வேஷம் போடும் வேடா 25
Veda25

25 வேஷம் போடும் வேடா !!
நான் சத்தம் போட மாட்டேன் என் பிள்ளையை விட்டிருங்க...
அது உன் கையில இருக்கு ம்ஹூம் உன் சாவுல இருக்கு என்ற காயத்ரி கயிறை கொண்டு வந்து அதிர்ஷ்ட லட்சுமி கழுத்தில் போட ..
ம்மா தடுமாறி தரையில் விழுந்தார் ... ஆறுமுகம் ஒரு பக்கத்து கயிறை இழுக்க... காயத்ரி இன்னொரு பக்க கயிறை இழுக்க
ஹக் கழுத்தில் நடுவே கயிறு மாட்டபட்ட அதிர்ஷ்ட லட்சுமி வலியில் துடித்து காலால் தரையில் அடிக்க ராக்கம்மா ஓடி வந்து அவர் கால் மீது ஏறி நின்று கொள்ள
ஹக் ஹக் ஹக் என்று துடித்தவர் நீலக்கண்கள் சிவந்து போய் தன் மகனை விடாது பார்த்தது வாயில் விரல் வைத்து சப்பி கொண்டு உட்கார்ந்திருந்த பிள்ளையின் விழிகள் தன் தாயின் விழியோடு கலக்க அவன் நீல கண்களும் சிவப்பு நிறமாக மாற..
ஹக்இஇஇஇஇஇ தலை வெட்டப்பட்ட கோழியாக தரையில் துடித்து துடித்து தன் கையால் மூவரின் காலையும் மாறி மாறி பிடித்து தன்னை விடுமாறு கடைசியாக கெஞ்சிய அவர் கையில் ஓங்கி மிதி விழ மூன்று அரக்க ஜென்மங்களும் விடவில்லை...
பண ஆசை, உடல் ஆசை , நில ஆசை , தான் மட்டுமே வாழ வேண்டும் என்ற பேராசை... அவர்கள் மூவர் கண்ணையும் மறைக்க..
கண்கள் நிலை குத்தி தன் மகனைப் பார்த்துக் கொண்டே அந்த ஜீவன் போனது ...
அம்மாஆஆஆஆஆஆஆஆ என்று தன்னை மீறி கத்தி அழுதவன் முதல் அம்மா என்ற அழைப்பை கேட்க அவன் தாய் உயிரோடு இல்லை
துள்ள துடிக்க சாகும் தன் தாய்க்கு என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் வெறித்த கண்ணோடு பார்த்துக் கொண்டே இருந்தான் அவன் கண்ணில் கண்ணீர் மட்டும் வந்தது .. நடப்பது கொலை என்று அந்த சிறு பாலகனுக்கு தெரியவில்லை... ஆனால் ரத்த பாசமல்லவா தானாக கண்கள் கண்ணீரை வடித்தது...
மூவருமாக சேர்ந்து உயிரற்ற லெட்சுமி உடலை அவர் அறையில் உள்ள உத்திரத்தில் தூக்கில் மாட்ட...
அய்யோ என் லெட்சுமி என்று காலையில் நெஞ்சில் அடித்துக் கொண்டு ஆறுமுகம் கதறி அழ ஆரம்பித்தார் ...
அத்தனை பேரும் ஓடி வந்து பார்க்க உத்திரத்தில் அதிர்ஷ்ட லட்சுமி உடல் தொங்கிக் கொண்டிருந்தது
"அவ தப்பா இருந்தபோது கூட அவளை நான் ஒரு நாளும் விட்டுக் கொடுக்கலயே... அதையே மனசுக்குள்ள வச்சு வச்சு புழுங்கி மனநிம்மதி இல்லாம போய் சேந்துட்டாளே ,,
அய்யோ மாமா , இப்போ பச்சை குழந்தையை வச்சிக்கிட்டு நீங்க என்ன செய்வீங்கன்னு தெரியலையே கடவுளே என்று இருவரும் மாறி மாறி நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ
இதோ நாற்பது நாள் ஆகி போனது ...
நீ ஏன்ப்பா தம்பி , தப்பு பண்ணின மாதிரி ஒழுக்கம் கெட்ட அவளுக்காக கிடந்து வருத்தப்பட்டுக்கிட்டு இருக்க.. இதோ இருக்காளே என் புருஷனுக்கு தங்கச்சி அவள கல்யாணம் பண்ணிக்கோ.. சின்ன பிள்ளைய வச்சுக்கிட்டு ஒத்தையா என்ன செய்வ என்று ராக்கம்மா நேரம் பார்த்து கூற
முடியவே முடியாது அவ வாழ்ந்த இடத்துல வேற யாருக்கும் கொடுக்க மாட்டேன்
"எய்யா இந்த ஜமீன் செழிச்சாதான ஊர் செழிக்கும் எவளோ வந்து உன் பிள்ளைக்கு சித்தி ஆகிறதுக்கு இவளே வந்துட்டு போகட்டும் ..
"மாமாவை தொல்லை பண்ணாதீங்க அவருக்கு எப்போ சம்மதமோ அப்போ நடக்கட்டும் என்று அவள் கொணட்ட..
"வேண்டாம் வேண்டாம் என்று அவர் கொணட்டி ஊரே காயத்திரியை பிடித்து கட்டி வைக்க ... ஜமீன் இளவரசியாக காயத்திரி உள்ளே வந்தாள் ...
உண்மையை விட போலிகள் எப்போதும் பளபளப்பாக தான் தெரியும் ... அப்படியே இவர்களும்...
போட்ட வேஷத்தை இருவரும் கலைக்க விரும்பவில்லை... கலைத்தால் தங்கள் குட்டு வெளியே வந்து விடும் என்று தெரியுமே நல்லவர்களாகவே தொடர்ந்து நடிக்க
ஜமீன் வக்கீல வந்து நின்றார் பேராசை கொண்ட அவர்கள் தலையில் இடியாக விழுந்தது ஒரு செய்தி இன்னும் சிறிது நாட்களில் அயோக்கியவையும் ஏதாவது தண்ணி தொட்டியில் தூக்கி போட்டு கொன்று விட வேண்டும் என்று நினைத்த தம்பதிகளுக்கு அந்த இடி பேரிடிதான்
"என்ன சொல்றீஙக இந்த சொத்து எனக்கு வராதா??ஆறுமுகன் அதிர்ந்தார்
"ம்ஹும் ஜமீன் சொத்து ரத்த சம்மநத்தமான அயோக்கியாவுக்கு மட்டும்தான் போகும்.. நீங்க பயன்படுத்தலாம் பண்படுத்தலாம், ஆனா இதுல ஒரு செங்கலை கூட அசைக்க முடியாது "மணலில் விளையாடி கொண்டிருந்த அயோக்கியா உதட்டை பிதுக்கினான் ....
"அப்போ இந்த சொத்து "
"இதுக்கு அதிபதி அயோக்கியா மட்டும் தான்
"ஓஓஓ அவனுக்கு எதாவது ஆனா என்று காயத்திரி
ஆர்வமாக கேட்க
"18 வயசு வரை அவனை பாதுக்காக்க வேண்டியது உங்க பொறுப்பு
ஏன்
"அவன் உயிர்க்கு எதாவது ஆனா, சொத்து அவங்க தாத்தா பேர்ல இருக்கிற ட்ரெஸ்டுக்கு போயிடும்
என்ன ???இருவரும் அதிர்ந்து விட்டனர்
"ம்ம் அயோக்கியா மேஜர் ஆகி ஒருவேளை மனசு ஒத்து உங்களுக்கோ, உங்க பிள்ளைகளுக்கோ சொத்தை தந்தா உண்டு ... அவர் ஆசைப்படி இந்த சொத்தை என்ன வேணும்னாலும் பண்ணலாம் அதுக்கு சகல உரிமையும் கொண்டது நம்ம அயோக்கியா மட்டும் தான் ..."
இதுக்கு மேல கேட்க தெம்பு இல்லாது காயத்திரி கணவனை பார்க்க அவருக்கே மண்டை காய்ந்து போனது சுற்றி சுற்றி பணம் இருக்க, எதையும் ஆசை தீர பயன்படுத்த முடியாது போனது ...
அயோக்கியாவின் உயிர் அங்கே தப்பித்தது ... வழி இல்லை காயத்ரி தேவி போலி தாயாக நடிக்க வேண்டியது நிலை
பசிக்குது என்று நாலு வயது அயோக்கியா தட்டை தூக்கி கொண்டு வந்து நிற்பான்..
ஐயய்யோ வீட்டுல சாப்பாடு எல்லாம் முடிஞ்சு போச்சே, நாய்க்கு போட கொஞ்சம் சோறு இருக்கு அது வேணும்னா தரவா என்று நாய்க்கு போடும் சோத்தை எடுத்து அயோக்கியாவிற்கு போடுவார்..
உள்ள தம்பிக்குதான் இடம் இருக்கு.. நீ இந்த திண்ணையில படுத்துக்கோ" என்று காயத்ரி திண்ணையில் அவனுக்கு இடம் கொடுக்க.... கோணி பையை மூடிக்கொண்டு திண்ணையில் அனாதை பிள்ளை போல படுத்து கிடப்பான்..
மூன்று வேளை உணவு கிடைத்தது இல்லை... நல்ல நித்திரையில்லை ஏற்காட்டு மான்ஸ்போர்ட் பள்ளியில் காயத்திரியில் மகன் ரித்விக் சேர்க்கப்பட்டான் ... இவனுக்கும் பள்ளிக்குப் போக ஆசை .. தானாக ஒரு பை, உடைந்த ஸ்லைட் குச்சியை எடுத்துக்கொண்டு அரசு பள்ளியில் போய் நின்றவன்
நான் படிக்க வந்து இருக்கேன் என்றவன் அவனே சேர்ந்து அரசு பள்ளியில் படித்தான்
நான் என் சொந்த பிள்ளை போல பார்க்க நினைக்கிறேன் அவன் ஒட்டவே மாட்டைக்கிறான் எதாவது சொன்னா அடம் பிடிச்சு அழுறான், நானும் அவன் போக்கிலேயே விட்டுட்டேன்... மாற்றான் தாய் கொடுமை படுத்துறான்னு ஆகிடுமே.. என் புள்ளைங்களை விட ஒரு படி மேல அவனை பார்கிறேன் என் அன்பு புரியலையே என்று காயத்திரி வருவோர் போவோரிடம் அழுது அழுது நடிக்க ..
வளர வளர புரியும் என்று அவளுக்கு ஆறுதல் சொல்லும் அளவு நடிப்பு நடித்தார்..
ஏனோ தெரியவில்லை எப்போதும் எரிச்சலாய் அவனை பார்க்கும் தகப்பனை பிடிக்கவில்லை... அன்பாய் பேசும் காயத்ரியின் பேச்சு அவனுக்கு எப்போதும் ஒரு ஒட்டுதல் இருந்தது இல்லை..
அவர் உதடு தேனாக ஒழுகினாலும் கண்களில் ஒரு கள்ளத்தனம் எப்போதும் அவனை பக்கத்தில் சேரவிடவில்லை .. அரண்மனை கன்றுக்குட்டி போல அந்த வீட்டில் சகல உரிமையோடு ரித்விக் சுத்தி வந்தான்... தங்க பஸ்பம் தின்று வளர்ந்தான் .. இவனுக்கு ஒரு வேளை உணவு கூட கிடைத்தது இல்லை செல்வ செழிப்பாக அவர்கள் பிள்ளைகள் வளர்ந்தார்கள் ... இவன் ஒதுங்க இடமில்லாமல் கிடந்தான்.. அவன் ஒரே ஆறுதல் தன் நீலக்கண் தாயின் புகைப்படம் தான் அதை மார்போடு அணைத்து கொண்டே சுற்றுவான்..,
10 வயதிலேயே மனிதர்களை முகம் பார்த்து பிரிக்க பக்குவப்பட்டான் ... காலையில் பள்ளிக்குப் போவான் மதியம் அங்கே கொடுக்கப்படும் உணவுதான் அவன் சாப்பிடும் ஒரு வேளை உணவு
அயோக்கியா வளர ஆரம்பிக்கிறான்... இனி விவரம் தெரிந்து விடும் அவன் பதினெட்டு வயதில் ஏமாற்றி சொத்தை அடைய வேண்டும் இல்லை எப்போதும் இது எதுவும் கிடக்காது என பயந்து காயத்ரி அவனை நன்றாக கவனித்துக் கொள்ள நினைக்க அவனோ ஒதுங்கி கொண்டான்
சாப்பிடு அயோக்கியா
வேண்டாம் சித்தி எனக்கு பசிக்கல நான் சாப்பிட்டு வந்துட்டேன் என்று மறுத்துவிட்டான்
10 வயதிலேயே காலையில் பள்ளிக்குச் செல்வான் மாலை தேயிலைத் தோட்டத்தில் போய் தேயிலை பறித்து அந்த பிஞ்சு கைகள் சிவந்து போகும் புண்ணாய் இருக்கும் அந்த கையில் பணத்தை தூக்கிக் கொண்டு வந்து நிற்பான் ....
ஏனோ தன் தாய் வாழ்ந்த இந்த வீட்டை விட்டு மட்டும் போக அவனுக்கு மனமில்லை... இங்கே தன் தாயின் சுவாசம் சுற்றி வருவது போல உணர்வு அது ஒன்று தான் இங்கே இருக்க காரணம் ...
18 வயது ஆனது
மாமா அவனை எப்படியாவது நம்ம இழுப்புக்கு இழுக்கணும் என்ன பண்ண என்று காயத்திரி கேட்க குவாட்டர் பாட்டிலை அவர் கையில் கொடுத்து
உடம்பு வலிக்கு இதை குடின்னு கொடு.. குடிகாரன் ஆனா அவன் அசந்த நேரம் நாம நெனைச்சது செய்யலாம்...
காயத்திரி நயமாக பேசி திரவத்தை அவன் கையில் கொடுக்க
தேவைன்னா என் காசுல நானே வாங்கி குடிச்சிக்கிறேன் சித்தி என்று மறுத்தவனை எரிச்சலாக பார்த்தவர்.. அடுத்து பெண்கள் சுகத்தை கொடுத்து வளைக்க பார்க்க தாய் ஏமாந்த மாதிரி ஏமாறுவானா என்ன சித்து வேலை செல்லாது போனது ...உலகத்தின் நயவஞ்சக வலைக்கு தாய் மாட்டி கொண்டார் ஆனால் அவன் துல்லியமாக தப்பி ஓடும் கலை பெற்றான் ...
இருபது வயதில் அதே தேயிலை தோட்டத்தில் மேனேஜர் ஆனான் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்து வைக்க ஆரம்பித்தான் ... தனக்காக யாரும் இல்லை என்பதை புரிந்து கொண்டவன் அவனுக்காக அவன் இருக்கிறான் என்பதை மட்டும் மனதில் நிறுத்திக் கொண்டு தனக்கானதை சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தான்..ஆனால் ஒரு கேள்வி ??
என் அம்மாவுக்கு என்ன நடந்தது, ஆயிரம் பேர் அவளை ஒழுக்கம் இல்லாதவள் என்ற போதிலும் அவனுக்கு அதில் உடன்பாடு இல்லை .. கருப்பாக இருக்கும் தன் தாயின் கண்கள் கவிதை பேசும் , உதடு கூட கருப்பு நிறத்தில் , களையாக இருக்கும் தாய் ஏனோ அவன் கண்ணுக்கு தேவதை போலத்தான் தெரிந்தாள்
தம்பி அரண்மனை தோட்டக்காரன் சாகுறதுக்கு கிடக்கிறான் சாகறதுக்கு முன்னாடி உங்கள பாக்கணும்னு கூப்பிட்டு விட்டிருக்கான் கொஞ்சம் வந்து என்னன்னு பாருங்களேன்... என்று அயோக்கியாவை அழைக்க
என்ன விஷயம் என்று பார்ப்பதற்காக அயோக்கியா அங்கே செல்ல ... தோட்டக்காரன் வாயிலாக தான் உண்மை அத்தனையும் அறிந்தான் ...
மூணு பேரும் உங்க அம்மாவை கொன்னதை என் கண்ணால பார்த்தேன் , எங்க உண்மையை சொன்னா நானும் மாட்டிப்பேன்னு பயந்து வாயை திறக்கல ஐயா.. நான் செஞ்ச பாவத்துக்கு அத்தனையும் அனுபவிச்சிட்டேன்.. பணத்துக்கு ஆசைப்பட்டு உங்க அம்மா மேல களங்கத்தை உண்டாக்கிட்டேன்.. ஆனா உங்க அம்மா உத்தமி, சாமி மாதிரி... எல்லாருமா சேர்ந்து நயவஞ்சகமா நடிச்சு உங்க அம்மாவ கொன்னு உத்திரத்துல தொங்க போட்டுட்டாங்க ஐயா... அந்தக் கண்ணகி சாபம் தானோ என்னமோ என் குடும்பத்துல நிம்மதியே இல்ல ... சாகும்போது இதையெல்லாம் உங்க கிட்ட சொல்லணும்னு நினைச்சுதான் உங்களை கூப்பிட்டு விட்டேன் ... அவங்க யாரையும் நம்பிடாதீங்க அய்யா " என்று சொல்லிக்கொண்டே அவர் கண்ணை மூடிவிட..
ஏற்கனவே ஏதோ தவறு இந்த ஜமீனில் இருப்பதாக யோசித்தவனுக்கு தொண்டை நரம்பு புடைத்துக் கொண்டு வந்தது.. வேடன் ரத்த வேட்டையை தொடங்கி விட்டான்..
அவர்கள் ஆசையை அடைய வேஷம் போடலாம்..
இவன் பழி தீர்க்க வேஷம் போட்டது தவறா ??