இருவிக்காந்தம் அமிழ்தாகுமோ??டீசர்

kantham tea

இருவிக்காந்தம் அமிழ்தாகுமோ??டீசர்

வந்தாச்சி மச்சீஸ் 

அம்மா வீட்டில் பூஸ்ட் ஏத்திட்டு களம் இறங்கியாச்சி,  ஒரு மாச ஓய்வு மூளைக்கும்,  உடலுக்கும் கொஞ்சம் தேவைப்பட்டது அதான் எடுத்துட்டேன்,  காத்திருந்த அத்தனை பேருக்கும் அன்புகள் டியர்ஸ்.

ஜூன் 5  திங்கள் கிழமை மாலை ஏழு மணிமுதல் டெரரா ஆரம்பிக்கலாமா??

டீசர் 1 

 

இருவிகாந்தம் அமிழ்தாகுமோ??

இருவிக்காந்தம் _ நச்சு மூலிகை

அமிழ்து _அமுதம்

சென்னை புழல் சிறைச்சாலை!! 

டக் டக் என அந்த இருண்ட சிறைச்சாலை நடைபாதை வழியே காவலர் காலடி சத்தம் அவ்விடத்தின் மைதியை கலைத்தது ..  கொண்டிருந்தது..  கம்பியின் பின்னே  777 என்ற இலக்கம் போட்ட சிறை கைதியின் முதுகு மட்டுமே தெரிய வானம் முட்டும் உயரத்தில் ஒருவன் அந்த தனி சிறை அறையில் நின்றான் .. கம்பிக்கு வெளியே வந்து அந்த காவலர் நிற்க.. தலையை திருப்பாதவன்..

என்ன ?என்றான் எஃகு போன்ற குரலில் 

தீர்ப்பு வந்திருக்கு 

தூக்கா? ஆயுளா??  என்றான் கையை தூக்கி நெட்டி முறித்து கொண்டே 

தூக்கு ... 

ஓஓ

தாஸ் , வயது 29 

தூக்கு தண்டனை கைதி !! 

காட்டுதனமான உடல், கண்கள் மட்டும் தெரியும் படி முகம் முழுவதும் அடர்ந்து கிடக்கும் தாடி, உதடுகள் கருத்து , தலைமுடி பிடிறி வரை நீண்டு கிடக்க, உயர உடலுக்கு அந்த கைதி ஆடை கூட கவர்ச்சி கொடுக்க மாடல் காட்டுவாசி போல நின்றவன்,  கூலிப்படை தாஸ் என்று சொன்னால் நாடு அரண்டு திரும்பி ஓடும்...  

*****

இரவு சிறைச்சாலை முழுக்க மயான அமைதியாக இருக்க..  சிறையின் ரகசிய வாயில் வழியே வியர்த்த சொட்டை தலையை தடவி கொண்டே  எம்பி நாகநாதன் விறுவிறுவென நடந்து தாஸ் இருக்கும் அறை நோக்கி வந்தார்.. 

தாஸ் தன் முன் நின்ற எம்பியை யோசனையாக பார்த்தான் 

சத்தியம் தாஸ்,  உன்னால மட்டும் தான் என் பேர் வெளிய வராம இந்த காரியத்தை கமுக்கமாக முடிக்க முடியும்... நீ ஓகேன்னு ஒரு வார்த்தை சொல்லு தாஸ், நாளைக்கு நைட் நீ தப்பிக்க ரெடி பண்றேன்...

என்ன வேலை? ..

அது ..

ம்ம் சொல்லு.. 

ஒருத்தனை கொல்லணும்.. 

யார? 

சாஸ்திரியை... கண்களை சுருங்கிய தாஸ்.. 

ம்ம், சரி எப்போ போகணும் ?

இதுதான் தாஸ் நீ கை வச்ச வேலை எதுவும் ராங்கா போகாது , அதனால தான் உன்னை தேடி நான் வந்தேன் .. எப்படியும் அந்த சாஸ்திரிக்கு உன்ன அடையாளம் தெரியும்..  ஆனா ஆதாரத்தை உன்ன தவிர வேற யாராலயும் எடுக்க முடியாது,  ஆதாரம் அவனோட கிராமத்துல பண்ண வீட்ல இருக்கிறதா எனக்கு நியூஸ் வந்துடுச்சு..  ஆனா,  அங்க போறது தான் கஷ்டம் சாஸ்திரியை தவிர வேறு யாருக்கும் முன்ன அடையாளம் தெரியாது..  சாஸ்திரியோ என்ன முடிப்பதற்காக டெல்லியில் பிரதமர போய் பார்க்க இருக்கான் , திரும்பி வர்றதுக்கு முன்ன அவன நாம முடிக்கணும்..  அதுக்குள்ள அந்த ஆதாரம் எல்லாத்தையும் நம்ம எடுத்தாகணும்..  அவன் வர்றதுக்குள்ள நீ அவனோட ஊருக்குள்ள போய் அவன் வீட்டுக்குள்ள அடி எடுத்து வச்சு காரியத்தை முடித்துவிடு ..

எந்த ஊர்?

நந்தவன தோட்டம்...

ம்ம் முடிச்சிடலாம் என்றவன்..அடுத்த நாளே  ஜெயிலை விட்டு தப்பித்து விட்டான்

*******

நந்தனவன தோட்டம் !!

எல்லையில் நின்ற ஐய்யனார் கோவிலில் கண்களை மூடி ஒரு உருவம் நின்றது

உனக்கு என் மேல கருணையே இல்லையா அய்யனாரே எத்தனை வருடமா வேண்டுறேன் இரக்கம் காட்ட மாட்டைக்கிறீயே,  பாரு இந்த வருடம் மட்டும் நான் நினைச்சது நடக்கல.  பிறகு உன்ன பார்கவே மாட்டேன் சொல்லிட்டேன் என்று சாமியோடு சண்டையிட்டு கொண்டிருந்தாள் ஒருத்தி... 

நான் சொல்றதை நல்லா காதுல வாங்கிக்க அய்யனாரே. சாஸ்திரி தொல்லை தாங்க முடியாம ஓடி போன என் மாமன் மதுரைவீரன் ஊர் வந்து சேரணும். அவர் நினைப்பாவே கிடக்கிற என் கழுத்துல தாலி கட்டி..  நானும் அவனும் ஒன்னா இங்க பொங்கல் வைக்கணும் .. அதுக்கு நீதான் அருள் புரியணும் என்று முடித்தாள்..

ஊரை விட்டு 15  வருடங்களுக்கு முன் ஓடி போன தன் மாமன் வீராவை ஆசை நாயகனான மனதில் சுமந்த மடந்தையும்.. 

யார் இவள் ??

வேதா வயது 20 உலக அழகின்னு எல்லாம் சொல்ல முடியாது ஊள்ளூர் அழகி .. 

*****

பேருந்து வந்து ஊர் எல்லையில் நிற்க...  அதிலிருந்து மிலிடரி சிகைவெட்டும் களையான முகத்தோடு வீரா இறங்கி,   ஊரை பெருமூச்சு விட்டு பார்த்தவன் பெட்டியை தூக்கி கொண்டு நடக்க... அவன் அருகே வந்து கார் நிற்க..  கார் நகரும் போது வீரா கொண்டு வந்த பெட்டி மட்டுமே அங்கே கிடந்தது ... வீராவை அலுங்காது தாஸ் கடத்தி தூக்கி தனி இடத்தில் சிறை வைத்தவன்..

நந்தனவன தோட்டம் உள்ளே வீராவாக நுழைந்தான் தாஸ்.... 

தன் மாமன் வந்து மாலையிடுவான் என கனவுகளோடு காத்திருந்தது மஞ்ஞை(வெள்ளை மயில்)..

வருவதோ கள்வனே!!!

நந்தவனத்தில் நச்சக்கொடி படரும் !!!