வேஷம் போடும் வேடா 21

Veda21

வேஷம் போடும் வேடா 21

21 வேஷம் போடும் வேடா !!

காலை பத்து மணிக்கு பொட்டல்  காட்டில் உருண்டு எழும்பிய காட்டு எருமைகள் போல வீட்டு வாசலில் வந்து பழிவாங்கிய ஜெர்சி மாடுகள் வந்து  நின்றது..

வா  அயோக்கியா,  இப்பதான் வரிறியா என்று அவன் நின்ற   கோலத்தை காயத்ரி ஒரு பார்வை பார்த்துக் கொண்டே அவன் கைக்குள் விரல் விட்டு தோரணையாக ஜோடியாக அவனை  இடித்துக்கொண்டு நின்ற அதிராவையும் முறைக்க தவறவில்லை...

ஸ்ட்ராங்கா காபி கொடுத்து அனுப்புங்க சித்தி என்று தன் தலையில் இருந்த புல்லை கோதி விட்டுக் கொண்டு அவள் காதில் குனிந்து ஏதோ சொல்லிவிட்டு போக ...

"குளிச்சிட்டு உங்க ரூமுக்கு தான அத்தான்  வரணும் அதெல்லாம் சரியாக வந்துடுவேன் ...நம்ம வேலையை இனி அதுதானே" என்று இவள் கத்தி அவனுக்கு பதில் சொல்ல...  அவளை திரும்பி பார்த்த்  அயோக்கியா தலையாட்டிவிட்டு தன் அறை  நோக்கி போய் விட்டான் ...அவன் தலை மறையவும் அவளை நோக்கி  வந்த காயத்திரி 

"அட பாதகத்தி, என்ன வேலைடி பார்த்து வச்சிருக்க  என்று அவள் முதுகில்  அடிக்கப் போக ... அவர் கையை பிடித்துக் கொண்ட  அதிரா

"எதுக்காக அத்தை இப்ப அடிக்க வர்ற..

"நீ எங்க போயிட்டு என்ன வேலை பார்த்துட்டு வரேன்னு எல்லாம் எனக்கு தெரியும்...  நேத்து உன் காலேஜ்ல இருந்து உன் லக்சரர் ஃபோன் போட்டிருந்தார்... 

"ஓஓஓஓ ,  அவர் என்னை தூக்கிட்டு போனதை மட்டும் சொன்னாரா,  இல்ல நான் அவருக்கு முகம் கொடுத்ததா சொன்னாரா,  இல்ல நாங்க ரெண்டு பேரும் எஸ்டேட் போயி  முதலிரவு  கொண்டாடிட்டு  வர்றதை சொன்னாரா.. 

"என்னடி பயமே இல்லாம பேசுற 

"எதுக்கு அத்தை பயம் நாங்க  என்ன காதலா பண்ணுறோம் ... ஜாதி  மதம் மாறி போச்சு ஏற்றத்தாழ்வு இருக்கு,  வசதி கூட குறைய இருக்கு கல்யாணம் பண்ணினா சரியா இருக்காதுன்னு புலம்ப ,யோசிக்கிறதுக்கு .. நாங்க ரெண்டு பேரும் லஸ்ட் பார்ட்னர் அத்தை ...

"லஸ்ட்டா அப்படின்னா ??

"ப்ச் , உங்களுக்கு அதெல்லாம் சொன்னா புரியாது இதெல்லாம் சின்னஞ்சிறுசுக பண்ணக்கூடிய சில்மிஷம் கண்டு காணாம,  கண்ணை பொத்திகிட்டு வேற வேலை இருந்தா பாருங்க உடம்பெல்லாம் உன் மகன் பண்ணின வேலையில வலிக்குது அத்தை முடிஞ்சா ஒரு கடும் காப்பி போட்டு தரீங்களா ... 

"நாயே சோறு போட்ட  என் வீட்டுல குழப்பத்தை  உண்டாக்க பார்க்கிறியா....  நீ ஒன்னும் படிச்சு கிழிக்க  வேண்டாம் பெட்டிப் படுக்கையை  கட்டிக்கிட்டு வீடு போய் சேரு..  கெளம்பு இப்பவே உன் அப்பனை வந்து கூட்டிட்டு போக சொல்றேன் என்று காயத்ரி அவளை விரட்டிவிட பார்க்

என்ன ஆச்சு சித்தி அயோக்கியா  அதற்குள் குளித்து இறங்கி வந்திருக்க 

என்ன பிரச்சனை ?"

"இல்லை அயோக்கியா நீ நல்ல புள்ள ,  அவ தான் உன்ன காட்டி ஏமாத்தி இருப்பா ... அவனை குறை கண்  போட்டு உதட்டை கடித்து பார்த்த அதிரா பின்னழகில் சப்பென்று அடுத்த அயோக்கியா 

"குளிச்சிட்டு ரூமுக்கு வாடி எவ்வளவு நேரம் வெயிட் பண்றது

"நானா வர மாட்டேன்னு சொன்னேன் உங்க சித்தி தான் கூப்பிட்டு வச்சி சோதனை பண்ணிட்டு இருக்காங்க குளிச்சிட்டு வர்றேன் 

"ஐஸ்கிரீம் கேட்டியே எந்த ப்ளேவர் ? 

"சாக்லேட் அத்தான் அப்படியே பலூனும் முடிஞ்சு போச்சு அதையும் வாங்கிட்டு வாங்க ஹான் அப்பறம் பஸ்ட் டைம்ல கொஞ்சம் இச்சிங்கா இருக்கு அதுக்கும் எதாவது மருந்து வாங்கிட்டு வாங்க 

"ம்ம் இந்தா ரூம் கீ "என்று அவன் தூக்கி எறிய படியில் நின்ற அதிரா அதை குதித்து வாங்கி கொண்டு 

"குளிச்சிட்டு உங்க ரூம்ல வெயிட் பண்றேன்னு சீக்கரம் வாங்க அத்தான் "என்று கத்தி கொண்டே போக ஆறுமுகம் இறங்கி வந்தவர் மேலே ஏறி போகும் அதிராவையும் வன்மம் கக்க பார்த்தவர்...

அவளை காதல் எதுவும் பண்றானா என்று காயத்திரியிடம் கேட்க 

"தெரில மாமா ஆனா  இத்தனை வருஷமா எனக்கு கூட தராத அவன் ரூம் சாவியை அவளுக்கு கொடுத்துட்டு போறான் ... 

ஓஓ"

"மாமா

"என்ன ?

"இல்ல இவ செத்து போனா அவன் என்ன பண்ணுவான்..  தாடி வளர்த்து கிறுக்கன் ஆகிடுவானோ,  அய்யய்யோ என் புள்ளைக்கு அப்படி எல்லாம் நடந்திட கூடாது மாமா 

"நடத்திடுவோம் ,அவனை கொன்னா என்ன இவளை கொன்னா என்ன இழப்பு இழப்பு தான 

"அச்சோ மாமா  வாழ வேண்டிய பிள்ளைங்க வாழ்க்கையை கலைக்க கூடாது 

"நாம வாழ எத்தனை பேரை வேணும்னாலும் கொல்லலாம் தப்பே இல்லை ... என்ற ஆறுமுகத்தை கண்கள் சிமிட்டி காயத்திரி பார்த்து கொண்டு நின்றார்...

ரித்விக் ஒருவழியாக மனைவியை அழைத்து கொண்டு வெளியே போனான்..  பெரிதாக எதுவும் இல்லை என்றாலும் கோவில் வாசலில் அருகருகே உட்கார்ந்து பேசி உனக்கு என்ன பிடிக்கும் எனக்கு இது பிடிக்கும் என்று ஹோட்டலில் சாப்பிட்டு முடித்து போகும் போது  பைக்கில் இடைவெளி விட்டு உட்கார்ந்த மனைவி வரும் போது அவன் தோளில் கை போட்டு அமர்ந்து வரும் அளவு மெல்லிய நேசம் இளையோடியது... 

"இப்படியே கொஞ்சம் கொஞ்சமா என் மனசுல உள்ளது அவருக்கு புரிய ஆரம்பிச்சிடும்" என்று வைசு கனவு கோட்டை கட்டி விட்டாள் .... 

அவனும் "பழைய காதலை மறந்துட்டு வைசு என் கூட வாழ்ந்தா எப்படி இருக்கும் "என்று நினைக்கும் போதே ஆசை பெருவெள்ளம் போல பாய .. மெத்தை மீது படுத்து கிடந்த மனைவியை  கன்னத்தில் கை வைத்து ரசித்தவன் அப்படியே தூங்கி போக அவன் தூங்கியதும் கண்ணை திறந்த வைசு 

கள்ளன் முறைச்சு முறைச்சு  பார்த்தா போதுமா, எல்லாம் உரிமையா செய்யத்தான் செய்றார் ஆனா அதுக்கு மேல மனுசனுக்கு தைரியம் வரலேயே ,, ம்ம் எப்போ மனைவியா ஏத்துப்பார்" என்று தூங்கும் அவனை இவள் கன்னத்தில் கை வைத்து பார்த்து மீதி இரவை கழித்தாள்... 

நாட்கள் சடசடவென போனது 

இதோ ரெண்டு மாதங்கள் ஆகி போனது ...  பழி வாங்குற ரெண்டும் கட்டிலை மட்டும் தான் உடைத்து போட்டனர்.. இரவு கட்டில் க்ரீச் க்ரீச் என்று ஓயாது குரல் கொடுத்து அவர்கள் கொண்ட கோவ அளவை காட்டியது .... 

"டேய் அத்தான் நீங்க என்ன எந்த கோவத்துல  அங்க கடிச்சு வச்சிங்க "என்று வன்முறை செய்த பகுதியை காலை அவனிடமே காட்டி புகார் வாசிப்பாள் 

"நீ என்ன வஞ்சத்துல கடிச்சியோ அதே வஞ்சத்துல தான் நானும் கடிச்சேன்" என்று அவனும் அவள் வஞ்சித்த இடத்தை காட்டி போவான்..

காதலில் கரை கண்டார்களோ இல்லேயோ காமத்தில் கரை  கண்டார்கள் ... 

எப்போதும் பத்து மணிக்கு அறைக்குள் நுழையும் காம காதலிக்காக  படுக்கை மீது அயோக்கியா  காத்திருக்க,  11 ஆனது இன்னும் அவளை காணவில்லை  

"டார்க்கி "இங்கிருந்து அவன்  சத்தம் கொடுக்க 

"டேய் அத்தான் நாளைக்கு எக்ஸாம் நானே கஷ்டப்பட்டு மனசை  இழுத்து வச்சி படிக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன் தொல்லை பண்ணாதீங்க என்று அவள் குரல் வர 

"ப்ச்  சலித்த குரல் வந்தது..

சம்மணம் போட்டு தரையில் உட்கார்ந்து தன்னை சுற்றி புக்கை போட்டு கொண்டு  பரிச்சைக்கு நோட்ஸ் எடுத்தபடி அதிரா இருக்க....  அவள் அருகே காலடி சத்தம் கேட்டு தலையை தூக்க லேப்டாப்போடு டவுசர் ஹார்ம் பனியனில்  அயோக்கியா நின்றான் 

"என்ன "

"நானும் வேலை பார்க்க போறேன் என்று அவள் மடியில் வந்து தலை வைத்து படுத்தவன் தன் வயிற்றில் லேப்டாப்பை வைத்து வேலையை செய்ய 

அய்ய எழும்பி போடா அத்தான் நீ என்ன வேலை பார்க்க வந்திருக்கன்னு தெரியும்  என்று அவனை தள்ள நெனைக்க அவன் சட்டமாக படுத்து அவள் பால்மேனி அழகில் முகத்தை வைத்து தேய்த்து கொண்டே 

இப்ப படிச்சு எதை கிழிக்க போற ?

ப்ச் எதையாவது பண்ணிட்டு போறேன் நீங்க எழும்பி போங்க ரெண்டு நாள் உங்க காம காதலுக்கு லீவ் "

"லீவு எல்லாம் தர முடியாதுடி, போன வாரம் மூணு நாள் லீவு தந்தாச்சு 

"டேய் மாமா அது அந்த மூணு நாள், அது கணக்குல சேராது 

"அதுவும் கணக்குல சேரும் ..

"அப்ப மட்டும் சும்மாவா விட்டீங்க;  பக்கத்துல தான படுத்தீங்க... 

"பட் ஒன்னும் செய்யலேயே , சோ அது லீவ் தான்,  அதுக்கும் சேர்த்து நீ வேலை பார்க்க வேண்டி இருக்கு பொறுப்பே இல்லாம புக்கை தூக்கி வச்சா என்ன நியாயம் ....  கழட்டி தா நான் பாட்டுக்கு என் வேலையை பார்த்துட்டு போறேன் "

அய்ய முடியல என்று தாவணியை விலக்கி கொக்கி நாலை கழட்டி அவன் முகத்தில் பெருத்த பூவை போட 

முகம் மேல லோடை போட்டு கொல்ல பார்க்கிறியாடி  ...ஆவ்ஊஊஊ கத்தினான்

"பின்ன இதை வச்சி தான் கொல்லனும் பிடிங்க கொஞ்சம் நேரம் வாயை மூடிட்டு வந்த வேலையை பாருங்க "என்று அவன் உதட்டில் வைரக்கல் கொடுத்து விட்டு இவள் புக்கை பார்க்க அவன் கவ்வி கவ்வி விளையாடி அவளையும்  சண்டைக்கு இழுக்க ....  

"ஸ்ஆஆஆஆஆ அவ்வளவு தான்டா அத்தான் உனக்கு மரியாதை" என்று அவனை தரையில் தள்ளி ஏறி அவன் வயிற்றில் அமர ... ஏறிய அவள் இறங்கும் போது இருவரும் வியர்த்து விட்டனர் 

"டேய் அத்தான்  அவன் அருகே படுத்து கிடந்து கால விரலால் அவன் காது மடலை இழுத்து விளையாட அவன் கால்  விரல்கள் அவள் நாபியை சுரண்டி கொண்டிருந்தது கையோ லேப்டாப்பில் வேலையில் இருக்க .... 

நாளைக்கு என்ன ப்ளான்?

"உன்ன முடிச்சு விடுறது தான் ப்ளான் "

"அய்யோ நானும் அதைத்தான் அத்தான் நினைச்சேன் ... ரெண்டு பேரும் எல்லா ஆங்கிலும்  ட்ரை பண்ணியாச்சு.. இனி போரிங் தான்,   பேசாமா  என் ஜாப்பை ரிசைன் பண்ணலாம்னு இருக்கேன் ... வாட் யூ திங்க் 

"நீ என்னடி ரிசைன் பண்றது , உன்ன வேலையை விட்டு தூக்கி பத்து நிமிசம் ஆகுதுடி.. " 

நானும் உங்க ரூமை  விட்டு போய் எட்டு நிமிசம் ஆகுது பாய் பாய்   என்று அதிரா  தன் அறைக்குள் போய் மறைந்து விட்டாள்...  

கொட்டி வைத்த உணர்ச்சிகள் , நினைவுகள்தான் இனி பழி வாங்கும் என அவளுக்கும் தெரியும் அவனுக்கும் தெரியுமே.. 

மரணம் சில நொடி வலி  , நினைவுகள் பல நாள் வலி , அவர்கள் தந்த நினைவுகள் ஊமையாக காயம் செய்யுமே !! 

கொட்டி கொடுத்த காமமும் நினைவுகளும் தான் அவர்களை பழி தீர்க்கும் ஆயுதம் ஆக போவதோ?

பழி வாங்குன லட்சணமே இப்படின்னா இதுக சண்டை எப்படி இருக்கும் யோசித்து கொண்டு உச்சி கொட்டவும்...