வேஷம் போடும் வேடா 23
Veda23

23 வேஷம் போடும் வேடா !!
ஏன் ஏன் ஏன்
ஏன்னு நான் சொல்றேன் என்று உள்ளே வந்து ஐஸ் தின்று கொண்டே வந்து நின்றாள் அதிரா
நீயா உனக்கு என்ன தெரியும் ..
நீங்க கேட்ட அத்தனை ஏன் க்கும் விடை தெரிஞ்ச ஒருத்தி நான்தான் சொல்லவா போகவா?
சொல்லு
அப்போ பாலோ மீ காத்தோட்டமா போய் கார்ட்டன்ல உட்கார்ந்ந்து பேசுவோம் வைசு அக்கா தண்ணீ, ஜூஸ் சிப்ஸ் பாக்கெட் எல்லாம் கொண்டு வாங்க... போர் அடிக்காம இருக்கும் என்றுவிட்டு தோட்டம் நோக்கி ஓட ரித்விக் ரிதன்யாவுக்கு இவள் பின்னே போவது தவிற வேறு வழி இல்லை
சில ரத்தங்கள் மரித்தாலும் அது விதைத்து போன ரத்த துளிகள் காயாது நீதி செய்ய காத்திருக்கும் ...
அன்று அதிஸ்டலெட்சுமி சிந்திப் போன ரத்த துளிகள் , காவு வாங்க காத்து கிடக்கிறது அயோக்கியா வடிவில்...
27 வருடங்களுக்கு முன்பு !!
ஏற்காடு
ஜமீன் அரண்மனை ஓங்கி உயர்ந்து நின்றது ...
அதன் பின்னே புதர் மண்டி கிடக்க ,மனித இச்சை தீர்க்கும் பெரும் இரைச்சல் பெண்ணும் ஆணும் உடல் தேவையை நிறைவேற்றி விழுந்தனர்
"மாமா எத்தனை நாளைக்கு இப்படி கள்ளத்தனமா நாம ரெண்டு பேரும் சந்திக்கிறது.. ஆறுமுகம் நெஞ்சில் காயத்ரி சாய்ந்து கிடந்தார்
காயத்ரியின் அழகில் கிறங்கி போய் இவரும் எழும்ப முடியாமல் கிடந்தார் ...
"இங்க நாம வந்த வேலை மறந்துட்டியா
"ப்ச் நான்தான் உங்களை அக்காவுக்கு தூக்கி கொடுத்தேன் அவ புருசனா உங்களை பாக்கும் போது வயிறு பத்தி எரியுது மாமா, அதுவும் அவ வயித்துல உங்க பிள்ளை... ப்ச் ரத்தம் கொதிக்குது எப்படி அவளை தொடலாம்
"கருவாச்சி மேல ஆசையில தொட்டேன்னு நினைச்சியா ஜமீன் சொத்து அம்புட்டும் அவ பெத்த வாரிச்சுகு தான் போகுமாம் அதுக்காக வேற வழி இல்லாம அவளை தொட்டேன்... அப்போ கூட உன்ன நினைச்சு தான்டி அவ கூட படுத்தேன் ...
"ம்க்கும் எப்ப என் கழுத்துல தாலி கட்டி இந்த ஜமீன் இளவரசி ஆக்க போறீங்க மாமா ,
"அதுக்கு முதல்ல என் பொண்டாட்டிய கொல்லனும்டி அப்பதான் நாம ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ முடியும்..
"இப்படித்தான் ஒரு வருஷமா சொல்லிட்டு இருக்கீங்க ஏற்கனவே ரெண்டு தடவை பிள்ளையை அழிச்சாச்சு ... இந்த வாட்டியும் குழந்தை உண்டானா நான் அழிக்க மாட்டேன் சொல்லிட்டேன் .. நேரா வந்து அக்கா உன் புருஷனாலதான் நான் பிள்ளை உண்டாக்கிட்டான்னு சொல்லி , நானே பஞ்சாயத்து கூட்டி வீட்டுக்குள்ள உங்க இரண்டாவது பொண்டாட்டியா வந்து உட்கார்ந்துக்குவேன்
"ஓஹோ அப்படியா எங்க செய் பாப்போம் என்று ஆறுமுகம் அவளை முறைத்து பார்க்க ...
"சும்மா சொன்னேன் மாமா உங்கள விட்டா எனக்கு வேற என்ன கதி ஏதாவது செய்யக்கூடாதா?
அவளை கொன்னுட்டு உன்னை ராணி மாதிரி வச்சுக்கிறேன்னு சொல்றீங்களே தவிர ,ஒன்னும் அதுக்கானது செஞ்ச மாதிரி இல்லையே...
"எல்லாத்தையும் செய்ய தொடங்கிட்டேன் சீக்கிரமே செஞ்சு முடிச்சிடுவேன் என்று ஆறுமுகம் சிரிக்க அவர் நெஞ்சில் சாய்ந்து கொண்டார் காயத்திரி தேவி...
இந்த ஜமீன் பரம்பரையில் ஒரே பெண் வாரிசு அதிர்ஷ்ட லட்சுமி.. ஜமீன் வேலை விஷயமாக வந்த பொழுது கும்பகோணத்தில் உள்ள ஏழை பெண்ணின் மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.. அதிர்ஷ்ட லட்சுமி ஒற்றைக்கொரு மகளாக அந்த ஜமீன் வாரிசாக பிறந்தார்...
லட்சுமியின் சித்தி மகள் தான் காயத்ரி தேவி அரண்மனையில் செல்வச் செழிப்பாக வாழும் அதிர்ஷ்ட லட்சுமியை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காது... தன் அழகுக்கும் , நிறத்திற்கும் அவள் வயல்வெளியில் கருவாடாக காய ... அதிர்ஷ்ட லட்சுமி பல்லக்கில் ஏறி பவனி வர...
அந்த பணமும் அந்த அரண்மனையும் காயத்ரி தேவியின் கண்ணை எப்போது உறுத்திக் கொண்டே இருக்க ... ஜமீன் அதிர்ஷ்ட லட்சுமிக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக தகவல் வந்தது ..
"பையன் என் பொண்ண நேசிக்கணும் அவ்வளவுதான்.. ஜமீன் பரம்பரை, பணக்காரன் அப்படித்தான் வரணும்னு அவசியம் இல்ல , அவள இருக்குறது போலவே நேசித்து அணைச்சுக்கணும் அப்படி ஒரு நல்ல பையன் இருந்தா பாருங்க "என்று தன் இளைய மாமியாரோடு ஜமீன் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்த காயத்ரி தேவிக்கு , அந்த சிறு வயதிலேயே கண்கள் வஞ்சத்தில் துடித்தது...
தண்ணி வண்டியாக சுத்தும் தன் காதலன் ஆறுமுகத்தை பிடித்து ...
"மாமா , இப்படியே எத்தனை நாளைக்கு தண்ணி வண்டியா சுத்த போற நான் சொல்ற ஐடியாவை கேட்ட... நீயும், நானும் பணக்கார வாழ்க்கை வாழலாம் அவருக்கும் ஆசையில் கண்கள் மினுங்க
நல்லவர்கள் போல அந்த அரண்மனைக்குள் இருவரும் நுழைந்தனர்.. ஜமீனுக்கு டிரைவர் வேலைக்கு வந்தவர் தான் ஆறுமுகம்... நல்லவர் போல நடித்து ஜமீனின் நம்பகத்தைப் பெற்றுக் கொண்டவர் .. அப்படியே அதிர்ஷ்ட லட்சுமியே தனது மனைவியாக திருமணம் முடித்துவிட்டார் ...
அதிர்ஷ்ட லட்சுமி நீலக்கண் அழகி , அந்த திராட்சை நிற கண் பார்தால் போதும் பேரழகு நிரம்பி வழியும்.. கருப்பாக இருந்தாலும் சூதுவாது தெரியாதவர், தன் கணவனே கண்கண்ட தெய்வம் என்று நம்பி ஏமாற்றப்பட்டது தெரியாமல் ஏமாந்து கொண்டு இருந்தார்.. தன் கணவன் தெய்வம் போல என்று நினைத்திருக்க , அவர்தான் அவள் உயிரை எடுக்க காத்திருக்கும் எமன் என்று தெரியாதே...
ஒரு நாள் அதிர்ஷ்ட லட்சுமி கோவிலுக்கு சென்று இருக்க... இவர்கள் இருவரும் வெல்வெட் படுக்கையில் உல்லாசமாக இருக்க ...
"அம்மாடி லெட்சுமி ஒரு ரெண்டு லட்சம் வேணும் எடுத்து கொடு "என்று ஃபேக்டரிக்கு போய்விட்டு வந்த ஜமீன் அவர்கள் இருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்து போக.... பயம் எல்லாம் இல்லை முதல் கொலை சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் இருவருக்கும் இருந்தது
எங்கே இந்த விஷயம் வெளியே போனால் தன்னுடைய பணக்கார வாழ்க்கை ஜமீன் மருமகன் என்ற அடையாளம் எல்லாம் போய் மீண்டும் பிச்சைக்காரனாகி விடுவோமோ என்று பயந்த ஆறுமுகம்..
"மாமா என்னை மன்னிச்சிடுங்க "என்று ஜமீனின் காலில் விழ
"தூதூ , உன்ன போய் நம்பினேனே இப்பவே என் மகக்கிட்ட உன் மானத்தை வாங்கி உன்ன இந்த ஜமீன விட்டு அடிச்சு விரட்டுறேன் பாரு" என்று சொன்னவர் தரையில் மல்லாக்க கிடந்தார்.. அவர் காலை பிடித்துக் கொண்டிருந்த ஆறுமுகம் அவரை கீழே தள்ளிவிட ..
"அம்மா ஆஆஆஆஆஆஆஆ தலையில் அடிபட்டு கீழே விழுந்த ஜமீனை கள்ளக்காதலர்கள் இருவரும் இழுத்துக் கொண்டு அவர் அறைக்கு கொண்டு போக... ஏற்கனவே இவர்கள் கள்ளத்தொடர்பு தெரிந்த அதிராவின் தாய் ராக்கம்மா கண்ணில் இது பட்டுவிட்டது ...
லெட்சுமிதான் இங்கே வேலைக்கு ராக்கம்மாவை அழைத்து வந்தது ...
அண்ணன் மனைவியான ராக்கம்மாவை பார்த்து காயத்திரி சற்று பயந்து
"அண்ணி இந்த விஷயத்தை யாருகிட்டேயும் சொல்லாதீங்க..."
"இதனால எனக்கு என்ன லாபம் ??என்று பேராசைக்காரி பார்க்க
"உங்களுக்கு என்ன வேணுமோ நான் தரேன் எனக்கு அவரோட மனைவியா இந்த ஜமீனோட லெட்சுமி ஸ்தானத்துல தோரணையா நகை பணம் அந்தஸ்துன்னு வாழனும் "
"ஆமா , எனக்கு இணையா இருக்கிற காயத்ரிதான் என்னோட மனைவியா இருக்கணும்... அதுக்கு அந்த கருவாச்சி உயிரோட இருக்கக் கூடாது..
அதே சமயம் நாம தான் இதையெல்லாம் பண்றோம்னு ஊருக்கு தெரிய கூடாது ... நல்லவங்க மாதிரி நடிச்சு எப்படி அதிர்ஷ்ட லட்சுமியை கல்யாணம் கட்டிகிட்டேனோ, அதே மாதிரி நயவஞ்சகமா நமக்கு இடைஞ்சலா இருக்கிற இவங்க ரெண்டு பேரையும் கொன்னுட்டோம்னா அந்த இடத்துக்கு காயத்திரி வந்துருவா...
"சரி, இதுல உங்களுக்கு ரெட்டை லாபம் எனக்கு என்ன இருக்கு என்று ராக்கம்மா பல்லை இளிக்க...
"இந்த ஜமீன்ல வர்ற வருமானத்துல ஒரு பங்கு மாச மாசம் உங்களுக்கு வரும்..
"எப்படி நம்புறது இதையெல்லாம் .. அவ வாழ்க்கையை சீரழிக்க போற மாதிரி என்னையும் கொன்னுட்டா... நீங்க பண்ண போற அத்தனைக்கும் நான் துணையா இருக்கேன்... ஆனா நீங்க செஞ்ச அத்தனையையும் இதோ இதுல இருக்கு என்று டேப்ரிகார்டர்ல பதிஞ்சு வச்சிருக்கேன்... நீங்க என்ன ஒரு வேளை கொன்னாலும் அது என்னைக்காவது ஒரு நாள் உங்க அத்தனை விஷயத்தையும் புட்டு புட்டு வச்சிரும்.... இது எதுவும் ஆகக்கூடாதுன்னு நினைச்சா எனக்கு எதிரா நீங்க ரெண்டு பேரும் எப்பவும் எதுவும் செய்யக்கூடாது
"ஐயோ அண்ணி கண்டிப்பா எதுவும் செய்ய மாட்டோம் குறை மயக்கமாக இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜமீன் எப்படியாவது தப்பித்து ஓடிவிட வேண்டும் என்று நினைத்து தடுமாறி எழும்ப மீண்டும் அவர் தலையில் இரும்பு கம்பியால் அடி விழுந்தது... ராக்கம்மா இரும்பு கம்பியால் அடித்த அடியில் சுருண்டு ஜமீன் கீழே விழ... கம்பியை ஆறுமுகம் கையில் கொடுத்து
பாவத்துல எனக்கும் பங்கு, ஆஸ்தியிலும் எனக்கு பங்கு உண்டு ம்ம் பிடிங்க என்று கொடுக்க ஆறுமுகம் அடுத்த அடி அடிக்க.. காயத்ரியும் தன் பங்குக்கு இரும்பு கம்பியால் அவர் நடுமண்டையில் அடிக்க மனிதன் உயிர் மகளை நினைத்து பரிதவித்துப் போக .. அவரை மூவருமாக இழுத்துக் கொண்டு வந்து மாளிகையில் உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட தலை சிதறி ஜமீன் இறந்து போனார்..
ஏற்கனவே மனைவி இறந்த துக்கத்தில் குடிக்கும் பழக்கம் கொண்ட ஜமீன், குடி போதையில் தடுமாறி அரண்மனை உச்சியிலிருந்து விழுந்துவிட்டார் என்று ஊரெல்லாம் பேச்சாகிப் போனது...
தன் தகப்ப இழந்த துக்கத்திலிருந்து அதிர்ஷ்ட லட்சுமி மீள முடியாமல் தவிக்க கணவனாக, தகப்பனாக ஆறுமுகம் தன் மனைவியை தங்க தட்டில் வைத்து தாங்கி மனைவியின் முழு நம்பிக்கையும் பெற்று ஜமீன் சாவியையும் பெற்றுக் கொண்டார்...
அவரின் ராஜ்ஜியம் ஜமீனில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தது மனைவிக்கு தெரியாமல் காயத்ரி தேவியோடு சல்லாபமாக வாழ ஆரம்பித்தார்...
ராகம்மாவுக்கு தேவைக்கு பணத்தை கொடுத்து உண்மையை மூடி மறைத்து விட்டார்...
"பிள்ளை உண்டாகி இருக்கல்ல லெட்சு ராக்கம்மா உன் கூடையே வச்சிக்க
"சரிங்க அத்தான்,
"நம்ம மகன் நல்லபடியா பிறக்கணும் தானம் தர்மம் பண்ண போறேன்
"நல்ல விஷயம் அத்தான்
"ம்ம் காசு வேணுமே ...
"உங்கிட்ட இருக்குமே அத்தான்
"அது போதல
"ம்ம் எடுத்துட்டு வர்றேன் என்று பெட்டி நெறைய கொண்டு வந்து கொடுக்க ..
"நீ என் பின்னாடி அலையுறேன்னு உன்ன கவனிக்காம விட்டிராத எனக்கு நீதான் முக்கியம் புரியுதா
"எனக்கு உங்க நேசம் புரியாதா அத்தான் போய் வாங்க என்று சிரித்த மனைவியை அணைத்து விட்ட ஆறுமுகம் ...பணத்தை கொண்டு போய் காயத்திரி மீது கொட்டி சல்லாப திருவிழாவே நடத்தி விட்டார்..
அம்மா அய்யா அடிக்கடி தோடடம் பக்கம் போறார் என்று பல வருடமாக வேலை பார்க்கும் தோட்டக்காரன் நாசுக்காக கூற
"வேலை இருக்கும் போயிருப்பார்
"இல்லைங்க அம்மா உங்க தங்கச்சியும் அவரும்
என் புருசனை குறை சொல்றீயா அவர் சொக்க தங்கம் என்று விட்டார்
சிலர் மீது கொண்ட நம்பிக்கை தானே துரோகத்தை விடையாக கொடுத்து விடுகிறது...