யுகம் 8

Yu8

யுகம் 8

8 யுகங்கள் தாண்டி உனை காதலிக்கவா??

நடு இரவு வேளை புலவன் கண்ணை மூடி படுக்கையில் படுத்திருக்க... கதவு மெல்ல தட்டப்படும் ஓசை ... கல் போடும் மோகினி போல் தெரியவில்லை .. மீண்டும் தன் கதவை சுரண்டும் ஓசை ...

ஸ்ஊஊ ஸ்ஊஊஊ என்று மீண்டும் ஒரு ஒலி மணியை பார்த்தான் ஒன்று ...

யாரு?? என்றான் கடின குரலில் 

"நான்தான்ங்க உங்க பொண்டாட்டி வந்திருக்கேன் என்றதும் ரத்த அழுத்தம் எகிறி போய் வந்து கதவை திறந்தவன் சட்டென்று அவளை கழுத்தோடு நெறுக்கி தூக்கி விட்டான் ... அவன் அமைதியை கலைக்க கோபம் வந்து விடுகிறது... மிலானி கண்கள் தெறிக்க துடிக்க... புலவன் அவளை பொத்தென்று கீழே போட... 

கொள் கொள் என சத்தமில்லாது இருமிய மிலானி ...

"பரவாயில்லை, எனக்கு தாலி கட்டுனத மறந்துட்டீங்களோனு நினைச்சேன்.. ஆனா இப்படி என்னை தொட்டு தூக்கும் போது நல்லா புரிஞ்சிருச்சு.. நான்தான் உங்க பொண்டாட்டின்னு பசுமரத்து ஆணி போல உங்க மனசுல பதிஞ்சிட்டேன்னு"என்று அவன் தொட்ட கழுத்தை அவள் விரல்கள் ரசனையாக தொட.... நங் என்று கதவில் அடிக்க போன அவன் கையை தடுத்து பிடித்த மிலா 

ஸ்ஊஊ , சத்தம் போடாதீங்க ... உன்கிட்ட பேசதான் இவ்வளவு ரிஸ்க் எடுத்து ஓடி வந்திருக்கேன் ... யாரும் பார்த்திடாம .. அவன் ஆழ்ந்த மூச்சு எடுக்க 

" இன்னைக்கு எனக்கு பிறந்த நாள், மொத மொதல்ல உங்கள பாக்கணும்னு ஆசையா இருந்தது, உங்க வாயால வாழ்த்து கேக்கணும்னு ஓடி வந்தேன் .. 

இத்தனை நாளும் நான் பொறந்த நாளை சிறப்பா கொண்டாடி இருக்காங்க .... ஆனா, அதுல எனக்கு சந்தோஷம் இருந்ததான்னு கேட்டா ..தெரியாது... எல்லாரும் ஜாலியா பார்டி கொண்டாடுவாங்க, ஆனா எனக்கு எதுலேயும் ஒட்டுதல் இருந்ததில்லை, அவங்க பணம் , வசதியை காட்டுவதற்காகத்தான் என்னோட பிறந்த நாள் விழா.. ஆனால் , இந்த பிறந்தநாள் தான் நான் உண்மையா சந்தோஷமா கொண்டாடப்போற முதல் பிறந்தநாள் .... அவன் பார்வை எங்கோ சுற்றி அவள் கண்ணில் வந்து நிற்க ... தயங்கி அவன் நெஞ்சில் சாய்ந்து விட்டாள்... அவன் அவளை உதறிட 

ப்ளீஸ் கட்டிக்கிறேனே மறுப்பு இல்லை?  

ஏன்னா இப்போ நான் மித்ரன் மகள் இல்லை.... இந்த புலவனோட பொண்டாட்டி , உங்க தாலி மிகப்பெரிய பிறந்தநாள் பரிசா, என் கழுத்துல தொங்குது இத சொல்றதுக்கு எனக்கு வார்த்தையே இல்ல என்ற கண்ணீர் அவன் நெஞ்சில் சொட்டாக விழுந்தது ... அவளை சட்டென்று புலவன் தள்ளிவிட.

ப்ளீஸ் விஷ் பண்ணுங்களேன்,  

"ஒழுங்கா போயிடு என்று பல்லை நரநரத்த புலவன் தன் அறைக்குள் போய் கதவை பூட்டிக்கொள்ள பூட்டிய அறைக்கு வெளியே அழுகையில் துடித்த உதட்டோடு மிலானி நின்று கொண்டு.. 

'உங்களுக்கு என்ன பிடிக்கும் , ஆனா ஏத்துக்க தயங்குறீங்க... ஓகே இருந்துட்டு போகட்டும்... நான் சொல்ல நினைச்சதை சொல்லிட்டு போயிடுறேன்... அதுக்கு பிறகு உங்க இஷ்டம் ... இந்த பிறந்தநாள் முடிகிறதுக்குள்ள உங்க கையால எனக்கு கிப்ட் வந்தாகணும் ... அப்படி வரலைன்னா , இன்னைக்கு ராத்திரி பார்ட்டி எல்லாம் முடிஞ்ச பிறகு இதே போல இங்க வந்து நிப்பேன்... ஆனா , இப்படி அமைதியா எல்லாம் போக மாட்டேன் ... ஏங்க பேசுறது கேட்குதா... எல்லார் முன்னாடியும் என் கழுத்துல கிடக்குற தாலியை காட்டி கத்தி கூச்சல் போடுவேன்... டேய் புருசா புது பொண்டாட்டிக்கு பிறந்த நாள் பரிசு எங்கேன்னு கேட்டு கத்துவேன்....  

உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லை, ஆனா என் அண்ணன்மார் என்ன கண்டிப்பா வீட்டோட கொளுத்திடுவாங்க , அது உங்களுக்கு நல்லாவே தெரியும்... நான் இருக்கணுமா இல்ல இந்த பிறந்த நாள் தான் எனக்கு கடைசி பிறந்தநாளா, நீங்களே யோசிச்சுக்கோங்க ...பெரிசா வேண்டாம் ஒரு புடவை ... இல்லை ஒரு குங்குமச் சிமிழ் கூட போதும் .. வாங்கி தருவிங்களா? ஏக்கமாக கேட்டாள் இந்த வீட்டின் இளவரசி ...  

உன் மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்று உள்ளிருந்து புலவன் சத்தம் வர உதட்டை விரித்து சிரித்த மிலா .. 

"பரவாயில்லை இவ்வளவு கஷ்டப்பட்டு நான் பேசுனத கேட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்ங்க, இதையும் கேட்டுட்டு போயிடுங்க நாளைக்கு உங்க கிப்ட்டுக்காக காத்திருப்பேன்... தரலேன்னு வையுங்க , அடுத்த நாள் என் உயிர் போன செய்திதான் உங்களுக்கு வந்து சேரும் ... 

மிரட்டலா ?

ம்ம் நூறு சதவிகிதம் மிரட்டல்னே வச்சுக்கோங்க , உங்க கூட வாழறதுக்காக என்ன வேணும்னாலும் ரிஸ்க் எடுப்பேன் லவ் யூ என்று கதவின் மீது உதட்டை வைத்து சொன்னவள் , அத்தோடு விடாது நச்சு மொச்சு என்று தொடர்ந்து முத்தத்தை கொடுத்து விட்டு சிலு சிலுவென்று முத்து கொலுசு சிணுங்க ஓட... புலவன் சட்டென்று கதவை திறக்க... 

மிலா எங்கும் போகாது , அவன் வீட்டு வாசலில் இடையில் கை வைத்துக் கொண்டு மிலானி, ஒற்றை கண்ணை புருவம் ஏற்றி இறக்கி எப்படி என்பது போல் சிரித்து கொண்டு நின்றாள்...

ப்ச் என்று புலவன் சலித்து கதவை மறுபடியும் அடைக்க போக... சட்டென்று புலவன் சட்டை காலரை பிடித்து இழுத்தவள் ..

இந்த குறை கண்ணு போட்டு பார்க்கும் போது அழகா இருக்கு தெரியுமா? ... நான் இருக்கேனா இல்லையான்னு பார்க்க தான வந்தீங்க 

உனக்கு என்ன ஒட்டிக்கிட்டே இருக்கணுமா என்றவன் தள்ளி போக வில்லை என்பது மேற்படி தகவல்... அவள் ஒட்டி நின்றாலும் விரசம் இலலாது அவனோடு தழுவி நிற்க .. நைட்டியில் தூக்கி கட்டிய கொண்டையில் அவள், கைலியில் மேலே வெள்ளை பனியனோடு அவன்... ரெண்டு நிமிடம் இருவரும் அமைதியாக பார்க்க... 

ஏங்க 

ஏங்க

ப்ச் என்ன?  

பிடிக்காத பொண்டாட்டியைத்தான் இப்படி டைட்டா இடுப்பை பிடிச்சு நிக்கிறீங்களா? என்றதும் புலவன் தன் கையை எடுக்க தடுமாறி மீண்டும் அவன் நெஞ்சில் வந்து அவள் மோத ... மோதக்கூடாத இடம் ரெண்டும் அவன் முரட்டு மார்பில் மோதி மீள ..  

மிலா ஆஆஆஆ என்ற சைந்தவி குரல் கேட்டு மிலானி வேகமாக அவன் உதட்டில் இச் என்று முத்தம் வைத்துவிட்டு பறந்து விட்டாள் ... 

புலவன் யாரும் பார்க்கிறார்களா என பார்த்துவிட்டு உதட்டை துடைக்க போனவன்... அவள் எச்சில் பட்ட இதழை துடைக்காது தலையை கோதிட...  

அய்யோ!! அய்யோ!! என்னடா நடக்குது இங்க என்று கந்தப்பன் வாயில் அடித்து கொண்டு நின்றார்...

ம்க்கும் என்ன ? என்றான் எதுவுமே நடக்காதது போல .. 

ஆத்தாடி !! என்ன புலவா நடக்குது இங்க ? என்னமோ சொந்த பொண்டாட்டி மாதிரி உன் ரூமுக்கே வந்து கிஸ் அடிச்சுட்டு போறா.. என்னடா நீயும் சிலை மாதிரி நிக்கிற என்று கந்தப்பன் வாயில் அடித்துக் கொண்டு வந்து புலவன் முன்னால் நிற்க..

"தாலி கட்டினா பொண்டாட்டி தானா?" என்றான் அவள் கசக்கி விட்டு போன பனியனை நீவி சரி செய்து கொண்டு ..

" பின்ன தாலி கட்டினா, பொண்டாட்டி தானடா..

"அப்போ நான் அவளுக்கு தாலி கட்டி ரெண்டு நாள் ஆகுது "என்றவனை பார்த்து தலையில் கை வைத்து கந்தப்பன் அமர்ந்து விட்டார்..

"என்னடா சொல்ற ..அவன் விளக்கம் சொன்னா பல் உதிர்ந்திடுமே அமைதியாக புலவன் நிற்க.. 

"டேய் உன்னை மட்டும் கொல்ல மாட்டாங்கடா, சும்மா இருக்கிற என்னையும் சேர்த்து கொல்லுவாங்கடா?. .. எப்படா இதெல்லாம் நடந்துச்சு? ஏன்டா அவ கழுத்துல போய் தாலி கட்டின... நம்ம நிலைமை என்னன்னு உனக்கு புரியும்தானே.. 

" நானா கெட்டுனா தான் தப்பு , அவளா வந்து கட்டிக்கிட்டா தப்பு அவ பேருலதான் "என்றுவிட்டு புலவன் உள்ளே போய்விட .. 

டேய் டேய் விளக்கமா சொல்லி அழுதுட்டு போறா ..அவன் கதவை பூட்டியாச்சு 

"தலையும் புரியல வாலும் புரியல மொத்தத்துல இவங்க காதலுக்கு என் தலை போக போகுது அது உறுதி" என் புலம்பிக்கொண்டு கந்தப்பந்தான் தூக்கமில்லாது அலைந்தார்..

என்ன அண்ணி இந்த நேரத்தில இங்க என்ன பண்றீங்க ?

ஹான் அதை நான்தான் கேட்கணும்.. இந்த நேரத்துல எங்க போயிட்டு வர ?? ...என்றதும் நகத்தை கடித்த மிலா..

அது வந்து அண்ணி நான் மேஜையில் வச்சிருந்த கல்லுல ரெண்டு அதிசய கல்லை காணோம்.. அதான் வெளியே எங்கேயாவது கிடைக்குதான்னு தேடி பாத்துட்டு வந்தேன் ..

"ரெண்டு கல்லா நாலு கல்லுல்ல, நான் எடுத்துட்டு போனேன் என்று சைந்தவி முனங்க ..

"அது சரி அந்தக் கல்லு கேட்டதெல்லாம் கொடுக்குமா என்ன? என்று சைந்தவி யோசனையாக அவள் முகத்தை பார்க்க 

ஆமா அண்ணி, நேத்து பரீட்சைக்கு கூட அந்த கல்லுல ரெண்ட , என் ஷால்ல முடிஞ்சு வச்சிட்டு போனேன்.. கல்லே கல்லே எனக்கு தெரிஞ்ச கேள்வி தான் வரணும்னு கேட்டேன் ..

என்ன நடந்தது ?

அத்தனை கேள்வியும் எனக்கு தெரிஞ்ச கேள்வி நூற்றுக்கு நூறு எடுத்துடுவேன் தெரியுமா?

"உண்மையா தான் சொல்றாளா என்ன, நெஜமாவா?

"ஆமாம் அண்ணி வேணும்னா உங்களுக்கு ரெண்டு கல்லு தரட்டுமா, நீங்க வேணும்னா ட்ரை பண்ணி பாக்குறீங்களா ?

ச்சே சே , இதெல்லாம் என்ன முட்டாள் தனம் எதுவும் வேண்டாம்

"சரி விடுங்க அண்ணி யாரோ என் ரூமுக்கே வந்து , அந்த அதிசய கல்ல திருடி இருக்காங்க.. நாளைக்கு அனல் அண்ணன்கிட்ட இத பத்தி பேசணும் என்றதும் சைந்தவி திருட்டு முழி முழித்து

"சாதாரண கல்லுக்காக எல்லாம் உன் அண்ணன கொலைகாரன் ஆக்கிடாத ... அது இங்க எங்கயாவது கிடக்கும் ..போய் படுத்து தூங்கு... ராத்திரி இப்படி பேய் மாதிரி உலாத்திக்கிட்டு திரியாத.. இனிமே அந்த கல்ல மறந்துடு 

"இல்ல அண்ணி அந்த கல்லு எங்க போச்சுன்னு தெரியல

" அதான் மறந்துடுன்னு சொல்லிட்டேன்ல, அவ்வளவு கல்லு இருக்குல்ல.. அந்த நாலு கல்லு தான் உனக்கு கண்ணுக்கு தெரியுதா போ போய் தூங்கு மிலானி ஏன் இந்த நேரத்தில் வெளியே வந்தாள் என்பதை விசாரிப்பது விட்டு விட்டு, தான் தூக்கிய நாலு கல்லை வச்சி சட்டையை கிழிச்சிடுவாளோ?? என பயந்து சைந்தவி புலம்பிக்கொண்டே தன் அறைக்கு போனாள்...

ப்ச் எங்கடி போயிட்டு வர? என்று அனல் கொட்டாவி விட்டுக்கொண்டே படுக்கையில் எழும்பி அமர்ந்தான்..

தண்ணீ முடிச்சு போச்சு எடுக்க போனேன்...

ம்ம் வந்து படு தூங்க மனைவி வேணும் கட்டி அணைத்து படுத்தால்தான் தூக்கம் வரும் 

ரெண்டு நாளா அதை வச்சி பூஜை பண்ணி இருக்கேன் கண்டிப்பா ஏதாவது இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும் என்று நினைத்த சைந்தவி... இரண்டு கல்லை தன் முந்தானையில் முடிந்து வைத்துக்கொண்டு 

"இந்த மாக்கையன் எனக்கு அடிமை ஆகணும் கல்லே என்னு வேண்டி கொண்டு போய் அனல் அருகே போய் அமர்ந்து..

"எங்க போயிட்டு வந்தா என்னடா மடையா , கொஞ்சம் கால் அமுக்கி விடுடா , கால் வலிக்குது என்று சைந்தவி அனல் முகம் பக்கத்தில் காலை வைக்க

"ஐயோ அம்மா வலிக்குது இனிமே நான் இப்படி பேச மாட்டேன் விட்டுருங்க அடிக்காதீங்க , இது அதிசயங்கள் கல்லே இல்லை வெறும் கல்லு நான் தெரியாத்தனமா வாயை தொறந்துட்டேனே "என்று புருஷன் அடித்த அடியில் வாய் வீங்கிய பிறகு தான் அவளுக்கு தெரிந்தது... 

இங்கே பல பேரை வம்பில் மாட்டி விட்டுவிட்டு , மிலா அவனுக்கு முத்தத்தை கொடுத்து விட்டு வந்து காதல் மயக்கத்தில் தலையணையை கட்டி பிடித்து கொண்டு நல்ல தூக்கத்தில் இருந்தாள்...  

புலவனோ, தூக்கம் வராது புரண்டவன் வெளியே வந்து அவள் அறையை அண்ணாந்து பார்க்க... மிலா அறையில் இரவு விளக்கு எறிய ... உள்ளே போய் படுக்கையில் விழுந்து அவள் கொடுத்துவிட்டு போன முத்த மயக்கத்தில் அப்படியே கட்டிலில் படுத்து தூங்கிவிட்டான்.. 

முதலில் காதல் எப்போதும் மயக்கத்தை தான் கொடுக்கும்... அதன் பிறகு தான் மயக்க மருந்து கொடுத்து கிட்னி , லிவர் எல்லாவற்றையும் பிடுங்க வைக்கும்...