இன்று இரவு ஏழு மணிக்கு கதை நீக்கப்படும் வேடா 36
Veda36

36 வேஷம் போடும் வேடா !!
தலைக்கு முட்டு கொடுத்து அயோக்கியா படுத்து கிடக்க... சேலையை சுற்றி முடி கொண்டு அடுத்த ஷிப்ட் திங்க ஆரம்பித்த அவள் சிலை நிற உடல் அழகை மட்டும் அவன் பழுப்பு நிறம் ரசித்து இருக்குமா என்ன ? குளிரில் நாசி சிவந்தது கூட கண்டது , அவள் தும்மல் போடுவதை நிறுத்த தீ மூட்டி வைத்திருந்தான்...
அது எப்படி நடு ராத்திரி கூட உனக்கு பசிக்குது
உங்களுக்கு நடு ராத்திரி மூட் வர்ற மாதிரி தான்
ஆமா உனக்கு மூடே வராது
மூட் வந்தா வேலை இருக்கு வேலை நடந்தா உடல் டயர்ட் ஆகி பசிக்கும்ல நான் லாஜிக்கா தான பேசுறேன்
தின்னு தின்னு விக்கி செத்துடாத
திங்க விடாம கேள்வி கேட்டுக்கிட்டு, இது புளிக்குது இது ஓகே ப்ச் இது என்ன ஒரே கசப்பா இருக்கு இதை நீங்க தின்னுங்க ...
அதையும் நீயே தின்னு
ஓகே உள்ள போய் தேன் எடுத்துட்டு வாங்க முக்கி தின்னு பார்ப்போம்....
அது பழம் இல்ல இலை நாயே
ஓஓஓ இருட்டுல கண்ணு சரியா தெரில அத்தான் ..எனக்கு என்ன உங்களை போல ஆந்தக்கண்ணா இருட்டிலும் சரியா இடம் கண்டுபிடிச்சு சரசம் பண்ண கீரிடம் கொடுத்தது போல கர்வ புன்னகை வந்தது ..,
இப்படி தின்னா ரெண்டு வருஷம் கூட எனக்கு பார்ட்னரா இருக்க முடியாதுடி உன்ன அசைக்கவே நான் ஜேசிபி தான் கொண்டுட்டு வரணும் ..
வேண்டாம்னா கணக்கை முடிச்சு அனுப்புங்கள் அத்தான் , என் சீனியர் ராமகிருஷ்ணனுக்கு ஓகே சொல்லி அங்க சாயின் அடிச்சிக்கிறேன்.. இல்லே நீங்களே ஒரு பார்ட்னரை பார்த்து தள்ளி விட்டிருங்க.... ஆனா பத்து வேளை என் வயித்துக்கு எதாவது தரணும்னு சொல்லிடுங்க , அதுதான் மெயின் குவாலிபிகேசன் சொல்லி வேலையை சேருங்க.. ஏப்இஇஇஇஇ ஏப்பத்தையும் காண்டாமிருகம் போல விட்டுவிட்டு, படுத்திருந்த அவன் வயிற்றில் தலை வைத்து படுத்த அதிரா ...
டேய் அத்தான்
ம்ம் .... தூங்க அவன் கண் மூட போக.. அயோக்கியா மூக்கு உள்ளே இலையை விட்டு ஆட்டி தும்ம வைத்து அவன் சினத்தை ஏற்றி விட ..
நாய உன்ன வர்றேன்டி என்று அவளை துரத்த ஊரே அடங்கிய வேளை இழந்த அத்தனைக்கும் சேர்த்து வாழ்ந்தனர் அதிராவை விரட்டி பிடித்து தூக்கிய அயோக்கியா அவளை உயர செல்பில் அமர வைத்தவன் ..
ராத்திரி முழுக்க அங்கேயே உட்கார்...
எனக்கு என்ன வந்தது ஹலோ ஆங்கிள் நீங்க ப்ரீயா என்று அதிரா தூரத்தில் வாக்கிங் போன ஒருவரை கைதட்டி அழைக்க ...
என்னம்மா வேணும் ?
நீங்க ப்ரீன்னா கமிட் ஆகலாமா? இவரை கழட்டி விட்டுட்டு வரவா ஆன்டி ஓகே சொல்லுமா அவர் பாதி கேட்டும் கேட்காது திருதிருவென பார்த்து வைக்க
ஹலோ ஆங்கிள் உங்க வொய்ப் ப்ரீயான்னு கேட்டு சொல்லுங்க...என்று இவன் கத்த
ஏன் அத்தான் அந்தாளு முறைச்சிட்டு போறான்...
வொய்ப்பை கேட்டதுக்கு பதிலா பொண்ண கேட்டிருக்கணும் போல
அதான நீங்க ஏன் அதை கேட்டீங்க ?
எனக்கு முத்தின பீஸ் தான பிடிச்சு தொலையுது என்று அவள் சேலை மீது தெரிந்த தொப்பை மீது முகம் புதைய படுத்தான் ..
பேச இருவருக்கும் தோணாது புல்தரையில் படுத்து கிடந்து வானத்தை பார்த்து கொண்டே கிடந்தனர் ....
ஒரு நாள் மட்டும் இந்த உற்சாகம் வந்து முடிந்திருந்தால் அது சாதாரண காதலாக மாறி இருக்கும்....
ஒவ்வொரு நாளும் உற்சாக திருவிழா தான்
சார் ராததிரி ஆனா உங்க தொல்லை தாங்கல கொஞ்சம் கத்தி சண்டை போடாம இருங்க என்று பக்கத்து வீட்டுக்காரர் கூற
அப்போ நீயே அவளை கூட்டிட்டு போய் வைய்யா
நான் போக மாட்டினேன்னு நினைச்சியா அத்தான் வாங்க ஆங்கிள் போகலாம் என பெட்டியோடு வந்த அதிராவை பார்த்து அவர் தெறித்து ஓடியே விட்டார்...
பின்னே வீடா இது என்று நினைக்க வைக்கும் பார்ட்னர்ஷிப்...
இதோ இந்த வீட்டுக்கு வந்து ஒன்பது மாதம் ஆகிறது ... உப்பிய வயிற்றோடு புல்தரையில் அவள் பாய் விரித்து படுத்து கிடக்க.. அவள் கால்மாட்டில் தலைவைத்து அயோக்கியா படுத்து கிடந்தான்... அவன் உதடு அவள் வீங்கிய காலை முத்தமிட்டு கொண்டே இருந்தது...
அவளோடு அனுபவித்து வாழ வேண்டும் என்பதற்காகவே ஓடி ஓடி சொத்தை சேர்த்து பணம் சேர்க்கும் வேலையை எல்லாம் முடித்து விட்டான் ... 24 நேரமும் அவளோடு இருப்பது ஒன்றுதான் அவன் தற்சமய வேலை... சேர்த்து வைத்த சொத்தை பெருக்க அவனுக்கு ஆசை இல்லை , அதன் பின்னே ஓடவா அவன் வாழ்க்கை போதும் தனிமை, இனி அவளே அத்தனையும்... ஒவ்வொரு நொடியும் அவர்கள் சண்டைக்கானது சேட்டைக்கானது,நேசத்துக்கானது, காமத்துக்கானது.... அவர்களுக்கே அவர்களுக்கானது...
ரசிக்க தெரிந்த உள்ளங்களுக்கு ஆடம்பரம் தேவையில்லை நேசிக்கும் இதயத்தின் அருகாமை போதுமே ..
அவளுக்கு அவன் அருகாமை போதும் , இவனுக்கு அவள் அருகாமை போதும் ..
நடு இரவே அவளுக்கு வலி எடுக்க
அத்தான் நாம ஏன் ட்பெரெண்டுக்கு பிரசவ வார்டுல படம் பார்துட்டடே பிள்ளை பெக்க கூடாது ஒரு புதுபடம் டவன்லோட் பண்ணுங்க...
பிட்டு படமா போடவா என்று பதில் சொன்ன அயோக்கியாவையும் அதிராவைய்ம் டாக்ட்டர் தான் வித்யாசமா பார்த்தது கொண்டே
இது உண்மையாவே உங்கள் பொண்டாட்டி தான
வாடகை பொண்டாட்டி பிள்ளை பிறந்ததும் ஓனர்கிட்ட கொடுக்கணும் என்ன அயோக்கியாவை ஆஆஆ என்று சுற்றி நின்றவர்கள் பார்த்து வைக்க ...
ஏம்மா இது உன் புருசன் தானா இப்படி பேசி தொலையுறார்
ஆமா மேடம் வளர்ப்பு சரியில்லை பிள்ளையை பெத்ததும் மொதல்ல முதல்ல இவரை வெட்டி விட்டுட்டு வேற பார்ட்னர் தேடணும் உங்க ஹப்பி ப்ரீயா மேடம் ...
"அய்யய்யோ , நான் வரல சாமி" என்று அலறி அடுத்து ஓட வைத்த விசித்திர தம்பதிகள் அவர்கள் ...
"குழந்தை தலை திரும்பல அதிரா .. புஷ் பண்ணுங்க: அயோக்கியா கையை பிடித்தபடி நீர் தொட்டி உள்ளே அமர்ந்திருந்தவளும் அவனும் ஒருவனை ஒருவர் பார்த்தபடி
அவளுக்கு தெரியும் எப்போ இந்த உலகத்துல கால் எடுத்து வைக்கணும் நீங்க போய் ரெஸ்ட் எடுங்க அவ தானா வருவா என்று ஒருபோல சொன்னார்கள்...
உன்னால தான் நான் கேட்டேன் தப்பு செய்யும் போது இதெல்லாம் ஏன் தப்புன்னு சொல்லல.. நீ அதுக்கு எல்லாம் தலையாட்டி . பாரு இப்போ என் நிலைமையை என்று ஆறுமுகத்தை கோபத்தில் ஓங்கி குத்தினாள் காயத்ரி, சாக்கடை அருகே மொட்டை தலையோடு காயத்திரி வலியில் அனத்தி கொண்டிருந்தாள்... இருமும் போதெல்லாம் ரத்தம் கசிகிறது உடலில்... உயிரோடு சித்ரவதை ..
அய்யோ இதற்கு சாவு மேல் என்று தினம் தினம் வேதனை தின்ன உணவு கிடைத்தாலும் அதை திங்க முடியாது உடலெல்லாம் காந்துகிறது யாராவது உதவ மாட்டார்களா என ஏங்கி ஏங்கி மரணமும் சதி செய்ய... தன் இயலாமை வலி தாங்க முடியாது ஆறுமுகத்தை இப்போது எல்லாம் கொடுமை செய்ய ஆரம்பித்து விட்டாள் அடி உதை தான் அவருக்கு ...
நீ மொதல்ல செத்து ஒழி, உன்னையும் சுமந்துட்டே திரியணுமா என்று நேற்று இரவு அருகே கிடந்த கண்ணாடி துண்டால் ஆறுமுகம் தொடையில் குத்து குத்தென்று குத்த ... அலற கூட முடியாது கண்ணீர் வடித்தார்.. அவள் சாயம் வெளுத்து போனது எப்போதோ... நான் வாழணும் இவர் உடம்புல இருந்து எதாவது உறுப்பை மாத்தி வச்சா பிழைப்பேனா என்ற காயத்திரி பேச்சில் உடைந்து தான் போனார் ஆறுமுகம்
தன் முன் அழகு அத்தனையும் சிதைந்து இருந்த காயத்திரியை பாதி உயிரான உடலோடு பார்த்து கொண்டிருந்தார் ...
இந்த அழகுகாக்காவா உத்தமியை உத்திரத்தில் தொங்க விட்டேன், இந்த உடலுக்காகவா நேசம் கொண்ட ஒருத்தியை துடிக்க துடிக்க கொன்றேன்..
உன்னையும் என்னால சுமந்துட்டு அலைய முடியாது என்ற காய்த்திரி கையில் கூரான கத்தி ...
உன்ன கொன்னாலே என் பாதி பாரம் போயிடும்
நான் பாரமா ? அவளுக்காக தானே அத்தனை பாவமும் செய்தேன் கண்கள் கலங்க அவளை பார்த்தார்..
செத்து ஓழி என்று அவர் கழுத்தை பிடித்து கொண்டு
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து ஆறுமுகம் தொண்டையை கத்தி கொண்டு கரகரவென அறுக்க ஆரம்பிக்க ..
ஹக் இஇஇஇஇஇ இவளுக்காக தானே அத்தனை பாவம் செய்தார் அவள் கையால் சாவது தானே சரி அவர் துடிப்பு அடங்கும் முன் தன் முன் நின்ற காயத்திரியை வலு கூட்டி எட்டி மிதிக்க
ஆஆஆஆ என்று அலறி காய்த்திரி போய் கரெண்ட் கம்பத்தில் விழ , அங்கே அறுந்து கிடந்த கரெண்ட் கம்பி ஒன்று காய்த்திரி கழுத்தில் போய் சொருக அடுத்த நொடி மொத்த மின்சாரமும் அவள் கழுத்தில் பாய
ஆஆஆஆ என்று துள்ள துடிக்க கால்கள் தரையில் அடிக்க ஆறுமுகத்தை பார்த்து கொண்டு காய்த்திரி உயிர் போக அவன் சாவை இறுதி மூச்சு போகும் முன் ஆறுமுகம் ரசித்து விட்டே அவர் மூச்சு போக ...
அத்தான் ஆஆஆஆ என்ற அதிரா இடை உடையும் வலியில் அவன் கண்களை அண்ணாந்து பார்த்தாள்
இப்பவாவது அழேன்டி ஒரு போட்டோ எடுக்கிறேன்
போடா என்று உதட்டை சுளித்தவள் கண்கள் கண்ணீரை விடவே இல்லேயே....அயோக்கியா கையை பிடித்து ஒரு அழுத்தம் கொடுத்தாள்அவன் வேஷக்காரி...
ஹேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ என்று குழந்தையின் அழுகுரல் அவ்வளவு தான் ...
அவன் தாயின் நீலக்கண்கள், கருத்த மேனியாக அவன் மகள் அஷ்டலட்சுமி மறுபடியும் வஞ்சம் வீழ்த்தி வந்து உலகில் பிறந்தாள்...
அன்றும் அவன் வேடன்தான் தான் இன்றும் அவன் வேடன்தான் அன்று கயவர்களை வேட்டையாடினான், இன்று அவள் நேசத்தை வேட்டையாடிக் கொண்டிருக்கிறான்..
வேஷக்காரக்களின் காமவேட்டை தொடரும்!!