வேஷம் போடும் வேடா 29

Veda29

வேஷம் போடும் வேடா 29

29 வேஷம் போடும் வேடா !!

அதிரா காலை காலேஜ் உள்ளே வர...  சில மாணவர்கள் அவளை விசில் அடித்து கேலி செய்ய ஆரம்பித்தனர்..

"என்னவோ இவ கிட்ட இருந்து இருக்கு மச்சான் , அதனால தான் பெரிய இடமா புடிச்சு தொங்கிட்டா போல இருக்கு ... பணக்காரனுக்கு மட்டும்தான் பார்ட்னரா போவியா,  இல்ல எங்களுக்கும் ஏதாவது ஆப்பர்சூனிட்டி இருக்கா... 

" யாருக்கு தெரியும்டா, அவனை விட அதிகமா காசு கொடுத்தா நமக்கும் பார்ட்னரா வருவாளா இருக்கும் .... 

"பேசாம ஒரு ரெண்டு நாளைக்கு லஸ்ட் பாட்னரா வரியான்னு கேட்டு பாருடா மச்சான் என்று சிரிக்க

"அப்படி செஞ்சு பார்க்கலாமோ,  முதல்ல நான் கூப்பிட்டு பார்க்கிறேன்,  வந்து நல்ல கம்பெனி குடுத்தா அடுத்தது உனக்கு அனுப்பி விடுறேன் அவனுக்கு செஞ்ச அத்தனை சேவையையும் நமக்கு பண்ணட்டும் நாமளும் காசு கொடுத்துடுவோம் என்று அவள் காதுபட சிரிக்க ...

மற்றவர்களாக இருந்திருந்தால் அழுது கண்ணீர் வடித்து கலங்கி இருப்பார்கள் ஆனால் அங்கே நின்றது அதிராயிற்றே....  வேகமாக அவர்கள் முன்னால் போய் நின்றவள்

"யாருக்கு லஸ்ட் பார்ட்னரா வரணும்?? 

"இவனுக்கு இவனுக்கு "என்று இருவரும் மாறி மாறி கையை காட்ட 

"அதுல எந்த பிரச்சனையும் இல்லை , அவரோட இருந்த பார்ட்னர்ஷிப்பை,  முடிச்சு ரொம்ப நாள் ஆகுது...  பார்ட்னர் போட்டுக்கலாம் ..ஆனா , அவரு ஏன் என்னை இடையிலேயே கழட்டிவிட்டார் அப்படிங்கற உண்மை உங்களுக்கு தெரிஞ்சி இருக்கணும்... அப்பதான்  நம்மளோட பாண்டிங் நல்லா இருக்கும்

என்ன சொல்ற  ??

"அது பெரிய கதை முதல்ல உட்கார்ந்துக்குறேன் என்று அவன் விட்டிருந்த பைக் மீது ஏறி அமர்ந்தவள்..

"காலையில் எல்லாம் சரியாத்தான் இருப்பேன் ராத்திரி மேட்டர்னு வந்துடுச்சுன்னா,  என் சொல்ல நானே கேட்க மாட்டேன்..  கடிச்சு கொதறி அதை எப்படி சொல்றது ,ஒரு மாதிரி ரத்தக்காட்டேரி மாதிரி அந்த விஷயத்துல வெறி பிடிச்சு நிப்பேன் ... செம மூட் ஆகிடுவேன்

"மூட் ஆனா நல்லது தான 

"நல்லதுதான் இடம் தெரியாம கடிச்சு வச்சிடுவேனே 

ஹான்

"ம்ம்,  பாவம் மனுஷன் எத்தனை நாள் தான் அடியையும் கடியையும் வாங்குறது அதான் தப்பிச்சு ஓடிட்டார்.... யார் முதல்ல வரிங்க...  நீயா நீயா இல்ல ரெண்டு பேரும் சேர்ந்து வந்தாலும் எனக்கு ஓகே தான்...  நான் ரெண்டு பேருக்கும் ஈடு கொடுப்பேன் ஹோட்டல்  போறோமா  லாட்ஜ் போறோமா..  இல்ல யாரோட வீட்டுக்காவது போறோமா...  கமான் டெல் மீ என்றவள் பேச்சில் அரக்கப் பறக்க இருவரும் ஓடி விட்டனர்

"டேய் டேய் காஞ்சி போய் கிடக்கேன்டா யாராவது வாங்கடா..

"ஆள விடு தாயே !! என்று கத்த 

"யார் கிட்ட அதிமதுராடா!! அந்த அயோக்கியாவையே ஒத்தைக்கு ஒத்த நின்னு ஹேண்டில் பண்ணுவேன்..  நீங்க எல்லாம் எனக்கு ஜுஜுபிடா என்று  தன் தாவணியை சுழற்றிக் கொண்டவள் பக்கம் இனி போவார்கள்..

ஹாஸ்டலில் தங்கி காலேஜுக்கு வந்த போகிறாள் 4 மாதம் முடிந்து விட்டது ... அயோக்கியாவும் இவளும் பார்த்துக் கொள்ளவில்லை என்று சொல்ல முடியாது அடிக்கடி பார்க்க நேரிடுகிறது... ஆனால் கண்டு கொள்வதில்லை ..

இவள் காலேஜ் தாண்டி தான் அவன் தன் எஸ்டேட்டுக்கு போக வேண்டும் எனவே எப்போதாவது அவன் கார் அவளை கடந்து செல்லும் இவளும் அவன் எஸ்டேட்டை தாண்டி தான் தன் ஹாஸ்டலுக்கு செல்ல வேண்டும் .. அப்படியே எதிரெதிரில் பார்த்துக் கொண்டாலும் 

"ஹாய் அத்தான்  எப்படி இருக்கீங்க ?

"பைன் நீ என்று ஒன்றுமே நடக்காதது போல குசலம் விசாரித்துக் கொள்வதில் அவர்களை அடித்துக் கொள்ள முடியாது ...

காலேஜ் உள்ளே அயோக்கியாவின் பெரிய பெரிய கட்டவுட்டுகள் சிறப்பு விருந்தினராக வரும் அயோக்கியவை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்டிருந்தது ..

பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் திருவிழா , அதற்கு தலைமை தாங்க இன்று அயோக்கியாவை கெஞ்சாத குறையாக கெஞ்சி அழைத்து வந்திருப்பதா சேர்மன்  பேசிக் கொண்டிருந்தார்...  அத்தோடு பரிட்சையில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கோப்பைகள் வழங்கும் நிகழ்ச்சியும் இருக்கிறது ..

மாலை கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமானது எப்போதும் போல ரகளை செய்வதற்கு ஏற்ற விதமாக ஆடிட்டோரியத்தின் கடைசி இருக்கையில் தன் தோழிகளோடு போய் அமர்ந்து கொண்டாள் அதிரா...

வெளியே வெடி சத்தம் கேட்க சிறப்பு விருந்தினராக கருப்பு கோர்ட்டில் கருப்பு நிற ஜகுவாரில் வந்து இறங்கினான் அயோக்கியா அனவர்தன் ..

கண்ணில் கருப்பு நிற கூலிங் கிளாஸ் தன் வாட்சைப் பார்த்துக்கொண்டே  சேர்மனோடு ஏதோ பேசிக்கொண்டே வேகவைக்க எட்டுடன் ஆடிட்டோரியம் உள்ளே வந்த அவனை  எல்லோர் கண்களும் ஒரு நொடி ரசித்துப் பார்க்கத்தான் செய்தது ஆனால் இரு விழிகள் தவிர 

அய்யோ உன் ஆளு செமடி என்று அவள் நண்பி நித்யா வாயை பிளக்க 

ப்ச் இப்ப  என் ஆளு  இல்ல ,,

"உண்மையாதான் ப்ரேக் அப் ஆகிடுச்சா?... 

"இப்ப அதை தெரிஞ்சு நீ எந்த கோட்டையை பிடிக்க போற தன்னை தாண்டி தாவி தாவி நடந்து போகும் அவனை நித்யா ஜொல் வடித்து பார்க்க 

"அங்க பார்க்க அப்படி என்ன இருக்கு ?

"போடி லூசு எனக்கு மட்டும் அவர் கிடச்சார் நாள் முழுக்க பாத்துட்டே இருப்பேன் ... 

"சரிதான் ... என்று அவனை வாயை பிளந்து பார்க்கும் அவளை கலாய்த்தவள் கண் மட்டும் அவனை ரசிக்க முயலவில்லை...

மேடையில்  நிகழ்ச்சிகள் ஆரம்பமாக பின்னால் இருந்து அதிராவின் விசில் சத்தமும் ஆட்டமும் ஓ என்று உற்சாக கத்தலும் ... எங்க உள்ள பிசாசு இந்த ஆட்டம் ஆடுது என்று கேட்க வைக்கும் அளவு அவள் அட்டுழியம் இருந்தது ....  

"இப்போது செமஸ்டரில் முதல் ரெண்டு இடம் வந்த மாணவர்களுக்கு சீப் கெஸ்ட் அயோக்கியா பரிசு வழங்குவார்..  ஒவ்வொரு பெயராக அழைக்கப்பட...அயோக்கியா பரிசுகளை வழங்கி கொண்டு நின்றான் 

"அக்ரி மாணவி அதிமதுரா 90 விழுக்காடு பெற்று கல்லூரியின் முதல் இடம் பிடித்து உள்ளார் ... 

டேய் தள்ளி நில்லுடா என்று கூட்டத்தை கிழித்து கொண்டு ஓடி வந்து மேடையில் ஏறிய அதிரா அயோக்கியா முன் வந்து நிற்க .... 

"மக்கும் ஒரு கால் பேச வேண்டி இருக்கு நீங்களே கொடுத்துடுங்க என்று அருகே நின்றவரிடம் பரிசை கொடுத்த அயோக்கியா போனை எடுத்து கொண்டு கீழே போய்விட... 

"ப்ச் நமக்கு தேவை கப் எவன் தந்தா என்ன நல்லா பெருசா இருக்கு , வாங்கி அடகு வச்சா ஒரு மாசம் மெஸ் பிஸ் கட்டிடிலாம் "என்று போட்டோவுக்கு பல்லை இளித்து போஸ் கொடுத்து வாங்கி கொண்டு கீழே இறங்கி வர ,அயோக்கியா ஃபோனை பாக்கெட் உள்ளே வைத்தபடி மேலே ஏறி வர மூச்சு உரசும் தூரத்தில் இருவரும் கிராஸ் பண்ணி நகர்ந்தார்கள்... இருவரும் ஒருவர் மூச்சை ஒருவர்  உள்வாங்கி விடாதபடி மூச்சை நிறுத்தி கொண்டார்கள் ... 

நீங்க எங்க காலேஜுக்கு கெஸ்ட்டா வந்தது ரொம்ப சந்தோஷம் இந்த காலேஜுக்காக எவ்வளவோ டொனேஷன் கொடுக்குறீங்க ...

பிச்சை புகினும் கற்கை நன்றேன்னு  கஷ்டப்பட்டு படிச்ச எனக்கு தெரியும்...

"இன்னும் ஒரு உதவி வேணும் சார் 

"என்ன 

" கூப்பிட்டு விட்டிங்ககளா "என்று கதவை தட்டிக்கொண்டு அதிமதுரா உள்ளே வர

"இது மாஸ்டர் அக்ரிகல்ச்சர் ஃபர்ஸ்ட் இயர் பொண்ணு அதிமதுரா..  எல்லாத்தையும் பஸ்டா வருவா ரொம்ப டேலண்டான பொண்ணு என்றதும் ஃபோனை பார்த்துக் கொண்டிருந்த அயோக்கியா  கண்களை தூக்கி அவளை பார்க்க...

 "ஆமா பார்த்தாலே தெரியுது ரொம்ப டேலண்டான பொண்ணுதான் எல்லாத்துலையும் டேலண்ட் கொஞ்சம் கூடதான் போல இருக்கு" என்றவன் கேலிப்பேச்சு அவளுக்கு புரிய 

"ஆமா சார் எல்லாத்தையும் டேலன்ட் இல்லேன்னா இந்த உலகத்துல வாழ முடியாது பாருங்க ... எதுக்கு சார் கூப்பிட்டு விட்டீங்க 

"அமைதியா இரு அதிரா,  சார் கிட்ட உன் விஷயமா தான் பேச போறேன் அவள் ஏதோ சொல்ல போக தடுத்த நிர்வாக தலைவர் 

"பொண்ணு படிப்பில படு சுட்டி ஆனா மேற்படிப்பு படிக்கிறதுக்கு வசதி கம்மி  போன செமஸ்டர் பீஸே இன்னும் கட்டல அதோட ஹாஸ்டல் பீஸ் பெண்டிங் ... 

"சார் இதெல்லாம் ஏன் அவர் கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க 

"உனக்கு நல்லது பண்றதுக்காக தான் 

"போச்சு இனி ,நல்லது நடந்த மாதிரி தான்..

"உங்கள மாதிரி ஒருத்தர் அவளுக்கு ஹெல்ப் பண்ணுனா நல்ல இடத்துக்கு வந்துருவா சார்... 

"ஓஓஓ  பத்து நாளைக்கு என் கூட படுக்க அனுப்பி விடுங்க நீங்க சொன்ன உதவியை பண்றேன் என்ற அயோக்கியாவை  நிர்வாகி அதிர்ந்து போய் பார்க்க

சார்  

பின்ன , அவ எனக்கு யாரு?? நான் சம்பாதிச்ச காசை  வீணா அவளுக்கு கொடுக்க, கையில காசு இல்லன்னா பிச்சை எடுத்து படிக்க சொல்லுங்க ... இல்ல படிப்ப  பாதியில விட்டுட்டு தோட்ட வேலைக்கு போக சொல்லுங்க...  இவ எல்லாம் சாதிச்சு என்னத்த கிழிக்கப் போறா...  ஓகே பிறகு மீட் பண்ணலாம் பாய் என்று அயோக்கியா வெளியே வர 

ஹலோ சார் இஇஇ அதிமதுரா கை தட்டி  அவனை அழைக்க 

வாட்?? 

உங்ககிட்ட பிச்சை எடுத்து தான் படிக்கணும்னு அவசியம் எனக்கு இல்ல சார் .. உங்க கூட லஸ்ட் பார்ட்னராக இருந்த மாதிரி நாலு பேர் கூட இருந்தா கை நிறைய காசு  ஓஹான்னு வாழுவேன் 

சோத்துக்கு சிங்கி அடிக்கும் போதே உனக்கு இத்தனை நக்கல் 

"அது கூடவே பிறந்தது போல ஒன்னும் பண்ணமுடியாது ... சோத்துக்கு பிச்சை எடுக்கல ரெண்டு வயசான ஆட்களை பாத்துக்க காலேஜ் முடிஞ்சதும் போறேன்  ...  அந்த காசுல ரொம்ப கெளரவமா சாப்பிட்டுட்டு இருக்கேன் ...  இதை மறந்து வச்சிட்டு வந்துட்டீங்க  அதை கொடுக்க தான் வந்தேன் என்று கண்ணாடியை அவன் கையில் திணித்தவள் 

"மறதி ஜாஸ்தி ஆகுதுன்னா மனசு இங்கு இல்லைன்னு அர்த்தம் அத்தான்,  மனசை காப்பாத்தி வைங்க காக்கா தூக்கிட்டு போயிடாம.... 

"இதை மறந்து தான் வச்சிட்டு வரணும்னு அவசியம் இல்லை அது எனக்கு தேவையில்லைன்னு கூட இன்னொரு அர்த்தம் இருக்கலாம்" என்று அவள் தந்த கூலர்ஸை காலில் போட்டு ஷூவால் உடைத்தவன்...   

மனசும் சரி , பொருளும் சரி...  என் தேவைக்கு ஏற்ப மாத்திக்க எனக்கு தெரியும் என்று இன்னொரு கண்ணாடி எடுத்து மாட்டி கொண்டு போய் காரில் ஏறியவன் கார் வேண்டுமென அவள் மீது புழுதியை பறக்கவிட்டுவிட்டு போக ...   

களீர் என்ற சத்தத்தோடு அவன் பின் கண்ணாடி உடைந்தது 

இது புழுதியை என் மேல பட வச்சதுக்கு..  பதிலுக்கு பதில் அத்தான் என்றவள் குரல் வர 

இடியட் என்று ஸ்டியரிங்கில் கையை குத்தினான்....

சம பலம் உள்ள இரண்டு வீரர்கள் ஒரு கயிறை இரண்டு பக்கமும் இழுத்தால்..அவர்கள் அசைய மாட்டார்கள்,  கயிறு தான் வலிமை இழந்து விடும் அப்படித்தான்  வெளியே தெரியாமல் தொங்கிக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு உணர்ச்சியை ஆளுக்கு ஒரு பக்கமாக பிடித்து இழுத்துக் கொண்டு நின்றனர் ... 

நாம இதுதான் சாக்குன்னு  இடையில புகுந்து எதையாவது ஆட்டைய கலைச்சு விடுவோம்!!