வேஷம் போடும் வேடா 20

Veda20

வேஷம் போடும் வேடா 20

20 வேஷம் போடும் வேடா !! 

பல தடவை பழிவாங்கல் படலம் நடந்து முடிந்து விட்டது... ஆனாலும் இன்னும் அவன் மீது காலை போட்டுக்கொண்டு அவள் கிடக்க அவள் இடை மீது தன் அகண்ட காலை தூக்கி போட்டு தன் காலுக்கு இடையில் அவளை புகுத்திக்கொண்டு இருவரும் ஒருவர் சூட்டில் ஒருவர் அந்த புல் தரையில் கிடக்க... 

குளிரா நாங்க எல்லாம் அக்கினி குஞ்சுடா!! எங்களுக்கெல்லாம் காத்து , பனி, குளிர் எல்லாம் எதுவுமே பண்ணாது என்பது போல குளிர ஆரம்பிக்கும் போதெல்லாம் பனிப்போர் ஒன்று இருவருக்கும் இடையில் ஆரம்பமாகி விட பழி தீர்த்துவிட வெறியாக நின்றனர்... இவன் விட்ட இடத்தில் இருந்து அவள் தொடங்க , அவன் விட்ட இடத்தில் இருந்து இவள் தொடங்க என்று உதடுகள் இருவருக்குமே வீங்கி போனது இந்த புதிய வகை பழிவாங்கல் போரில்தான்

இவர்கள் பழிவாங்கலில் நடந்த ஒரே நல்ல விஷயம் நாட்டுக்கோழியை அடித்து சூப்பு வைப்பதில் கவனமாக இருந்த அயோக்கியா ரித்விக்கை மறந்துவிட்டான் , இந்த கேப்பில் அவன் தன் பொண்டாட்டியை அழைத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான்...

தோட்டத்தில் வைஷ்ணவி மல்லிகை மலரை பறிக்க வந்திருக்க..காயத்திரி அதை முந்திகொண்டு வந்து பக்க கையை தட்டி விட்ட வைசு  

எனக்கு வேணும் 

யாருக்கு பூ வச்சி அழகு காட்ட போற ?அதான் என் மகன் உன்ன சீண்டவே இல்லேயே என்ற காயத்திரி பேச்சை கண்ணை சுருக்கி பார்த்தாள்...ஆக தங்கள் அந்தரங்கம் வேவு பார்க்க படுகிறதா? பெரிய கேள்விக்குறி தொங்கியது 

சீண்டலைன்னா இனி சீண்டுவார்...

கிழவி ஆன பிறகு எதுக்கு மல்லிகை பூ சின்ன சிறுசுக எங்களுக்கு வழியை விட்டு தள்ளி நில்லுங்க அத்தை இதெல்லாம் உங்களுக்கு சொல்லணுமா என்ன, இனி பூ எனக்கு தான் என்று பூவை பறிக்க 

யாருடி கிழவி ? 

பின்ன குமரியா, டவுட் இருந்தா போய் கண்ணாடியில் பாருங்க.. 

என் புத்தி தெரியாம பேசிட்டே போற வைசு  

என்ன பண்ணுவீங்க மாமியாரே, பெரிய மாமியாரை போட்டு தள்ளின மாதிரி என்னையும் போட்டு தள்ளிடுவிங்களா? 

ஏது அக்காவை நான் கொன்னேனா? காயத்திரி பதற 

சும்மா சொன்னேன் ஃபன் ஃபன் , அதுக்கு ஏன் இப்படி பதறி வியர்க்குது போய் ஏசி ரூம்ல உட்காருங்க என் புருஷனும் நானும் அவுட்டிங் போக போறோம் அத்தை நின்னு பேசுறதை கேட்டுட்டு போங்க என்ன அவசரம் என்று வைசு கத்த காயத்திரி மறைந்தே விட்டார் ... 

ஏன் இந்த பொம்பள மேல நல்ல எண்ணம் வர மாட்டைக்குது என்று யோசனையாக வைசு பூவை தொடுத்தவளுக்கு இருட்டவும் கேட் நோக்கி கண்ணு போனது 

கடவுளே குடிக்காம வரணும் .... யாராவது எதாவது சொன்னா என்கிட்ட வந்து கேட்டு தெளிவு பெறாம குடிச்சிட்டு வந்து சண்டை போடுறது என்ன பழக்கமோ யார் என்ன சொன்னாலும் நம்பி தலையாட்டி தொலைக்கிறார் ... விவரமே இல்லேயே ஆனா பணமும் வசதியும் இருந்தாலும் மனசுல யாருக்கும் துரோகம் நினைக்காத நல்ல மனுசன் அதான் இவ்வளவு சீக்கரம் அவர் பக்கம் என் மனசு சாயுது காலையில் நடந்த களறி வித்தை பயிற்சியில் இப்போதும் முகம் செம்பருத்தி மலராக சிவக்க 

நிதானமா வருவாரா வெளிய கூட்டிட்டு போறேன்னு சொன்னாரே கூட்டிட்டு போவாரா வழி மீது விழி வைத்து வைசு காத்து இருக்க கீங் கீங் என்று அவன் பைக் சத்தம் கேட்டு ஓடி போய் கேட்டை சற்று பதட்டமாக திறக்க 

ஏங்க லேட்டாகி போச்சா ?ஏங்க அழைப்பு வரவும் தான் அப்பாடா என மூச்சு வந்தது குடித்தால் மட்டும் தான் வாடி போடி வரும் இல்லை மரியாதை தருவதில் மன்னன் தான் 

இந்த மரியாதைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை

கேட்டை திறந்து விட பைக்கை நிறுத்திய ரித்விக்

 

ஏங்க

சொல்லுங்கங்க..

இல்லை தயக்கமாக கையை பின்னால் மறைத்தான் 

என்ன அது 

அது வந்துங்க தப்பா நினைக்க கூடாது ..

என்ன வீட்டுக்கே குவாட்டர் வாங்கிட்டு வந்துட்டீங்களா 

என்னங்க நீங்க என்ன மொடா குடிகாரன் மாதிரி பேசுறீங்க... கோவம் விரக்தி வந்தா குடிப்பேன் மத்தபடி நான் நல்லவன் தாங்க

ஓஓஓ நல்ல குணம் தான் ..அவனை ஆசையாக பார்த்தாள் வண்ண நிறம் கருத்து போய் நின்றான் இன்றும் வேலை பளுதான் போல, அது அவன் காய்ந்த உதட்டில் தெரிந்தது... நெஞ்சில் அவள் சாய்ந்து கொண்டு 

ரொமப் வேலையா என்று கேட்டால் அந்த சோர்வு நீங்கி போகும் அவளுக்கு சம்மதமே... ஆனால் , அவனுக்கு சம்மதமா தெரிலையே, கேப் விட்டு இருவரும் நின்றனர் அவன் பார்வையும் காட்டன் சேலையில் ஒரு அழகு தூக்கலாக எடுத்து காட்ட காஜல் போட்டு நின்ற அவளை மேலிருந்து கீழ் வரை ரித்விக் வருட காற்றில் இடை சேலை நகரும் போது எல்லாம் மறைக்கும் அவள் வெண்டை விரல் கடித்தால் கூட அவன் கொண்ட காதலுக்கு போதும் போல ஆசை வர வைத்தாள் புத்தம் புது மனைவி... 

என்ன அது காட்டுங்க 

ம்ஹூம் நீங்க கோவப்படுவீங்க 

ப்ச் காட்டுங்க என்று அவள் அதை வாங்க போக, அவன் இன்னும் பின்னே மறைக்க , இவள் அதை பிடுங்க ரித்விக்கை நெருங்கி அவன் பின்னே கையை விட்டு அவன் கையை இழுக்க 

ஆஆஆஆஆஆஆ அவன் வந்து அவள் மீது விழ அவள் போய் சுவற்றில் மோத , அவன் விழுந்த வேகத்தில் நச்சென்று வைசு மஞ்சத்தில் வெடிக்காத மங்கை மலர் மீது முகம் இடிக்க விழ 

அய் வாங்கிட்டேனே என்று இலையில் கட்டி இருந்த பொருளை தூக்கி போட்டு பிடித்தவள் தன் மார்பில் வந்து முட்டிய கணவன் செயலில் அதிர்ந்து கையை விரித்த நிலையிலேயே நிற்க ... அவனும் அவள் கழுத்தில் கிடந்த தாலியில் உரிமை மட்டும் கண்ணுக்கு தெரிய முகத்தை புரட்டி வாசம் பிடித்தவன் சோர்வு எங்கே போனது என தெரியவில்லை...புதிதாக வேலை செய்து பழகிய அவன் ஐவிரல் அவள் விலகிய இடையை அமுக்கி வலிக்க வைக்க 

ஸ்ஆஆஆஆ தன்னை மீறி அவள் குரல் வெளியேற பித்தம் தெளிந்த ரித்விக்

சாரிங்க சாரிங்க என்று பதறி எழும்ப 

ப்ச் சத்தம் கொடுக்காம இருந்திருக்கலாமோ என்று அவன் விலகிய பின்னே விவரம் அறிந்தாள்..

அது வந்துங்க 

ஒன்னும் பிரச்சனை இல்லைங்க, நீங்க என்ன வேணும்னா விழுந்தீஙக கால் ஸ்லிப் ஆனதுக்கு என்ன பண்ணுவீங்க..

ஆமாங்க ஆமாங்க என்று தலையாட்ட இவளுக்கு அவனை பார்க்க பாவமாகவும் இருந்தது கோவமும் வந்தது

உன் பொண்டாட்டி தானே வாடி வாழலாம்னு கூப்பிட்டா என்ன விட்டு கொடுக்க பேயா நிற்கிறான் அதான் என்கூட வாழ ஆசை தொண்டை வரை இருக்கே , ப்ச் நான்தான் எல்லாத்துக்கும் காரணம் நான்தான் எதாவது செய்யணும் என்று யோசித்தவள் கையில் குளிராக இருந்த இலையை குனிந்து பார்க்க 

என்ன இதுங்க? அவள் முகத்தை பார்க்கவே அவனுக்கு சங்கடமாக இருந்தது.. காலை கதிர் இப்போது நிலவா அய்யோ இது என்ன ஏடாகூடமா எல்லாம் நடக்குது ... பஞ்சும் நெருப்பும் பத்திக்கும்னு சொல்றது உண்மைதான் போல முதல்ல பஞ்சை தூக்கி அதோட இடத்துல வைக்கணும்.. ஆமா பஞ்சுதான் எவ்வளவு ஷாப்ட்டா இருக்கு, அதை கடிச்சா வலிக்குமோ எங்கே போனாலும் புத்தி மனைவியை கடித்து தின்னவே சொல்ல தலையை உதறிய ரித்விக்...

"அது வந்துங்க வர்ற வழியில பூக்கார அக்கா ஒரு முழம் பூ தான் மிச்சம் இருக்கு , வாங்கிட்டு போ தம்பி நான் வீட்டு போயிடுவேன்னுகேட்டுச்சு பார்க்க பாவமா இருந்தது அதோட உங்க நியாபகம் வந்துச்சு அதான் வாங்கிட்டு வந்தேங்க

என் நியாபகமா? அவள் கண்ணை விரிக்க

"இல்ல இல்லை சாமி நியாபகம், சாமிக்கு வாங்கிட்டு வந்தேன் சாமிக்கே வைங்க முதல் முதல் வாங்கிய சம்பளம் குவாட்டருக்கு போகாது பாக்கெட்டில் இருக்க பூக்கார அக்கா கேட்கவும் அவளுக்கு பூ வாங்க ஆசை வாங்கி விட்டான்... 

"ஏன் பொண்டாட்டி வச்சா தப்பாங்க சாமிதான் வைக்கணுமா? 

"அய்யோ அப்படி சொல்லலைங்க, உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான்ங்க 

"எனக்கும் ஓகேதான்ங்க 

"எதுக்குங்க 

"ம்ம் எல்லாத்தையுமா சொல்வாங்க" என்று முனங்கி வைசு 

"பூ வச்சிக்க எவளாவது வேண்டாம்னு சொல்வாளா அதுவும் புதுகல்யாணம் முடிஞ்சவ எனக்கு ஓகேதான் ,கையில செடிக்கு உரம் போட்ட கசடு இருக்கு.. நீங்களே கொஞ்சம் சிரமம் பார்க்காம வச்சி விடுறீங்களா ரித்விக் 

எது நானா என்று ரித்விக் அதிர்ந்த்தாலும் ஆசையும் வந்தது பூவை வாங்கும் போதே 

பொண்டாட்டிக்கு நீயே வச்சு விடுப்பா பாசம் கூடும் என்று கூற ..

நினைக்கும் போது நல்லா தான் இருக்கு ஆனா வைசு என்ன நெனைக்கும் என்று யோசித்தவனுக்கு ஜக்பார்ட் தான் .. 

"உதவிதானேங்க உதவி செஞ்சா தப்பாங்க "வைசு ஊமையாக சிரிக்க 

"உதவி பண்றது தப்பே இல்லையே" என்று ரித்விக் பூவை வாங்க அவனுக்கு முதுகு காட்டி நின்ற மனைவியின் குட்டை முடியும் அதன் கீழே இருந்த வெள்ளை பளீர் முதுகும் இன்னும் கீழே ஒடுங்கிய இடையும் அதன் கீழே பருத்த அழகும் அம்மா!! மூச்சு திணறியது அவள் நின்ற ஜாடை அவனுக்கு மான் கொம்பு தானாக முளைக்க வைக்க அது சொல்பேச்சு கேளாது போய் அவளே முட்டி தள்ளிவிட 

"ஏதோ குத்துதுங்க என்று கிசுகிசுப்பாக அவள் திரும்பி அவனை பார்க்க 

"செடியா இருக்குங்க என்று அவன் விவரம் புரிந்து நகர போக 

"செடின்னா ஓகேதான் பிரச்சனை இல்லை" என்று உதட்டை கடித்தவள் அவளே செடிக்கு இரையாக இடித்து நிற்க இவனுக்கு கண் சொருக அவளுக்கு உதடு துடிக்க மலரை அவள் தலையில் வைத்து விட்டான்..அவன் மஞ்சத்தில் மலராக எப்போது கசங்க என்று அவளுக்கு ஏக்கம் வர , இந்த அழகை கட்டிலில் ரசிப்பது சாத்தியமா அஃது சரியா தவறா என்று அவன் தயங்க ...

இவர்கள் காதல் நாடகத்தை தன் அறையில் இருந்து காயத்திரி பார்த்து கொண்டு நின்றாள் 

"என்ன காயத்திரி என்ன செய்ற ??ஆறுமுகம் உள்ளே வர 

"ஏன் மாமா சின்னவனுக்கு அவன் பொண்டாட்டி காதலிச்சது மூத்தவன்னு உண்மை தெரிஞ்சா என்ன ஆகும் என்று ஆறுமுகத்தை திரும்பி பார்க்க 

"ஒட்டிட்டு நிற்கிறவங்க வெட்டிட்டு நிற்பாங்க என்ற புருசன் நெஞ்சில் சாய்ந்த காயத்திரி 

"அய்யோ அப்போ அந்த உண்மை தெரியவே கூடாதுங்க..."

"புரிஞ்சு போச்சு தெரியவே செய்யாது 

"ம்ம் எனக்கு என் மகன் வாழணும், என் மருமக நல்லா வாழணும் 

"வாழ வச்சிட்டா போச்சு" என்று கணவன் பைக்கில் ஏறி ஆசையாக ஊரை சுற்ற போகும் ரித்விக் வைஷ்ணவியை இருவரும் நயவஞ்சக பார்வை பார்த்து சிரித்தனர் ...

நல்ல பாம்பு கூட பார்க்க அழகாகத்தான் இருக்கும் , அப்படியே பாசமாக பேசும் மனிதர்கள் எல்லாம் நல்லவர்கள் நமக்கு நன்மை செய்வார்கள் என நம்புவது முட்டாள் தனம்!! 

அவளாக உண்மை சொல்லி இருந்தால் கூட வாழ்க்கையை தக்க வைத்து கொண்டிருப்பாள் அந்தோ பரிதாபம் பிடித்தது பாம்பு வால் என தெரியாது காயத்திரியை சீண்டி விட்டு தன் வாழ்கையை இழக்க போகிறாள்...