வேஷம் போடும் வேடா27
Veda27

27 வேஷம் போடும் வேடா !!
அதிரா வீட்டுக்குள் ஓடி வர... வீட்டு வாசலில் நிலைக்காலை பிடித்துக் கொண்டு அவளுக்கு வழியை மறைத்தபடி நின்று கொண்டிருந்த அயோக்கியாவை மேலும் கீழும் பார்த்தவள்
"வழி விடுங்க , பிளாஷ்பேக் சொல்லி வயிறு பசிக்குது ஏதாவது சாப்பிடுட்டு படிக்கப் போறேன் நாளைக்கு எக்ஸாம் இருக்கு... அவளை சிவந்த கண்ணோடு அயோக்கியா பார்க்க
"இந்த கலர் கலர் கண்ணை எல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன் அத்தான் ... என்ன உங்க பிரச்சனை ...
"நீ என்ன பேசினாலும் பண்ணினாலும் நீயும் அந்த பாவ கூட்டத்தில ஒருத்திதான்.... என் டார்கெட்ல இருந்து நீயும் தப்பிக்க முடியாது... வேணும்னா ஒன்னு செய்...
"என்ன ?
"என் காலை புடிச்சுகிட்டு அத்தான் நான் பண்ணுனது தப்புதான் ... உங்களை கொல்ல இந்த வீட்டுக்குள்ள வேஷம் போட்டு நான் வந்தது பெரிய தப்புதான்., இனிமே உங்க கண்ணு முன்னாடி கூட வரமாட்டேன் எனக்கு இந்த ஒரு தடவை உயிர் பிச்சை போடுங்கன்னு அழுது , கெஞ்சி , ஒப்பாரி வை விட்டுடுறேன் என்று அயோக்கிய கண்கள் பழுப்பாக அவளைப் பார்க்க...
அதிரா , தன் கையில் இருந்த ஐஸ் குச்சியை கீழே போட்டு விட்டவள் அவன் கால் பக்கத்தில் விழுந்த அதை எடுக்க போக அயோக்கியா குனிந்து அவளை பார்க்க ... ஐஸ் குச்சியை எடுத்து குப்பையில் போட்டவள்
"யூ மீன் மன்னிப்பு ..
"ம்ம்
"எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்புதான்... நான் விஜயகாந்த் சாரோட டை ஹார்ட் பேன் அவர் சொல்றார் , நிம்மல் செய்றான் ... நான் எதுக்கு உங்க கிட்ட மன்னிப்பு கேட்கணும்... கேட்க முடியாது ... நீங்க பண்ணுனது உங்களுக்கு சரின்னா... நான் பண்ணினது எனக்கு நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரி .... உங்க அம்மாவுக்காக நீங்க வேட்டை ஆட துடிச்சதும் , அந்த பொம்பளைக்காக நான் வேட்டை ஆட துடிச்சதும் சரியே.... அந்த பொம்பள தப்பான ஆளா போயிடுச்சு இல்லைன்னா
"என்னடி பண்ணி இருப்ப ?
"வந்த வேலையை முடிச்சிருப்பேன்...என்னைக்கு நான் உங்கள கொலை பண்ணதான் வந்திருக்கேன்னு கண்டுபிடிச்சீங்களோ, அன்னைக்கே உங்களை வெட்டி கூறு போட்டிருப்பேன் என்றவள் பார்வை சொன்னதை செய்திருப்பேன் என்று திமிராக அவனை எதிர்கொண்டது...
ஹாஹா நான் அயோக்கியாடி, குள்ள நரி கூட்டம் உள்ளேயே உயிரை காப்பாத்தி வச்சவன், அப்ட்ரால் உன்கிட்ட என் உயிர் போயிருக்கும்னு நினைக்கிறியா ??
"என் உடம்பு மேல இருந்த ஆசை போதும் அத்தான் உங்கள ஒன்னும் இல்லாம ஆக்க... கண்ணு சொக்கும் போது கழுத்துல கத்தியை சொருக முடியாத அளவு நான் நீங்க நினைச்ச அந்த அப்ட்ரால் பொண்ணு இல்லை.. என்றவள் தன் கழுத்தில் கிடந்த செயின் டாலரை ரெண்டாக விரிக்க கூர் ஊசி ஒன்று அதில் இருந்தது ...
உங்க தொண்ட குழியில இந்த ஊசியை இறக்கி சத்தமே இல்லாம ஒத்த நொடியில கொன்னு போட்டுட்டு, என்கிட்ட அத்துமீற பார்த்தார் அதனால அவரை கொன்னுட்டேன்னு சொன்னா சட்டம் என் பக்கம் அத்தான் ... உயிர் பிச்சை நீங்க போடல அதை புரிஞ்சிக்கோங்க,சோ மன்னிப்பு கேட்க அவசியம் இல்லை என்று அவள் தோளை உலுக்க பல்லை நரநரத்தான் ...
நானும் உன்ன போட்டு தள்ள பத்து செகண்ட் ஆகி இருக்காதுடி, உன் கழுத்துல போட்ட தங்கக் கொடியை நீ என் மேல உட்கார்ந்து கண்ணு கிறங்குன சமயம் இறுக்கி இழுத்திருந்தா போய் சேர்ந்திருப்ப... படிக்க வந்தவ எவனையோ காதலிச்சு ஓடிப் போயிட்டான்னு, செத்த பொணத்தை தூக்கி எஸ்டேட்டில போட்டு குப்பையோட குப்பையா எரிச்சிருந்தா.. நீ செத்த தடையம் கூட போலீசுக்கு கிடைச்சிருக்காதுடி....
ஓஹோ அப்போ ஏன் விட்டீங்க?
உன்ன விட்டதுக்கு காரணம் நீ அனுப்பவிக்கிறதை நான் பார்க்கணும்டி.. நீங்க ஒவ்வொருத்தரும் நாய் போல சுத்த போறதை ரசிக்கணும்...." அவன் கண்ணில் இன்னும் எஞ்சி நின்றது வெறி அவன் கடந்த வந்த பாதைக்கு அத்தனை பேரும் அனுபவிக்கணும்... அதில் வேறுபாடு இல்லாது கொடுக்க நினைத்தான்....
போலி உலகம் அவனுக்கு யார் மீதும் நம்பிக்கையை கொடுக்க வில்லை... எதிரே நிற்கும் அவளும் அதில் சேர்த்தியே ..
தன் தேவை விருப்பங்களுக்கு ஏற்ப மாறும் மனநிலை கொண்ட மனித ஜந்துகளில் இவளும் ஒருத்தி தானே என்று அற்ப எண்ணம் இப்போதும் அயோக்கியாவுக்கு உண்டு ..
அவங்களுக்கு என்னெல்லாம் கிடைக்கப் போகுதோ அதுல உனக்கும் பாரபட்சம் இல்லாம கிடைக்கும் இன்னைக்கே மன்னிப்பு கேட்டுட்டேன்னா , மானம் போகாது வலி தாங்க முடியாம ஐயோ அம்மான்னு கதறி வந்து அன்னைக்கு விழுந்தேன்னு வை.. உன் மானம் போயிடும் சோ காதும் காதும் வச்ச மாதிரி நீயும் நானும் இருக்கும் போதே கால்ல விழுந்திடு பார்ப்போம் என்று தன் காலை தூக்கி அவள் முன்னால் அயோக்கியா காலை தன் கையால் விலக்கி விட்டவள்
அதான் சொல்லிட்டேனே அத்தான் , என்ன வேணுமோ எப்படி வேணுமோ செய்யுங்க... ஐயோ பாவம் பச்ச புள்ள வாழ்க்கையில எதையுமே அனுபவிக்கலையே பாவம் பொம்பள உடம்பையாவது அனுபவிச்சிட்டு போறாருன்னு ஒரு இரக்க குணத்துல தான் உங்களுக்கு பார்ட்னரா வந்தது .... உங்க வாழ்க்கையில நடந்ததுக்கு பாவப்பட முடியுமே தவிர அதற்கு விமோசனம் எல்லாம் பண்ண முடியாது... உங்க நியாயம் உங்களுக்கு என் நியாயம் எனக்கு ... அவன் கழுத்து புடைக்க அவளை முறைத்தான்...
சிலரிடம் அடங்கி போவது அழகு , சிலரிடம் அடங்காது போவது அழகு !!
நீங்க வேணும்னா , எனக்கு இந்த உலகத்துல யாருமே இல்லடி நீ மட்டுமாவது வேணும் ... என் கூட வந்துருன்னு கெஞ்சி கேட்டுக்கோங்க... அய்யோ பாவம் போனா போகட்டும்னு உங்களுக்கு வாழ்க்கை தந்து உங்க கூடவே வரேன் என்றதும் அயோக்கியா தன்னை மீறி ஹாஹா என சிரித்தவன்
"இப்படி எல்லாம் வேற உனக்கு நினைப்பு இருக்காடி.. இந்த உலகத்துல நான் என்ன தவிர நல்லாநோட் பண்ணிக்கோ,, என்ன தவற எவளையும், எவனையும் நம்ப மாட்டேன்... இந்த உலகம் முழுக்க போலி இதுல உன்ன மட்டுமா நம்பிட போறேன்.... அப்படி உன்கிட்ட என்னடி இருக்கு ... கெஞ்சி கூத்தாடி உன்ன கூட்டிட்டு போய் வாழ முட்டாளா நான் .... சும்மா போற முள்ளம்பன்னியை தூக்கி மடியில வச்சு ஜட்டி போட்டு விட நான் உன்ன போல லூசு இல்ல ....
"உங்கிட்ட என்ன இருக்கு அத்தான் மன்னிப்பு கேட்டு மண்டி போட்டு மடிப்பிச்சை கேட்க .. லவ் பண்றோமா என்ன ?இல்லையே பாவக் கணக்குக்கு நான் உடம்பை தந்தேன் , உங்க இச்சைக்கு நீங்க உடம்பை தந்தீங்க இதுவும் ஒருவித சேவைதான் அதை கடந்து போக ஐ நோ ... ஏன் உங்களுக்கு கடக்க முடியலையோ? என்று கேள்வியாக அதிரா அவனை புருவம் உயர்த்தி பார்க்க...
லவ்வா இருந்திருந்தா கடக்க முடியாம தடுமாறி இருக்கலாம் உன் மேல வந்தது காமம் உன்ன கடந்து போய் நாள் ஆகுது ...
"வெல் செட் அப்போ அவரவர் வேலையை போய் பார்ப்போம் ... என்று அதிரா அவனை தாண்டி சமையலறை போக .. அயோக்கியா பாவம் பார்க்க நினைத்தாலும் கத்தி கத்தியே அவன் பிபியை ஏற்றி விட்டுவிட்டு போய்விட
எவளை விட்டாலும் இவளை விட கூடாது கதற மாட்டியா, கலங்க மாட்டியா , அழ மாட்டியா , உடைய மாட்டியா அதையும் பார்போம்டி .... அத்தனை பேருக்கும் சாதாரண சட்டியில போட்டு வதக்கினா, வக்காளி உனக்கு மட்டும் எண்ணெய் சட்டியில போட்டு வரட்டி எடுக்கிறேன் என்று சாப்பாட்டை போட்டு உருண்டை பிடித்து தின்னும் அவளை எரிச்சலாக பார்த்து கொண்டு அயோக்கியா மேலே போக
"உசுரு போனா மசுரே போச்சுன்னு நெனைக்கிற ஆளுக்கிட்ட வந்து மோதிக்கிட்டு , போங்க சார் போங்க சார் அப்படி என்ன தான் பண்ணிடுறீங்கன்னு பார்கிறேன் என்று அதிரா போகும் அவனை உதட்டை சுளித்து முறைத்தாள்
பன்றிகளின் முன் முத்தை போடாதே
அன்பின் வலிமை தெரியாதோர் முன் அந்த அன்பை வழிய போய் கொட்டினால்
உதாசீனமே மிஞ்சும்...
ஹால் சோபாவில் தன் கணவனுக்கு மறுபடி மறுபடி போனை போட்டுக்கொண்டு காயத்ரிதேவி அமர்ந்திருந்தார் ஃபோன் ரிங் போனது எடுக்க ஆள் இல்லை
என்ன அத்தை , மாமாவுக்கா போன் போடுறீங்க என்று அதிரா அவர் பக்கத்தில் வந்து டொம் என உக்காந்தவள்... அவர் பட்டுச்சேலையில் தன் ஈரக் கையை துடைக்க..
ச்சை , தள்ளி போ அவ்வளவு காரியத்தையும் கெடுத்துட்டு என்கிட்டயே வந்து உட்காருகிறாயா? யார் நினைச்சாலும் என்னையும் அவரையும் உங்களால ஒன்னும் செய்ய முடியாது ...
அட போ அத்தை ஆசைப்பட்ட ஆட்டைய போட்டு கட்டுன உங்க புருஷனுக்கே இனி ஒன்னும் உங்கள வச்சு பண்ண முடியாது ... காயத்ரி அவளை நெற்றி சுருக்கிப்பார்க்க ..
ஒன்னுமே செய்யாத எங்களுக்கே இந்த கதின்னா... அத்தனையும் செஞ்சுட்டு கல்லுளி மங்கி மாதிரி சாவி கொத்தை இடுப்புல மாட்டிகிட்டு சுத்துன உனக்கும் , முழு ஆட்ட விழுங்கி ஏப்பம் விட்ட உன் புருஷனுக்கும் என்ன கதின்னு யோசிச்சு பாத்தியா?அச்சோ, யோசிச்சு பார்த்து இருக்கணும் அத்தை... பார்த்து இருந்தா ஒரு வேளை தப்பிச்சிருப்ப...
"என்னடி சொல்ற ..
"உலகத்திலேயே மிகப்பெரிய தண்டனை என்ன தெரியுமா இன்னும் கொஞ்சம் நாள்ல நம்ம சாகப் போறோம் என்கிற உண்மை தெரிஞ்சே அதுக்கு பிறகு ஒவ்வொரு நாளும் வாழ்ற வாழ்க்கை இருக்கு பார் அதுதான் மிகப்பெரிய தண்டனை ... புரியல... உனக்கு உன் மூத்த மகன் அந்த தண்டனையை தான் தந்திருக்கார்... எல்லாத்தையும் விவரமா சொன்னவ இதையும் விவரமா சொன்னா தானே உனக்கு புரியும் ..
கிட்டத்தட்ட ஐஞ்சு வருஷமா உன் உடம்புக்குள்ள ஸ்லோ பாய்சனை , உன் மகன் கிப்ட்டா கொடுத்துட்டு இருக்கான் காயத்ரி தேவி அதிர்ந்து பார்க்க
முதல்ல தலைவலி வரும் அதுக்கு பிறகு காது கொஞ்சம் மந்தமா கேட்கும்... அப்புறம் அடிக்கடி முதுகு தண்டு வலிக்கும்... கொஞ்ச நாள்ல கிட்னி அடி வாங்கும் , கிட்னிக்கு போனா லிவர் சேர்ந்தே இலவசமாக போயிடும்... சரி லிவருக்கு பார்க்கலாம்னு பார்த்தா ஹார்ட் துடிக்கிறது கொஞ்சம் கொஞ்சமா நிற்கும் ... நோய் எதிர்ப்பு சக்தி குறைஞ்சா என்ன ஆகும் ? காயத்திரி பேய் முழி முழித்தார்.... இப்போது எல்லாம் ரெண்டு முறை அழைத்தால் தான் காது கேட்கிறது இலவச இணைப்பு போல முட்டுவலி குறுக்குவலி வேறு
இல்லாத பொல்லாத நோயெல்லாம் வந்து உடம்புல ஏறும்... அழகு அழகுன்னு சொன்னியே, கேன்சர் வந்து உன் தலை முடி எல்லாம் மொட்டையாகி, அந்த ட்ரீட்மென்ட் செலவழிக்க காசு இல்லாம ஐயோ அத்தை நீ ஒவ்வொரு நாளும் நரக வேதனை படப்போறத நாங்க எல்லாம் எப்படி பாப்போம் என்று உச்சி கொட்ட ... காயத்ரி தேவி கண்கள் அதிர அவளை பார்த்துக் கொண்டிருக்க ...
முதல்ல இதே போல மாமா சாவாராம்... இரண்டாவது நீ சாவியாம்.. உன் புருஷன் பட போற பாட்டை நீ பக்கத்துலயே இருந்து பார்ப்பியாம் வேணும்னா, ஆறுமுகம் மாமாவுக்கு பிஏ ஒருத்தன் இருக்கானே அவனுக்கு போன் போட்டு கேளு .. கால் இழுத்துக்கிட்டு கிடக்கிறாரோ , இல்ல வாய் கோணி கிடக்குறாரோ கொடுத்த ஸ்லோ பாய்சன் இந்நேரம் வேலை செஞ்சிருக்கும் என்று அதிரா சிரித்துக்கொண்டே மாடிப்படியிஸ் இருந்து இறங்கி வரும் அயோக்கியவை எதிர்கொண்டு போக... இருவரும் எதிர் எதிரே நின்று கண்களை சுருக்கி பார்த்தவர்கள் முகத்தை திருப்பிக் கொண்டனர்..
"வேஷக்காரி என் ரூமுக்குள்ள வந்து எல்லாத்தையும் கண்டுபிடிச்சு வச்சிருக்கா.. இருக்குடி உனக்கு என்று அவன் முனங்கிக் கொண்டே போனான்..
அய்யய்யோ மாமா என்று காயத்ரி அலற .. அவன் காதில் இன்பமாக கேட்டது ..
ஆபீஸில் காலும் கையும் இழுத்துக் கொண்டு ஆறுமுகம் கிடந்தார் ..
பத்து நாளில் அரண்மனை , அரண்மனை சம்பந்தப்பட்ட அத்தனை சொத்துக்களும் ட்ரஸ்ட் க்கு கை மாறியது... திருவோடு ஏந்தும் நிலையில் நின்றனர் அத்தனை பேரும் ...
ரிதன்யா ரித்விக் இருவரும் தன் அண்ணன் முன் பாவமாக நிற்க...
யாருக்கோ பிறந்த உங்களுக்கு எல்லாம் கடமையை செய்யணும்னு எனக்கு அவசியமில்லை ... இது உன் பாஸ்போர்ட் பிடி என்று ரித்விக் முகத்தில் பாஸ்போர்ட்டை தூக்கி வீசியவன்
உன் தங்கச்சியை நீ பார்த்துக்கிட்டாலும் சரிதான் இல்ல தெருவுல விட்டுட்டு போனாலும் சரிதான், இந்த பொறுப்பு என்னோடது இல்ல ..
இல்லை அண்ணன் உன் முன்னாடி வந்து நின்னு உன்ன இனிமே சங்கட படுத்த மாட்டேன் உன்ன அண்ணன்னு கூப்பிடலாமா என்ற ரித்விக்குக்கு பதில் சொல்லாது கூலர்ஸ் எடுத்து மாட்டி கொண்ட அயோக்கியா அந்த இடத்தை விட்டு நகர...
சார் இந்த பொண்ண என்ன பண்றது என்று அதிராவை கை காட்ட..
இவங்களுக்கு எதுவோ அதுதான் அவளுக்கும் அரண்மனைக்கு விட்டு அத்தனை பேரையும் வெளியே போக சொல்லு.. அவளையும் தூக்கி
கிடாசு
நான் போக மாட்டேன் இது என்னோட வீடு , இது என் அரண்மனை என்று காயத்ரி அரண்மனை கதவை பிடித்துக் கொண்டு அலற கை கால் முடமாகிக் கிடந்த ஆறுமுகத்தை கருணையே இல்லாமல் தூக்கிக்கொண்டு நடுத்தெருவில் போட..
அத்தனை பேரும் சொல் வெயிலில் பாரபட்சம் இல்லாமல் வெளியே தூக்கி வீசப்பட .. அரண்மனை கதவு பூட்டப்பட்டது
தன் புதிய ஜகுவார் காரில் தோரணையாக ஏறி அவர்களை எல்லாம் சுற்றி ஒரு பார்வை பார்த்தவன்... தன் அருகே இருந்த அன்னையின் புகைப்படத்தை தடவியவன்
உன் சாவுக்கு காரணமான அத்தனை ரத்தத்தையும் பழி வாங்கிட்டேன்ம்மா .... ஹேப்பியா.. இத்தனை நாள் வேஷம் போட்டு ரசிச்ச நான் ... இனி வேஷம் போடாம ரசிக்க போறேன் என்று சிரிக்க அதிர்ஷ்டலட்சுமி முகமோ தன் மகன் வாங்கிய பழிக்கு மகிழாது.. என் பிள்ளை ஒத்தையில் நிக்குதே என்று கலங்கியதை அவன் அறியவில்லை ...