வேஷம் போடும் வேடா 24

Veda24

வேஷம் போடும் வேடா 24

24 வேஷம் போடும் வேடா !!

என் புருசனை பத்தி யார் சொன்னாலும் நம்ப மாட்டேன் என்ற லெட்சுமிக்கே இப்போது எல்லாம் ஆறுமுகம் சட்டையில் இருக்கும் குங்குமம் உள்ளே வரும் போது அடிக்கும் பெண் வாசம் சந்தேகம் வர 

நேத்து ராத்திரி ஃபேக்டரில் இருந்து முன்ன கூட்டியே வந்துட்டாங்கன்னு சொன்னாங்க... எங்க போயிருந்தீங்க அத்தான்.. தோட்டத்து வீட்ல நீங்க சுத்துறதா வேலையாள் சொன்னாரு "என்று அதிர்ஷ்ட லட்சுமி யோசனையாக கணவனை கேள்வி கேட்க ஆரம்பிக்க

கேள்வி கேட்கும் மனைவியை எரிச்சலாக பார்த்தார் தன் நிறத்திற்கும் அழகுக்கும் கொஞ்சம் கூட இணை இல்லாத அதிர்ஷ்ட லட்சுமிக்கு அத்தனை அதிர்ஷ்டத்தையும் கொடுத்து கடவுள் வைத்திருக்கிறானே என்று பல்லை கடித்தவர்

"இனிமே சரியா வீட்டுக்கு வந்துடறேன் என்று சமாளித்து விட்டார்...

ஆனால் ராக்கம்மா போட்டு கொடுத்து விட்டார் 

"அது, உங்களை சந்தேகம் பட ஆரம்பிச்சுடுச்சு ... நாம முந்திக்கல நம்ம குட்டு வெளிப்பட்டிரும்

"ம்ஹும் என்னை சந்தேக படுறியா என்ன குறையே சொல்ல முடியாத படி உன்ன குறையாக்கி விடுறேன் பாரு என்று தன்னை போட்டு கொடுத்த தோட்டக்காரனை விரட்டி விட்டு வி்ட்டு, இன்னொரு வாட்டசாட்டமான தோட்டக்காரன் ஒருவனை ஜமீனில் வேலைக்கு சேர்க்க 

"அந்தாளை பார்த்தாவே பிடிக்கல அத்தான் என்ன பார்க்கிற பார்வையே பயமா இருக்கு 

"ப்ச் உனக்கு தெரியாது லெட்சு நான் அடிக்கடி வேலை விஷயமாக வெளியே போற ஆளு உனக்கு காவல் காக்க ஆளு வேண்டாமா 

"என்ன யாரு தூக்கிட்டு போக போறா 

"கருப்பு அழகியை காக்கா தூக்கிட்டு போனா நான் என்ன செய்றது 

ப்ச் லெட்சுமி கணவன் நேசத்தில் சிணுங்கினார்.. 

"பிள்ளை பிறந்தது தன் தாயின் நீல கண்ணை கொண்டு பிறந்தான் அயோக்கியா அனவர்தன் 

"ஏன் அத்தான் இந்த பேர் "

"அவன் பிறந்த நேரத்தில சனி ஆரம்பிக்குது ,பேர்ல கெட்டது இருந்தா வாழ்க்கையில நல்லது நடக்கும்னு சொன்னாங்க அதான் 

ஓஓஓ அப்போ சரி அத்தான் என்று தன் கண்ணை கொண்டு பிறந்த வண்ண திருமேனி அழகனை ஆசையாக முத்தமிட்டாள்.. 

"குழந்தையும் பிறந்துடுச்சு இனிமே இந்த ஜமீனோட முதல் வரிசை அவன் தானே... அப்போ நாம ? காயத்திரி எரிச்சலாக குட்டி பிள்ளையை பார்க்க 

"குழந்தை பிறந்தா என்னடி அவனையும் சேர்த்து கொன்னுடுவேன் என்ற ஆறுமுகத்தை ரசித்துப் பார்த்தார் காயத்ரி 

"சத்தியமா சொல்றேன் மாமா இந்த ஜமீன் வாரிசு என் பிள்ளைகளாதான் இருக்கணும்... இல்ல நடக்கிறதே வேற ...இவளை என்ன செய்ய போறீங்க அடுத்த பிள்ளை கொடுக்க போறீங்களா 

"ஹாஹா என் திட்டமே வேறடி 

"புரியல

"கொன்னா அய்யோ போயிட்டான்னு அவ மேல பரிதாபம் வரும் உடனே உன்ன கட்டினா என் மேல அத்தனை பேர் பார்வையும் திரும்பும் 

"வாஸ்தவம் தான் என்ன பண்ண 

"ஒரு கேடு கெட்டவ , புருசனை எமாத்திட்டு தோட்டக்காரன் கூட படுத்தவ செத்தா 

"அய்யோ மாமா உன் மூளையே மூளை ஓஓஓ அதுக்கு தான் அந்த தோட்டக்காரனை உள்ள விட்டிருக்கியா

"ம்ம் நம்ம பேரும் கெட கூடாது கொலைப்பழியும் நம்ம மேல விழ கூடாது அதுக்கு அவ அசிங்க படணும் ... ஊர் மத்தில அவளை கெட்டவள் ஆக்ககணும் 

"எப்படி 

" இப்போ நீயும் நானும் கள்ளத்தொடர்பு வச்சிருக்கோமே இது ஊர்ல தெரிஞ்சா என்ன ஆகும்

" கேவலம் பட்டு போகும்,  

"இதே கேவலம் அவளுக்கு உண்டாகும் , சாட்சிகளும் நேரமும் அவளுக்கு விரோதமா உண்டாக்கி பொய்ய உண்மையாக்கிட்டு நாம நல்லவங்க மாதிரி அவளுக்கு முன்னாடி நடிச்சிட்டு பின்னாடியே நாம சூனியத்தனத்தை காட்டுவோம் என்று தோட்டக்காரனை கொம்பு சீவினர் 

ஊர் திருவிழா நடந்து கொண்டிருந்தது... ஆறுமுகம் கோவிலில் நிற்க அதிர்ஷ்ட லெட்சுமி அயோக்கிய்விற்கு உடல்நிலை சரியில்லை என்று வீட்டிலேயே இருந்து கொள்ள .. விளக்கு அணைக்கபட்டது 

"யாரு யாரு என்று லெட்சுமி தன் அருகே கேட்ட காலடி சத்தத்தில் பாய்ந்து எழும்ப மூக்கில் மயக்க மருந்து வைக்கப்பட மயங்கி படுக்கையில் சாய்ந்தார்.. 

"இங்கே ஊரே திருவிழாவில் கூடி நிற்க ... ராக்கம்மா  அரக்க பறக்க ஓடி வந்து கூட்டத்தின் நடுவே உட்கார்ந்திருந்த ஆறுமுகம் முன்னால் வந்து நின்றவர்

"அய்யோ தம்பி உங்களுக்கு பெரிய துரோகம் நடந்துடுச்சு...

"என்ன அக்கா என்ன ஆச்சு??

"அத நான் எப்படி சொல்லுவேன்...

உங்க பொண்டாட்டியும் அந்த தோட்டக்காரனும் என்று அவர் மென்று முழுங்க 

என்ன ஆச்சு ?

"ரெண்டு பேரும் படுக்கையில, அய்யோ ச்சை கேவலம் நடக்குது பல நாளா கள்ள தொடர்பு இருக்கும் போல என்று டிக்க 

ஆறுமுகம் வேகமாக ஜமீனை நோக்கி நடக்க ஆரம்பிக்க... அடுத்த வீட்டு விசயத்தை ஊர் முன்னால் சொன்னால் ஊர் மக்கள் சும்மா இருப்பார்களா ? அவர்களும் வேடிக்கை பார்க்க பின்னாடியே செல்ல 

லெட்சு என்று ஆறுமுகம் கதவை ஓங்கி உதைத்து தள்ள அதிர்ஷ்ட லட்சுமி கட்டிலில் தோட்டக்காரன் நெஞ்சில் சேலையில்லாமல் படுத்து உறங்கிக் கொண்டிருக்க 

"லெட்சுமி 

"அக்கா ஆஆஆஆ என்ற குரலில் மயக்கம் தெளிந்து எழும்பிய லெட்சுமி பதறி போய் வெடுக்கென்று அவனை விட்டு எழும்ப 

"அத்தான் ஆஆஆ ஊரை வேடிக்கை பார்க்க கிள்ளை போல அரண்டு நின்றார் 

"நான் எதுவும் பண்ணல அத்தான் 

"தூதூ இவ எல்லாம் பொண்ணா 

"இப்படி ஒரு மனசனுக்கு இப்படி ஒரு மனைவியா 

ஜமீன் மானமே போச்சு என்று ஊர்காரர்கள் அத்தனை பேர் முன்னும் களங்கப்பட்டு நின்றாள் அதிர்ஷ்ட லட்சுமி

போதும் நிறுத்துங்க என்று கத்திய ஆறுமுகம் 

"யாரும் என் மனைவியை ஒரு வார்த்தை சொல்ல கூடாது ... வாடா இங்க உன்ன நம்பி உள்ள விட்டதுக்கு உன்னால எவ்வளவு பண்ண முடியுமோ பண்ணிட்ட இல்ல ஏன்டா உள்ள வந்த. 

"அம்மாதான், அய்யா கோவிலுக்கு போயிருக்கார் வான்னு கூப்பிட்டாங்க இது ஒன்னும் எங்களுக்கு புதுசு இல்லைங்க நடக்கிறது தான் என்று தோட்டக்காரன் ஆறுமுகம் சொல்லி கொடுத்ததை கூற திகைத்து போன லெட்சுமி 

அய்யோ அத்தான் இல்லை 

"இல்லேயோ ஏன்மா பொய் சொல்றீங்க ,அவங்க வலது தொடையில ஒரு மச்சம் இருக்கும் இதுக்கு மேல எப்படி நான் சொல்ல... லெட்சுமி அதிர்ந்து போய் நின்றார் ..

"என் பொண்டாட்டியை குறை சொல்றியா போடா நாயே வெளிய என்று ஆறுமுகம் தோட்டக்காரனை மிதித்து அடித்து விரட்ட ...

ஆறுமுகம் இப்படி ஜமீன் மானத்தை வாங்குவான்னு நாங்க நினைச்சு கூட பாக்கல , இவ உனக்கு வேண்டாம் என்று ஊரார் கூற 

"ச்ச் ச்சே அவ குழந்தை அவளுக்கு என்ன தெரியும் ஏதோ தப்பு நடந்துடுச்சு 

"உங்களுக்கு துரோகம் பண்ணி இருக்கா நீங்க அவங்களுக்கு சப்போர்ட் பண்றீங்க

"துரோகம் பண்ணினாலும் நான் அவளை காதலிக்கிறது உண்மை" என்ற கணவனை ஏறெடுத்து பார்த்த அதிர்ஷ்ட லட்சுமி உதடு துடித்தது..ஏன் இப்படி ஒரு நிலை தெரியவில்லை ஆனால் இந்த நிலையிலும் சந்தேகப்படாத கணவன் உயர்ந்து நின்றான் ... 

"நான் தப்பு பண்ணலங்க அத்தான் 

"நீ எனக்கு எந்த விளக்கமும் சொல்ல வேண்டாம் லெட்சு , எனக்கு என் மனைவியை பத்தி தெரியும் ஊர் என்ன சொன்னாலும் பரவாயில்லை உன்னை வேசின்னு சொன்னா கூட நான் கவலைப்பட மாட்டேன் எனக்கு நீ வேணும் .. உன்ன பத்தி எனக்கு தெரியும் நடந்ததெல்லாம் மறந்திடு பாத்துக்கலாம்" என்று மனைவியை கோரச்சிரிப்போடு அணைத்துக் கொண்டார் ஆறுமுகம்..

காயத்திரியும் ராக்கம்மாவும் ஊமையாக சிரிப்பை அடக்கினர்... 

தன் கணவனின் எல்லையில்லா நேசத்தில் மயங்கி போனார் அதிர்ஷ்டலட்சுமி... ஊர் எல்லாம் கள்ளத்தொடர்பு வைத்திருந்த சங்கதியைச் சொல்லிச் சொல்லி அவளை கேவலப்படுத்த... ஒவ்வொரு நேரமும் ஆறுமுகம் அவளை சமாதானப்படுத்தினார் 

"இருந்தா ஆறுமுக மாதிரி இருக்கணும், மத்தவனா இருந்தா பொண்டாட்டிய கண்டம் துண்டமாக வெட்டி போட்டுடுவான்... ஆனா துரோகம் செஞ்ச பொண்டாட்டியை கூட நேசிக்கிறாரே பரவாயில்ல என்று ஆறுமுகத்திற்கு ஏறு முகமானது

அயோக்கியாவிற்கு இரண்டு வயது பிறந்தநாள் அன்று பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் அதிர்ஷ்ட லட்சுமி இல்லை இருந்தாலும் ஆறுமுகத்தின் ஆசைக்கு இணங்க பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் முடித்து மகனை தூங்க வைத்து விட்டு கணவனை தேட ... ஜமீனில் கணவன் இல்லை

அத்தான் எங்க போனார் என்று கணவனை தேடி பின்னால் பழைய பொருட்கள் போட்டு வைத்திருக்கும் இடம் நோக்கி போக ... அங்கே ஏதோ முக்கல் முனங்கள் சத்தம் கேட்டு ஜன்னலை திறந்து பார்க்க கண்டார் அந்த காட்சியை..

காயத்ரி தேவி மீது ஆடை இல்லாமல் படுத்து கிடக்கும் தன் கணவனின் சுயரூபம் கண்டு நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு அதிர்ஷ்ட லட்சுமி நிற்க...

"மாமா அவ அப்பனை கொன்னாச்சு, அவளை ஒழுக்கம் கெட்டவ ஆக்கியாச்சு..எப்போ அவ கதையை முடிக்க போறீங்க.... 

"சீக்கிரமே 

"ம்க்கும் அவ உங்களை பார்த்துட்டு இருக்குறது கூட தெரியாம சல்லாபம் பண்ணினா.. சீக்கரம் நாம மூணு பேரும் போய் சேர வேண்டியது தான் என்று ராக்கம்மா குரல் கேட்டு ஜன்னல் வழியாக பார்த்த ஆறுமுகம் அங்கே மரமாக நின்ற மனைவியை பார்த்து அதிரவெல்லாம் இல்லை 

எத்தனை நாளா இது நடக்குது "

"ப்ச் இன்னைக்கு தான் உன் கண்ணுல இதெல்லாம் பட்டுச்சா... இது நடக்குது பல வருஷமா என்று சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே வர கொண்டையை இழுத்து போட்டபடி... சேலை முந்தானையை உதறி நெஞ்சில் போட்ட காயத்ரி

"வாக்கா உடம்பெல்லாம் ரொம்ப அசதியா இருக்கு கொஞ்சம் காப்பி தண்ணி ஏதாவது போட் கொடு 

"என்ன நடக்குது இங்க?"

"என்ன நடக்குதா கள்ள குடித்தனம் நடக்குது... நீ செத்தா, நான் ஜமீன் சொத்தை அடலையாம்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்.. எப்ப அக்கா சாகப் போற? என்று காயத்ரி இடையில் சொருகிய சேலையோடு தன் அக்காவை அகோர பார்வை பார்த்தபடி அவளை சுற்ற 

"சரி இன்னும் ஒரு வருஷம் கழிச்சு உன்னை கொல்லலாம்னு நெனச்சேன்... இன்னைக்கு தான் உன்னை கொல்ல நேரமும் காலமும் கூடி வந்திருக்கும் போல இன்னைக்கே கொன்னுட வேண்டியதுதான்.. உன்ன கொன்னுட்டு இந்த ஜமீன் சொத்து எல்லாத்துக்கும் நான் வாரிசாகிட்டேன்னு வையி அப்புறம் இவளை கல்யாணம் கட்டிக்கிட்டு இதே வீட்டுல ஜாம் ஜாம்னு வாழப் போறேன் என்று ஆறுமுகம் அவளை சுற்றி வர 

"இவங்க புண்ணியத்துல நானும் ஜாம்ஜாம்னு வாழ போறேன் என்று ராக்கம்மாவும் அவளை சுற்ற

நடுவே அதிஸ்டலெட்சுமி அவளை சுற்றி மூவரும் சுற்ற 

"இவளை கொன்னுட்டு தூக்குல போடுவோமா 

"இல்லை தூக்குல போட்டு கொல்வோமா 

"இல்லை ஓட ஓட அடிச்சு கொல்வோமா

"ம்ஹூம் என் பிள்ளைக்காகவாவது என்ன விட்டிருங்க "என்று லெட்சுமி கையெடுத்து கும்பிட 

"அப்போ பிள்ளையையும் சேர்த்து கொண்டு போ என்று காயத்திரி அயோக்கியாவை தூக்கி கொண்டு வந்து தரையில் போட ...

அது நம்ம பிள்ளைங்க 

"உன் பிள்ளைன்னு சொல்லு... உன்னையே எனக்கு பிடிக்கல நீ பெத்த பிள்ளையா எனக்கு பிடிக்க போகுது அவனை கொல்ல போறதே நான்தான்டி"

"உங்களுக்கு சொத்து தானே வேணும் எங்க வேணும்னாலும் கையெழுத்து போட்டு தர்றேன் என்னையும் என் பிள்ளையையும் விட்டிருங்க 

"ஏன் அப்படியே போற மாதிரி போய் எங்களை போலீஸ்ல பிடிச்சு கொடுக்கவா...என்று காயத்திரி அவளே பிடித்து தள்ள 

"ஆஊஆஆஆஆஆஆ நான் உனக்கு என்ன பாவம் செஞ்சேன் "

"வசதியா வாழ்றியே ,அழகான எனக்கு கிடைக்காத எல்லாம் உனக்கு கிடைச்சதே அதுதான் ... 

"என்ன விட்டுருங்க நான் என் குழந்தையை கொண்டுட்டு எங்கேயாவது போயிடுறேன்" என்று குழந்தையை எடுப்பதற்காக அதிர்ஷ்ட லட்சுமி ஓட போக...

ராக்கம்மா கையில் ரெண்டு வயது அயோக்கியா வீல் என்று அழுதான் ரெண்டு வயது ஆன பின்னும் வாய் பேச வராது உம் உம் மட்டுமே போடும் மகனை கைக்குள் வைத்து வளர்த்த தாய்க்கு இதயம் நின்றுவிட

"அய்யோ என் பிள்ளை 

 "இப்போ உன்ன துடிக்க துடிக்க தூக்குல தொங்க போட்டு கொல்ல போறோம் சத்தம் வந்ததுன்னு வச்சுக்கோ, இதோ உன் மகன் இருக்கான் பாரு அவன சத்தமே இல்லாம உன் கண்ணு முன்னாடி கொல்ல வேண்டியது இருக்கும் "என்றதும் அதிர்ஷ்ட லட்சுமியின் ஓட்டம் தடைப்பட்டு அதிர்ந்து போய் மூவரையும் திரும்பி திரும்பி பரிதவிக்க பார்த்தாள்

துரோகம் தாங்க முடியாத வலி, நயவஞ்சகம் இனம் கண்ட சுமை , பரிதவிப்பு அத்தனையும் நிறைந்த அவர் கண்கள் தன் மகனை வலியோடு பார்த்தது...

ஏமாத்திட்டாங்கய்யா ஏமாந்துட்டேன் என்ற இரண்டு வார்த்தையும் தான் அவர் வாயிலிருந்து கடைசியாக வந்தது ..

சத்தம் போட மாட்டேன் என் புள்ளையை ஒன்னும் பண்ணிடாதீங்க..

தாய்ப்பாசம் மட்டும் தான் உலகில் ஈடுகட்ட முடியாத ஒன்று !! தன் மகன் வாழ தன் உயிரை கொடுக்க துணிந்தது அவரின் நேசம் ...