நாளை இரவு கதை நீக்கப்படும் வேஷம் போடும் வேடா 34
Veda34

இன்னும் சில அத்தியாயம் மட்டுமே நாளை இரவு கதை நீக்கப்படும்
34 வேஷம் போடும் வேடா !!
அந்த ஊசி குத்தும் ஏற்காட்டு குளிரில் குட்டி தீப்பொறி நடுரோட்டில் தெரிந்துக் கொண்டிருந்தது சாலைகள் இல்லாத அந்த நடு ரோட்டில் புகையை இழுத்து விட்டபடி அயோக்கியா ரோட்டோரம் அமைந்திருந்த திண்டில் உட்கார்ந்திருந்தான்
"காதலா , இவள் மீதா?? என்று கேலிச் சிரிப்பு ..
சீசீ வெறும் காதலா??
வெறும் காதலில் அவள் மீது கொண்டுள்ள மோகத்தை, பாசத்தை ,ஆசையை ஆர்வத்தை அரவணைப்பை, அன்பை , பேரன்பை நேசத்தை ஒட்டுதலை , உறவை , பிணைப்பை , நம்பிக்கையை இந்த ஒற்றைச் சொல் ஈடு கட்டி விடுமா என்ன??
தன்னை சுற்றி அத்தனையும் போலியாய் இருக்கும்போது கூட இரும்பாக சுற்றி வந்தான் ஆனால் அந்த இருதயத்திலும் சிறு ஆசை இருந்ததுவே.. அது பேராசை என்று கூட சொல்லலாம்..
எனக்கான ஒருத்தி!! எனக்கே எனக்கான ஒருத்தி!! எந்த நிலையில் என்னை கைவிடாத ஒருத்தி, எந்த நிலையிலும் என் மீது நம்பிக்கை வைத்து என் கை பிடிக்கும் ஒருத்தி , உலகமே அழிய நேரிடனும் செத்தா சேர்ந்து சாகலாம், வாழ்ந்தா சேர்ந்து சாகலாம்டா என்று அவன் முகத்தை பார்க்கும் ஒருத்தி, இந்த போலியான உறவுகளுக்கு மத்தியில் அவனை உண்மையாய் நேசிக்கும் ஒரு ஜீவனை என்றாவது கண்டு கொள்வோமா என அவன் நீல நிற கண்கள் எப்போதும் அந்த ஒருத்திக்காக மட்டும் பழுப்பு நிறமாய் மாறும்...
வைஷ்ணவி வந்து காதல் எனும் போது அவளை வெகுநேரமாக பார்த்தான், ஓகே என்றவன் பல போலி நடுவே வாழ்ந்தவன் புது போலி கண்டறிய மாட்டானா என்ன?? அவள் கண்ணில் நாளடைவில் அவனை பார்த்து பரிதாபம் கொண்டது, அய்யோ இவன் ஏன் தனிமையில் நிற்கிறான் என கரிசனை கொண்டது , பாவம் கொண்டது , அவனுக்காக கலங்கியது மெய் , ஆனால் ஒருநாள் கூட அவள் கண்ணில் அவனுக்காக நேசத்தை அவன் கண்டதே இல்லை ..அவனுக்காக துணிந்து நிற்க துடிக்க வில்லை அவனை நம்பியது இல்லை , பரிதாபம் காதல் ஆகுமா??
அவன் கேட்டது பரிதாபம் இல்லை, கரிசனை இல்லை, இரக்கம் இல்லை... அந்த ஒருத்தி வரும் போது உலகமே புதிதாக புத்துணர்வாக வேண்டும் ... அவள் சிரிக்கும் போது சிதைந்த அவன் மனம் தளிர் விட வேண்டும், ஒருத்தி ஒருத்தி அந்த ஒருத்தி என் வாழ்க்கையை புரட்டி போட வருவாளா என்று காத்திருக்க
அவள் எப்போதோ அவன் வாழ்க்கை உள்ளே அடி எடுத்து வைத்து விட்டதை அறியவில்லை, அதிமதுரா ராக்கம்மா மகள் அது போதும் வெறுக்க.. காயத்திரி அண்ணன் மகளாகவே பார்த்து விட்டான் விஷ நாக பொந்தில் வைரம் விளையுமா? சேற்றில் செந்தாமரை மலரும் என்ற கூற்று அறிந்திருந்தால் அன்றே காமவயப்பட்டிருப்பானோ??
உடல் களைத்து அயோக்கியா நடு இரவு உள்ளே வர ...
அத்தான் இஞ்சிடீ வேணுமா? என்று ஒரு குரல் இதுகாதும் கேட்காத ஒரு சொல் .. கேட்டு தலையை திருப்பி பார்க்க.. அதிரா குதித்து கொண்டு வந்து நின்றாள் ,எதையோ தின்னு வாய் முழுக்க அப்பி வைத்திருந்தாள்..
ஹார்லிக்ஸ் ஆட்டையை போட்டு தின்னேன் ஹிஹி என்று தாவணி வைத்து துடைக்க..
மணியை பார்த்தான் ரெண்டு.. இந்நேரம் இவள் என்ன செய்கிறாள் என யோசனையாக சோபாவில் அமர...
சுடசுட தோசை டீயோடு வந்து அவன் முன் நின்றவள்
நடு ராத்திரி பசி, அதான் எனக்கு போட்டேன் நீங்க தின்னுங்க நான் எனக்கு போட்டுக்கிறேன் அவள் குட்டி தொப்பை வயிறு நிறைந்தே கிடந்தது ஆக காத்திருந்து அவனை கவனிக்க ஒருத்தி , தவ்வி தவ்வி நீர் எடுக்க போன அதிமதுரா திரும்பி ஒரு பார்வை அவனை பார்த்தாள்...அயோக்கியாவுக்கு சர்வமும் நடுங்கியது....
இதே இதே பார்வை !! அவளிடம் பலதடவை வந்திருக்கிறது... அவன் மழையில் நனைந்து வரும் போது டவலை நீட்டும் போது , கையில் காயம் கண்டு ஸ்ஆஆஆ என்று உதறும் போது பேன்டெஜ் எடுத்து இந்த விரல் நீட்டும் , வேலை பளுவில் நெட்டி முறிக்கும் போது பேனை ஆன் பண்ணி விட்டுவிட்டு போவாள், எல்லாரும் பண்டிகை கொண்டாடும் போது அவன் மட்டும் ஓரமாக டிவியை பார்கும் போது அவளும் அவன் எதிரே உட்கார்ந்து புரியாத படத்தை பார்ப்பாள் .. இந்த நாளுக்கு பின்னே யோசனையாக அவளை அவன் கண்கள் கவனிக்க ஆரம்பித்தது .. கொலை செய்ய வந்துவிட்டு அவனை கொலை செய்ய முடியாது புலம்பியது அழகோ அழகு....
ப்ச் அத்தான் நீங்க தப்பு செஞ்சிருக்க மாட்டீங்க ஆனா ஏன் இதெல்லாம் பண்ணுனீங்க எனக்கு தெரிஞ்சே ஆகணுமே " என்று சுற்றிய அவள் பின் அவன் கண் சுற்றியது .... வேண்டுமென வைசுவோடு எடுத்த போட்டோவை அவள் முன் போட்டு விட்டு அயோக்கியா ஒளிந்து நின்று பார்க்க அதை எடுத்து பார்த்த அதிரா
"நீங்க ஹேப்பியா இருந்தா நான் ஹேப்பி அண்ணாச்சி ஜோடி பொருத்தம் அழகு!!" என்று நெட்டி முறித்த அவள் செயலில் இளம் சிவப்பு இதழ் முதல் முறை சிரித்தது... பின்னே சுயநலம் இல்லாத ஒருத்தியை அவன் நீலவிழி கண்டு கொண்டதே ...
அவள் உலகமே அவனாக தான் இருக்கிறான் என்று அவள் சொல்ல வேண்டுமா என்ன ...
"நீ என்ன விட்டுட்டு போக மாட்ட, காமக்காதலியா வரணுமா வர்றேன் என்று அவள் கற்பை கூட அவன் மீது கொண்ட நம்பிக்கையில் கொடுத்த அவளை வெறும் காதலி என கூறி விட முடியுமா?? என்று அவன் மீது நம்பிக்கை வைத்து அவன் தனிமைக்கும் தன்னை விருந்தாக கொடுக்க நினைத்தாளோ அன்றே அவன் திருமதி என்ற அங்கீகாரத்தை சட்டபூர்வமாக பதிவு செய்து தன் மனைவியாகத்தான் அவளை ஆட்கொண்டான் என்ற உண்மை அவள் கூட அறியாதது ..
அவள் ஒற்றைப் பார்வை பார்த்தால் ஒட்டுமொத்த வலியும் மறக்கும் அவள் ஒத்தக் கண் சிமிட்டல் கொடுத்தால் மொத்த சோர்வும் நீங்கி போகும், அவள் ஒத்தை விரல் தொடுகை கொடுத்தால் கடந்து வந்த ரணம் மறப்பான், அவள் ஒற்றை அருகாமை இந்த உலகத்தையே ஈடு கட்டிவிடும்... தனி ஒருத்தியாய் வந்து அவன் இதயத்தை சர்வ நாசமாக்கி அதனுள் பூநாகமாக புகுந்து கொண்டு படுத்தி எடுக்கிறாள் .. தினம் தினம் நேசவிஷம் கக்குகிறாள் அது காமமோ, காதலோ மோகமோ சாபமோ ஆனால் அலுங்காது வாங்க பிடிக்கிறது....
சலித்ததும் தூக்கி போடும் காதல் என்று இதை வரையறுக்க முடியாது , கடமை வந்தவுடன் குறைந்து போகும் காதல் என்ற இதை களங்கப்படுத்த முடியாது , முதுமை வந்ததும் காதலா அது எங்கே இருக்கிறது என்று தேடும் அந்த முற்று பெற்ற காதலில் இந்த நேசத்தை முடிந்து வைக்க முடியாது ..
காதலித்து தான் திருமணம் செய்தார்கள் ஆனால் என்று திருமணம் செய்தார்களோ , அன்று காதல் முடிந்து போனது... காதலோடு தான் திருமண வாழ்க்கையில் இணைந்து வாழ்ந்தார்கள் , ஆனால் எப்போது பிள்ளைகள் பிறந்தார்களோ? அப்போது அந்த பாசம் பங்கிடப்பட்டு விட்டது, காதலோடு தான் முதுமை வரை வாழ்ந்தார்கள்... ஆனால் முதுமை வந்தவுடன் அந்த காதலில் தொய்வு வந்து விட்டது சலிப்பு வந்துவிட்டது என்று காதல் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்தில்..
இன்று தொட்டு அவன் ஜீவன் போகும் மட்டும் ஒருத்தியின் நினைவுகளை அவன் இருதயத்தை விட்டு அழிக்க முடியாது அவள் மீது கொண்டுள்ள இந்த காமமோ , நேசமோ ஏதோ ஒன்று இன்று போல் அவன் இறுதிவரை பங்கீடு இல்லாமல் தொய்வு இல்லாமல் சலிப்பு இல்லாமல் இருக்கும் என்பது 100 சதவிகிதம் உண்மை... அப்படி என்றால் இது காதலா?? அவள் காதலியா ??
என் கல்லறையில் வைக்க ஒற்றை மலர் கூட போதும் என்றான்
ஆனால் நீ வாழ வனமாய் நான் வருகிறேன் என்றாள்
தவிக்கும் நாவிற்கு ஒரு துளி நீர் போதும் என்றான் அமுதக் கடலாய் வருகிறேன் என்றாள்
நான் ரசிக்க ஹைக்கூ கவிதையாவது போதும் என்றான்
படித்தே முடிக்க முடியாத தமிழ் அகராதியாய் வந்தாள்
என் இருட்டில் வெளிச்சம் கொடுக்க ஒரு மெழுகுவர்த்தி போதும் என்றான்
உன் இருட்டின் சுவடே தெரியாமல் நிலவாய் வருகிறேன் என்றாள்
என் வெப்பத்தை குறைக்க மழைத்துளி போதும் என்றான்
பனி மலையாய் வந்து ஆட்கொண்டாள்
இல்லை என்ற சொல்லை எல்லாம் மாற்றி அமைக்க வந்தவள் அவள் !!
வேடனை வேட்டையாடும் வேடச்சி அவள் !!
வேஷமாய் சுற்றி திரிந்தாலும் வேஷமில்லாத நேசசுரபி அவள் !!
"டேய் அத்தான் எங்கடா போய் தொலைஞ்ச?? என்று கால்களை நொண்டிக்கொண்டே அதிரா வெளியே வர ... யாரோ கதறி அழும் சத்தம் வந்த இரவை கிழித்தது...
மருத்துவமனை வராண்டாவில் உட்கார்ந்து தலையை விரித்துப் போட்டு பிச்சைக்காரி போல் உருவத்தில் ஏதோ ஒரு பிம்பம் கதறி துடித்தது
"இந்த கேரக்டர எங்கேயோ பார்த்திருக்குமே" என்று அதிரா அருகே போக ...
"அடடே நம்ம அத்தைக்காரி ,
நர்ஸ் அக்கா இங்க வாங்க ,அந்த பொம்பள எதுக்கு கத்தி கத்தி சிரிக்குது
ம்ம் நல்ல குசும்புதான் உனக்கு, சிரிக்கவா செய்து, அது இரண்டு மணி நேரமா கதறிக்கிட்டு கிடக்குது
அதான் எதுக்கு ...
ம்ம் ஒரு மாசத்துக்கு முன்னாடி வயிறு வலிக்குதுன்னு வந்துச்சு , இன்னைக்கு தான் ரிப்போர்ட் வந்திருக்கு... பிறப்புறுப்பு கேன்சர் அதுவும் ஃபைனல் ஸ்டேஜ் ...
ஓஓஓ
புருஷன் வேற கை, கால் இழுத்துக்கிட்டு கிடக்கிறான் போல இருக்கு, குடும்பத்தில் உள்ளவங்க யாருமே பாக்கல போல , சோ ஏதாவது முதியோர் இல்லத்தில் போய் சேரணும்னு ரெண்டு பேரும் ஒவ்வொரு முதியோர் இல்லமா போயி பார்த்து இருக்காங்க ... யாருமே சேர்த்துக்கல போல இருக்கு... எத்தனை நாள் தான் பசி தாங்குறது கை கால் வராத புருஷனை காட்டி பிச்சை எடுக்குது...
"ஓஓஓஓ நல்ல தொழில் கண்டுபிடிச்சிருக்கே
"அதுக்கும் பங்கம் மாதிரி கேன்சர் வேற வந்துடுச்சா அதான் உட்கார்ந்து அழுது தொலைக்குது... பாவம்தான் பார்க்க முடியும், வேற என்ன செய்ய முடியும் ... அது என்ன பாவம் செஞ்சதோ இதை எல்லாம் அனுபவிக்கணும்னு இருக்கு... அது சாகுற வரைக்கும் ஒவ்வொரு நாளும் மரணத்தை பக்கத்துல போய் பார்த்துட்டு பார்த்துட்டு வரும்..
ரொம்ப வலிக்குமோ அக்கா "
"நிதம் நிதம் உயிர் போகும் ,ஏதாவது வலி மருந்து கொடுத்தா வலி குறையும்... ஆனா அந்த மருந்து எல்லாம் ரொம்ப காஸ்ட்லி , இந்த மாதிரி சாதாரண பட்ட ஆளுங்களுக்கு எல்லாம் கிடைக்கவும் செய்யாது வலியை தாங்கிதான் ஆகணும் இதையெல்லாம் அனுபவிச்சு தான் ஆகணும்னு அதுக்கு விதியை யாரோ எழுதி வச்சிருக்காங்க
"அந்த விதியை யார் எழுதுனதுன்னு எனக்கு தெரியுமே .. ஐயோ பாக்கவே கண்கொள்ளா காட்சியா இருக்கே, இத ஒரு வீடியோவை எடுத்துட்டு போயி என் அத்தான்கிட்ட காட்டுனா எப்படி இருக்கும்? என்று முடி எல்லாம் போய் உடல் பாதியாக மெலிந்து கிழிந்த சேலையோடு உடலெங்கும் அழுக்காய் உணவில்லாமல் உறக்கமில்லாமல். கால்கள் கைகள் மரத்து பாதங்கள் வெடித்து , அழுவதற்கு கூட தெம்பு இல்லாமல் உட்கார்ந்திருந்த காயத்ரியையும் அதன் அருகே வீல்சேரில் உருக்குலைந்து எலும்பாக கிடந்த ஆறுமுகத்தையும் வீடியோவாக எடுத்துக் கொண்டாள் ....
யார் நம்மை பார்க்கிறார்கள் என்று வஞ்சம் நிறைந்த உள்ளத்தோடு இந்த உலகில் வேட்டையாட தந்திரமாய் சுற்றிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு தெரியவில்லை... இந்த உலகை படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான்!! அவன் கணக்கிலிருந்து ஒருவனும் தப்பிக்க இயலாது, மனிதனாவது மனசாட்சி பார்த்துதான் நியாயம் தீர்ப்பான்... ஆனால், இறைவன் தீர்க்கும் நியாயம் படு பயங்கரமாக இருக்கும் என்ற உண்மை ஏனோ இந்த மனித குலத்திற்கு தெரிவதில்லை....
உள்ளது போதுமென்று வாழுங்கள்
பேராசை கொண்டவனுக்கு அவன் ஆசையே அவனுக்கு சவப்பெட்டி செய்து விடும் !!