வேஷம் போடும் வேடா33

Veda33

வேஷம் போடும் வேடா33

33 வேஷம் போடும் வேடா !!

ஐயோ பாவம்!! நம்ம பிரெண்டுக்கு லவ் பிரேக்கப் ஆகி போச்சே, ரெண்டு பேரையும் ஏதாவது செஞ்சு சேர்த்து வைப்போன்னு நெனச்சு வந்ததுக்கு , எனக்கு தான் பெரிய பல்பு தந்துட்டாங்களோ?என்று நித்யாதான் வாயை பிளந்தபடி நின்றாள் ...

"ஆமா இதுக லவ் பண்றது இதுகளுக்கு தெரியுதா இல்லையா என்று நித்தியா நாடியை சொரிந்து கொண்டே தன் தோழியை பார்ப்பதற்கு உள்ளே நுழையப் போக ...

சிஸ்டர் என்ற அயோக்கியா குரலில் நித்யா தலையை திருப்பி பார்த்தாள்.. 

 சிஸ்டரா இது எப்போ இருந்து என்று நினைத்துக் கொண்டவள்

"என்ன அண்ணா 

"இந்த மருந்த டாக்டர் வாங்கிட்டு வர சொன்னார் கொஞ்சம் உள்ள குடுத்துடுங்க நான் ஒரு தம் போட்டுட்டு வந்துடுறேன்.... எங்க போயிருக்கேன்னு கேட்டா ஒன்னும் சொல்ல வேண்டாம் அவளே கண்டுபிடிச்சிடுவா தம் போட போயிருக்கேன்னு.. பத்து நிமிஷத்துல வந்துடுறேன்" என்று அவள் கையில் அயோக்கிய பொருட்களை கொடுத்துவிட்டு வெளியே போக..

அதி காயம் எப்படி இருக்கு?? என்று நித்தியா உள்ளே வர 

அப்படியே ஜில்லுன்னு இருக்கு 

இருக்கும் இருக்கும் 

"அத்தான எங்க தம்மடிக்க போயிருக்காரோ இனிமே ரெண்டு தான் தம் முழுக்க அடிச்சிட்டு தான் உள்ள வருவார்..என்னடி நீ என்னை அப்படியே பார்த்துட்டு இருக்க... நித்தி நித்தி 

"ஹான் 

"இப்போ அவர் பதறி என்ன தூக்கிட்டு வரல, அது நான் இல்லை நீதான் ஆவ்ஊஊஊ ஏய் அடிக்காதடி வலிக்குது" குளுக்கோஸ் டப்பா அங்கு வைத்திருந்த பொருளை எல்லாம் நித்தியா தூக்கி தன் தோழி மீது போட

"ஏண்டி இப்படி என் மேல கொலவெறி தாக்குதல் பண்ற ... என்ன ஆனாலும் உன் லவ்வர் கூட உன்னை சேர்த்து வைக்கிறேன்டி 

"உன்ன, இன்னொருவாட்டி அப்படி சொன்ன உன் கழுத்தை நெரிச்சு குரல்வளையை கடிச்சு கொதறப்போறேன் பாத்துக்கோ என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவள் அருகே படுக்கையில் அமர்ந்தாள் நித்யா 

"அவர் என்னன்னா மிஸஸ் அயோக்கியான்னு அவ்வளவு உரிமையா உன் பேரை சொல்றார்... நீ அவருக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு புட்டு புட்டு வைக்கிற... இதுக்கு பேர் காமமாடி??

"ம்ம் எங்களுக்கு இதுக்கு பேர் காமம் தான் 

"லூசு மாதிரி பேசாத இது பியூர் லவ் 

"அய்யய்யோ , நாங்க லவ் எல்லாம் பண்ணலப்பா என்று முகத்தை சுளித்த அதிரா கண்டு நித்தியா தான் குழம்பி போய் அவளை பார்க்க..

"நீ லவ் எல்லாம் பார்த்து இருக்கியா இல்லையா... மணிக்கணக்கா உட்கார்ந்து பேசணும், ஒருத்தருக்காக ஒருத்தர் அழுது புலம்பணும் விட்டுட்டு போனா ஐயோ அம்மா போயிட்டாருன்னு கதறனும் , ஒரு நாள் கூட அவர் இல்லாம இருக்கக் கூடாது.. நிறைய அவர் கூட இருக்கணும்னு ஆசை படனும், நிறைய பேசணும் புரிஞ்சுக்க ட்ரை பண்ணனும், புரிஞ்சுக்கணும் , அவனுக்கு என்ன தேவைன்னு நான் செய்யணும், எனக்கு என்ன தேவைன்னு அவர் செய்யணும்... கையை கோர்த்துக்கிட்டே ஊரெல்லாம் சுத்தணும்.. குட்டி குட்டி சண்டை அதுக்கு பிறகு சேர்வது , அதுக்கு பிரகவு, இதெல்லாம்தான் காதல் அப்படிதான ...

"ஆமான்னு நினைக்கிறேன் 

"ம்ம் நாங்க என்னைக்காவது அப்படி இருக்க பார்த்திருக்கியா 

"ம்ஹூம் 

"அப்போ எப்படி இது காதல் ஆகும்..

"அதானே , இதுவும் காதல் போல தான்டி இருக்கு சொல்லப்போனா , எல்லாரும் சொல்ற இந்த அஸ்யூசுவல் காதல் மாதிரி இல்லாம ... இது அப்நார்மலா ரொம்ப அழகா இருக்கு அதிரா.. எப்படி சொல்றது எனக்கு தெரியல, தூரத்தில் இருந்து பார்க்கிற எனக்கே, வாவ் எவ்வளவு அழகான காதல்னு மெய் சிலிர்க்குது இதை போய் காமம்னு எப்படி உன்னால அக்சப்ட் பண்ண முடியுது ... உங்க ரெண்டு பேருக்கு இடையில நான் அந்த காமத்தை ஒத்த செகண்ட் கூட பாக்கல அதி .. அதுல நிறைஞ்சுக் கொட்டி கிடக்கிறது அத்தனையும் காதல் ... 

"ப்ச எனக்கு அப்படி தெரில போ "

"விளையாடாதடி மண்டை குழம்பி போய் இருக்கு நீயும் என்னை குழப்பி விட்டேன்னா, உண்மையிலேயே வீடு போய் சேர மாட்டேன் காரை கொண்டு போய் எங்கேயாவது விட்டுருவேன் பாத்துக்கோ... உங்க காதலுக்காக ஒரு உயிர் போன பாவம் உன்ன தான் சேரும் சொல்லிட்டேன், அப்பறம் பேயா வந்தாவது ரெண்டு பேரையும் பிரிச்சு விட்டிருவேன் 

"ஹாஹா, அப்படி வந்தாலும் எங்க ரெண்டு பேரையும் ஒன்னும் செய்ய முடியாது.. ஏன்னா நாங்க உடம்பு அளவுல சேர்ந்த ஜோடி இல்லடி ஆன்மாவோட ஆன்மா பின்னி பிணைஞ்ச ஜோடி, அவ்வளவு சீக்கிரமாக இந்த ரெண்டு பேரையும் பிரிவு என்ன மரணம் கூட ஒன்னும் பண்ண முடியாது.."

"நீ சொன்ன மாதிரி இது தான் காதலான்னு இப்பவும் என்னால ஏற்றுக்கொள்ள முடியல, தாவணி போட்ட வயசுல அடிக்கடி இந்த வீட்டுக்கு நான் வருவேன் எல்லாரும் அந்த தேக்குமர சாப்பாட்டு மேஜையில் வெள்ளித் தட்டுல சாப்பிடும் போது எல்லாரையும் ஒரு பார்வை பாத்துட்டு வெளியே போய் வேலைக்காரங்களுக்கு வச்சிருக்க சாப்பாட்டுல எடுத்து சாப்பிடுவார்... அப்போ என் குட்டி இருதயத்துக்குள்ள பல நூறு ஈட்டி குத்தி போகும் அவர் போனதும் நானும் அதே சாப்பாட்டை தான் சாப்பிடுவேன்... எங்கேயோ நான் இருந்தாலும் அடிக்கடி அவருடைய நினைவுகள் அடித்துக்கிட்டே இருக்கும் , அதுதான் காதலான்னு எனக்கு தெரியாது .... என் தாயோட மரணம் அவர் மேல கோபத்தை வரவச்சது உண்மை!! ஆனா, அவர் மேல தப்பு இருக்காதுன்னு ஒரு நம்பிக்கை அந்த நம்பிக்கைக்கு பேர் என்ன தெரியாது .. ஒருவேளை தப்பு பண்ணி இருந்திருந்தா கொலைக்கு கொலை பண்ணனும்னு துணிஞ்சுதான் மறுபடியும் இந்த வீட்டுக்குள்ள வந்தது.. ஆனா 100% மனசு சொன்ன ஒரே ஒரு பதில், அவர் பக்கத்துல தப்பு இருக்காதுன்னுதான் தேடுனேன் , அவர் யார் என்ன? எதுக்காக அத்தனை கேள்விக்கும் விடை ஒவ்வொன்னா கண்டுபிடிச்சேன்.. அதுல கிடைச்சது தான் வைசு அக்காவும் அவரும் காதலிக்கிறான்னு தெரியும் போது , வருத்தப்படல,.. அவருக்கான ஒரு அன்பு நேசம் கிடைச்சிருச்சு அவர் இனிமையாவது நல்லா வாழ்வாரேன்னு ஒரு சந்தோஷத்தை எனக்கு கொடுத்தது... ஆனா அது கூட போலின்னு தெரிஞ்ச போது, அவர் உடைஞ்சாரோ இல்லையோ? நான் சுக்கு நூறா உடைஞ்சு போயிட்டேன்... 

"இந்த காதல் ஒன்னாவது அவர் இழந்ததை எல்லாம் திருப்பிக் கொடுக்கும்னு நினைச்சேன், நல்லவேளை அது போலின்னு அவருக்கு தெரிஞ்சது மனசுல வைசுவை சுமக்கல சுமந்து இருந்தா உடைஞ்சிருப்பாரே..ஒரு தடவை காதல் போலின்னு கண்ணால பாத்துட்டவர் , இனிமே அந்த காதலுக்கு தன் வாழ்க்கையில் இடம் கொடுக்க மாட்டார்னு எனக்கு தெரியும்.. காதல் தானே உன் வாழ்க்கைக்குள்ள வர முடியாது.. காமமா நான் என்னையை கொடுக்குறேன் அவ்வளவுதான் கொடுத்தாச்சு.. இதுவும் காதலான்னு எனக்கு தெரியாது.. அவர் பட்ட கஷ்டத்துக்கு அத்தனை பேரும் கஷ்டப்படும்போது நானும் சந்தோஷப்படுறேன்... இதுவும் காதலான்னு எனக்கு தெரியாது , அவர் அம்மா சாவுக்கு காரணமான மீதி ரெண்டு பேரும் சாகுற அந்த நாள்ல தான் என் புள்ள இந்த உலகத்துல பிறக்கணும்னு அவருக்குள்ள ஒரு ஆசை, அது அவர் சொல்லி தான் எனக்கு தெரியணும்னு அவசியம் இல்ல ... அவருக்காக என் தாய்மையை தள்ளி போட்டு இருக்கேன்.... 

அதி 

அவரோட உடலோடு உடல் சேர்ந்த அன்னைக்கு நான் அவரோட திருமதி ஆகல, அவர் விரலோட விரல் சேர்த்த அன்னைக்கே நான் அவரோட திருமதி ஆயிட்டேன்... இதுக்கு ரிஜிஸ்டர் தான் பண்ணனும்னு அவசியம் இல்லை, முதல் முதலா நான் உனக்கு தான்னு அவர் கைய புடிச்சேன் பாரு அப்பமே ஆயிரம் சாட்சி கையெழுத்து எங்களுக்குள்ள விழுந்துடுச்சு... இப்பவும் இதையெல்லாம் சாதாரண ஒரு காதலுக்குள்ள நாங்க ரெண்டு பேரும் அடைக்க விரும்பல... 

"காதல் நாட்கள் போக போக கரைய ஆரம்பிச்சிரும். அந்தக் காதல் எங்களுக்கு தேவையில்லை.... நூறு வயசுல அந்த சுருங்கி போன முகமும் நரையான அவர் முடியும் என்ன ரசிக்க வைக்கும்... என் தளர்ந்து போன உடலும் , கூன் விழுந்த நடையும் அவர ரசிக்க வைக்கும் இது காதலை எல்லாம் தாண்டுனது... இத காதல்னு ஒரு வட்டத்துக்குள்ள நாங்க அடைக்க விரும்பல, நாங்க காதலர்கள் இல்ல நாங்க கணவன் மனைவி இல்ல , எப்பவுமே நாங்க காம காதலர்கள் தான் ... புத்துணர்வோட சுற்றி திரிகிற காம காதலர்கள்.. அவருக்கு தேவையானது காதலி இல்லை , காதல் இல்லை, மனைவி இல்லை , அவருக்கு தேவை அவருக்கான உலகம், அவருக்கான வாழ்க்கை, அவருக்கான வாழ்க்கை நான் , அவருக்கான உலகம் நான் அவ்வளவு தான் ... அவர் காதலியா இருக்க எனக்கு விருப்பம் இல்லை அவர் உலகமா இருக்கத்தான் எனக்கு விருப்பம் .. 

"உனக்கு ஒரு சர்ப்ரைஸ் சொல்லவா"

என்ன ??

"அவர் ஆபிஸ்ல பெரிய அவங்க அம்மா போட்டா இருக்குமே பார்த்து இருக்கியா ??

"ம்ம் பெருசா அழகா இருக்கும் 

"இதுதான் உன் குறை கண்ணு "என்று தன் போனை எடுத்து அந்த போட்டவை காட்ட 

"இப்ப பாரு 

"அதுல என்னடி இருக்கு அவங்க அம்மா இருக்காங்க "

"ஷூம் பண்ணி பாரு "

"ம்ம் நித்யா போட்டோவை ஜூம் பண்ண பண்ண கண்கள் விரிந்தது.. குட்டி குட்டியாக அதிரா புகைப்படம் சாக்லேட் தின்றபடி கட்டலில் தலைகீழாக கிடப்பது போல் , ஏதோ யோசித்தபடி, வாய் நிறைய சோற்றோடு.. தலையை சொரிந்து கொண்டு, கண்ணை சுருக்கி, உதட்டை பிதுக்கி உச்சி கொட்டி, குரங்களுக்கு இடையே உட்கார்ந்து ஏதோ புலம்புவது போல , ஸ்கூட்டி ஓட்ட தெரியாது போய் விழுந்து கிடப்பது, மழையில் நனைந்து, காய்ச்சலில் முகம் வீங்கி, பல் வலியில் உதடு வீங்கி அவள் ஒவ்வொரு உணர்வையும் போட்டாவாக எடுத்து அதை வைத்து தன் தாயின் உருவத்தை பெரிதாக கொண்டு வந்திருக்க ... எல்லார் கண்ணுக்கும் அஷ்டலட்சுமி படம் தான் தெரியும்.. அதை துல்லியமாக பார்த்தால் மட்டுமே அதில் கோடிக்கணக்கான அதிரா புகைப்படம் இருப்பது செரியும் அதில் அவளின் சில உணர்ச்சிமட்டும் கிடைக்கவே இல்லை.. அவள் உடைந்து நிற்பது, அழுது வடிவது , கண்கள் கலங்கி நிற்பது, கதறுவது இவை தேடியும் இன்று வரை கிடைக்கவில்லை.. 

"இதுல அய்யாவுக்கு வருத்தம் என் அழுகாச்சி போட்டோ ஒன்னு கூட இல்லைன்னு , அழுவாச்சி மூஞ்சியையும் இதுல வைக்க தான் என்ன அழ வைக்க தீயா சுத்துறார் , சிக்குவேனா என்ன?? நானாவது அழுறதாவது.... சும்மாவே என் மூஞ்சை பார்க்க சகிக்க முடியாது அழுத மூஞ்சை போட்டோ எடுத்தா எவ்வளவு கேவலமா இருக்கும் ... பார்த்துடுறேன், எப்படி அழ வைக்கிறார்னு ... நானும் அழுவேன் , நானும் உடைஞ்சு போய் கத்துவேன், நானும் கதறுவேன்... எப்போது தெரியுமா அவர் நாசியை விட்டு சுவாசம் போகிற அந்த நிமிஷம் அதுதான் என்னோட முதல் அழுகை என்னோட கடைசி அழுகையாவும் இருக்கும்.. அப்பவும் என் அழுகையை அவர் பார்க்க முடியாதே என்னு கண்ணை சிமிட்டிய அதிரா ...

"அவர் சுவாசம் இந்த உலகத்தை விட்டு போகும் அடுத்த நோடி அவர் சுவாசத்தோட கலந்து சேர்ந்தே போயிடும் ஏன்னா எனக்காக அவர் காத்திருப்பாரே, பின்னாடி வருவான்னு ஏமாத்த மாட்டேன், அங்கேயும் போய் லஸ்ட் பண்ணுவோம்ல "என்று உதட்டை சுளித்தாள்... 

சோ இனிமே எங்களை லவ்வர்ஸ்னு சொன்ன மண்டைய ஒடச்சிடுவேன் பாத்துக்கோ என்று சொன்ன அதிராவை கைகள் கட்டிக்கொண்டு நித்தியா பேச மொழி இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்...

இப்ப சொல்லுடி நாங்க லவ்வரா 

ம்ஹூம் இல்ல லஸ்டர் 

அது நித்தியா அதிராவை மெல்ல அணைத்து அவள் கையைப் பிடித்துக் கொண்டவள்..

அவருக்கு எதுவுமே கிடைக்கல .... ஆனா உனக்கு கிடைச்ச எதுவுமே உன்ன சந்தோஷப்படுத்தல அதி, நீயும் அவரை போலத்தான்.. அதான், கடவுள் உன்னை அவருக்கு கொடுத்திருக்கார் .. அவரை உனக்கு கொடுத்திருக்கார், நீங்க காதலிப்பிங்களோ இல்ல லஸ்ட்டரா இருப்பீங்களோ ஆனா ஒருத்தரோட ஒருத்தர் கடைசி வரைக்கும் இருக்கணும் அவ்வளவு தான் என் ஆசை என்று நித்யா கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வெளியே போக ...

இவ எதுக்கு அழுதுகிட்டே போறா, நாம என்ன அப்படியா செண்டிமெண்டல் சீன் போட்டோம் .. அய்யய்யோ இவளை வச்சு தானே நிறைய டெமோ எடுக்க வேண்டியது இருந்தது , பொசுக்குன்னு போயிட்டாளே இப்போ அவர்கிட்ட யாரை வச்சு டெமோ பார்க்கிறது ன ஏம்மா நர்ஸ் உனக்கு ஏதாவது லஸ்ட் பார்ட்னர் வேணுமா என்று உள்ளே வந்த நர்சை அதிரா கேட்க , அது பாவமாக முழித்துக் கொண்டு போனது...