பசப்புறு பருவலே
Pasa

பசப்புறு பருவரல்!!
வேஷம் போடும் வேடா கதையின் ரெண்டாம் பாகம்
டீசர் 1
ஹேஏஏஏஏஏஏஏஏ குழந்தை அழுகுரல்
சென்னை ஏ கிளாஸ் மருத்துவமனை பிரசவ அறையை நிரப்பியது ...
பரவாயில்லை வைசு சத்தமே இல்லாம குழந்தையை பெத்து எடுத்துட்டியே... என்று மருத்துவர் அவளை பார்க்க வலி நிறைந்த புன்னகையை கொடுத்த வைசு
இது எல்லாம் என்ன வலி மேடம் நான் அனுபவிச்ச வலி முன்ன இதெல்லாம் சர்வ சாதாரணம் ... என்ன குழந்தை ...
பெண் குழந்தை வைசு என்று தங்க திருமேனி கொண்டு பிறந்த மகளை மருத்துவர் காட்ட ...
இது ஒன்று போதும் என்று மகள் கன்னத்தில் அவள் முத்தம் பதிக்கும் முன் குழந்தை தளர்ந்து விழ
அய்யோ என்னாச்சு... என்று வைசு பதற
இரும்மா என்னன்னு பார்க்கறேன் என்று பிள்ளையை தூக்கி கொண்டு அங்கும் இங்குமாக ஆட்கள் ஓட ... அவள் எச்சில் கூட விழுங்காது பிள்ளைக்காக காத்திருக்க , வெள்ளை துணியில் அன்றோ அவள் துயர் துடைக்க வந்த தேவதை உயிரற்ற வந்து இன்னும் நீங்கா துயரில் ஆழ்த்தி போனாள்
அய்யய்யோ என் பிள்ளை!! என்று கதறிய வைசு அழுகை மார்பில் பால் சுரக்கா தாயை கூட கலங்க வைத்து போகும் ...
தன் இருட்டு அறையில் முடங்கி கிடந்தாள் வைஷ்ணவி தகப்பன் , தாய் முகம் பார்த்து பேசி பல வருடம் ஆகிறது
வைசு
வைசு அவள் தாய் செண்பகம் மெல்ல அவள் அருகே உட்கார்ந்தார்
இந்தா பிரசாதம்...
ப்ச்
இன்னைக்கு உன் பிறந்தநாள் வைசும்மா இன்னைக்காவது வெளியே எங்கேயாவது போயிட்டு வரலாமே
என்ன எனக்கு பிறந்த நாளா?!! வேகமாக கட்டலை வி்ட்டு எழும்பி ஓடி வந்து காலண்டரை திறக்க அவள் பிறந்த நாள் முகத்தில் அன்று மட்டுமே வரும் புன்னகை.... சரியாக பனிரெண்டு மணி அடிக்க அவள் வீட்டு போன் மணி அதிர்ந்தது .... தன் தாய் தந்தை அங்கே நின்ற யாரையும் பார்க்காது நாலு கால் ஓட்டமாக ஓடி வந்து அந்த போனை எடுத்து காதில் வைத்தாள் வைஷ்ணவி...
ஏங்க என்ற அவன் குரலில் ஓஓஓ என்று கதற தோன்ற சேலை முந்தானை வைத்து வாயை மூடி கொண்டவள்
இருக்கேங்க...
பிறந்த நாள் வாழ்த்துகள்ங்க
ம்ம் நன்றிங்க
நல்லா இருக்கீங்களாங்க
ம்ம் பைன் ரொம்ப நல்லா இருக்கேங்க நீங்க ?
ஆமாங்க நல்லா இருக்கேன்
ஓஓஓ உங்க மனைவி பிள்ளை எல்லாம் நல்லா இருக்கா?? என்று வைஷ்ணவி கேட்டு முடிக்கும் முன் ஆயிரம் முறை உயிரோடு செத்துவிட்டாள்... அன்று உரிமையானவன் இன்று யாருக்கோ உரிமையாய் உயிராய் மாறி ஒரு உயிரையும் கொடுத்து குடும்பமாய் வெளிநாட்டில் வாழும் தன் முன்னாள் கணவனை காதலிப்பது சரியா தவறா என்று கூட தெரியாது பேதலித்து நிற்கும் பேதை அவள்
சந்துரும்மா வைசு ஆண்டி பேசுறாங்க பேசுறியா...ரித்விக் தன் மகனுக்கு குரல் கொடுக்க
மாதாஜி ஆன்டி கூட பேசவா என்று மழலை குரல் போன் மூலம் வர செத்து போன முகத்தில் பிணமாய் ஒரு சிரிப்பு வைஷ்ணவிக்கு...
சீக்கரம் பேசிட்டு வா ஸ்கூலுக்கு போகணும்ல என்ற பெண்ணின் குரல் மென்மையாக வந்தது ....
தேங்க்ஸ் மாதாஜி என்று ஓடி வந்த ஆண் குழந்தை அச்சு அசல் ரித்விக்கை உரித்து வைத்திருந்தான்
"ஹாய் ஆன்டி நான் சந்துரு
"ம்ம் தெரியுமே... எப்படி இருக்கீங்க
"பைன் ஆன்டி நீங்க
"ம்ம் நல்லா இருக்கேன்
"எப்போ ஆன்டி எங்களை எல்லாம் பார்க்க வருவீங்க உதட்டை கடித்து உணர்வுகளை அடக்கி கொண்ட வைசு
"கூடிய சீக்கரம் வர ட்ரை பண்றேன்
"பேட்டா, ஸ்கூல் வேன் வந்திடுச்சு ஓடிவா என்ற தாயின் குரலுக்கு
"இதோ வர்றேன் மாதாஜி ஓகே வைசு ஆன்டி பிறகு பேசுறேன்
"பாய் டேடி பாய் மம்மி" என்று கத்தி கொண்டே தேய்ந்து போன பிஞ்சு குரலை கண்ணில் வடிந்த கண்ணீரை கூட துடைக்க முடியாது கேட்டு கொண்டு நின்றாள் வைஷ்ணவி
"ஏங்க
"ஹான் சொல்லுங்க ரித்விக்..
"நீங்க நல்லா இருக்கீங்க தான
"ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன் ரித்விக் ....
"அது போதுங்க பிறந்த நாள் வாழ்த்துகள்ங்க
"ம்ம்
"ஒரு நிமிசம்ங்க என் வொய்ப் பேசணுமாம்?
அப்போ நான் யார்?? என்று கேட்க முடியாது நின்றாள்
ம்ம் கொடுங்க ரித்விக்
அக்கா நல்லா இருக்கீங்களா அன்பாய் வந்த அக்குரல்
"நீ எப்படிம்மா இருக்க??
"சூப்பரா இருக்கேன் அக்கா மாமா என்ன ஒரு குறையும் வராம பார்த்துக்கிறார்"
"ம்ம் ரொம்ப சந்தோசம்ம்மா...
"அவருக்கு வேலைக்கு லேட் ஆச்சுக்கா, டிபன் பண்ணணும் நீங்க அவர்கிட்ட வேணும்னா பேசுங்க
இல்லேம்மா எனக்கும் வேலை வந்திடுச்சு வைக்கிறேன்..
சரிங்க அக்கா என்று போனை துண்டிக்க
துண்டித்த உறவில் இனி இணைவு இல்லை என்று என்றோ தெரிந்தது தான் ஆனாலும் ஏற்க மறுத்தது மனது ... வருடம் வருடம் அவள் பிறந்த நாளைக்கு வரும் அவன் வாழ்த்துக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் அவள் !!!
அவள் பசலை நோயிக்கு மருந்து மரணம் மட்டுமே என்று விதிக்கப்பட்டது...