வேஷம் போடும் வேடா 17
Veda17

17 வேஷம் போடும் வேடா !!
எங்க ஏங்க
குளியல் அறையில் நின்று வெளியே குரல் கொடுத்தான் ரித்விக்
"இங்கதான் இருக்கேன் சொல்லுங்க," தன் துணியை மடித்துக் கொண்டிருந்த வைஷ்ணவி பதில் கொடுக்க
"ரவை பாக்கெட்டு வாங்கி வச்சிருக்கேன், ஏதாவது லைட்டா செஞ்சு தர முடியுமா ? நேத்து ராத்திரியும் சாப்பிடல இப்பவும் சாப்பிடாம போனா வெயில்ல வேலை செய்ய முடியாதுங்க.... அப்படியே நீங்களும் சாப்பிடலல்ல இன்னைக்கு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணுங்க இன்னைக்கு சரியா இருப்பேங்க ... அவன் சரியா இருப்பதை ராத்திரி தானே பார்க்க வேண்டும் ...
ஏங்க"
"சொல்லுங்க
"பதில் வரலையேங்க
"செஞ்சு வச்சிடுறேன்னு அர்த்தம்ங்க
"ம்ம் ஓகேங்க அப்பறம்
"என்ன
"இல்லை , கல்யாணம் முடிஞ்சதிலிருந்து வீட்டிலேயே இருக்கீங்க இன்னைக்கு நான் வேலை முடிச்சு வந்ததும் எங்கேயாவது போயிட்டு வருவோமாங்க" மெலிதான புன்னகையோடு வைஷ்ணவி அவன் சட்டைகளை மடித்து வைத்தவள்
"என்ன திடீர்னு வெளியே போகலாம்னு கேக்குறீங்க
"ஏங்க கேட்க கூடாதா?
"இல்ல டைவர்ஸ் பண்ண போறேன் டைவர்ஸ் தந்துடுறேன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்றீங்க
"டைவர்ஸ் கொடுக்கிறது கொடுக்கிறதுதாங்க... ஆனா ,அதுக்காக உங்கள எங்க வீட்ல போட்டு இங்கே தான் இருக்கணும்னு கொடுமைப்படுத்த முடியுமா ? உங்களுக்கும் மன அழுத்தமா இருக்கும்ல கொஞ்சம் அப்படியே வெளியே போயிட்டு வரலாம் தானே, அதுக்காக கேட்டேங்க...
"சரி போகலாமே , கழட்டி போட்ட டிரெஸ் இருந்தா கொஞ்சம் கொடுங்க... நான் என் துணி துவைக்கும் போது அதையும் சேர்த்து துவைச்சுடுறேன்...
"அய்யய்யோ அதெல்லாம் வேண்டாம்ங்க.. நானே ராத்திரி வந்து துவைச்சு போட்டுடுறேன்..
"வேலைக்கு போயிட்டு வரும்போது கையில எல்லாம் காயத்தோட வர்றீங்க ,அதோட வரும்போது ஒழுங்காக வந்தா பரவாயில்ல ரெட்டை சகோதரர்கள் மாதிரி இன்னொரு அவதாரம்ல எடுத்து வரீங்க இதுல எங்க துணி எல்லாம் துவைக்க?ஒன்னும் பிரச்சனை இல்ல ... எனக்கு அவ்வளவு அழுக்கு துணி இல்ல ... சோ உங்க துணியையும் சேர்த்து துவைச்சுடுறேன் கொடுங்க என்று கதவு பக்கம் வந்து அவள் நிற்க ..
என்ன சத்தமே இல்ல தருவீங்களா இல்லையா?
"இல்லைங்க உங்களுக்கு எதுக்கு சிரமம்" என்றவன் போட்டிருந்த டவல் வரை கழட்டி கொடுக்க ஆயத்தம் ஆனான்
"நீங்க குடிச்சிட்டு வந்து பேசுறதை கேக்குறதுதான் எனக்கு சிரமமா இருக்கு .. மத்தபடி இந்த வீட்டில் இருக்கிறதோ, இந்த ரூம்ல இருக்கிறதோ, உங்களுக்கு செய்றதோ எனக்கு சிரமம் இல்ல புரிஞ்சுகிட்டா ரெண்டு பேருக்கும் நல்லது...
"அப்போ சரிங்க உங்க மேல சத்தியமா, இனி குடிக்க மாட்டேன் துணி இந்தாங்க குளியலறை கதவு திறக்கப்பட..
கொடுங்க என்று வைசு தன் கையை உள்ளே நீட்டியவள் கையில் ஒரு குளிர்ச்சி வந்து ஒட்டிக்கொண்டது .... துணி என்று நினைத்து தூண் பிடித்துவிட்ட வைசு
என்ன வித்யாசமா இருக்கு என்று யோசனையில் நிற்க
"அய்யய்யோ என்னங்க நீங்க சட்டுன்னு கைய உள்ள நீட்டிட்டிங்க என்ற பதறி உள்ளிருந்து குரல் வர.. அதன் பின்னே இவளுக்குமே கையில் ஷாக் அடித்தது போல உணர்வு ..
பப்பரப்ப என்று நின்றவன் சரி கையை மட்டும் தானே வெளியே விட வேண்டும் என நினைத்து, தன் கையை வெளியே விடும் முன் அவள் கையை உள்ளே விட்டு விட, கண்ட இடத்தில் அவள் கை பட்டு இருவரையுமே சங்கடத்தில் ஆழ்த்தி விட்டது..
அவனுக்கு வைஷ்ணவியின் இளம் விரல் தொட்டதும் உடல் முழுவதும் மின்சாரம் பாய இவளுக்கு வெட்கத்தில் முகம் முழுவதும் சிவப்பு ரத்தம் பாய ....நேற்று தந்த முத்தமே கணவன் என்று உரிமையை அவளுக்கு இன்னும் ஒருமுறை அழுத்தி சொல்லி இருக்க... இன்று அதையும் தாண்டி ஒரு இணக்கம் தந்து விட்டது இந்த நிகழ்வு...
அவள் சத்தம் சில நொடிகள் இல்லை..
ஏங்க இருக்கீங்களா? அழுக்கு துணியை வெளியே நீட்டியபடி ரித்விக் குரல் கொடுக்க..
இருக்கேன் ,கையை நீட்டவா"
"ம்ம் அவன் ஆமோதிப்பாக குரல் கொடுக்கவும் அவன் கையில் இருந்து அவனைப் பார்க்காமலேயே வைசு அழுக்குத் துணியை வாங்க... அவள் அங்கும் இங்கும் கையை அலையவிட , இருவர் கையும் ஒன்றோடு ஒன்று பலவாறு உரசி ஒருவழியாக அழுக்குத் துணி அவள் கைக்கு இடம் மாற உள்ளே அவன கண் மூடி நடந்த அழகிய தொடுகையில் கொடுஞ்சி அதிர நிற்க அவளும் அவன் இடையில கட்டிய டவலை தன் கன்னத்தில் வைத்து தேய்த்தபடி அவன வாசம் இதம் தர அப்படியே மெல்லிய தேகம் சிலிர்க்க நிற்க..
ஓடியிருப்பாளோ, என்ன நினைச்சான்னு தெரிலயே, வேணும்னே பண்ணிட்டேன்னு நினைச்சுட்டா என்ன பண்ண
ஏங்க
ஏங்க
ம்ம் இருக்கேன்
சாரிங்க
"இங்கிலிஷ்ல ரொம்ப பிடிச்ச வார்த்தை சாரியா
"ஏங்க
"இல்லை அடிக்கடி கேட்கிறீங்களே அதான் கேட்டேன் போய் ரவை கிண்டி வச்சிட்டு வர்றேன்
""ஏங்க தப்பா நினைக்கலையே...
"தப்பா நினைச்சேன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க
"மறுபடியும் சாரி கேட்பேங்க
மறுபடியும் முதல்ல இருந்தா , ஆளை விடுங்க சாமி என்று சிரித்து கொண்டே ஓடும் மனைவியை கதவை சிறியதாக திறந்து ரித்விக் பார்க்க... அவள் இல்லை ஆனால் அவள் தொட்ட தோட்டம் பூத்து குலுங்க ஆசை கொண்டு நிற்க தலையில் தட்டி ஆசுவாசம் அடைந்தவன்
"நோ நோ அவங்க பேசுறாங்க பழகிறாங்கன்னு நம்மோட ஆசையை அவங்க கிட்ட திணிக்க கூடாது என்னைக்கா இருந்தாலும் , நம்மள விட்டு போக போறவங்க.. ஒருநாளும் கறை பட வி்ட்டுற கூடாது எனக்கு அவங்களை பிடிக்கலாம்.... பட் அவங்க என்ன விரும்பல...நான் விரும்புறேன்னு அவங்களை வற்புறுத்தி வாழ நினைச்சா தப்பு , சோ அவங்க லைப்புக்கான முடிவை அவங்களேதான் எடுக்கணும் டைவர்ஸ் தான் இதுக்கு சரியான முடிவு அவங்க விரும்புறவர் கூட வைசுவை சேர்த்து வச்சிட்டு .... அவ நினைவோட கடைசி வரை வாழ்ந்துட்டு போக வேண்டியதுதான் என்று பெருமூச்சு விட்டான் ..
கிச்சன் உள்ளே காயத்ரி தேவி நின்று கொண்டிருக்க , சிறிது நேரம் வைஷ்ணவி நின்று யோசித்தாள்
பிறகு கண்ணை மூடி திறந்தவள், சேலையை எடுத்து இடுப்பில் சொருவிகொண்டு தன் கணவன் வாங்கி கொடுத்த ரவையோடு கிச்சனுக்குள் நுழைய ...
இந்த மாளிகை வீடு முழுவதையும் கையில் வைத்திருக்கும் காயத்ரிஎதேவி சமையலறைக்குள் நுழைந்த மருமகளை ஒரு பார்வை பார்த்து விட்டு
"என்ன வேணும்.. பதிலே இல்லை
"உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன் என்ன வேணும்
"என் புருஷன் வேலைக்கு கிளம்புறார், அவருக்கு சாப்பாடு செய்யனும்
"அதான் எல்லாருக்கும் சேர்த்து நான் பண்ணி வச்சிருக்கேன்ல நீ போய் வெங்காயத்தை நறுக்கு போதும் ...
"அதை நீங்க நறுக்குங்க, இனிமே என் புருஷனுக்கு தேவையானதை நானே செஞ்சுகிறேன்..
"என்ன என் மகனை என்கிட்ட இருந்து பிரிச்சிடலாம்னு நினைக்கிறியா?
"பிரிச்சு பேசினது நீங்க தான் அத்தை... நான் இல்ல..தள்ளுங்க , வீட்டுல சும்மா தான இருப்பீங்க எப்ப வேணும்னாலும் சமைக்கலாம் என் புருசன் வேலைக்கு போகணும் .. என்று அவரை இடித்து நகட்டி விட
"நான்தான் இந்த வீட்டுக்கு எஜமானி, உன் இஷ்டம் போல எல்லாம் இங்க எதுவும் செய்ய முடியாது ... இது என்னோட கோட்டை வெளியே போடி .. உன் புருஷனுக்கு சமைக்கணும்னா பின்னாடி விறகு அடுப்பு இருக்கு அதுல போய் சமை என்று ஆக்ரோசமாக வைசுவை பிடித்து தள்ள இஞ்ச் நகட்ட முடியும்வரை காலை தரையில் ஊன்றி வலுவாக நின்று கொண்டவள்...
"எது இது உங்க கோட்டையா ?நீங்க எஜமானியா ஹலோ, ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டி விட்டுச்சாம் பழமொழி தெரியுமா .... நீங்களே இந்த வீட்டுக்கு இரண்டாவது தாரமா வந்த தொடுக்குதான்... நியாயப்படி பார்த்தா இந்த வீடு நீங்க வச்சிருக்க சொத்து பத்து எல்லாம் அயோக்கியா அத்தான் அம்மாவோடது..
பெரிய அத்தை பாவம்னு உங்க எல்லாருக்கும் பிச்சை போட்டது தான், இந்த சொத்து வாழ்க்கை எல்லாம் .. சோ இங்க நீங்களும் சாதாரண ஒரு ஆளு தான்... என்ன அரட்டி உருட்ட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என் புருஷனுக்கு தேவையானத நான் இங்கதான் செய்வேன்... உங்களுக்கு தேவைன்னா, நீங்க பின்னாடி போயி விறகு அடுப்புல கிண்டுங்க என்று காயத்ரி தேவியை தள்ளாத குறையாக தள்ளிவிட்டு ரித்விக்குக்கு உணவை சமைத்து எடுக்க..
காயத்ரி முகம் முழுவதும் கோபத்தில் ஜுவாலையாக எரிந்து போய் நின்றது ...
"என்னடி புருஷன் உன் பக்கத்துல இருக்காங்கற திமிர்ல பேசுறியா நான் நெனச்சேன்னா உன்ன ஒன்னும் இல்லாம ஆகிட்டு உன் இடத்துக்கு இன்னொருத்தியை என்னால கொண்டு வர முடியும்...
"எப்படி பெரிய அத்தைய ஒண்ணுமில்லாம ஆக்கிட்டு நீங்க மாமாவுக்கு இரண்டாவதா வந்த மாதிரியா? என்றதும் காயத்ரி தேவியின் திமிரான கண்ணில் ஒரு தடுமாற்றம் வந்து போக
சொல்லுங்க அத்தை, நீங்கதான் தைரியமான ஆளாச்சே பேசுங்க
உன்கிட்ட மனுஷன் பேசுவானா.. திமிர் எடுத்து அலையிறியா
திமிருதான்னு வச்சுக்கோங்களேன் இனிமே எங்க வழியில குறுக்க வந்தீங்க இதே மாதிரி நிறைய பேச வேண்டியது இருக்கும்
ஏங்க சாப்பாடு ரெடியா ரித்விக் இறங்கி வர
ஹான் ரெடிங்க .. என்று காயத்திரி தாண்டி ரித்விக் நோக்கி வைசு ஓட
அமைதியா இருப்ப எனக்கு அடங்கி இருப்பன்னு சொல்லி அடங்காபிடாரியை வீட்டுக்குள்ள கொண்டுட்டு வந்துட்டாரே ... மகனை வாசலில் நின்று வழி அனுப்பும் மருமகளை என்ன முயன்றும் முறைக்காது இருக்க முடியவில்லை ...
முகத்திரை எல்லாம் என்றாவது கிழிந்து தானே ஆக வேண்டும் ...
காலேஜ் முடித்து சாமுராய் வண்டியில் ஏறி வீட்டின் முன்னால் இறங்கினாள் ரித்து ...
நைட் பப் கூட்டிட்டு போங்கன்னு பல நாளா கேட்கிறேன் எப்போ கூட்டிட்டு போவீங்க
ப்ச் அங்க எதுக்கு
அப்பா ஓகே சொன்னாலும் இதுவரை அயோ அண்ணன் ஓகே சொன்னது கிடையாது
நீ எப்படி வேணும்னாலும் இரு பப் டிஸ்கோ உன் புருசன் கூட போயிக்கன்னுசொல்லிடுவார் அதான் உங்ககிட்ட கேட்கிறேன்
அது புருசன் ஆன பிறகு பார்க்கலாம்
ஹலோ கழட்டி விடுற ப்ளான்ல இருக்கிங்களா? என்று ரித்து முறைக்க ...
ரொம்ப நேரமா நின்று டஸ்ட் முகத்தில வருது பார் உள்ள போ நாளைக்கு பேசிக்கலாம்...
ப்ச் இப்படியே சொல்லுங்க நீங்க தான் நான் வேணும்னு பின்னாடி சுத்தினது நான் இல்லை ... அய்யோ பாவம்னு லவ் பண்ணினா கண்டுக்கிறதே இல்லை எப்போ போன் பண்ணினாலும் பிசியா இருக்கேன்னா உங்களுக்கு லவ்வர் எதுக்கு....
வாங்குன காசுக்காக மூடிட்டு இருக்கு வேண்டி இருக்கு நான்,வாயை திறந்தா நாய் நாலு தெரு தாண்டி ஓட வேண்டி இருக்கும் என்று பல்லை கடித்த அவன் கோபத்தை மறைக்க
சரி ஓகே ராய் பாய்
ம்ம் பாய்
வெளிய வந்து ஒரு ஹக் பண்ணியாவது விடலாம் தான
ப்ச் என்று சலித்து கொண்டே இறங்கி வந்த ராய் அவளை அணைத்து விடுவிக்க ... அவனை தாண்டி
சாலையில் கீரை கட்டை தூக்கிக்கொண்டு சென்ற பெண்மணி வழுக்கி விழுந்துவிட .
அய்யோ அக்கா பார்த்து போகக் கூடாதா... என்று இவளை விட்டுவிட்டு ஓடி போய் அவரை தூக்கி நிறுத்த
இல்ல தம்பி செருப்பு பிஞ்சிடுச்சு , அதான் கால் வலிக்கிடுச்சு ..ரொம்ப நன்றி
பரவால்லக்கா என்று தன் பாக்கெட்டை தடவி அதிலிருந்த 100 ரூபாய் நோட்டை எடுத்து அவர் கையில் கொடுத்தவன்
நல்ல செருப்பா ஒன்னு வாங்கி போடுங்க...
இல்ல தம்பி வேண்டாம்
கூட பிறக்காத தம்பியா நினைச்சு வாங்கிக்கோங்க அக்கா என்று கையில் திணித்தான் ரித்துவோ முகத்தை சுளித்து கொண்டே இக்காட்சியை பார்க்க ...
என்ன ரித்து வீட்டுக்குள்ள போகாம என்ன பண்ணிட்டு இருக்க
ப்ச் , முதல்ல கைய கழுவுங்க ராய்
ஏன்..
உங்களுக்கு எத்தனை தடவை சொல்லிக் கொடுக்கணும் ராய் இந்த மாதிரி லோகிளாஸ் பீப்ல ஆட்களை எப்படி தொட்டு பேசுறீங்க என்றதும் அவன் முகத்தில் சட்டென கோபம் வந்து விட்டது...
நார நாயை எட்டி மிதிச்சு உன் முகரையை பேக்கணும்டி
என்ன ராய்
ம்ஹூம் வாய் வரை வந்த வார்த்தையை அப்படியே விழுங்கி கொண்டவன்...
நாம போடுற சட்டையும் நம்மள சுத்தி இருக்கிற அந்தஸ்தும் நம்ம கையில இருக்கிற பணமும் நம்மள ஒரு படி உயர்த்தணுமே தவிர குணத்தால தாழ்த்தக்கூடாது பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும்... ஆனா சிலது எல்லாம் பணத்தால கூட வாங்க முடியாது,
அதை விடுங்க , முதல் கைய கழுவுங்க அதுக்கு பிறகு உங்களோட லெக்சர நடத்துங்க.... நான் எல்லாம் இந்த மாதிரி ஆட்கள் பக்கமே போறது இல்ல ... உங்களுக்கு ஏன்தான் இப்படி புத்தி போகுதோ தெரியல என்று முகத்தை அருவருப்பாக வைத்து கொண்டே தண்ணீர் பாட்டிலை எடுத்து அவன் புறம் நீட்ட..
"இந்த தண்ணி எனக்கு தேவைப்படாது உனக்கு தான் தேவைப்படும் அழுக்கு என் மேல இல்ல.. உன் மேல
"என்ன சொல்ல வரீங்க எனக்கு புரியல
"உனக்கு புரியவே வேண்டாம் தாயே உன்ன மாதிரி ஒருத்தியை தினந்தினம் பக்கத்துல பாக்குறதுக்கே எரிச்சலா இருக்கு என்று முனங்கி கொண்டவன் நாளைக்கு பாக்கலாம் என்று அவள் முகத்தை பார்க்காமல் போய் காரில் ஏறிவிட்டான்..
"இப்போ நான் என்ன சொன்னேன்னு ஒரு மாதிரி முகத்தை காட்டுகிறார்... நாம இப்படித்தானே பழகி இருக்கோம் இப்படி இருக்கிறது தானே பணக்காரங்களுக்கு அழகு!! சொன்னா ஏன் அவருக்கு புரியவே மாட்டேங்குது , வித்தியாசமா நடந்துக்கிறார்ப்பா அவசரப்பட்டுட்டேனோ? என்று புழுதி பறக்க போகும் காரை யோசனையாக பார்த்துக் கொண்டு நின்றாள் ரிதன்யா....
உடல் அழுக்கு கூட நீரால் கழுவினால் சுத்தம் ஆகி விடும் மன அழுக்கை எதை செய்து சுத்தம் செய்ய போகிறாள்!!