பசப்புறு பருவல் 3
Pasa3

3 பசப்புறு பருவல்!!
கை காலில் கிளவுஸ், தலையில் டர்பன் என்று பேக்டரி உள்ளே நுழைந்தான் ரித்விக்... பணத்துக்காக நாய்படா பாடுதான் .. நிற்க நேரம் இல்லை கை கால் மரத்து போகும் அளவு உழைப்பு .. இடைப்பட்ட நேரம் அவன் தங்கையிடம் இருந்து அழைப்பு ...
அவளுக்கு என்று ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க தான் எக்ஸ்ட்ரா வேலைப்பளுவை தலையில் தூக்கி போட்டு கொள்கிறான்...
ஹலோ சொல்லு ரித்து... யாரும் இல்லாது கிடக்கும் தன்,தங்கையை நினைத்து பல நேரம் வேதனை ஆகிறது ஆனாலும் வேறு வழியில்லையே ....
ரித்து
ம்ம் சுதி இல்லாத குரல் வந்தது .... அவளும் முயன்ற வரை மிடில் கிளாஸ் வாழ்க்கைக்கு பழகத்தான் முயலுகிறாள் ஆனாலும் முடியவில்லை .... அண்ணன் அனுப்பும் பணம் வைத்து வீட்டு வாடகை , படிக்க பீஸ் சாப்பாடு என்று அனைத்தும் போய் கையில் ஒத்த பைசா நிற்பது இல்லை .... தெரிந்தவர் வீட்டு பக்கமே ஒரு வீடு எடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கிறான்... முதலில் இது வீடா என்னால இப்படி எண்ணி எண்ணி செலவு பண்ண முடியாது ரித்விக் என்று அழுது ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணியவள்
அப்போ நீயே எதுவும் செஞ்சிக்க என்னால இவ்வளவு தான் தர முடியும் ரித்து என்று அவன் முடித்து விட ... அவளும் உதட்டை பிதுக்குவது தவிர வழியில்லை ...
என்ன ரித்து ?
ரித்விக் எனக்கு ஒரு பைக் வாங்கி கொடேன் என்னால பஸ்ல போயிட்டு வர முடியல" என்று ரிதன்யா கேட்க ..
"என்ன ரித்து நம்ம நிலைமை உனக்கு தெரியாதா? பஸ்ல போ... நான் சம்பாரிக்கிறது குட்டி ஸ்கூல் பீஸ் அண்ணி தேவைக்கு போக உன் கல்யாணத்துக்கு சேர்த்து வைக்கிறதுக்கு தான் இருக்கு ....
"எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம் ஒரு பைக் வாங்கி கொடு போதும் "
"உன் இஷ்டப்படி எல்லாம் செய்ய முடியாது ரித்து என் கடமைன்னு ஒன்னு இருக்கு
"ப்ச் கடமை உள்ளவன் எதுக்குடா ரெண்டாவது கல்யாணம் பண்ணின ??
ரித்து ஊஊஊஊ அது என் இஷ்டம் .... முதல்ல ஹவர்மெண்ட் எக்ஸாம்ல பாஸ் பண்ணி எதாவது வேலையில சேர பார்" என ரித்விக் போனை வைத்து விட
ப்ச் என்று சலித்து மணியை பார்க்க பத்து
அய்யய்யோ பஸ் வந்திருக்குமே" என்று ரிதன்யா அரக்க பறக்க பஸ் ஸ்டாப் ஓடி வர அதற்குள் பேருந்து கிளம்பி விட
"அய்யோ ஸ்டாப் ஸ்டாப் "என்று வண்டி பின்னே ஓடியவள் பின் வாசல் வழியாக கரணம் தப்பினால் மரணம் என்று ஓடி போய் ஏற போக கால் வழுக்கி கீழே விழ போன ரிதன்யாவை சட்டென ஆணின் வலுத்த கை தூக்கி உள்ளே நிறுத்தி விசில் அடிக்க வண்டி ப்ரேக் போட்டு நின்றது ..
"ஏம்மா உனக்கு அறிவு இல்லை , ஓடுற பஸ்ல வந்து ஏறுற சாகணும்னா தள்ளி போய் செத்து தொலைம்மா" என்று தன் காக்கி சட்டை நெஞ்சில் வந்து மோதிய அப்பெண்ணை அவன் குனிந்து பார்க்க அவள் நிமிர்ந்து பார்க்க ...
சாமுராய் நடத்துனர் என்ற பெயரோடு அவன் காக்கி சீருடையோடு அவள் முன்னே நின்றது அவள் பழைய ஏமாற்று காதலன்
இவளா ??
ப்ச் இவனா என்று பல்லை நெறித்தாள் ரிதன்யா...
போகலாம் போலாம் ரைட் என்று டபுள் விசில் ஸ்டைலாக கொடுத்த சாமுராய்
"எங்க போகணும் ப்ச் உன்ன தான் கேட்டேன் எந்த ஸ்டாப் ?
"ஊசி முனை ஸ்டாப் ஒன்னு என்று காசை நீட்ட
"பேலன்ஸ் கொண்டு வர தெரியாது ... என்று கடுகாய் போல அவன் பொறிய ....
"இதுதான் இருக்கு ..
"மீதியை இறங்கும் போது வாங்கிட்டு போ" என்று பையை திறந்து பணத்தை போட்டவன் டிக்கெட்டை கிழித்து அவள் கையில் திணித்து விட்டு போய் பின் படிக்கட்டில் நிற்க..
கூட்டம் அங்கும் இங்கும் அவளை தள்ள அருகே குடிகாரன் வேறு மாட்டி கொள்ள மூக்கை ஷால் கொண்டு பொத்தி கொண்டு நின்றாள் முன்னால் பணக்காரி ரிதய்யா ... வியர்வையும் இந்த பலதரப்பட்ட மனிதர்கள் அருகாமையும் அவள் நினைத்தாலும் தடுக்க இயலாத நிலையில் மூக்கை பொத்தி அந்த கூட்டத்தில் நின்றவள் ....
ஊசி முனை இறங்கு என்றதும் அடித்து பிடித்து கூட்ட நெரிசலை தள்ளி கொண்டு ஓடி வந்து இறங்கிய வைசு
மீதி நூறு ரூபாய் தரணும் ... என்று சாமுராய் முன் கையை நீட்டினாள்...
நான் என்ன ஏமாத்திட்டு போகவா போறேன் ...விடாபிடியா நின்னு வாங்கிற , இந்த ரூட்ல தான் வேலைக்கு மாறுதல் ஆகி இருக்கேன் டெய்லி இந்த பஸ்தான்
"உங்கள பத்தி எவனுக்கு வேணும், ஏமாத்திட்டு போன ஆளு தான.. அதான் பணத்தை ஏமாத்திட்டு போனா என்ன பண்ண காசை கொடுங்க ... என்று ரித்து காசை வெடுக்கென்று பிடுங்கி கொண்டு , வியர்க்க விறுவிறுக்க அரசாங்க வேலைக்கு பயற்சி எடுக்கும் இன்ஸ்டிட்யூட் உள்ளே ஓடினாள் ...
அன்று வியர்வை டஸ்ட் இன்று தினம் தினம் அந்த வியர்வையில் பொது மக்களோடு மக்களாக வாழ பழகினாளோ இல்லையோ, வாழ்ந்தே தீர வேண்டும் கட்டாயத்தில் போகும் அவளை ஒரு நொடி பார்து விட்டு தலையை உதறி கொண்டான் சாமுராய்...
ஏமாத்துக்காரன் ச்சை இவனை போயா மறுபடி பார்க்கணும் என்றவளுக்கு மனம் ஆற மறுத்தது ..
அல்டாப்பு சுந்தரி தான் ஆனால் போலியாக காதலிக்க வில்லையே ஏமாற்றி விட்டானே என்ற வலி எப்போதும் அவளுள் உண்டு...
இவ நமக்கு எப்பவும் செட் ஆக மாட்டா எட்டி கூட பார்த்துடாத என்று சாமுராய் தலையை திருப்பி கொண்டான்
சாமுராய் வேலையில் அவன் கைகள் கவனமாக இருந்தாலும் மூளை என்னவோ கடந்து போன ரித்விகா பற்றி தான்
"அவள ஏமாத்தி பிள்ளை கொடுத்தவன் மாதிரி பேசிட்டு போறா,வேற ஒருத்தனா இருந்திருந்தா இப்போதைக்கு ஒரு பிள்ளையோட லோ லோன்னு சுத்த வெச்சிருந்திருப்பான்.. நான் அவளை தள்ளி இருந்தே அவளை பாதுகாப்பா அவ அண்ணன் கிட்ட கொடுத்துட்டு போனா, முகத்தை தூக்குறா
"நான் செஞ்ச தப்புக்குத்தான் என்ன வேலையை விட்டு தூக்கி நடுத்தெருவுல விட்டுட்டு தானே போனா; சும்மாவா போனா" என்றவனுக்கு முகம் சிடுசிடுத்தது...
பின்னே இவளிடம் காதல் பிரேக் அப் செய்துவிட்டு அடுத்த நாள் வேலைக்கு போகும் முன்பு அங்கே முதல் ஆளாக ரித்விகா தான் நின்றாள்... அவ்வளவு பிரச்சினையிலும் ரிதன்யா அவன் வேலை செய்யும் மெக்கானிக் ஷாப்பை தேடி போய் நின்றவளை மெச்சத் தான் வேண்டும்...
"என்னடா இந்த பொண்ணு என்னென்னலாமோ சொல்லுது என்று ஓனர் அவனை முறைத்துப் பார்க்க...
"இந்த பிசாசு இங்க என்ன பண்ணுது" ஜெர்க்காகி நின்றான் ..
"நீ என்னவோ மெக்கானிக் ஷாப்ல உள்ள காரெல்லாம் தூக்கிட்டு போயி, நான் பெரிய பணக்காரன் இந்த மெக்கானிக் ஷாப்புக்கௌ நான் தான் ஓனர்ன்னு சொல்லி , இவளை லவ் பண்ற மாதிரி ஏமாத்தி இவ பணம் , நகையெல்லாம் அடிச்சிட்டியாம்
"ஹான் யார் சொன்னா ??
"அவதான் "சாமுராய் அவளை பார்க்க முகத்தை கோணி திரும்பி கொண்டாள். கண் எல்லாம் இரவு முழுக்க தூங்காது சிவந்து போய் இருந்தது...
"போதாக்குறைக்கு இந்த கடைக்கு நான்தான் ஓனர்னு வேற சொன்னியாமே...
"அது வந்துண்ணே அவனை முறைத்து பார்த்துக் கொண்டு நின்றிருத்த ரித்விகாவை இவனும் முறைத்தபடி
"அப்படி எல்லாம் சொல்லல அண்ணே
"பொய் பொய் அண்ணன் , அவன் சொல்றது எதையும் நம்பாதீங்க அண்ணா.. இங்க பாருங்க போட்டோ டெய்லி இந்த கடைக்கு வர்ற காரை எல்லாம் தூக்கிட்டு வந்து சீன் போட்டு , நல்லா நோட் பண்ணிக்கோங்க இந்த கார் எல்லாம் எனக்குதான்னு சீன் போட்டு என்ன லவ் பண்ற மாதிரி ஏமாத்திட்டு, இப்போ என் வயிற்றில குழந்தையை கொடுத்துட்டு எனக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லைன்னு சொல்லிட்டு ஓடி வந்துட்டான்...
அய்யோ இல்லை அண்ணன் என்று சாமுராய் அலற
உண்மை உண்மை , இப்ப கூட இதெல்லாம் ஏன் உங்க கிட்ட சொல்றேன்னா... ஐயோ பாவம் எவ்வளவு கனவோட இந்த கடையெல்லாம் ஓபன் பண்ணி இருப்பீங்க ... அவனை நம்பி உள்ள சேர்த்தீங்கண்ணா, இந்த கடைக்கு பட்ட நாமம் போட்டுட்டு போயிடுவான் சொல்லிட்டேன்
"என்னம்மா நீ ராயன் பத்தி எனக்கு தெரியும், அப்படி எல்லாம் செய்ய மாட்டானே "என்று ஓனர் அவன் மீது உள்ள நல்ல நம்பிக்கையில் கூறி விட ..
"ம்க்கும், எனக்கு என்ன வந்தது? நான் காதலிச்சு ஏமாத்திட்டான்னு அவன் பேர மட்டும் எழுதி வச்சிட்டு சாகலாம்னு நெனச்சேன்... நீங்க அவனை வேலையை விட்டு தூக்கல, உங்க பேரையும் எழுதி வச்சுட்டு தான் சாவேன்...
"என்னது என் பேரா , உங்க விளையாட்டுல நான் என்னம்மா செஞ்சேன் ...
"அப்போ அவனை வேலை விட்டு தூக்குங்க .... இல்ல உங்க பேரையும் எழுதுறது உறுதி என்று விடாப்பிடியாக நின்ற ரித்விகாவை தலையில் அடித்துப் பார்த்த ஓனர்..
"எப்பா ராயா , நீ எனக்கு செஞ்ச உபகாரம் எல்லாம் போதும் தயவு செஞ்சு வேலையை விட்டு போயிடு
"அண்ணே, இப்படி திடீர்னு வேலையை விட்டு போன்னா எப்படி... என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க, இந்த சம்பளத்தை நம்பி தான் அண்ணன் எங்க வீடே இருக்குன்னு உங்களுக்கு தெரியுமே...
"ம்ம் , இதெல்லாம் தெரிஞ்சவனுக்கு ஒரு பொண்ண லவ் பண்ணி ஏமாத்துறுமேன்னு தோணவே இல்லல்ல என்றவள் இடையே வர...
"உன்கிட்ட நான் பேசல
"நானும் உங்ககிட்ட பேசுறதுக்காக வரல.... நான் மட்டும் அனுபவிக்கணும் நீங்க ஜாலியா உங்க குடும்பத்தை செட்டில் பண்ணனுமா , நான் தெருத்தெருவா அலையுற மாதிரி நீங்களும் தெருத் தெருவா அலைங்க .... அண்ணா, சொல்லிட்டேன் அவனுக்கு வேலை கொடுத்தீங்க அவ்வளவுதான் நான் செத்து உங்களை வாழ விட மாட்டேன் என்று பஜாரி போல குதித்துவிட்டு ரித்விகா போய் விட ...
வேலை போய் தெருவில் நின்றவன்... நாளை தங்கைக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரர் வருவதாக இருக்க மொத்தமும் சோலி முடிந்துவிட்டது....
அதன் பிறகு தெரிந்தவர்கள் மூலமாக போக்குவரத்து துறையில் அப்ரண்டீஸாக சேர்ந்து இப்போதுதான் நிரந்தர வேலை கிடைத்து இந்த ரூட்டில் கண்டக்டராக பணியமர்த்தப்பட்டு இருக்கிறான் ,ஏதோ வாழ்க்கை சுமுகமாக இப்போது தான் போக ஆரம்பித்தது, இந்தா சூனியம் வைக்க வந்துட்டாளே ...
அவள் பேசிய பேச்சுக்கு மூஞ்சு முகரையை பேக்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு ... ஆனால் அவனும் செய்தது தவறுதானே!! மா தவறு!!
அது அவனுக்கே தெரியும் ....
அவள் என்றும் அவனிடம் நடிக்கவோ ஏமாற்றவோ இல்லையே... நான் இப்படித்தான் எனக்கு பணக்காரியாக வாழத்தான் பிடிக்கும் என்று அவள் அவளாகத்தான் இருந்தாள்... இவன் தான் இடையில் சென்று காதல் என ஏமாற்றியது ... ஆக அவன் செய்த தவறுக்கு அவள் செய்ததை ஏற்றுக்கொண்டான். இத்தோடு முடிந்தது, இனிமே அவ யாரோ நான் யாரோ , தேவையில்லாம அவ வழியில போக கூடாது சாமி தலையை உதறிக் கொண்டான் ...
ஆனால் மீண்டும் நினைவு அவளிடம் போனது ...
ஏற்கனவே அவர்கள் பற்றிய விஷயங்கள் இவனுக்கும் தெரியத்தான் செய்யும்
பாவம் வியர்வை கூட தூசி என்று சொல்லும் ஒருத்தி இந்த வியர்வைக்கு பழகி ,கூட்ட நெரிசலுக்கு பழகி, அடித்து பிடித்து ஓடும் போது கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது... அவனுக்கு இது எல்லாம் பழக்கம் ஆனால் அவள் நகம் கூட தூசி படாதவள், திடீரென்று நடுக்கடலில் விட்டது போல் தத்தளிக்க தான் செய்வாள்...
கூட துணைக்கு கூட ஆளில்லை என்று அதுவும் கேள்விப்படத்தான் செய்தான்..
பாவம்ன்னு நாம நினைச்சாலும் அவளுக்கு வாய் கொஞ்சம் கூட அடங்கவே இல்ல, திட்டிட்டு போறா இவ பக்கம் திரும்பி பார்த்தா தானே நமக்கு பிரச்சனை திரும்பியே பார்க்க கூடாது என்று முடிவோடு சாமுராய் இருந்தான் ...
பல்வேறு திசையில் பாதை மாறி சென்ற பயணங்கள்... இனி திசை திரும்புமா?