பசப்புறு பருவல்
Pasa

பசப்புறு பருவல்!!
டீசர் 2
ரித்விக் எனக்கு ஒரு பைக் வாங்கி கொடேன் என்னால பஸ்ல போயிட்டு வர முடியல என்று ரிதன்யா கேட்க ..
என்ன ரித்து நம்ம நிலைமை உனக்கு தெரியாதா? பஸ்ல போ... நான் சம்பாரிக்கிறது குட்டி ஸ்கூல் பீஸ் அண்ணி தேவைக்கு போக உன் கல்யாணத்துக்கு சேர்த்து வைக்கிறதுக்கு தான் இருக்கு ....
எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம் ஒரு பைக் வாங்கி கொடு போதும் "
உன் இஷ்டப்படி எல்லாம் செய்ய முடியாது ரித்து என் கடமைன்னு ஒன்னு இருக்கு
"ப்ச் கடமை உள்ளவன் எதுக்குடா ரெண்டாவது கல்யாணம் பண்ணின ??
ரித்து ஊஊஊஊ அது என் இஷ்டம் .... முதல்ல ஹவர்மெண்ட் எக்ஸாம்ல பாஸ் பண்ணி எதாவது வேலையில சேர பார்" என ரித்விக் போனை வைத்து விட
ப்ச் என்று சலித்து மணியை பார்க்க பத்து
அய்யய்யோ பஸ் வந்திருக்குமே" என்று ரிதன்யா அரக்க பறக்க பஸ் ஸ்டாப் ஓடி வர அதற்குள் பேருந்து கிளம்பி விட
"அய்யோ ஸ்டாப் ஸ்டாப் "என்று வண்டி பின்னே ஓடியவள் பின் வாசல் வழியாக கரணம் தப்பினால் மரணம் என்று ஓடி போய் ஏற போக கால் வழுக்கி கீழே விழ போன ரிதன்யாவை சட்டென ஆணின் வலுத்த கை தூக்கி உள்ளே நிறுத்தி விசில் அடிக்க வண்டி ப்ரேக் போட்டு நின்றது ..
"ஏம்மா உனக்கு அறிவு இல்லை , ஓடுற பஸ்ல வந்து ஏறுற சாகணும்னா தள்ளி போய் செத்து தொலைம்மா" என்று தன் காக்கி சட்டை நெஞ்சில் வந்து மோதிய அப்பெண்ணை அவன் குனிந்து பார்க்க அவள் நிமிர்ந்து பார்க்க ...
சாமுராய் நடத்துனர் என்ற பெயரோடு அவன் காக்கி சீருடையோடு அவள் முன்னே நின்றது அவள் பழைய ஏமாற்று காதலன்
இவளா ??
ப்ச் இவனா என்று பல்லை நெறித்தாள் ரிதன்யா...
போகலாம் போலாம் ரைட் என்று டபுள் விசில் ஸ்டைலாக கொடுத்த சாமுராய்
"எங்க போகணும் ப்ச் உன்ன தான் கேட்டேன் எந்த ஸ்டாப் ?
"ஊசி முனை ஸ்டாப் ஒன்னு என்று காசை நீட்ட
"பேலன்ஸ் கொண்டு வர தெரியாது ... என்று கடுகாய் போல அவன் பொறிய ....
"இதுதான் இருக்கு ..
"மீதியை இறங்கும் போது வாங்கிட்டு போ" என்று பையை திறந்து பணத்தை போட்டவன் டிக்கெட்டை கிழித்து அவள் கையில் திணித்து விட்டு போய் பின் படிக்கட்டில் நிற்க..
கூட்டம் அங்கும் இங்கும் அவளை தள்ள அருகே குடிகாரன் வேறு மாட்டி கொள்ள மூக்கை ஷால் கொண்டு பொத்தி கொண்டு நின்றாள் முன்னால் பணக்காரி ரிதய்யா ... வியர்வையும் இந்த பலதரப்பட்ட மனிதர்கள் அருகாமையும் அவள் நினைத்தாலும் தடுக்க இயலாத நிலையில் மூக்கை பொத்தி அந்த கூட்டத்தில் நின்றவள் ....
ஊசி முனை இறங்கு என்றதும் அடித்து பிடித்து கூட்ட நெரிசலை தள்ளி கொண்டு ஓடி வந்து இறங்கிய வைசு
மீதி நூறு ரூபாய் தரணும் ... என்று சாமுராய் முன் கையை நீட்டினாள்...
நான் என்ன ஏமாத்திட்டா போகவா போறேன் ...விடாபிடியா நின்னு வாங்கிற , இந்த ரூட்ல தான் வேலைக்கு மாறுதல் ஆகி இருக்கேன் டெய்லி இந்த பஸ்தான்
"உங்கள பத்தி எவனுக்கு வேணும், ஏமாத்திட்டு போன ஆளு தான.. அதான் பணத்தை ஏமாத்திட்டு போனா என்ன பண்ண காசை கொடுங்க ... என்று ரித்து காசை வெடுக்கென்று பிடுங்கி கொண்டு , வியர்க்க விறுவிறுக்க அரசாங்க வேலைக்கு பயற்சி எடுக்கும் இன்ஸ்டிட்யூட் உள்ளே ஓடினாள் ...
அன்று வியர்வை டஸ்ட் இன்று தினம் தினம் அந்த வியர்வையில் பொது மக்களோடு மக்களாக வாழ பழகினாளோ இல்லையோ, வாழ்ந்தே தீர வேண்டும் கட்டாயத்தில் போகும் அவளை ஒரு நொடி பார்து விட்டு தலையை உதறி கொண்டான் சாமுராய்...
ஏமாத்துக்காரன் ச்சை இவனை போயா மறுபடி பார்க்கணும் என்றவளுக்கு மனம் ஆற மறுத்தது ..
அல்டாப்பு சுந்தரி தான் ஆனால் போலியாக காதலிக்க வில்லையே ஏமாற்றி விட்டானே என்ற வலி எப்போதும் அவளிள் உண்டு...
இவ நமக்கு எப்பவும் செட் ஆக மாட்டா எட்டி கூட பார்த்துடாத என்று சாமுராய் தலையை திருப்பி கொண்டான்
ஒரே பாதையில் பேருந்தில் மட்டும் பயணம் செய்ய போகிறார்களா இல்லை மீண்டும் வாழ்க்கை பயணம் தொடருமா???
வெள்ளி இரவு முதல் சைட்டில் வரும்