வேஷம் போடும் வேடா 26
Veda26

26 வேஷம் போடும் வேடா !!
கேட்ட உண்மைகள் அத்தனையும் ரித்விக் ரிதன்யா பேரதிர்ச்சியை உண்டாக்கியது..
உனக்கெப்படி இதெல்லாம் தெரியும் அதிரா ..
தெரியும் ..
"இன்னொன்னு சொல்லவா?
"என்ன
"என்ன பெத்தவ யாரு தெரியுமா ??
ம்ஹூம்
அந்த ராக்கம்மா,
ஹான்
"ம்ம் பாவத்தின் ரத்தத்தில பிறந்த நம்ம மூணு பேருக்கும் இந்த பாவத்துல பங்கு இருக்கு...
"அதோட என்ன பெத்தவ நெஞ்சு வலி வந்து சாகல , அவளை கொன்னது உன் அண்ணன்
"ஹான்
"முதல் பலி அங்கிருந்து அவர் ஆரம்பிச்சிட்டார்..
"இன்னொரு உண்மை சொல்லவா , அவருக்கே தெரியாத ஒன்னு அந்த பொம்பளையை கொன்னதை நான் பார்த்துட்டேன்
"என்ன சொல்ற அதிரா ??
"ம்ம் வீட்டுல யாருமே இல்லைன்னு நெனைச்சு.. லெட்சுமி அத்தை செத்த அதே நாள்... உன் அண்ணன் அவளை சங்குல மிதிச்சு துடிக்க துடிக்க கொன்னதை கட்டிலுக்கு அடியில காணாம போன கம்மலை தேடிட்டு இருந்த நான் பார்த்துட்டேன்....
முதல் பலி நீ வரிசையாக அனுப்பி விடுறேன் என்று தன் தாயை துடிக்க துடிக்க கொன்ற அயோக்கியாவை அதிரா அதிர்ந்து போய் பார்த்தாள் ....
அவன் தாய்க்காக அவன் பழி தீர்க்க துடிப்பது நியாயம் எனில் தன் தாயின் உண்மை முகம் எது என தெரியாது தன் தாயை கொன்று விட்டான் என அவனை பழிவாங்க துடித்ததில் அதிரா தவறு எதுவும் இல்லையே ...
இவ்வளவு தான் அதிர்ச்சியா இன்னும் இருக்கா என்று ரித்து கேட்க
இருக்கே, இந்த வீட்டுக்குள்ள நான் வந்தது எதுக்கு தெரியுமா என் அம்மாவை கொன்ன அயோக்கியாவை கொல்ல?
ஹான் இருவரும் அதிர்ந்து பார்க்க
அந்த உண்மை அவருக்கும் தெரியும் ... அவருக்கு உண்மை தெரிஞ்சு போச்சுன்னு எனக்கும் தெரிங்கும்ங்கிறதும் அவருக்கு தெரியும்
"தெரிஞ்சும் உன்ன எதுவும் செய்யாம வி்ட்டு வச்சிருக்காரா
"அவர் பட்டியல்ல நான் கடைசி இடம் உங்களை எல்லாம் முடிச்சுட்டு ஆளு என்கிட்ட வரும் ... என்று அதிரா மீதி ஐஸ்கிரீமை தின்ன ..
"அப்போ அவரை கொல்ல போறியா ?
"ம்ஹும் இதெல்லாம் உண்மை தெரியும் முன்ன நான் எடுத்த முடிவு... அவரோட கண்ணுல ஆயிரம் வேஷம் இருந்தது ஆனா ஒரு நாள் கூட பொய் இல்லை... அது என்ன தடுமாற வச்சது, எங்கேயோ எதுவோ தப்பா இருப்பது போல தேட ஆரம்பிச்சேன்.. அப்போதான் அந்த பொம்பள பேசி வச்சிருந்த டேப்ரெக்கார்ட் என் கையில கிடைச்சது எப்போ அதை கேட்டேனோ, அப்பவே புரிஞ்சுது அவர் கொன்னதுல தப்பே இல்லைன்னு.. ஒரு குடும்பத்தை கெடுத்த அவளுக்கு இதுதான் கதி ..
அவருக்கு நியாயப்படி இந்த உலகத்துல கிடைக்க வேண்டிய எதுவும் கிடைத்ததில்லை.. இந்த உலகத்தோட வலியை மட்டுமே அனுபவிச்சவருக்கு சிலதை என்னால் மட்டும் தான் கொடுக்க முடியும்னு அவருக்கு காட்டி இருக்கேன்... அது என்னன்னு அவருக்கு தெரியும், கொடுத்த எனக்கும் தெரியும்... ஆனா இதைத்தான் கொடுத்தேன்னு ஒரு நாளும் நான் காட்டிக்க போறது இல்ல, நான் இதைத்தான் உன்கிட்ட வாங்கிகிட்டேன்னு அவரும் என்கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்லை... இது எங்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் விருப்பப்பட்டு கொடுத்திருக்கேன் அவர் விரும்பி வாங்கி இருக்கார்... அது என்னென்னு எங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்ற அதிரா குரல் சட்டென ஒரு நொடி தடுமாறி..
ம்க்கும் தன்னை சரி செய்து கொண்டவள்
"என்ன பெத்தவ செஞ்ச பாவத்துக்கும், நான் அவருக்கு கொலை செய்யறதுக்காக வந்த பாவத்துக்கும் என்ன பழி வாங்கணும்னு நினைச்சாருன்னா தாராளமா விருப்பம் போல பண்ணட்டும்
"உனக்கு பயமே இல்லயா அதிரா?
"என்ன செஞ்சிடுவார்னு தான் பார்ப்போமே?
எல்லாம் ஓகேதான் ஆனா எங்க ரெண்டு பேருக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையே எங்களை ஏன் டார்கெட் பண்றார்...என்று ரித்விக் கேட்க
"என்ன சம்மந்தம் இல்லை , என்னைக்காவது ஒரு நாள் நமக்கு கிடைக்கிற இந்த சாப்பாடு அண்ணனுக்கு கிடைச்சதான்னு ரெண்டு பேரும் பார்த்து இருக்கீங்களா? இல்லை என்று இருவரும் தலையாட்ட
"நமக்கு மட்டும் இவ்வளவு சௌகரியமான வாழ்க்கை கிடைக்கு, அவருக்கு ஏன் திண்ணையில படுக்கைன்னு பார்த்திருக்கீங்களா
இல்ல ..
ம்ம் , அவர் இன்னைக்கு வரைக்கும் உங்களுக்காக யோசிக்கிறார் , ஆனா நீங்க ஒரு நாள் கூட அவருக்காக யோசித்தது இல்லை... அந்த கோபம் தான் உங்களையும் கொஞ்சம் சீண்டி பாக்குறது..
"இந்த ஜமீன் அத்தனையும் இன்னும் கொஞ்ச நாள்ல ட்ரெஸ்டுக்கு போயிடும் ... அதான் சொத்தை தன் பேர்ல வாங்க முயற்சி செய்து பார்தது ஓஞ்சவர் அவரை கொல்ல உன் அப்பா ட்ரை பண்றார்.. அட்லீஸ்ட் இந்த சொத்துல வாழவாவது செய்யலாம்ல .. இந்த சொத்து ட்ரெஸ்ட் போனா அத்தனை பேரும் வெளிய போகணும்.. அதுக்கு பிறகு நயா பைசா கிடையாது.. நீங்க ரெண்டு பேரும் நடு ரோட்ல தான் நிக்கணும் ... அவருக்கு பிரச்சனை இல்லை , அவர் தன்னோட சொந்த உழைப்பில் தனக்கான எல்லாத்தையும் தேடிகிட்டார்.. ஆனா நீங்க ரெண்டு பேரும் வாழ்ந்துக்க மாட்டீங்க ... உங்க ரெண்டு பேருக்கும் இந்த உலகம் எதுன்னு காட்டி கொடுத்திருக்கார்.. இப்போ உங்களை இந்த ஜமீன விட்டு விரட்டி விட்டாலும், உங்களால் வாழ முடியும் ... அவர் உங்களை நேசிச்சாரோ இல்லையோ, ஆனா உங்களை வெறுக்கல... அதனாலதான் இந்த ஜமீன் கையை விட்டு போன பிறகு , நீங்க நடுரோட்டில நின்னுட கூடாதுன்னு உங்கள பத்தி யோசிச்சு உங்களுக்காக இது எல்லாம் செஞ்சிருக்கார்..பணம் தான் இத்தனைக்கும் காரணம்.. சோ அந்த பணம் உங்களையும் கெடுத்திட கூடாதுன்னு தான் இத்தனை அக்னி பரிச்சை ...
எல்லாம் தெரிஞ்ச நீ ஏன் அண்ணன் கிட்ட பேச கூடாது ... உங்கள பத்தி தெரியாம தான் உங்களை கொல்ல இந்த வீட்டுக்குள்ள வந்துட்டேன்... இப்ப எல்லாம் எனக்கு தெரியும் அப்படின்னு அண்ணன் கிட்ட சொன்னா அவர் உன்னை மன்னிச்சிடுவார்ல .
"ஹாஹா, நான் என்ன தப்பு செஞ்சேன் அவர்கிட்ட மன்னிப்பு கேட்க .. இல்ல அவர் என்னை மன்னிக்க எப்படி அவர் அவர் அம்மாவுக்காக வஞ்சம் தீர்க்கணும்னு நினைச்சாரோ... அதேபோல நானும் என் அம்மாவுக்காக அவரை பழிவாங்க நினைச்சேன் ..ஆனா தப்பு எல்லாம் அந்த பொம்பள மேல, அதனால நான் அமைதியாகிட்டேன் ... சோ என் மேல எந்த தப்பும் இல்லையே .. நான் அவர்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை அவர் பண்றது எதையும் என்னால ஃபேஸ் பண்ண முடியும், அவருக்கு பயந்தெல்லாம் ஓட முடியாது என்று தோளை உலுக்கி கொண்டாள்... இருவரும் இடிந்து போய் தோட்டத்து பெஞ்சில் அமர..
சில அடி தொலைவில் நின்றாள் வைஷ்ணவி..அவள் உடலில் மெல்லிய நடுக்கத்தோடு மரத்தில் சாய்ந்திருக்க... அவள் பக்கத்தில் வந்த அதிர
இந்த பாவத்துல எனக்கென்ன பங்குன்னு கேக்குறியா வைசு அக்கா..
அவள் இல்லை என்று தலையாட்டிய வைசு அதிரா கையைப் பிடித்துக் கொண்டு..
"அப்பா தொழில்ல நிறைய பிராப்ளம் ஆறுமுகத்துக்கிட்ட வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார் வட்டிக்கு பணத்துக்கு பதிலா உன் பொண்ணை,. என் மூத்த மகனை காதலிக்கிற மாதிரி கொஞ்ச நாள் நடிக்க சொல்லு போதும் அவளை வச்சி சொத்தை என் பேர்ல மாத்திப்பேன் குடி, பொண்ணு சொக்கு எதுக்கும் மயங்க மாட்டைக்கிறான் காதலுக்கு விழாத ஆம்பள இருக்க மாட்டான் காதலை வச்சிதான் அவனை சாய்க்கணும்னு , எங்க அப்பாவ வச்சு என்ன சரி கட்டிட்டாங்க... நானும் அப்பா என் கால்ல விழவும் வேற வழி இல்லாம அயோக்கியாவை லவ் பண்ற மாதிரி ஏமாத்த தான் அவர் வாழ்க்கை குள்ள வந்தேன் அதிரா
"ம்ம் சொல்லுங்க அக்கா
"ஆனா, அவர் தனியா நின்ன கோலம் என்ன சத்தியமா உருக வெச்சுடுச்சு... உண்மையா லவ் பண்ண தொடங்கிட்டேன்..
போதும் இந்த உண்மையை மட்டும் ரித்விக் அத்தானுக்கு சொன்னா என்ன நடக்கும் தெரியுமா?
ம்ம்
ஏற்கனவே என் அண்ணனுக்கு பாத்தியப்பட்ட உன்ன ஏமாற்றி எடுத்துடோம்னு ரித்விக் அத்தான் குற்ற உணர்ச்சியில இருக்கார் .. தான் பொண்டாட்டி அண்ணனை காதலிச்சவங்குற உண்மை வருத்தத்தை மட்டும்தான் கொடுத்து இருக்கு... ஆனா தன் அண்ணனை ஏமாத்த காதலிக்கிற மாதிரி நடிச்சவங்குற உண்மை தெரிஞ்சா... மொத்தமா உடைஞ்சு போவார்...நீங்க ஏமாத்துக்காரி ஆகிடுவீங்க,. மொத்தமா உங்க ரெண்டு பேருக்கு இடையில விழப்போற பிளவு சரி செய்யப்படாமலேயே போயிடலாம்.. அதனாலதான் இதை அங்க சொல்லாம, இங்க சொல்றேன் இப்போதைக்கு இந்த உண்மையை அத்தான் கிட்ட சொல்லாதீங்க சொன்னீங்கன்னா கீழ் லோகத்துல இல்ல மேலோகத்தில் கூட ரெண்டு பேரும் சேர்ந்து வாழ முடியாது என்று கண்ணை சிமிட்டி விட்டு அதிரா போனாள் ..
ஆக!! ஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் ஒப்பனையோடு வாழ்ந்து இருக்கிறார்கள்.. அவனும் அத்தனை பேருக்கும் தகுந்தாற்போல் முகமூடியை மாற்றி மாற்றி வேஷம் போட்டு அவர்கள் வேஷத்தை எல்லாம் கலைத்துக் கொண்டிருக்கிறான்
பழிக்குப் பழி நய வஞ்சகத்துக்கு நயவஞ்சகம்... நடிப்புக்கு நடிப்பு இது தானே சரியாக இருக்கும் அன்று அவர்கள் நல்லவர்களாக நடித்தார்கள்... அன்று அவன் நல்லவனாக நடித்து அத்தனை பேரையும் கூறுகெட்டி போட்டுக் கொண்டிருக்கிறான் அவர்கள் வாழவேண்டும் என்று தானே அவனை வாழ விடாது ... துரத்தி துரத்தி அடித்தார்கள் இன்று அததனை பேர் நிம்மதியையும் கெடுத்து விட்டான் அவ்வளவே..
அவர்கள் செய்தது நியாயம் எனில் அவன் செய்வதும் நியாயமே!!