வேஷம் போடும் வேடா 28

Veda28

வேஷம் போடும் வேடா 28

28 வேஷம் போடும் வேடா !

ரித்விக் நடந்த சம்பவங்களை ஜீரணித்துக் கொண்டு நிமிர்வதற்கு முன் எல்லாம் நடந்து முடிந்து விட்டது...

சார் சார் எங்க சர்டிபிகேட் எல்லாம் உள்ள இருக்கு ஒரு அரை மணி நேரம் டைம் தாங்க சார் அதையாவது எடுத்துக்கிறோம் என்று அதிகாரிகள் முன் பாவமாக கெஞ்சிக் கொண்டிருந்தான் ரித்திக்

பெட்டி படுக்கை அத்தனையும் உள்ளே , நபர்கள் மட்டும் வெளியே அடுத்த வேளை  உணவுக்கு கூட அவர்கள் வியர்வை சிந்திதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் ...

"சாரி சார் உங்க டைம் முடிஞ்சு போச்சு 

"என்ன சார் மனசாட்சி இல்லாம பேசுறீங்க,  இப்படி திடுதிப்புன்னு வந்து எல்லாரையும் தூக்கி வெளியே கிடாசினா நாங்க என்ன சார் செய்வோம், முன்னமே  எங்களுக்கு இன்பார்ம் பண்றது தானே முறை

"இன்பார்ம் பண்ணியாச்சு சார், அயோக்கியா சார்கிட்ட பத்து நாளைக்கு முன்னாடியே நாங்க இன்னைக்கு வந்து எல்லாத்தையும் கஸ்டிடி எடுத்துக்குவோம்னு சொல்லி விட்டாச்சே...  சாரும் ஓகே சொன்ன பிறகுதான் நாங்க வந்தோம்"  ரித்விக் நெற்றியைத் தடவியவன் 

சார் ஒரு பத்து நிமிஷமாவது உள்ள போயிட்டு வர பெர்மிஷன் கொடுங்க..  வேற எதுவும் எடுக்கல நாங்க படிச்சு வாங்குன சர்டிபிகேட் மட்டும் தான்..

சாரி சார் இனி இந்த அரண்மனையில் இருந்து ஏதாவது எடுக்கணும்னா கோட் , கேஸ் மூலமாதான் எடுக்க முடியும்.. இல்ல,  அயோக்கியா சாரோட அனுமதி வாங்கணும் வேணும்னா சார்கிட்ட அனுமதி வாங்கிட்டு வாங்க கதவை திறக்கிறோம் என்று வில்பூட்டாக அவர்கள் நிற்க...  ரித்விக் தலையில் கை வைத்து அரண்மனை வாசலில் உட்கார்ந்து விட்டான்

வீல் சேரில் கைகால் இழுத்த ஆறுமுகத்தை வைத்து கொண்டு நின்ற காயத்திரிக்கு வியர்த்து வடிந்தது... 

புருசன் திடமாக இருந்தால் பாத்துக்கலாம் என்று தைரியம் வைத்திருக்கும் , தனியா இந்த சீக்காளி வச்சிட்டு என்ன பண்ண என்று யோசித்தவர் 

நான் ஏன் தனியா கஷ்டபடணும் ரித்விக்கை பிடிச்சிப்போம் என்று மகனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்...

"ரித்விக் அம்மா சொல்றத கேளுடா , நான் இதை எல்லாம் சத்தியமா பண்ணல , எல்லாரும் வேணும்னே என் மேல பழி போடுறாங்க" என்று தன் தோளை வந்து தொட்ட காயத்ரியின் கையை வெடுக்கென்று தட்டி விட்டவன்...

"ஒரு தாயைப் பார்த்து நான் இந்த கேள்வியை கேட்கக்கூடாது,  ஆனா கேட்கிறேன்.. சீசீ, நீ எல்லாம் ஒரு பொம்பளையா??  உன்ன பாக்கவே எனக்கு அருவருப்பா இருக்கு , தயவுசெஞ்சு கிடைத்த தொடாத ... 

"ரித்விக், நானும் அப்பாவும் எங்கடா போவோம்

"செத்துப் போங்க இல்ல எங்கேயாவது போங்க ஆனா தயவு செஞ்சு என்னோட அம்மா அப்பான்னு  மட்டும் சொல்லாதீங்க நான் செஞ்ச பெரிய பாவமே உன்னோட வயித்துல பிறந்ததாதான் இருக்கும் இந்த பாவத்துக்கு என்ன பிராயச்சித்தம் பண்ண போறேன்னு தெரியல...

"அம்மாடி ரிதன்யா என்று இவனிடம் பலிக்காது காயத்ரி மகளிடம் ஓட

"ரித்து என்ற ரித்விக் கோவக்குரல்  வந்தது 

"அவ என் தங்கச்சி அவ மேல உங்க நிழல் பட்டது அண்ணே ஐயோ பாவம்னு உங்களை விட்டு இருக்கான் போல இருக்கு...  நான் இங்கேயே கண்டம் துண்டமாக வெட்டி போட்டுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன்...  ரித்து இங்க வா" என்று அரட்டலாக அண்ணனிடம் இருந்து குரல் வர...  அவள் பெருமூச்சுவிட்டு தன் அண்ணன் கையை வந்து பிடித்துக் கொண்டாள்... 

இதில் வேற்று ஆளாக ஓரத்தில் நின்று கொண்டிருந்தது வைஷ்ணவிதான்...

"ரித்து நாம செஞ்ச பாவம் போதும் மறுபடியும் இந்த ஆட்கள் கூட சேர்ந்து பாவத்தோட கணக்க கூட்டிக்காத...  நான் சொல்றது புரியுதா...

"ம்ம் பட் ,  நான் எப்படி சமாளிக்க போறேன்னு தெரியல ரித்விக் அண்ணா...  நாம போய் இந்த நார்மல் சொசைட்டியில எப்படி வாழ போறோம் பைக், கார் இல்லாமல் காலேஜ் போனா ஓஓஓ நோ எல்லாரும் கேலியா என்ன  பாப்பாங்க... சாதாரண பஸ்ல ஏறி நான் போனா  என் மானமே  போகும் பேசாம அயோக்கியா அண்ணன்கிட்ட போய் நான் பேசவா....  இது கொஞ்சம் சொசைட்டி பைத்தியம் நடு மண்டையில நாலு தட்டு தட்டினாதான் சரியாகும்...

அவர்தான் சொல்லிட்டு போயிட்டாரு இல்ல ,நீங்க வேற நான் வேறன்னு,  இதுவரைக்கும் நாம் அவருக்கு கொடுத்த வலி போதாதா , போதும் ரித்து, இருக்கிறத வச்சு வாழ பழகிக்க.. கூழோ,கஞ்சோ  மரியாதையா குடிக்கிறதும் தன்மானம்தான்..  என் கூட வர போறியா இல்ல நீயும் என்னை ஒத்தையா விட்டுட்டு போறியா யோசிச்சுட்டு அயோக்கியா அண்ணாவை போய் பாரு ... 

"எனக்கு என்ன முடிவு எடுக்கிறதுன்னு தெரியல நீயே ஏதாவது செய் என்று போய் விட்டாள்...  ரித்விக் யோசனையாக தலையை திருப்ப.

வைஷ்ணவி அவன் பதிலுக்காக காத்துக் கொண்டிருந்தாள்... 

இன்னும் ஏதோ ஒரு நம்பிக்கை மிஞ்சி இருந்தது!! 

அவளை நோக்கி அடியெடுத்து வைத்துப் போன கணவனின் வாயில் இருந்து வரும் பதிலுக்காக திகில் பிடித்த இதயத்தோடு வைஷ்ணவி காத்துக் கொண்டிருந்தாள் 

போய்விடு என்று சொன்னவன் ஒரேடியாக போக சொல்லி விடுவானோ என்ற பயம் அவளை வெகுவாக அசைத்து ஆணிவேரை பிடுங்க தயாராக இருக்க..

உன்  ஆணிவேரை பிடுங்கியே தீருவேன் என்று அவள் கணவன் நினைத்தானோ என்னவோ..

ஏங்க

ம்ம 

நீங்க எங்க போக போறீங்க? என்று அவன் தயக்கமாக கேட்க ... அவ்வளவுதான் முடிந்து விட்டது போ என்பதை எவ்வளவு நேர்த்தியாக சொல்ல பழகி விட்டான்...  வலியோடு ஒரு புன்னகையை கொடுத்த வைஷ்ணவி..

"அப்பாவை வர சொல்லிட்டேன்..

"ம்ம்  சரிங்க பாத்து போங்க,  டைவர்ஸ் கேஸ் ஹியரிங் வரும்போது முடிஞ்சா பாக்கலாம் 

"டைவர்ஸா ?

"ஆமாங்க பத்து நாளா அதுக்கு தான் அழைஞ்சேன்.. சொல்ல மறந்துட்டேன் கேஸ் ஃபைல் பண்ணி இருக்கேன் சீக்கிரம் உங்களுக்கு விடுதலை கிடைச்சிடும்

ஓஓஓ ,  விடுதலையா? உன்னை விட்டு போவது எனக்கு தற்கொலைக்கு சமம் என்று எப்படி சொல்வது தவறு அத்தனையும் அவளிடம் இருக்க தடுமாறி வலியை உதட்டில் சவைத்து  நெஞ்சில் பெருகி ஓடும் குருதியை கையில் பிடித்துக் கொண்டு வலியோடு சிரிக்க பக்குவப்பட்டு விட்டாள்..

"உடம்ப பாத்துக்கோங்க ,கண்டதையும் பத்தி யோசிக்காதீங்க

"ம்ம் ,  நீங்களும் உங்கள பாத்துக்கோங்க

" என்ன பத்தி யோசிக்காதீங்க நான் என்ன நல்லாவே பாத்துக்குறேன்

" தேங்க்ஸ்ங்க புரிஞ்சுக்கிட்டதுக்கு ... 

"உங்களுக்கும் ரொம்ப தேங்க்ஸ்ங்க ,  என்ற வைசுவுக்கு  என்னை ஏன்டா புரியாம போச்சு , என் மனசு ஏன் உனக்கு புரியல என்று மனம் கதறினாலும் பொய்யாக ஒரு சிரிப்பை கொடுத்தவள்  அருகே அவள் தந்தையின் கார் வந்து நிற்க ...

ரித்விக் என்று அழைக்கவும் தலையை திருப்பி  அவளை ஒரு பார்வை பார்த்தான் 

இனி இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் அருகே இருந்து பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்குமா இருவருக்குமே தெரியவில்லை..

ஏன் இந்த திருமண பந்தத்தில் இணைந்தோம்.. ஏன் இப்படி ஒரு மனமுறிவு ? ஏன் இப்படி ஒரு பிரிவு என்று கேள்விகள் தான் வந்தது ..

சொல்லுங்க வைசு ...

:ஏன் எதுவுமே இல்லன்னு வருத்தப்படுறீங்க அப்பா கிட்ட இருந்து ஏதாவது வாங்கி தரவா

" என் அண்ணன் எனக்கு தன்மானம்  கத்து கொடுத்து இருக்கு இதுவரை பிச்சை எடுக்க யோசிக்கல..இனி சுயமா நிக்க பழகிக்கிறேன்.. 

சாரீங்க

"அச்சச்சோ உங்கள வருத்தப்படுத்தணும்னு அப்படி சொல்லல நீங்களே வேற ஆகிப் போகும்போது உங்க அப்பா கிட்ட வாங்கறது தப்புல்ல...  அதான் அப்படி சொன்னேன் நான் பாத்துக்குறேன்ங்க,  நீங்க பத்திரமா போயிட்டு வாங்க என்று கார் கதவை திறந்து கொடுக்க...

"ரித்விக் 

என்னங்க எதாவது சொல்லணுமா? 

நானும் நீங்களும் என்றவளுக்கு அன்று இரவு நடந்ததை சொல்ல வாய் வரை  வர 

சொன்னா என்ன நடக்கும்,  கூட வாழ்வார்தான் ஆனா,  எமாத்துக்காரி பட்டத்தோடு சேர்த்து என் பணத்துக்காக என்னை எமாத்தி படுத்திருக்க  என்ற  களங்கமும் சேர்ந்தே வரும் தொண்டை வரை வந்த உண்மையை விழுங்கியவள் 

"என்னை நினைச்சு வாழ்க்கையை வீண் பண்ணிடாதீங்க ரித்விக் 

"இனிதான்ங்க வாழவே தொடங்க போறேன் இந்த உலகம் என்ன வச்சிருக்குன்னு தெரியாது பார்க்கலாம் நிச்சயமா எல்லாம் மாறும் "

"ம்ம் போயிட்டு வர்றேன் 

"போங்க என்றவன் பதிலே என் வாழ்க்கை விட்டு போய்விடு என்று சொல்லாது சொல்ல..  அவன் திறந்து விட்ட கதவின் வழியே பின்னால் இருக்கையில் ஏறி அமர்ந்த வைஷ்ணவி அவன் முழு உருவத்தையும் தன் கண்ணிலும் இருதயத்திலும் நிரப்பி கொண்டவள்..  போறேன் என்பது போல் தலையாட்ட .. சரி என்று அவன் ஆமோதிப்பதாக தலையாட்ட .. கார் அவனை விட்டு நகர ஆரம்பித்தது ..வைசு பின்னால் கண்ணாடி வழியாக அவனைப் பார்த்துக் கொண்டே போக அவனும் , அந்த கார் மறையும் வரை அங்கேயே நின்று அந்த காரின் உருவத்தை பார்த்தபடி  நிற்க .. அந்த கார் மறையும் வரை அவனும் கண்ணெடுக்கவில்லை .. அவன் உருவம் மறையும் வரை இவளும் கண்ணை எடுக்க  வில்லை... 

"அம்மாடி வைஷ்ணவி என்னால தான் உன் வாழ்க்கை இப்படி ஆகிப்போச்சு... நான் வேணும்னா,  மாப்பிள்ளை தம்பிக்கிட்ட பேசட்டுமா?? 

"என்னப்பா பேசுவீங்க என்ன பேசுவீங்க?  உங்க அண்ணன் கூட காதலிக்கிற மாதிரி நடிக்க சொன்னது நான்தான்னு சொல்ல போறீங்களா? காரி துப்புவார் ... அண்ணன் கூட காதலியா நடிக்க சொல்லிட்டு , தம்பி கூட மனைவியா அனுப்பிவிட்டேன்னு சொல்லுவீங்களா ? மானம் போகும்,  நீங்க செஞ்ச தப்புதானே கடைசி வரைக்கும் நான் அவரை நினைச்சுக்கிட்டே தான் வாழாம இருக்க போறேன்..  நீங்க பண்ணுன தப்புக்கு என்ன கண் குளிர பார்த்து ரசிங்க மொத்தத்துல என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டீங்களேப்பா" என்று வைசு முகத்தை பொத்திக்கொண்டு கதறி அழ..

"அம்மாடி 

"அவர்கிட்ட போய் என்னைக்காவது,  ஏதாவது பேசினீங்கன்னு தெரிஞ்சது,  நான் உயிரோட இருக்க மாட்டேன் அவ்வளவுதான் சொல்லிட்டேன் என்று வைசு தன் தகப்பனை அடக்கப்பட்ட கோபத்தோடு பார்க்க..

"என் பொண்ணு வாழ்க்கையை நானே கெடுத்துட்டேனே என்று  அவரும் உடைந்து போய் மகளை பரிதவிப்பாக பார்த்தார்.. 

 

காதல் இருந்தால் மட்டும் பிரயோஜனம் இல்லை காலங்களும் கைகூடி வர வேண்டும் இல்லையென்றால் எந்தக் காதலும் அந்தரத்தில் தான் தொங்கும் 

"ஆமா இங்க ஒரு இடைச்சொருகல்  உண்டே அதை எங்க காணல என்று ரித்விக் சுற்றி முற்றி அதிராவை தேட 

"அண்ணா நாலு சமோசா,  நல்ல சூடா பார்சல் பண்ணுங்க..  சமோசாவை  சூடா சாப்பிடுறதே ஒரு இன்பம் தாண்டா , என்ன டேஸ்ட் "என்று அதிரா சமோசாவை கடித்து தின்று கொண்டு இவர்களுக்கும் இரண்டு சமோசாவை பார்சல் பண்ணி வாங்கிக் கொண்டு வந்த அதிராவை பார்த்து இருவரும் முறைக்க ..

"ஏண்டி உனக்கெல்லாம் கடவுள் நெஞ்சுக்குள்ள இருதயத்த வச்சிருக்காரா இல்லையா.. அது என்ன கல்லா ?என்று ரித்து கேட்க

"சாரி நான் அக்ரி ஸ்டுடெண்ட்,  இதயம் கல்லா சிமெண்ட்டா,  எந்த மெட்டிரில்ல செஞ்சதுன்னு தெரில 

"ப்ச்  இப்படி அசால்டா நிக்கிறியே பயமே இல்லை 

"நான் என்னடி செஞ்சேன் ...  உங்க அண்ணன் உங்களை வீட்டை விட்டு விரட்டி விட்டிருக்கிறார் நீங்கதான் கேராப் பிளாட்ஃபாரம்...  நீங்க தான் உட்கார்ந்து அழனும் என்னையும் கூட்டு சேர்த்தா நான் என்ன செய்யறது... உங்களுக்கு வேணும்னா இதெல்லாம் ஷாக் எனக்கு இதுதான் நடக்கும்னு தெரியுமே 

"இப்ப நீயும் நடுத்தெருவுலதான் நிற்கிற அதிரா ,  வா உன்ன கொண்டு போய் ஊருக்கு பஸ் ஏத்தி விட்டுட்டு வரேன் என்று ரித்விக் கூற

"ஏது  ஊருக்கா?  அங்கெல்லாம் போக முடியாது... 

"ஏன் ?

"என்  அப்பனுக்கு நேத்தே இரண்டாவது கல்யாணம் முடிஞ்சு போச்சு

இரண்டாவது கல்யாணமா ?

ம்ம் ரொம்ப நாளா செட்டப்பா வச்சிருந்த சின்ன வீடு கல்யாணம் பண்ணுனாதான் இனி வீட்டுக்கு வரணும்னு சொல்லிட்டு போல  , இவரும் போனா போகுது கல்யாணம்தானேன்னு பண்ணிக்கிட்டாரு ... இனிமே நான் அங்க போனேன்னு வையுங்க சோத்துக்கு பிச்சைதான்  எடுக்கணும் ....  அதனால என்னவா  இருந்தாலும் இங்கேயே இருந்துக்கிறேன்

 "எங்களுக்கே இங்க சோத்துக்கு வழியில்ல உன்னையும் கூட்டிட்டு போக சொல்றியா?  என்னால முடியாது என்று ரித்விக் மறுக்க

"உங்களை யாரு கூட்டிட்டு போக சொன்னது என் பாட்டை  நான் பாத்துக்குறேன்,,  நீங்க ரெண்டு பேரும் உங்க வழியை பார்த்து போங்க... 

"ஆனாலும் உனக்கு இவ்வளவு ஏத்தம்  இருக்கக் கூடாதுடி கொஞ்சமாவது பயப்படு,  இல்ல பயப்படுற மாதிரியாவது நடி ... இல்ல நிறைய அனுபவிக்க வேண்டியது இருக்கும்....

"ப்ச் ,  காசு ஏதாவது வச்சிருக்கீங்களா அத்தான்

"நூறு ரூபா இருக்கு, ஏன் ?

"இல்ல காலேஜ் ஹாஸ்டலுக்கு முன்பணம் கொடுக்க வேணும்  என்று அவன் கையில்  கடைசியாக இருந்த 100 ரூபாய்களையும் பிடுங்கிக் கொண்டு அதிரா  பஸ் ஸ்டாப் நோக்கி ஓடிவிட்டாள்....

இழந்ததை நினைத்து இன்றைய நாளை இழப்பது முட்டாள்தனம் அவள் முட்டாள் இல்லை ..  வாழ்க்கையை வாழத் தெரிந்த சாகசக்காரி!! 

40 நாளில் அடித்துப் பிடித்து  இதோ  ரித்விக் ரிதன்யா விவாகரத்து இன்று கிடைத்துவிட்டது... 

இந்த திருமண பந்தத்தில் இருந்து இருவரும் பிரிந்து தனித்தனியாக அவர்களுடைய வாழ்க்கையை பார்த்துக் கொள்வதற்கு சட்டம் உங்களுக்கு அனுமதி வழங்குகிறது என்று அவர்கள் மன முறிவை நீதிமன்றம் முடிவு செய்து தீர்ப்பை வழங்க ... எதிர் எதிரில் நின்ற இருவருக்கும் இந்த முடிவு கசப்பை கொடுத்தாலும் தலைகுனிந்து அதை ஏற்றுக் கொண்டனர்..

வக்கீலோடு பேசிக்கொண்டு ரித்விக் வெளியே வர தன் தந்தையோடு மரத்து நிழலில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள்  வைஷ்ணவி...  அவளை பார்த்ததும் அவளிடம் வந்த ரித்விக் 

ஏங்க 

ஹான் தடுமாறி எழுப்பினாள் 

இது கோர்ட் தீர்ப்பு கொடுத்த நகல்ங்க.. உங்களுக்கும் ஒன்னு வச்சுக்கோங்க யூஸ் ஆகலாம் என்று வைஷ்ணவிடம்  விவாகரத்தான  பத்திரத்தை நீட்ட 

ம்ம் வலது கையால் அந்த விவாகரத்து பத்திரத்தை வாங்கினாள் ஆனால் அவள் இடது கையில சில நிமிடங்களுக்கு முன்னால் கொடுத்த பிள்ளை பெற்றை உறுதி செய்யும் ரிப்போர்ட் 

தலைசுத்துன்னு டாக்ட்டர் கிட்ட போனியாமே, குழந்தை உண்டாகி இருக்கேன்னு ரிப்போர்ட் வந்திருக்கும்மா,  டாக்டர் தந்துவிட்டார் என்று தன் தந்தை மூலம் கொடுத்த ரிப்போர்ட் மறைந்திருந்தது...

அதை அவள் கைகள் கசக்கி பிடித்தது ..

 ஃபாரின்ல வேலை கிடைச்சிருக்குங்க ,  கூலி வேலை தான் தங்கச்சியை ஆளாக்கணும்ல இப்போதைக்கு சமாளிக்க அந்த வேலை வேணும் ... அஞ்சு வருஷம் காண்ராக்ட்ல ஃபாரின் போறேன்  என்று அவளுக்கு தகவலாக ரித்விக் கூற

சந்தோஷமா போயிட்டு வாங்க உங்களுக்கு இனி நல்லதே நடக்கும் 

ம்ம் உங்களுக்கும் நல்லதே நடக்க வாழ்த்துக்கள் போயிட்டு வர்றேங்க என்று போகும் ரித்விக்கை  கழுத்து தாண்டி ஓடும் கண்ணீரோடு பார்த்துக் கொண்டு ஒரு கையில் விவாகரத்து பத்திரம் ஒரு கையில் குழந்தை உண்டான ரிப்போர்ட் என்று வலிகளை சுமந்து கொண்டு நின்றாள் காதல் கண்மணி!! 

காதல் என்று பெயர் வைத்ததற்கு பதிலாய் கண்ணீர் என்று வைத்திருக்கலாம் போலும் !!! 

காதலுக்கு காதலை கொடுக்க தெரிகிறதோ இல்லையோ கண்ணீரை கொடுக்க தெரிகிறது...