை வீடு செல்லும்போது ஸ்ரீஜாவின் விசயம் எல்லாவற்றையும் விஷ்ணுவிடம் கூறி 

“நீ கொஞ்சம் பொறுமையா இரு...அவ மனசு உன்பக்கம் வர்றதுக்கு எதாவது பண்ணு...கல்யாணம் கல்யாணம்னு தொந்தரவு பண்றமாதிரி இருக்ககூடாது புரியுதா?” என்று சொல்ல...

அவனோ தலையைச் சரி சரினு எல்லாப் பக்கமும் ஆட்டி வைத்தான்... 

“நீ எல்லாப் பக்கமும் தலையாட்டும்போதே தெரியுது நான் சொல்ற எதையும் கேட்கப்போறதில்லைனு...எதாவது செய்து வச்சட்டு ஷானு பேபினு வந்து நில்லு, அப்போ நான் தீர்வு சொல்லமாட்டேன்...”

அவனோ சிரித்து, “ஷானு பேபி அப்படிலாம் சொல்லாக்கூடாதுடா... நீ நல்ல பிள்ளையில்ல...அப்படியே என்னைய பிடிச்சிருக்கானு அவக்கிட்ட கேட்டுச்சொல்லேன்...அவ கல்யாணம் வேண்டாம்னுதான சொன்னா... விஷ்ணுவ பிடிக்குமானுக் கேட்டுப்பாரேன்"

ஷன்மதியோ “அடேய் அதையும் கேட்டுப்பார்த்தாச்சு எவனையும் அவளுக்குப் பிடிக்காதாம்” என்றாள்.

விஷ்ணுவோ “சரிதான் எவனையும் பிடிக்காது, அதுல வேற கல்யாணம் வேண்டாம்னு இருக்காளாம், அவ மனச எப்படி மாத்துறது...விஷ்ணு உனக்குப் பெரிய டாஸ்க்கா இருக்கும்போலவே” என எண்ணிக்கொண்டான்.

ஆபிஸிற்கு வருவதற்காக அவசரமாகக் கிளம்பி ஷானுவை அழைக்கச் சென்றவன் அவளைப் பார்த்ததும் அதிர்ந்தான் ...முகமெல்லாம் வீங்கியிருந்தது.

விஷ்ணு "என்னாச்சுடா, இரண்டே நாளில் இப்படி இருக்க" என்று கலவரத்துடனே கேட்டான்...

"ஒன்னுமில்லைடா வளைகாப்பு வைக்கறதுக்கு வந்து பேசினாங்க...சக்தி வராமல் என்ன வளைகாப்பு மண்ணாங்கட்டி வேண்டியிருக்கு. 

வாழ்க்கையே நட்டாத்துல இருக்கு இப்போ இதுதான் முக்கியாமா? அதான் வேண்டாம்னு சொன்னேன்...கேட்கலை சண்டைப்போட்டேன்...டாடியும் வந்துக்கேட்டாங்க நா வேண்டவே வேண்டாம்னு முடிவா சொல்லிட்டேன்"

விஷ்ணு "ஏன்டா இப்படி, பெரியவங்க சொல்றதையும் கொஞ்சம் கேளேன்"

“இல்லைடா ஏற்கனவே சக்தி ரொம்பக் கோபத்துல இருக்காங்க...டிவோர்ஸ் வேண்டாம்னு சொன்னாலும், இன்னும் ஒதுங்கித்தான் இருக்காங்க. அதுவே என்னாலத் தாங்கிக்க முடியலை, ஆனா டாடி வளைகாப்பு நடத்தி என்னை அழைச்சுட்டு போயிட்டா இன்னும் கோபம் அதிகமாயிடும்...அப்புறம் எப்படி நான் சக்திக்கூட வாழ முடியும்....இன்னும் பிரிவு அதிகமாயிடும் வேண்டாம்” என்று சொன்னவளின் கண்களில் கண்ணீர் வரவும்...துடைத்துக்கொண்டு விஷ்ணுவிற்காக லேசாகச் சிரித்தாள், 

“வா ஆபிஸிற்கு லேட்டாகிட்டு” என்று காரில் ஏறி அமர்ந்தாள்...

அங்கோ மகளிடமும் பேசமுடியாமல் அவளை வீட்டிற்கும் அழைத்து வரமுடியாமல் தவித்தான் ஷ்ரவன்...

‘என்ன செய்ய?’ எனப் பலநாள் யோசித்திருந்தவன், பிஸினஸ் விசயமாக வெளியூருக்கு போறேன் என்று டெல்லி சென்றிருந்தான். அங்கு மருமகனைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தான்.

அவனைத்தேட வேண்டிய அவசியமே இல்லை...ஏ.ஐ.ஜி சக்திகுமரன் என்று கேட்க...அங்கோ அவன் பெயரைச் சொன்னதும்.

சக்தியின் டிபார்ட்மென்ட் ஆபிஸிலயே வெளியே அமரவைக்கப்பட்டிருந்தான், செம்ம கடுப்புடன் அமர்ந்திருந்தான் ஷ்ரவன்...தனது மகளுக்காக மட்டுமே இப்போது இங்கே வந்திருந்தான்.

வளைகாப்பு எப்படி எப்போ நடத்தலாம் என்று பேசுவதற்கு ஷ்ரவனும் ஹரிதாவும் சென்றிருக்க...மகளோ ஷ்ரவனை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல் ‘வளைகாப்பும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்’ என்று அழுதுக்கொண்டே சண்டையிட்டாள்.

அதைப்பார்த்தவனுக்கு நெஞ்சினில் பாரமேறியது...தன்னால்தான தன் மகள் இப்படி வாழாமல் இருக்கின்றாள் என்று வருத்தப்பட்டான்...அவனும் காதலித்துத் திருமணம் செய்தவன்தானே...மனைவி கற்பமாக இருக்கின்றாள் என்றதும் ஷன்மதி வயிற்றிலிருக்கும்போது எவ்வளவு சந்தோஷப்பட்டான்...எப்படியெல்லாம் மனைவிக்காக விட்டுக்கொடுத்தான்...

வீட்டிற்கு வந்தவன் ஹரிதாவிடம் புலம்பினான்...

“அவனை எனக்கு இப்பவும் பிடிக்காதுதான்...ஆனால் என் பொண்ணு அவனை நினைச்சு ஏங்கி ஏங்கி எப்படியாகிட்டாப்பாரு” என்று அழுதான் மகளை நினைத்து...

சக்திக்காக வெகு நேரமாகக் காத்திருந்தவன், வெளியே பார்த்துக் கொண்டிருக்க...

திடீரென்று அங்கு ஏகப்பட்ட பத்திக்கையாளர்களும், தொலைக்காட்சி நிருபர்களும் வந்து நிற்கவும், என்ன நடக்கின்றது என்று எட்டிப்பார்த்தான்..

சக்தி நடுவில் நிற்க எல்லோரும் அவனைச் சுற்றி நின்று ஆளுக்கொரு கேள்விக் கணைகளைத் தொடுக்க அனாயாசமாக அதற்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்...

டெல்லியில் அமைதியாக நடந்த ஒரு போராட்டத்தில் கலவரத்தைத் தூண்டி இருந்தனர், அதைத் தனது பாணியில் அடக்கி கலவரக்காரர்களைக் கைது செய்து அழைத்து வந்திருந்தான், அந்தப் போராட்டத்தில் கைது செய்தவர்களைப் பத்திரிக்கையாளர்களுக்கு முன்பாக நிறுத்தி இருந்தான். பல கேள்விகள் அவனை நோக்கி எழும்பினாலும்

அவனது அதே ஸ்டைலில் அதே கெத்தில் நின்று பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

அதைப்பார்த்த ஷரவனுக்கு, எங்க போனாலும் இவன் திமிரு மட்டும் அடங்காது போலிருக்கு என்று மனதில் அவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான்...

சக்தி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு முடிந்து உள்ளே வரவும் அங்கு அமர்ந்திருந்த தனது மாமனாரைக் கண்டும் காணாதது போல உள்ளே சென்றான்....

ஷ்ரவனோ “கொழுப்புக் கொழுப்பு உடம்பெல்லாம் கொழுப்பு...நான் இருக்கறதைப் பார்த்திட்டு பார்க்காதமாதிரியே போறான் பாரு, காட்டுப்பய...” எனக் கோபத்தில் முகம் சிவந்து அமர்ந்திருந்தான்...

சக்தி உள்ளே சென்று ஒரு மணிநேரம் இருக்கும்... ஷ்ரவனை உள்ளே அழைக்கவும் இல்லை, என்னவென்று கேட்கவும் இல்லை. 

ஷ்ரவனோ கோபத்தில் ‘எதுக்குடா இவனைப் பார்க்க வந்தோம்,வராமலே இருந்திருக்கலாம்’ என்று எழுந்து வெளியே செல்ல போகும் போது... பின்னாடியே ஒரு கான்ஸ்டபிள் ஓடிவந்து 

“சார் உங்கள உள்ளே அழைக்கிறார்கள்” என்று சொல்லவும்,

சிறிது நிதானித்த ஷ்ரவன் உள்ளே சென்றான்...

சக்தி மாமனாரை கண்டதும் நக்கலாக உதடு சுழித்துச் சிரித்தவன்... ஹிந்தியில் பேசினான் “என்ன சார் பிரச்சனை எதுவும் கம்பளைண்ட் கொடுக்கணுமா?”

ஷ்ரவனோ “இல்லை” என்று தலையாட்டியவன்... 

“அது என் பொண்ணு” என்று ஏதோ சொல்லத் தொடங்க...

“சார் இந்தப் பொண்ணு பிரச்சனை, வரதட்சணைப் பிரச்சனை, மருமகன் கொடுமை இதெல்லாம் நீங்க கமிஷனர் ஆபீஸிற்குப் போய் தான் கம்ப்ளைன்ட் கொடுக்கணும் இது ஏ.ஐ.ஜி ஆபிஸ்...” என்றதும்.

“இந்த நக்கல் நையாண்டி எல்லாம் என்கிட்ட வேண்டாம் சக்தி... நான் ஒன்னும் முட்டாள் இல்லை எனக்குத் தெரியும், எதுக்கு எங்க போகணும் என்று. இப்ப நான் உன்கிட்ட பேச வந்தது என் மகளுக்காக மட்டுமே” எனச் சொல்லவும்.

“உங்க மகளைப் பற்றி எதுக்கு சார் என்கிட்ட பேசறீங்க, எனக்குக் கல்யாணம் முடிஞ்சு அழகான மனைவி இன்னும் இருக்கா, கொஞ்சம் நாளில் பாப்பா வேற வந்துரும்... நான் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறதா ஐடியா எல்லாம் எனக்கு இல்லை சார் ,என் பொண்டாட்டி என்னைக் கொன்றுவா சார்...”

ஷ்ரவன் இதுக்குமேல இங்கிருந்தால் சண்டை வரும் என்று வெளியே செல்ல எழுந்தவன் சக்தியை நோக்கி " நீங்க நல்ல சொகுசா சந்தோஷமா இருக்கறீங்க எனப் பார்க்கும்போதே தெரியுது; ஆனால் ஒன்னு, உன்னைக் காதலித்து கல்யாணம் பண்ணின பாவத்துக்காக, என் பொண்ணு உனக்காகத் தினமும் ஏங்கிட்டிருக்கா, கர்ப்பமாக இருக்கற இந்த நேரத்துலயும் என் மகளை அழவைக்குற பாரு , இதுக்காகத் தான்டா உன்னை எனக்கு இப்போவும் பிடிக்க மாட்டேங்குது. என் பொண்ணுக்காக மட்டும் தான் உன் முன்னாடி வந்து நிக்கிறேன்... அந்தப் பைத்தியக்காரி உன் மேல தான் பைத்தியமா இருக்கா... ஊருக்கு நல்லது செய்வதைவிட பொண்டாட்டி புள்ளையவும் கொஞ்சம் கவனிங்க ஏ.ஐ.ஜி சார்" என்று திரும்பி நடந்தவனை...

"ஹலோ சார் ஷன்மதி என் மனைவி, வயிற்றில் இருக்கறது என் குழந்தை, அவங்களை எப்படிப் பார்த்துக்கணும்னு எனக்குத் தெரியும், நீங்க உங்க பொண்டாட்டி புள்ளைகளைக் கவனிங்க சார்" என்றதும், 

“அடுத்தவங்க குடும்பத்துக்குள்ள புகுந்து நல்ல வாழ்ந்திட்டிருந்தவங்களைப் பிரிச்சுட்டு நீங்க பேசக்கூடாது"

"ஷன்மதி என் மகளுங்கூட அது உங்களுக்கு நியாபகமிருக்கட்டும் சார் நானில்லாமல் அவ உங்களுக்குனு வந்திருக்க வாய்ப்பிள்ளை சார், அதையும் உங்க மனசுல நல்ல பதியவைச்சுக்கோங்க, நான்தான் உன்னை அடிச்சேன், எனக்கு எதுவேணாலும் பண்ணு நான் தாங்கிப்பேன், என் பொண்ணு இப்படி வாழ்க்கைய வெறுத்து வாழ்றத பார்த்து, அதைத் தாங்கிக்க முடியாமல்தான் உங்கிட்ட வந்து இப்படிப் பேசிட்டிருக்கேன்" என்றவன் கிளம்பிவிட்டான்.

ஷ்ரவன் சென்றதும் அதுவரையிருந்த மனநிலை மாறி ஷன்மதியின் நியாபகம் அதிகமாகவரவும் தனது போனை எடுத்து அதிலுள்ள அவளது போட்டோவைப் பார்த்தான்...

வயிறு நன்றாக மேடிட்டு வயிற்றில் கைவைத்து அமர்ந்திருந்தாள் ஷன்மதி அந்தப் போட்டோவில்...

சில கோபங்களும் வைராக்கியங்களும் ஒரு அன்பான வார்த்தையில் நீர்த்துப்போய்விடும்...

ஆனால் அதை ஏன் பேசவேண்டும் என்ற மனதின் அகங்காரத்தால் பல இழப்புகளைச் சந்திக்க நேரிடும்போது மட்டுமே.

“ஐயோ தப்பு பண்ணிட்டமே” என்று அழுது புலம்பினாலும் இழந்தது இழந்ததுதானே...அது அன்பான உறவாக இருந்தாலும் சரி, அது அன்பான உறவினர்களாக இருந்தாலும் சரி.

விஷ்ணு ஷன்மதியை திட்டிக்கொண்டிருந்தான்...

“அறிவிருக்கா முகம் கைகாலெல்லாம் இப்படி வீங்கிட்டுப்போகுது, வா அம்மாகிட்ட இப்பவே போவோம், நீ பாக்குற டாக்டர்கிட்ட அப்புறமா போயிக்கலாம்” என்றவன் சீனியரிடம் அனுமதி வாங்கியவன், ஷன்மதி எவ்வளவு சொல்லியும் விடாப்பிடியாக அவளை அழைத்துச் சென்றான்... நோராக விஷ்ணு அம்மா காவ்யா வேலை பார்க்கும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று விட்டான்...

காவ்யா அவளைப் பரிசோதனை செய்து பார்த்து விட்டு " ஷானுமா மனசுக்குள்ள என்ன போட்டு குழப்பிக் கொண்டிருக்கப் பிபி சூட்டப் ஆகுதுடா...இரண்டு நாள் இங்க இருக்கியா...நான் பார்த்துக்குறேன்" என்றாள்.

ஷன்மதி "இல்லை ஆன்டி நான் நல்லாதான் இருக்கேன், எனக்கு ஒன்னுமில்லை நான் வீட்டுக்குப்போறேன்" என்று பிடிவாதம் பிடிக்க...மாத்திரை மருந்துகள் எழுதிக்கொடுத்து, “ரொம்பக் கவனமாக இருக்கணும், பாப்பாவோட அசைவை கவனிக்கனும்” என்று நூறுமுறை சொல்லிருப்பாள் காவ்யா, ஷன்மதியோ சரி சரி எனத் தலையாட்டிக் கொண்டிருந்தாள்.

மருத்துவமணையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தவன், ஆயிரெத்துட்டு அறிவுறுத்தல் ஷன்மதிக்கு, நேரடியாகவே நிலாவை அழைத்து "அத்தை அம்மாகிட்ட செக்கப்புக்கு கூட்டிட்டுப்போனேன்..பிபி ரொம்ப ஏறுது கவனமாக இருக்கச் சொன்னாங்க...இரண்டு நாள் வீட்டுல இருக்கட்டும்" என்று சொல்லி விட்டுட்டு வந்தான்.

அடுத்த நாள் ஆபிஸிற்கு வந்த விஷ்ணு தனது இருக்கையில் அமர்ந்தவன் ஷன்மதி வரவில்லை என்பதால் ஆபிஸிற்குள்ளே இருக்கவேண்டிய சூழ்நிலை...

வேலை செய்துக்கொண்டிருந்தவனின் டேபிளில் டீயை ஒரு கரம் வைக்கவும் நிமிர்ந்துப் பார்க்க ஸ்ரீஜா நின்றிருக்க, டீ குடித்துக்கொண்டே அவளை மேலும்கீழும் கண்களால் அளக்க, அவனது பார்வையின் வித்தியாசத்தை உணர்ந்தவள் தன்னுடைய இடத்திற்குச் சென்றதும், இரண்டு நிமிடத்தில் அவளருகே வந்தவன்...

"ஸ்ரீ " என்க.

ஸ்ரீஜா நிமிர்ந்துப் பார்த்தவள் என்ன என்று கண்களாலயே வினவ "ஓடிப்போகலாமா" என்று விஷ்ணு கேட்க...

சட்டென்று எழும்பியவள் "என்ன கேட்டீங்க" என ஸ்ரீஜா ஆவேசத்தில் நிற்க.

“நானா ?என்ன கேட்டேன்? நான் சும்மாதான நிக்குறேன் எதுக்கு இப்போ அவசரமா எழும்பின...?”

"நீங்க ஒன்னுமே சொல்லலையா சார்" எனச் சந்தேகத்துலயே கேட்க...

“கனவு எதுவும் கண்டுயா? நான் டைப் பண்ணி முடிச்சிட்டியானு கேட்க வந்தேன்...”

"ஓ...இன்னும் முடிக்கலை சார் ஒரு பத்து நிமிஷம்" என்றாள்.

"சரி முடிச்சுட்டு நீயே கொண்டு வந்துக்கொடு" என்றவன்...அவனிடத்திற்குச் சென்று குனிந்துகொண்டு சிரித்தான்.

ஸ்ரீஜாவோ “ஓடிப்போகலமானு கேட்டுட்டு இல்லைனு சொல்றாங்க? இல்லை எனக்குத்தான் தப்பாக்கேட்டுதா?” என யோசனையோடே அவன் சொன்னதை டைப் செய்து முடித்தவள் அவனிடம் கொண்டு நீட்ட...வாங்கிப்பார்த்தவன் விழுந்து விழுந்து சிரிக்க.

‘எதுக்குச் சிரிக்குறாங்க கிறுக்குப் பிடிச்சிட்டா’ என்ற ரீதியில் பார்க்க, விஷ்ணு ஒரு பென் எடுத்து அவள் கொடுத்த பேப்பரில் வட்டமிட்டு அவளிடம் திருப்பிக்கொடுத்தான்...அதை வாங்கிப் பார்க்க, அவன் சொன்ன வார்த்தையை அப்படியே திரும்பப் திரும்ப அடித்து வைத்திருந்தாள்... தனது தலையில் தானே அடித்துக்கொண்டு, அதைக் கிழித்துப்போட்டவள்....

கையைநீட்டி எச்சரித்தவள் “இனி இதைமாதிரி எதாவது பேசினீங்க, நான் சீனியருக்கிட்ட சொல்லிடுவேன் பார்த்துக்கோங்க... யாருமில்லாத பெண்ணுனா என்னவேணா பேசுவீங்களா? பார்த்தா மைதாமாவு மாதிரி இருந்துட்டு, கேடி மாதிரி பேசுறதுப்பாரு” என்று திட்டியவள். 

தனது இடத்திற்குச் செல்ல எத்தனிக்க, அவளால் முடியவில்லை என்னவென்று திரும்பி பார்க்க, அவளது பின்னலை பிடித்து தனதருகில் இழுத்து " சம்மதிச்சாலும் இல்லைனாலும் நீதான்டி என் மனைவி...இதுவரைக்கும் எவளாலையும் என் மனசுக்குள்ள வரமுடியலை...நீ தான் என் மனசுக்குள்ள வந்த முதல் பெண், வாழ்க்கை குடுக்குறதுக்காகவெல்லாம் நான் தியாகியில்லமா...என் வாழ்க்கையே நீதான்னுதான் உன்கிட்ட வர்றேன்..புரியுதா.

அப்புறம் இந்தச் சீனியருக்கிட்ட சொல்லிருவேன்னு மிரட்டாத, அதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் புரியுதா, பயந்து ஓடிப்போக நான் என்ன சின்னபிள்ளையா, உன்னைக் கல்யாணம் பண்ணிக்கத் தைரியாமாக இறங்கியிருக்கச் சிங்கம்” என்று மீசையை லேசாகப் பிடித்துக் கண்ணடித்துச் சொல்ல...

“ஏன் சார் இப்படிலாம் பேசுறீங்க, நான்தான் என்னைப் பத்தி சொல்லிட்டனே, ஒதுங்கிப்போகவேண்டியதுதான...எதுக்கு மறுபடியும் மறுபடியும் வந்து தொல்லைக்குடுக்கறீங்க...நான் ஷன்மதி அக்காகிட்ட சொல்லுவேன்” சிறுபிள்ளைப்போல ஒருவிரலை நீட்டி மிரட்டியவளுக்கு அழுகையும் வந்தது தன்னிறக்கத்தில்...

அவளின் அருகில் வந்தவன் “ப்ளீஸ் என்கூட எவ்வளவு வேணா சண்டைப்போடு, திட்டு...தயவு செய்து அழமட்டும் செய்யாத, நீ அழுதா மனசை எப்படியோ பிசையுதுடி...” என்று அவளை நெருங்கி கண்ணீரைத் துடைக்கவும், அமைதியாகியவளை இழுத்து தன்னோடு கட்டிக்கொண்டான்...

அவளோ திமிறி விலக நினைக்க, இன்னும் அவனுக்குள் இறுக்கினான்...அவளோ சத்தமாகக் குலுங்கி அழுதாள், மெதுவாக அவளது தலையை வருடி விட அடங்கியவள், அமைதியாகினாள்...

இப்போது விடுவித்தவன் அவளது கண்களைத் தலை சரித்துப் பார்க்க, அவளோ தன் முகத்தை மறுபக்கமா திருப்ப... “வேண்டாம் வேண்டாம்னு உன் மனசை நீயே ஏமாத்திக்காத...யோசி” என்று சொல்லியவன் அமைதியாகத் தன்னிடத்திற்குப் போய் இருந்துக்கொண்டான்....

அவனது முகமோ சந்தோஷத்தில் பிரகாசிக்க, ஸ்ரீஜாவின் முகமோ கலங்கியிருந்தது...

அத்தியாயம்-18

அன்று காலையிலேய ஷன்மதிக்கு சக்தியைப் பார்க்கணும்போலத் தோன்ற, அவர்களது கல்யாண போட்டோவை எடுத்துவைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்...அதை அப்படியே தனது கேமராவில் போட்டோ எடுத்தவள்...

சக்திக்கு அனுப்பி வைத்துவிட்டு அதனின் கீழ் இப்படியாக எழுதினாள்.

"நான் தெரியாம தப்புப் பண்ணிட்டேன் எத்தனையோ முறை உங்களுக்கு மன்னிப்பும் கேட்டு மெசேஜும் பண்ணிட்டேன், அவ்வளவு வெறுப்பாகிட்டுதா என்மேல...

நம்மக் காதல் அவ்வளவுதானா...ஒருத்தரை ஒருத்தர் மன்னிக்கூட முடியாதளவுக்குத்தான் நம்மக் காதல் பலவீனமாக இருக்குதா...அவசரமா அவசராமாக மனச புரிஞ்சுக்காம காதல் கல்யாணம்னு போயிட்டமோ நம்ம...எனக்கே இப்போ அப்படித்தான் தோணுது, நீங்க உண்மையாகவே என்னைக் காதலித்துதான் கல்யாணம் செய்தீங்களானு சந்தேகமா இருக்கு சக்தி...உங்களுக்கு எப்படினுத் தெரியலை, ஆனா எனக்கு நீங்க வேணும் சக்தி, இதுக்குமேல உங்களைப் பார்க்காம, உங்ககிட்ட பேசாம இருக்க முடியலை, நினைக்க நினைக்க எங்கயோ வலிக்குது முடியலை...மிஸ் யூ லாட்...தவுசண்ட்ஸ் ஆஃப் கிஸ்ஸஸ் டூ யூ"என அனுப்பிவிட்டு ஆபிஸிற்குப் போகணும் வீட்ல இருந்தால் பலவித எண்ணங்களும் வருது என்று கிளம்பினாள்

இரண்டு நாள் கழித்து மறுபடியும் ஷன்மதியை இன்று பார்த்த விஷ்ணுவிற்குக் கவலையாக இருந்தது, அவளது முகமும் உடம்பும் இன்னும் அதிகமாக வீங்கியிருந்தது... 

நிலாவும் கதிரும் அவளை நன்றாகத்தான் கவனித்துக்கொள்கின்றனர் ஆனாலும் மனதின் தாக்கம் உடலிலும் தெரிந்தது...

“அம்மா கொடுத்த மெடிசின்ஸ் எல்லாம் சாப்டுறியா எப்படி” என்று கேட்கவும்...

“ஏன் கேட்குற விஷ்ணு, மெடிசின்ஸ் எல்லாம் சரியாதான் சாப்பிட்டேன்” என்றாள்.

“இல்லை அம்மா சொல்ற மாதிரி ஹாஸ்பிட்டல்ல இருக்குறீயா ஒரு இரண்டு மூணு நாளைக்கு, இப்போ ரொம்ப முகமெல்லாம் வீங்கியிருக்கு பாரு” என்று காரின் கண்ணாடியில் அவள் முகத்தைப் பார்க்கவைத்தவன்..

“நீ நான் சொல்றதைக் கேட்கமாட்டியா...ஹரிதா ஆன்டிக்கு போன் பண்ணி சொல்றேன்” என்று அழைக்கப்போக...போனைப் பிடுங்கி தனது கையில் வைத்துக்கொண்டவள்.

“யாருக்கும் எதுவும் சொல்லவேண்டாம்... உடனே பதறிட்டு வருவாங்க...எல்லாம் சரியாகிடும் விடு” என்றவளை ஆபிஸில் அவளை விட்டுவிட்டு, ஸ்ரீஜாவை அழைத்து “ஷன்மதிக்கு டீ கொடுக்க வேண்டாம், பிபி அதிகமாயிட்டு, அவளை கொஞ்சம் கவனமாக பார்த்துக்கோ சரியா?” என்றவன்...

“எதுனாலும் எனக்கு போன் பண்ணு ஸ்ரீ, என் போன் நம்பர் உன்கிட்ட இருக்கா?”

"ம்ம்"

“என்ன ம்ம் .வாயத் திறந்து சொல்லு” என அதட்டினான்.

“இருக்கு சார்...போன் பண்றேன் சார்” என்று பயந்து உளறியவளைப் பார்த்தவன்...நிதானித்து 

“சாரிம்மா, ஷன்மதி இப்படி இருக்காளேனு டென்சன்...அதா உன்கிட்ட காண்பிச்சுட்டேன்” என நெற்றியில் கைவைத்து சொல்ல, 

“பரவாயில்லை சார் நான் அவங்களைப் பார்த்துக்குறேன்” என்றதும்...சீனியருடன் கோர்ட்டிற்கு சென்றான்...

ஒரு பதினோரு மணிவாக்கில் கோர்ட்டிலிருந்த விஷ்ணுவின் போனில் அழைப்பு தொடர்ந்து வந்துக்கொண்டிருக்க எடுத்துப் பேச ஸ்ரீஜா தான் அழைத்திருந்தாள்.

“சார் சார் அக்கா மயங்கி விழுந்துட்டாங்க சார் என்ன பண்ணனும் தெரியலை...” என்று கேட்டதும்தான் அவசரமாக ஆம்புலன்ஸிற்கு அழைத்து சொல்லியவன், காரை எடுத்துக்கொண்டு வேகமாக வந்தவன், குடும்பத்தில் ஷ்ரவனுக்கும், தன் அம்மாவிற்கும் எல்லோருக்கும் அழைத்து சொன்னவன்...

அடுத்த ஒரு மணி நேரத்தில் மருத்துவமனையில் ஷன்மதியை சேர்த்திருந்தான்...

ஒட்டு மொத்தக் குடும்பமும் அங்குதான் இருந்தனர் இப்பொழுது...

காவ்யாவோ அழுதாள்...மருத்துவராய் இருந்தாலும் பரிசோதனை செய்துக்கொண்டிருக்கும்போதே அவளது கண்களில் கண்ணீர் ஷன்மதியின் நிலையை நினைத்து, ஷன்மதியை தனது மூத்தபெண்ணாக நினைப்பவள், விஷ்ணுவைப்போலதான் ஷன்மதி காவ்யாவிற்கு.

உயர் இரத்த அழுத்தம் காரணமாக மயங்கியிருந்தாள்...எட்டு மாதம் முடிந்திருக்கின்ற நிலையில் பிள்ளையை வெளியே எடுக்க வேண்டிய சூழ்நிலை, அது எப்படி வேண்டுமானலும் ஆகலாம், சொல்ல முடியாத நிலை...

அவசர சிகிச்சை பிரிவில் ஷன்மதிக்கு வைத்தியம் நடந்துக்கொண்டிருந்தது...

சக்தி காலையிலயே தனது மொபைலை பார்க்கவில்லை...இப்போது கொஞ்சம் ஃபீரியானதும் ஷன்மதியின் மெசேஜ் பார்த்தவனுக்கு அப்படி மனதில் பாரமேறிக்கொள்ள...மனைவியிடம் பேச முடிவு செய்து அழைக்க...அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது....திரும்ப திரும்ப முயற்சி செய்தவன்...

இப்போது விஷ்ணுவிற்கு அழைக்க அப்போதுதான் அவன் ஷன்மதி மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் விசயத்தை சொல்ல...அப்படியே போனை நழுவவிட்டுவிட்டான்.

சிறிது நேரம் அவனது மூளை மறத்துப்போய்விட்டது...பதறியவன் உடனே அங்கிருந்து சென்னைக்கு கிளம்பினான்.

இங்கு மருத்துவமனையிலயோ காவ்யா ஐ.சி.யூவிலிருந்து வெளியே வந்தவள்...சக்தி இல்லையாதலால் ஷ்ரவனிடம் சில பேப்பர்ஸில் சைன் வாங்க, "அண்ணா ஷன்மதி இன்னும் கொஞ்ச நேரத்துல முழிச்சிட்டானா நார்மல் டெலிவிரிக்கு ட்ரை பண்ணுவோம், இல்லைனா சிசேரியன்தான் பண்ணவேண்டி வரும்...குழந்தையோட நிலைய சொல்லமுடியாது” என குரல் கமற சொல்லியவள்..

“நான் இருக்கேன் என்னால முடிஞ்சதை, அவளுக்கு எது நல்லதோ அத பண்றேன்” என்றவள் உள்ளே சென்றுவிட்டாள்

விமானத்தில் இருந்த சக்திக்கு உயிரே கையில் இல்லை, எவ்வளவு கெஞ்சினா பேசச்சொல்லி பேசிருக்கலாமோ என்று சீட்டில் தலை சாய்த்து அமர்ந்திருந்தான்...கடவுளிடம் ஆயிரத்தெட்டு வேண்டுதலுடன்.

காலையிலயே அவளனுப்பிய குறுந்தகவலை திரும்ப திரும்ப வாசித்தான்...

சென்னையில் இறங்கி விஷ்ணுவிடம் கேட்டு மருத்துவமனை வந்து சேர...

முதலில் பார்த்தது ஷ்ரவனைத்தான், மகளின் நிலையை நினைத்து வருந்தியவன், காவ்யா வந்து கையெழுத்து வாங்கி சென்றதும் மயங்கி விழுந்துவிட்டான், தனியாக அறையெடுத்து அவனுக்கு மருந்துக்கொடுத்து படுக்க வைத்திருந்தனர்...மனதின் அதிக அழுத்தத்தினால் மயங்கியிருந்தான்.

தன்னால்தான் தன் மகளுக்கு இந்த நிலை என தூக்கத்திலும் புலம்பும் நிலை...

“சக்தி அத்தான்” என்று அவனைக் கட்டிக்கொண்டு அழுதான் விஷ்ணு...

யாருமே எதுவும் சொல்லவில்லை, இப்போது சக்தி கட்டிக்கொண்டு அழவும் சக்திக்கு உடல் சிறிது நடுங்க தான் செய்தது...

மெதுவாக விஷ்ணுவின் காதில் “மதி எங்கடா இருக்கா?” என்று கேட்கவும், சக்தியை அழைத்துக்கொண்டு, ஷன்மதி இருந்த ஐ.சி.யூவிற்குள் நுழைந்து செவிலியிடம் பேசிவிட்டு வந்து சக்தியை அழைத்து செல்ல...

பார்த்தவனிற்கு இதயம் வேகமாக துடித்தது, மெதுவாக சென்று அவளது கன்னத்தில் கைவைத்து நின்றான்....

“மதி” என்று தனது உதட்டினை மெதுவாக அசைத்து அழைக்கவும், அவனது கண்களிலிருந்து கண்ணீர் அவளின் கன்னங்களில் உருண்டது...

அவனது அழைப்பிற்கு மதியின் கண்களில் ஒரு நொடி அசைவு தோன்றி நின்றது...

அவளது வயிற்றினை தொட்டுப் பார்க்க அது காலியாக இருக்கவும், ஒரு நொடியில் உலகம் அசைவைதை நிறுத்திவிட்டதோ என்று நினைக்கும் அளவிற்கு அதிர்ச்சியில் நின்றிருந்தவன்...

“பிள்ளையெங்கடா, என்னாச்சனு சொல்லித்தொலையேன் ஒன்னொன்னா கேட்கணுமா” என்று அவசரப்பட்டவனை 

“சத்தம் போடாதிங்க சார்” என்று செவிலி அதட்டியவள் " உங்க பாப்பாவ இன்குபேட்டர்ல அப்சர்வேஷன்ல வச்சிருக்காங்க சார். பெரிய டாக்டர்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு அங்கப்போய் பாருங்க" என்றாள்...

விஷ்ணுவை ஏறிட்டுப் பார்க்க அவனும் ஆமாம் என்று தலையாட்டிவிட்டு, சக்தியை அங்கே அழைத்து சென்றான்...மனைவியை பார்த்து உடைந்துப்போனவன் இப்போது 

இன்குபேட்டரில் உயிர் பிழைக்க வைக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு வைத்திருந்த அந்த பிஞ்சுக்குழந்தையைப் பார்த்ததும்

திமிர், கர்வம், மனைவி மீதான பிடிவாதம் எல்லாம் சரிந்து மொத்தமாக விழுந்ததுப்போல இருந்தது.

என்னோட பிடிவாதம்தான் மனைவி குழந்தையை இப்படி படுக்க வைத்திருக்கு என்ற குற்றவுணர்ச்சி..

அங்கு அதிகநேரம் இருக்க முடியாது என்பதால் அறைக்குள் வந்து அமர்ந்தவனின் தோளை நிலா வந்து பிடித்துக்கொண்டாள்.

இப்போது ஷ்ரவன் எழும்பி அமர்ந்தவன் சக்தியை தீர்க்கமாக பார்த்தான், 

“நான் உன்கிட்ட வந்து பேசும்போது என்ன சொன்ன என் மனைவியையும் பிள்ளையையும் நான் பார்ததுப்பேனு சொன்ன...இதுதான் நீ பார்த்துக்கற இலட்சனமா??” என்று கேட்பதுபோல இருந்தது...

ஷன்மதி கண்விழிக்க இரண்டு நாள் ஆகியது, கண்விழித்து பார்த்தவளின் முதல் கேள்வியே பிள்ளையை எங்கே என்றுதான், யாரும் பதில் சொல்லவில்லை என்றதும் கத்தி கதற காவ்யாதான் வந்து உண்மையை சொல்ல 

“எனக்கு இப்பவே பாப்பாவைப் பார்க்கணும்” என்று அடம்பிடித்தாள்...

“ஆப்பரேஷன் செய்துதான் பாப்பவை வெளிய எடுத்திருக்கு உன்னால இப்போதைக்கு அங்க போக முடியாது பாப்பாவையும் இங்க கொண்டுவரமுடியாதும்மா ஒருவாரம் பொறுத்துக்கோ” என்று சமாதானப்படுத்தினார்...அவள் சத்தம் போடவுமே வெளியே நின்றிருந்த சக்தி உள்ளே ஓடி வந்திருக்க இப்போதுதான் அவனைப் பார்த்தாள்...

"நீ எதுக்கு இங்க வந்த செத்துட்டோமா உயிரோட இருக்கமானு பார்க்க வந்தியா...எங்க கெட்ட நேரம் நாங்க சாகாம பிழைச்சிட்டோம்"என்று அரற்றியவளின் அருகே விரைந்து வந்து அவளது வாயை முடியவன், 

“எதுவும் பேசிடாத ப்ளீஸ்” என்றான்...கோபத்தில் அவனது நெஞ்சில் அடித்தவள் “செத்தா தான் உன் கோபம் போகுமா? உயிரோடிருக்கும் போது உன் கோபம் போகாதா? இப்போ பார்க்கவந்திருக்க, இதை முன்னாடியே செய்திருக்கலாம்தான....இப்போ நீ எனக்கு வேண்டாம் என் பாப்பாவையும் நீ கஷ்டப்படுத்தி அழவச்சிட்ட போ போ” என்று அடித்தவளை தன்னோடு அணைத்தவனின் கண்களிலும் ஈரம்...

அப்படியே அவனது மார்பிலயே மருந்தின் வீரியத்தில் தூங்கியவளை படுக்க வைத்தவன் வெளியே வந்தான் ஒரு முடிவோடு...

விஷ்ணு மூன்று நாள் மருத்துவமனை வாசம் முடிந்துதான் ஆபிஸிற்கு வந்தான், அவன் உள்ளே நுழையவும் ஸ்ரீஜா " ஷன்மதி அக்கா எப்படி இருக்காங்க"

விஷ்ணு திரும்பி அவளைத் தீர்க்கமாக பார்த்தவன் “இவ்வளவு கல் நெஞ்சக்காரியா நீ. அன்றைக்கு எவ்வளவு சீரியஸ் கண்டிஷன்ல இங்கயிருந்து தூக்கிட்டுப்போனேன், பாப்பா பிறந்திருக்குனு போன் பண்ணி நானா தானடி சொன்னேன், நீ பார்க்க வந்தியாடி இல்லை அட்லீஸ்ட் எனக்காவது போன் பண்ணியாவது கேட்டயாடி...இப்போ நான் இங்க வந்ததுக்கு அப்பறமா கேட்கற, ச்ச"

"ஏன் இப்படி பேசறீங்க சார்..புரியாம, உங்களுக்குத் தெரியாதா நான் பாப்பாவெல்லாம் பார்க்க வரக்கூடாது"

"லூசா நீ , யாரு சொன்னா நீ பார்க்க வரக் கூடாதுனு"

"அது, அது எங்க ஊருல சொல்லிருக்காங்க, நான் இப்படி புதுசா பாப்பா பிறந்தா பார்க்ககூடாது, தெரியாம போய்ட்டேன் அதுக்கு அந்த பெரியம்மா என்னை கூப்பிட்டு நேரடியாகவே சொல்லிட்டாங்க இனி இப்படி போகாதனு, அதான் நான் போகிறதில்லை"

விஷ்ணு தன் நெற்றியில் அடித்தவன்...

“இது வேறயா, எந்தப் பைத்தியமாவது எதாவது சொன்னா அத அப்படியே கடைபிடிப்பியோ...முட்டா பீசாடி நீ?” எனக் கோபத்தில் அவளருகில் போக, அடிக்க வர்றானோ என்று பயந்து கண்களை முடி குறுகி நின்றிருந்தாள்...அவளின் நிலையைக் கண்டு வருந்தியவன்... “என்னடா உலகம் இது இப்படியா ஒரு சின்னப் பெண் மனதைக் காயப்படுத்தி அத உண்மைனு நினைக்க வச்சிருக்காங்க” என வருந்தினான்.

"ஸ்ரீ யாரும் என்னமும் சொல்லட்டும்...எங்களுக்கு நீ , குறிப்பா எனக்கு நீ என் மனதை திறக்க வந்த தேவதை...உன்னோட கடந்தகால வாழ்க்கையை நினைக்காத தயவு செய்து.

இனி உன்னோட எதிர்கால வாழ்க்கையில் என்னவேணுமோ அத செய், என்னையும் கொஞ்சம் புருஞ்சுக்கோ...” என்றவன் வெளியே சென்றுவிட்டான்.

ஸ்ரீஜாவுக்கோ அவனது காதல் புரிந்தாலும், நடைமுறைக்கு ஒத்துவராது என்று தனது எண்ணங்களுக்கு கடிவாளமிட்டு வைத்திருந்தாள்.... 

ஒருவாரம் கழித்துதான் சக்தி-ஷன்மதியின் மகள் இயற்கையாக சுவாசம் எடுக்க ஆரம்பித்தாள்...ஆனாலும் இன்னும் ஒரு மாதம் இன்க்குபேட்டரில்தான் இருக்க வேண்டும் என்பதால் ஷன்மதியும் அங்குதான் இருக்கவேண்டிய சூழ்நிலை...

பிள்ளை பசியில் அழும்போதும், பசியாற்ற மட்டும் அங்கு சென்று பிள்ளையை பார்க்க முடியும்...மற்ற நேரங்களில் குழந்தை அங்குதான் இருந்தது...சக்தி ஒரு மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு ஷன்மதியுடனே இருந்தான் இரவும் பகலும்.

ஷன்மதி இப்போது தனது வாயைப்பூட்டிக்கொண்டாள்...சக்தி என்னப் பேசினாலும் தலையை ஆட்டிப் பதில்சொல்லுவாள் அவ்வளவே.

இப்படியாக ஒருமாதகால முடிந்து வீட்டிற்கு அழைத்து செல்ல ஷ்ரவனும் ஹரிதாவும் வந்திருக்க சக்தி ஒன்றுமே சொல்லவில்லை, இப்போது மனைவி பிள்ளையின் நலனே முக்கியமாகப்பட ஷன்மதி அவங்க வீட்டுக்குப்போறதுதான் நல்லது என்று அமைதியாக இருக்க...

ஷன்மதி "டாடி நாங்க எங்க வீட்டிற்கு போறோம்"

ஷ்ரவனும் ,சக்தியும் இதை எதிர்பார்க்கவில்லை உடனே ஷ்ரவன் சக்தியைப் பார்க்க " டாடி அவங்க எதுவுமே சொல்லலை, இது நானா எடுத்த முடிவு " என்று சொன்னவள் சக்தியை ஏறிட்டுப்பார்க்க...தன் தகப்பனுக்கு அழைத்து காரை எடுத்தவரச் சொன்னவனுக்கு தரையில் நிற்கமுடியாதளவுக்கு சந்தோஷம்...

இதில் ஷ்ரவன் ஒன்றுமே சொல்லாமல் ஒதுங்கிக்கொண்டான்...ஏற்கனவே மகளும் பேத்தியும் மரணத்தின் விளிம்பு வரை சென்றுவந்தாயிற்று ....இனி என்ன மண்ணாங்கட்டி ஈகோ என்று தனது மகளுக்காக விட்டுக்கொடுத்தான்.

சக்தி மனைவியையும் மகளையும் வீட்டிற்கு அழைத்து வந்தவன் தங்களது அறையை மகளுக்காக சிறிது மாற்றினான்.

மகளை கையில் தூக்குவதற்கு பயந்தவன் கட்டிலிலயே படுத்திருந்தால் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொள்வான்...ஒரு நாள் நிலா வந்து அவனிடம் பிள்ளையை கையில் கொடுக்க...பயந்து அவன் கையெல்லாம் நடுங்கி "ம்மா பாப்பவ எடும்மா, பயமாயிருக்கு அழுதிருவாம்மா" என்க...

கதிர் உட்பட அனைவரும் சிரிக்க...சக்தியின் மகள் இருந்த பிரச்சனைகளையெல்லாம் மறந்துப்போக பிறந்திருந்தாள்...

இன்னும் இரண்டு நாளில் சக்தி டெல்லி செல்லவேண்டியதிருப்பதால் ஷன்மதியிடம் வந்தவன்" மதி" என்றழைக்க...அவள் மகளை கையில் வைத்துக்கொண்டிருந்தவள், கணவனை ஏறிட்டு பார்க்க...

"இங்க இருந்துப்பியா...இல்லை உங்க வீட்டுக்குப்போறீயா" என்று கேட்க...

ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள்...

“போன மாசம் வரைக்கும் யாரோட துணையுமில்லாம இந்த ரூம்லதான் பைத்தியாக்காரி மாதிரி வாழ்ந்தேன், இப்போ என்ன புதுசா அக்கறை வந்து கேட்கறீங்க...?”

அவளது அருகில் அமர்ந்தவன் மெதுவாக, பிள்ளையின் தலையை வருடிக்கொடுத்தவன், மனைவியின் முகத்தை கரங்களில் பிடித்தவன்... அப்படியே அவளது உதட்டினை அழுந்தக்கடித்து முத்தம் வைத்தான்...அவளோ அவனது கையைதட்டிவிட...இன்னும் நெருங்கி வாயோடு வாயை வைத்து அவளது உயிரோடு உயிரை இழுத்துக்கொண்டிருந்தான்...

அத்தியாயம்-19

சக்தி ஷன்மதிக்கு முத்தமிட்டவன் மெதுவாக அவளை விடுவித்து எழும்பவும்...

“நீ முத்தங்கொடுத்தா நான் உடனே மயங்கிடனுமா...உன் முத்தமும் வேண்டாம் நீயும் வேண்டாம் போ, நான் செத்துப்போயிருந்தா என்ன பண்ணிருப்ப.. யாருக்கு முத்தம் கொடுத்திருப்ப...போ போ, வேற எவளுக்காவது போய்க்குடு, நான் தேடும்போது வரல. இப்போ இவரு வந்தவுடனே நான் மயங்கிடனுமா” எனத் தன் உதட்டை துடைத்துக்கொண்டே பேச...

மறுபடியும் அவளது அருகில் வந்து “நான் முத்தங்குடுத்து நீ மயங்கலையா, ஆறுமசத்துக்கு மேல ஆச்சுதுல, அதுதான் டச் விட்டுட்டுடி, இன்னோரு தரம் கொடுக்குறேன் மயங்குறியா பாரு” என்று மறுபடியும் அவளது கீழுதட்டை கடித்து இழுத்தவன், தனது நாவினை கொண்டு அவளது இதழ் கதவை தட்டி திறந்து முத்துப்பெட்டகத்தின் உள்ளே நுழைத்து அவளது நாவோடு சேர்த்து பின்னிப் பிணைத்து, முத்த யுத்தம் செய்ய...

‘ம்ம்...’ என்று பினாத்தியவள் அவனது தலைமுடியைப் பிடித்து இழுத்து எடுக்க முயற்சி செய்ய...காவலன் அவன் செய்கின்ற செயலை செவ்வனே தொடர, அவளது கண்களும் கிறங்கி மயங்கத்தான் செய்தது, மெதுவாகத் தன் கண்களைத் திறந்து பார்த்தவன் அவளது கண்கள் மெல்ல மூடுவதைக் கண்டு, இன்னும் வாகாக நெருங்கி இருந்துக்கொண்டான்....

மதியை மெல்ல விடுவித்துத் தன் உதட்டினை அவளிடமிருந்து பிரிக்கக் கண்களைத் திறந்தவள், அப்படியே அவனது கண்ணொடு கண் கலக்க...ஒரு நிமிடம் இருவரும் அப்படியே இருந்தனர்.  

“இப்போ கொடுத்த முத்தத்துல மயங்குனியா? மயங்குற மாதிரி என் முத்தம் இருந்துச்சா? ம்ம்?” எனத் தன் புருவம் உயர்த்திக்கேட்க.

ஷன்மதியோ முறைத்தவள் அவனது முகத்தைத் தள்ளிவிட, மீண்டும் அவளது கன்னங்களைப் பற்றியவன் கடித்துவைத்துவிட்டு...

“டென்சனாகதடி உடம்புக்கு மறுபடியும் எதுவும் வந்திடப்போகுது” என்றவன் வெளியேச் செல்ல...

இப்போது தனது உதட்டை பிடித்துப் பார்த்தவள், சரியான முரட்டு திருடன் என்று தனக்குள்ளாவே பேசியவள், பிள்ளையைத் தூங்கவைத்துவிட்டு வெளியே வர...ஷ்ரவன், ஹரிதா நிருபமா, ஷ்ரவனின் அக்கா குடும்பம் என்று எல்லோரும் வந்திருந்தனர்.

கீழே வந்தவள் “எப்படிப் பாட்டி இருக்கீங்க?” என்று வரேவற்றவள், தனது தாயிடம் சென்று அமர்ந்துக்கொண்டாள்...

எத்தனைபேர் இருந்தாலும் திருமணம் குழந்தை என்று வந்தபிறகு பெண்கள் தேடுவது அன்னையைத்தான்...

ஷன்மதியும் அப்படியே ஹரிதா அவளது கையைப் பிடித்துக்கொண்டு “பாப்பா எங்கடா? தூங்குறாளா?” என்று கேட்கவும்...

“ஆமாம்மா...” என்றவள் தனதறைக்கு அழைத்து செல்ல...மெதுவாக மகளின் அருகில் வந்தவள்.

“மருமகன் கிட்ட சண்டை எதுவும் போட்டியா ?

இல்லை நேத்து எனக்குப் போன் செய்து பேசினாங்க, இன்னைக்குக் குடும்பமா இங்க வந்திருங்க அத்தை ஒரு முக்கியமான விசயம் அப்படினு சொன்னாரே...அதான் கேட்டேன்.”

“என்ன இது எப்போ? எனக்குத் தெரியாதும்மா?” என்றவள்.... “நான் கேட்குறேன்மா அவங்ககிட்ட” என்றவள், சக்தியிடம் கேட்கப்போக.

அதற்குள் சக்தியே மேல வந்து, அவளுக்கும் பிள்ளைக்கும் புதுத்துணியைக் கொடுத்து போட்டு வரச் சொன்னவனை, புரியாமல் பார்க்க...

“சொன்னதைச் செய்” என்றவன் அங்கயே இருக்க...

“என்ன இங்கயே உட்கார்ந்துட்டீங்க போங்க நான் ட்ரஸ் மாத்தவேண்டாமா?” என்க.

"ஏதோ நான் பார்க்காதது எதுவும் புதுசா இருக்கா, அப்படினா நானும் பார்த்துக்குறேன்"

"லூசா நீங்க"

“பின்ன என்னடி வந்ததுல இருந்து முறைச்சிக்கிட்டே இருக்க, சில உணர்வுகளை உணரனும், வார்த்தைகளால் விளக்கம் சொல்லிப் புரியவைக்க முடியாது...

நீ என்னை உணரவேயில்லையா, உன் காதலை நான் உணர்ற மாதிரி, நீயும் என்னை உணர முயற்சிப்பண்ணு” என்றவன் கீழே சென்றுவிட்டான்.

அவளும் புடவை மாற்றி, பிள்ளைக்கும் துணியை மாற்றியவள் வர விஷ்ணுவின் குடும்பமும் வந்திருந்தன...

எதற்கு என்று யாருக்குமே தெரியாது...எல்லோரும் வந்ததும் தனது பெற்றோரை அழைத்துப் பிள்ளையைக் கையில் கொடுத்தவன்....

“ப்பா...உங்க பேத்திக்கு நம்ம வீட்டு மூத்த தலைமுறை நீங்க என்ற முறையில் பேரு யோசிச்சுருப்பீங்கதான இப்பவே பேரு வைங்க"...

கதிரின் கையில் சக்தியின் மகள் கைகால் அசைக்க எப்போதும் முட்டிகொண்டு நிற்கும் 

இருவரின் பிணைப்பாக சக்தியின் மகள் இருப்பாள் என்பது நிச்சயமே...

கதிர் தனது பேத்திக்கு "நிஹாரிகா" என்று பெயரை வைத்து மூன்று முறை காதில் சொல்லி அழைத்தான்...

எல்லோருக்கும் சந்தோஷமே...ஷ்ரவனுக்குச் சிறிது மனதில் நெருடல் தன் அம்மாவை அழைத்துப் பெயர் வைக்க சொல்லவில்லையே என்று நிருபமாவை பார்க்க..அவர் அதைக் கண்டுக்கொள்ளவில்லை...சக்தி வேண்டுமென்றே செய்கின்றானோ என்று தான் நினைத்தான்... ‘இனி என்ன செய்ய சகிக்க வேண்டியதுதான் வேற வழி... நம்ம பிள்ளையைக் கட்டிக்கொடுத்து பிள்ளையும் வந்தாச்சு’ எனப் பெருமூச்சொன்றை விட்டவன்; தனது பேத்தியை வாங்க எத்தனிக்க அதற்குள் சக்தி தனது மகளை வாங்கியவன் கையில் வைத்துக்கொண்டான்...

ஷ்ரவனுக்கு அப்படி வந்தது கோபம்...தனது கைமுஷ்டியை மடக்கி அடக்கிக் கொண்டவன்...

பிள்ளையை வாங்க எத்தனிக்க... “நிஹாரிகா நீங்க யாரோட பொண்ணாம், தி கிரேட் சக்திகுமரனோட பெண்ணாம் அப்படித்தான...” என்று கொஞ்சிக் கொண்டிருக்க, ஷ்ரவனுக்கா புரியாது, ஷ்ரவன் பொண்ணு ஷன்மதியை இப்பவும் விட்டுக் கொடுக்கலையாம், தன் பொண்ணுனுச் சொல்லிட்டு இருக்காறாம்...

அதுக்காகத்தான் தன் மகளைக் கையில் வைத்து ஷ்ரவனை வெறுப்பேத்திக் கொண்டிருந்தான்...

ஷன்மதி சக்தியின் அருகில் வந்து மகளை வாங்கித் தனது அப்பாவிடம் கொடுத்து “உங்க பேத்திப்பா...உரிமையா எடுத்துக் கொஞ்சுங்க” என்று விட்டு, சக்தியைப் பார்த்து ஒழுங்கு காட்டிவிட்டு சென்றாள்.

ஷ்ரவனும் சக்தியும் இப்பவும் ஷன்மதிக்குத் தெரியாமல் முட்டிக்கொள்ளதான் செய்தனர்...

ஷ்ரவன் “இவ்வளவு ஆனதுக்கு அப்புறமும் நீ அடங்கலையா?” என்று காட்டமாகக் கேட்க...

“இவ்வளவு நடந்த பிறகும் இன்னும் மகளோட மனசை புரிஞ்சுக்காம, உங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைக்க நினைக்கறீங்களே..உங்க பணத்திமிரு இன்னும் அடங்கலையா?” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கேட்க...இவர்களின் நடுவே வந்து கதிர் அமர்ந்து ஷ்ரவனிடம் பேசிக்கொண்டிருந்தான்.

இரவு தன்னருகில் படுத்திருந்த கணவனிடம் 

“எதுக்கு இவ்வளவு அவசரமா பிள்ளைக்கு பேரு வைக்கணும்னு வச்சீங்க...என்கிட்டயாவது கேட்டிருக்கலாம் இல்லையா, எல்லாமே உங்க இஷ்டம்தானா, மற்றவங்களைப் பத்தி யோசிக்கவே மாட்டிங்களா?” என எகிறிக் கொண்டிருந்தவளை அமைதியாகப் பார்த்திருந்தவன்...

“இன்னும் என்னைய நீ புரிஞ்சுக்கலை அப்படித்தான...எப்போதான் என்னைப் புரிஞ்சுப்ப...”

எழும்பிப் போய் பிள்ளையின் தொட்டில் பக்கத்தில் கீழப்படுத்துவிட்டான்.

“எதுக்கேட்டாலும் பதில் சொல்றதில்லை...நீங்க எதுக்கு என்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க, உங்களுக்குத்தான் யாருமே தேவையில்லேயே” என்று சத்தம்போட்டவள்... சக்தியிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை என்றதும், தானாகவே அமைதியாகி படுத்து துங்கிவிட்டாள்...

அவள் படுத்துத் தூங்கியதும் எழும்பியவன், அவளருகில் சென்று அமர்ந்து மெதுவாக நெற்றியில் முத்தம் வைத்தவன் அவளருகிலயே படுத்துத் தூங்கினான்...

பாதி இரவில் பிள்ளையின் அழுகை சத்தத்தில் எழுந்து கட்டிலைவிட்டு இறங்கப் பார்க்க கணவன் படுத்திருந்தான்...அவனைத் தாண்டியும் போக முடியாது மெதுவாக எழுப்பவும் பதறி எழும்பினவன்...

“என்னாச்சு என்னாச்சு” என்று கேட்க, ஷன்மதியோ அவனது தோளைத் தட்டி “கீழ இறங்கணும் பாப்பா முழிச்சிட்டா கொஞ்சம் தள்ளுங்க” என்று சொல்லவும் தான் விலகினான்...

ஷன்மதிக்கு ஆச்சர்யம் அவன் இப்படிப் பதட்டமாகி அவள் பார்த்ததே இல்லை, எந்தச் சூழ்நிலையானாலும் ரொம்பக் கூலா இருப்பான்...

தன் மகளை எடுத்துப் பசியாற்றிக் கொண்டிருந்தவளின் சிந்தனை முழுவதும் சக்தியின் மீதே...

சக்தி மறுபடியும் தூங்க ஆரம்பிக்கவும் அவனது மொபைலை எடுத்துப் பார்க்க, இவளுடைய நிறையப் போட்டோக்கள் இருந்தது....

எல்லாவற்றையும் பார்த்தவள் விஷ்ணு மீது கொலைவெறியானாள்... “கூடவேயிருந்து ஸ்பை வேலை பார்த்திருக்க இல்லை...என்னையவிட உங்க சக்தி அத்தான் பெருசா போயிட்டாரா” என்று கருவிக்கொண்டிருந்தாள்...

காலை எழுந்ததுமே மனைவி பிள்ளையைத் தயாராகச் சொன்னவன் ஒன்றும் சொல்லாமல் போய்விட, 

“இந்தப் போலிஸ்காரனுக்கு வேலையேயில்லையா எப்போ பாரு ஒன்னுமே விவரம் சொல்லாம கிளம்ப சொல்றது...இன்னைக்கு என்னவோ” என்று கிளம்பி வெளியே வர, கதிரும் நிலாவும் தயாராகி நிற்க, எல்லோரும் கிளம்பி மதுரைக்குச் சென்றாகிவிட்டது...

அங்கு ஷன்மதியிடம் “பிள்ளையும் நீயும் கவனமாக இருங்க நான் வர்றதுக்கு எப்படியும் இன்னும் இரண்டு மாதமாகும்...இங்க பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் ஏற்பாடு பண்ணிருக்கேன் சரியா?” என்றவன் இரவோடு இரவாக டெல்லிக்கு கிளம்பிவிட்டான்....

ஷன்மதிக்கு என்ன செய்யவென்று தெரியவில்லை, ஆனால் ஆபத்தான எதுலயோ இறங்கப்போறானு மட்டும் நல்லா தெரிந்தது...

‘இதுக்குத்தான் எல்லாமும் அவசர அவசரமாக முடித்து இங்க கொண்டு விட்டுட்டுப் போறாங்க போல’ என்று நொந்துக் கொண்டாள்.

அங்குச் சென்னையிலயோ ஷ்ரவன் “இந்தக் காட்டுமாக்கான் என்னச் செய்யுறானே புரியமாட்டுக்கு...இவனுக்கு என் பெண்ணைக் குடுக்கவேண்டாம்னு சொன்னேன் எங்க என் பேச்சை கேட்டீங்க?”

என்று நிருபமாவிடம் சாடினான்...

“நான் என் பேத்திய பார்க்க கூடாதுனே மதுரையிலக் கொண்டுப்போய் விட்டுட்டான்... அன்னைக்குப் பேரு வைக்கும் போதும் உங்களை மதிக்கவேயில்லை” என்று கோபத்தில் சத்தம்போட.

நிருபமா "அறிவிருக்கா உனக்கு"

ஷ்ரவன் " என்னம்மா இப்படிக் கேட்குறீங்க" என மீண்டும் கோபப்பட...

“நம்ம வீட்டு வாரிசா...என்கிட்ட குடுக்க, அது அவங்க வீட்டு வாரிசு அவங்கவீட்டு பெரியவங்க வைக்குறது தான் முறை, அப்புறம் சக்தி எதாவது செய்தா கண்டிப்பா காரணகாரியங்கள் இருக்கும், அவன் பொண்டாட்டி பிள்ளை மேல அவனைவிட யாருக்கு அக்கறை இருக்கப்போகுது...அவரு நம்ம வீட்டு மருமகன் கொஞ்சம் பார்த்து மரியாதையா பேசு"

"ஆமா எல்லாரும் என்னையவே சொல்லுங்க, அவனை" 

இப்போது நிருபமாவும் ஹரிதாவும் ஷ்ரவனை முறைக்க....

" அவரை யாரும் ஒன்னும் சொல்ல மாட்டுக்கீங்க, என்னலாம் பண்றான், யாராவது கேட்க விடுறீங்களா, சொன்னா மருமகன் அது இதுனு சொல்லிக்கிட்டு" என்றவன் தனதறைக்குள் புகுந்துக்கொண்டான்.

விஷ்ணு ஆபிஸிற்குள் நுழையவும் ஸ்ரீஜா அவனது வருகையை எதிர்பார்த்து காத்திருந்திருப்பாள் போல, அவன் வந்ததும் அவனிடம் சென்றவள் " நேத்து ஏன் சார் வரலை" என்க...

விஷ்ணு " ஷானுவோட பாப்பாவை பார்க்கப் போயிருந்தேன்...ஏன் நான் வரலைனு தேடுனியா"

ஸ்ரீஜா சுதாரித்து "இல்லை சீனியர் சார் கேட்டாங்க, அதான்"

" ஓ சீனியர் சார் நான் வரலையானு உன்கிட்ட கேட்டாங்களா, அப்படியா"

" ம்ம்"

"சீனியருக்கிட்ட தான் ஏற்கனவே பெர்மிஷன் வாங்கிட்டுத்தான் போனேன்...மறுபடியும் வந்து உன்கிட்ட கேட்டாரா?” என்றான், “இரு அவருக்கிட்டயே கேட்குறேன்"என்று தனது போனை எடுக்க...

"இல்லை இல்லை அவரு கேட்கலை..நான் தான் கேட்டேன்" என்று அவசரமாக அவனது கையைப் போன் பண்ணவிடாமல் பிடித்திருந்தாள்...

விஷ்ணு “அப்படி வா வழிக்கு” என்று நினைத்தவன் "என்னை எதுக்குத் தேடின, எதுவும் முக்கியமான விசயமா"

இல்லை என்றுத் தலையாட்டியவள் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

ஆனால் அவளது கண்கள் அடிக்கடி விஷ்ணுவைப் பார்க்கவும் தலையைக் குனியவுமாக இருக்க கண்டுக்கொண்டான்.

அவளது மனதிற்குள் அவன் நுழைந்துவிட்டான்...ஆனால் அதை ஸ்ரீ வெளிப்படுத்த விரும்பாமல் மனதிற்குள்ளாகவே மறைக்க முயற்சித்தாள்.

காதல் என்பது மல்லிகைப் பூ மாதிரி..உள்ளங்கைக்குள் பொத்தி வைத்தாலும் அதனுடைய வாசனையை உணரமுடியும். ஸ்ரீ தனது மனதிற்குள் எவ்வளவுதான் மூடி வைத்தாலும் முகத்திலும் விஷ்ணுவைப் பார்க்கும் பார்வையிலும் அது தெரிந்தது.

ஒரு மாதம் கடந்த நிலையில், வீட்டிற்குச் செல்லும் வழியில் விஷ்ணுவோ பைக்கிலிருந்து விழுந்து லேசாக உள்ளங்கை அடிப்பட்டிருக்க,

கட்டுப்போட்டிருந்தான்.

அடுத்த நாள் ஆபிஸிற்கு வந்தவனது கையைப் பார்த்து என்னவென்று கேட்க வந்தவள், கேட்காமல் திரும்பி வந்து தனது இடத்தில் அமர்ந்தவளுக்கு வேலையில் கவனம் வரவில்லை....

விஷ்ணுவையே எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, ஃபைல் எடுக்க வந்தவன் போல அவளருகில் வந்தவன், குனிந்து அவளது பின்னங்கழுத்தோடு தனது தலையை அவளது தோளில் வைத்து, அவனது கையை நீட்டிக் காட்டினான்...

அவளோ அப்படியே பின்பக்கமாகச் சாயப் பிடித்துக்கொண்டவனது கை இப்போது அவளது அபாய வளைவில், சட்டென்று விலகி எழுந்து சுவற்றோரமாக ஸ்ரீ நின்றுகொள்ள, அவளருகில் நெருங்கி அவளது ஒரு கையைப்பிடித்துத் தனது தோளில் போட்டுக்கொண்டான்....

அவளோ பேச வாயெடுக்க...ஷ்ஷ் என்று அவளது வாயில் விரல் வைத்துச் சொன்னான்...

ஸ்ரீயின் கண்களோ மருண்டு அங்குமிங்கும் உருள... “என்னைப் பாரு” என்று அவளது முகத்தினைத் தனக்கு நேராக நிமிர்த்தி, 

“உனக்கு என்னைப் பிடிச்சிருக்குத்தான...ம்ம்?”.

அவளோ மீண்டும் தலையைக் கவிழ்க்க, மறுபடியும் அவளது முகத்தினை நிமிர்த்தி அவளது கண்களை நேக்கியவன்...

“உண்மையச் சொல்லணும் என் கண்ணைப் பார்த்து... பிடிச்சிருக்கா"

கண்களைத் தாழ்த்தி இல்லை என்றாள்.

“பொய் சொல்லக்கூடாது ஸ்ரீ, என் கண்ணைப் பார்த்து இல்லைனு சொல்லு” என்றான்....

இப்போது கண்களை நிமிர்த்தி விஷ்ணுவின் கண்ணைப் பார்த்துவளுக்கு வார்த்தையே வரவில்லை...

கண்ணும் கண்ணும் கலந்து பார்வைகள் உயிருக்குள் ஊடுருவ...இருவரும் தங்களை மறந்து நின்றனர்.

விஷ்ணுவோ நெருங்கி வர இருவரின் மேனியும் ஒட்டி உரச, அப்படியே தன் தலையைச் சரித்துக் குனிந்து அவளது கன்னங்களில் முத்தமிட...அது பஞ்சுபோல அமிழ்ந்து அவனது முரட்டு உதட்டை உள்வாங்கியது....

அதுவே இருவருக்கும் ஒரு மோனநிலையைக் கொடுக்க...அவளது உதட்டினை மெல்ல தனது விரல் கொண்டு நிரடியவன், தனது இருவிரலால் ஸ்ரீயின் கீழுதட்டைப்பற்றி இழுத்து குனிந்து தனது வாய்க்குள் வைத்து அல்வாவெனச் சுவைக்க...

ஆணவனின் நெருக்கமும், அவனது வாசனையும் பெண்ணிற்கு உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்யவும் அவனது சட்டையைத் தன்னையறியாமல் பற்றியிருந்தாள்.....

விஷ்ணுவிற்கோ அவனது ஆண்மைக்கு வந்த சோதனையாக, அவளை மென்று தின்று கொண்டிருந்தான்....

கையை அவளது சேலை மறைக்காத இடுப்பில் வைத்து அழுத்த, அவன் கைகளின் இளஞ்சூட்டை உணர்ந்தாள்...

மெது மெதுவாக இடுப்பினில் அழுத்தம் கொடுத்தவன்...இப்போது அவளது இதழ்களை விடுவிக்க உணர்வுகள் தாளாது சுவற்றில் தலையைச் சாய்த்து அப்படியே நின்றிருந்தாள்.

தனக்கு இல்லை, வேண்டாம் என்று அடக்கி வைத்திருந்த அத்தனை உணர்வுகளையும், ஆசையையும், விஷ்ணுவோ தனது மூச்சுக்காற்றிலயே அவளது உடலில் ரசாயன மாற்றங்களை உண்டாக்கி அதை அவளிடம் மீட்டிருந்தான்...

சாய்ந்து நின்றிருந்தவளின் மேனியில் தனது உடலை வைத்து அழுத்தியவனுக்கு அவளது பெண்மையின் கோளங்கள் அழுந்த...கண்களை விழித்து அவனைப் பார்க்க...அவளது நெற்றியில் முத்தமிட்டான்...

அவ்வளவுதான் ஸ்ரீயின் கண்ணீர் கன்னங்களில் இறங்க மெதுவாக முகத்தினை இருகரம் கொண்டுத் தாங்கியவன் தன் பெருவிரல்கள் கொண்டுத் துடைத்துவிட்டு....

“நான் இருக்கும்போது இனி நீ அழவேக்கூடாது” என்று அவளைச் சமாதானப்படுத்தியவன்...அவளிடமிருந்து விலகி அவளது கலைந்த முடியையும் சேலையையும் சரி செய்தவன்.

“நான் இருக்கேன் உனக்காகச் சரியா....அதை மட்டும் மனசுல பதியவை வேறு எதுவந்தாலும் நான் சமாளிச்சிருவேன்...” என்று அவளது கன்னங்களைத் தட்டி தனது இடத்திற்குச் சென்றான்.

அடுத்த நாள் விஷ்ணு ஆபிஸிற்கு வரும்போது ஸ்ரீஜா அங்கில்லை...சீனியரிடம் கேட்க "அவள் ஊருக்கு நேற்று மாலையே புறப்பட்டுச் சென்றுவிட்டாள்" என்ற தகவல் மட்டுமே அவரிடமிருந்து கிடைத்தது.

அத்தியாயம்-20

விஷ்ணுவிற்கு ஒன்றுமே புரியவில்லை ‘ஸ்ரீ எதுக்கு ஊருக்குப்போனா?...நேத்து நல்லாதான இருந்தா?’ என்று தலையைப் பிடித்துக் கொண்டிருந்தான்.

சீனியரிடமே கேட்டான் "சார் ஸ்ரீஜா எப்போ வருவாங்க, இங்க உள்ள ஃபைல்ஸ் கிளியர் பண்ணாம போயிட்டாங்க"

"இனி இங்க வர வாய்ப்பில்லை விஷ்ணு, சென்னை எனக்கு ஒத்துக்கலை சார், நான் ஊருக்கே போறேன்...அம்மா அப்பாவைப் பார்க்கணும் போல இருக்கு, அங்கயே நான் இருந்துக்குறேன் என்று ஒரே அழுகை...உடனே அவங்கப்பா கிட்ட பேசிட்டு அனுப்பி வச்சிட்டேன், அதுவும் நல்லதுதான், பெண் பிள்ளைங்களை எத்தனை நாள் நம்ம பாதுகாப்புல வைக்க முடியும், நம்ம வேலைக்கு வேற ஆளைதான் பார்க்கணும்" என்றார்.

அவனுக்கு இப்போது நன்றாகப் புரிந்தது... ‘நம்மளைவிட்டு விலகிப்போறா, சரியான பைத்தியக்காரி, நேத்து அவ்வளவு சொல்லிருக்கேன்...’ என்று திட்டிக் கொண்டிருந்தவன் அடுத்து என்ன செய்ய யோசித்தவனுக்கு ஒரு பிடியும் கிடைக்கலை...

ஷன்மதிக்குப் போன் பண்ணவும் அவள் எடுக்கவேயில்லை...திரும்பத் திரும்ப அழைக்கவும் எடுத்தவள்.

"எந்தப் பரதேசியும் எனக்குப் போன் பண்ணக்கூடாது, அவங்களுக்குப் பிடிச்ச சக்தி அத்தான்கிட்டயே போய்ப் பேசிக்கட்டும்" என்றவள் போனை வைக்க...

விஷ்ணுவிற்குத் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் “என்ன சொல்றா, அடக்கடவுளே எல்லாப் பைத்தியங்களையும் என்ன நோக்கி திருப்பிட்டீங்களா” என நொந்துக்கொண்டவன்.

மறுபடியும் அவளுக்கு அழைக்க “என்னடா வேணும் உனக்கு...போன் பண்ணாதனு தான சொன்னேன் தான?

ஏன்டா மறுபடியும் போன் பண்ற?”

“ஷானு ப்ளீஸ் ஏற்கனவே நான் நொந்துப்போய் இருக்கேன் நீ வேற கடுப்பேத்தாத” என்றவனின் குரலே சரியில்லை என்றதும்,

“சொல்லு என்னப் பிரச்சனை, ஸ்ரீக்கிட்ட எதுவும் பேசுனியா என்ன?” எனச் சரியாக கணித்துக் கேட்டாள் ஷன்மதி.

“ஆமா..நேத்து நல்லாதான் இருந்தா, இப்போ வந்து பார்த்தா, அவ ஊருக்குப்போயிட்டா இனி வரமாட்டானு சீனியர் சொல்றாரு.”

“ஓ...அப்படியா.அவ நம்பருக்கு ட்ரை பண்ணிப்பார்த்தியா?

எல்லாம் பார்த்தாச்சு...சுவிட்சுடு ஆஃப்னு வருது...

இரு யோசித்து என்னப் பண்ணலாம்னு சொல்றேன்...போனை வைக்குறேன்” என்றதும்...

"ஏன் ஷானு என் மேலக் கோபமா இருக்க?" என்று விஷ்ணுக் கேட்டதும் தான்...

“நல்லவனே...என் போட்டோஸ் எப்படிடா சக்திக்குப் போச்சுது, ஃப்ராடுங்க சண்டை போட்டுட்டுதானடா இருந்தீங்க , அப்புறம் எப்படி எனக்குத் தெரியாமலயே பேசுனீங்க?, அதுவும் திருட்டு வேலையெல்லாம் செய்திருக்க... பிறந்த நாள் கிப்ட்ஸ்லாம் நீதானடா கொண்டு வச்சது என் ரூம்ல...உண்மையைச் சொல்லு...”

“ஆமா...அது அன்னைக்கு சக்தி அத்தானை அங்கிள் அடிச்சது எனக்குப் பிடிக்கலை, நீ வேற அவரு சட்டையப் பிடிச்சு சண்டைப்போட்டியா...உங்க இரண்டுபேரு மேலயும் அவ்வளவு வருத்தம் எனக்கு...

உன்னைக் காணலையேனு எப்படி துடிச்சுத் தேடினாங்கத் தெரியுமா...அதுவுமில்லாம அவ்வளவு பெரிய பதவியில இருக்கறவரை எல்லார் முன்னாடியும் அங்கிள் கேவலப் படுத்திட்டாரு...யாருக்குனாலும் கோபம் வரத்தான் செய்யும்...பட் நீ டிவோர்ஸ்க்கு கையெழுத்துப் போட்டதை அத்தானுக்கு நம்பவே முடியலைப்போல அவரும் கையெழுத்துப் போட்டு அனுப்பிருந்தாரா...

அதான் நான் நேரடியா அத்தானுக்கே போன் பண்ணி எல்லாத்தையும் பேசிட்டேன்...அதுக்கப்புறம் உன் போட்டோஸ்லாம் நான்தான் அனுப்பி வச்சேன்” என்று சொன்னவன் சிரிக்க.

“ப்ராடுங்க இரண்டும் கூட்டு சேர்ந்து கிட்டு, என்கிட்டயேவே ஒன்னுந்தெரியாத மாதிரியே இருந்திருக்கப்பாரு துரோகி...

உனக்காக ஸ்ரீகிட்டலாம் பேசினேன் பாரு...இனி ஒன்னும் பேசமாட்டேன் போ” என்றவள் போனை வைக்கப்போக...விஷ்ணு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும்.

அவளுக்குமே விஷ்ணு அமைதியாக இருக்கறது ஒரு மாதிரி இருக்கவும்...

"விஷ்ணு" என்று ஷன்மதி அழைக்க...

“ஷானு ஸ்ரீ விசயத்துல உண்மையா எனக்கு அடுத்து என்ன செய்யணும்னுத் தெரியலை...அதுதான் உன்கிட்ட பேசினா, நீ ஏன் இப்படிப் பேசுற, கஷ்டமா இருக்குடா...”

சிறிது நேரம் யோசித்தவள் “சரி, நான் பிளான் பண்றேன், இப்போ ஆபிஸ்லயா இருக்க? நான் அப்புறமா பேசறேன்” என்று வைத்துவிட்டாள்....

அங்குச் சக்தியோ டெல்லி முதலமைச்சர் முன்னாடி அமர்ந்திருந்தான்...

பெண்கள் கடத்தல், மற்றும் போதை மருந்து வழக்கின் மறைமுக விசாரனையின்போது அதில் முக்கியமாக ஆட்கடத்தலில் ஈடுபடுவதற்கென்றே தனியாக ஒரு கூட்டமே இருக்கின்ற தகவல்கள் கிடைத்திருக்கின்றன...

இந்த ஆறுமாத காலத்தின் மறைமுக விசாரனை குழுவினை வழி நடத்தியதே சக்திகுமரன் தான்....

அடுத்தகட்ட நடவடிக்கையாக என்னச் செய்யலாம் என்ற ஆலோசனை பெறவே இந்தச் சந்திப்பு.

அவனுக்கு இப்போது பெரிய பொறுப்பாகக் கையில் கொடுக்கப்பட்டிருந்தது....

டெல்லியில் நேர்மையான அதிகாரியான சக்திதான் நிறையபேருக்குத் தலைவலியாக இருக்கின்றான்.

சக்தியின் முடிவுகள் எப்போதுமே ஏற்றுக்கொள்ளக் கூடியாதாகவே இருப்பதால், அவன் அடுத்தகட்டமாக எடுக்ககூடிய எல்லா நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் அளித்திருந்தனர், எல்லாம் முடிந்து

அவன் வெளியே வரவும் ஷன்மதி அவனுக்கு அழைத்திருக்க, திரும்ப அழைத்தான்....

போனை எடுத்துக் காதில் வைத்தவள் அப்படியே அமைதியாக இருக்கவும், “ஹலோ ஹலோ” என்று திரும்பத் திரும்ப அழைத்ததும்தான்.

"ம்ம் இருக்கேன்" என்ற பதில் அவளிடமிருந்து வந்திருந்தது...

"குட்டி பாப்பா எப்படி இருக்கா, அதோட என் பெரிய பாப்பா எப்படி இருக்கா...ரொம்பக் கோபத்துல சூடா இருக்கறமாதிரி இருக்கு"என்று கேட்டுவிட்டு சிரிக்க.

" எனக்குச் சிரிப்பு வரலை" 

"அதுக்கென்ன இப்போ எனக்குச் சிரிப்பு வருது சிரிக்குறேன்...அப்புறம் சொல்லுங்க உங்க மாமனார் மாமியார் நல்லா இருக்காங்களா....என் மாமானார் மாமியார் உனக்குப் போன் பண்ணினாங்களா"

“ம்ம்..”

"என்ன எதுக்கெடுத்தாலும் உம் கொட்டுற...

நீ என்ன ரொம்பக் காதலிக்கறதான"

"ம்ம்"என்றாள் ஷன்மதி.

"மதி" என்று அழைத்துச் சிரித்தவன்

“சரி சொல்லு இவ்வளவு கோபத்துலயும் எனக்கு போன் பண்ணினதுக்குச் சந்தோஷம்...கோபம் குறைஞ்சதும் பேசு, போன் பண்ணு ஓகேவா.”

"விஷ்ணுக்கு ஒரு சின்னப் பிரச்சனை, பெரியவங்க யாருக்கிட்டயும் சொல்லமுடியாது, அவன்கிட்ட பேசி எதாவது ஐடியா குடுங்க"

"அதுதான் எனக்குப் போன் பண்ணுனியா...நான் என்னமோ நீ என்னைய மிஸ் பண்றயோனு நினைச்சன்" என்றவனின் குரல் மாறியதை அறிந்தவள்.

"கிட்டதட்ட ஆறுமாசமா என் நியாபகமில்லாம இருந்தீங்க தான, என்கிட்ட பேசிகிட்டிருந்தீங்களா என்ன, அப்போ யாரைபோய்க் கொஞ்சீனிங்க அவளையே இப்பவும் போய்க் கொஞ்சுக்கீங்க"என்றதும்.

" சரி" என்றான் சக்தி....

"என்னது சரியா" என்று கோபத்தில் கேட்டவளுக்கு, சக்தி பதில் கொடுத்தான் "இன்னையில இருந்து பொண்டாட்டிப் பேச்சை கேட்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன் அதுதான்"என்றதும் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

அவன் இனி எடுக்கப்போகும் நடவடிக்கைகளால் பெரிய பிரச்சினைகளை உருவாக்கும், அதனால்தான் தனது குடும்பத்திற்கு எந்தச் சேதாரமும் வரக்கூடாது என்று சொந்த ஊரிலேயே வைத்திருக்கிறான் பாதுகாப்புடன்.

ஏற்கனவே அவனால்தான் ஷன்மதியை கடத்தியிருந்தனர்...அதிலிருந்தாவது காப்பாற்ற முடிந்து, ஆனால் இப்போது வரவிருக்கும் ஆபத்து சொல்ல முடியாதது..

அவனது பெற்றோரையும், மனைவி பிள்ளையையும் சொந்த ஊருக்கு அனுப்பியிருந்தான்.

கிராமம் என்பதாலும் வேறு எந்த அந்நியர்களின் நடமாட்டமிருந்தால் உடனே தெரிந்துவிடும் என்பதாலும் பாதுகாப்புதான்...இருந்தாலும் அவர்களின் பாதுகாப்பிற்கு என்று எல்லா ஏற்பாட்டையும் செய்திருந்தான்...

அதனையே சிந்தித்துக்கொண்டு வெளியே வந்தவனுக்கு ஷன்மதி சொன்ன விஷ்ணுவின் விசயம் மறந்து போய்விட்டது....

விஷ்ணுவோ கோர்ட் சனி ஞாயிறு லீவு என்பதால் ஆபீசுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை வெள்ளிக்கிழமை மாலை வேளையில் திருநெல்வேலிக்குப் பஸ் ஏறி விட்டான், பஸ்ஸில் இருந்து கொண்டு பலவித சிந்தனையில் இருந்தான், இது சரி வருமா? வராதா? பிரச்சினைகள் வந்தால் எப்படிச் சமாளிக்க வேண்டும்? என்று சரியோ தப்போ கிளம்பி வந்தாச்சு எது வந்தாலும் பார்த்துக்கலாம் என்று மனோதிடத்துடன்

அதிகாலையில் அம்பாசமுத்திரம் வந்து இறங்கியவன்...

உடனே ஷன்மதியை அழைத்து ஒரு போன் நம்பரை கொடுத்து “இந்த நம்பருக்கு அழைத்து ஸ்ரீ எங்க இருக்காளான்னுக் கேளு” என்று சொல்லவும்.

அவளுக்கும் ஏதோ புரிந்தது போல “இப்ப நீ எங்க இருக்க?” என்று கேட்டாள்....

“நான் இப்போ அம்பாசமுத்திரம் வந்துட்டேன். நான் தந்த நம்பர் ஸ்ரீயோட அப்பா நம்பர்தான், போன் பண்ணி ஸ்ரீ எங்க இருக்கானு கேளு, அப்படியே என்னையும் கான்ஃபிரன்ஸ் கால்ல எடு...” என்றான்.

“அங்கு எதுக்குடா போன? நான் தான் சொல்லி இருக்கனே. சக்தி எல்லாம் பேசி எதாவது பண்ணுவாங்கனு...ஐயோ பிரச்சனையை உண்டு பண்ணாதடா,திரும்பி வா” என்றவள் சத்தம்போட...

“எனக்காக இதைச் செய்வியா? மாட்டியா?” என்று விஷ்ணு பிடிவாதம் பிடிக்க, வேற வழியின்றி ஷன்மதி மகாதேவனுக்கு அழைத்து " ஷன்மதி” என்றும் ஸ்ரீயுடன் வேலை பார்க்கின்றவள் என்றும் அறிமுகப்படுத்திவிட்டு, ஸ்ரீ பற்றி விசாரிக்க அவளோ அந்த வேலையில் கோவிலுக்குச் சென்றிருப்பதாகச் சொல்லவும், அதையும் விசாரிக்க, கேட்டுக்கொண்டிருந்த விஷ்ணுவோ உடனே ஊருக்குள் சென்றவன்...அவள் சென்றிருக்கும் கோவிலுக்குள் நுழைய தன்னவளைக் கண்டுக்கொண்டான்.

சந்நிதியில் கைகளை கூப்பிக் கண்மூடி வணங்கி நின்றவளைக் கண்டவன், மெதுவாக அருகில் சென்று அவனும் வணங்கி நிற்க, அங்கு வந்திருந்தவர்கள்தான் விஷ்ணுவை வித்தியாசமாக,புதிதாக இருக்கின்றானே யாரென்று பார்த்துக் கொண்டிருந்தனர்...

கண்விழித்துப் பார்த்த ஸ்ரீ, விஷ்ணுவை அங்கே கண்டதும், ஆச்சயத்திலும் பயத்திலும் கண்களை உருட்ட, அவனோ எந்தவிதமான சலனமும் இல்லாமல் சிறிது நேரம் அவளது கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவன், அப்படியே தனது பாக்கெட்டில் இருந்த தாலியை எடுத்து அவளது கழுத்தில் கட்ட ஆரம்பிக்கவும் இதை எதிர்பார்க்காதவளோ அவனது கையை விலக்கி பார்க்க ஸ்ரீயால் முடியவில்லை...

"என்ன பண்றீங்க நீங்க, தப்பு பண்றீங்க விஷ்ணு" என்று சத்தம் போட, அதற்குள் அந்த நேரம் கோயிலுக்கு வந்திருந்த அத்தனைபேரின் கண்களும் அவர்கள் இருவரையும் தான் பார்த்து இருந்தது...

தெரிந்த ஒன்றிரண்டு பேரும் அடிக்கக் கை ஓங்கி வர, விஷ்ணுவோ அசையாது அப்படியே நின்றிருந்தான்.

ஸ்ரீக்குமே இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் அழுதாள், அவனை அடித்தாள் "ஏன் இப்படிப் பண்றீங்க எல்லாரும் முன்னாடி என்னைக் கேவலப் படுத்திட்டிங்க"என்று தன் கைகளால் முகத்தை மறைத்து அப்படியே அந்தச் சன்னிதியில் அமர்ந்து அழுதாள்.

அதற்குள் விஷயம் தெரிந்து ஸ்ரீயின் குடும்பத்தார் வந்திருந்தனர், மகா தேவன் வந்ததும் விஷ்ணுவை பிடித்து அடிக்க ஆரம்பித்திருந்தார், விஷ்ணுவோ தடுத்து கூடப் பிடிக்காமல் அப்படியே அடிவாங்கிக் கொண்டு இருக்கவும் ஸ்ரீதான் தகப்பனுக்கும் அவளுக்கும் இடையில் சென்றவள், “அடிக்காதிங்கப்பா” எனத் தடுத்து நிறுத்தினாள்....

அதற்குள் ஊர் பெரியவர்கள் எல்லோரும் வந்திருக்க, விஷ்ணுவைப் பற்றியும் அவனது குடும்பத்தைப் பற்றி விசாரிக்கவும், எல்லாவற்றையும் சொன்னவன் 

“நான் ஸ்ரீயை உண்மையாகக் காதலிக்குறேன். நான் அதை அவகிட்ட சொன்னதுக்கு, ஏதேதோ சொல்லிட்டு ஒத்துக்காம இங்க வந்திட்டா, அதனால் தான் தாலி கட்டினேன்...”

“என்ன தம்பி இப்படிப் பேசுறீங்க? பிடிக்காத பொண்ணுக்கு வலுக்கட்டாயமாகத் தாலி கட்டிட்டு இப்படிச் சொன்னா எப்படி, ஏற்கனவே அந்தப் பிள்ளை பல கஷ்டப்பட்டு தான் இப்ப கொஞ்சம் நிம்மதியா இருக்கு, அந்தப் பிள்ளையப் இப்படிக் கஷ்டப்படுத்திட்டீங்களே தம்பி” என்று ஊர் பெரியவர் பேச...

“அவ வாழ்நாள் முழுவதும் இப்படியே இருக்கனும் நீங்க ஆசைப்படுறீங்களா?” ஸ்ரீயின் தந்தையைப் பார்த்து கேட்டான். 

“எனக்கு எல்லா விசயமும் தெரிஞ்சுத்தான் அவளோட கழுத்தில் தாலி கட்டினேன்

ஸ்ரீ கிட்டவே கேளுங்க, அவளுக்குப் பிடிக்கலைன்னா அந்தத் தாலியை கழட்டி தரட்டும், நான் பிரச்சனை பண்ணாமபோயிடுறேன்...”

எல்லாரும் ஸ்ரீயைப் பார்க்க, அவளோ தலையைக் குனிந்து நின்றாள், ஆனால் மகா தேவன் கோபத்தில் 

“எங்க குடும்பத்தோடு மொத்த மானத்தை இப்படி வீதிக்குக் கொண்டு வந்துட்டான்...அவனைப் போலீஸ்ல ஸ்டேசனுக்கு அழைச்சுட்டுப்போங்க, நான் கம்ப்ளைண்ட் குடுக்குறேன்...என்ன குலமோ கோத்திரமோ, நல்லவனாக் கொட்டவனானுத் தெரியாது எப்படி என் பொண்ணு வாழ்க்கையை அவன் கையில எடுக்கலாம்” என்று அவனை மறுபடியும் அடித்தார்...

ஸ்ரீ இப்போது தன் தந்தையைத் தடுத்தாள், 

“போலிஸ் கம்பளைண்ட்லாம் கொடுக்கவேண்டாம், அவரை ஊருக்கு போகச்சொல்லுங்க, விட்ருங்க அவரை” என்று அழுதாள்...

விஷ்ணுவோ பிடிவாதமாக நின்றான் “அவளை என் மனைவியா இங்கயிருந்து அழைச்சுட்டுப்போகதான் இங்க வந்தேன்,

நான் ஸ்ரீயக் கூட்டிட்டுத்தான் போவேன் இல்லைனா இங்கயிருந்து நகரவேமாட்டேன், அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்கு ஆனா விதவை, குடும்பம் அது இதுன்னு சொல்லி தட்டிக்கழிக்குறா, அதுதான் இந்த முடிவ எடுத்தேன்...அவதான் என் வாழ்க்கை"

அதற்குள் விசயம் சீனியர், ஷ்ரவன் அவனது தந்தை அஜய்க்கும் தெரியவர , சீனியர் லாயருடனு பேசி ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்.

எல்லோரும் அம்பாசமுத்திரத்திற்கு அவசரமாகக் கிளம்பி மாலையில் அங்கு வந்து சேர, அஜய் வந்ததும் மகனை அடித்துவிட்டான்....

“ஒரு பொண்ணோட வாழ்க்கையில அவளோட சம்மதமில்லாமல் எப்படி முடிவெடுக்க முடிந்தது உன்னால” என்று சத்தமிட்டான்... 

ஷ்ரவன்தான் தடுத்து விஷ்ணுவை அருகில் அழைத்து விபரத்தைக் கேட்க, எல்லாவற்றையும் சொன்னான்...

ஷ்ரவன் ஸ்ரீயைத் தனியாக அழைத்துப் பேசியவன், சீனியர் லாயருடனும், மாகாதேவனுடனும் பேசி ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்...

விஷ்ணுவையும், ஸ்ரீயையும் அருகருகே அமர்த்தி இப்போது பேசினான் ஷ்ரவன்...

“விஷ்ணு செய்தது தப்புதான் அதுக்காக மன்னிப்புக் கேட்குறேன்...ஆனால் அவன் ஸ்ரீயை உண்மையாகாவே விரும்புறான் அதனால எங்க வீட்டு மருமகளாக ஸ்ரீயை நாங்க ஏத்துகிட்டு அழைச்சிட்டுப் போறோம்” என்றதும்...

"ஸ்ரீ உங்க வீட்டுல உள்ளவங்களுக்குச் சம்மதம், அது எங்களுக்குப் போதாது உன்னோட சம்மதம் இருந்தால் மட்டுமே எதுனாலும், என்னம்மா சொல்ற" என்று அஜய்தான் கேட்டான்...

அவள் என்ன பதில் சொல்லுவாளோ? என்று விஷ்ணு பயந்து அவளைப் பார்க்க, மாகதேவனோ சம்மதிச்சு போய்டு உன் வாழ்க்கை நல்லாயிருக்கும் என்று பார்த்திருக்க....

சிறிது நேரம் யோசித்தவள் சம்மதம் என்று தலையசைத்தாள்...

அத்தியாயம்-21

ஸ்ரீ சம்மதம் சொன்னதும்தான் விஷ்ணுவிற்கு மூச்சு சீராக வந்தது.

மகாதேவனுக்கோ...இப்படியே பட்டமரமா நின்றிருவாளோ என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு, ஷ்ரவனும் அஜயையும் பார்த்தார், அவர்களின் பேச்சுப் பழக்கம், வழக்கம் எல்லாம் பார்த்ததும் நல்ல குடும்பமாக இருக்க, பையனும் வக்கீலு என்று யோசித்தவர், ‘தன் பொண்ணு பட்ட கஷ்டமெல்லாம் நீங்கி நல்லாயிருக்கணும்’ என்று சம்மதித்து இருந்தார்...

எல்லோரும் இப்போ சம்மதிக்கவும், ஷ்ரவனும் அஜயும் என்னச் செய்ய என்று யோசிக்க, சீனியர் தன் வீட்டில் அவர்களைத் தங்க வைக்க எல்லா ஏற்பாடும் செய்து இருந்தார், வேறு வழி இல்லை அங்கிருந்து இப்போது இரவு நேரம் கிளம்ப வேண்டியதென்றால் சரியான போக்குவரத்து வசதி கிடையாது, விஷ்ணுவையும் ஸ்ரீயையும் இரவு நேரத்தில் அழைத்துச் செல்ல வேண்டாம் என்று பெரியவர்கள் யோசித்து முடிவு செய்திருந்தனர்...

புதுமணத் தம்பதிகளைத் தங்கள் வீட்டிலேயே தங்குவதற்கு, அறையை ஒதுக்கிக் கொடுத்து இருந்தனர்.

அதற்குள் ஜானகி சாப்பாடு எல்லாம் தயாராக வைக்கச் சாப்பிட்டு முடித்து, விஷ்ணு வெளியில் அமர்ந்திருக்கவும், தனது மகனை அழைத்த ஜானகி “மாப்பிள்ளையை உள்ளே கூட்டிட்டு வாடா, வெளியே உட்கார்ந்து இருக்கிறார்” என்று சொல்லவும் அவள் சென்று விஷ்ணுவை அழைக்க, விஷ்ணு ஒன்றுமே சொல்லாமல் அமைதியாகவே இருந்தான்....

இரவு வெகு நேரமாகியும் விஷ்ணு வெளியே வராண்டாவில் அமர்ந்து இருந்தான், யார் அழைத்தும் அவன் உள்ளே வரவில்லை...

அப்படியே யோசித்த ஜானகிக்கு இப்போது காரியம் பிடிபட்டது மெதுவாக ஸ்ரீயை அழைத்து, “இப்போ நீ போய்க் கூப்பிட்டாதான் மாப்பிள்ளை வருவார் என்று நினைக்கிறேன் , போய்பாரு” என்று சொல்லவும்...

பெருமூச்சுவிட்டவள் மெதுவாக வெளியே சென்று, விஷ்ணுவின் அருகில் நிற்கவும், நிமிர்ந்து பார்த்துவிட்டு அமைதியாக இருந்தான்.

"வெளிய குளிருது உள்ள வந்து படுங்க. ஏன் இங்கே உட்கார்ந்து இருக்கீங்க, எங்கவிட்டாளுங்க என்கிட்ட வந்து கேக்குறாங்க நீங்க ஏன் இப்படி உட்கார்ந்திருக்கீங்கனு"

"ஓ அதனாலதான் என்னைத் தேடி வந்த இல்லைனா நீ என்னைத் தேடி வந்திருக்க மாட்ட அப்படித்தானே, எப்படி உன்னால மட்டும் எதுவுமே நடக்காத மாதிரி முகத்தை வைச்சுக்க முடியுது, எவனோ எப்படியோ போகட்டும் பாதியில் ஓடி வந்தவதான நீ, என்ன புதுசா பாக்கற போ போய் உன் காரியத்தைப் பாரு" அவனுக்கிருந்த கோபத்தை எல்லாம் அவளிடம் காண்பிக்கவும்...

ஸ்ரீ எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க... திரும்பி பார்த்தவன், அவள் அழுவதைக் கண்டு "எதுக்கு அழுற இப்போ கல்யாணம் பண்ண முதல் நாளே அழ வச்சிட்டேனு சொல்றதுக்காகவா" என்றவன் உள்ளே செல்ல, அவனுக்கு முன்பாக சென்று அவர்களது அறைக்கு வழிகாட்டி அழைத்துச் செல்ல...

அங்கோ புதுப் பாய், புதுப் பெட்ஷீட் தலையணை என்று விரித்துப் படுக்கைத் தயாராக்கி வைத்திருந்தனர்.

உள்ளே நின்ற ஸ்ரீயை அவளது தாய் அழைத்து, அவளது தலை நிறையப் பூவை வைத்துக் கையில் பால் டம்பளரைக் கொடுத்து அனுப்பினார்.

"அம்மா" என்று கோபப்பட

இதுதான் நிதர்ஷனம் உனக்குக் கல்யாணமாகிட்டு, உன்னை விருப்பப்பட்டு இவ்வளோ பிரச்சனைகளுக்கு இடையில் கல்யாணம் பண்ணிருக்காரு, கண்டிப்பா உன்னை நல்லாவச்சுப்பாங்கணு நம்பிக்கை இருக்கு போ” என்றார்...

அறைக்குள் வந்து கதவை பூட்டியவள், அவனிடத்தில் டம்பளரை நீட்ட, வாங்காமல் அவளையே தலையைச் சரித்துப் பார்த்ததும், அப்படியே கீழ வைத்துவிட்டு தலையணையை எடுத்துப் போட்டு படுத்து விட்டாள்.

திரும்பி படுத்து அவள் மீது கையைப் போட, அவளோ தட்டிவிட்டாள், மறுபடியும் கையைப் போட்டான், திரும்பவும் அவனது கையைத்தட்டிவிட, நான்கைந்து தடவை இது நடக்க, சட்டென்று அவளது தோளை பிடித்துத் தனது பக்கமாகத் திரும்பியிருந்தான்...

அவளது முகத்தைப்பார்த்து "ஏன் பிடிக்கலையா" என்று கேட்க தன் கண் இமையைத் தாழ்த்தியிருந்தாள் பதில் சொல்லாமல்.

"அன்னைக்கு மட்டும் பிடிச்சுருந்துச்சா, நான் முதன் முதலா தொடும்போது வேண்டாம்னு தள்ளிவிடலையே, பிடிக்கலைனு சொல்லலையே"

இதைக்கேட்டதும் "இதுக்காகத்தான் நான் அங்கயிருந்து வந்தேன், உடம்புக்காக உங்ககிட்ட வர்றேனு சொல்லிடுவீங்கனுத்தான் ஓடி வந்தேன், இங்கயிருக்க முக்கால்வாசிபேருக்கு அதுதான் எண்ணம், விதவையோ இல்லை கணவனை விட்டு பிரிந்திருக்காங்க அப்படினாலே உடம்புக்குத்தான் ஆண் துணையைத் தேடுவாங்கனு நினைப்பு, நீங்களும் இப்போ அதுதான சொல்றீங்க" என்று வெளியே சத்தம் கேட்கக்கூடாதுனு வாயைப் பொத்தி அழவும்...

விஷ்ணுவிற்கு இப்போதுதான் புரிந்தது, “ஐயோ கோபத்துல வார்த்தைகளை விட்டுட்டமே” என்று தலையில் கை வைத்துக்கொண்டான்.

சிறிது யோசித்தவன் அவளது கையை எடுத்து தனது கைக்குள் பொத்தி வைத்துக்கொண்டு

“நான் கேட்டது வேறடி, நீயேன் அதைத் தப்பா புரிஞ்சுக்கிற... இங்க பாரு அன்னைக்குப் பிடிச்சிருந்தது இன்னைக்கு ஏன் பிடிக்கலையானு கேட்டேன், இது ஒரு கணவனா ஒரு காதலனா எனக்குள்ள ஆதங்கம், இது தான் கேட்டேன்.உன்ன தப்பா எதுவும் சொல்லல, என் மனைவிய எனக்கு நல்லாத் தெரியும், அவளைதான் நான் உயிரா நேசிக்குறேன், அந்த நேசத்தின் வெளிப்பாடுதான் அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி உன்கிட்ட உரிமை எடுத்துக்குறேன், இனியும் எடுப்பேன்" என்றவன்.

சட்டென்று அவளது கைகளைப் பற்றியிழுத்து தனது மடியில் இருத்திக்கொண்டவன், மெதுவாக அவளது கைகளில் தன் விரல் கொண்டு கோடுப் போட்டுக்கொண்டே அப்படியே மேலேற, கூச்சத்தில் நெளிந்தவளின் கழுத்தோடு தனது இடதுகரம் கொண்டு அழுத்திப்பிடித்து அப்படியே நெஞ்சோடு சாய்த்துக்கொண்டான்.

சிறிது நேரம் அங்கு மௌனமே ஆட்சி செய்ய...அவளது கன்னத்தில் மெதுவாகத் தடவி இருவிரல் கொண்டு பிடித்து இழுக்க, “ஸ்ஸ்ஆஆஆ...வலிக்குது” என்று சிணுங்கியவளை பாயில் கீழேத்தள்ளி அருகில் சரிந்துப்படுத்தான் விஷ்ணு...

அவளையே பார்த்திருந்தவன் "சத்தியமா நேத்து நீ ஊருக்குப்போயிட்ட இனி வரமாட்டனு சீனியர் சொன்னதும், மூளையே மறத்துப் போயிட்டுப் போ, இனி உன்னை பார்க்கமுடியமோ என்னவோ பலவிதமா யோசனையா இருந்துச்சு, ஆனா இப்போ நீ என் பக்கத்துல அதுவும் கணவன் மனைவியா எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா” என்று அவளது கண்களில் முத்தம் வைக்கக் கண்களைக் கிறக்கத்தில் மூடியவள் பட்டென்று திறந்து விஷ்ணுவைப் பார்க்க, புரிந்தவன் 

“இப்போ நீ என் மனைவிடி, கணவன் தொட்டா,எல்லாப் பெண்களுக்கும் மயக்கம் கிறக்கம் வேற என்னலாமோ வரணும், இல்லைனா உடம்புல எதாவது கோளாறாக இருக்கணும், உனக்கு எதுவும் அப்படியிருக்கா?” என்று நக்கலாகக் கேட்க, 

ஸ்ரீயோ “பேச்சைப்பாரு வக்கீலுனா எல்லாத்துக்கும் விளக்கம் கொடுக்கணுமா என்ன? இப்படிப் பேசுறீங்க” என்று அவனது வாயை தனது கைகாளல் மூட, அந்த கைகளைத் தனது நாவினால் தொட்டு எச்சில் படுத்தினான்...

“அய்ய” என்று தனது கையை எடுத்து, தனது புடவையில் துடைக்க...

“என் எச்சில் உனக்கு ஐயவா?” என்று கேட்டுக்கொண்டே அவளை இழுத்து இதழோடு இதழ் பொருத்தி முத்தமிடவும், தன் கண்களை நீல ஆம்பலாக விரித்து அவனைப் பார்க்க, அவனோ அவளது இதழ் போதையில் திளைத்திருந்தான், மெல்ல அவளும் தன் கண்களை மூடி சுகிக்க...

கொண்டவனோ இதழில் தேனெடுத்தவன், இப்போது தன் உதடுக்கொண்டு கன்னங்கள், காது என்று உரசி தீ மூட்டிக்கொண்டிருந்தான் அவளுக்குள்.

உணர்வின் தீம்பிழம்பாக அவள் மாற, குளிர் காய்வதற்கு ஏதுவாக அவனது சட்டையைக் கழட்டி வீசியவன் வெற்று மார்போடு, மனையாளின் மேனியின் அங்கம் மறைக்கும் ஆடைகளைக் களைய முற்பட...

நானி வெட்கி பிடிவாதமாகக் கழட்ட மறுத்தவளின், இடையின் ஊடாக உள்ளே கையை விட்டு, அவனே கழட்ட முயற்சிக்க, முட்டுக்கட்டையாக முழங்காலால் மேலங்கங்களை மறைத்து, அமர்ந்துக் கொண்டாள்...

அப்படியே அந்த முழங்காலில் தன் முகத்தினை வைத்து, “எவ்வளவு நேரம் இப்படி உட்கார உத்தேசம்...இன்று இல்லைனா நாளை எப்படியும் எனக்குச் சொந்தமான பொருள் அதை நான்தான் பார்க்கப்போறேன், நான்தான் ருசிக்கணும்” என்று கண்ணடித்தவன்...

“நீயா தந்தா சேதாரம் குறைவு, நானா எடுத்தா அதிகம்” என்க...

அப்படியே அவள் தன் கண்களை இறுக மூடிக்கொண்டு, நிமிர்ந்துப் படுக்க...சொர்க்கம் இப்போது விஷ்ணுவின் கண்முன்னே.

நிமிர்ந்த படுத்திருந்தவளின் மலர்மேடுகள் அதனின் செழிப்பைக் கூற, மாயவனாய் மாறி ஸ்ரீயின் பாதத்திலிருந்து மெதுவாக மேல் நேக்கி உணவுத்தேடி அலையும் தேனீயாக ரீங்காரமிட்டு செல்ல...

அவளது இல்லை என்ற இடுப்பு நானும் இருக்கின்றேன் என்று வெளீரென்று வெளியேத் தெரியவும், சிறிது தேங்கி இளைப்பாறி, தனது மீசையினால் இடையின் நீளம் ஆழம், அகலம் அளக்க, கண்ணியவளோ தனது கரம் கொண்டு அவனைத் தடுக்க முடியாமல், அவனது பின்தலையின் முடியைப் பற்றி மேலிழுக்க...

மெதுவாக மேலெழும்பியவன், கண்களாலயே அவளைத் தின்று கொண்டிருந்தான்...

அப்படியே தன் கரம் கொண்டு விஷ்ணுவின் கண்களை மூடியவள், மெல்லியதாகச் சிரிக்க, அவளின் இரு பூவரசம்பூ மொட்டுக்களைச் சட்டையின் மேலோடு கடித்து வாயோடு வைத்திழுக்க, துடித்தவள்...தன் கரத்தை எடுக்கவும் தான் விட்டான் கள்வனவன்.

அவளது சட்டையின் ஹூக்கை கழட்ட, அவ்வளவு தீவிரமாக இருந்தான், 

“உன்னை யாருடி புடவைக் கட்டச் சொன்னது நைட்டிய போட்டு வந்திருக்கலாம் தான எனக்கு வேலை மிச்சமாகும்” என்றவனைப் பார்த்து, முழித்துக்கொண்டிருந்தாள்...

“ஏன்டி அப்படிப் பாக்குற?” என்க 

“இல்லை முதலிரவுக்கு யாராவது நைட்டிப் போட்டு அனுப்புவாங்களா, அதான் நீங்க சொன்னதும் முழிச்சேன்"

“இதை மட்டும் நல்லாப் பேசுடி, வந்ததுல இருந்து பார்க்குறேன் ஒரே ஒரு முத்தமாவது கொடுத்தியா, நான் கொடுக்கறது மட்டும் வாங்கிக்குற, திருப்பிக்கொடுடி” என்று சட்டம் பேசினான்.

ஸ்ரீயோ அவன் சொன்னதும் விஷ்ணுவின் கன்னத்தில் முத்தம் கொடுக்க...

“ஆமா இன்னும் என் கையிலக்கொடேன், நான் என்ன பச்சை பிள்ளையா, குடுக்கவேண்டிய இடத்துலக்கொடுடி” என்று தனது உதட்டை பிதுக்கி காண்பிக்க...

மெதுவாகப் பட்டும்படாமலும் ஒத்தி எடுத்தாள் அவனது உதட்டோடு தன் உதட்டை...

தலையில் அடித்துக்கொண்டவன்...

“இது வேலைக்காதுடி உனக்கு நிறையப் பாடம் சொல்லிக் கொடுக்கணும் போல” என அலுத்துக்கொண்டவன்...

மொத்தமாக அவளது மேலாடையைக் கழட்டிவிட்டான்.

“ஐயோ” என்று கத்தப்போனவளின் வாயை தன் வாயால் அடைத்தவன்.

தன்னுடைய பள்ளியறைப் பாடத்தைச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினான்...

அவனது நாக்கு வண்டாக மலர்மேடுகளைச் சுற்றிச் சுற்றி தேனெடுக்க, எச்சிலினால் அர்ச்சித்தவன் கடித்து சுவைத்து, பெண்ணவளின் பெண்மை வெடிக்க வைத்தான்...

காயை கனியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டவனின் உணர்வுகள் உச்சம் பெற,

மொத்தமாக இருவரும் ஒருவரின் உயிருக்குள் இன்னொருவர் ஊடுருவ முயற்சித்து, அவளுள் தனது உயிரைத்தேடி தன் ஆண்மையின் தீரம் சாற்ற அவளுள் புகுந்த அந்த நொடி, எதுவோ அவளுக்குள் உடைய ஒட்டுமொத்தமாக விஷ்ணுவினுள் அடங்கினாள் ஸ்ரீ...

இருவரின் தேடல் முடிந்ததும் மனைவியின் அங்கம் தொட்டு தடவிக் கொடுத்தவன், அப்படியே அவளது நெஞ்சினில் முகம் வைத்துப் படுத்துக்கொண்டான்...

அதிகாலையிலயே எழும்பிய ஸ்ரீ, தன் கணவனைப் பார்க்க பிடிவாதம் பிடித்துத் தூங்கும் குழந்தையைப் போலப் படுத்திருந்தான்...

காலையில் ஸ்ரீ வீட்டிலயே உணவினை முடித்துச் சென்னைக் கிளம்பினர்...

கிளம்பும்போது ஸ்ரீயின் பெற்றோர் மகளின் முகம் பார்க்க நேற்றிருந்த கலக்கம் இல்லாமல் முகத்தில் சந்தோஷம் மட்டுமே, அதுவே அவர்களுக்குப் பெரிய நிம்மதியைக் கொடுத்தது...

அங்கு டெல்லியில் சக்தி தனக்குக் கீழ் இருக்கும் எஸ்.ஐக்களை குழுவாகப் பிரித்திருந்தான்.

போதைப்பொருள் மற்றும் பெண்கள் கடத்தலில் ஈடுபட்ட முக்கியமான ரவுடிகள், தாதாக்களைக் கைது செய்வதற்கான எல்லாவித ஒப்புதல்களையும் வாங்கி, அவர்களைக் கைது செய்வதற்கு அந்தக் குழுக்களை அனுப்பியிருந்தான்...

ஒரே நாளில் அவர்கள் சென்று கைது செய்வதற்கு ஏதுவாக ஏற்பாடும் செய்திருந்தான்...அப்போதுதான் ஒருவரும் தப்பிப்போகவே முடியாது என்று முடிவெடுத்திருந்தான்.

அடுத்த அவனும் இந்தக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கியப் பிரமுகர் ஒருவரைக் கைது செய்வதற்கு சென்றான்...

அடுத்த நாள் நாளிதழ்கள், மீடியாக்களின் முக்கியமான தலைப்பு செய்தியே சக்திக்குமரன் தான்....

போதைவஸ்துக்கள் மற்றும் பெண்களைக் கடத்தி விற்பனை செய்யும் நிழலுலக மாஃபியாக் கும்பலின் முக்கியமானவர்கள் கூண்டொடு கைது, அதில் தொடர்புடைய முக்கியபுள்ளியும் கைது என்று இந்த அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டவர் திரு. சக்தி குமரன் ஏ.ஐ.ஜி கிரைம் பிரான்ச்.

கதிருக்கோ தனது மகனின் வீரதீரச் செயலை எல்லாச் செய்தி ஊடகங்களும் தொடர்ந்து இடவும் தலைகால் புரியவில்லை சந்தோஷத்தில்..

ஷன்மதிக்கோ இப்போது அவனின் மேல் உள்ளக்கோபம் போய்ப் பயம் வந்திருந்தது, ஷக்திக்குப் பாதுகாப்புச் சரியாக இருக்குமோ எப்படியோ என்று, அவனுக்கு வேறு ஏதும் ஆபத்து வந்து விடுமோ என்று பயந்தவள்...

உடனே அவனுக்கு அழைக்க சக்தி அழைப்பை எடுக்கவும் "சக்தி நீங்க ஊருக்கு வந்திருந்திருங்க ப்ளீஸ், ஏதோ பயமா இருக்கு, நீங்க கவனமா இருங்க" என்று போனிலேயே அழுதாள்...

சக்தி" இங்கே எதுவும் இல்லடா நீ பயப்படுற அளவுக்கு, நான் கவனமாகதான் இருக்கேன், உன் வீட்டுக்காரன் ஒரு போலிஸ் ஆஃபிசருடி, எவ்வளவோ பார்த்தாச்சு, நீங்கமட்டும் அங்க கவனமாக இருங்க சரியா” என்று அவளைச் சமாதானப் படுத்தினான்...

தனது பெற்றோரும் தன் மனைவியை மட்டுமே பாதுகாப்பாக வைத்திருந்தவனுக்குத் தெரியவில்லை அவனைச் சார்ந்த எல்லோருக்கும் பிரச்சனைகள் வரத்தான் செய்யும் என்று...

இரண்டு வாரங்கள் கடந்திருந்த நிலையில் இரவு வெகுநேரமாகியும் ஷ்ரவனைக் காணவில்லை...

அவனுக்கு எப்போதும் பாதுகாப்பிற்காக இருக்கும் பவுன்சர்களையும்(பாதுகாப்பிற்காக இருக்கும் தனியார் ஊழியர்கள்) காணவில்லை...

அவனது மொபைலிற்கு அழைத்துப் பார்க்க, அதுவோ தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்று வந்தது..

லோக்கல் போலிஸில் கம்ப்ளைண்ட் கொடுத்து தேட ஆரம்பிக்கவும்தான் ஷ்ரவன் யாரென்று தெரிய வந்தது, சக்திகுமரன் ஐ.பிஎஸ்(ஏ.ஐ.ஜி)யின் மாமானார் என்றும் பெரிய பிஸினஸ்மேன், பிக்சாட் என்றும் தெரியவரவும் தேடுதல் தீவிரமாகியது...

ஷ்ரவனுடன் இருந்த பாதுகாப்பு வீரர்களைக் கண்டுபிடித்திருந்தனர், ஷ்ரவன் வீட்டிற்கு வருகின்ற வழியில் ரோட்டோரமாக மயங்கி கிடந்தனர்...

அவன் வந்த காரையும் காணவில்லை, ட்ரைவரையும் காணவில்லை....