வேஷம் போடும் வேடா 14
Veda14

14 வேஷம் போடும் வேடா !!
பின்னழகை யாரோ அமுக்க பிடித்தது போல இருக்க தூக்கத்தில் இருந்த வைஷ்ணவி கண்களை கசக்கி எட்டிப் பார்க்க ... கணவனின் கச்சை மீசையில் கன்னம் வைத்து அவள் படுத்திருக்க..அவன் முகம் வெகு அருகே கண்டு வைசு பதறி எழும்ப போக அவள் பின்னழகை தன் அழகோடு அழுத்தி பிடித்த ரித்விக்
ப்ச் என்னடி , நடு இரவு இன்னும் போதை சற்று இருக்க கண்ணை திறக்காதே மனைவிக்கு கண்டனம் வர ... அவன் முரட்டு கையில் பஞ்சு மேனி வலித்தாலும் அவன் கையும் தேகமும் வசீகரம் செய்து வசியம் ஏற்ற தான் செய்தது... அவன் முகத்தை உரசிய தன் முகத்தையும் உடலையும் எடுக்க முடியாது வைஷ்ணவி
"ப்ளீஸ் ரித்விக் விடுங்க ..
"என்ன விட்டு ஓடி போறதிலேயே குறியா இருப்பியாடி...
"அதுக்கு இப்படியா பிடிக்குறது "அவன் முள் ஒன்று பெண்நடுதேகம் குத்தி கிழித்து சீரான உணர்வை என்னவோ செய்ய அவஸ்தை தாங்க முடியாது அவள் இடையை சற்று நகட்ட , அவனோ கிடைத்த இறுக்கும் கிடைக்காது போகவே, சட்டென கால்களை வளைத்து அவளை அருகே இழுக்க முன் நிலைமைக்கு இது மோசம் ஆனது.. நச் நச் என்று இடை அதன் இடம் உரசி கொள்ள
ம்மா ஊஊஊ அவள் உதடு கடிக்க
ஸ்ஆஆஆஆஆ வைசு உன் பேர்,சொன்னாலே மூட் ஆகுது தெரியுமா ?
ப்ச் விடுங்க ரித்விக் அவன் மோக குரலில் உடல் எங்கும் அதிர்வு
நான்,தொட்டா உனக்கு கசக்க தான் செய்யும் இல்லை... நீ,எனக்கு கோவில் கட்டணும்டி...
போச்சு ஆரம்பிச்சுட்டார்...
"எனக்கு உன்ன விடவும் மனசு இல்ல, உன் கூட வாழவும் மனசு இல்ல.. நீ வேணும்னு சேர்த்துக்கவும் முடியல , நீ வேண்டாம்னு வெரட்டவும் முடியல.. தப்பு செஞ்சது நீ , தண்டனை எனக்கு ..
இப்ப என்ன பிரச்சனை உடைஞ்த ரெக்கார்ட் போல அவள் காதலித்தது அவளே மறந்து போய் இவன் மனைவி மோட் மாறியாச்சு அவன் அதையே பிடித்து தொங்கி கடுப்பை கிளப்பினான்..
"இவ்வளவு அழகான பொண்டாட்டி கண்ணுக்கு நிறைவா என் பக்கத்திலேயே இருக்கும்போது உன்ன கண்டும் காணாம எப்படிடி போக முடியும்... இல்ல வேண்டாம்னு உன்னை எப்படிடி விரட்ட முடியும்.... என் அவஸ்தை உனக்கு புரியவே இல்ல ...நான் ஏதோ தப்பு செஞ்ச மாதிரி நீ என்னை திட்டுற என்று சப்பென ஒரு அடி அவள் பின்னழகில் விழ
ஆவ்ஊஊஊஊ என்று வைஷ்ணவி வலியில் சிணுங்கினாளா இல்லை அவன் கை தந்த சுகத்தில் சிணுங்கினாளோ ஆனால் அவள் சிணுங்கல். அவனுக்கு இன்னும் பித்தத்தை தெளிய விடாமல் போதை ஏற்ற
"வைசு
"ம்ம்
"வைசு
ம்ம்
"லிப் கிஸ் பத்தி என்ன நினைக்கிற
"ஹான் அவள் அரண்டு அலர்ட் ஆகும் முன் ரித்விக் சட்டென அவள் கழுத்தை வளைத்து பிடித்து அவள் வண்ண இதழை உறிஞ்சி விட்டான்
முதல் முத்தம் அவனுக்கு தெளிவில்லாமல் இவளுக்கு தெளிவோடு , தீடீர் தாக்குதலில் அவள் அதிர்ந்து தன் கையால் அவனை தள்ளப் பார்த்து அவர் வலிமை முன் தன்னை நகர்த்த முடியாமல் அவன் உதட்டுக்குள் தன் உதட்டை கொடுத்துவிட்டு அவன் மீதே கிடக்க ....
இவ் முத்தம் பிடித்ததா என்ற கேள்விக்கு அவன்,நச்சுன்னு இருக்கு என்றும் அவள் பிடிக்க வில்லை என்று சொல்ல முடியாது என்ற பதிலும்தான் சொல்ல வேண்டும் ...
கைகள் அங்கும் இங்கும் அலைமோதி தன் மனைவியின் மொத்த அழகையும் தேடி சேலைக்குள் புக.. பதறிப் போன வைஷ்ணவி
என்ன பண்றீங்க விடுங்க என்று ஒரு அடி போட்டு அவன் கையை தட்டி விட ...
ஆஆஆஆ வலியில் கண்களை திறந்த ரித்விக் தன் மீது கிடந்த மனைவியை பார்த்து பதறி அவளை தூக்கி படுக்கையில் போட்டுவிட்டு எழும்பி அமர்ந்தவன்
"சாரிங்க சாரிங்க குடிச்சிட்டு வந்த தப்பா நடந்துகிட்டேனாங்க என்று நேற்றே போல் மன்னிப்பு படலம் ஆரம்பிக்க ...வைசு தன் தலைக்கு மேல் கும்பிடு போட்டு, அவன் முகத்தை கூட பார்க்க முடியாமல், தன் உதட்டில் ஏற்பட்ட காயத்தை நாவுகொண்டு ஈரம் செய்து கொண்டே..
"அப்பா சாமி !!நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் நான் எதுவும் விளக்கம் கொடுக்க வேண்டாம் படுத்து தூங்குங்க
"இல்லைங்க நான் என்ன சொல்ல வர்றேன்னா
"எதுவும் நடக்கல தயவுசெஞ்சு தூங்க விடுறீங்களா என்று படுக்கையில் முதுகு காட்டி படுத்துக்கொள்ள
ஏதோ முத்தம் எல்லாம் கொடுத்த மாதிரி ஃபீல் ஆச்சே முத்தம் எதுவும் கொடுத்தேனாங்க ?
"அப்படி எந்த சம்பவமும் நடக்கல ப்ளீஸ் தூங்க விடுறீங்களா என்ற வைசு குரல் முத்தத்தில் நடுங்கி வந்தது, தொண்டை வரை அவன் எச்சில் சுவை இறங்கி இருந்தது..
"இன்னைக்கு நான் எதுக்கு குடிச்சேன்னு கேளுங்களேன்..
"குடிக்கிறவனுக்கு காரணத்துக்கா பஞ்சம் நான் கேட்கவே இல்லை என் மேல உள்ள கோபம் தானே குடிக்க காரணம், தாராளமா குடிச்சிட்டு வாங்க இதுக்கெல்லாம் காரணம் நான் தானே இந்த பாவத்தையும் சேர்த்து என் தலையிலேயே போட்டுடுங்க..
"என்னங்க காதலிக்கிறது தப்பா, ஏதோ அந்த வயசுல எல்லாருக்கும் வர்றது தானுங்க காதலிச்சிட்டிங்க அதுக்காக தாலி கட்டுன பொண்டாட்டிய கண்ணா பின்னான்னு பேசுற ஆள் எல்லாம் நான் இல்லைங்க.
யாரு நீங்க?? என்று தலையை மட்டும் திரும்பி அவனை பார்க்க ... அவன் உதட்டிலும் சிறிதான காயம் .... அவன் கொடுத்த முத்தத்திற்கு பதில் முத்தம் எப்போது கொடுத்தோம் என நினைத்தவளுக்கு முகம் குப்பென சிவந்து போக மீண்டும் முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்
ஏங்க "
"தயவு செஞ்சு படுங்க ரித்விக்" என்று கோபத்தில் கத்த பொத்தென்று தரையில் போய் படுத்துக் கொண்டான்..
"ஏங்க
"என்ன
"இல்லை நாம சீக்கரம் டைவர்ஸ் பண்ணிக்கலாம்ங்க "
"ம்ம் சீக்கரமே டைவர்ஸ் தந்துடுவீங்க புரியுது" வலித்த பின்மேனியை தடவினாள்.. இதுவே இந்த பாடு படுகிறதே மற்றது நினைக்க என்னவோ செய்ய
ஏங்க "
"ஏங்க தூங்கிட்டா கம்முன்னு தூங்குறீங்களா ?
"ஒன்னே ஒன்னுங்க
"என்ன
"இல்லை உங்களுக்கு முத்தம் தந்த மாதிரியே ஒரு பீல் இருக்கு
"ப்ச் அதான் இல்லைன்னு சொல்றேனே
"அப்போ சரிங்க சாப்டீங்களா ?
"ம்ஹூம் .. நீங்க வாங்கிட்டு வருவீங்கன்னு நம்புனேன்
"சாரிங்க நாளைக்கு சம்பளத்தை சரியா கொண்டு வந்திடுறேன்ங்க
"ம்ம்
:கை கொஞ்சம் காந்துது ஏதாவது மருந்து இருந்தா போட்டு விடுறீங்களா.... என்று முடிக்கும் முன்பே வைஷ்ணவி மருந்தோடு அவன் அருகே உட்காரநு இருக்க அவன் பார்வை அவள் மீதே, அவளோ அவனை நேர்கொண்டு பார்க்க முடியாது கைக்கு மருந்தை போட்டு வி்ட்டு எழும்ப..
நம்ம முகத்தை கூட பார்க்க முடியாத அளவு குடிச்சிட்டு வந்து என்னமோ பண்ணி வச்சிருக்கேன் ச்சை இனிமே குடிக்க கூடாது... எவன் என்ன சொன்னா என்ன ? என் மனைவியை பத்தி எனக்கு தெரியும் நீ யாருடான்னு கேட்க வேண்டாம்... இனிமே அலர்ட்டா இருக்கணும் என்று ரித்விக் தூங்காது தனக்கு முதுகு காட்டி படுத்து கிடந்த மனைவியை தெரிந்தே சைட் அடிக்க ,
அவளோ காதலிச்சது ஒன்னும் தப்பு இல்லை கல்யாணம் பண்ணியாச்சு அவனை நெனைச்சு இவரோட வாழ்ந்தா தப்பு , எப்போ இவரோட தாலி எறிச்சோ அப்பவே நான் இவருக்கானவதான் ரொம்ப யோசிக்கிறேன், அதிரா சொன்ன போல நிதர்சனம் உணர்ந்து வாழ டிரை பண்ணணும் என்று இருவரும் யோசனையில் இருந்தனர்..
ரிதன்யா அந்த மாலை நேரத்தில் காலேஜ் முடித்துவிட்டு காலேஜ் வாசலில் காத்து நிற்க சறுக்கி வந்து பிஎம்டபுள்யூ கார் அவள் முன்னால நின்றது....
"ப்ச் வர்ற நேரத்தை பாரு என்று அவள் முகத்தை சுளிக்க..
"சாரி லேட் ஆகிடுச்சா" என்று அதிலிருந்து தலையை கோதிக் கொண்டு ஒரு இளைஞன் இறங்கி வந்தான்
"உங்களுக்காக ஒரு மணி நேரமா காத்திருக்கேன் நீங்க டூ லேட் ""
"சாரி டியர் கம்பெனி போர்ட் மீட்டிங் இருந்தது முடிச்சுட்டு இப்பதான் வர்றேன்...
"ரொம்ப லேட் ஆயிடுச்சா" என்று அவள் முன்னால் நின்ற காதலனை உதட்டை பிதுக்கி பார்த்துவிட்டு
"சாருக்கு ஞாபகம் இருக்கா ஒரு வருஷமா என் பின்னாடி சுத்துறீங்க , ஐயோ பாவம்ன்னு காதல அக்சப்ட் பண்ணுன உடனே இதோ லேட்டா வர ஆரம்பிச்சுட்டீங்கல்ல... நல்ல உயரம் ,திடமான உடல் கைகால் இரும்பு போல முறுக்கேறிய நின்றது காட்டன் சட்டை , பேண்ட் என களையாக நின்றான் சாம்ராய்...
"நம்மள போல பணக்காரர், வசதி ஈக்குவல் அந்தஸ்து சரியா இருக்கும்னு நெனச்சு ஓகே சொன்னா.. உங்க வேலைய காட்ட ஆரம்பிச்சுட்டீங்க இல்ல" என்று ரித்து காரில் முன்னால் ஏறி அமர்ந்தாள் .... காரின் டிரைவர் சீட்டில் உட்கார்ந்த சாம்ராய் மணியை குனிந்து பார்த்தான்
"6 மணிக்கு இந்த கார பார்ட்டிகாரன் கிட்ட கொடுக்கலைன்னா தலைகீழ நின்னுடுவானே இவள கொண்டு போய் வீட்ல விட்டுட்டு, மெக்கானிக் ஷாப் வர்றதுக்கு எப்படியும் அரை மணி நேரம் ஆகுமே என்று யோசனையில் காரை எடுத்தான்
அவன் சொகுசு காருக்கு ஓனர் இல்லை மெக்கானிக் ஷாப்பில் சாதாரண மெக்கானிக்காக வேலை பார்க்கும் சாமுராய் என்று தெரியாமல் அந்தஸ்துக்கு ஏற்ற காதலன் என காதலுக்கு தலையாட்டிய காதலியை தலையை திருப்பிப் பார்த்தான்...
தன் தங்கையை படிக்க வைப்பதற்காக காரை சர்வீஸ் விட அவன் கடைக்கு வரும் அயோக்கியாவிடம் பெருந்தொகையை கடனாக வாங்கி இருக்கிறான்...
அதற்கு அவன் சொன்ன ஒற்றை வேலை ..
"என் தங்கச்சியை லவ் பண்ற மாதிரி நடிக்கணும்
"சார்
"இந்த பணத்தை நீ திருப்பி தர வேண்டாம்
"இல்ல சார் நான் திருப்பி தந்துடுறேன்... ஆனா என்னைக்கு இந்த மொத்த பணத்தையும் உங்ககிட்ட திருப்பி தர்றேனோ, அன்னைக்கு நான் உங்களை காதலிக்கல உங்க அண்ணன் சொன்ன காரணத்துக்காக தான் உங்கள காதலிக்கிற மாதிரி நடிச்சேன்னு உண்மையை சொல்லிடுவேன் என்று அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு போனான்..
இன்று வரை வட்டி மட்டும் தான் கட்ட முடிகிறது முதலை அடைக்க முடியவில்லை ... இவனும் காதல் நாடகத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறான்
" ரொம்ப நேரமா காத்து நின்னதுல டஸ்ட் எல்லாம் என் மேல பட்டுடுச்சு டிஷ்யூ இருக்கா ராய் " என்று தன் உடலில் பட்ட வியர்வையை துடைக்கும் ரிதன்யாவை எரிச்சலாக திரும்பிப் பார்த்தான்..
அவள் ஒவ்வொரு செயலிலும் அசால்ட் தன்மை பணக்காரத் திமிர் , பழக்க வழக்கங்களில் கூட அந்தஸ்து பார்த்து பழகும் தன்மை.. இது எதுவும் அவனுக்கு பிடிக்காது ...
"அது டஸ்ட் இல்ல ரித்து வியர்வை
"ஓ இது கூட எனக்கு டஸ்ட் தான் வியர்வை வர்ற மாதிரி எங்க அப்பா அம்மா என்ன வளர்க்கல...
"ஓஓஓஓ
"அப்புறம் இன்னைக்கு என்ன ப்ளான் ராய்"
"இன்னைக்கு எதுவும் பிளான் இல்ல , வீட்ல கொண்டு போய் விட்டுட்டு எனக்கு இன்னொரு மீட்டிங் இருக்கு..
"வாட் என்ன நைட் டின்னர் கூட்டிட்டு போறேன்னு சொன்னீங்க..
இரண்டு இட்லி வாங்கவே யோசிப்பான் , இவளை கூட்டிகிட்டு 5 ஸ்டார் ஹோட்டல் போகணுமா... அந்தக் காசு இருந்தா உடைந்து இருக்கிற வீட்டை சரி பண்ணிட மாட்டேனா என்று தனக்கு தானே முனங்கிக் கொண்டவன்
"இன்னொரு நாள் கண்டிப்பா கூட்டிட்டு போறேன் பேபி... மனமோ குறுக்குல மிதிச்சு சோத்தை திங்க மாட்டியோ முகரையை பாரு என்று திட்ட தோணியது ...
ப்ச் அவள் அலுத்து கொள்ள
"நான் உழைக்கிறது எதுக்காக பேபி, நீயும் நானும் ஹேப்பியா வாழதானே.. இந்த ஆர்டர் கையைவிட்டு போயிடுச்சுன்னா பல கோடிக்கணக்கில லாஸ் ஆயிடும்.... ஆறரைக்குள்ள நான் போயே ஆகணும்..
அவள் போவது எல்லாம் பெரிய பெரிய மால், ஹை சொசைட்டி ஆட்கள் நடமாடும் இடம் , எனவே ஏற்காடு பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் மெக்கானிக் ஷாப்பை அவள் கவனித்தது இல்லை... கவனித்து இருந்தால் தெரிந்து இருக்கும்.. அழுக்கு சட்டையில் கார்களுக்கு நடுவே ஸ்பேனரோட நிற்கும் தன் காதலன் பணக்காரன் இல்லை, சாதாரண மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்ப்பவன் என்று
"வர வர என் விஷயத்துல நீங்க ரொம்ப அஜாக்கிரதையா இருக்குற மாதிரி இருக்கு ராய்
"அப்படியெல்லாம் இல்ல பேபி என்று சாமுராய் அவளை மெலிதாக அணைத்து விடுவிக்க... அவன் மீது இருந்து வந்த வியர்வை வாசத்தில் முகத்தை சுருக்கியவள்
"ஏன் ஒரு மாதிரி ஃபேட் ஸ்மெல் வருது
"அது காலையில போட்ட சட்டை
"நாமெல்லாம் ஹை சொசைட்டி, இதுல எல்லாம் கவனமா இருக்க வேண்டாமா என்று தன் ஹேண்ட் பேக்கில் வைத்திருந்த விலை உயர்ந்த வாசனை திரவியத்தை அவன் மீது தெளித்து விட்டாள் ரித்து
அந்தஸ்து ஆடம்பரம் படடோபம் எல்லாம் அவளிடம் இருந்ததே தவிர போலியான காதல் இருக்கவில்லை.. அவனை விரும்பித்தான் காதலித்துக் கொண்டிருக்கிறாள் ஆனால் அவன் முகத்திரை கிழிந்தால் என்ன நடக்கும்?
இவர்கள் வாழ இவர்கள் மனம் வைத்தால் போதாதது மேற்படியான் மனசு வச்சு வாழ விட்டாதான் உண்டு இல்லை சங்குஊஊஊஊ..