வேஷம் போடும் வேடா 30
Veda30

30 வேஷம் போடும் வேடா !!
"அடியே நீ சாகுற அளவுக்கு எல்லாம் அவர் வொர்த் பீஸ் கிடையாதுடி , அவர் கூட வாழ்றதுக்கு பனிரெண்டு மணிக்கு சுடுகாட்டுக்கு போனேனா ஏதாவது பிரஸ்ஸா பேய் கிடைக்கும், அது கூட வாழ்ந்துட்டு போயிடலாம் ...சொன்னா கேளுடி ..அதிராவையே மண்டை காய வைத்து கொண்டிருந்தாள் ஒருத்தி..
ஒரு மாதமாக அயோக்கியவை கரெக்ட் பண்ணி கொடு என்று அவள் தோழி நித்தியா இவள் பின்னால் அலைய அதையும் இதையும் சொல்லிப் பார்த்தவள் காலில் வந்து விழுந்து விட்டாள் ....
"உன் கால்ல விழுறேன் அதி ப்ளீஸ் எனக்காக அவர்கிட்ட பேசுடி... ஒரே ஒரு தடவை அவர் வேண்டாம்னு சொன்னா நான் வந்துடுறேன் "என்று நித்தியா அதிரா கையை பிடித்துக் கொண்டு கெஞ்ச..
"அய்யய்ய உன்னோட பெரிய குஷ்டமப்பா !!நானே அந்த ஆள் முகத்தில் முழிக்க கூடாதுன்னு நாலு தெரு சுற்றி காலேஜுக்கு வந்துட்டு இருக்கேன்... நீ வேற அவரையே தான் காதலிப்பேன்னு புடிச்சு என்ன தொங்குற ... காதலிக்கிறது தான் காதலிக்கிற நீயே போய் ஸ்ட்ரைட்டா பேசிட வேண்டியதுதானே...
"அவர பார்க்கவே பயமா இருக்கு அதி
"இப்படி பயந்தா எப்படி காதலிக்கிறது"
"அது ஆரம்பம்தான் பயமா இருக்கும் ,அவர் ஓகேன்னு சொல்லிட்டாருன்னா அதுக்கப்புறம் அப்படியே லைன் புடிச்சு எப்படியாவது வந்துருவேன் என்று நித்தியா அலங்க மலங்க முழிக்க
"அவர் ஆளு தாண்டி வெள்ளையா ஹீரோ மாதிரி இருப்பார்.. பண்றது அத்தனையும் வில்லத்தனம் கருப்பு கோட்டுல ஆளு கொஞ்சம் அழகா வந்த உடனே கபார்னு விழுந்துட்ட ... கொஞ்ச நேரம் பேசி பார்த்திருந்தேன்னு வை, இந்த மாதிரி தப்பான முடிவு எடுத்திருக்க மாட்டேன் ..
"இப்ப நீ என்னதான் சொல்ல வர அவர லவ் பண்றது தப்புன்னு சொல்றியா? நீ எங்க ரெண்டு பேரையும் சேர விடக்கூடாதுன்னு இப்படி எல்லாம் பேசுறேன்னு நினைக்கிறேன்.. இன்னும் நீ அவரை மனசுல நினைச்சுகிட்டு இருக்கியா?
"அட இது என்னடா புது சோதனையா இருக்கு, அவர மனசுல சுமந்து அதை பாரப்படுத்த விரும்பல எங்களுக்குள்ள நடந்தது எதுவும் காதல்ல நடந்தது கிடையாது.. எவ்ரிதிங் அண்டர் லஸ்ட் ... அதுக்கு எண்டு கார்டு போட்டாச்சு ...
"பின்ன என்ன எப்படியும் யாரையாவது அவர் கல்யாணம் கட்டிக்க தானே போறார் ..
"அது எனக்கு எப்படி தெரியும் அவர்கிட்ட தான் கேக்கணும்
"அதெல்லாம் பண்ணுவார்.. அதுவே என்ன பண்ணிட்டாருன்னா பிரச்சனை இல்ல... எனக்கு அவரை பத்தின எல்லாம் தெரியும் நான் அவரை டேக் கேர் ஆஃப் பண்ணிக்குவேன்
"அவர் என்ன பச்சை குழந்தையா டேக் கேர் பண்றதுக்கு... பச்சை பச்சையா பேசுற குழந்தை, சரி உன் கிரகம் அவர்கிட்ட தான் மாட்டணும்னு இருக்கு என்ன பண்றது? இப்ப என்ன பண்ணனும் அவர்கிட்ட போய் பேசணும் அவ்வளவு தானே
"ம்ம் என்று நித்தியா தலையாட்ட...
"ஒரே ஒரு தடவைதான் போய் பேசுவேன்... ஆனா அப்பவும் நீ என் கூட வரணும், என் கூடவே தான் நிக்கணும் புரியுதா?
"ஓகே ஓகே , இன்னைக்கு சாயங்காலமே போவோமாடி
"இந்த புள்ள போற போக்க பாத்தா அடுத்து லஸ்ட் பார்ட்னர் ஆயிடும் போல இருக்கு... நாம இடியை தாங்கும் இதயம் எல்லாத்தையும் தாங்கிடுவோம்... இந்த புள்ள எப்படி தாங்க போகுதோ தெரியலையே நமக்கு எதுக்கு வம்பு .. போய் முடுச்சு விடுவோம் நாசமா போகட்டும் ...
"சரி காலேஜ் முடிச்சுட்டு போகலாம்
"என் செல்லம் இனி நீ தான் என் காதல் தலைவி என்று நித்தியா கனவு கோட்டையில் மிதக்க ஆரம்பித்துவிட்டாள்..
மாலை நித்யா கண்ணில் படாது காலேஜ் பின் வாசல் வழியாக அதிரா எஸ்கேப் ஆக பார்க்க
"காரோட வந்துட்டேன் "... என்று நித்யா காரோடு வந்து நிற்க...
ஆஆஆஆ வந்து தொலை என்று காரில் ஏறி அமர அயோக்கியா எஸ்டேட் வந்து வண்டி நின்றது ..
அயோக்கியா அத்தான்கிட்ட கொஞ்சம் பெர்சனலா பேச வேண்டியது இருக்கு , அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமான்னு கேட்டு சொல்லுங்க அண்ணா என்று பிஏவிடம் சொல்லி அனுப்பிவிட்டு இருவரும் வெளியே வெயிட் பண்ண..
வேலையெல்லாம் முடிந்து இரவு 10 மணிக்கு அவளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது....
"என்னடி இவ்வளவு நேரம் வெயிட் பண்ண வைக்கிறார்"
"இதுக்கு தான் சொன்னேன் என்கூட வராதுன்னு நீயே வந்து ஏதாவது பேசி இருந்தா உடனே வேலை முடிஞ்சிருக்கும், வேணும்னே அலைய வைக்க போறான்.. நான் சொன்னா நீ எங்க கேக்குற அனுபவி உள்ள வந்து வாய தொற.. இல்ல நான் என்னமோ உன்ன காசு கொடுத்து கூட்டிட்டு வந்த மாதிரியே பேசி வைப்பான்..
"ம்ம் அதெல்லாம் ஃபோல்டா பேசிடுவேன் என்று நித்தியா பல்லை காட்ட
"உன் போல்ட்டை ஒவ்வொன்னா கழட்டி அனுப்பாம இருந்தா சரிதான் என்று முனங்கிக் கொண்டு இருவரும் ஆக உள்ளே நுழைந்தனர்
லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தவன் தன் எதிரே வந்து நின்ற இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வேலையை தொடர்ந்தான், அதை முடித்து லேப்டாப்பை தள்ளி வைத்தவன்... கையை தலைக்கு மேல் கொண்டு போய் நெட்டி முறித்து சீட்டில் சாய்ந்து அமர்ந்தபடி, சாவகாசமாக ஒரு சிகரட்டை எடுத்து பற்ற வைத்து இழுத்து கொண்டே
"என்னடா இன்னும் உன் காத்து இந்த பக்கம் அடிக்கலயேன்னு நினைச்சேன் என்ன . பிள்ளை உண்டாகி இருக்கியா ,.அதை வச்சி சிம்பதி கிரியேட் பண்ண ட்ரை பண்ண போறியா? (ரெண்டு பேரும் ஹோல்சேல் சூனிய பிசினஸ் பண்றாங்க தனிதனியா எல்லாம் வைக்க வேண்டாம் மொத்தமா அவங்களுக்கு அவங்களே வச்சிப்பாங்க)
"அய்யய்ய அந்த ரிஸ்க் எல்லாம் உங்களை வச்சி எடுக்க முடியாது அத்தான், உங்ககூட வாழனும்னு நினைச்சிருந்தா ஏகப்பட்ட பலூன்ல ரெண்டு ஓட்டையை போட்டு விட்டிருக்க முடியும் ... ஆனா நான் தான் உங்க கூட வாழ்ற ஐடியாவிலேயே இல்லையே எதுக்கு வீணா ரிஸ்க் எடுக்க போறேன் ... அந்த மாதிரி தற்கொலை முயற்சி எல்லாம் நான் எடுக்கிற ஆளு கிடையாது... இது வேற விஷயம்... எனக்காக இங்க வரல, இதோ இவளுக்காக வந்து இருக்கேன்
"என்ன விஷயம் என்றவன் பார்வை பக்கத்தில் நின்ற நித்தியாவை கூர்மையாக பார்த்தது .. அவன் ஒற்றை பார்வைக்கு நித்தியா பயந்து அருகே நின்ற அதிராவின் கையை பாதுகாப்பாக பிடித்துக் கொண்டாள் ...
"உங்ககிட்ட என்ன கருமம் புடிச்சதோ தெரியல, அந்த பச்சோந்தி கண்ண பாத்து விழுந்துட்டாளாம்.. கட்டுனா உங்களை தான் கட்டுவேன், காதலிச்சா உங்களைத்தான் காதலிப்பேன்னு தலைகீழா நிற்கிறா .. நான் எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன் இவர் அதுக்கெல்லாம் சரி வர மாட்டார்னு, அவ கேட்கிற மாதிரி இல்ல உங்களுக்காக எது வேணாலும் பண்ணுவாளாம் ... சிபாரிசு பண்ண வரல உங்களுக்கு ஓகேன்னா மேற்கொண்டு ஏதாவது பார்த்து பண்ணுங்க.. நீ சொன்ன மாதிரி சொல்லிட்டேன்டி இனி உன் பாடு , அவர் பாடு நான் வெளியே வெயிட் பண்றேன்" என்று அதிரா நகர போக நித்தியா அவள் கையைப் பிடித்துக் கொண்டு
"போகாத அவர் பதில் சொல்ற வரைக்கும் இங்கேயே நில்லு என்று இழுத்து நிறுத்த ...
"ஓஓஓஓ மாமா வேலை கூட பார்க்க ஆரம்பிச்சிட்டியா? என்ற அயோக்கியாவை அதிரா உதட்டை குவித்து பார்த்தபடி
"வேலையில மாமா வேலை என்ன மாமி வேலை என்ன எல்லாம் வேலைதான அத்தான் .... அவளுக்கு பதில் சொன்னா நல்லா இருக்கும் ...
"லவ் தானே தாராளமா பண்ணிடலாம் அதுவும் சிபாரிசுக்கு பெரிய இடம் எல்லாம் வந்து இருக்கும்போது கன்சிடர் பண்ணிட வேண்டியதுதான் பேர் என்ன சொன்ன?
"நித்யா..
"எனக்காக என்ன வேணா லும் பண்ணுவியா அவள் ஆமோதிப்பதாக தலையாட்ட...
"சரி இந்த மாடியில் இருந்து குதிச்சுடு உயிரோட இருந்தா நம்ம ரெண்டு பேரும் லவ் பண்ணலாம்
"சார் என்று அவள் பயந்து அரண்டு அயோக்கியவை பார்க்க ..
"போ போய் குதி உன் காதல் உண்மைன்னா உனக்கு உயிர் போகாது அதை வச்சே நான் தெரிஞ்சுக்கிறேன் நாம கல்யாணம் பண்ணிக்கலாம்
"ஏய் நித்தியா எங்கடி போற ... அய்யோ நித்திஇஇஇஇஇ என்று ஓடிப்போய் குதிக்க போன நித்தியாவை இழுத்து ஒரு அறை பொறி கலங்க விட்ட அதிரா..
அறிவு கெட்டவளே, அவர்தான் உன்ன திசை திருப்ப அப்படி பேசினாருன்னா நீயும் போய் குதிக்க போற
"எல்லாரும் என்ன சீட் பண்றீங்க நான் அவரை உண்மையா தான் லவ் பண்றேன் , எனக்கு அவர் கிடைக்கலன்னா செத்துடுவேன் ...அவர் காதலுக்காக நான் சாகவும் தயார்தான்னு பொய்யா சொல்லல உண்மையா தான் சொன்னேன்" என்று நித்யா அழுது கொண்டே கூற தலையில் அடித்த அதிரா திரும்பி அயோக்கியவை பார்க்க...
சுவிங்கத்தை முட்டையிட்டுக் கொண்டே அவளைப் பார்த்து பார்த்தியா என் மவுசை என்பது போல் சிரிக்க...
"ஏன்டி உனக்கு லவ் பண்றதுக்கும் உயிரை கொடுக்கிறதுக்கு வேற ஆளே கிடைக்கலையாடி அது முத்திப்போன பீஸ்ட்டி... ஏற்கனவே பல தடவை என்னால கண்டமான பாடி , அதை வச்சி என்னடி பண்ண போற ..
காதலுக்கு மனசு தான் முக்கியம் "
"அய்யோ மயிறு மாதிரி பேசுறாளே ஆண்டவா இப்படி எல்லாம் நாலு பேர் இருக்கறதுனால தான் இந்த காதல் கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு சுத்துது போல இருக்கு.
"ப்ளீஸ்டி சார் கிட்ட பேசி புரிய வையேன், அவர பத்தி உனக்கு தான் தெரியும் நான் இந்த மாதிரி சோ அன்ட் சோ லவ் பண்றேன்னு சொல்லி எப்படியாவது இந்த காதல்சேர்த்து வைடி..
"ப்ச் , சரி வெயிட் பண்ணு என்று அதிரா அயோக்கியா முன்னே போய் நின்றவள்
"அவளுக்கு நான் சொல்றதுக்கு எதுவும் புரியல...
"நீ தான் அட்வைஸ் ராணியாச்சே பத்து அட்வைசை எடுத்து விடுறது என்று சேரில் ஆடிக்கொண்டே பேச..
"என் அட்வைஸ் அவ கிட்ட செல்லுபடி ஆகல அவள கொஞ்சம் லவ் பண்ணுங்க ..
"லவ் மேல எல்லாம் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல..
"பத்து நாள் பேசி பழகி பாருங்க ஒருவேளை பிடிக்கலாம்ல
"ப்ச் , வேணும்னா லஸ்ட் பார்ட்னரா சேர்த்துக்கிறேன் அந்த பொண்ணுக்கு ஓகேவான்னு கேளு...
"மறுபடியுமா ?"
"நாளையிலிருந்து வந்து ஜாயின் பண்ணிக்க சொல்லு அவனை கூர்ந்து பார்த்தவள்...
"நித்யா இங்க வா என்று அவளை அழைத்து காதில் விஷயத்தை கிசுகிசுக்க ,கொஞ்சம் மிரண்டு முழித்தாலும்..
"தலைவி எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே!! நீ போன வழியிலேயே போயிடுவேன்... உனக்கு அவரை காதலிக்க தெரியல... நான் காதலிக்க வச்சிடுவேன் லவ்வோ லஸ்டோ ஏதுவா இருந்தாலும் எனக்கு ஓகேதான் அதிரா..
பின்ன என்ன சார் லஸ்ட்க்கும் ஓகேன்னு சொல்லிட்டா.. நாளைல இருந்து அவளை அப்பாயிண்ட் பண்ணிக்கோங்க...
"எக்ஸ் லஸ்ட் பாட்னர் பேச்சுக்கு மறு பேச்சு இல்ல அப்படியே செஞ்சுடலாம் ..
"ரொம்ப நன்றி என்று விட்டு அதிரா கதவு நோக்கி நடக்க போக சொடுக்கு போட்டு அவளை அழைத்த அயோக்கியா
"ஆனா அதுல ஒரு ட்விஸ்ட் இருக்கே ...
"என்ன
"எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு, இந்த லவ் பண்றது லஸ்ட்டுக்கு ட்ரைனிங் கொடுக்கிறது இதெல்லாம் நம்மளால கழியாது ..நீதான் அதுல கில்லாடி .. நீ என்ன பண்ற அந்த பொண்ணு வரும் போது நீயும் கூடவே வந்துடு..
நான் எதுக்கு ?
ஹான் லைட் தூக்க, நீயும் வந்தா அவளுக்கு
ஆப்பர்சூனிட்டி கொடுக்கிறேன்... இல்ல ரெண்டு பேரும் இடத்தை காலி பண்ணுங்க
ப்ளீஸ் அதிரா எனக்காக வாயேன்..
இதுக்கு பேர் என்ன தெரியுமா?
என்னவாவும் இருந்துட்டு போகட்டும் அதுவா முக்கியம் அவரே ஓகே சொல்லிட்டாரு , ப்ளீஸ்டி இது உனக்கு என்ன புதுசா, எனக்கு தானே புதுசு.. நான் பழகுற வரைக்கும் கூட இருடி "புரியாது பேசும் நித்தியாவை பல்லை கடித்து பார்த்தாள்
ஓகே , மத்த நேரம் மட்டும்தான் உள்ள இருப்பேன் அந்த டைம் நீங்க ரெண்டு பேரும் தான் ரூமுக்குள்ள போகணும் .. நான் வரமாட்டேன்..
"அந்த நேரத்துல நீ தேவைப்படாது மத்தபடி நானே பார்த்துக்கிறேன் நீ மத்த நேரம் அவளுக்கு சொல்லி கொடுத்து மூட் வர வச்சா போதும்" என்று கண்கள் பழுப்பு நிறமாக அதிரா அருகே நின்ற நித்தியாவை மேலிருந்து கீழ் வரை பார்க்க ..
காமத்துக்கு மூடு விழா நடத்தி இருந்தான் மறுபடியும் கிளப்பி விட்டாச்சு, இனி யார் யாரு சட்டை கிழிய போகுதோ என்று புலம்புவதை தவிர வேறு வழி இல்லை...