பசப்புறு பருவல் 2
Pasa2

2 பசப்புறு பருவல் !!
துபாய் !!
மாமா மாமா..
இரண்டு பேர் நடமாடும் அளவே ஒரு வீடு அதற்கே சம்பளத்தில் பாதி பணம் போய்விடும் போல ...
இந்த ஐந்து வருட வாழ்க்கையில் ரித்விக்கும் ஓடி ஓடி சம்பாதிக்க தான் செய்கிறான் , எங்கே ஒரு மாதம் 10 ஆயிரம் ரூபாய் சேர்த்து வைத்தால் அடுத்த மாதம் 20 ஆயிரம் ரூபாய்க்கு செலவு வருகிறது என்னடா வெளிநாட்டு வாழ்க்கை என்று சலிக்க வைக்கிறது ...
தூரத்தில் இருந்து பார்ப்பவனுக்கு அவனுக்கு என்னடா வெளிநாட்டு வாழ்க ஆஹா ஓகோன்னு இருக்கான் என்று எளிதாக சொல்லி விடலாம் ஆனால் தன் சொந்த தேசத்தின் காற்றுப்படாமல் ஏதோ ஒரு தேசத்தில் பிழைப்புக்காக பணம் தேடி அலையும் அந்த மாந்தர்களுக்கு தான் தெரியும் பணத்தைவிட தன் சொந்த தேசத்தின் காற்று எவ்வளவு அரிய பொக்கிஷம் என்று ... வருடம் முழுவதும் அவர்கள் காத்திருப்பது தீபாவளிக்காக பொங்கலுக்காக அல்ல என்றாவது ஒருநாள் என் சொந்த ஊருக்கு போய் விட மாட்டோமா என்பதுதான் அவர்களின் பண்டிகை தினமாக காத்திருக்க வைக்கிறது ...
வெளிநாட்டில் இருப்பவன் எல்லாம் கோடி கோடியாய் சம்பாதிக்கும் நபர்கள் அல்ல, அங்கேயும் எளிமை உண்டு, ஏழ்மை உண்டு வயிற்றை கட்டி வாயைக் கட்டித் தான் தன் குடும்பங்களை காப்பாற்ற அங்கே முடங்கி கிடக்கிறார்கள் என்பதை பலர் அறிவதே இல்லை.. அப்படி ஒருவன் தான் இந்த ரித்விக்...
காதல் தோல்வியில் துவண்டு போய் இங்கே வந்தவனுக்கு ஏதோ ஒரு வேலை எப்படியோ வாழ்க்கை என்று ஓடிக்கொண்டிருந்தவனுக்கு வாழ்க்கையை புரட்டிப் போட்டது போல் அவன் மனைவி பிள்ளை என்று இப்போது யோசித்துப் பார்க்கவே சிரிக்க தோன்றுகிறது... இந்த வாழ்க்கை பிடித்து இருக்கிறதா என்று கேட்டால் பழகிக் கொண்டேன் என்ற பதில்தான் அவனிடம் வரும் ...
முதல் காதல் உயிர் போகும் வரை அவன் உள் நெஞ்சில் உயிரோடு வாழத்தான் செய்யும்... அதை மற என்று அவன் மனைவியும் சொன்னதில்லை... மறக்க அவனும் நினைக்கவில்லை...
குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தான் ரித்விக் கண்ணில் ஏனோ பெருகி வடிந்தது ... ஆம் கண்ணீர்... அவன் பழைய காதலி நினைத்து ...
வருடத்திற்கு ஒரு முறையாவது அவன் முன்னாள் மனைவிக்கு போன் போட்டு நலம் விசாரித்து விடுவான்... அவள் குரலைக் கேட்டு விட்டு வைத்த பிறகு தொண்டைக்குள் ஏதோ அடைத்த உணர்வு அப்படியே சுவரைப் பிடித்துக் கொண்டு நின்றான் ..
மாமா மாமா என்று மீண்டும் கதவு தட்டப்பட சட்டென்று சுயம் வந்து
சொல்லு"
"டவல் மாமா மறந்துட்ட" என்று வெள்ளை நிற கைகள் மேலே நீண்டு வர . ஏதேதோ நினைவுகள் தலையை தட்டிக் கொண்டவன்,
"இனிமே அதை எல்லாம் யோசிக்காத இவதான் நம்ம வாழ்க்கை இதுதான் என் குடும்பம் எப்போதும் சொல்லும் இந்த வார்த்தைகளை மறுபடியும் இன்றும் சொல்லிக்கொண்டு அவள் கையில் இருந்து டவலை வாங்கி இடையில் கட்டி கொண்டவன்.. கதவை திறக்க ... பளீர் புன்னகையோடு நின்றாள் நங்கை!!!
சிவந்த நிறம் ஓடிசலான உருவம்... இடை தாண்டிய பின்னல், கருவண்டு கண்கள், காஜல் பூசிய விழிகள் ... சிவந்த உதடு , பொட்டும் பூவும் என மங்களகரமாக எப்போதும் சுற்றி வரும் அவளை மெலிதாக சிரித்தபடி பார்த்தான் ரித்விக் ...
" மாமா நீ எடுத்து தந்த புடவையில நான் எப்படி இருக்கேன் மாமா என்று முன்னும் பின்னும் சுற்றி காட்ட அவள் தோளில் கை போட்ட ரித்விக்
"உனக்கு என்னடி தேவதை தோத்து போவா
"அப்படியா அழகா இருக்கேனா ?
"பேரழகா இருக்க , பூ இருக்கா வாங்கிட்டு வரணுமா நங்க
"இன்னும் ரெண்டு நாளைக்கு இருக்கு பிறகு வாங்கிட்டு வா மாமா என்று அவன் இடையை பிடித்து கொண்டே அவளும் நடந்தாள்.. அவன் உரில்லாத உணர்வுக்கு உயிர் கொடுத்தது இவள் தான் .... இந்த வீட்டின் உயிரே இவள் தான் என்பதை மறக்க மாட்டான் மறுக்க மாட்டான்.. ஆனால் இவள் மீது காதலா விடை தேடி அது சொன்ன பதிலில் தலையை உதறினான்.... அவனை போல அழகாக சிரித்தபடி தாய் தகப்பன் கழுத்தை கட்டிகொண்டு நின்ற மகன் சந்துருவை பெருமூச்சு விட்டு பார்த்தான்...
குடி குடியை கெடுக்கும் இல்ல மாமா என்று கண்ணை சிமிட்டிய மனைவியை முறைத்து பார்த்தான்
"சும்மா சொன்னேன் பல வருடசமா அந்த போட்டோ அங்க தான் இருக்கு ,இப்ப என்ன உத்து உத்து பார்த்துட்டு இருக்க
"ம்ம் சும்மா தான்
"நெறைய சும்மா உன் மனசுல ஓடுது அத்தனை சும்மாவும் எனக்கு தெரியுமே என்று உதட்டை பிதுக்கினாள்
"ம்ம் கொழுப்பு கூடி போச்சு போல , சந்துரு ஸ்கூலுக்கு போயிட்டானா நங்க... என்று ஈரத்தலையோடு நின்றான் ..
"அவன் போயிட்டான்... உன்ன எத்தனை தடவை சொல்லி இருக்கேன் மாமா , தலையை ஒழுங்கா தொடன்னு பின்ன அச்சு அச்சுன்னு தும்மிட்டு கிடக்க வேண்டியது என்று நங்கை கடிந்து கொண்டு டவலை வாங்கி அவன் உயரத்திற்கு கால்களை எக்கி தலையை துவற்றிவிட்டாள் நங்கை.....
கசகசவென ஒரு அறையில் அத்தனை பொருளையும் போட்டு அடைத்து வைத்திருந்தனர் அதில் ஒரு கட்டலில அடுப்பு குளியலறை இதுதான் வீடு ...
ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு காதல் உண்டு பலர் அதை மறந்து போவதும் சிலர் அதை மறக்காது போவதும் அவரவர் கொண்ட காதலின் ஆழத்தை பொறுத்து மாறுபடும்...
இருவரும் வேக வேகமா தின்று பையை எடுத்து மாட்டி கொண்டனர் ...
ரித்விக் சாக்லேட் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறான் ... நங்கை கார்மென்ட் ஒன்றில் வேலை செய்கிறாள் இருவரும் சேர்ந்து இழுத்தால் தான் குடும்பத்தை ஓட்ட முடியும் ...
சாலையில் இருவருமாக கையை கோர்த்து மெளனமாக நடக்க ஆரம்பித்தனர் ....
மாமா
சொல்லு நங்கை
"அக்கா கூட பேசின பிறகு உன் முகம் ஏன் டல்லா இருக்கு??அவன் ஆறுதல் , அரவணைப்பு எல்லாம் இவள்தான் ..
"இல்லையே
"பொய் சொல்லாத மாமா இன்னும் அக்காவை
"ச்சே ச்சே
"என் கிட்ட பொய் எல்லாம் சொல்லுவியா மாமா
"ப்ச் இப்ப எதுக்கு அது?
"ஏன் டல்லா இருக்க அதை சொல்லு ...
"இல்லை போன முறை பேசும் போது கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னாங்க என்று இழுத்தான்
ஓஓஓ சொன்னீங்கல்ல நீயே கல்யாணம் பிள்ளைன்னு செட்டில் ஆகியாச்சு அவங்க ஆக மாட்டாங்களா? "
"ப்ச் அது இல்லடி, ஆனா குழந்தை பத்தி எதுவும் சொல்ல
"நீ கேட்டீயா மாமா ?
"இதை போய் நான் எப்படி கேட்க
"கேட்டு இருக்க வேண்யதுதான , சரி விடு அடுத்த வாட்டி பேசும் போது கேளு நங்கை யோசனையாக அவனை பார்க்க
"என்னடி யோசிக்கிற ஒழுங்கா சொல்லிடு
"சொன்னா திட்ட மாட்டியே மாமா
"மாட்டேன்
"இல்லை அக்கா இன்னொரு கல்யாணம் பண்ணிட்டாங்க அதுக்கு உன்கூடவே வாழ்ந்து இருக்கலாம் நீயும் ஹேப்பியா இருந்திருப்ப...
"ப்ச் இப்ப எனக்கு என்னடி வந்துச்சு நீ சந்துருன்னு ஜாலியா தான போகுது
"உண்மைய சொல்லு வைசு அக்காவை மறந்துட்டேன்னு..
"உன் கம்பெனி பஸ் வந்துடுச்சு ஓடு ஓடு
"இதுக்கு மட்டும் பதிலே சொல்லாத உன் மனசுல இன்னும் அக்கா கொஞ்ச இடத்துல இருக்கத்தான் செய்யுது போல ...
"சரி இருக்கான்னே வச்சிக்க, அதுக்கு என்ன செய்ய போற ??
"உயிரை கொடுத்து சேர்த்து வைக்கலாம்னு ஒரு வரம் கிடைச்சா உயிரை கொடுத்துவேன் மாமா என்ற நங்கையை அவன் அதிர்ந்து பார்க்க
"உன் மனைவியா இத்தனை வருடம் வாழ்ந்ததே போதும் மாமா எத்தனை நாள் தான் நீயும் மறைச்சு மறைச்சு மறைச்சு வாழுவ உன் அன்பு எனக்கு இருக்கு... ஆனா உன் காதல் எப்பவும் எனக்கு இல்லையே மாமா என்றவள் பேச்சில் அவளை ஏறெடுத்து பார்க்க முடியாது ரித்விக் தலையை குனிந்து கொள்ள ... அவன் நாடியை தூக்கி தன்னை பார்க்க வைத்த நங்கை
"சொல்லு மாமா என்ன உன்னால காதலிக்க முடியாதுல்ல....
"பஸ் வந்திடுச்சு நங்கை
"பதில் வரலேயே மாமா
"உன்ன எனக்கு பிடிக்கும் ...வாழ்ற எல்லாரும் காதலிச்சு தான் வாழணும்னு அவசியம் இல்லை , சூழ்நிலை,சமூக கட்டுப்பாடு இப்படி ஏதோ ஒன்னு தான் பலர் வாழ காரணம்
ஆக என் மேல காதல் வராது..... ஊருக்காக என் கூட வாழ்ற ரைட்டா
நமக்குன்னு பிள்ளை வந்த பிறகு என்னடி கிறுக்கி போல பேசிட்டு இருக்க ...
கொஞ்சம் பயமா தான் இருக்கு ... அக்கா மேல நீ இன்னும் குறையாம வச்சிருக்க நேசம் பல சமயம் எனக்கு பயத்தை கொடுக்குது மாமா
ஹாஹா இப்ப தான் சொன்ன உயிரை கொடுத்து சேர்த்து வைப்பேன்னு"
"அப்படி ஒரு வாய்ப்பு வர கூடாது.. வந்தா உயிரை கொடுக்க தயங்க மாட்டேன் ..எப்படி அவங்க ஹேப்பியா இருக்கணும்னு நீ ஆசை படுறியோ? அதே போல நீயும் ஹேப்பியா இருக்கணும்னு நானும் ஆசைப்படுவேன்ல.. சுயநலமும் இருக்கு நீ. அவங்க கூட சேர்ந்து வாழ்றதை பார்க்க என்னால முடியாது அதான் உயிரை கொடுத்துட்டா உங்கள பார்க்க வேண்டிய தேவை இருக்காதுல்ல என்ற நங்கையை தலையில் தட்டிய ரித்விக்
"மெண்டல் போ ... என்றதும் அவள் வண்டியில் ஏறி கையாட்ட அவனும் பதிலுக்கு கையாட்டிவிட்டு பெருமூச்சு விட்டான்....
புரிகிறது இது எல்லாம் தவறு என்று வைஷ்ணவியை நினைப்பது தவறு , இவளை வருத்துவது தவறு , என்று புரிந்தாலும் வைஷ்ணவியை மறக்க முடியவில்லை என்பதை விட அவள் நல்லா இருக்காளா என்பதை அறிய துடிக்கும் மனதை அடக்க முடியல .. நாம் நேசித்தவர்கள் நம்மோடு தான் வாழ வேண்டும் என்று அவசியமில்லை எங்கே யாரோடு வாழ்ந்தாலும் அவர்கள் நன்றாக வாழ வேண்டும் என்று நினைப்பதுதான் உண்மையான காதல் போல ...
இனிமே வைஷ்ணவி பத்தி பேச கூடாது என்று லடச்சத்து ஒன்னாவது தடவை யோசித்துக் கொண்டு வேலைக்கு ஓடினான் ....
காதலிக்க தடை போடலாம்
நேசிக்க தடை போடலாம்
நினைக்க தடை போட முடியாதே..