அஃது நேரடி அமேசான் கதை
Akthu

https://www.amazon.in/dp/B0FKWL4ZNS
டீசர்
அஃது
நேரடி அமேசான் வெளியீடு
பிரபல தொழிலதிபர் ரவிபிரகாஷின் பத்து வயது மகள் மாயம் என்று தலைப்பு செய்தியில் குழந்தை படம் ப்ளாஷ் ஆகி கொண்டிருந்தது
"அய்யோ கடவுளே என் பிள்ளையை தொலைச்சிட்டேனே" என்று அந்த வீட்டில் தலையில் அடித்து கொண்டு டிவியில யூனிபார்மில் வரும் தன் மகள் போட்டோவை பார்த்து கதறி அழும் மனைவி ரூபி அருகே உடைந்து போய் உட்கார்ந்து இருந்தான் ரவி பிரகாஷ்....
நேற்று இரவு மகள் பத்து வயது பிறந்த நாளைக்கு நண்பர்கள் , உறவினர்கள் என அழைத்து பல லட்சம் செலவு செய்து பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து உறவினர்களை வழி அனுப்பி வைத்து விட்டு மகளை தேடினால் அவள் கையில் வைத்திருந்த டெடி பொம்மை மட்டும் தான் மணலில் கிடந்தது பிள்ளையை காணவில்லை...
"என்னங்க என் பிள்ளை கிடைச்சுருமா" என்று ஓடி வந்து கணவன் மடியில் முகத்தை புதைத்த மனைவிக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாது ரவி எச்சில் விழுங்கினான் ஒற்றைக்கு ஒரு குழந்தை இளவரசி என்ன ஆனாள் யோசித்து பாக்கவே பதறியது....
"கிடைச்சிடும் ரூபி...
"போன வாரம் பக்கத்து தெரு பிள்ளையை கடத்திட்டு போய் கண்டதும் பண்ணி கொன்னுட்டாங்களாம் செய்தியில போட்டான்ல, அப்படி அப்படி எதாவது ஆகிடுமோங்க "என்று ரூபி பயந்து கணவனை பார்க்க
"ரூபி ப்ளீஸ் அப்படி எல்லாம் எதுவும்
"ஆயிருக்காதுல்ல
"ம்ம்
"ஒருவேளை பணத்துக்காக கடத்தி இருப்பாங்களோ நம்ம சொத்து முழுக்க வேணும்னாலும் கொடுத்துடுங்க , எனக்கு என் பிள்ளை வேணும் என்று அழும் அவளை சமாளிக்க முடியாது ரவிபிரகாஷ் தன் மருத்துவ நண்பன் அருணுக்கு கண்ணை காட்ட
"பாப்பா கிடைச்சிடும் ரூபி இதுல உட்கார் என்று அருண் அவளை அமர வைக்க
"அருண் அண்ணா உங்கள மாமா மாமான்னு கூப்பிடுவாள்ல பாப்பா காணல , சாப்பிட்டு இருக்குமா, பசி தாங்க மாட்டா அண்ணாஆஆஆஆஆ என்றவள் அவன் குத்திய வீரிய தூக்க மருந்தில் சார, ரவிபிரகாஷ் ஓடி வந்து சாய்ந்த மனைவியை தூக்கி கொண்டு போய் படுக்கையில் கிடத்தி விட்டு தலையில் கை வைத்து அமர .... அவன்,நண்பன் மெலல வந்து நண்பன் தோளில் கை வைத்து
"போலீஸ்ல முழுசா போர்ஸ் பண்ணுறதுதான் நல்லது ரவி நம்ம கையை மீறி போயிடுச்சு ;நைட் முழுக்க தேடியாச்சு இனி அவங்க இறக்கினாதான் சரியா இருக்கும் டா
"ம்ம் , கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சு அருண், ஆனா பயமா இருக்கு எத்தனை நாள் இவளை சமாளிக்கன்னு தெரில ....
"காணாம போயிருக்க வாய்ப்பு இருக்கலாமே ரவி கடத்தி இருப்பாங்கன்னு எப்படி உர்ச்சிதமா சொல்ற?
"சிசிடிவி புட்டேஜ்ல அவ வெளிய போனது போல இல்ல அருண்.. பாப்பா காணாம போயிருந்தா இந்த கேட்டை தாண்டி போயிருக்கணுமே அருண்
"ம்ம் ... அப்போ வித்தியாசமா வந்தவங்ககளை தான் விசாரிக்கணும்....
"ம்ம்
இதோ ரவிபிரகாஷ் மகள் காணாமல் போய் ஒரு வாரம் ஆகி போனது
அவன் வீட்டில் அழுகை கூக்குரல் ஓய்ந்தபாடில்லை பிள்ளை உயிரோடு வந்தால் போதும் என்ற நிலையில் இருவரும் உடைந்து போய் நின்றனர்....
ரவிபிரகாஷ் மகள் காணாது போய் ஒரு வாரம் ஆன நிலையிலும் அதை பத்திய தகவல் சரிவர வராததால் வழக்கை உயர் அதிகாரிகள் கவனிக்க உத்தரவிட பட்டுள்ளது... என்று செய்தியில் வந்து கொண்டிருந்தது ...
யார் சார் கேஸ் ஹேண்டில் பண்ண போறா?
மிஸ்டர் அர்ஜூன் வாரியர்
அவரா ?
ம்ம்
"அப்போ கண்டிப்பா ஆளை கொத்தா தூக்கிடுவாங்க" என்று நம்பிக்கை கொடுத்தது அந்த ஒற்றை பெயர் ...
சீறி வந்த அரசு சைரன் வைத்த வாகனத்தில் இருந்து காக்கி சட்டையில் மீசையை முறுக்கி விட்டபடி குதித்து இறங்கினான்
அர்ஜூன் வாரியர் கமிஷ்னர் ஆப் போலீஸ்!!
(மருங்காரத்தில் மலர்ந்த முளரி ஹீரோ, யமகன் மகன் அர்ஜூன்வாரியர் )
மிரட்டும் அஃது எதுவென இந்த வேங்கை துப்பறிந்து விடுமா ?
மீண்டும் வாரியர் அட்ராசிட்டியை இந்த இதை முழுக்க பார்க்கலாம் ...