எபிலாக்

Veda37

எபிலாக்

37 வேஷம் போடும் வேடா!! 

உங்களால ஒரு நாள் நிம்மதியா என்னால தூங்க முடியல ஏன் இப்படி பண்ணி தொலைக்கிறீங்க, உங்களுக்கு எல்லாம் கடவுள் மண்டை உள்ள மூளை வச்சிருக்காரா இல்லையா?? உங்ககிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன் ஒருத்தர் மூஞ்சை ஒருத்தர் பார்த்துட்டு இருந்தா எப்படி ஹான் என்று கீக்சிட்டது அந்த குரல் ... நீல கண்ணை கோவத்தில் முறைத்து சோபா மீது ஏறி நின்று கத்தி கொண்டிருந்தாள் அதிஸ்டலெட்சுமி ...அவள் முன்னே முழங்கால் போட்டு கையை கட்டி கொண்டு நின்றனர் அதிராவும் அயோக்கியாவும்.... 

ப்ச் வாயை திறப்பா..

நீதான வாயை திறக்க கூடாது சொன்ன?? என்று அதிரா வாயை திறக்க 

உன் வாயிலேயே மிதக்க போறேன், அவனை கெடுக்கிறதே நீதான் எருமை ... 

டேய் அத்தான் அண்டபுழுகா இருக்கு என்று அயோக்கியா காலை சுரண்ட 

எட்டி மிதிச்சேன் ஏழடி தள்ளி போய் விழுவடி என்று பல்லை கடித்தவன் 

அதான் பாப்பு சொல்றேன், இவளால தான் நான் கெடுறேன் நீ ஏன் டேடிக்கு வேற ஒரு பார்ட்னர் தேட கூடாது ஆஆஆஆஆஆஆ அவன் மண்டையில் நறுக்கென ஓடி வந்து கொட்டிய அதிஷ்டா...

போன வாரம் பேரண்ட் மீட்டிங் வந்துட்டு மேக்ஸ் மிஸ்ட என் பார்ட்னர் சரி இல்லை, நீங்க ப்ரீயான்னு கேட்டிருக்க 

என்ன மட்டும் திட்டுற , அவளும் தான் ஹெச்எம் கிட்ட கேட்டா அவளையும் திட்டு பாப்பு 

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்று கத்திய மகள் குரலில் இருவரும் வாயை மூடி கொள்ள 

நீங்க எல்லாம் தாய் தகப்பன்னு சொல்லாதீங்க... ராத்திரி முழுக்க ஊரை சுத்த வேண்டியது பகல்ல இழுத்து போத்தி கட்டிபிடிச்சு தூங்க வேண்டியது , பெத்து போட்ட பிள்ளையை பள்ளிக்கூடத்துல சரியான டைம்முக்கு என்னைக்காவது கொண்டு போய் ரெண்டு பேரும் விட்டிருக்கீங்களா, டெல்லி இதோ ஒரு மணிக்கு தான் போறேன் ..

நாம லண்டன்ல பிறக்க வேண்டியவங்க பாப்பா அந்த டைம்படி போறோம் என்ற அதிரா முதுகில் சுளீர் என்று மகள் ஒரு அடி போட 

போடு போடு, நாய் வாய்லேயே ரெண்டு போடு என்ற அயோக்கியா கம்பை எடுத்து மகள் கையில் கொடுத்தான் ...

அது என்னவோ ராத்திரி தான் ஆந்தைக்கண்ணனும் அவளும் ஊரை சுற்றுவார்கள் ... பனி மழை என பாராது சுற்றி இருவரும் வந்து நிற்பார்கள்... மகளுக்கு இதுகளை மேய்க்கவே நேரம் சரியாக இருக்கிறது.... நேற்றும் பக்கத்து வீட்டு சுவற்றில் ஏறி இருவரும் ஓஓஓ என்று கத்தி அத்தனை பேரையும் எழுப்பி விட்டு விட்டு ஓடி வந்து விட்டனர்.. காலையில் வந்து அதிஷ்டாவிடம் அவர் மூக்கால் அழுதுவிட்டு 

நாங்க ஊரை தான் காலி பண்ணணும், தயவு செஞ்சு அவங்களை கண்டிச்சு வை பாப்பு என்று தலைகீழாக எல்லாம் நடப்பது இந்த வீட்டில் தான் .... அதற்கு தான் இருவரும் காலையில் மண்டகப்படி வாங்கி கொண்டு நின்றனர்...

என்ன பாத்துட்டே இருக்கீங்க, என்ன ஸ்கூலுக்கு கிளப்பி விடுங்க 

"இதோ வலது கால் எனக்கு" என்று அதிரா அவள் வலது காலை பிடித்து ஷாக்ஸை மாட்ட 

"வலது எனக்கு இடதுதான் உனக்கு இந்தா உன் காலை பிடி "

"இதுதான் எனக்கு 

"இதுதான் எனக்கு 

"ஆஆஆஆஆஆஆஆ அம்மா அப்பாஊஊஊஊஊஊ.... ரெண்டு காலும் எனக்கு தயவு செஞ்சு போட்டு விடுங்க... தாயின் ஜெராக்ஸ் காப்பியாக பிறந்த மகளுக்கு இருவரும் மண்டியிட்டு விட்டனர்... தாய் இதுதான் செய்யணும் இதை தகப்பன் தான் செய்யணும் என்ற கோட்பாடு எல்லாம் இவ்வீட்டில் இல்லை ..

இன்னைக்கு உன் டே அத்தான், உன் மகளை நீ பாரு என்று இழுத்து மூடி அதிரா தூங்குவாள் 

பனிரெண்டு மணி ஆகியாச்சு, இனி உன் டர்ன் என்று அவள் அருகே அயோக்கியா பிள்ளையை கிடத்திவிட்டு போய் அவளை கட்டி அணைத்து படுத்து தூங்குவான்...  

பாரங்களை தலையில் தூக்கி வைத்தால் தானே ஊடல் வரும் ... சுதந்திரமாக சுற்றியே பெரும் சவாலான பிள்ளை வளர்ப்பையே இருவரும் எளிதாக கடந்து விட்டனர் 

வெறும் சதை கூடலில் உண்டான கரு இல்லையே அவள் .. நேசத்தின் கூடலில் உண்டான மகள் அல்லவா??

வளரும் போதை தன் தாய் தகப்பன் நேசத்தை கண் சுருக்கி பார்க்க பழகி விட்டது... மகளை 

ஒருகையில் தூக்கும் தந்தை இன்னொரு கையில் மனைவியை தாங்காது இருக்கவே மாட்டான்... அவனை ஒரு புறம் பாதுக்காக்கும் தாய் இன்னொரு புறம் மகளை பாதுக்காக்க மறக்க மாட்டாள்... இதையும் தாண்டி அவர்களிடம் மாறாது இருந்தது , அன்று இருந்த அதே நேசம் துளி கூட மாறவில்லை... குசும்பாக நையாண்டியாக சுற்றுவது, சோகமா அப்பாலிக்கா போ என்று விரட்டி விட்டு இருவரும் ஒருபக்கத்தில் உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டு இருப்பார்கள் ....

நல்லா இருப்பீங்க ரெண்டு பேருக்கு தான் பிடிக்கலையே எப்பவும் அடிபிடி தான போடுறீஙக டைவர்ஸ் வாங்குணா நாங்களாவது நிம்மதியா இருப்போம் என்று அண்டை வீட்டு கிழவி வாயை விட்டு விட 

ஆமா ஆமா வா கிழவி அவனுக்கு எதாவது லண்டன் லெக்கான் கோழி பார்த்து கட்டி வைப்போம் ... 

அப்போ நீ ?

"கிழவர் வீட்டுல சும்மாதான இருக்கார் ஏய் ஏய் கிழவி நில்லு சும்மா பேச்சு துணைக்கு தான் ...  

"போய் தொலையேன்டி , புதுசா இளசா ஒரு பிகர் பார்த்து செட் பண்ணிக்கிறேன் 

"ஏன் நான் இருக்கும் போதே செட் பண்ணிக்க அத்தான் நான் ஒரு ரூம் அவ ஒரு ரூம்ல.. என்றவள் தொப்பைக்கு அடிமை அல்லவா அவன் ... 

இதிலும் சிறந்த சம்பவம் ஒன்று போன வாரம் நடைபெற்றது , இவன் வாக்கிங் போகும் போது அயோக்கியா நீல கண்ணில் மயங்கி ஒருத்தி  

"அக்கா நீங்க அயோக்கியா சார் தங்கச்சியா ??என்று அதிராவிடம் கேட்டு வைக்க

"அய் நேரப்போக்குக்கு ஆள் கிடைச்சு இருக்கே என்று கண்ணை சிமிட்டி 

"ஆமா என்ன விஷயம் 

"அவரை ரொம்ப நாளா லவ் பண்றேன் கரெக்ட் பண்ணி தர முடியுமா ???

அட அட இதுக்கு தான காத்திருக்கேன் கொஞ்சம் காசு செலவு ஆகுமே 

"என்ன வேணும் அக்கா 

"நாயர் கடையில டீயும் சமோசாவும் சொல்லு நைட் பர்கர் ஆர்டர் பண்ணிடு என்று ஒரு வாரமாக ஓசியில் தின்ன ... அப்பெண்ணின் அண்ணனோ 

சார் உங்க தங்கச்சி நம்பர் கிடைக்குமா என்று அயோக்கியாவிடம் கேட்க 

இது நம்பர் இது வாட்சப் நம்பர் எருமை காலையில தூங்கும் ராத்திரி பேசு என்று இவள் நம்பரை கொடுத்து விட்டு வந்தான் ... 

நம்பிக்கை என்ற ஒற்றை சொல் அவர்களை எந்த எல்லையில் போய் விட்டாலும் நம்ப வைக்கும் ... 

சிகரெட்டை இழுத்து கொண்டு அயோக்கியா மகள் ஸ்கூல் வாசலில் காரின் மீது ஏறி அமர்ந்து அவளுக்காக காத்திருந்தான் ...

அந்த சோவாரி எங்க ? என்று மகள் வந்து அவன் அருகே ஏறி உட்கார

பானிபூரி திங்க போயிருக்கா என்று மகளுக்கு காட்டாது சிகரெட்டை மறைத்தான் 

உன்ன பல தடவை சொல்லிட்டேன், இந்த கருமத்தை இழுக்காதுன்னு ...

இந்த ஒன்னுதான் இதுதான் கடைசி பாப்பு ..

கிழிச்ச டெய்லி இதுதான் சொல்ற அந்த தடி தண்டமும் இது தப்புன்னு சொல்லுதா? முடிய முடிய வாங்கி வைக்குது ... 

டேய் அத்தான் சில்லரை இல்லை கணக்குல எழுத சொல்லவா...அங்கிருந்து அதிரா குரல் வர 

காசுக்கு பதிலா நீயும் ரெண்டு நாள் அந்த பானையோட பானையா இருந்துட்டு வாடி  

அய் முழுக்க பானிபூரி தின்னலாமே இந்த ஐடியா நல்லா இருக்கு நீங்க போங்க நான் வரல என்ற அதிராவை விட்டுவிட்டு அயோக்கியா காரை எடுக்க 

அப்பா அந்த மெண்டல் உண்மையாவே அங்க இருந்துக்கிச்சு "

"எங்க போகும் கழுதை கெட்டா குட்டி சுவர் வருவா... 

"ம்க்கும் அரை மணி நேரத்தில நீயே காரை கொண்டு போய் அவ முன்னாடி விட்டிருவ... என்ற மகளை திரும்பி பார்த்தான் சாட்சாத் தாயே தான் தாயின் கண்டிப்பு , கருணை, கோவம் , இது எதையும் கண்டதில்லை தன் தாய் வளர்த்து இருந்தால் அவனை இப்படி தான் வளர்த்து இருப்பார் என்பதை அவள் கையில் குழந்தையாக மறுமுறை வளரும் போது உணர்கிறான் 

டேய் அப்பா 

சொல்லு பாப்பு 

சேம் கேள்விதான் டெய்லி கேட்கிற அதே கேள்விதான்.உனக்கு நான் முதல்லையா இல்லை அம்மா முதல்லையா? 

ஹாஹா டெய்லி சொல்ற அதே பதில் தான் இந்த உலகத்துல எனக்கு எல்லார் விட ஒரு படி மேல அவதான் ..

ப்ச் சும்மாவாவது நான்தான் ஒரு நாளாவது சொல்லேன்ப்பா

சும்மா கூட அவளை ரெண்டாவதா ஆக்க மாட்டேன் என்றவன் குரல் கரகரத்தது... 

அப்படி என்ன அவளுக்கு முதல் இடம், மத்த பொண்டாட்டி எல்லாம் பார்த்தியா காலையில எழும்பி கோலம் போட்டு வீடு பெருக்கி பிள்ளைகளை கவனிச்சு, புருசனை வேலைக்கு அனுப்பி எப்படி எல்லாம் குடும்பத்தை பார்க்கிறாங்க இவ பாரு சும்மாவே சோத்தானி உருண்டையா சுத்தி வர்றா, பொண்டாட்டியா என்னைக்காவது உனக்கு எதாவது பண்ணி இருக்காளா 

உனக்கு அம்மாவா எதாவது குறை வச்சிட்டாளா பாப்பு 

ம்ம் அது இல்லை...

அதுல எதாவது குறை இருந்தா சொல்லு மாத்திக்கிறோம்.. பட் , என் மதியை மாறுன்னு சொல்லாத அவ எல்லா மனைவி போல எனக்கு வேண்டாம் ,அவ எனக்கு கடமையை செய்ய வேண்டாம், அக்கறையா இருக்க வேண்டாம் அனுசரணையாக வேண்டாம்.. அவ அவளா என்ன சுற்றி எலஂலாமாவும் வேணும், இது உனக்கு புரியாது பாப்பு 

ப்ச் அப்படி என்ன அவ மேல உனக்கு லவ் டேடி

லவ்வா சீசீ அதெல்லாம் அவ மேல கிடையாது ... இது வேற 

வேறன்னா ?

உடலுக்கு மூச்சு எப்படியோ 

செடிக்கு வேர் எப்படியோ ?

கண்ணுக்கு தெரியாது ஆனா அது இல்லைன்னா உடலும் இல்லை செடியும் இல்லை அப்படி ஒரு உறவு உன் அம்மாவோட எனக்குள்ள உறவு.. அதை வெறும் காதலி மனைவின்னு சொல்லி தரம் குறைக்க விரும்பல என்ற தகப்பன் கன்னத்தில் இச் வைத்த அதிஷ்டா...

அம்மா சோ லக்கில்ல

ம்ஹூம் அப்பா சோ லக்கி மம்மிக்கிட்ட இதே கேள்வி கேளு 

அவளை தான் கடையில விட்டுட்டு வந்தாச்சே

அங்க பாரு  

ஊஊஊஊஊஊஊஊ அவர்கள் கார் முன்னே ஒரு பைக்கில் லிப்ட் கேட்டு அதிரா கத்தி கொண்டே போய் வீட்டில் இறங்கி விட்டாள்...

 ஐஐஐ நான்தான் முதல்ல அத்தான் இந்தாங்க சாவி திறங்க அயோக்கியா வீட்டை திறக்க போக 

மம்மி 

என்ன பாப்பு 

அப்பாவை எவ்வளவு பிடிக்கும்...

அவரை யாருக்கு பிடிக்கும் மண்டை கழண்டவன் என்ன செய்யன்னு கூடவே சுத்திட்டு இருக்கேன் 

ப்ச் பி சீரியஸ் சொல்லு மம்மி...

அம்மாவோட மூச்சு, இந்த சுற்றி திரியுற காத்துல இல்லை... உன் அப்பாவோட அருகாமையில இருக்கு .... பச்சக் என்று தூரத்தில் தாய் கன்னத்தில் முத்தம் கொடுக்கும் மகளை பார்த்து சிரித்தான் அவள் பதில் என்னவாக இருந்திருக்கும் என அவன் அறிவானே...

 

ஒருவர் அன்பை ஒருவர் தக்க வைத்து கொள்ள பெரிதாக எதுவும் செய்ய தேவையில்லை... ஒன்றும் செய்யாது போற போக்கில் அவர்களை விட்டு விட்டாலே போதும்... 

இழுத்து பிடிக்கப்படும் காதல் அறுந்து போய்விடும் கடமையை கட்டி சுமக்கும் காதல் பாரத்தில் அமிந்து போய்விடும் . . உலகை சுமந்து காதலை விட்டு விடுகின்றனர் , இவர்கள் தலைகீழான ஜோடிகள் உலகத்தை இறக்கி வைத்து விட்டு நேசத்தை சுமக்கின்றனர் அவ்வளவே!! 

எது தேவை எவ்வளவு தேவை எங்கே தேவை என்று அவர்களுக்கு தெரியும் எனவே இந்த வேடனும் சரி வேடச்சியும் சரி நேசத்தை வேட்டையாடுவதை இந்த பூலோக கடமைகள் தடுத்து விட முடியாது ....

இப்படியும் ஒரு காதல் இருந்துவிட்டு போகட்டுமே!! 

நன்றி