வேஷம் போடும் வேடா 32
Veda32

32 வேஷம் போடும் வேடா !!
"லீவ் நாள் கூட தூங்க விடாம காலையிலேயே எழுப்பி பல்லு கூட ஒழுங்கா விளக்கவிடாம காரில தூக்கி போட்டு எங்கடி கூட்டிட்டு போற ... தூக்கத்தில் கரகம் ஆடிக்கொண்டிருந்தாள் அதிரா.. நித்தியா காரை ஓட்டியபடி அவளை திரும்பி பார்த்தாள்..
"ராத்திரி முழுக்க நல்லா தூங்கி இருக்க போல இருக்கு கண்ணெல்லாம் சிவந்து இருக்கு
"இப்ப நான் தூங்கினது தான் உன் பிரச்சனையா?
"ப்ச் கொஞ்ச நேரம் நீங்க ரெண்டு பேரும் ஒட்டி நின்னதை பார்த்தே எனக்கு ராத்திரி முழுக்க தூக்கமே வரல தெரியுமா .. நீ அவர் கூட அப்படியெல்லாம் இருந்துட்டு எப்படி தூங்கின ??
"நானா அப்படி இருந்தேன் நீ தானே, அப்படி இருந்த அதனால உனக்கு ஒரு மாதிரி இருந்திருக்குமா இருக்கும்... எனக்கு எதுவும் செய்யலையே, வந்து படுத்த உடனே குறட்டை விட்டு தூங்கிட்டேன்.. ஆமா இப்போ அம்மையார் அவசரமா கார் எடுத்துட்டு எங்க போறீங்க ?
"காலையிலேயே லவ் பிராக்டிஸ் பண்ணலாம்னு முடிவு எடுத்துட்டேன்.. இன்னைக்கு லீவு தானே காலையில் இருந்து நைட் வரைக்கும் சார் கூடையே நாம இருக்க போறோம், இன்னைக்கு எப்படியாவது தைரியத்தை வர வச்சு ஏதாவது செஞ்சே தீர்வேன் என்ற நித்தியாவின் தன்னம்பிக்கையை அவள் தோளில் தட்டி பாராட்டிய அதிரா
மங்கலம் உண்டாகட்டும்!! உன் துணிவை நான் பாராட்டுறேன் இன்னைக்கு கண்டிப்பா உனக்கு நல்லதே நடக்கும்னு நம்புவோம்...
ம்ம் காரை விட்டுட்டு வர்றேன் சார் வந்துட்டாரான்னு போய் பாரு "
"ஓகே மேடம் என்று அதிரா அவன் அறை உள்ளே நுழைய அவன் இல்லே...
"சார் வரலையா அண்ணா
எப்பவும் 10 மணிக்கு ஆபிஸ் வந்துருவாரே"
"நேத்து ராத்திரி வீட்டுக்கு போகவே விடியல் தாண்டிடுச்சும்மா ...தூங்கிட்டாரு போல இருக்கு, ரொம்ப நாள் கழிச்சு நேத்துதான் சார் தூங்கி பார்த்து இருக்கேன்... எப்போதும் ராத்திரி ராக்கோழி மாதிரி உட்கார்ந்து லேப்டாப்பை தட்டிக்கிட்டு இருப்பார் .. ராத்திரி முழுக்க கிட்டத்தட்ட ரெண்டு பாக்கெட் சிகரெட் இழுத்து இழுத்து போடுவார்.. அவர் மேல அக்கறை இருந்தாலும் நாம சொல்ல முடியாது இல்லம்மா பார்க்க பாவமா இருக்கும்... ஏதோ மனசுக்குள்ள போட்டு குழப்பிக்கிட்டு இருக்காருன்னு அவர் இருக்கிற ஜாடையே தெரியும், இந்த நீச்சல் குளத்துல கால உள்ள போட்டுக்கிட்டு அப்படியே உட்கார்ந்து புகையை விட்டு தள்ளுவார்.. பகல் வந்தது கூட தெரியாம சில நேரம் யோசனையா இருப்பார், நேத்து சார் இன்னும் வரலையேன்னு போய் பார்த்தேன் சோபாவுல படுத்து அசைய கூட மறந்து நல்ல தூக்கம்... குறட்டை கூட விட்டாருன்னா பாத்துக்கோங்களேன் காலையில தான் எழும்பி வீட்டுக்கு போய் ரெடியாக போயிருக்கார் "என்று வாட்ச்மேன் அவன் அறையில் அங்கும் இங்கும் கலைந்த பொருட்களை சரியாக அடுக்கி வைத்துக் கொண்டிருக்க...
"ஒழுங்கா சாப்பிடுறாரா அண்ணா ?
"எங்க எப்பவாவது அதுவும் ஒழுங்கா சாப்பிட்ட மாதிரி இல்ல ஃபாரின் ஆர்டர் நிறைய வாங்கி வச்சிருக்கார் போல இருக்கு, முழுக்க முழுக்க வேலை... யாருக்காகத்தான் இப்படி சம்பாதிக்கிறாரோ தெரியல" என்று அவர் பெருமூச்சு விட்டு விட்டு வெளியே போனார்
"பாவம்டி அயோக்கிய சார் அப்படி சாருக்கு என்ன பிரச்சனை ...நித்யா உச்சி கொட்ட
"ரொம்ப நாளா காஞ்சு போய் கிடந்திருப்பாரு , உடம்பு குறுகுறுன்னு வந்திருக்கும், தூக்கம் வராம தவிச்சிருப்பார் அதான் நீ வந்துட்டல்ல இனி எல்லாம் சரியா நடக்கும் ...
"ம்ம் அவரை எதுக்கு ஏங்க விட கூடாதுடி
"என்ன உன் நல்ல எண்ணம் ,அதோ உன் ஆள் வந்தாச்சு என்றதும் நித்தியா தலையை திருப்பி பார்க்க...
காரிலிருந்து கூலர்சை கையில் சுழற்றிக்கொண்டு ஃபார்மல் சர்ட் பேண்டில் இறங்கி வந்தான் அயோக்கியா.. கருப்பு கட்டம்போட்ட சட்டை ஜீன்ஸ் பேண்ட்.. கையில் சுழற்றிக் கொண்டிருந்த கூலர்சை தூக்கி சட்டையில் மாட்டிக் கொண்டு அங்கிருந்தே பழுப்பு கண்களால் நித்தியாவை பார்த்து ஹாய் என்று ஸ்டைலாக ஒரு பறக்கும் முத்தத்தையும் கொடுத்துவிட்டு ...
"என்ன இன்னைக்கு காலையிலேயே வந்தாச்சு நித்யா
"இன்னைக்கு காலேஜ் கிடையாது, அதான் காலையிலேயே வந்துட்டோம்... உங்களுக்காக வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு வந்து இருக்கேன் சார் என்று நித்தியா டிபன் பாக்சை நீட்ட ஓடி வந்து டிபன் பாக்ஸை பிடுங்கிக் கொண்ட அதிரா..
அடியேய் நித்தி, உனக்கு அறிவே இல்ல .. நேத்து தானே சொன்னேன் இப்படி எல்லாம் நார்மலா பண்ணுனா மூட் வராதுன்னு
"ஓஓஓஓ இப்ப நான் என்ன செய்ய ...
"ப்ச் அதை வாயால சொன்னா புரியாது ஹான் ,இப்ப பாரு நான் தான் நித்தியா, நான் என்ன பண்றேன்னு பாரு அதுப்படி செய் புரியுதா என்றதும் நித்தியா தலையை சொரிந்து கொண்டே
சரி
நல்லா வாட்ச் பண்ணு ஓகே "
"ம்ம அதிரா அவன் பக்கத்தில் போய் அயோக்கியாவின் சட்டை காலரை பிடித்து இழுத்து
"எவ்வளவு நேரமாடா காத்து இருக்கணும்
"நான் வேணும்னா காத்துதான்டி இருக்கணும் ... தன் நெஞ்சோடு அவனை மோத விட்டவள், அவன் கால்கள் மீது தன் கால் வைத்து ஏறி, அவன் கையைப் பிடித்து தன் இடையூறு கோர்த்துக் கொண்டவள் .. அவன் உயரத்திற்கு தன் கால்களை இன்னும் எக்கி நிற்க தடுமாற.... அவள் இடையோடு தூக்கி தன் உயரத்திற்கு அவளைக் கொண்டு வந்தவன்
என்ன என்று புருவம் வளைத்து அவளிடம் கேட்க
சேர்ந்து சாப்பிடலாமா? என்றவள் கன்னம் அவன் கன்னத்தோடு உரச
சாப்பிட்டுட்டா போச்சு என்று அவனும் கிசுகிசுக்க
உள்ள போய் சாப்பிடலாமா? என்றவள் அழுத்தம் கொடுத்து அவன் நெஞ்சில் இடிக்க ,
"உள்ள போனா வேற நிறைய கேட்பேனே
எல்லாத்தையும் கொடுக்க எனக்கு சம்மதம் தான்
"நீ என்னடி சம்மதம் சொல்ல , நானே கடிச்சு எடுத்துக்குவேன்
"தெரியுமே, அப்போ எடுத்துக்க வேண்டியது தானே என்றவள் அவன் காது மடலை நாவால் நிரட அவ்வளவுதான் அவளை ஒற்றைக்கையால் தூக்கிக்கொண்டு இடையில் இருந்த புளிப்பு மிட்டாயை இருவரும் பார்க்காது அறைக்குள் போய்விட ....
அயோக்கியா இருக்கையில் போய் அவளை தன் மடியில் வைத்துக் கொண்டு அயோக்கியா அமர்ந்தான்...
கையில் வைத்திருந்த டிபன் பாக்ஸை திறந்து உணவை அள்ளி அவன் வாயில் கொடுத்தவள்
"உடம்ப நல்லா ஆரோக்கியமா பார்த்தாதானே நாலஞ்சு லஸ்ட் பார்ட்னரை வச்சு மெயின்டெய்ன் பண்ண முடியும் ...
"அப்போ டெய்லி நீயே தாடி.... போதும் என்று முகத்தை திருப்ப அவளும் தின்று ஏப்பம் விட்டவள்.. அவனுக்கு போன் வரவும் அதை ஆன் பண்ணி அவன் காதில் வைக்க , அவள் மார்பில் உதட்டின் ஈரத்தை துடைத்து கொண்டே ம்ம் ம்ம் என்று பதில் சொன்னவன் கண்கள் அவள் தலைமுடியை வருடி விடுவதில் சொக்கி கொண்டு இருந்தது ... இறுகிய அணைப்பில் அவனும் அவளும் மூச்சு விடும் சத்தம் மட்டும் வர தழுவி கிடக்க.... இவ்வுலகம் அவர்கள் இருவருக்குள் சுருங்கி போவதே விருப்பமோ??
வேலையை பாருங்க வெளிய போகவா ??
ம்ம் என்றவனை விட்டு விலகி அதிரா வெளியே எலிதான் காயுது எலி புழுக்கை எதுக்கு காயுது என்று தெரியாது ஒருத்தி கன்னத்தில் கையை வைத்து உட்க்ரந்து இருக்க
இன்னைக்காவது நான் செஞ்சதை ஒழுங்கா பார்த்தியா நித்தி
"எங்க அதான் உள்ளே போயிட்டீங்களே
"ப்ச் மரமண்டை பின்னாடியே வந்து பார்த்து இருக்கணும்... இப்ப உள்ள இருந்தது யார் ?
"நான்தான்
"இந்த தெளிவு உன்ன எங்கேயோ கொண்டு போயிடும் ... நான் அப்படியே அந்த சேர்ல படுத்து தூங்குறேன் உன் லவ்வுக்கு ஐடியா தேவைப்படும் போது எழுப்பு "
"ம்ம் இவ உண்மையாவே நம்ம லவ்வுக்கு ஹெல்ப் தான் பண்றாளா ??"என்று யோசனையில் அவள் அருகே உட்கார்ந்தாள் ... சிறுது நேரம் கழித்து கண்ணே திறந்த அதிரா நித்யா காப்பி கப்போடு அயோக்கியா அறை அருகே போக ...
எங்க போற நித்தி ??
"சார் நீ தூங்கும் போது வெளிய வந்தார் , அவ தூங்கட்டும் எனக்கு ஒரு காப்பி வேணும் கொண்டு வந்து தர முடியுமான்னு கேட்டாங்க "
"ப்ச் அவர் காப்பி எல்லாம் குடிக்க மாட்டாரே
"இல்லை கேட்டாரே
"வேலை டென்சன்ல மாத்தி கேட்டிருப்பார் .. இஞ்சி டீதான் அத்தான் குடிப்பார், இரு நிறைச்சு ஊற்றினா பிடிக்காது அரை கிளாஸ் தான் ஊத்தணும் நானே ஊத்தி தர்றேன்" என்று அதிரா அதை பக்குவமான சூட்டில் ஊற்ற... தலையை தடவி கொண்டு கதவை திறக்க வந்தவன் கதவு திறந்த கேப் வழியாக தெரிந்த அதிராவை நீலக்கண் பழுப்பாக பார்த்தபடி உதட்டை வளைத்தான்...
கொல்லவா ப்ளான் போட்ட, இதுக்கும் பழிக்கு பழி வாங்கணும்டி என்று சத்தம் இல்லாது முனங்க அவனுக்கு முதுகு காட்டி நின்ற அதிரா
எங்களுக்கும் பழி வாங்க தெரியும் அத்தான் என்று பதில் கொடுக்க...
தைரியமான ஆளா இருந்தா , ஒத்தைக்கு ஒத்த வாடி ...
"நித்யா லவ்வரா போயிட்டீங்க அதான் பொழைச்சு போங்கன்னு விட்டாச்சு, இந்தாஆஆஆஆஆஆஆஆஆஆ என்று காப்பி கப்போடு திரும்பியவள் சேலை மேஜையில் மாட்டி கை தடுமாற கேமில் இருந்த பானம் காலில் சூடாக கொட்ட..
"ஆஆஆஆ அத்தான்ஆஆஆஆஆஅ என்று தன் காலில் கொதிக்க கொட்டிய டீயில் அதிரா சற்று வலியில் அலற ...
"மதுஊஊஊஊஊஊ என்று ஒரே எட்டில் தாவி வந்து அவள் முன் முட்டி போட்டு நின்ற அயோக்கியா
"ரொம்ப சுட்டிருச்சாடி என்று அவள் பாதம் எடுத்து தன் தொடை மீது வைத்து ஊத ....அவன் விரல்கள் கர்வம் பார்க்காது அவள் பாதம் தொட்டு தடவ அவன் கேலி பேசும் இதழ்கள் அவள் பாதம் தொட்டது... அவனை குனிந்து பார்த்த அதிரா இல்லை என்று தலையாட்ட
"என்ன இல்ல தோல் பழுத்து போய் நிக்குது , நித்யா அந்த பஸ்ட் ஏட் பாக்ஸ், ப்ச் சரி வராது இஞ்சூரி ஆகிட கூடாது, நித்யா அந்த கார் சாவியை எடுத்துட்டு போய் என் காரை எடு, நான் இவளை தூக்கிட்டு வர்றேன் ஹாஸ்பிட்டல் போயிடலாம் என்றவன் அதிராவை தொடையோடு கை கொடுத்து தூக்கி கையில் போட அவன் கழுத்தில் முகம் புதைத்து கொண்ட அதிரா...
"டேய் அத்தான்
"ம்ம்
"வலிக்கலடா அத்தான் என்று கிசுகிசுப்பாக கூற, அவனுக்கு வலித்ததோ கண் ரத்த நிறமாக அவளை குனிந்து பார்த்தான்... அவன் இடையை அழுத்தி பிடித்த விரலில் அன்றிலிருந்து இன்றுவரை குறையாத காமம்... அதன் பெயர் காமம் எனில் ஆம் இது காமம்தான் ...
அவள் அவன் முதுகை அழுத்தி பிடித்து தன் வலி பொறுக்க அவள் விரல் கொடுத்த உணர்ச்சி காமம் என்றால் ஆம் இது காமம் தான் !!
உள்ள படுக்க வச்சிட்டு ஃபார்ம் பில்லப் பண்ணிட்டு வாங்க சார் என்று கூறவும், அவளை படுக்கையில் படுக்க வைத்து விட்டு அயோக்கியா எழும்ப போக, அவன் சட்டையை இழுத்து தன் அருகே கொண்டு வந்த அவளை கண்ணோடு கண் பார்த்தவன்
இது நீ இல்லை அவ
ம்ம் நானும் அதைத்தான் சொல்ல நினைச்சேன் என்று போகும் அவன் முதுகை பார்த்து மெலிதாக சிரிக்க அயோக்கியா ஊமையாக சிரித்து கொண்டு வெளியே போனான் ...
சார் அவங்க பேர் ?
மிஸஸ் அயோக்கியா அனவர்தன்!!
ப்ள்ட் குரூப் ஏ பாஸிட்டிவ்
அலர்ஜி மெடிசன் ____ சன்
வருசத்துல ரெண்டு தடவை ப்ளட் டொனேட் பண்ணுவா .. வலி மருந்து அவளுக்கு போடுறது பிடிக்காது , தூக்க மருந்து போடுற பழக்கமும் இல்லை... போன மாசம் பீவர் வந்திருக்கு , கர்ப்பப்பை புற்றுநோய் வராம இருக்க தடுப்பூசி போட்டிருக்கா அப்பறம்
போதும் போதும் சார்
பார்த்து ட்ரீட்மென்ட் கொடுங்க..
அவ வலி தாங்குவா, ஆனா அவ வலி நான் தாங்கிக்க மாட்டேன் என்றவன் பேச்சு அறைக்குள் இருந்த அதிராவுக்கு கேட்டு பேரதிர்ச்சி எல்லாம் இல்லை ... உதட்டை வளைத்தாள்...
அவனுக்கு தன்னை பற்றி அனைத்தும் தெரியும் என்று அவளுக்கு தான் தெரியுமே ...
மேடம் வலிக்குதா ??
ஹான் என்று அதிரா மருத்துவரை பார்க்க
வலிக்குதா
எனக்கு எதுவும் ஆகல சின்ன அடிதான்னு அவர்கிட்ட சொல்லுங்க எனக்கு ஒன்னுன்னா தாங்க மாட்டார்..
அவருக்கு ஒன்னுன்னா நான் தாங்க மாட்டேன், கை நிறைய மருந்தை அள்ளி கொண்டு கதவை திறக்க போனவன் அவள் வார்த்தை கேட்டு அப்படியே கர்வ சிரிப்போடு சுவற்றில் சாய்ந்தான்..
வேஷமாக அவனை சுற்றி திரிந்த மாந்தர் மத்தியிலே, நான் உன் காமக்காதலி என வேடமிட்டு தூய காதலை கொட்டி கொட்டி கொடுத்த அவன் துய காமக்காதலி இவளே!!
அத்தனை பேரையும் புடமிட்டான், இவளை அவன் மூச்சு உள்ளவரை புடமிட மாட்டான்....
அவளை பற்றி அக்குவேர் ஆணி வேராக அவன் அறிந்து வைத்திருக்க.. அவனை பற்றி சொட்டு விடாது அவள் அறிந்து வைத்திருப்பதற்கு பேர் அவர்கள் மொழியில் காமம் தான் !!
பல காமங்கள் காதல் எனும் தூயச்சொல் பின்னே மறைந்து ஏமாற்றத்தை துரோகத்தை பரிசாக தரும் உலகில் ..
இவர்கள் மாநேசம் காமம் என்ற பெயரில் எப்போதும் வேசமில்வாது அவர்களை சுற்றியே வாழும் !